Category: பெரியார் முழக்கம்

நாட்காட்டி தயார்!

நாட்காட்டி தயார்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் 2024 ஆண்டிற்கான நாட்காட்டி தயார்! விலை : ரூ.70 (ரூபாய் எழுபது மட்டும்) + அஞ்சல் செலவு தனி குறைந்த எண்ணிக்கையிலேயே நாட்காட்டி அச்சிடப்படுவதால் தேவைப்படும் தோழர்கள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முன்பதிவிற்கு, தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், 9941759641 பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

கழகத் தலைவரிடம் வாழ்த்து

கழகத் தலைவரிடம் வாழ்த்து

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் தோழர் லாவண்யா 21.12.2023 வியாழனன்று கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதன் மகிழ்வாக கழக ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.2000/- வழங்கினார். பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

தலையங்கம் – பெரியாரின் சுற்றுப்பயணம் முடியவில்லை!

தலையங்கம் – பெரியாரின் சுற்றுப்பயணம் முடியவில்லை!

1973-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் தந்தை பெரியாரின் உயிர் பிரிந்தபோது “பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக்கொண்டார்” என இரங்கற்பா எழுதினார் கலைஞர். பெரியாரின் உடல் மட்டும்தான் அப்போது இயக்கத்தை நிறுத்திக்கொண்டதே தவிர, அவரது சிந்தனைகளும் தத்துவங்களும் இன்னமும் சூறாவளி போலச் சுற்றிக்கொண்டே இருக்கிறது. போர்க்களத்தில் எதிரியிடம் இருந்து தற்காத்துக்கொள்ள கேடயமும், எதிரியைத் திருப்பித் தாக்குவதற்கு வாளும் வைத்திருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு களம் எதுவானாலும் கேடயமும் பெரியார்தான், வாளும் பெரியார்தான். பெரியாரை முன்னிறுத்தித்தான் தமிழ்நாட்டின் போராட்டக் களங்கள் வடிவமைக்கப்படுகின்றன. பெரியாரைத் துணைகொண்டுதான் தமிழ்நாட்டின் உரிமைக் குரல்கள் எழுப்பப்படுகின்றன. நூறாண்டுகளுக்கு முன் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்கும் போது இங்கு படித்தவர்கள் நூற்றுக்கு 10 பேர் கூட இல்லை. ஆனால் இன்றைக்கு படிக்கச் செல்லாதவர்கள் நூற்றுக்குப் பத்து பேர் கூட இல்லை என்ற தலைகீழ் மாற்றத்தை கண்டிருக்கிறோம். கல்வியில், ஆராய்ச்சியில், கட்டமைப்பு வளர்ச்சியில், பொருளாதார தன்னிறைவில் என ஒவ்வொரு...

பெரியார் தமிழுக்கு எதிரியா?

பெரியார் தமிழுக்கு எதிரியா?

1956ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ் ஆட்சிமொழி மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஒட்டி, 28-ஆம் தேதி விடுதலையில் வெளியான தலையங்கம்… “சட்டம் மட்டும் போதாது” இனித் தமிழ்தான் ஆட்சி மொழியாயிருக்கும் என்று திரு. காமராசர் ஆட்சியின் முயற்சியினால் தமிழ்நாடு சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. சட்டசபை உறுப்பினர்களையும் மந்திரி சபையையும் பாராட்டுகிறோம். இச் சட்டத்தை இக்கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமென்று பிடிவாதமிருந்த முதலமைச்சர் திரு.காமராசர் அவர்களையும் பாராட்டுகிறோம். ஆனால் இச்சட்டத்தை நிறைவேற்றினால் மட்டும் போதாது. இதை உடனடியாக நடைமுறையில் கொண்டுவர வேண்டும். நிர்வாகத்துக்குரிய எல்லா இங்கிலீஷ் சொற்களுக்கும் நேரான தமிழ்ச்சொற்கள் கிடைக்கும்வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. தெரியாத சொற்களை இங்கிலீஷிலேயே கலந்து எழுதலாம். இடைக்காலத்தில், ஒருசில மாதங்கள் வரையில், “மணிப்பிரவாள” நடையில் எழுதுவதனால் ஒன்றும் தவறில்லை. மனிதனின் கருத்தைத் தெரிவிப்பதற்குத்தானே மொழி? காஃபி, ஃபவுண்டன் பேனா, சைக்கிள், பேனா, டெலிபோன், காலெண்டர், மோட்டார் கார், ஃபோட்டோ, தர்மாஸ் ஃபிளாஸ்க் போன்ற பல சொற்களை...

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பெரியாரின் 50-வது நினைவு நாள் பொதுக்கூட்டம், 24.12.2023 அன்று மாலை 6.00 மணிக்கு குருவரெட்டியூர் பெரியார் திடல், தோழர் பிரகலாதன் நினைவரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகசோதி கூட்டத்திற்கு தலைமை வகிக்க, வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். மறைந்த தோழர் பிரகலாதன் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். நிகழ்வின் தொடக்கத்தில் கோபி யாழ் திலீபன், அறிவுக்கனல் ஆகியோர் பாடல்கள் பாடினர். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமிக்கு அடுத்ததாகப் பேசிய, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், திராவிடம் – சனாதனம் குறித்து உரையாற்றினார். அப்போது, தோழர்கள் கழக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்ட இராம. இளங்கோவன், அதற்கு முன்னுதாரணமாக கழக நூல் வெளியீட்டு திட்டங்களுக்காக தனது தனிப்பட்ட நிதியாக ரூ. 3,00,000. (மூன்று இலட்சம் ) வழங்குவதாக அறிவித்து, தலைவர் கொளத்தூர்...

இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. கொளத்தூர் : கொளத்தூர் ஒன்றியக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் 11-12-2023 அன்று மாலை 5மணிக்கு 9வது தெருமுனைக் கூட்டம் கோவிந்தப்பாடியிலும், 10வது தெருமுனைக் கூட்டம் கத்திரிப்பட்டி மலையாள தெருவிலும் நடைபெற்றது. டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார், மாணவர் அணி துணை அமைப்பாளர் சதாசிவம், முன்னாள் தலைவர் முனுசாமி, கிளைச் செயலாளர் கணேசன், செட்டிப்பட்டி கிளைச் செயலாளர் பழனிச்சாமி, குள்ளவீரன்பட்டி ஈஸ்வரன், கண்ணன் நெசவாளர் அணி, சுப்பிரமணி, தேவராஜ், பரத், இளங்கோ, கார்த்தி, குமார், கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் நகரத் தலைவர் இராமமூர்த்தி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் கண்ணகி,...

பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

ஈரோடு வடக்கு : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்ட நிறைவுப் பொதுக்கூட்டம் 24.12.2023, ஞாயிறு மாலை 6 மணியளவில் குருவரெட்டியூர் பிரகலாதன் நினைவரங்கத்தில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். சேலம் : சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 119 தெருமுனைக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்தி முடித்துள்ளது. 120வது கூட்டம் பொதுக்கூட்டமாக 23.12.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்வில் டி.கே.ஆர் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும். தஞ்சாவூர் : பேராவூரணி கழகம் சார்பில் பெரியார் 50வது நினைவு நாள் – வைக்கம் நூற்றாண்டு – அம்பேத்கரின் 67வது நினைவுநாள் – எது திராவிடம்? எது சனாதனம்? கொள்கை...

