தூத்துக்குடியில் ஜாதி எதிர்ப்பு பொதுக்கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட க் கழகம் சார்பில் தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு தருவை குளம் முதன்மை சாலையில் 23.09.2025 அன்று மாலை 05.30 மணியளவில் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு “மனிதம் நமது அடையாளம் – ஜாதி நமக்கு அவமானம் ” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழகப் பொருளாளர் கே. சந்திரசேகர் தலைமை வகித்தார். வடக்கு சோட்டையன் தோப்பு ச.கா.பால சுப்பிரமணியன், ஆழ்வை ஒன்றிய கழகச் செயலாளர் ஆழ்வை இரா.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ச.ரவிசங்கர் வரவேற்புரையாற்றினார். நெல்லை மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன், தென்காசி மாவட்ட தலைவர் குறும்பை அரு.மாசிலாமணி, தென்காசி செந்தமிழ், பாலசுப்பிரமணியன், மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் செய்யது சம்சுதீன், சமம் குடிமக்கள் இயக்க மாவட்டப் பொறுப்பாளர் ஜாண்.பி.ராயர், வி.சி.க. மகேஷ், தி.மு.க. ஒட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர், இளம்பேச்சாளர் இள.கார்த்திக், மனித நேய மக்கள்...
