Category: பெரியார் முழக்கம்

பெரியார் குடும்பத் தோழர்கள்  இலக்கியா-கவுதமன் ஜாதி மறுப்பு மணவிழா

பெரியார் குடும்பத் தோழர்கள் இலக்கியா-கவுதமன் ஜாதி மறுப்பு மணவிழா

திராவிடர்  இயக்கத் தமிழர் பேரவை யின் கொள்கை பரப்புச் செயலாளர் உமா, மகள் இலக்கியாவுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சிவராசு – மணிமேகலை இணையரின் மகன் கவுதமனுக்கும்  சனாதன எதிர்ப்பு,  ஜாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம்  02.10.2022 அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சௌபாக்கியா மகாலில் நடைபெற்றது. புத்தர் கலைக்குழு மற்றும் நிமிர்வு கலையகம் பறை இசை முழக்கத்துடன் விழா துவங்கியது. இவ்விழா அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், பார்ப்பன சனாதன  சடங்குகள் எதுவுமின்றி தாலி கட்டாமல் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ள ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணத்தை புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் நடத்தி வைத்தார். புதிய குரல் ஓவியா நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இணையேற்பின் வரவேற்பு நிகழ்வு, 09.10.2022 அன்று காலை கோவை விக்னேசு மகாலில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர்...

பல்லடம் ஒன்றியத்தில் கழகத்தின் பரப்புரைப் பயணம்

பல்லடம் ஒன்றியத்தில் கழகத்தின் பரப்புரைப் பயணம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள், சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் என்ற முழக்கத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்தில் 16.10.2022 ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில் துவங்கி  தெருமுனை பரப்புரைக் கூட்டங் களாக மாலை வரை நடைபெற்றது. தொடக்கமாக பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் நடந்த  பரப்புரைப் பயணத்திற்கு பல்லடம் நகர அமைப்பாளர்  கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சண்முகம், செம்பரிதி, பழனிச்சாமி ஆகிய தோழர்கள்  முன்னிலை வகித்தனர் . முதல் நிகழ்வில் ஒன்றிய அமைப் பாளர் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்,  திருப்பூர் மாவட்டத் தலைவர்  முகில் ராசு, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், பொருளாளர் சு.துரைசாமி ஆகியோர் உரையாற்றினர்.  ராஜசிங்கம் நன்றி உரையாற்றினார். பரப்புரையின் இரண்டாவது நிகழ்வு 11 மணிக்கு வடுகுபாளையம் பகுதியில், பயணத்திற்கு பல்லடம் ஒன்றிய நகர அமைப்பாளர் கோவிந்த ராஜ்  தலைமை வகித்தார். தி.மு.க...

போதைப் பொருள்களின் கடத்தல் மய்யம் குஜராத்

போதைப் பொருள்களின் கடத்தல் மய்யம் குஜராத்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தபிறகு, சர்வதேச சந்தைகளில் அதிக விலை மதிப்புமிக்க போதைப் பொருட்களின் கடத்தல் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, போதைப் பொருட்கள் கடத்தலின் தலைநகரமாக குஜராத்தும் மாறி வருகிறது. கடந்தாண்டு செப்டம்பரில் முந்த்ரா துறைமுகத்திற்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட  3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதை பொருள் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி. இந்தியாவில் இதற்கு முன் இந்தளவுக்கு பெரியளவில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது கிடையாது. ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து உலகின் மிகப் பெரிய பணக்காரராக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான அதானிக்கு சொந்தமானது தான் இந்த முந்த்ரா துறைமுகம். இந்த துறைமுகத்தின் மூலமாக சர்வதேச நாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இம்மாநில துறைமுகங்களுக்கு  வெளிநாடுகளில் இருந்து வரும்  சரக்கு கப்பல்களில் இருந்து பல கோடி மதிப்புள்ள போதை...

நாட்டை சூறையாடும் மோடி – அதானி கூட்டு

நாட்டை சூறையாடும் மோடி – அதானி கூட்டு

மோடி – அமித்ஷா – அதானி என்ற மூன்று குஜராத்திகளின் பிடிகளில் இந்தியாவின் பொருளாதாரமும் அரசியலும் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதானி கொள்ளைகளை விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான குஜராத்தி மார்வாடி கௌதம் அதானி, சுமார் 137 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் உலகின் மூன்றாவது பணக்காரராக முன்னேறியுள்ளார்.  தற்போது இவருக்கு முன்பாக டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் எலோன் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆகிய இருவர் முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் தான் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி ஆசியாவின் முதல் பணக்காரர் என்று உயர்ந்ததோடு, உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய வணிகப் பின்புலம் எதுவும் இல்லாமல், டாடா, பிர்லா போல பரம்பரை பணக்காரரும் இல்லாமல், 1988ஆம் ஆண்டு முதல் தான் வணிகம் புரியத்...

‘சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்’ புவனகிரியில் பொதுக்கூட்டம்

‘சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்’ புவனகிரியில் பொதுக்கூட்டம்

சனாதனத்தை வேரறுக்க உறுதியேற் போம், என்ற முழக்கத் தோடு பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம், புவனகிரி யில் 15.10.2022 அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடை பெற்றது. பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக ‘விடுதலைக் குரல்’ கலைக் குழுவின் பகுத்தறிவு, சாதியொழிப்பு பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் செ.பிரகாஷ்  வரவேற்பு கூறினார். அ. சதிசு இந்நிகழ்விற்கு தலைமையேற்றார். மாவட்ட தலைவர் அ.மதன்குமார், மாவட்ட செயலாளர் சிவகுமார், அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் அறிவழகன், மங்களூர் ஒன்றிய செயலாளர் ந.கொளஞ்சி, த.முத்துகிருஷ்ணன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து சதானந்தம் (மு.ஒ.செயலாளர், சி.பி.எம்.), கணபதி (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), தயாநிதி (மா.தலைவர், மக்கள் தமிழகம்), ஆசிரியர் பழனிவேல், காரல் மார்க்ஸ் (பாலா பேரவை), ஆகிய தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர். தொடர்ந்து சிறப்புரையாற்ற வருகை தந்த சௌந்திரபாண்டியன் (காங்கிரஸ்), திருமார்பன் (மாநில அமைப்புச் செயலாளர்,...

தி ரெட் பலூன்: ஓர் நெகிழ்ச்சியான சந்திப்பு

தி ரெட் பலூன்: ஓர் நெகிழ்ச்சியான சந்திப்பு

மாணவர்களின் கற்றல் திறன் படைப்பாற்றலை வளர்த்து எடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை  ஒவ்வொரு மாதமும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு குழந்தைகள் திரைப்படங்களை திரையிடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர் ஒருவரும் அழைக்கப்பட வேண்டும். கடந்த அக்டோபர் 13ஆம் தேதி “தி ரெட் பலூன்” என்ற  பிரெஞ்சு திரைப்படம்  அனைத்து பள்ளிகளிலும் திரையிடப்பட்டது. 34 நிமிடம் ஓடக்கூடிய இந்த மௌனப் படம்  ஆஸ்கார் விருது பெற்ற ஒன்று.  1956ஆம் ஆண்டு வெளியானது. சென்னை பெசன்ட்நகர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அழைப்பை ஏற்று  நான் (விடுதலை இராசேந்திரன்) சிறப்பு விருந்தினராக பங்கேற்றேன். “பள்ளி மாணவன் ஒருவனிடம் பலூன் ஒன்று கிடைக்கிறது. நூல் கயிற்றுடன் கிடைக்கும் அந்த பலூன் மீது அவனுக்கு உணர்வு பூர்வமான ஒரு  ஈர்ப்பு  உருவாகிறது. எங்குச் சென்றாலும் பலூனின் நூலை உயர்த்திப் பிடித்தவாறே செல்கிறான். பல்வேறு தடைகளை  எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான். பள்ளிப்...

தலையங்கம் பகுத்தறிவுப் பரப்புரைகளை  ஏன் தடுக்க வேண்டும்?

