Category: பெரியார் முழக்கம்

ஈழத்தமிழர் நலனுக்காக முதல்வர் கடிதம் அனுப்பியதற்கு  வரவேற்பு!

ஈழத்தமிழர் நலனுக்காக முதல்வர் கடிதம் அனுப்பியதற்கு வரவேற்பு!

ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்! தமிழின அழிப்புக்கு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை கடந்த சனவரி 11 -ஆம் நாள் ஈழத் தமிழரின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்திட தூதரக உறவுகளைப் பயன்படுத்தி உடனடியாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதை ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. அதுபோலவே, ’தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் முன்னெடுத்து வரும் அயலக தமிழர் மாநாடு பாராட்டுக்குரியது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகளை அழைத்து பண்பாடு, கலை, இலக்கியம், வணிகம், தொழில் வளர்ச்சி ஆகியவை குறித்துப் பேசுவது தமிழர்கள் கூட்டுப் பலத்துடன் உயர்வதற்கு உதவும் என்ற வகையில் இம்முயற்சி தொடர வேண்டும். தமிழீழத் தாயகத்தில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில்...

ஆளுநர் பதவியை ஒழித்துக்கட்ட வேண்டும்!

ஆளுநர் பதவியை ஒழித்துக்கட்ட வேண்டும்!

ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் ஆளுநர் ரவி சட்டமன்றத்தின் மரபுகளை மீறுகிறார்; சட்டத்தை அவமதிக்கிறார்; அதற்குப் பதிலாக சரியாக வாங்கி கட்டிக் கொள்கிறார். இந்த ஆண்டும் இதுதான் நடந்து இருக்கிறது. அமைச்சரவை தயாரிக்கும் உரையை சட்டரீதியாக படிக்க வேண்டிய ஒரு ஆளுநர், அதை அதிமுக, பாஜக கூட்டணியின் பிரச்சார உரையாக மாற்ற முயற்சி செய்து இருக்கிறார். அதனால் சட்டமன்றத்துக்குள்ளே உறுப்பினர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பாஜகவின் பிரதிநிதிகளான ஆளுநர்கள் செயல்பாடுகளால் கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் மோதல்கள் வெடித்தன. 2022-ல் தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இதே போன்று ஆளுநர்‌ தமிழிசையுடன் ஏற்பட்ட மோதலில் ஆளுநர் இல்லாமலே சட்டமன்றத்தைக் கூட்டினார். ஆளுநர் உரை கட்டாயம் அல்ல என்று அறிவித்தார்.‌ நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ஆளுநர் தமிழிசை பணிந்து அமைச்சரவை உரையை அப்படியே படிக்க முன் வந்தார். இது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிமன்றங்கள்...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் தனித்துவமும் உறுத்துகிறதா?

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் தனித்துவமும் உறுத்துகிறதா?

ஆளுநர் வாசிக்க மறுத்த உரையில் இருந்தது இதுதான்! தேசிய கீதத்தை பாட மறுத்ததால் உரையை வாசிக்காமல் சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டமன்ற மரபுப்படி அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுகிறது. அந்த நடைமுறைதான் இம்முறையும் பின்பற்றப்பட்டது. எனினும் அரசியலமைப்பு கடைமையைச் செய்யக்கூடாது என்ற கொள்கையோடு வாழும் ஆர்.என்.ரவி தொடர்ந்து முன்றாவது ஆண்டாக உரையை வாசிக்காமல் ஓட்டம் பிடித்தார். ஆர்.எஸ்எஸ் ரவியால் ஏற்றுக் கொள்ள இயலாத அளவுக்கு சாதனைகளும், பா.ஜ.க.வுக்கு எதிரான தமிழ்நாட்டின் தனித்துவப் பார்வையும் இருந்ததே உரையை வாசிக்க மறுத்ததற்குக் காரணம் என்பதே உண்மை. அவற்றில் இருந்து சில துளிகளை மட்டும் தருகிறோம். ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையில் வரையறுக்கப்பட்ட மும்மொழிப் பாடத்திட்டத்தை இந்த அரசு ஏற்கவில்லை. இதனால், தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் நிறுத்திவைக்கப்பட்ட போதும், அதனால் பெரும் நிதிச்சுமை ஏற்பட்டபோதும், ஒன்றிய அரசின் மும்மொழிப் பாடத்திட்டத்தை ஏற்பதில்லை என்பதை பல்வேறு தருணங்களில்...

மண்டல் குழுப் போராளி நூல் வெளியீட்டு விழா

மண்டல் குழுப் போராளி நூல் வெளியீட்டு விழா

கிருஷ்ணகிரி ஈடன் கார்டன் வளாகத்தில் திருவள்ளுவர், பெரியார் மானுட ஒன்றிய அமைப்பின் சார்பில் திரு.வழ.முகமது சாதிக் (வெல்பேர் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர்) தலைமையில், திருவாளர்கள் கா.மாணிக்கம், கோ.தங்கராசு, ரபீக் அகமது, சென்னை அன்புசீலன், காமராசு ஆகியோர் முன்னிலையில் “மண்டல் குழுப் போராளி அறிஞர் ஆனைமுத்து” எனும் நூல் வெளியீடு 21-12-2025 அன்று நடைபெற்றது. வே.இராசா (வட்டாட்சியர் ப.நி) வரவேற்புரையாற்றினார். வழ. அன்பு தனசேகர் ( வருவாய் வரித்துறை அதிகாரி ப.நி) அறிமுகவுரையாற்றினார். கு.முத்துசாமி (செயற்பொறியாளர், மின்சார வாரியம். ப.நி) நூலை வெளியிட்டு உரையாற்றினார். கல்வி வள்ளல் PSV கல்லூரி தாளாளர் முனைவர் பி.செல்வம் சார்பாக அவர்தம் நண்பர் இராமசாமி நூலினைப் பெற்றுக் கொண்டார். பேரா.சிற்பி இராசன் அவர்கள் “மந்திரமா? தந்திரமா?” மூலம் மூட நம்பிக்கைகளைப் போக்கும் உரை நிகழ்த்தினார். கிருஷ்ணமூர்த்தி (அரசு ஊழியர் அய்க்கிய பேரவை) நன்றி கூறினார். நிகழ்வை குயில்தாசன் ஒருங்கிணைத்தார். மாணவர்களும், பொது மக்களும் பங்ககேற்று சிறப்பித்தனர்....

பாலமலை மலையாளி மக்களுக்கு பட்டா வழங்குக!

பாலமலை மலையாளி மக்களுக்கு பட்டா வழங்குக!

மேட்டூரில் வன உரிமை மீட்புக்குழுவின் சார்பில் பாலமலையில் வாழும் மலையாளி இன மக்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வன உரிமை மீட்புக்குழுவின் சார்பில் பாலமலையில் வாழும் மலையாளி இன மக்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 15.12.2025 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மேட்டூரில் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்றது. வன உரிமை மீட்புக்குழுத் தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். புள்ளாம்பட்டி ராஜேந்திரன், பெரியகுளம் ஜெயராமன், துவரங்காடு பொன்னுசாமி, ராமன் பட்டி பாலமுருகன், திம்மப்பொதி ராமலிங்கம், பாலமலையின் அனைத்து கிராமங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். பாலமலை பழங்குடி மலையாளி இன மக்களின் பட்டா நிலங்களை மோசடியாக, பழங்குடி அல்லாதவர்களுக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்றும், மலையாளி இன மக்களின் அனுபவத்தில் உள்ள நிலங்களை முறையாக அளவீடு செய்து பட்டா வழங்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசிய...

தாராபுரம் தோழர் ‘ஈவெரா’ இல்ல திறப்பு விழா!

தாராபுரம் தோழர் ‘ஈவெரா’ இல்ல திறப்பு விழா!

