அரசியல் சட்டத்திக்கு எதிரான “பழக்க வழக்கங்களை” ஏற்க முடியாது. கேரள உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சனையில் கேரள உயர்நீதிமன்றம் புரட்சிகர தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. “பழக்க வழக்கங்கள்” என்ற சட்டத்தின் பிரிவை கண்மூடித்தனமாக ஏற்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. `பழக்க வழக்கம்’ அரசியல் சட்டத்தின் நோக்கத்திற்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

“அர்ச்­ச­கர்­கள் குறிப்­பிட்ட ஜாதி அல்­லது பரம்பரையைச் சேர்ந்­தவராக இருக்க வேண்­டும் என்ற கட்­டாய மத நடை­முறை எது­வும் இல்லை” என்றும் கேரள உயர்­நீ­தி­மன்­றம் தீர்ப்­ப­ளித்துள்­ளது.

“தகு­தி­யின் அடிப்­ப­டை­யில் நியமனங்­கள் செய்வது அர­சி­ய­ல­மைப்பு கூறும் சமத்­து­வத்தை உறுதி செய்யும். ஜாதிக்­கும் பாரம்­ப­ரி­யத்­திற்­கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்­பதை ஏற்றுக் ­கொள்ள முடியா­து” என்­றும் கூறி­யி­ருக்­கும் நீதி­ப­திகள், இதுதொ­டர்பான விவ­கா­ரத்­தில், அகில கேரள தந்திரி சமா­ஜம் (AKTS) என்ற பார்ப்பனர்கள் அமைப்பு தாக்­கல் செய்த ரிட் மனுவையும் அதிரடி­யாகத் தள்ளுபடி செய்துள்ளது 2023-24ஆம் ஆண்­டில் (அர்ச்சகர்கள்) நிய­மன நடவடிக்கைகளை கேரள தேவசம் பணிநியமன வாரியம் (KDRB) மேற்­கொண்­டது. அப்­போது உரிய பயிற்சிப் பெற்றவர்கள் எஸ்.­எஸ்.­எல்சி கல்வித் தகு­தி­யு­டையுடன் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருக்கிறது.

’பிராமணர்கள்’ மட்டுமே படிக்கும் வேத குருகுல பாட சாலையில் வேதம் படித்தவர்களையே நியமிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்கள். மனுதாரர்­கள் தரப்­பில் வழக்­க­றி­ஞர் கே.ஆர். ராஜ்குமார் உள்­ளிட்­டோர் ஆஜ­ரா­கி­னர். “கேரளத்தில் உள்ள சுமார் 300 பாரம்­ப­ரிய தந்­திரி குடும்­பங்­களை உள்­ள­டக்­கிய பதி­வு­செய்­யப்பட்ட சங்­க­மான அகில கேரள தந்­திரி சமாஜமான தாங்கள் தான், தலைமுறை தலை­மு­றை­யாக அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளித்து வரு­கி­றோம். எங்களை ஆலோ­சிக்­கா­மல் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய ’தந்திர வித்யா’ பயிற்சி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.

திரு­வி­தாங்­கூர் தேவ­சம் வாரியத்­தின் சார்­பில் வழக்க­றி­ஞர் ஜி. பிஜு, கேரள தேவ­சம் ஆட்சேர்ப்பு வாரியத்­தின் சார்­பில் வி.வி. நந்­த­ கோ­பால் உள்ளிட்­டோர் ஆஜ­ரா­கி­னர். அவர்­கள், “அர்ச்சகர் பணி­யில், ஒதுக்­கப்­பட்ட சமூ­கங்­க­ளி­லி­ருந்து போதிய பிர­தி­நி­தித்­து­வம் இல்லை என்­ப­தை­யும், அவர்களை அர்ச்­ச­கர் பணிக்கு தயார்ப்­ப­டுத்­து­வ­தற்­கான பாடத்­திட்­டம் மற்­றும் ஒருங்­கி­ணைந்த அமைப்பு இல்­லா­ததை கவ­னத்­தில் கொண்டே இந்த பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது என்று வாதிட்டனர்.

இந்த வாதங்­கள் அனைத்­தை­யும் கேட்ட நீதி­ப­தி­கள், “அர்ச்­ச­கர்­கள் நிய­ம­னத்­திற்குத் தகு­தி­பெற ஒரு நபர் ஒரு குறிப்­பிட்ட ஜாதி அல்­லது பரம்­ப­ரை­யைச் சேர்ந்­த­வ­ராக இருக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்து வதை, ஒரு அத்­தி­யா­வ­சிய மத நடை­முறை, சடங்கு அல்­லது வழி­பாட்டு முறையை வலி­யு­றுத்­து­வ­தா­கக் கருத முடி­யாது.

அர­சி­ய­ல­மைப்­பிற்கு முந்­தைய காலத்­தி­லி­ருந்தே எந்­த­வொரு வழக்­கமோ அல்­லது பழக்­க­வழக்கமோ இருந்தா­லும், அது மனித உரி­மை­கள், கண்ணியம் அல்­லது சமூக சமத்­து­வத்­தின் அரசியல­மைப்புக் கொள்­கை­களை மீறு­வ­தா­கக் கண்­ட­றி­யப்பட்டால், அதனை அங்­கீ­க­ரிக்க முடி­யாது. அடக்­கு­மு­றையான, தீங்கு விளை­விக்­கும், பொதுக் கொள்கைக்கு முரணான அல்­லது நாட்­டின் சட்­டத்தை இழிவுபடுத்­தும் எந்­த­வொரு வழக்­கமோ அல்­லது நடை­மு­றையோ, அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் அங்­கீ­கா­ரத்­தைப் பெற முடி­யாது.

எங்­க­ளைப் பொறுத்­த­வரை, கோயி­லில் அர்ச்சகர்களாக நிய­ம­னம் செய்ய தகு­தி­னவர்கள் என சான்­ற­ளிக்­கும் ’தந்­திர வித்­யா­லயா’ என்ற பயிற்சி முறை ஒரு முழு­மை­யான செயல்­முறையாகவே தோன்­று­கி­றது. பாடத்­திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக முடிக்­கும் மாண­வர்­கள், கோயில் கட­மை­களை மேற்­கொள்­வ­தற்கான அவர்­க­ளின் தயார்­நி­லையைக் குறிக்­கும் வகை­யில், தீட்சை விழாக்­க­ளுக்­கும்
உட்ப­டுத்­தப்­ப­டு­கி­றார்­கள்.

மேலும், அத்­த­கைய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கூட, இறு­தித் தேர்வு மற்றும் முறை­யாக அமைக்­கப்­பட்ட குழு­வால் தகு­தயின் அடிப்­ப­டை­யில் தேர்வு செய்­யப்­ப­டு­கின்­ற­னர். இதில் கற்­ற­றிந்த அறி­ஞர்களைத் தவிர, ஒரு புகழ்­பெற்ற தந்­திரி குழு­வும் அடங்­கும். இந்தப் பின்னணியில், பாரம்பரிய அர்ச்சர்­க­ளின் கீழ் பயிற்சி பெற்ற நபர்களை மட்டுமே சாந்­தி­களாக நியமிக்க வேண்டும் என்ற மனு­தாரர்க­ளின் வாதத்தை நீதி­மன்­றம் நிராகரிக்கிறது என்று தீர்ப்­ப­ளித்­த­னர்.

பெரியார் முழக்கம் இதழ் 30102025

You may also like...