தலையங்கம் பகுத்தறிவுப் பரப்புரைகளை ஏன் தடுக்க வேண்டும்?

நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் பெரிய இடைவெளி எதுவும் கிடையாது. இரண்டுக்கும் அடிப்படையானது அறிவியல் பகுத்தறிவு சிந்தனை மறுப்பு தான். கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி தரப்பட்ட கொடுமையான செய்தி நாட்டில் பலத்த விவாதங்களை எழுப்பியிருக்கிறது. கேரளாவில் தொடர்ந்து நரபலிக் கொடுமை மாந்திரீக வாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது என்ற செய்திகள் வருகின்றன. வடமாநிலங்களில் ‘பில்லி சூன்யம்’ என்ற நம்பிக்கையில் பல தலித் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ‘மந்திரவாதியை’ நாடிச் செல்கிறார்கள். அங்கே நகைகளையும் பணத்தையும் பறிகொடுத்து ஏமாற்றப்படுகிறார்கள். ‘பேய் பில்லி சூன்யம்’ என்ற நம்பிக்கைகளும் மண்டிக் கிடக்கின்றன. இந்த ஆபத்தான  மூடநம்பிக்கைகள் பற்றி அறிவியல் அடிப்படையில் மக்களுக்கு பகுத்தறிவுப் பரப்புரை செய்யக்கூடிய ஒரே இயக்கம் பெரியார் இயக்கம் தான். கேரளாவில் நரபலிக்குப் பிறகு தான் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை முடிவு எடுத்துள்ளது. கடவுள் நம்பிக்கை என்பதே அறிவியலுக்கு...

90ரூ மாற்றுத் திறன் மனித உரிமை செயல்பாட்டாளருக்கு இரக்கம் காட்ட மறுக்கும் பாசிச ஆட்சி

90ரூ மாற்றுத் திறன் மனித உரிமை செயல்பாட்டாளருக்கு இரக்கம் காட்ட மறுக்கும் பாசிச ஆட்சி

நகர்ப்புற நக்சலைட்டுகள் என்ற முத்திரை குத்தி மனித உரிமை செயல்பாட்டாளர்களைக் கொடூரமாக நசுக்கி வருகிறது பாசிச ஒன்றிய ஆட்சி. அதில் ஒருவர்தான் டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த ஜி.என்.சாய்பாபா. 90ரூ உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலிகளால் தான் அவரால் நகர முடியும். கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து அவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டி மகராஷ்டிரா சிறையிலே 7 ஆண்டுகளாக அடைத்து வைத்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. அவருக்கான பிணை கோரி வழக்கு வந்தது. வழக்கை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றம் அவரை சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே மகராஷ்டிரா மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பம்பாய் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்து அறிவித்திருக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிற கருத்து தான் மிகவும் வியப்புக்குரிய ஒன்றாகும். “மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை அவர்கள் எவ்வளவுதான் உடல் ஊனமுற்று இருந்தாலும்,...

சிறையில் தீட்சதர்கள்

சிறையில் தீட்சதர்கள்

அறநிலையத் துறை சட்டம் எதற்கும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம்; நாங்கள் வானுலகத்திலிருந்து நடராசப் பெருமானோடு “பாரா சூட்டில்” வந்து பூமிக்கு குதித்தவர்கள் என்று உச்சநீதி மன்றம் போய் தீர்ப்பு வாங்கி வைத் துள்ளவர்கள் தில்லை தீட்சதப் பார்ப்பனர்கள். அரசுக்கு கோயில் உண்டியல் கணக்குக் காட்ட மாட்டோம்; தில்லை நடராசன் வந்து கேட்கட்டும் என்பார்கள். வரவு செலவு கணக்குகளை சரி பார்க்க அறநிலையத் துறை அதிகாரிகள் வந்தால் கோயிலுக்குள் வராதே; போ வெளியே ‘கெட் அவுட்’ என்பார்கள். இப்படித்தான் பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜாவும் அண்மையில் பத்திரிகை யாளர்களைப் பார்த்து ‘கெட் அவுட்’ என்று ஆவேசமாகக் கூறினார். பிறகு தான் தெரிந்தது அவர் அப்படிக் கூறிக் கொண்டது தனக்குத் தான் என்று. ‘பிரம்மா’வால் அந்தக் கால கருத்தரிப்பு மய்யத்தில் நெற்றி வழியாகப் பிறந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் ‘பிராமணர்’ களுக்கு ‘பிறவித் திமிர்’ என்ற பண்பும் உண்டு. (விதி விலக்குகள் இருக்கலாம்). தில்லை...

உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேச்சு சாதியம் – ஆணாதிக்கம் – தகுதி திறமை சமூகத்தை ஒடுக்கும் கட்டமைப்புகள்

உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேச்சு சாதியம் – ஆணாதிக்கம் – தகுதி திறமை சமூகத்தை ஒடுக்கும் கட்டமைப்புகள்

இந்தியாவின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய். சந்திரசூட், சாதியம்-ஆணாதிக்கம், தகுதி திறமைக் கோட் பாடு ஆகியவை சமூகத்தை ஒடுக்கும் கட்டமைப்புகளாக இருக்கின்றன என்று கூறியுள்ளார். தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் கடந்த சனிக்கிழமை (அக்.15, 2022) பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று அவர் பேசினார். “நாம் இப்போது சட்டம் ஆட்சி செய்யும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மை வழி நடத்தும் இந்த சட்டங்களின் இலக்கு எத்தகையதாக இருத்தல் வேண்டும்? நிச்சயமாக சட்டத்தின் விதிகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டு அதன் உள்ளடக்கத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக இருக்க முடியாது. நம்முடைய அரசியல் பண்பாடு, குடிமக்களின் பழக்கங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறை வழக்கறிஞர்களிடம் இந்தக் கண்ணோட்டம் வரவேண்டும். நாம் இப்போது சட்டத்தின் ஆட்சி நடக்கும் சமூகத்தில் வாழ்கிறோம். இந்தச் சமூகம் – சாதியம், ஆணாதிக்கம் – தகுதி திறமைக் கோட்பாடுகளைப் (யடெநளைஅ) பேசி, சமூக ஒடுக்குமுறைக் கட்டமைப்புகளாக மாற்றி...

வள்ளலார் வைதீக எதிர்ப்பு கருத்தரங்கம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

வள்ளலார் வைதீக எதிர்ப்பு கருத்தரங்கம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

  சமகால அரசியல் சூழல் குறித்த விவாதம் பெரியார் முழக்கம் சந்தா 1000 இலக்காக வைத்து சேர்ப்பது சென்னை மாவட்ட கழகத்தின் எதிர்கால திட்டங்கள், ஆகியவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வட சென்னை, திருவல்லிக் கேணி, மயிலை, அடையாறு, திருவான்மியூர், நங்கநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், சூலை, ராமாபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். முன்னதாக, கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்,  “தமிழ்நாட்டில் பார்ப்பனிய மதவாதம் காலூன்று வதற்கு எப்படி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றன என்பதை விளக்கினார். கட்சிகளை உடைத்தல்; ஊடகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்; தமிழ்நாட்டில் இரண்டா வது இடத்தில் பா.ஜ.க. இருப்பது போன்ற பிம்பங்களைக் கட்ட மைத்தல்; இந்த செயல் திட்டங் களுக்காகப் பணத்தை பெருமளவு செலவு செய்தல் போன்ற விரிவான  தகவல்களைப் பகிர்ந்து கொண் டார். உண்மைக்கு மாறான பா.ஜ.க.வின் பரப்புரைகளை நாம் எப்படி சந்திக்க வேண்டும் என்பது பற்றியும்...

