கோவையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கதே” பரப்புரைக் கூட்டம்

கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் “அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கதே” பரப்புரை விளக்கக் கூட்டம் 28.08.2024 அன்று உக்கடம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநகரச் செயலாளர் வெங்கட் தலைமை தாங்கினார். சூலூர் தமிழ்ச்செல்வி வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் பங்கேற்ற தோழமை இயக்கத் தலைவர்களான திராவிடத் தமிழர் கட்சி வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார், திமுக வழக்கறிஞரணி அன்புச் செழியன், தமிழ்ப்புலிகள் கட்சி தம்பி செந்தில், வழக்கறிஞர் சரவணன், கழகக் கோவை மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், கழகக் கோவை மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
நிறைவாகக் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது.

பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்

You may also like...