தாராபுரத்தில் வழக்கறிஞர் கிருட்டிணகுமார்-ஆசிரியர் சுமித்ரா, ஈவெரா குடும்பத்தினரின் புதிய இல்ல திறப்பு விழா டிசம்பர் 25 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று இல்லத்தைத் திறந்து வைத்தார். SFD மாணவர்கள் யாழ்மொழி, இசைப்பிரியா, செந்தணல் மூவரும் கடவுள் மறுப்பு உறுதிமொழி முன்மொழிந்தனர். பங்கேற்ற அனைவரும் உறுதி ஏற்றனர். பெரியகுளம் குமரேசன் வரவேற்புரை ஆற்றினார். ஜவஹர், முனைவர் ஆ.புரட்சிக்கொடி, திராவிடர் தளம் அதிஅசுரன் ஆகியோரது கருத்துரைகளுக்குப் பிறகு கழகத் தலைவர் கொளத்தூர் மணி வீடு கட்டும் பொழுது மூடநம்பிக்கை இல்லாமல் அவர்களுக்கு ஏற்றவாறு அறிவியல் முறையில் இணைத்து வீட்டை கட்டியிருக்கிற வழக்கறிஞர் கிருட்டிணகுமார் – ஆசிரியர் சுமித்ரா இணையர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் இம்மாதிரியான அறிவியல் முறையை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோளாக முன்வைத்து உரையாற்றினார். தாராபுரம் பூங்கொடி அவர்கள் நன்றியுரையாற்றினார். திருவள்ளுவர் படிப்பகம் இராசாமணி இவ்விழாவினை ஒருங்கிணைத்தார். மனித வள மேம்பாட்டுத் துறை...

ஆளுநர் பதவியை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

ஆளுநர் பதவியை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

ஆளுநர் பதவியை ஒழித்துக்கட்ட வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பில் பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் இணைந்து, டிச-15,2025, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் உள்ளிட்ட பல இயக்கத் தலைவர்கள் சிறப்புரையாற்றினர். இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), ம.கி.எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), வீரா, அசோக் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்று கண்டனம் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 15012026

‘ஜாதி அடையாளம் அல்ல அவமானம்’ – புதுச்சேரியில் கருத்தரங்கம்!

‘ஜாதி அடையாளம் அல்ல அவமானம்’ – புதுச்சேரியில் கருத்தரங்கம்!

பெரியாரிய பற்றாளர் தோழர் சிற்பி ராசன் அவர்களின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில், ‘ஜாதி அடையாளம் அல்ல அவமானம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதுச்சேரி ராசா நகரில் டிசம்பர் 25 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. தியாகு தலைமையில் பாரதி வரவேற்புரையாற்ற புதுவை தீனா தொடக்க உரையாற்றினார். யூ2புரூடஸ் மைனர், இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), முனைவர் பன்னீர்செல்வம் (சமூக செயற்பாட்டாளர், புதுச்சேரி), வீ.ரா.பாலகிருஷ்ணன் (ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். திரைத்துறையில் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பேசிய திரை கலைஞர்களைச் சிறப்பிக்கும் விதமாக வெளிவந்துள்ள 2026-ஆம் ஆண்டுக்கான கழக நாட்காட்டியை (ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர்) பாலகிருஷ்ணன் வெளியிட அய்யா சிற்பி ராசன் பெற்றுக்கொண்டார். பா.சந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பெரியாரிய சிந்தனையாளர் இயக்கத் தோழர்கள் மற்றும் முற்போக்கு இயக்கத் தோழர்கள், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கடலூர் சிவா, சென்னை அசோக், வீரா,...

பெரியார் தொழிற்சங்கப் பேரவை பெயர்ப்பலகை திறப்பு!

பெரியார் தொழிற்சங்கப் பேரவை பெயர்ப்பலகை திறப்பு!

கருஞ்சட்டைப் படைகளுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தந்தை பெரியார் தொழிற்சங்கப் பேரவையின் பவானி கிளை பெயர் பலகைத் திறப்பு விழா நடைபெற்றது. தந்தை பெரியார் தொழிற்சங்கப் பேரவையின் பவானி கிளையின் பெயர் பலகைத் திறப்பு விழா 22. 12. 2025 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்டம், ஊராட்சி கோட்டையில் உள்ள பவானி பணிமனையில் த.பெ.தொ.பே பவானி கிளைத் தலைவர் சி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. த.பெ.தொ.பே பவானி கிளையின் துணைத் தலைவர் மா. சு. சந்திரகாந்த், அந்தியூர் கிளையின் தலைவர் கோ. செல்லத்துரை, அந்தியூர் கிளைச் செயலாளர் சி. முருகேசன், அந்தியூர் கிளை துணைச் செயலாளர் குப்புசாமி ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர். த.பெ.தொ.பே. பவானி கிளையின் தலைவர் வீ. வெங்கடாசலம், பொதுச்செயலாளர் சி. குப்புசாமி, செயலாளர் மா. சரவணன், பொருளாளர் சா. செல்வன் ஆகிய தோழர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். மக்கள் வழக்கறிஞர் ப.பா...

அரணாக நிற்கிறது தமிழ்நாடு அரசு!

அரணாக நிற்கிறது தமிழ்நாடு அரசு!

“அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சட்டத்தை அமல்படுத்தி இந்து சமூகத்தின் தன்மானத்தை மீட்டது திராவிட மாடல் ஆட்சி. ஆனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிராமணர் அல்லாத இந்து அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்து பிராமணர்கள் மட்டுமே’ அர்ச்சகராக இருக்க முடியும் என்று தீர்ப்பு அளித்தார். பார்ப்பனரல்லாத சூத்திர, பஞ்சம இந்துக்களை இப்படி நீதிமன்றம் அவமதித்த போது பாஜகவும் இந்து முன்னணியும் எங்கே போயின?.. இந்துக்களின் தன்மானத்துக்காக அரசு கொண்டுவந்த சட்டத்தை நீதிமன்றம் அவமதிக்கலாமா என்று அண்ணாமலைகள் பொங்கினார்களா?.. பார்ப்பனியம் சக இந்துக்களை அவமதிக்கும் போது வெட்கம், மானம் இன்றி மண்டியிட்டுக் கிடப்பார்கள்: அதுதான் ஆகமம் என்று நியாயம் பேசுவார்கள். திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயிலுக்குள் தீப விளக்கு ஏற்ற வேண்டும் என்பதுதான் ஆகமம் என்று அந்த கோயிலின் அர்ச்சகர்களே கூறுகிறார்கள். ஆனாலும் கூட தர்காவுக்கு அருகில் உள்ள எல்லைக்கல்லை தீபத்தூண் என்று கூறி அதில்தான் விளக்கேற்ற வேண்டும் என்று நீதிமன்றத் தீர்ப்பையும்...

சேரன்மாதேவி குருகுலத்தில் பணிபுரிந்தாரா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (10)- கொளத்தூர் மணி

சேரன்மாதேவி குருகுலத்தில் பணிபுரிந்தாரா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (10)- கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் காலத்தில் அவரது கருத்துக்களை நேரடியாக அறிந்து எழுதப்பட்டுள்ள தோழர் இஸ்மத் பாஷா, தோழர் கே.பாலதண்டாயுதம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் பல செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் முதன்மையானது சிராவயல் காந்தி ஆசிரமம் (பள்ளி வாசகசாலை) பற்றியது; அதாவது இந்த ஆசிரமத்தை தோழர் ஜீவானந்தம்தான் உருவாக்கினார் என்ற ஒரு அதீதமாக எழுப்பபட்டுள்ள மாய பிம்பம். தோழர் அ.ப.பாலையன் தொகுப்பாசிரியராக இருந்து தொகுத்த “ஜீவா தேடிய மானுடம்” என்ற நூலின் நான்காம் கட்டுரையான ‘பெரியார் ஜீவா – உறவும் பிரிவும்’ என்ற கட்டுரையில் “ நீண்ட நாட்கள் நடைபெற்ற கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்திலும் ஜீவா பங்கேற்கிறார் (1924) ”, (நூலில் 1924 என கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டு இருந்தாலும் 1924 ஏப்ரல் முதல் 1925 டிசம்பர் வரை போராட்டம் நடந்தது) என்றும் “சேரன்மாதேவி குருகுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜீவா, அங்கு நடைபெற்ற அநீதிக்கு எதிராக போராட்டத்தில் ஈவெரா, வரதராஜர்...