ட்ரெண்டிங்கில் பெரியார்

ட்ரெண்டிங்கில் பெரியார்

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்றி உருவம் போல பெரியாரை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரப்பப்பட்டது. அந்த படத்தைப் பார்த்தால் பெரியாரியவாதிகளின் மனம் புண்படும், அதில் ஆனந்தமடையலாம் என்று கருதி எவரோ பரப்பியிருக்கிறார். ஆனால் நடந்ததோ வேறு. “இந்த படம் அழகாக இருக்கிறது, படத்தை வரைந்தவருக்கு பாராட்டுக்கள், பெரியார் இருந்திருந்தால் அவரும் நிச்சயம் பாராட்டியிருப்பார். ஆடு, மாடு, கோழி, சிங்கம், புலி போன்ற மற்ற விலங்குகளைப் போல பன்றியும் ஒரு விலங்கு. அந்த விலங்கைப் போல பெரியாரை சித்தரித்தால் அதில் என்ன அவமானம் இருக்கிறது? அப்படியானால் விஷ்ணுவின் வராக அவதாரமும் இழிவானது தானா?” என பெரியாரியவாதிகள் எழுப்பிய கேள்விகள் சமூக வலைத்தளங்களை 2 நாட்கள் ஆக்கிரமித்துவிட்டன. வாய்ப்பை ஏற்படுத்தியாவது பெரியாரை அவ்வப்போது டிரெண்டிங்கில் வைத்துவிடுகிறார்கள் கொள்கை எதிரிகள். “எனக்கு விளம்பரமே எனது எதிரிகள்தான்” என பெரியார் சொன்னது அவர் மறைந்து அரைநூற்றாண்டுகள் ஆகியும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது....

பகுத்தறிவை போதித்த கலைஞரின் கலைப் படைப்புகள்

பகுத்தறிவை போதித்த கலைஞரின் கலைப் படைப்புகள்

(கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  நீர்வளத்துறை வெளியிட்டுள்ள மலரில் “பகுத்தறிவு சீர்த்திருத்தச் செம்மல்” என்ற தலைப்பில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை) கடந்த இதழின் தொடர்ச்சி… மக்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கிற மூட நம்பிக்கைகள், புராணங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கிற ஆபாசங்களை எழுதியெல்லாம் ஆதாரப்பூர்வமாக விளக்கி, ‘சோ’ அதற்கு மறுப்பே எழுத இயலாத அளவுக்கு பகுத்தறிவுச் சுடராக மிளிர்ந்தவர் கலைஞர். இந்தியாவில் வேறெந்த தலைவர்களுக்கும் தோன்றாத, சமத்துவபுரம் என்ற மாபெரும் திட்டம் கலைஞரின் எண்ணத்தில் உதித்து செயல்வடிவம் பெற்றதுதான் அவரது பகுத்தறிவின் ஆற்றலுக்கான உச்சபட்ச சான்று. ஊர், சேரி, அக்ரகாரம் என மூன்றாய் பிரிந்து கிடக்கும் சமூகக் கட்டமைப்பை தகர்த்து, சமன்படுத்தும் முன்முயற்சியை செய்ய வேண்டுமென்று தேர்தல் அரசியலில் எவருக்குமே தோன்றவில்லை, கலைஞருக்கு மட்டும்தான் தோன்றியது. அதற்கான முன்மாதிரியாக பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், உயர்ஜாதியினர் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக வாழும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை கட்டியெழுப்பினார். அதிலும் ஆழமாக...

கழக ஏட்டுக்கு அன்பு தனசேகர் நன்கொடை

கழக ஏட்டுக்கு அன்பு தனசேகர் நன்கொடை

கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகரின் தந்தை தே. குப்புசாமி அவர்களின் 90வது பிறந்தநாள் விழா மற்றும் சந்திரா – குப்புசாமி ஆகியோரின் 60வது மணிவிழா, 17.12.2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை புனித தோமையர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் நல்வாழ்வு  மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். தொடர்ந்து அன்பு தனசேகர் “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 – யை கழகத் தலைவரிடம் வழங்கினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசு, குகன், சேத்துபட்டு இராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

கழக நாட்காட்டி தயார்!

கழக நாட்காட்டி தயார்!

2024ம் ஆண்டுக்கான திராவிடர் விடுதலைக் கழக நாள்காட்டி தயாராக உள்ளது. தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் உழைத்த வெளிநாட்டு அறிஞர்களின் வண்ணப் புகைப்படங்கள் அடங்கிய நாள்காட்டி. தொடர்புக்கு : தபசி குமரன் – 99417 59641 தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

குஜராத் மாடலின் அவலத்தை பாரீர்!

குஜராத் மாடலின் அவலத்தை பாரீர்!

குஜராத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41,632 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திமுக எம்.பி.கள் தனுஷ் எம்.குமார், ஜி.செல்வம் ஆகியோர் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4.25 லட்சம் பேர், கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குஜராத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 41,632 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் 9,606 குழந்தைகளும், 2021-22 நிதியாண்டில் 13,048 குழந்தைகளும், 2022-23 நிதியாண்டில் 18,978 குழந்தைகள் என ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு குஜராத்தில் இரட்டிப்பாகி வருகிறது. குஜராத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 லட்சம் குழந்தைகள் பிறப்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி அதில் 30,000 குழந்தைகள் இறக்கும் அவலம் தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளது. குஜராத்தில்...

தலையங்கம் : தலைதூக்கும் சர்வாதிகாரத்தை ஒட்ட நறுக்குவோம்

தலையங்கம் : தலைதூக்கும் சர்வாதிகாரத்தை ஒட்ட நறுக்குவோம்

தலையங்கம் : தலைதூக்கும் சர்வாதி என்.டி.டி.வி நிறுவனத்தை ஏற்கெனவே முழுமையாக கையகப்படுத்திவிட்ட அதானி குழுமம், இப்போது ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்தின் பங்குகளை 50 விழுக்காடு வாங்கிவிட்டது. ஊடகத் துறையில் அதானி குழுமம் தனது ஆக்டோபஸ் கரங்களை பரப்பிக்கொண்டே இருப்பதன் பின்னணி குறித்த சந்தேகங்கள் வலுத்துக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் ஒன்றிய அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டாலே, கடும் நெருக்கடிகளை ஊடக நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. குஜராத் கலவரம் தொடர்பாக முக்கிய ஆவணப் படம் ஒன்றை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிபிசி நிறுவனம் வெளியிட்டது. அதற்காக, பிப்ரவரி மாதத்தில் வருமான வரித்துறை சோதனையை எதிர்கொண்டது பிபிசி நிறுவனம். அதேபோல “நியூஸ் கிளிக்” ஊடகம் சீனாவில் இருந்து நிதி பெற்றதாகக் கூறி, அதன் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. “நியூஸ் கிளிக்” நிறுவனரான பிரபீர் புர்காயஸ்தா இன்னமும் சிறையில் இருக்கிறார். ஒன்றிய அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால் இதுதான் நிலைமை என்று பகிரங்கமாக மிரட்டுவதாகவே இச்சம்பவங்கள் இருந்தன....