இந்தியாவை இந்தி நாடாக்க ஒன்றிய ஆட்சி தீவிரம்: தமிழகம் கொந்தளிக்கிறது

இந்தியாவை இந்தி நாடாக்க ஒன்றிய ஆட்சி தீவிரம்: தமிழகம் கொந்தளிக்கிறது

இந்தியாவை இந்திநாடாக்க அமீத்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழுப் பரிந்துரைத்துள்ளது. தேர்தலில் வடமாநிலங்களின் வாக்குகளைக் குறி வைத்து இந்த அதிரடி நடவடிக்கையில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இறங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகம் கொந்தளித்துள்ளது. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, முதல் முறையாக 1976ம் ஆண்டில் அலுவல்பூர்வ மொழி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இக்குழுவில் மக்களவை எம்பி.க்கள் 20, மாநிலங்களவை எம்பி.க்கள் 10 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இக்குழு செயல்படுகிறது. இக்குழு அதன் 11வது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் வருமாறு: இந்தி மொழி பேசும் மாநிலங்களில் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், ஒன்றிய பல்கலைக் கழகங்கள், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் இந்தி மொழியிலும், பிற மாநிலங்களில் உள்ளூர் மொழியான தாய்மொழியிலும் பயிற்றுவிக்க வேண்டும். இந்தி மொழியை ஐநா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக்க...

வள்ளலாரின் ஆரிய மொழி எதிர்ப்பு

வள்ளலாரின் ஆரிய மொழி எதிர்ப்பு

வள்ளலார்,  ‘சத்தியப் பெரு விண்ணப்பத்’தில், தமக்குத் தமிழ்ப்பற்றை உண்டாக்கியதற்காக  இறைவனுக்கு நன்றி கூறும் பகுதி வருமாறு: “எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே! இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ‘ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது’, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கு மிகவும் இனிமையுடையதாய் சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த ‘தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்து’ அத்தென்மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளினீர்.” பெரியார் முழக்கம் 13102022 இதழ்      

இராஜராஜசோழன் நடத்திய பார்ப்பனிய ஆட்சி

இராஜராஜசோழன் நடத்திய பார்ப்பனிய ஆட்சி

இராஜ இராஜ சோழன் பதவிக்கு வருவதற்கு முன்பே நடந்த சம்பவங்கள் தான் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்களமாக இருந்தாலும் சோழ மன்னர்கள் அனைவருமே பார்ப்பனர்களின் அடிமை ஆட்சியைத் தான் நடத்தி வந்திருக்கிறார்கள் என்பதே  உண்மையான வரலாறு. “தமிழ்த் தேசியத்திற்கு முன்னோடி”, “தமிழர்களின் பொற்காலம்” என்று வர்ணிக்கப்படுற இராஜ ராஜனைப் பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் பார்க்கும் பொழுது இராஜராஜசோழன் ஆட்சி தமிழர்களின் பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை பார்ப்பனர்களுக்கே அது பொற்காலமாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது! பார்ப்பனர்களை சேனாதிபதிகளாகவும், அவைத் தலைவர்களாகவும், அரியணை யேற்றி அழகு பார்த்தவன் இராஜராஜன்! களப்பிரர்கள் காலத்தில் காயடிக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், மீண்டும் தலை விரித்தாடியது இராஜராஜன் காலத்தில். அருண்மொழித் தேவன் என்ற தமிழ்ப் பெயரை இராஜராஜசோழன் என்று வடமொழிக்கு மாற்றிக் கொண்டவன்! அடிமைகள் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள் சுட்டிக் காட்டுகின்றன. தாசியின் மக்கள், பெற்றோரால் விற்கப்பட்டவர் போன்ற பலவகையான...

வேத – ஆகம சாஸ்திரப் புராணங்களைக் கடுமையாக எதிர்த்தார் வள்ளலார்

வேத – ஆகம சாஸ்திரப் புராணங்களைக் கடுமையாக எதிர்த்தார் வள்ளலார்

  வள்ளலார் தொடக்கக் காலத்தில் சைவத்திலும் முருகக் கடவுளிடமும் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனையில் மாற்றங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் எழுதிய ஆறாம் திருமுறையில் சைவம், ஆகமம், வேதங்களைக் கேள்விக்கு உட்படுத் தினார். பெரியார் ஆறாம் திருமுறைப் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டாh. வள்ளலாரின் வரலாற்றில் தலைசிறந்த நூலாகக் கருதப்படும் நூல் – முனைவர் ஊரன் அடிகள் எழுதியதாகும். அண்மையில் ஜூன் 13, 2022 அன்று தமது 89ஆம் அகவையில் முடிவெய்தினார். தமிழக அரசின் விருது பெற்ற அந்த நூலிலிருந்து வள்ளலாரின் வேத ஆகம எதிர்ப்புக் கருத்துகளின் தொகுப்பு. வேத, ஆகம, சாத்திர, புராண, இதிகாசங்கள் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா. வேதங்கள் ஆகமங்கள் சாத்திரங்கள் புராணங்கள் இதிகாசங்கள் கூறும் கதைகளையும் கற்பனைகளையும் பெருமான் ஒவ்வார் . ‘கலை உரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ என்பார். வேதாகமங்கள் சூதாகச் சொல்லுகின்றன, உண்மையை வெளிப்படையாக உரைக்கவில்லை, இவற்றால் என்ன...

தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ‘சரணாகதி’

தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ‘சரணாகதி’

1925ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி அன்று தான் ஆர்.எஸ்.எஸ். நாக்பூரில் துவக்கப்பட்டது. எனவே விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய விழாக்களை நடத்துவது வழக்கம். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி பேரணியை தொலைக் காட்சிகள் வெளியிட்டன. அதில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. ‘ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய காலத்திலிருந்து முதன் முறையாக பேரணியை பார்வையிடுகிற பார்வையாளர்களில் ஒரு பெண் இப்போது தான் அழைக்கப்பட்டு இருக்கிறார்’ என்ற செய்தியை தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவில் பங்கெடுப்பதற்கு பார்வையாளராகவே ஒரு பெண் அழைக்கப்பட்டிருப்பது 1925க்குப் பிறகு இதுவே முதல் முறை. ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்கள் யாரும் உறுப்பினராக முடியாது என்ற தடை அப்படியே இப்போதும் நீடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணி அணி வகுப்பையும் தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள். அதில் ‘சுவயம் சேவக்காக’ ஒரு பெண் கூட வரவில்லை. ஆனால், இங்கே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பெண்களுக்காக ஆர்.எஸ்.எஸ் தனி அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறது என்று அதற்கு ஒரு சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்....

இரத்தக் கலப்பு இல்லாத இனம் உலகில் இல்லவே இல்லை என்பதை நிரூபித்த மரபியல் ஆய்வாளருக்கு நோபல் பரிசு ர. பிரகாசு

இரத்தக் கலப்பு இல்லாத இனம் உலகில் இல்லவே இல்லை என்பதை நிரூபித்த மரபியல் ஆய்வாளருக்கு நோபல் பரிசு ர. பிரகாசு

மனித சமூகம் கலப்பில்லாமல் தனித்தனி குழுக்களாக வாழ்ந்திருந்தால் மற்ற டைனோசர்கள் உள்ளிட்ட பல உயிரினங்களைப் போல காலப் போக்கில் கரைந்து போயிருக்கக்கூடும். ஜாதியப் பெருமை பேசி ஜாதியக் கலப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ‘மனுவாதிகள்’ கருத்துகளை அறிவியல் ரீதியாக தகர்த்து எறிந்துள்ள மரபணு ஆய்வாளருக்கு இப்போது நோபல் பரிசு கிடைத்துள்ளது; அவரது பெயர் சுவாந்தே பாபோ. மருத்துவப் பிரிவில் 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மரபியல் ஆய்வாளர் சுவாந்தே பாபோ-விற்கு அறிவிக்கப் பட்டுள்ளது. உலகில் இனத்தூய்மை வாதத்திற்கு இடமில்லை, இனக்கலப்பு இல்லாத ஒரு மனித இனம் உலகில் இல்லவே இல்லை என்பதை டி.என்.ஏ. ஆய்வுகள் மூலம் நிரூபித்ததற்காக சுவாந்தே பாபோவிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடவுள்தான் உலகைப் படைத்தார், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்களையும் படைத்தார், மரம், செடி, கொடிகளை படைத்தார் என்பது உலகில் இதுவரை தோன்றிய அனைத்து மதங்களும் கூறியிருக்கும் கட்டுக்கதைகள். ஆனால் பால்வெளியில் ஒரு...