‘காவிரிப் பெருநிலம்’ நூல் வெளியீட்டு விழா!

‘காவிரிப் பெருநிலம்’ நூல் வெளியீட்டு விழா!

திராவிட இயக்க ஆதரவாளரும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான வழக்குரைஞர் விஜய் எழுதிய “காவிரிப் பெருநிலம்” வெளியீட்டு நிகழ்வு (03.01.25) அன்று மாலை 5.00 மணி அளவில் ஈரோடு சம்பத் நகரில் உள்ள கடோத்கஜா ரெஸ்டாரன்ட் ஆருத்ரன் அரங்கத்தில் நடைபெற்றது. கற்றல் கலையக மாணவர்கள் சார்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வேர்கள் தமிழ் நாட்டார் கலைக்குழு சார்பாக அரங்கம் அதிர பறை இசை நிகழ்த்தப்பட்டது. வழக்கறிஞர் யோகேஸ்வரி வரவேற்புரையாற்றினார். மருத்துவர் வினிசா (மகரந்தம் வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளர்) தொடக்கவுரையாற்றினார். வழக்கறிஞர்.செயப்பிரகாசம் நூல் அறிமுக உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்) இணைந்து நூலை வெளியிட்டனர். இலங்கை வட மாகாண மேனாள் அமைச்சர் அனந்தி சசிதரன் நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரையாற்றினார். வழக்குரைஞர் விஜய், நூல் இயற்றிய அனுபவத்தைக் கூறி ஏற்புரையாற்றினார். காரா பதிப்பகம் தடா மதி (எ) கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையாற்றினார். பேரன்பு (தமிழ்நாடு...

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கம்!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கம்!

காஞ்சிபுரம் மாவட்ட மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக புதிய சிந்தனையாளன் பொங்கல் மலர் – 2026 வெளியீட்டு விழா, தன்னுரிமைத் தமிழ்தேசம் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கம் 04.01.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், இந்திரா காந்தி சாலை (நெல்லுக்காரத் தெரு) – வில் உள்ள இராஜாஸ் லாட்ஜில் நடைபெற்றது. வாலாசா வல்லவன் (மா.பெ.பொ.க துணைப் பொதுச் செயலாளர், புதிய சிந்தனையாளன்-ஆசிரியர்) தலைமையேற்று உரையாற்றினார். முருகேசன் (மா. பெ. பொ. க திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். முகிலன் (மா.பெ.பொ.க தலைமைக் குழு உறுப்பினர்) தொடக்கவுரையாற்றினார். வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர். கருணானந்தம் சுயமரியாதை இயக்கத்தின் தேவையும் எதிர்காலமும் என்ற தலைப்பில் ஜாதி ஒழிப்பு மற்றும் சமத்துவம், பெண் விடுதலை, பகுத்தறிவுப் புரட்சி, பொருளாதார சமத்துவம், மனித மாண்பு ஆகியவற்றை தேவையாகவும், தொடர்ச்சியான விழிப்புணர்வு, அரசியல் மற்றும் சமுக நீதி, பகுத்தறிவு பரப்புரை, சமூக மாற்றத்திற்கான கருவி...

சீனாவுக்கு நிகராக வளர்ந்துள்ளது தமிழ்நாடு!

சீனாவுக்கு நிகராக வளர்ந்துள்ளது தமிழ்நாடு!

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் இப்போது சர்வதேச நாடுகளுடன் ஒப்பிட்டு பேசப்படுகிறது. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று பேசிய பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியம் “தமிழ்நாட்டின் வளர்ச்சி சீனாவின் வளர்ச்சியை போல் வேகமாக வளர்ந்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்குச் சான்றாக தனது சக தோழர் எழுதிய பொருளாதார ஆய்வை சுட்டிக்காட்டி உள்ளார். பெண்கள் சமத்துவம் மற்றும் சமூகநீதித் துறையில் திராவிட மாடல் ஆட்சியின் தனித்துவமான சாதனைகளை அறிந்த அய்.நா.வின் அமைப்புகள் தமிழ்நாடு அரசுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார். இந்த சாதனைகளின் தாக்கம் குறித்து மாநில திட்ட க் குழு விரிவான கள ஆய்வுகளை நிகழ்த்தி சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில் அய்.நா.வின் நிறுவனங்கள் கைகோர்த்து செயல்பட முன்வந்துள்ளன. மாநிலத் திட்டக் குழுவும் இதில் இணைந்து நிற்கிறது. அய்.நா.வின் யுனிசெப் அமைப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான...

முதல் மொழிப்போரின் பின்னணி!

முதல் மொழிப்போரின் பின்னணி!

இந்தித் திணிப்புக்கான எதிரான தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்தை கதைக்களமாக கொண்டு வெளிவந்துள்ள சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வணிக ரீதியாகவும் பெருவெற்றி பெற்றிருக்கிறது. 1965 மொழிப்போர் குறித்த மாணவர் எழுச்சியை அறிந்துகொள்ள இன்றைய இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் இத்திரைப்படத்தை கண்டு வருவதுடன், பொதுத்தளத்திலும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இந்நிலையில் முதல் மொழிப்போர் குறித்து தினகரன் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் இருந்து… தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக நடந்து வரும் தாய்மொழிக்கான உரிமைப் போராட்டம் – இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்தான். இந்த பரந்த சரித்திரத்தை மூன்றாகப் பிரிக்கலாம். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல்கட்டமாக 1937ல் இருந்து 1940 வரையிலும், இரண்டாவது கட்டப் போராட்டம் 1948 – 1952 வரையிலும் மூன்றாம் கட்டமாக 1965லும் நடைபெற்றது. முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம்: தமிழகத்தையும் சேர்த்து இன்றைய பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கியதுதான் அன்றைய சென்னை மாகாணம். இந்த சென்னை மாகாணத்தில் 1937ல் நடந்த பொதுத்...

காரைக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்!

காரைக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்!

‘பெரியார் எனும் அறிவியல்’ என்ற தலைப்பில் பயிலரங்கம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள குறளரங்கத்தில் 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. முதல் வகுப்பாக EH you tube channel, கழக பேராவூரணி நகர அமைப்பாளர் கலைச்செல்வன் ‘மனித பரிணாமமும் பகுத்தறிவும்’ என்ற தலைப்பில் ஆரம்ப காலம் முதல் இப்பொழுது இருக்கும் காலம் வரை மனிதன் பரிணாமம் அடைந்ததைப் பற்றி அறிவியல்பூர்வ விளக்கவுரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘அறிவியல் பார்வையில் பெரியாரியம்’ என்ற தலைப்பில் பார்பனர்கள் நம் மக்களை கடவுள் பெயரைச் சொல்லி அடிமைப்படுத்தியதையும், சுரண்டி பிழைப்பு நடத்தியதையும் அதிலிருந்து பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களிடம் எடுத்துக்கூறி மீட்ட வரலாற்றைப் பற்றியும் விளக்கவுரையாற்றினார். பெரியார் தொண்டர் சிற்பி இராசனின் ‘மூடநம்பிக்கையும் அறிவியலும்’ என்ற தலைப்பில் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கடவுள் என்ற பெயரால் சாமியார்கள் மக்களை ஏமாற்றும் வகையிலும், பணம் சேர்க்கும் வகையிலும் செய்யும்...