ஜாதி பேதமும் வர்க்க பேதமும் வேறு வேறல்ல! – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

ஜாதி பேதமும் வர்க்க பேதமும் வேறு வேறல்ல! – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

டிசம்பர் 16-ஆம் தேதி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடந்த அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கத்தின் 5-வது அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு கழகத் தலைவர் ஆற்றிய உரை. பொதுவுடமை இயக்கங்கள் ஜாதியின்பால் தன் கருத்தைத் திருப்புமா என்ற எண்ணம் பல வேளைகளில் இருந்திருக்கிறது. அதுகுறித்த விவாதங்களும் கூட இருந்திருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்கூட எம்.சி.பி.அய் கட்சியினர் (யுனைடெட்) என்னிடம் வந்து பெரியார் நினைவுநாளை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் “மார்க்சியத்தின் மீதான எங்கள் விமர்சனங்கள்” என்ற தலைப்பில் நீங்கள் உரையாற்ற வேண்டும் என்று கேட்டனர். மார்க்சியர்கள் எப்போதுமே உலக நடப்புகளை துல்லியமாகக் கணித்து அதற்கேற்ப தங்கள் வரையறைகளை, செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ளும் பண்பு கொண்டவர்கள். ஜாதிய சிக்கல்களை கையிலெடுக்கிற மார்க்சிய இயக்கங்கள் அண்மைக்காலங்களில் பல இயக்கங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்குமுன்புவரை ஏன் இவ்வளவு காலம் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு வலுவான இயக்கத்தை முன்னெடுக்கவில்லை என்ற ஏக்கம்...

மதுரையில் சட்ட எரிப்பு நாள் – கழகத் தலைவர் பங்கேற்பு

மதுரையில் சட்ட எரிப்பு நாள் – கழகத் தலைவர் பங்கேற்பு

1957ல் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகள் எரித்து சிறை சென்ற – உயிர்நீத்த பெரியார் தொண்டர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைவுகூறும் சிறப்புக் கருத்தரங்கம் 10.12.2023 ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு மதுரை மணியம்மை பள்ளியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்டக் கழக காப்பாளர் தளபதி தலைமை தாங்கினார், வாசுகி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார்.புரட்சிக் கவிஞர் பேரவை நாகபாலன், புரட்சிக் கவிஞர் மன்றம் பொறுப்பாளரும், மணியம்மை பள்ளி தாளாளருமான வரதராசன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவு எரிப்பு போராட்டத்திற்கான காரணங்களையும், பெரியார் தொண்டர்களின் வீரஞ் செறிந்த போராட்ட வரலாற்றையும் நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார். முன்னதாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு” நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் திருவெறும்பூர் அரசெழிலன்...

உயர்நீதிமன்றங்களில் (2018 முதல் 2023 டிசம்பர் 02 வரை) 650 நீதிபதிகள் நியமனம்

உயர்நீதிமன்றங்களில் (2018 முதல் 2023 டிசம்பர் 02 வரை) 650 நீதிபதிகள் நியமனம்

உயர் ஜாதியினர் 75.69% (492 பேர்) ஓபிசி பிரிவினர் 11.7% (76 பேர்) எஸ்.சி பிரிவினர் 3.54% (23 பேர்) எஸ்.டி பிரிவினர் 1.54% (10 பேர்) சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் – 5.54% (36 பேர்) எந்த பிரிவிலும் வராத நீதிபதிகள் எண்ணிக்கை – 13 (பேர்) உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் – 14.1% (111 பேர்) உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் – 8.82% (03 பேர்) அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றங்கள் பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம் – 12 பேர் சென்னை உயர்நீதிமன்றம் – 12 பேர் மும்பை உயர்நீதிமன்றம் – 11 பேர் Source : RS/MINISTRY OF LAW (TILL DEC 2023) பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்

நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்

ஈரோடு வடக்கு : ஈரோடு வடக்கு மாவட்டக் கழக சார்பாக  03.12.2023  ஞாயிறு மாலை 04.30 மணியளவில் நம்பியூர் அஞ்சானூர் சமத்துவபுரத்தில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூடக்கரை கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக அமைப்பாளர் கோபி நிவாசு, நம்பியூர் ரமேசு ஆகியோர் தொடக்க  உரையாற்றினார். தொடர்ந்து தலைமைக் கழக பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அடுத்தக் கூட்டம் கூடக்கரையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடக்கரை பகுதி திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பு (எ) சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வக்குமார், கோபி அருளானந்தம், சத்தி முத்து, சித்தா பழனிச்சாமி, சின்னதம்பி, நம்பியூர் ஒன்றியச் செயலாளர் இரமேஷ், சிவராஜ், கூடக்கரை செல்வன், வழக்குரைஞர் தமிழரசன், பன்னீர் செல்வம், இராவணன், ராஜன் பாபு, குட்டி, புலவன்சிறை நடராஜன்,...

நங்கவள்ளியில் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம்

நங்கவள்ளியில் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம்

சேலம் : நங்கவள்ளி ஒன்றியக் கழக சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் 06.12.2023 அன்று புதன் மாலை 4 மணியளவில் வனவாசி மேல் ரோடில் நடைபெற்றது. டி.கே.ஆர் குழுவின் இசை நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் தலைமை வகித்தார், ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், வனவாசி நகர தலைவர் செந்தில்குமார், நங்கவள்ளி அ.செ. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நங்கவள்ளி நகரச் செயலாளர் சு.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ், CPI நங்கவள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், திராவிடத் தமிழர் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சீ.செல்வமுருகேசன், வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் ஆகியோர்...

வள்ளுவருக்குப் பூணூல் போடுவதைத் தடுத்த கலைஞர்

வள்ளுவருக்குப் பூணூல் போடுவதைத் தடுத்த கலைஞர்

(கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  நீர்வளத்துறை வெளியிட்டுள்ள மலரில் “பகுத்தறிவு சீர்த்திருத்தச் செம்மல்” என்ற தலைப்பில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை) பகுத்தறிவு என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று கலைஞர் கொடுத்த விளக்கத்தில் இருந்தே இந்த கட்டுரையை தொடங்கலாம் என்று கருதுகிறேன். “எல்லாவற்றையும் பகுத்தறியத்தான் பகுத்தறிவு. கடவுள் உண்டா இல்லையா என்று ஆராயக் கூட பகுத்தறிவு தேவைப்படுகிறது. சிந்திக்கிற, பகுத்தறிகிற ஆற்றலைப் பெற்றதால்தான் மனிதன் மற்ற உயிரினங்களை விட மேலானவனாக மனிதன் கருதப்படுகிறான். அப்படிப்பட்ட அந்த ஆற்றலை எதிர்கால சமுதாயம் வாழ்வதற்குப் பயன்படுத்த வேண்டும்.”  1.1.81 அன்று சென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டை தொடங்கிவைத்து கலைஞர் குறிப்பிட்டவை இவை. எழுத்தாளர், பத்திரிகையாளர், வசனகர்த்தா, அரசியலாளர், கவிஞர், பாடலாசிரியர் என கலைஞருக்கு பன்முக அடையாளங்கள் இருந்தாலும், தன்னை அவர் எவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டார் என்பதில் இருந்துதான் கலைஞரின் வரலாற்றை அணுக வேண்டும். “5 முறை முதல்வராக இருந்தேன், 50 ஆண்டுகாலம் திராவிட...

