கண்களை பறித்த தீபாவளி

ம.பி மாநிலத்தில் தீபாவளிக்காக கார்பைடு துப்பாக்கி பட்டாசு கடைகளில் விற்பனையானது. கடும் ஆபத்துகளை உருவாக்கும் ரசாயனம் கலந்த இந்த துப்பாக்கி தடை ஏதும் இல்லாமல் கடைகளில் விற்கப்பட்டன. இந்த துப்பாக்கியை வெடித்த 23 பேர் மோசமாக கண்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் குழந்தைகள்.

தோட்டங்களில் குரங்குகளை விரட்டுவதற்கு பயன்படுத்தும் ரசாயனம் இந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் இந்த துப்பாக்கியின் சிறப்பை விளம்பரம் செய்து விற்பனைகளை தூண்டிவிட்டன. சிகிச்சை பெறும் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும், பார்வை இழக்கும் நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
பெரியார் முழக்கம் இதழ் 30102025

You may also like...