பொதுச்செயலாளருக்கு பெரியார் விருது கொடுத்தது சரியே! பெரியார் விருதை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி

பொதுச்செயலாளருக்கு பெரியார் விருது கொடுத்தது சரியே! பெரியார் விருதை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு 5,00,000 விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப் படுகிறது. கடந்த ஆண்டு (2024) திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் புது வெண்ணாம்புதூர் என்ற ஊரைச் சார்ந்த டி. ஸ்ரீதர் என்பவர் பெரியார் பெயரில் விருது வழங்கக்கூடாது என்று ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதேபோல, விடுதலை இராசேந்திரன், கலி பூங்குன்றன், சுப.வீர பாண்டியன் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கியது தகுதியானது அல்ல என்றும், மூவருக்கும் வழங்கப்பட்ட விருதுகளைத் திரும்பப் பெற்று புதிதாகத் தகுதி பெற்ற நபர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மீண்டும் முறையீடு செய்தார். பெரியார் விருதே கூடாது என்று ரிட் மனு தாக்கல் செய்த இந்த நபர்,...

‘பராசக்தி’ படக்குழுவைப் பாராட்டுவோம்!

‘பராசக்தி’ படக்குழுவைப் பாராட்டுவோம்!

“இந்தித் திணிப்பு எதிர்ப்பை மக்களிடம் கொண்டு செல்வதில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது பராசக்தி. கேன்பரே (ஆஸ்திரேலியா) நகரில் படத்தைப் பார்த்தபோது பொதுநிலையில் உள்ளவர்கள் அனைவரும் படத்தைப் பாராட்டினார்கள். இது படத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி. படத்தின் இறுதியில் இருமொழிக் கொள்கையை அண்ணா அறிவிக்கும் காட்சி உணர்ச்சிமயமானது, படத்தின் திசை வழியை தெளிவாக உணர்த்திவிட்டது. தெலுங்கை தாய்மொழியாக் கொண்ட கதாநாயகி இந்திக்கு எதிராக தாய்மொழியின் தேவையைப் பேசுவதோடு போராட்டக்களத்திலும் நிற்கிறார். சௌராஷ்ட்ரா மொழி பேசும் இளைஞர் இந்திக்காக உயிர் துறக்கிறார். திராவிடர் இயக்கம் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் மேற்கு வங்கத்திலும் தீயாகப் பற்றியதை படம் உணர்வோடு பேசுகிறது. மும்மொழித் திட்டம், நவோதயா பள்ளி என்று தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நினைக்கும் சங்கிகள் இனி வாய்திறக்க முடியாத சம்மட்டி அடியை கொடுத்திருக்கிறது பராசக்தி. காலத்திற்குத் தேவையான ஒரு அரசியல் கருத்தை மிகச் சிறந்த திரைமொழியில் உணர்வுகளோடு மக்கள் முன் சமர்ப்பித்த...

நிமிர்வோம் அரங்கில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

நிமிர்வோம் அரங்கில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சனவரியில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் முதன்முதலாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் இடம்பெற்றுள்ளது. அரங்கு எண் 10 நிமிர்வோம் பதிப்பகத்திற்கு ஒதுக்கப்பட்டது. திராவிட இயக்கத்தின் பணிகள், லட்சியங்கள், செயல்பாடுகளை விவரிக்கும் வகையிலும், திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனங்கள், அவதூறுகளுக்கு பதிலடி தரும் வகையிலும் வெளியீடுகள் நிமிர்வோம் பதிப்பக அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நிமிர்வோம் அரங்கை ஆர்வத்துடன் பார்வையிட்டு, முன்னாள் வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்துடன் செல்பி எடுத்துக்கொண்டு, நூல்களையும் வாங்கிச் செல்கின்றனர். அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் நிமிர்வோம் அரங்கிற்கு தவறாமல் வருகை தருகின்றனர். புத்தகக் காட்சி தொடங்கிய முதல் 5 நாட்களிலேயே நிமிர்வோம் அரங்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நூல்கள் விற்பனையாகியுள்ளன. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் அரங்க...

குடியுரிமையை பறிக்கும் கூட்டுச்சதி எஸ்.அய்.ஆர்.!

குடியுரிமையை பறிக்கும் கூட்டுச்சதி எஸ்.அய்.ஆர்.!

விசிக சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு எஸ்.அய்.ஆர் (S.I.R) குடியுரிமை பறிக்கும் கூட்டுச்சதி விளக்கத் தெருமுனைக் கூட்டம் டிச-7, 2025 அன்று மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் ரூதர்புரம்.அ சுரேசு ( 125 வட்டச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) எஸ்.அய்.ஆர் குறித்தும் சனாதன எதிர்ப்பு களத்தில் தமிழ்நாடு எப்படி பயணிக்கிறது என்பது பற்றியும் கருத்துரையாற்றினார். யூதர் சு.கார்த்திக் (மண்டலச் செயலாளர்), வழக்கறிஞர் பி.சாரநாத் (மாவட்டச் செயலாளர்) மற்றும் பல்வேறு விசிக நிர்வாகிகள் உரையாற்றினார்கள். கழகத் தோழர்கள் குமார், பிரசாந்த் (முழக்கம் செய்தியாளர்) மற்றும் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 08012026

தோழர் லலிதா நினைவுநாளையொட்டி ஏழை – எளியோருக்கு உணவு!

தோழர் லலிதா நினைவுநாளையொட்டி ஏழை – எளியோருக்கு உணவு!

சென்னை கழகத் தோழர் புருஷோத்தமன் இணையர் லலிதாவின் நினைவு நாளையொட்டி, டிச-4, 2025, அவருடைய நந்தனம் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக்குழு உறுப்பினர்), இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, இராவணன் (மாவட்ட துணைச்செயலாளர் ), ப.அருண் ( மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), மயிலாப்பூர் பகுதித் தோழர்கள் மனோகர், சிவா, சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), சே. ராஜேஷ் (பகுதிச் செயலாளர்), த.நா. சூர்யா (பகுதி அமைப்பாளர்), தோழர்கள் சைதை சிவா, தினகரன், இரண்யா, குறளரசி உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். புருஷோத்தமனின் மகனும் திரைப்பட இயக்குநருமான அருண் பிரபு, பேத்தி அனுகீர்த்தி அனைவரையும் வரவேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்...

குடிமங்கலத்தில் பெரியார் நினைவுநாளில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

குடிமங்கலத்தில் பெரியார் நினைவுநாளில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று “மனிதம் நமது அடையாளம் ; ஜாதி என்பதுஅவமானம்” எனும் தலைப்பில் மடத்துக்குளம் ஒன்றிய மாவட்டக் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கணக்கன் (மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர்) தலைமை தாங்கினார். சிவானந்தம் (மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர்), கடத்தூர் அய்யப்பன் (மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 11:00 மணிக்கு குடிமங்கலம் நான்கு சாலை சந்திப்பு, மதியம் 12.00 மணி அளவில் கொங்கல் நகரம் பேருந்து நிறுத்தம் அருகில், மாலை 03.00 மணியளவில் பெதப்பம் பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் என் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. துரைசாமி (கழகப் பொருளாளர்), பரிமள ராசன் (சமூக வலைதள பொறுப்பாளர்), முகில் ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), தமிழ் அமுதன் ( மார்க்சிய சிந்தனையாளர்), வழக்கறிஞர்.பெரியார்தாசன் (ஆதித்தமிழர் பேரவை), ஈழவேந்தன்...

பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!

பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: பெரியார் நினைவு நாளையொட்டி டிச.24 அன்று காந்திபுரம் பெரியார் சிலை முன்பு காலை 9.30மணிக்கு கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. ஏற்காடு: டிசம்பர்-24 அன்று கழகப் பொறுப்பாளர் ஏற்காடு பெருமாள் தலைமையில் தந்தை பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. சேலம் கிழக்கு: 24.12.2025 காலை 10.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), முத்துமாணிக்கம் (கிழக்கு மாவட்ட அமைப்பாளர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்), ரமேஷ்(இளம்பிள்ளை நகரத் தலைவர்), மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), தேவராஜ் (சேலம் மாநகர அமைப்பாளர்), வெற்றிமுருகன்(மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), பிரபு(சேலம் மாநகர பொருளாளர்) மற்றும் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம்...