இராமாயணம் ஆரிய – திராவிடப் போர்

இராமாயணம் ஆரிய – திராவிடப் போர்

“ஆரியர்களால் தோற்கடிக்கப் பட்ட எதிரிகளாகிய திராவிடர் களை, தங்களின் புத்தகங்களில் திராவிடர்கள் – தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்” “ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெருப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுக சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.” (சி.எஸ்.சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ்.ராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திர முதல் பாகம் எனும் புத்தகத்தில் ‘இந்து இந்தியா’ எனும் தலைப்பில் 16,17வது பக்கங்களில்) பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க திருவல்லிக்கேணி பகுதித் தோழர்கள் முடிவு

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க திருவல்லிக்கேணி பகுதித் தோழர்கள் முடிவு

திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி பகுதிக் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.11.2023 வியாழன் மாலை 6 மணிக்கு வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் தோழர் இராஜேசு தலைமையில் நடைபெற்றது.. கூட்டத்தில் கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு 500 சந்தா திரட்டுவது எனவும், வருகிற 2024ம் ஆண்டிற்கான பொங்கல் விழா சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, பகுதிச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட பகுதிக் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

கழகப் பொறுப்பாளர் விஜயகுமார் தந்தை முடிவெய்தினார்.

கழகப் பொறுப்பாளர் விஜயகுமார் தந்தை முடிவெய்தினார்.

கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமாரின் தந்தை இராம. கண்ணதாசன் (வயது 68) 09.12.2023 அதிகாலை 4 மணியளவில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். பேராசிரியர் சரஸ்வதி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன் மற்றும் கடலூர், சேலம், சென்னை மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

தலையங்கம் – அயோத்தி அரசியல்

தலையங்கம் – அயோத்தி அரசியல்

அயோத்தி அரசியலை தீவிரமாக முன்னெடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் ‘இராமனை’ ஓட்டு வங்கியாக மாற்றும் நடவடிக்கைகளில் உத்திரபிரதேச மாநில அரசும், ஒன்றிய அரசும் தீவிரம் காட்டி வருகின்றன. வருகிற ஜனவரி 22ல் இராமன் கோயில் திறக்கப்பட இருக்கிறது. இராம ஜென்ம பூமி அறக்கட்டளை ரூ.1800/- கோடி செலவில் பாப்ரி மசூதி இருந்த இடத்தில் இந்த கோயிலை கட்டி முடித்திருக்கிறது. இதனால் அயோத்தியில் வீட்டுமனைகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக உத்திரபிரதேச வருவாய்துறை அமைச்சர் கூறுகிறார். சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் ஆண்டுகளில் ரூ.4500/- கோடி செலவில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் புதிய நகரங்களை உருவாக்க தனியாருக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. விழாவின் கதாநாயகன் பிரமர் மோடி இராமன் சிலையை சுமந்து வந்து கர்ப்ப கிரகத்தில் நிறுவப் போகிறார் என்பதில் இருந்தே இதற்கு பின்னால் உள்ள அரசியலை புரிந்துகொள்ள முடியும் கோயில் கர்ப்பகிரகம் புனிதமானது என்றும் அதில் பிராமணர்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும்...

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு இராமதாஸ் கண்டனம்

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு இராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றை தொகுத்து ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவர், இதழியல் துறை இணைப் பேராசிரியராகவும், பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநராகவும் உள்ளார். மக்கள் நலன் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்தவே பெரியாரின் போராட்ட வரலாறுகளை தொகுத்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு. இது தந்தை பெரியாருக்கு எதிரானது. பெரியார் பெயரிலான பல்கலை நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பெரியாருக்கு எதிராக செயல்படும் இவர்கள் யாருடையாக கருவிகளாக இருப்பார்கள் என்ற ஐயம் எழுகிறது. எனவே பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்திற்கு...

ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் அத்துமீறல் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் அத்துமீறல் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

கழகத் தலைவர் இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் கண்டனம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் சுப்பிரமணி சேலம் பல்கலையில் பெரியார், அண்ணா, கலைஞர் இருக்கையின் தலைவராக உள்ளார். இதழியல் துறை பேராசிரியரும் கூட. தமிழ்நாடு அரசு அண்மையில் அவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெகநாதன் என்ற ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரை துணைவேந்தராக நியமித்துள்ளார். அவர் பல்கலை வளாகத்தையே ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக மாற்றிவருகிறார். ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ‘அகில இந்திய வித்தியார்த்தி பரிசத்’ அமைப்பில் சேருங்கள் என்று விளம்பரப் பலகை மட்டும் வளாகத்தில் மாட்டப்பட்டுள்ளது. இதற்கு துணைவேந்தர் அனுமதி வழங்கியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக பதிப்பு துறை என்ற ஒரு துறையும் இயங்கிவருகிறது.  2008ம் ஆண்டு பெரியார் பெயரில் இயங்கும் இந்த பல்கலையில் பெரியார் இருக்கை உருவாக்கப்பட்டது. இதுவரை 60 பக்க அளவில் பெரியார் குறித்த ஒரு சிறு நூல் மட்டுமே வெளியிடப்பட்டது. வேறு எந்த நூலும் வெளியிடப்படவில்லை. பல்கலைப் பேராசிரியர்கள் பல்கலை சார்பில்...

பெரியார் குறித்து நூல் வெளியிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கையாம்! எல்லை மீறுகிறார் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர்

பெரியார் குறித்து நூல் வெளியிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கையாம்! எல்லை மீறுகிறார் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர்

‘பெரியாரின் போர்க்களங்கள்’ ‘மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ என்ற நூல்களை எழுதியதற்காக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் சுப்பிரமணிக்கு பல்கலை துணைவேந்தர் ‘மெமோ’ அனுப்பியுள்ளார். பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக, சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியருக்கு மெமோ வழங்கியதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சேலம் உள்பட 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சமயம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு ஆதரவாகவும் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், அங்கு பணிபுரிந்து வரும் பேராசிரியருக்கு மெமோ வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணை பேராசிரியரான சுப்பிரமணி, அங்குள்ள பெரியார்,...