குமரேசன்-பனிமலர் வாழ்க்கைத் துணை ஏற்பு

குமரேசன்-பனிமலர் வாழ்க்கைத் துணை ஏற்பு

சங்கராபுரம் , கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தன் – விஜியா இணையரின் மகன் குமரேசனுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி – வாசுகி இணையரின் மகள் பனிமலர் என்பவருக்கும் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் கடுவனூர் பெரியார் திடலில், கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்டத் தலைவர் க.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு   குமார் – அம்சவள்ளி வரவேற்புரை கூறினர். சடங்கு, சம்பிரதாயங்கள், பார்ப்பன அர்ச்சகரைத் தவிர்த்த இந்த வாழ்க்கை இணை ஏற்பிற்கு உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். புதுவை ‘விடுதலைக் குரல்’ குழுவின் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இணையர் ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கினர். நிறைவாக மணமக்கள் நன்றி கூறினர். பெரியார்...

மனுசாஸ்திரத்தைத் தடை செய்: சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

மனுசாஸ்திரத்தைத் தடை செய்: சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் பிறந்தநாளை ஒட்டி செப்டம்பர் 17 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் மற்றும் புத்தூரில் உள்ள பெரியாரின் சிலைக்கு மா.குமார் மற்றும் தே.ச.அன்புரவி ஆகியோரின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அன்று மாலை 4 மணியளவில் ரிஷிவந்தியம் ஒன்றியம் வானாபுரம் – பகண்டை கூட்டுச் சாலையில் கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் மு.நாகராஜ் தலைமையில் ‘சனாதனத்தை வேரறுப்போம்’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்ட செயலாளர் க. இராமர், மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஊட்டத்திற்கு ரிஷிவந்திய ஒன்றிய அமைப்பாளர் இரா.கார்மேகம், ஒன்றிய தலைவர் மா. குமார், சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் தே.க. அன்புரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ.முருகன் நன்றி கூறினார். கூட்டத்தில், இரா.வீரமணி, இரா. ஜீவா, மு.ச.பா, கௌதம், ச.சுபாஷ், கு. பாபா, நீதிபதி உள்ளிட்ட தோழர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம்...

அரசு அலுவலகங்களில் மத வழிபாடு நடத்துவது அரசாணைக்கு எதிரானது

அரசு அலுவலகங்களில் மத வழிபாடு நடத்துவது அரசாணைக்கு எதிரானது

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த வழிபாடுகளை, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகளை கொண்டாடக் கூடாது என தலைமைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள்  ஆணைகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளனர். ஆனால் அந்த ஆணைகளை அவமதிக்கும் வகையில் மத வழிபாடுகளை  அரசு அலுவலகங்களில் தொடர்ந்து நடத்துகிறார்கள். எனவே தமிழ்நாடு அரசின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கும், சமூக அமைதிக்கும் எதிரான ஆயுத பூஜை வழிபாடுகள் அரசு அலுவலகங்களில் நடந்திடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 23.9.2022 அன்று காலை 11 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் ஆணையர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட தோழர்கள்: பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருஷ்ணன், மாதவன், இயல் , சிவராசு, ஸ்டாலின் ராஜா , சதீஷ் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 06102022 இதழ்      

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் தான்!

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் தான்!

  மொரார்ஜி – கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை உறுதிப்படுத்தியதோடு, கோட்சே தம்பி கோபால் கோட்சே – தாங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பதை உறுதி செய்துள்ளார். காந்தி ஆர்.எஸ்.எஸ். முகாமைப் பார்வையிட்டு பாராட்டினார் என்பது அப்பட்டமான பொய். காந்தி நினைவிடத்தில் வழிகாட்டியை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் வேலையை விட்டு நீக்கியது ஏன்?   கோட்சே வாக்குமூலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் காப்பாற்ற, தான் அந்த அமைப்பில் இல்லை என்று கூறியுள்ளான். உண்மையில் ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பு தான் கோட்சே என்பதற்கான ஆதாரங்களை கீழே தருகிறோம். காந்தியார் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உண்டு! மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையை,  ‘ளுவடிசல டிக அல டகைந’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் 248 ஆவது பக்கத்தில், காந்தியாரை சுட்டுக்கொன்றது நாதுராம் கோட்சே என்பவன் புனேயில், ‘ஆர்.எஸ்.எஸ். ஊழியனாக அவன் பணியாற்றியவன்’ என்று எழுதியிருக்கிறார். ஏ.ஜே.குர்ரான் எழுதிய ‘ஆடைவையவே ழiனேரளைஅ in ஐனேயைn யீடிடவைiஉள’ என்ற நூலில்...

காதல் உண்மையல்ல

காதல் உண்மையல்ல

உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் – பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காக என்று இன்ப மில்லாமல், திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படு கிறதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். ஆனால், காதலென்றாலென்ன ? அதற்குள்ள சக்தி என்ன ? அது எப்படி உண்டாகிறது ? அது எதுவரையில் இருக்கின்றது ? அது எந்தெந்த சமயத்தில் உண்டாவது ? அது எவ்வப்போது மறைகின்றது ? அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணமென்ன ? என்பதைப் போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதலென்பது சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும் அதை (காதலை)ப் பிரமாதப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.               –     குடி அரசு – 18.01.1931 பெரியார் முழக்கம் 06102022 இதழ்

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

மலேசியத் திராவிடர் கழகம் சிலாங்கூர் மாநிலத் தலைவர்  பரமசிவம், ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதியாக ரூ. 10,000/- வழங்கினார். வங்கதேசத்தில் பணிபுரிந்த தஞ்சை பகுதியை சேர்ந்த பெரியாரிய உணர்வாளர் இரமேஷ் ரூ. 5,000/- வழங்கியுள்ளார். விஜயகுமாரன், சென்னை – ரூ. 1,000/-;                சபிதா ராஜன், புது டெல்லி – ரூ. 1,000/- இராஜாராமன், கும்பகோணம் – ரூ. 1,000/- (இணையதள பொறுப்பாளர் விசயகுமார் தொடர்பில் கிடைக்கப் பெற்றது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். – ஆர்) மயிலாடுதுறை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சு. ஜவகர்  தன்னுடைய பிறந்தநாளில்,  ‘புரட்சி பெரியார் முழக்கம்’ இதழுக்காக ரூ. 2000/- வளர்ச்சி நிதியாக அளித்தார். பெரியார் முழக்கம் 06102022 இதழ்

இந்துத்துவா மாடல் – இப்படி

இந்துத்துவா மாடல் – இப்படி

திராவிட மாடல் ஆட்சி என்றாலே, அதை குறை கூறுகிறார்கள், பாஜகவினரும், இந்துத்துவத்தினரும், பார்ப்பனர்களும். ஆனால் இந்துத்துவ மாடல் ஆட்சி எப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு ஏடுகளில் வந்திருக்கிற ஒரு செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உத்திரகாண்ட் மாநிலத்திலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அரசு ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கிறது. உத்திரகாண்ட் மாநிலத்தில் அங்கு உள்ள ஒரு சிறையில் ஒரு நாள் ஒரு இரவு பொழுது தங்கிவிட்டு திரும்பினால் தோஷம் கழிந்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு சிறையில் அடைப்பதற்காக அரசே ஏற்பாடுகளை செய்து இருக்கிறது. ஒரு இரவுக்கு 500 ரூபாய் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு இரவுக்கு 500 ரூபாய் செலுத்தி சிறையில் இருந்துவிட்டு வரலாம் என திட்டம் இருக்கிறது. இப்போது உத்திரகாண்ட் அரசும் அதே திட்டத்தை பின்பற்றப் போவதாக அறிவித்து இருக்கிறது. ஜாதகப்படி தங்கள் மீதுள்ள தோஷம் இப்படி ஒரு நாள்...