பெரியார் ஒருவர்தான் பெரியார்!

பெரியார் ஒருவர்தான் பெரியார்!

சனவரி 3-ஆம் தேதி மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரியாரைப் போற்றுவோம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய சீமான் பெரியாரைத் தரக்குறைவாக விமர்சித்தும், தமிழ்நாட்டுக்குப் புதிதாக பல பெரியார்களை அறிமுகம் செய்தும் வைத்திருக்கிறார். ஜாதி ஒழிப்புக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பெரியாரை ‘பெரியார்’ என ஏற்க முடியாது எனக்கூறும் இவர், புதிதாக பட்டியலிட்டிருக்கும் பலர் எத்தனை முரண்பாடுகளாக இருக்கின்றனர் என்பதை தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். “ஜாதிய பாகுபாடுகளை எதிர்த்ததால், கொலை செய்யப்பட்ட இம்மானுவல் சேகரனாரும் பெரியார்! அவர் கொலைக்கு காரணமான பசும்பொன்னும் பெரியார்! “தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து செத்தே போன சங்கரலிங்கனாரும் பெரியார்! பெயர் வைக்க மறுத்த காமராஜரும் பெரியார்!! தமிழ்தான் வழிபாட்டு மொழி என்ற பெருஞ்சித்திரனாரும் பெரியார்! சமஸ்கிருத மந்திரங்கள் தேவை என்ற மபொசியும்...

பெரியார் முழக்கத்திற்கு வளர்ச்சி நிதி!

பெரியார் முழக்கத்திற்கு வளர்ச்சி நிதி!

கழகத் தோழர் இரண்யா ரூ.2000 பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக முழக்க வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். கழகத் தோழர்கள் ரம்யா – பிரகாசு இணையரின் மகள் சிறகியின் முதலாவது பிறந்தநாள் விழா கழகத் தலைமை அலுவலகத்தில் 02.01.2026 அன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின்போது, புரட்சிப் பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.3,000-அய், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதியிடம் வழங்கினர். தோழர் இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) அவர்கள் ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் 100 முழக்கத்துக்கான சந்தா தொகையை ரூ.30,00 வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். கழகத் தோழர் கனி-இலக்கியா இணையர்கள்  50 பெரியார் முழக்கம் சந்தா மற்றும் தொகை ரூ.15000அய் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் ஒப்படைத்தார்.  நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (- ஆசிரியர்). பெரியார் முழக்கம் இதழ் 08012026

ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக ஓயாது பரப்புரை!

ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக ஓயாது பரப்புரை!

ஆகஸ்ட் 01: விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் மதக் கலவரத்தை தூண்டும் சங் பரிவார் அமைப்புகளைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் காவல்துறையிடம் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 03: சேலம் மாவட்டம் மேச்சேரியில் இளைஞர் அணி சார்பில் பெரியார் என்னும் பெரு நெருப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மில்டன், யூ2புரூடஸ் மைனர், இந்திரகுமார் தேரடி கருத்துரை வழங்கினர். கழகத் தலைவர் நிறைவுரையாற்றினார். ஆகஸ்ட் 06: ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும், கவின் படுகொலைக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தரக்கோரியும் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 08: குடியாத்தத்தில் குடிஅரசு மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. ஜாதி மறுப்பு மற்றும் விதவை மறுமணம் செய்துகொண்ட இணையர்கள் இந்நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர். கழகத்தலைவர் சிறப்புரையாற்றினார். ஆகஸ்ட் 09: சமூக நீதி எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் படத்திறப்பு நிகழ்ச்சி தேவநேயப் பாவாணார் அரங்கத்தில் நடைபெற்றது....

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

ஈரோட்டில் கழகத் தோழர்கள் உடல் உறுப்புதானம்

ஈரோட்டில் கழகத் தோழர்கள் உடல் உறுப்புதானம்

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் 24.12.2025 அன்று ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இறப்புக்குப் பின் தங்களது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் தங்களுடைய உடல்களை முறைப்படி உடல் தானம் செய்தனர். இரத்தினசாமி, சண்முகப்பிரியன், சென்னிமலை செல்வராசு, திருமுருகன், மரவப்பாளையம் குமார், கோபிநாத், நல்லதம்பி, சி.எம். நகர் பிரபு, சுரேஷ், ராசண்ணா, மீசை முருகேஷ், கண.குறிஞ்சி இசைக்கதிர் ஆகிய 13 தோழர்கள் சட்ட முறைப்படி உடல் தானம் கொடுக்க முன்வந்துள்ளனர். பெரியார் முழக்கம் இதழ் 01012026

களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

களப்போராளிகளை நினைவுகூர்ந்து பொதுக்கூட்டம்!

பெரியாரின் 52வது நினைவுநாளில் (24/12/25), கழகப் பணியில் உயிர்நீத்த தோழர்கள் கண்ணன் – குமாரின் 20-ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம், சென்னை ராயப்பேட்டை வெங்கடாசலம் தெருவில், மாலை 6 மணியளவில் சு. பிரகாஷ் தலைமையில், தோழர்கள் ப. கணேசன், ரா. குட்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இரா. உமாபதி – வீரமணி – திராவிட மகிழன் குழுவினரின் பாடல்களும், சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சியும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. 60 பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தபசி குமரன் (கழக தலைமை நிலையச் செயலாளர்), கு. அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), ரூதர் கார்த்திக் (விசிக தென்சென்னை மண்டலச் செயலாளர்), கழகத் தோழர் அறிவுமதி ஆகியோர் கருத்துரையாற்றினர். கருத்துரையாற்றிய ரூதர் கார்த்திக் அவர்களுக்கு கழகத் தோழரும், கண்ணன் குமார் நண்பரும், அவர்களது விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்த வீரமுத்து, கழக வெளியீடுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும்...

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஆள்பிடித்தாரா பெரியார்?  ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (9) – கொளத்தூர் மணி

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஆள்பிடித்தாரா பெரியார்? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (9) – கொளத்தூர் மணி

தோழர் ஜீவாவால் எழுதப்பட்ட ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூல் 1947 டிசம்பர் முதல் 1948 பிப்ரவரி முடிய மூன்று மாதங்கள் பொதுவுடைமை இதழான ‘ஜனநாயகத்’தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதை நாம் முன்னரே பார்த்தோம். அதில் 1946-இல் நடந்த சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலையொட்டி எழுதப்பட்ட சில செய்திகளை அந்த நூலில் இருந்து எடுத்து, கீழே கொடுத்திருக்கிறோம். “ஜாதி ஒழிப்பு, மதவொழிப்பு விஷயங்களை முக்கியப்படுத்தி திராவிடர் கழகத்தில் நல்ல அபிப்பிராயத்தோடும், பற்றுதலோடும் இருந்த இளைஞர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களைக் கண்டு புத்துணர்ச்சி அடைந்து வந்ததைத் தடுக்க நயமான முறைகளில் சூழ்ச்சி செய்தது. ‘ப.ஜீவானந்தம் நம் ஆள்தான்’ என்றும் ‘கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமக்கும் வித்தியாசமில்லை” என்றும் பொதுவுடைமை ஆர்வமுள்ள வாலிபர்களைத் திராவிடர் கழகம் வலை வீசிப்பிடிக்க முயன்றது” என்கிறார் ஜீவா. ஜீவா எழுதியதை நம்பி ஏற்றுக்கொண்டால், அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது; மக்களின் ஆதரவைப் பெற்று இருந்தது;...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