ஆட்சி அதிகாரம் : அம்பேத்கர் பார்வை என்ன? – கொளத்தூர் மணி

ஆட்சி அதிகாரம் : அம்பேத்கர் பார்வை என்ன? – கொளத்தூர் மணி

நாம் புரட்சியாளர் அம்பேத்கரை, அவரின் கொள்கைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது அவரது ‘ஜாதி ஒழிப்பு’ நூல். லாகூர் மாநாட்டில் அவர் ஆற்ற இருந்த உரையை நூலாக வெளியிட்டார். நூல் வெளி வந்த இரண்டாம் மாதத்தில், அம்பேத்கரின் அனுமதியோடு தமிழில் பெரியார் வெளியிட்டார். அந்த நூல் தாங்கியிருந்த சிந்தனையைதான் பெரியாரும் கொண்டிருந்தார். அரசியல் நிலைபாடுகளில் இருவருக்கும் சிறு சிறு மாற்றங்கள் இருந்திருக்கலாம். அம்பேத்கர் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார். பெரியார் தனித் தமிழ்நாடு பேசினார். இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். பெரியார் இந்தி கூடாது என்று சொன்னார். அரசியல் நிலைகளில் அவரவர்களுக்கு இருந்த கருத்தின் அடிப்படையில் சொன்னார்கள். தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பை பிற சாதியினர் வாழும் பகுதிகளில் நிறுவ வேண்டும் என்பது பெரியாரின் கருத்தாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு வெட்ட காங்கிரஸ் நிதி அனுப்பியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் வந்த நாற்பத்தி...

மோடி ஆட்சி இஸ்ரேலை ஆதரிப்பது ஏன் (5) இந்தியாவில் பார்ப்பனர்கள், அமெரிக்காவில் யூதர்கள் – விடுதலை இராசேந்திரன்

மோடி ஆட்சி இஸ்ரேலை ஆதரிப்பது ஏன் (5) இந்தியாவில் பார்ப்பனர்கள், அமெரிக்காவில் யூதர்கள் – விடுதலை இராசேந்திரன்

1968-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட நிக்சன், ஹம்ப்ரி இருவருமே யூதர்களின் ஆதரவுக்கு வலைவீசினார்கள். தேர்தல் செலவுக்குப் பெருந்தொகையை யூதர்களிடமிருந்து பெறுவதே இதன் நோக்கம். ஹம்ப்ரிக்குத்தான் யூதர்கள் ஆதரவு கிடைத்தது. 85 சதவீத யூதர்களின் வாக்கு ஹம்ப்ரிக்குக் கிடைத்தும், அவரால் வெற்றி பெற முடியவில்லை! நிக்சன் வெற்றி பெற்றுவிட்டார். அரபு – இஸ்ரேல் பிரச்சனைக்கு நியாயமான முறையில் அமைதித் தீர்வு ஒன்றை உருவாக்க விரும்பி, 1967-க்குப் பிறகு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை, அரபு நாடுகளிடம் திரும்ப ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கினார். யூதர்கள் நிக்சனை மிரட்டத் துவங்கினர். யூத அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரட்டி, வலிமையான போராட்டங்களில் இறங்கின. எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல் நிக்சன் திணறினார். 1970 மார்ச்சில் – பிரான்ஸ்அதிபர் அமெரிக்கா வந்தபோது, அவரது அரபு ஆதரவுக் கொள்கைகளை எதிர்த்து யூத அமைப்புகள் போராட்டம் நடத்தின. அமெரிக்க – பிரான்ஸ்உறவு சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காக, பிரான்ஸ்அதிபரிடம் நிக்சன் மன்னிப்புக் கோரினார். இதற்காக...

4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள் விபரம்

4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள் விபரம்

மத்திய பிரதேசம் : காங்கிரஸ் – 1,75,64,353 பாஜக – 2,11,13,278 ராஜஸ்தான் :  காங்கிரஸ் – 1,56,66,731 பாஜக – 1,65,23,568 தெலுங்கானா : காங்கிரஸ் – 92,35,792 பாஜக – 32,57,511 சத்தீஸ்கர் : காங்கிரஸ் – 66,02,586 பாஜக – 72,34,968 வாக்கு சதவீதம் சத்தீஸ்கர் : காங்கிரஸ் 42.23% பாஜக 46.27% மத்திய பிரதேசம் : காங்கிரஸ் 40.40% பாஜக 48.55% ராஜஸ்தான் : காங்கிரஸ் 39.53% பாஜக 41.69% தெலுங்கானா : காங்கிரஸ் 39.40% பாஜக 13.90%. காங்கிரஸ் – 4.91 கோடி வாக்குகள். பாஜக   – 4.8 கோடி வாக்குகள். நாடு காங்கிரசை விரும்புகிறது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது

சென்னை வெள்ளம் : கழகத் தோழர்கள் உணவு வழங்கினர்

சென்னை வெள்ளம் : கழகத் தோழர்கள் உணவு வழங்கினர்

திருவல்லிக்கேணி பகுதிக் கழக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர் கணேசபுரம்,  ரூதர்புரம், சைவ முத்தையா தெரு, செல்லம்மாள் தோட்டம் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் இதற்கான பணிகளை காலை முதலே தொடங்கி இரவு வரை செய்தனர். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் ரூ.5000, கவிப்பிரியா ரூ.2000, பாலாஜி ரூ.500, திண்டுக்கல் மாக்சிம் கார்கி ரூ.600 வழங்கினார்கள். மயிலைப் பகுதிக் கழக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சத்தியவாணி முத்து நகர், சுப்புராயன் சாலை, விசாலாட்சி தோட்டம், கணேசபுரம், முண்டக்கன்னியம்மன் கோவில் அருகிலுள்ள ஆகிய பகுதியில் உணவு வழங்கப்பட்டது. மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், பிரவின், பார்த்திபன், சிவா, கார்த்திக், பாஸ்கர், வினோத், மனோகர், சுகுமார், சபரி, சுரேஷ், மாரிமுத்து, மணிகண்டன் இப்பணிகளை மேற்கொண்டனர். பெரியார் முழக்கம் 07122023 இதழ்

தலையங்கம் – தூய்மைப் பணியாளர்களின் அவலம்

தலையங்கம் – தூய்மைப் பணியாளர்களின் அவலம்

2015ம் ஆண்டு வெள்ளத்துக்குப் பிறகு சென்னை மீண்டும் ஒரு வெள்ள அபாயத்தை சந்தித்து அதிலிருந்து மீண்டுவந்திருக்கிறது. 2015ம் ஆண்டில் வந்தது செயற்கை வெள்ளம், இப்போது வந்திருப்பது இயற்கை வெள்ளம் என்று தமிழ்நாடு முதல்வர் கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் உண்டு. 2015ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது.  இப்போது இயற்கயின் சீற்றம், 2015ல் பெய்த மழையின் அளவை விட இரு மடங்கு அதிகமாக மழையை சென்னை சந்தித்துள்ளது. அப்போது சராசரியாக 25செ.மீ அளவு, இப்போது 47 செ.மீ அளவு. நான்காண்டு காலம் முதல்வராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியின் மீது குற்றம் சுமத்தி பேரிடரிலும் அரசியல் நடத்த விரும்புவது தான் வேதனைக்குரியது. சென்னையில் ரூ.3000 கோடி செலவில் மழைநீர் தேங்காமல் வடிகால் பணிகளை திமுக ஆட்சி மேற்கொண்டும் ஏன் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது...