தலையங்கம் கருக் கலைப்பு:  உச்சநீமின்றத்தின் புரட்சிகர தீர்ப்பு

தலையங்கம் கருக் கலைப்பு: உச்சநீமின்றத்தின் புரட்சிகர தீர்ப்பு

கருக் கலைப்பை திருமணத்திலிருந்து துண்டித்து அது பெண்ணின் தனித்துவ உரிமை என்ற புரட்சிகரமான தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கியிருக்கிறது. திருமணமான பெண் மட்டுமே கருவை சுமக்க வேண்டும்; இல்லையேல் அவர் ‘கற்பு’ என்ற புனிதத்தை இழந்து விடுவார்; சமூகத்தின் பார்வையில் ஒழுக்கமற்றவர்களாக புறக்கணிக்கப்படுவார்கள் என்ற பார்ப்பனிய மனு சாஸ்திர பழமைவாதங்களுக்கு மரண அடி தரும் தீர்ப்பு இது. டெல்லியைச் சார்ந்த 25 வயது அய்ஸ்வர்யா, திருமணமின்றி தனக்கு மனமொத்தவரிடம் கொண்ட தொடர்பால் உருவான கருவை 23 வாரங்கள் கழித்து கலைக்க விரும்பினார். டெல்லி உயர்நீதிமன்றம் திருமணமாகாதவருக்கு கருக்கலைப்பு உரிமை இல்லை என்று சட்டத்தைக் காட்டி கோரிக்கையை நிராகரித்தது. உச்சநீதி மன்றம் போனார். கருக்கலைப்பு விதிமுறையில் பெண்ணின் உரிமையைப் பறிக்கும் இந்தத் தடையை அகற்ற வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. நியாயத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. “விருப்பமில்லாத கருவைச் சட்டத்தின் பேரால் சுமக்கச் சொல்லி வலியுறுத்துவது அந்தப் பெண்ணின்...

திருவாங்கூர் சமஸ்தானத்தில் தூக்குத் தண்டனை ஏன் ஒழிக்கப்பட்டது?

திருவாங்கூர் சமஸ்தானத்தில் தூக்குத் தண்டனை ஏன் ஒழிக்கப்பட்டது?

அக்டோபர் – 2,  காந்தியார் பிறந்தநாள். காந்தியார் ஜாதகப்படி அவர் 100 வயதையும் கடந்து வாழ்வார் என்று பிரபலமான ஜோதிடர்கள் கணித்தார்கள். ஆனால் அவர் 100 வயது கடப்பதற்கு முன்பே கோட்சே, நாராயண ஆப்தே இருவரும் காந்தியை மதவெறிக்காக சுட்டுக் கொன்றுவிட்டனர். இதற்காக இரண்டு பேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இருவரும் சித்பவன் பார்ப்பனர்கள். நீதிமன்றத்தில் கோட்சே ஒரு வாக்குமூலத்தை தந்தார். தான் காந்தியை கொன்றதை அவர் நியாயப்படுத்தினார். அதற்கு கீதையை அவர் தனக்கு துணையாக அழைத்துக்கொண்டார். “கீதையில் கிருஷ்ணபரமாத்மா அதர்மத்தை அழிப்பதற்காக கொலை செய்வது பாவமல்ல என்று கூறியிருக்கிறார். அழிவது உடல் தானே தவிர ஆன்மா அல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார். அந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் காந்தியை கொலை செய்தேன்” என்றார். நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. இருவருக்கும் தூக்கு தண்டனையை விதித்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மெக்காலே என்ற அதிகாரி எந்த குற்றத்தை செய்த எந்த வர்ணத்தை...

அய்.நா.வில் இனஅழிப்புக்கு எதிரான தீர்மானம் இலங்கையை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்

அய்.நா.வில் இனஅழிப்புக்கு எதிரான தீர்மானம் இலங்கையை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்

அய்.நா.வில் இலங்கை அரசு மீது பன்னாட்டு விசாரணை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கையை எதிர்த்து இந்தியா வாக்களிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஈழத் தமிழர் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் 51ஆம் அமர்வு ஜெனிவாவில் கூடியுள்ளது. இது குறித்து மனிதவுரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் கடந்த செப்டம்பர் 6ஆம் நாள் அறிக்கையளித்துள்ளார். சிறிலங்காவின் கடுமையான பொருளியல் நெருக்கடிக்கும் மனிதவுரிமை மீறல்களுக்குமான தொடர்பை உயர் ஆணையர் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். பாதிப்புற்றவர்களுக்கு நீதி வழங்காமல் படைச் செலவை உயர்த்தி அடக்குமுறைக் கருவிகளை வலுவாக்கும் முயற்சிகளால்தான் நெருக்கடி இந்த அளவுக்கு முற்றியது என்று தமிழ்மக்கள் தரப்பில் எடுத்துக் காட்டி வரும் உண்மையை உயர் ஆணையர் அறிக்கை உறுதி செயதுள்ளது. சிறிலங்காவின் குற்றங்களை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லவும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் ஆணையர் உறுப்பு நாடுகளுக்குப்...

கழகத் தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கழகத் தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு சந்தாத் தொகையை முழுமையாக அனுப்பிடாத தோழர்கள் (முகவரிப் பட்டியலின்படி) உடனே சந்தா அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோன்று கழக நூல்களுக்கான உரிய தொகையை அனுப்பாத தோழர்களும் உடனடியாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம். தயாரிப்பு செலவுகள் பல மடங்கு உயர்ந்து விட்டன. கடும் நெருக்கடியில் கழக ஏடு திணறிக் கொண்டிருக்கிறது என்பதைக் கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.                                    – விடுதலை இராசேந்திரன், ஆசிரியர் பெரியார் முழக்கம் 29092022 இதழ்

பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்

பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்

  பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று கொடி ஏற்றம்; தெருமுனைப் பரப்புரை; பொதுக் கூட்டங்களை கழகம் நடத்தியது. தூத்துக்குடியில் பால் பிரபாகரன் உரை : ஆரிய விசம் முறிக்கும் அருமருந்து தந்தை  பெரியாரின் 144வது பிறந்த நாளில் சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்பீர் என்று தி.வி.க பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அறைகூவல் விடுத்தார். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் 17.09.2022 தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனாதன எதிர்ப்பு விளக்கப் பொதுக் கூட்டமாக தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு தருவைகுளம் முதன்மை சாலையில் நடைபெற்றது. நிகழ்விற்கு தி.வி.க.மாவட்ட துணைத் தலைவர் ச.கா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வே.பால்ராசு, ச.ரவிசங்கர், ம.அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சா.த.பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவர் தனது உரையில் “தந்தை பெரியாரின் உழைப்பால் சமத்துவ சமூக மாற்றம் ஏற்பட்டு...

வானொலியில் ஆறுமுறைப் பேசிய பெரியார்

வானொலியில் ஆறுமுறைப் பேசிய பெரியார்

பெரியார் வானொலியில் பேசினாரா என்று கேட்டால், காந்தி கொல்லப்பட்ட போது நிலவிய கொந்தளிப்பான சூழலில் பேசிய அமைதிப் பேச்சைத்தான் பெரும் பாலானோர் குறிப்பிடுவர்; அநேகமாக அதுதான் பெரியாரின் முதல் ஒலிபரப்பு. காந்தி மறைந்த மறுநாள் (31.1.1948) திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அப்பேச்சு ஒலி பரப்பப்பட்டது. அது 1939இல் தொடங்கப்பட்ட திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியால் ஒலிப்பதிவு செய்யப் பட்டதாகும். சென்னையில் 1924 ஜூலை 31 அன்று முறையான வானொலி ஒலிபரப்பு முதன்முதலாகத் தொடங்கியது. இந்த ஒலிபரப்பைப் பெரியார் கேட்டிருக்க வாய்ப்பில்லை. குறிப்பிட்ட அந்த நாளில், அவர் திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்தார். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டாம் முறை சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அது சிறை வாசத்தின் 15ஆம் நாள். அறிவியல் முன்னேற்ற நடவடிக்கையில் தமிழ்நாடு முதல் அடியை எடுத்துவைத்த நேரத்தில், அவர் கேரளத்தில் சமூகச் சமத்துவ முயற்சியில் ஓர் அடியை முன்வைத்தார். பெரியாரின் ஒலிபரப்புகள் அகில இந்திய வானொலி...

