ஆர்.எஸ்.எஸ். கூடாரமாகிறதா அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்? – அப்பாவி மாணவர்களின் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 2024-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்-ஸை சேர்ந்த இருவர் உள்ளே நுழைந்து, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஆவணங்களைக் கையில் வைத்துக்கொண்டு மாணவர்களிடையே ஜாதிய மதவாத நச்சுக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக, ஏ.பி.வி.பி-யின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கையில் வைத்துக்கொண்டு, நாங்குநேரியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சின்னதுரை ஆதிக்க ஜாதிவெறி கொண்ட மாணவர்களால் தாக்கப்பட்டவுடன் தமிழ்நாடு அரசால் நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டியின் பரிந்துரையை விமர்சித்தும், அந்த அறிக்கை இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது என்றும் பிரச்சாரம் செய்துள்ளனர். இதனை அறிந்துகொண்ட சட்டக்கல்லூரி மாணவர்கள், குறிப்பாக சமூக அக்கறைகொண்ட, அரசியல் உணர்வு கொண்ட மாணவர்கள் (தமிழ்நாடு மாணவர் கழகம், இந்தியா மாணவர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனி) கல்லூர்ri மாணவர்கள் நேரில் சென்று ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் இருவரையும் விசாரித்தனர். விசாரிக்கும் போது...