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டத் துணைத் தலைவர் சுகுமார், இராஜேசு, அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர். மயிலாப்பூர் : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி மயிலைப் பகுதிக் கழகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், அய்யா உணவகம் சுரேஷ், பிரவீன், உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டில் ராஜேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் மேற்கு : புரட்சியாளர் அம்பேத்கர் 67வது நினைவுநாளை ஒட்டி 06.12.23 காலை 10 மணியளவில் சேலம் மேற்கு...

புலியூரில் ‘மாவீரர் நாள்’

புலியூரில் ‘மாவீரர் நாள்’

சேலம் : கொளத்தூர் ஈழ ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் “மாவீரர் நாள்” நிகழ்ச்சி 27.11.2023 திங்கள் மாலை 5.30 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் கடைப்பிடி க்கப்பட்டது. நிகழ்விற்கு தார்க்காடு செ. தர்மலிங்கம் தலைமை தாங்கினார். புலியூரைச் சேர்ந்த தோழர்கள் சரவணன், வாசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் திவிக நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் வரவேற்புரையாற்றினர். மாலை 6.05 மணிக்கு தமிழீழ விடுதலைக்காக போர்க்களத்தில் வீரச் சாவடைந்த விடுதலைப் புலி மாவீரர்கள் – பொதுமக்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் “மாவீரர் பாடல்” ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவீரர் பாடல் ஒளிபரப்பிற்கு பிறகு “மாவீரர் உரை” நிகழ்த்தும் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம இளங்கோவன், மூத்த வழக்கறிஞர் இரத்தினம் ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத்...

“தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை” – பெரியார் அறிக்கை

“தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை” – பெரியார் அறிக்கை

1970ஆம் ஆண்டில் “தமிழ்ப் பாடமொழித் திட்டத்தை” கலைஞர் அமல்படுத்தியபோது அதனை வரவேற்று பெரியார் அளித்த அறிக்கை. தமிழ்நாட்டில் வீழ்ச்சி அடைந்த காங்கிரஸ் இயக்கம் தலை எடுக்க, வளர நான் காரணமாக இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டு  நீதிக்கட்சித் தலைவரானதன் காரணமே பார்ப்பனரல்லாத தமிழர்களின் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக ஆக்குவதற்காகவேயாகும். அதற்காக அன்றிலிருந்து இன்றுவரை நான் ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறியும் ஒரு நிமிடமும் ஓய்வு கொள்ளாமல் பணியாற்றிக்கொண்டுள்ளேன். லட்சியங்களில் வெற்றி பலருக்குக் கிடைத்தது போல், எனக்கு இளமைக் காலத்தில் கிடைக்காவிட்டாலும் எனது முதுமைக் காலத்திலாவது கிடைத்தது என்பதற்கு அடையாளமாகத்தான் என்னோடு  இருந்து  வளர்ந்தவர்களால்  ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்ப் பாட மொழி என்ற யுத்த தளவாடம்: இந்த ஆட்சியுனுடைய சாதனைகளில் எந்தவித ஓட்டை உடைசல்களையும் குறிப்பிட்டுக்காட்டி எதிர்க்கமுடியாமல்  தமிழ்ப் பாட மொழிப் பயற்சியைத் தங்கள் யுத்த தளவாடமாக எடுத்துக்கொண்டு, ஆச்சாரியாருடைய சுதந்திராக்கட்சியும், ஆரிய ஏடுகளும் இந்த ஆட்சியைக்...

சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்

சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்

கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் கடந்த 30.12.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு புவனகிரியில் தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் மாணிக்.முருகேசன் தலைமை தாங்கினார். பெரியார் பிஞ்சு திராவிட மகிழன், மற்றும் வெங்கடேசன் ஆகியோரின் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. அ.மதன்குமார் வரவேற்றார், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.ராமர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சதானந்தம், கழக கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் ந.கொளஞ்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி, தியாகி பாலா பேரவையின் பொதுச்செயலாளர் கார்ல் மார்க்ஸ், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்ட கழகச் செயலாளர் அ.சதிசு நன்றி கூறினார். சென்னை :  தந்தை பெரியாரின் 50வது நினைவுநாள் பொதுக்கூட்டம், 20.12.2023, புதன்கிழமை...

மயிலாப்பூரில் மார்கழியில் மக்களிசை

மயிலாப்பூரில் மார்கழியில் மக்களிசை

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஏற்காதபோது பெரியார் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கீழே இருந்த பார்ப்பனர்கள் கூச்சலிட, அவர்களைப் பார்த்து, “நீங்கள் கூச்சலிட்டு நான் அமைதியாக வேண்டுமா? நாங்கள் திரும்பி கூச்சலிட்டால் நீங்கள் என்ன ஆவீர்கள் என யோசித்துப் பாருங்கள்” என்றாராம் பெரியார். அப்படித்தான் மார்கழி மாதம் வந்துவிட்டாலே போதும்… பார்ப்பனர்கள் சில நூறு பேர் சபாக்களை நடத்துவதும், பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக நடத்தப்பட்ட இந்த சபாக்கள் இல்லாவிட்டால் சென்னைக்கு இசையே இல்லை என்பதுபோல, பார்ப்பன ஏடுகள் பக்கம், பக்கமாக சிலாகித்து எழுதுவதும் காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருந்தது. இப்போதும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும், இப்போதெல்லாம் மார்கழி மாதம் வந்துவிட்டாலே “மார்கழியில் மக்களிசை” எங்கே நடக்கிறது என்று மக்கள் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில், 4-வது ஆண்டாக மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பகுதியில் டிசம்பர் 30, 31 ஆகிய 2 நாட்கள் “மார்கழியில் மக்களிசை” நிகழ்ச்சி...

தலையங்கம் – கீதையில் இருக்கிறது சனாதனம்!

தலையங்கம் – கீதையில் இருக்கிறது சனாதனம்!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும், அது மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை விதைக்கிறது என்று அமைச்சர் உதயநிதி கூறியபோது, “இந்துக்களை ஒழிக்க வேண்டும்” என்று பேசுகிறார் என திரிபுவாதம் செய்து தேசிய அளவிலான விவாதப்பொருளாக இந்துத்துவா கும்பல் மாற்றியது. சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுக்கே இடமில்லை, அது ஒரு வாழ்வியல் நெறி என்றெல்லாம் அவரவருக்கு தோன்றியதை, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார்களே ஒழிய, எவரும் சனாதனம் என்றால் இதுதான் என தெளிவாக விளக்கவே இல்லை. பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் ஒருவரே, இப்போது தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அசாம் மாநில முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா தனது X பக்கத்தில் (டிவிட்டர்) கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகளைப் பதிவிட்டிருந்தார். “பகவத் கீதையின்படி, பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் ஆகிய மூன்று சாதியினருக்கும் சேவை செய்வது சூத்திரர்களின் இயற்கையான கடமை” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. பிற்படுத்தப்பட்டோரை பிரதமர் ஆக்கிவிட்டோம், பழங்குடியினரை குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டோம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான எல்.முருகனை ஒன்றிய அமைச்சராக்கிவிட்டோம்,...