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி (சுயமாக சிந்தித்து) ஒரு போதும் இருக்கக் கூடாது.” (மனு சாஸ்திரம் அத்தியாயம் 5, சுலோகம் 148.) கணவன் துராசாரமுள்ளவனாக “(ஒழுக்கக்கேடுகள் உள்ளவனாக) இருந்தாலும் அன்னிய ஸ்திரீலோலனாக (வேறு பெண்களோடு உறவு வைத்துக் கொள்ள துடிப்பவன்) இருந்தாலும், பதிவிரதைகளான பெண் என்பவள், அந்தக் கணவனை தெய்வத்தைப்போல் வணங்க வேண்டும்.” (மனு சாஸ்திரம், அத்.5, சுலோகம் 154) பெண்கள் துரோகிகள் ; பெண்களைக் கொல்லுவது பாவமில்லை. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.   (அத்தியாயம் 9 ; ஸ்லோகம் 17) பெண்களையும், பிராமணர் அல்லாதவரையும் கொல்லுவது பாவமில்லை. (அத்தியாயம் 11; ஸ்லோகம் 65) சூத்திரர்கள் அனைவரும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள். சூத்திரர் என்போர் ஏழு...

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக் கூட்டம்

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக் கூட்டம்

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் மூட நம்பிக்கை நாள் ஒழிப்புப் பொதுக் கூட்டம் செப்டம்பர் 24, அன்று மாலை 7 மணியளவில் மேடவாக்கம் அரசுப் பள்ளிப் பேருந்து நிறுத்தம் அருகே நடந்தது. பொது மக்கள் பெரும் கூட்டமாகக் கூடும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு கருத்துகளைக் கேட்க ஏராளமான பொது மக்களும் கொள்கை ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். நிலவழகன் தலைமையில் (மக்கள் தமிழகம்) நடந்த கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வன்னியரசு (வி.சி.க.), வந்தியத்தேவன் (ம.தி.மு.க.), பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொழிலன் மற்றும் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் உரையாற்றினர். கூட்ட நிகழ்வுகளை வழக்கறிஞர் பாவேந்தன் (தமிழக மக்கள் முன்னணி) ஒருங்கிணைத்தார். பெரியார் முழக்கம் 29092022 இதழ்    

பொன்னியின் செல்வன் ; கல்கியின் வரலாற்றுத் திரிபு

பொன்னியின் செல்வன் ; கல்கியின் வரலாற்றுத் திரிபு

சோழர்கள் வரலாற்றுப் பின்னணியில், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் விரைவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் திரைப்படமாக வர இருக்கிறது. அதற்காக பெரும் விளம்பரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. சோழர் வரலாற்றின் இளவரசராக பட்டம் சூட்டப்பட்ட ஆதித்திய கரிகாலன் படுகொலை செய்யப்பட்டான். இந்தப் படுகொலைப் பற்றிய வரலாற்று செய்திகளை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு செப்டம்பர் 13 இல் வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கம், சுந்தர சோழன் என்ற மன்னனின்  மூத்த மகன் ஆதித்திய கரிகாலன், இரண்டாவது மகள் குந்தவை, மூன்றாவது மகன் இராஜ இராஜ சோழன். இளவரசன் பட்டம் சூட்டப்பட்ட ஆதித்திய கரிகாலன் கொலை செய்யப்பட்டான், எங்கே, எப்போது, ஏன் கொலை செய்யப்பட்டான் என்பதற்கு நிரூபிக்கப்படக் கூடிய ஆவணச் சான்றுகள் ஏதும் இல்லை. ஆனால், அவனை கொலை செய்தது பார்ப்பனர்கள் என்பது கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊடையார் குடி கோவில் கற்பகிரகத்தின், மேற்குப் பகுதியில் கல்வெட்டாக பதியப்பட்டு இருக்கிறது. கொலை செய்யப்பட்ட மூன்று பார்ப்பனர்களின்...

தலையங்கம் காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ். பேரணிகளா?

தலையங்கம் காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ். பேரணிகளா?

கருத்துரிமைக்கு தடை போட வேண்டும் என்று வலியுறுத்தக் கூடிய ‘பார்ப்பனிய பாசிஸ்டுகள்’ அல்ல நாம். இந்தியாவை இந்து இராஷ்டிரமாக்க வேண்டும் என்ற ஆபத்தான மக்கள் விரோத அரசியலை கருத்தியல் தளத்திலேயே முறியடிக்க வேண்டும் என்று நம்புகிற பெரியாரிஸ்டுகள்; ஆனால் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். 50 இடங்களில் தனது பேரணியை நடத்துவதற்கு காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியைத் தேர்ந்தெடுப்பதும் அதற்கு உயர்நிதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதும் கருத்துரிமை என்ற எல்லைகளைத் தகர்க்கக் கூடிய அதிகாரத் திமிரின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும். காந்தி கொலையில் தங்களுக்கு எந்தவித நேரடி தொடர்பும் கிடையாது என்று ஆர்.எஸ்.எஸ். வாதாடலாம். ஆனால் அவர்களின் இந்துராஷ்டிர சித்தாந்தமே காந்தி கொலைக்கு அடிப்படை என்பதை அவர்களால் மறுக்க முடியாது. காந்தி கொலை செய்யப்பட்ட நான்கு நாட்களில் ‘சட்ட விரோத அமைப்பு’ என்று அறிவிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அன்றைய ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது (பிப்.4, 1948). காந்தி படுகொலை நிகழ்ந்த இரண்டு...

ஆதிசங்கரரும் விவேகானந்தரும் ஏன் பூணூல் போடவில்லை?

ஆதிசங்கரரும் விவேகானந்தரும் ஏன் பூணூல் போடவில்லை?

வேதங்களும், ஆகமங்களும் பார்ப்பனரல்லாத மக்களை சூத்திர்களாக இழிவுபடுத்துகிறது என்று ஆ. இராசா கூறியதற்கு, எதிர்ப்பத் தெரிவித்து இந்து முன்னணியினரும்,சங்கிகளும் பொங்கி எழுகிறார்கள்.இந்துக்களை புண்படுத்தி விட்டதாக கூக்குரல் இடுகிறார்கள். உண்மையிலேயே இந்துக்களை இழிவுபடுத்துவது ஆகமங்களும் வேதங்களும் தான்.ஆங்காங்கே ஆ.இராசாவின் உருவ பொம்மைகளை எரிக்க கிளம்பியிருக்கிற கூட்டத்தைப் பார்த்து நாம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி, இதை எதிர்த்த ஆதிசங்கரரைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்து மதத்தினுடைய கர்த்தாக்களில் ஒருவரான ஆதிசங்கரர் அத்வைதத்தை வலியுறித்தியவர்.அவர் சொல்கிறார், “ஆகமங்கள் பொய்களின் திரட்டு. பொய்களை வைத்து கடவுள் என்ற உண்மையை பூஜிக்க செய்யலாமா? இப்படியெல்லாம் ஆகமக்காரர்களின் அறிவுரைகளை நம்பி கொண்டு இருந்தால் மோட்சமும் கிடைக்காது, கடவுளிடமும் நெருங்க முடியாது” என்று ஆகமத்தையும்,வேதத்தையும் கடுமையாக எதிர்த்தவர் ஆதிசங்கரர். இவர் இந்துக்களைப் புண்படுத்துகிறார் என்று சொல்லி ஆதிசங்கரரின் உருவ பொம்மையை எரிப்பார்களா ? அதே போல் மனுதர்மம் பேசுகிற பிராமணர்களுடைய அடையாளமான பூணூலும், உச்சிக்குடுமியும் தனக்குத் தேவை இல்லை...

