கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி
தமிழ்நாடு அறிவியல் மன்ற நிர்வாகிகளான ஆசிரியர்கள் சிவகாமி, ஆசிரியர் ஈரோடு சிவகுமார் ஆகியோர் முன்னெடுப்பில் பெரியார் முழக்கம் வளர்ச்சிக் குழு உருவாக்கப்பட்டு, பல்வேறு தோழர்கள் மாதம்தோறும் தலா ரூ.500 வழங்கி வருகிறார்கள். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். பிப்ரவரி மாத நன்கொடையாக ரூ.14,000 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்).
பிப்-18 கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தோழர் அருண் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்) பிறந்தநாளை முன்னிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் ரூ.2000 பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதி அளித்தார். பிறந்தநாள் மகிழ்வாக தோழர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். பெரியார் முழக்கம் இதழ்27022026