பெரியார் பல்கலை-யை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். வேண்டும் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

பெரியார் பல்கலை-யை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். வேண்டும் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளுக்காக துணைவேந்தர், பொறுப்பு பதிவாளர் உட்பட நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ளார். தனக்கு இதய வலி இருப்பதாகச் சொல்லி (அதன் உண்மைத் தன்மையையும் ஒரு மருத்துவக் குழு உறுதி செய்ய வேண்டும்) மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கிறார். 2024 ஜனவரி 2ஆம் நாள் பல்கலைக்கழகம் விடுமுறை முடிந்து திறக்கப்பட்டு விட்டது.ஆனால் துணைவேந்தர் பதிவாளர் யாரும் இல்லாமல் எந்த முன்னெடுப்புகளும் தீவிரமாய் எடுக்க முடியாமல் நிலை தடுமாறி நிற்கிறது பல்கலைக்கழகம். இன்னொரு பக்கம் பிணையில் இருந்தாலும் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் செயல்பாடுகள் தொடர்ந்து நடப்பதாகவே நாம் அறிகிறோம்.வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்குக்கு தொடர்பான ஆவணங்கள் பல்கலைக்கழகத்தில் தான் இருக்கின்றன என்ற நிலையில் அவர் பல்கலைக்கழகத்திற்குள் வரக்கூடாது என்றோ, வழக்கின் ஆவணங்களை, சாட்சியங்களைக் கலைக்கக் கூடாது எனும் இயல்பான நிபந்தனைகளைப் பற்றிய அக்கறையில்லாமல் அங்கு இருக்கிற பல்வேறு பதிவேடுகள்...

எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

ஜனவரி: பொங்கல் விழா அழைப்பிதழில் “தமிழ்நாடு” என குறிப்பிட மறுத்தது, தமிழ்நாடு அரசின் இலச்சினையை பயன்படுத்த மறுத்தது,  பின்னர் எதிர்ப்புகளுக்கு அடிபணிந்தது என ஆளுநரின் அதிகார மீறல்களோடுதான் 2023 தொடங்கியது. சட்டப்பேரவையில் ஜனவரி 9-ஆம் தேதி ஆளுநர் உரையை வாசித்த ஆர்.என்.ரவி, சில முக்கியப் பகுதிகளை வெட்டியும் ஒட்டியும் திரித்தும் வாசித்தார். திராவிட மாடல், சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், காமாராசர் ஆகிய வார்த்தைகளை உச்சரிக்க மறுத்துவிட்டார். ஆனால் அரசு தயாரித்த உரைதான் பதிவேட்டில் இடம்பெறும் என முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்ததால், வேறு வழியின்றி சட்டமன்றத்தை விட்டு ஓட்டம்பிடித்தார் ஆர்.என். ரவி. ஆணவம் பிடித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி மேட்டூர், சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கழகத்தின் சார்பில் உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜனவரி 13-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் மாவட்டக் கழகம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...

நிர்மலாவின் பொய்யுரைகளுக்கு அமைச்சர் பதில்

நிர்மலாவின் பொய்யுரைகளுக்கு அமைச்சர் பதில்

சென்னை மேற்கு மாம்பலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014-2023 வரை ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு வழங்கிய வரி ரூ.6.23 இலட்சம் கோடி. ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.6.96 கோடி. தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட கூடுதலான நிதியினை நாங்கள் வழங்கிவருகிறோம் என்று உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்துள்ளார். அதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக அரசு, கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.4000, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை, நிறைவேற்றவே முடியாது என்று எதிரிகளால் விமர்சிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசாக ரூ.1000 என ஒன்றிய அரசின் எந்தவித ஒத்துழைப்புமின்றி தமிழ்நாடு அரசு தொடர்ந்து தனது திட்டங்களை செயல்படுத்திவருகிறது....

இந்திய அரசியலும் பார்ப்பனியமும் – திருப்பூரில் கருத்தரங்கம்

இந்திய அரசியலும் பார்ப்பனியமும் – திருப்பூரில் கருத்தரங்கம்

திருப்பூர் : திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மூத்த மகன் வெற்றிமாறனின்  4 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் இளைய மகன் பெயர் சூட்டும் விழா 07.01.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பூர் கிருஷ்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது.   முதல் நிகழ்வாக வெற்றிமாறனின் பிறந்தநாள் கழகத் தலைவர் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக வசந்தி – முத்து இணையரின் இரண்டாவது மகனுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் “மகிழ் மாறன்” என்று பெயர் சூட்டினார். பெயர் சூட்டு விழாவைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முத்துலட்சுமி தலைமை தாங்கினார்,  சக்தி முன்னிலை வகித்தார், வசந்தி வரவேற்புரையாற்றினார். கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் பா.இராமச்சந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப்...

சென்னை, திருப்பூரில் பொங்கல் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை, திருப்பூரில் பொங்கல் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

_திருவல்லிக்கேணி பகுதி 24ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் இளைஞர் – பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 13.01.2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றவுள்ளனர். மயிலாப்பூர் : மயிலாப்பூர் பகுதியில் 8ஆம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 07ம் தேதி சுப்பராயன் சாலையில் நடைபெற்றது. பரிசளிப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும். வட சென்னை : தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் மற்றும்...

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

குஜராத் கலவரத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் விடுதலை செல்லாது என்றும் அவர்களை மீண்டும் இரண்டு வார காலத்துக்குள் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் 08.01.2024 அன்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில், குற்றவாளிகளின் விடுதலைக்கு பின்னால் இருக்கிற அரசியலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒன்றிய ஆட்சியும், குஜராத் ஆட்சியும் இணைந்து குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர் என்று கூறிய உச்சநீதிமன்றம் இதில் நடந்திருக்கிற மோசடிகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் ஃபிராடு நடந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தையை சுட்டிக்காட்ட வேண்டும். அது என்ன ஃப்ராடு? இந்த வழக்கு குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. எனவே குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் முடிவு மகாராஷ்டிரா மாநில அரசுக்குத்தான் உண்டே தவிர குஜராத் மாநில அரசுக்கு சட்டப்படி கிடையாது. ஆனால் குஜராத் மாநில அரசு எப்படி இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யமுடிந்தது? தண்டனை...