நட்டாவின் ஞானக் கண்ணுக்கு மட்டுமே ‘எய்ம்ஸ்’ தெரியும்

நட்டாவின் ஞானக் கண்ணுக்கு மட்டுமே ‘எய்ம்ஸ்’ தெரியும்

பா.ஜ.க.வின் தலைவர் தமிழ் நாட்டிற்கு வந்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 95ரூ முடிந்து விட்டது என்று அவர் கூறினார். அது எப்படி நடந்தது? என்று நமக்கே தெரியாமல் என்று வியப்படைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாணிக்க தாக்கூர், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சு.வெங்கடேசன் ஆகியோர் மருத்துவமனை கட்டப்பட்டு வரும் இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே, வெறும் வெட்டவெளிக் காடாகத்தான் இருந்தது. இது மருத்துவமனைக்கான இடம் என்று நடப்பட்டிருந்த பெயர்ப் பலகையும் கூட காணாமல் போய்விட்டது. ஆனால், ஜே.பி. நட்டா 95ரூ பணிகள் நிறைவடைந்துவிட்டது என்று கூறிய வுடன் ஒரு வியப்பாக போய்விட்டது. அதற்கான திருத்தப்பட்ட மறு மதிப்பீட்டு நிதிக்கும், ஒன்றிய- அமைச்சரவை இன்னமும் ஒப்புதல் வழங்கவில்லை. டென்டர்களும் கோரவில்லை. ஆனால், மருத்துவமனையில் 95ரூ கட்டப்பட்டு விட்டது என்று கூறினால், இவர் எங்கிருந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தான் வியப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துகிற திமுகவினர், படிக்காதவர்கள்,...

கொட்டும் மழையில் பெண்கள் ஆர்ப்பாட்டம் “இந்து”ப் பெண்களை இழிவுபடுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய்

கொட்டும் மழையில் பெண்கள் ஆர்ப்பாட்டம் “இந்து”ப் பெண்களை இழிவுபடுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய்

ஆர்ப்பாட்டத்தில்….. ஆ. ராசாவுக்கு பெண்கள் துணை நிற்போம்! குற்றம் என்ன? குற்றம் என்ன? ஆ. ராசா செய்த குற்றம் என்ன? ஆதரிப்போம்; ஆதரிப்போம்; ஆ. ராசாவின் கருத்துகளை ஆதரிப்போம்! துணை நிற்போம்; துணை நிற்போம்; ஆ. ராசாவுக்கு துணை நிற்போம்! – என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. “இந்து”ப் பெண்களை இழிவுபடுத்தும் மனு சாஸ்திரத்தை தடை செய் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார் இறுதி உரை நிகழ்த்திய தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை முன்பு 26.09.2022 அன்று மாலை 3.30 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வழி நடத்தினர். பேராசிரியர் சரசுவதி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ‘உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டு விட்டு சாகப் போகிறேனே’ என்று பெரியார் தனது இறுதி உரையில் சமூகக் கவலையோடு பேசிய இடத்தில் ‘சூத்திரர்களாக்கும்’ மனு தர்ம...

ட 170 கி.மீ மேல் பயணம்   ட 45 க்கு மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா  ட பெண் தோழர்கள் திரளாக பங்கேற்பு  மேட்டூர் பகுதியைக் குலுக்கிய வாகனப் பேரணி

ட 170 கி.மீ மேல் பயணம் ட 45 க்கு மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா ட பெண் தோழர்கள் திரளாக பங்கேற்பு மேட்டூர் பகுதியைக் குலுக்கிய வாகனப் பேரணி

தந்தை பெரியார்  144ஆவது பிறந்த நாள் விழா சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 17.09.2022 சனி காலை 10.00 மணிக்கு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜ் தலைமையில் தொடங்கியது. மேட்டூர் அருகே உள்ள கோனூர் சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு பெண் தோழர்கள் மாலை அணிவிக்க கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேன்மொழி உறுதிமொழி கூற அனைத்து தோழர்களும்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாலை அணிவிப்பு நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழக நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் அர்த்தனாரீஸ்வன் (எ) சின்னு, பி.என்.பட்டி பேரூராட்சி முன்னாள் சேர்மேன் பொன்னுசாமி மற்றும் தி.மு.க.வைச் சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். மாலை அணிவிக்கும் நிகழ்வில் சுசீந்திரன் – கிளாரா மேரியின் பெண் குழந்தைக்கு ஆதினி என்ற பெயர் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பேரணி மல்லிகுந்தம் பகுதிக்கு புறப்பட்டது.  மல்லிகுந்தம் பகுதியில்...

நன்கொடை

நன்கொடை

கழகத் தலைமை அலுவலகத்துக்கு இருக்கைகள் வாங்குவதற்கு பேராசிரியர் சரசுவதி ரூ.15,000/- நன்கொடையாக தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரனிடம் வழங்கினார். சென்னை மயிலாப்பூர் பகுதி கழகம் சார்பில் கழக ஏட்டுக்கு நன்கொடையாக ரூ.2000/-, சென்னை பொதுக் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கப்பட்டது. அயன்புரம் தினகரன்-ஜெயந்தி இணையரின் மகள்கள், பண்பாளன், உசீதன் சார்பில் கழக ஏட்டுக்கு ரூ.5000/- நன்கொடையாக வழங்கப்பட்டது. தி.மு.க. தலைமைக் கழகப் பொதுக் குழு உறுப்பினர் சைதை மா. அன்பரசன் கழக ஏட்டுக்கு நன்கொடையாக ரூ.1000/- வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 22092022 இதழ்

அம்மா உணவகத்துக்கு பெரியார் பெயர்:  சுப. வீரபாண்டியன் முதல்வருக்கு கோரிக்கை

அம்மா உணவகத்துக்கு பெரியார் பெயர்: சுப. வீரபாண்டியன் முதல்வருக்கு கோரிக்கை

பெரியார் உணவகம், சில நாள்களுக்கு முன்பு கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ள காரமடை என்னும் ஊரில், பெரியார் உணவகம் என்னும் பெயரில் ஓர் உணவகம் திறக்கப்பட்டது. உடனே இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்து ஈவெரா பெயரில் எல்லாம் கடை திறக்கக் கூடாது. உடனே அதனை நீக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்போது உணவகத்தின் உரிமையாளர் பிரபாகரன் அங்கு இல்லை. ஒரு பணியாளர் மட்டுமே இருந்திருக்கிறார். கடை உரிமையாளர் வந்ததும் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார். அவர்கள் கேட்கவில்லை. மேலும் 10 பேரை அழைத்துக் கொண்டு வந்து பெயர்ப் பலகையை உடைத்து இருக்கிறார்கள்.  கடையில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி, அந்தப் பணியாளரையும் 36 தையல்கள் போடும் அளவுக்கு அடித்துத் தாக்கி இருக்கிறார்கள். மிகச் சரியான விடையை அதன் உரிமையாளர் சொல்லி இருக்கிறார். நீங்கள் ஒரு பெயர்ப் பலகையை இடித்தால், அதே பெயரில் இன்னும்...

பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்துத்துவா போக்கு: கொளத்தூர் மணி கண்டனம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை:

பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்துத்துவா போக்கு: கொளத்தூர் மணி கண்டனம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை:

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொடர் இந்துத்துவப் போக்கினை இன்னொரு நிகழ்வு வழியாகவும் வெளிக்காட்டி இருப்பதை சுட்டிக்காட்டுவதும், அதற்கான எதிர்வினைகளைப் பற்றி சிந்திக்கக் கோருவதும் தான் இந்த அறிக்கையின் நோக்கமாகும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக 14.9.2022 அன்று ‘பெரியாரை வாசிப்போம்’ என்ற நிகழ்வு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். அந்த அறிக்கையில் அன்று அனைவரும் வாசிக்க வேண்டிய செய்திகளையும் கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கை தொடங்குகிற போது திருமூலரின் ஒரு பாடலோடு தொடங்குகிறது. அந்தப் பாடலில் உள்ள பொருளைச் சொல்லி இருந்தாலும் பெரியாரின் தத்துவ பார்வையும், அறிவுக்கான தேடலும், சமூக விடுதலைக்கான அணுகுமுறையும் போர்க்குணம் மிக்க அறிவுத் தேடல் ஆகும் – என்ற செய்திகளுடன் முடிகிறது  முதல் பத்தி. ஏதேனும் ஒரு மேற்கோள் காட்டியாக வேண்டும் என்று விரும்பி...