தமிழ்நாடு அறிவியல் மன்ற நிர்வாகிகளான ஆசிரியர்கள் சிவகாமி, ஆசிரியர் சிவகுமார் (ஈரோடு) ஆகியோர் முன்னெடுப்பில் பெரியார் முழக்கம் வளர்ச்சிக் குழு உருவாக்கப்பட்டு, பல்வேறு தோழர்கள் மாதம்தோறும் தலா ரூ.500 வழங்கி வருகிறார்கள். அவர்களின் பெயர் பட்டியல்: தலைமைக் குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகர், இளையராஜா, துரை. தாமோதரன், தோழர்கள் நாத்திக ஜோதி (ஈரோடு), முத்து (திருப்பூர்), சண்முகசுந்தரம் (மயிலாடுதுறை), பிரபாகரன் (மேட்டூர்), பிரபாகரன் (பவானிசாகர்), ஜோதி (மடத்துக்குளம்), சாக்கோட்டை இளங்கோவன், அஜீத் (மேட்டூர்), அறிவழகன் (கடலூர்), வீரமணி, முத்து (சத்தியமங்கலம்), சுந்தரம் (பவானி), தினேஷ், சந்தோஷ், அறிவழகன், மலைக் கொழுந்தன், வெங்கட், வீரன், கோபிநாத், வடிவேல் ராமசாமி, செளந்தர்யன், சரவணகுமார், மதன், மகேஷ், பழனிச்சாமி கோபி, அழகர் பிரபாகரன், ஆனந்த், மாதவன், இளங்கோ, ரவி, கோடி சுந்தரம். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். டிசம்பர் மாத நன்கொடையாக ரூ.13,500 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). * கழகப் பொருளாளர்...

எழுத்தாளர் பாமரன் இணையர் மறைவு!

எழுத்தாளர் பாமரன் இணையர் மறைவு!

எழுத்தாளர் பாமரன் அவர்களின் இணையர் தோழர் யாழ்மொழி அவர்கள் உடல் நலக்குறைவால் 26.12.2025 அன்று இயற்கை எய்தினார். 29.12.2025 கோவை பூ மார்கெட், சிரியான் சர்ச் ரோடுல் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாரமரன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். பன்னீர் செல்வம் (கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல் (மாநகரத் தலைவர்), வெங்கட்(மாநகரச் செயலாளர்), அன்னூர் விஷ்னு, மோகன கிருஷ்ணன், நவீன் மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர். சமூக வலைதளப் பக்கத்தில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதியிருந்த பதிவில், “அன்புத் தோழர் பாமரனின் இணையர் யாழ்மொழியின் இறப்புச் செய்தி, உண்மையிலே என்னை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு சில முறைதான் அவரை நான் சந்தித்திருக்கிறேன். நீண்ட காலம் பழகியது போல் உணர்வுகளையும் உரிமைகளையும் எடுத்துக்கொண்டு கலகல என்று அவர் கொட்டிய அன்பு மொழிகள் அப்படியே என் கண் முன் தெரிகிறது. அன்புத்தோழர் பாமரனை வாழ்க்கையில் அவர் சுமந்தார்....

பெரியார் பெயரை மறைப்பதா? கழகம் எதிர்வினை!

பெரியார் பெயரை மறைப்பதா? கழகம் எதிர்வினை!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளமான ஏற்காட்டிற்கு செல்லும் வழியில் இருபது கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் ஒவ்வொரு வளைவிற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது, அதன்படி எட்டாவது கொண்டை ஊசி வளைவிற்கு தந்தை பெரியார் அவர்களின் பெயரை நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக வைக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 24 தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவு நாளை இருட்டடிப்பு செய்ய வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு தந்தை பெரியார் வளைவு என்ற பெயரின் மீது கருப்பு மையை பூசி விட்டு அதன் மீது தகடூர் அதியமான் வளைவு என்ற பதாகையை ஒட்டி பெரியாரைப் பற்றி வசைச்சொற்களால் கூச்சலிட்டுச் சென்றனர். இந்த அராஜகச் செயலைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையிடமும், நெடுஞ்சாலைத் துறையிடமும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் முறையாக மனு கொடுக்கப்பட்டது, ஆனால் காவல் துறையும், நெடுஞ்சாலைத் துறையும் சேர்ந்து...

ஜாதி ஒழிப்பு இயக்கம் தொடரும்!

ஜாதி ஒழிப்பு இயக்கம் தொடரும்!

சட்டமன்றத் தேர்தல் களம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுக்கும் ஒன்றிய அரசு, மசோதாக்களை நிறுத்திவைக்கும் ஆளுநர், சிறப்புத் தீவிர திருத்தத்தின் பெயரால் சாமானியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையம், அப்பட்டமான அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் அமலாக்கத்துறை, சோதனை நடத்தி நடிகர்களை அரசியலுக்கு இழுத்து வரும் வருமான வரித்துறை என ஒன்றிய பா.ஜ.க. அரசு தரும் நெருக்கடிகளும், இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை தி.மு.க அரசு தந்திருப்பதும்தான் இந்தத் தேர்தலில் இதுதான் பேசுபொருளாக இருக்கப்போகிறது. அரசியல் களம் அதை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தை முன்னெடுத்து, பாஜகவின் சூழ்ச்சிகளை, தமிழர் விரோத கொள்கைகளை முறியடிக்க வேண்டியது அவசியமானது. எனினும் பெரியார் இயக்கத்திற்கு அடிப்படையான ஜாதி ஒழிப்பு கொள்கையை சமரசமில்லாமல் முன்னெடுக்க வேண்டியதே, மற்ற எல்லாவற்றையும் விட தலையாய கடமை. அந்த கடமையின் பொருட்டு, சேலத்தில் 2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற,...

ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், அரங்கு எண் 10-இல் இடம்பெறுகிறது. கழகத்தின் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம், அரங்கு எண் 10-இல் இடம்பெறுகிறது. கழகத்தின் நூல்கள், வெளியீடுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!   தமிழ்நாடு  அரசை  வலியுறுத்தி  கோவையில்  போராட்டம்

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோவையில் போராட்டம்

2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ‘இது தமிழ்நாடு – இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை’ மாநாட்டில் ‘வைக்கம் போர் முடியவில்லை’ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்துப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டது. 2025-இல் கழகத் தலைமைக் குழுவில் செப்-17 முதல் செப்-24 வரை “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் நிறைவாக கோவையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களைக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கழகத்தின் சார்பில், கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கை கோரி மாநிலம் தழுவிய போராட்டம், டிசம்பர் 29-அன்று காலை 10.30 மணிக்கு...

ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் டிசம்பர் 29 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள போராட்டத்திற்கு தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் பொதுமக்கள் தங்களால் ஆன ஆதரவை கொடுத்து உதவுமாறு பொதுவெளியில் சமூக ஊடகங்களில் தோழர்கள் பலரும் பதிவிட்டனர் அந்த பதிவை பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, தங்களால் முடிந்த சிறு தொகையை அவரவர் சக்திக்கு ஏற்றவாறு நிர்மல் குமாரின் கூகுள் பே எண்ணுக்கு அனுப்பி, போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த, தற்போது கத்தாரில் பணியாற்றி வரும் தோழர் ஒருவர் இந்த போராட்டம் மிக அவசியமானது எனக்கூறி, ஆர்வத்துடன் நிதி உதவி அளித்திருப்பதோடு, கழகத்தின் இந்த போராட்டத்திற்கான தீர்மானம் 2023-இல் சேலம் மாநாட்டில் இயற்றப்பட்ட சமயத்தில் இருந்து கவனித்து வருவதாக கூறியுள்ளார்....

அம்பேத்கர் நினைவு நாளில் மரியாதை!

அம்பேத்கர் நினைவு நாளில் மரியாதை!

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, டிச-6,2025 காலை 8 மணியளவில், ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கொள்கை முழக்கமிட்டோம். ம.கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ம. குகாநந்தன், அருண் கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்), இமானுவேல் துரை, ஷேக் முகமது, மருத்துவர் கணேஷ், கார்த்தி ராஜேந்திரன், தீபக், மஞ்சுநாதன், மடிப்பாக்கம் அருண், புகழேந்தி, ஸ்ரீலேகா, நந்தகுமார், ராஜஸ்ரீ, ரஞ்சித், ஜெயவேல், யாழ் நிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 25122025

ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து மத நல்லிணக்க பேரணி!

ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து மத நல்லிணக்க பேரணி!

மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் நடைபெற்ற அமைதிக்கான நல்லிணக்க பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கழகத் தோழர்கள் பங்கேற்றனர். தளபதி, காமாட்சி பாண்டி, சத்தியமூர்த்தி, முருகேசன், வேங்கைமாறன், தோழர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர். அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மதச்சார்பின்மைக்கு எதிராக, மாநில உரிமைக்கு எதிராக சனாதன தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும், தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் மதவாத கும்பல்களை தடை செய்ய வேண்டும் என்றும், சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடும் மதவெறி அமைப்புகளை எச்சரித்தும் பேரணியில் முழக்கங்கள் பேரணியில் முழக்கங்கள் எழுப்பட்டன. மதவாதத்தை தூண்டி திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என அதிகாரத் திமிருடன் பேசி கலவரத்தை தூண்டும் இந்துத்துவ பயங்கரவாதிகளை கைது செய்ய இந்த பேரணி வலியுறுத்தியது. பெரியார் முழக்கம் இதழ் 25122025 =

வடசென்னையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

வடசென்னையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!

“மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” முழுநாள் பிரச்சாரக் கூட்டங்கள், டிசம்பர்-15,2025 முழுநாள் ஜாதி எதிர்ப்பு பரப்புரை வடசென்னை திருவொற்றியூர் அஜக்ஸ், புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ, பழைய வண்ணாரப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்றது. தோழர்கள் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. (சென்னை மாவட்டச் செயலாளர்) இரா. உமாபதி ஒருங்கிணைத்தார். தோழர்கள் உமாபதி – வீரமணிதாசன் – லோகநாதன் குழுவினரின் சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சி சிறுவர் சிறுமியரையும் கவர்ந்திழுத்தது. “சமஸ்கிருத ஆதிக்கம்” குறித்து துரை தலைமையுரையாற்றினார். “திராவிடம்தான் தமிழ் தேசியம்” என்பதை வலியுறுத்தி தொழிலாளர் சீரமைப்பு இயக்கத் தோழர் ம.சேகர் உரையாற்றினார். “பாஜகவின் போலி ஆன்மீக வேடத்தை” விசிக மண்டலத் துணைச்செயலாளர் நிலமேலவளவன் தோலுரித்துக் காட்டினார். “குடும்பமும் சடங்குகளும் பழக்க வழக்கங்களும் ஜாதியை பாதுகாக்கின்றன” என்பதை விளக்கி கழகத்தோழர்- வழக்கறிஞர் இரண்யா கருத்துரையாற்றினார். “அம்பேத்கரை உள்வாங்கும் சங் அமைப்புகளால்,...

`தேசீய கீதப் புரளி’

`தேசீய கீதப் புரளி’

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாட இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அதையொட்டி ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து பல்வேறு விவாதங்களும் எழுந்தன. இந்த ‘வந்தே மாதரம்’ தொடர்பாக 1937-இல் குடிஅரசு வெளியிட்ட கருத்துக்கள் இவை. ஆகஸ்டு 31ந் தேதி கூடிய சென்னை அசம்பிளி – கெளன்சில் கூட்டு சம்மேளனத்தில் “வந்தேமாதர” தேசீய கீதம் பாடியபோது இரண்டு முஸ்லீம் மெம்பர்கள் எழுந்து நிற்கவில்லையென்று தெரிய வருகிறது. காங்கரஸ்காரரான ஹிந்துக்கள் வந்தேமாதர கீதத்தை தேசீய கீதமென்றோ தேசீய ஞான சங்கீர்த்தனமென்றோ கூறிக்கொள்ளலாம். ஆனால் இதர கட்சி மெம்பர்களும் இதர சமூக மெம்பர்களும் அதை காங்கரஸ் கீதம் என்றே மதிப்பார்கள். முக்கியமாக முஸ்லீம்கள் வந்தேமாதர கீதத்தை அறவே வெறுக்கிறார்கள். எனவே “வந்தே மாதர” கீதம் பாடியபோது உட்கார்ந்திருந்த அந்த இரண்டு முஸ்லீம்களையும் குறை கூறுவதற்கில்லை. வந்தேமாதர கீதம் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “ஆனந்த மடம்” என்ற நாவலில் முதன்...

இந்தியை ஆதரிக்கவில்லையா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (8) – கொளத்தூர் மணி

இந்தியை ஆதரிக்கவில்லையா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (8) – கொளத்தூர் மணி

தோழர் பொன்னீலனின் அதே நூலில் “1953 அக்டோபரில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளத்துக்கே உரியன” என்ற கருத்தை கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் வெளியிட்டார். இதை எதிர்த்து அக்டோபர் 14 தாமரை குளத்தில் ஆர்.சோமசுந்தரம் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜீவா இவ்வாறு கூறினார்: “தேவிகுளம் பீர்மேடு சம்பந்தமாக ஸ்ரீ ஏ.கே. கோபாலன் கூறியது அவரது சொந்த கருத்து. கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக கருத்து வெளியிடாமல் இருப்பது வரையிலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் அவர்கள் கூறுவது கட்சியின் முடிவாகாது. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை ‘எல்லைக் கமிஷன் முடிவுக்கு விட வேண்டியது அவசியம்’ இதுதான் கட்சியின் கருத்து” என்று கறாராக அறிவித்து விடுகிறார். வெண்டைக்காய் பதில் ஆனால் ‘சரியில்லாத ஈரோட்டு பாதை’ காட்டிய பெரியாரின் ‘விடுதலை’ ஏடு அதன் 22.11.1955 இதழில் “தேவிகுளம், பீர்மேடு தமிழ் வட்டாரங்களே! சென்னை சட்டசபையில் அமைச்சர் தந்த புள்ளிவிவரம்” என்ற தலைப்பில் செய்தி...

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

“மதவெறி பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?” என்ற தலையங்கத்தில், ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து இளைய தலைமுறை அறிந்திடாத பல உள்ளார்ந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன், இதனைத் தூக்கிப் பிடிக்கும் பாஜக-வின் உண்மை நோக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியுள்ளது. அதேபோல், தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்டங்கள் தொடர்பான தோழர் அருண் கோமதி எழுதிய கட்டுரையில், அந்தச் சட்டங்கள் எவ்வாறு பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்பதை மிக அழுத்தமாகவும் திருத்தமாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய சட்டத் தொகுப்பு என்பது, இந்திய விடுதலைக்கு முன்பே (தொழிற்சங்க சட்டம் 1926-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திலேயே) தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தொழிற்சங்க உரிமைகளை, குறிப்பாக வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை அடியோடு பறித்துள்ளது. தொழிலாளர்களின் இறுதி ஆயுதமாகவும், முதலாளிகளைப் பணியவைக்கும் பலமிக்க ஆயுதமாகவும் விளங்கும் வேலைநிறுத்தத்தை ஒன்றுமில்லாமல் செய்து, தொழிலாளர் வர்க்கத்தை நவீன கொத்தடிமைகளாக மாற்றியுள்ளது. -இளங்கோவன் ஏ காரைக்குடி பெரியார் முழக்கம் இதழ் 25122025

குழப்பங்கள், குளறுபடிகளுடன் நடத்தப்பட்ட எஸ்.அய்.ஆர்.!

குழப்பங்கள், குளறுபடிகளுடன் நடத்தப்பட்ட எஸ்.அய்.ஆர்.!