பேராபத்து சட்டங்களுக்காக ஜனநாயகப் படுகொலை –   எட்வின் பிரபாகரன்

பேராபத்து சட்டங்களுக்காக ஜனநாயகப் படுகொலை – எட்வின் பிரபாகரன்

வரலாற்றில் இல்லாத வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் 11 கட்சிகளின் 140 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.மோடிக்கு எதிராக, நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருதி, பதாகைகளை ஏந்தி வந்ததற்காக இந்த அக்கிரம நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. INDIA கூட்டணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல்,  சங்கிகள் செய்த வெறிச்செயல் இதுவாகும். இனி நம்முடைய நாடாளுமன்றம் வடகொரிய நாடாளுமன்றத்தைப் போல இருக்கப் போகிறது என கார்த்தி சிதம்பரம் (காங்) விமர்சித்துள்ளார். எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு பல்வேறு சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஒன்றிய சனாதன அரசு, எந்த எதிர்ப்புக்கும் இடமின்றி நிறைவேற்றி உள்ளது. இதை மணிஷ் திவாரியும் (காங்) குறிப்பிட்டுப் பேசியுள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இரங்கல் உரை எழுத வேண்டிய நிலையில் இருக்கிறோம் என சசி தரூர் (காங்) கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. உண்மையை பேசுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக சுஷில் குமார் ரிங்கு (ஆம்ஆத்மி) கண்டித்துள்ளார். தன்னுடைய கூர்மையான கேள்விகளால் பாஜகவினரை துளைத்து வந்த,...

பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிப்போம் – ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ

பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிப்போம் – ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ

(28.12.2023 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி) ஒன்றிய அரசின் எந்தவொரு உயர் பொறுப்புகளிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புச் சார்ந்தவர்கள் கிடையாது என்று ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் கூறுகிறது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், இராணுவம் என ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் முற்பட்ட வகுப்பினர்தான் நிறைந்துள்ளனர். இந்த நாட்டின் அதிகாரம் முழுமைக்கும் இன்றைக்கு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு செல்லும்போது பெரியார் ஏன் இது உண்மையான விடுதலை கிடையாது, அதிகாரம் கைமாறி இருக்கிறது என்று கூறினார்? ஆங்கிலேயரிடமாவது நம் உரிமைகளைப் போராடி பெற்றுவிடலாம் என்று பெரியார் கூறினார். சுதந்தர நாளை துக்கநாளாக அறிவித்தவர் பெரியார். விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகிறது. ஆனால் இன்னும் கல்விக்காக, வேலைவாய்ப்புகளுக்காக முட்டிமோதிக்கொண்டுதானே இருக்கிறோம். பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் மோடி பிரதமராக இருக்கும்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வென்றது திமுக, விசிக உள்ளிட்ட...

சந்தாக்களை விரைந்து வழங்குவீர்!

சந்தாக்களை விரைந்து வழங்குவீர்!

வருகிற ஜனவரி 15 முதல் 2024ம் ஆண்டுக்கான “பெரியார் முழக்கம்” சந்தா புதுப்பிக்கப்பட உள்ளதால், கழகத் தோழர்கள் மாவட்ட வாரியாக புதிய சந்தாக்களை விரைவாக 8973341377 என்ற எண்ணிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். விடுதலை இராசேந்திரன், ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம் பெரியார் முழக்கம் 11012024 இதழ்

ஏற்காட்டில் கலந்துரையாடல் கூட்டம்

ஏற்காட்டில் கலந்துரையாடல் கூட்டம்

03.01.2024 புதன் அன்று காலை 11 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள் இல்லத்தில், ஏற்காடு ஒன்றியக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ் தலைமை தாங்கினார், ஏற்காடு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். புதிதாக பரப்புரை வாகனம் வாங்குவது, பயிற்சி வகுப்புகள் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சுமார் 20 தோழர்கள் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

எழுத்தாளர் விஜயபாஸ்கர் புதிதாக எழுதியுள்ள “பாலஸ்தீனம் முதல் இஸ்ரேல் வரை – ஒரு வரலாற்றுச் சுருக்கம்” நூலை சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் புக்ஸ்.காம் அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட கருப்புப் பிரதிகள் நீலகண்டன், பத்திரிகையாளர் நீரை.மகேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் விஜயபாஸ்கர் “உயர்ஜாதியினருக்கு EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?” என்ற நூலை தொகுத்து  கவனம் ஈர்த்தவர். நிகழ்வில் அற்புதம்மாள், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ர.பிரகாசு, அன்னூர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

வினா விடை

வினா விடை

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் நாளில் எல்லோரும் வீடுகளிலும் விளக்கேற்றுங்கள்- எல்.முருகன் பதில்: முன்பு கொரோனாவை விரட்ட விளக்கேற்றுங்கள் என்றார் மோடி, இப்போது ராமரை விரட்ட விளக்கேற்றச் சொல்கிறார்களோ! பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது கண்டிக்கத்தக்கது, அமித் ஷா-வுக்கு கடிதம் அனுப்புவோம்- அண்ணாமலை பதில்: கைது செய்த காவல்துறையினர் வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்ப வழி ஏதும் இருக்கிறதா என்று அமித் ஷாவிடம் கேட்டுப் பாருங்கள்! பாஜக அகில இந்தியத் தலைமையுடன் தொடர்பில் இருக்கிறேன்: ஓ.பன்னீர்செல்வம் பதில்: அந்தத் தொடர்பால்தான் உங்கள் அரசியல் வாழ்க்கை “ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்” என்ற கதைபோல் ஆகிவிட்டது என்பதை மறந்துவிட வேண்டாம். என்னைப் பார்க்க வரும் தொண்டர்கள் பூங்கொத்து கொடுக்க வேண்டாம், புத்தகங்கள் கொடுங்கள்: எடப்பாடி பழனிசாமி பதில்: வரவேற்க வேண்டிய அறிவிப்புதான்… ஆனால் சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை மட்டும் மீண்டும் படித்துவிட வேண்டாம். சென்னை புறநகர் பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றியது ஏன்?-...

தலையங்கம் – ராமர் மண்ணும் ராமசாமி மண்ணும்

தலையங்கம் – ராமர் மண்ணும் ராமசாமி மண்ணும்

மோடி ஆட்சியில் தொழில்துறை மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருப்பதாக, சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேசிவிட்டுச்  சென்றிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல். ஆனால் மோடி ஆட்சியின் முக்கியத்துவம் எதற்கு என்பதை  “அயோத்தி” வெட்டவெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயிலை திறப்பதற்கு நாள் குறித்துவிட்டார்கள். ஜனவரி 22-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை தொட்டு நிறுவப் போகிறார். அதைவைத்தே நாடாளுமன்றத் தேர்தலை வென்றுவிடலாம் எனக் கணக்குப் போட்டிருக்கிறது பாஜக. ஆனால் “சூத்திரர்கள் மசூதியை இடித்ததோடும், அந்த இடத்தில் இப்போது கோயிலைக் கட்ட கோடி கோடியாய் பணத்தையும் பொருளையும் கொட்டியதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் சனாதன தர்மம். அதைவிடுத்து ராமர் சிலையை சூத்திரரான மோடி தொட்டு நிறுவ ஆசைப்படலாமா? சமூக ஒழுங்கு என்ன ஆவது?” என்ற தொனியில் குரல்கள் எழுந்திருக்கின்றன. “பிரதமர் மோடி ராமர் சிலையை தொட்டு, நிறுவும்போது சங்கராச்சாரியான நான் அங்கே நின்று கைதட்ட வேண்டுமா? ராமர்...