கோவை: பெரியார் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாட முடிவு

கோவை: கோவை மாவட்டக் கழக ஆலோசனைக் கூட்டம் 01.09.2024 அன்று கோவை தமிழ்ப்புலிகள் கட்சி அலுவலகத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைவர் பெரியாரின் 146ஆவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் காந்திபுரம் பெரியார் சிலை, நியூ சித்தாபுதூர், பீளமேடு, உப்பிலிபாளையம் காந்தி நகர், உக்கடம், கவுண்டம்பாளையம், சிவானந்தகாலனி உள்ளிட்ட பகுதிக் கழகங்களில் பெரியார் பிறந்தநாள் விழா – சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
கோவையின் புறநகர் பகுதிகளான அன்னூர், காரமடை, சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளிலும் பெரியார் பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதில் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்

You may also like...