தமிழ்நாட்டில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புப் திருத்தத்தில் நடந்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை தி இந்து பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. 75018 வாக்குச் சாவடிகளில் குறித்த தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 14 வாக்குச் சாவடிகளில் இளவயதில் இறந்தவர்கள் என்கிற பெயரில் நீக்கப்பட்டுள்ள வாக்குகளின் விகிதம் அசாதாரண அளவு அதிகமாக இருக்கிறது. 35 வாக்குச்சாவடிகளில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. 8,361 சாவடிகளில் நீக்கப்பட்ட பெயர்களின் விகிதம் அசாதாரண அளவு அதிகமாக இருக்கிறது. 3,907 இடங்களில் இறந்தவர்களாகக் கருதப்பட்டவர்களின் விகிதம் மிகையாக இருக்கிறது. 6,139 பாகங்களில் வீட்டில் இல்லை (absent) என்று நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 172 பாகங்களில் ‘ நிரந்தரமாக குடிமாறிப் போன பெண்கள் ’ என்கிற வகைமை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. 50 பேருக்கும் மேல் இறந்து விட்டதாகக் கூறப்படும் 14 வாக்குச்சாவடிகளில், 50% பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள். பொதுவாக மக்கள் தொகையியல் (Demographic) கணக்குப்படி ,...

பாஜக என்றால் பம்முகிறார் விஜய்!

பாஜக என்றால் பம்முகிறார் விஜய்!

“ஈரோடு கூட்டத்திற்கு நடிகர் விஜய்க்கு பேச்சு எழுதிக் கொடுத்தவர்களுக்கு விஜய் மீது என்ன கோபமோ தெரியவில்லை. அவருக்கே ஆப்பு வைத்திருக்கிறார்கள். அதனால்தான் “மக்களுக்கு ஒன்று என்றால் ஓடிவந்து மக்களோடு நிற்பேன், மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை கேட்டு அறிந்த பிறகுதான் இங்கே பேச வந்திருக்கிறேன்” என்ற டயலாக்கை விஜயை வைத்தே பேச வைத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை பனையூர் பங்களாவுக்கு அழைத்து சந்திக்கும் ஒருவரை இதைவிட கிண்டல் அடிக்க முடியாது. “விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்கள் உரிமைத்தொகை” என்று தமிழ்நாடு அரசு திட்டங்களுக்கு பெயர் வைத்துள்ளது. இதுகூட விஜய்க்கு தெரியாது என்பதை மக்களிடம் அம்பலப்படுத்துவதற்காக இலவச திட்டம் என்று திமுக கூறுவதாக பொய்யாக பேச வைத்து மக்கள் மன்றத்தில் காமெடியன் ஆக்கி இருக்கிறார்கள். விஜய் எதிர்ப்பு அரசியலை திமுக கண்டு கொள்வதே இல்லை. அவரது பெயரைக் கூட தமிழ்நாடு முதல்வர் உச்சரித்ததே இல்லை ஆனால் ஏதோ தங்கள் கட்சியைப் பார்த்து மிரண்டு...

விஷச் சிந்தனைகளுக்கு இடமளிக்கக்கூடாது!

விஷச் சிந்தனைகளுக்கு இடமளிக்கக்கூடாது!

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் டிசம்பர் 21-ஆம் தேதி பொருநை அருங்காட்சியத்தை தமிழ்நாடு அரசு திறந்துவைத்துள்ளது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடத்தில் இரும்பின் பயன்பாடு இருந்ததை, இரும்பை உருக்கி ஆயுதங்கள் தயாரிக்கும் அறிவைப் பெற்றிருந்தனர் என உலகை வியக்கவைத்தது பொருநை அகழாய்வு முடிவுகள். அதேபோல கீழடியிலும் தமிழர்களின் நாகரிகம் உயர்ந்தது என்பதற்கான அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அங்கும் ஒரு அருங்காட்சியகத்தை திமுக அரசு அமைத்திருக்கிறது. டிஜிட்டல் வசதிகளுடன் இரு அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தோடு கீழடி, பொருநை நாகரிகங்கள் ஒத்துப்போகின்றன என்பது மட்டுமல்ல, இரண்டு இடங்களிலும் கடவுள், மத, ஜாதி அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் வெளிநாட்டு வணிகத் தொடர்புகளுடன், ஒரு உயர்ந்த நாகரிகமாக தமிழர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளாக அவை திகழ்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறைக்கு கற்பித்து, இடையே புகுத்தப்பட்ட ஜாதி – மதப் பாகுபாடுகளை விட்டொழித்து நாம், ஜாதியற்ற- மதமற்ற தமிழர்களாக ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துவதுதான் கல்வித்துறையின் சேவையாக...

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!

2006-இல் காசி விஸ்வநாதர் கோயில் நிலத்துக்கு சொந்தமான இடத்தில் மசூதி கட்டுவதாக வெடித்த சர்ச்சையில், இந்து முன்னணியைச் சேர்ந்த குமார பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டனர். உண்மையிலேயே அந்த இடம் கோயில் நிலம்தானா இல்லையா என்ற வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி கலவரங்களை உருவாக்கி, அதில் இந்துத்துவ குளிர் காய்ந்துகொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். இப்போது திருப்பரங்குன்றம் வரை இது தொடர்கிறது. ஆனால் இதில் இழப்புகளைச் சந்திப்பது ஹெச்.ராஜாவை போன்ற பார்ப்பனர்கள் இல்லை, அப்பாவி சாமானிய இந்துக்களே. குமார பாண்டியன் குடும்பத்தினரும் அப்படிப்பட்ட சாமானிய இந்துக்களே. கொலை செய்யப்பட்டவர்களில் குமார பாண்டியன் சகோதரரின் மகளான ருத்ரா இந்த பார்ப்பன சூழ்ச்சியை புரிந்துகொண்டு, பெரியாரியத்தை நோக்கி தனது திசையை திருப்பிக்கொண்டு, இப்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவையுடன் பயணித்து வருகிறார். அவர், “ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்” என்ற...

டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்!  ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!

டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்! ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், டிசம்பர் 29-ஆம் தேதி, ஜாதி தீண்டாமைக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகள் கோரி போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டுக் கிராமங்கள் இன்னமும் ஜாதியக் கட்டமைப்புக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையிலேயே ஒரு வெட்கப்படத்தக்க நிலையாகும். இன்னமும் கிராமங்களில் ஜாதி தீண்டாமைகள் எப்படி நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன, நிலைநாட்டப்பட்டு வருகின்றன, அதன் வடிவங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதையெல்லாம் கோவை, திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமம் கிராமமாகச் சென்று ஆராய்ந்து, அதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஆணையத்தின் முன் திராவிடர் விடுதலைக் கழகம் கையளித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ‘ஜாதி ஒரு அவமானம், மனிதம் நமக்கு அடையாளம்’ என்ற ஒரு தலைப்பில் தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, மக்களிடம் ஜாதியத் தீண்டாமைக் கொடுமைகளுக்கு...

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

சிற்றுண்டி கடைத் திறப்பு விழா!

கழக ஆதரவாளரான தோழர் ரஞ்சித் அவர்களின் சிற்றுண்டி கடை (SNACKIFY), இராயப்பேட்டை அஜந்தா பேருந்து நிலையம் அருகில் டிசம்பர்-14, 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் ப. அருண் (இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் கடை திறப்பு விழா நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) சிற்றுண்டி கடையைத் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஆர்.என்.துரை (திமுக தென்சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர்) கலந்து கொண்டார். திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் மற்றும் ரஞ்சித் குடும்பத்தினர், நண்பர்கள் உடனிருந்தனர். புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 மாவட்டச் செயலாளரிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் இதழ் 18122025

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

தோழர் அஞ்சலையின் முதலாமாண்டு நினைவேந்தல்!

வடசென்னை கழகத் தோழர் அருள்தாஸின் தாயார் அஞ்சலை (என்கிற) அன்னை மரி முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு டிச-11, 2025 மாலை 6 மணிக்கு கே.பி.பார்க் இல்லத்தில் நடைபெற்றது. அருள்தாஸ் புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு 10 சந்தாக்களை வழங்கினார். நிகழ்வில், இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர் ), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மற்றும் ராஜன், தினகரன், விஜயன், அசோக் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 18122025