தலையங்கம் தென்காசி-தீண்டாமையும் ‘சூத்திர’ இழிவும்

தலையங்கம் தென்காசி-தீண்டாமையும் ‘சூத்திர’ இழிவும்

இந்து மதத்தை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா புண்படுத்தி விட்டதாக பா.ஜ.க. பார்ப்பனர்கள் – சங் பரிவாரங்கள் கடும் கண்டனங்களை எழுப்பு கிறார்கள். ‘சூத்திரர்’ என்று இந்து மதமான ‘வேதமதம்’ இழிவுபடுத்துவதை ஆ.இராசா சுட்டிக்காட்டிப் பேசியது தான் குற்றமாகிவிட்டது. சூத்திரர் இழிவை எங்கள் மதம் ஏற்காது என்று அறிவிக்க அவர்கள் தயாராக இல்லை. தமிழ்நாட்டுக் கிராமங்களில் தீண்டாமை – ஜாதி வெறியர்களால் இப்போதும் ‘மதத்தின் – கடவுளின்’ கொள்கையாகவே சட்டவிரோதமாகப் பின்பற்றப்படு கிறது. தென்காசி அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியல் இனக் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் விற்பதற்குக்கூட தடை செய்து ஊர்க் கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். தீண்டாமை வெறியை மறைப்பதற்குக்கூட தயாராக இல்லை. இறுமாப்புடன் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் இவர்கள் ஊருக்குள் நுழைய நீதிமன்றம் வழியாகத்...

எழுச்சியுடன் நடந்த சனாதன எதிர்ப்புக் கூட்டம்

எழுச்சியுடன் நடந்த சனாதன எதிர்ப்புக் கூட்டம்

“சனாதனத்தை வேரறுப்போம்” பொதுக் கூட்டம், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலை பி.எம்.தர்கா அருகில், 17.09.2022 அன்று  மாலை 6 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பெரியார் படிப்பகத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடை வரை பறை இசை முழங்க ஊர்வலமாக தோழர்கள் சென்றனர். தொடர்ந்து, அண்மையில் மறைந்த திமுக பகுதி முன்னாள் அவைத் தலைவர், பகுத்தறிவாளர் க.வே செழியனின் படம் பொதுக் கூட்ட மேடையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறக்கப்பட்டது. பின், முடிவெய்திய லெனின் சுப்பையா அவர்களின் வழித் தோன்றல்களான புதுவை ‘விடுதலைக் குரல்’ இசைக் குழுவின் கருத்தாழமிக்க சாதி இந்துத்துவ எதிர்ப்பு இசை  நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த லெனின் சுப்பையா இணையர் நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு ஆடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. 24 அர்ச்சகர்களும் பணி ஏற்று...

ஓராண்டு பணி முடித்த அர்ச்சகர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழாவில் பாராட்டு

ஓராண்டு பணி முடித்த அர்ச்சகர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழாவில் பாராட்டு

பயிற்சிக் காலத்தில் பயிற்சி அளிக்க வந்த ஆசிரியரை பார்ப்பனர்கள் தாக்கினர். பணி நியமனமாகி ஓராண்டுக்குப் பிறகும் பல கோயில்களில் பூஜை செய்ய பார்ப்பனர்கள் அனுமதிப்பது இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைக்கப்பட்ட வயது வரம்பை 45ஆக உயர்த்தி ஆணையிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆகமக் கோயில் ஒன்றில் 2000 ஆண்டு வரலாற்றில் பார்பபனரல்லாத அர்ச்சகர் ஒருவர் முதன்முதலாகக் கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றியுள்ளார். அர்ச்சகர் பயிற்சியின் போதும் பணி நியமனத்துக்குப் பிறகும் பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் அவமதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவதை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன் விவரித்தபோது கூட்டத்தினர் உணர்வு மயமாயினர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பார்ப்பனரல்லாத அனைத்து ‘இந்து’ அர்ச்சகர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று வா. ரங்கநாதன் நிகழ்த்திய உரை. பார்ப்பன அர்ச்சகர்கள், பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியைச்...

தலையங்கம் ‘பெரியார்’ மண்ணா?  ‘ஆன்மீக’ மண்ணா?

தலையங்கம் ‘பெரியார்’ மண்ணா? ‘ஆன்மீக’ மண்ணா?

பெரியார் தமிழ்நாட்டில் தோற்றுப் போய் விட்டார்; மக்கள் ஆன்மீகம் நோக்கி திரும்பி வருகிறார்கள் என்ற கருத்து தமிழ்நாட்டில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் பரப்பப்பட்டு வருகிறது. ‘பெரியார் மண்’, ‘ஆன்மீகம்’ என்பதற்கான மதிப்பீடுகளை எவ்வாறு வரையறுப்பது? இந்த கேள்விகளுக்கான விடையில் தான் தெளிவு பெற முடியும். ஆன்மீகம் என்பது ஒவ்வொரு மனிதரும் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் ஒரு சிந்தனைப் போக்கு.  அது வழிபாடுகளிலும் சடங்குகளிலும் இல்லை. ஆனால், ‘ஆன்மீகம்’ என்பதை பார்ப்பனியம் தனக்கான முகமூடிக் கவசமாக்கிக் கொண்டு தன்னை உயிர்ப்பிக்கத் துடிக்கிறது. வைதீக வேத மரபில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பார்ப்பனர்கள், யாகங்கள், சடங்குகளை, உயிர்ப் பலிகளைக் கேள்வி கேட்ட திராவிடர்களை அழித்தொழிக்க வரலாறு நெடுக சூழ்ச்சிகளை படுகொலைகளை நடத்தியதோடு அதற்கு அவதாரம், புராணம், இதிகாச கற்பனைகளை உருவாக்கி, வெகுமக்களை நம்ப வைத்தனர். உருவ வழிபாடு வழக்கம் இல்லாத அவர்கள் பிற்காலத்தில் கோயில் களையும் சிலை வழிபாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து...

30ரூ பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்பு

30ரூ பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திற்கு தற்போது பெண்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் பின்பற்றப்படும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. தற்போது அரசு தேர்வாணையம் பின்பற்றப்படும் நடைமுறை சட்டத்திற்கு புறம்பானது என்றும் அது சுட்டிக்காட்டியிருக்கிறது. இட ஒதுக்கீட்டில் இரண்டு வகை உண்டு. ஒன்று Horizontal Reservation என்று கூறப்படுகிறது. Oc, bc, mbc, sc, st இந்தப் பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீடு தர அடிப்படையிலான இட ஒதுக்கீடு இந்த அடிப்படையில் தான் முதலில் இட ஒதுக்கீடுகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதில், தமிழ்நாட்டில் அமலில் உள்ள பெண்களுக்கான 30ரூ கோட்டா நிரம்பி விட்டால் பிறகு Vertical Reservation என்று சொல்லப்படுகிற பெண்களுக்கான தனி இட ஒதுக்கீட்டில் பெண்களை நிரப்பக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. தற்போது தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் 30ரூ பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை பூர்த்தி செய்து விட்டு அதற்குப்...

‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் வெளி வந்த கட்டுரை ‘திராவிட மாடலே’ சம வளர்ச்சியை உருவாக்கும் சேலம் தரணிதரன்

‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் வெளி வந்த கட்டுரை ‘திராவிட மாடலே’ சம வளர்ச்சியை உருவாக்கும் சேலம் தரணிதரன்

‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது ஓர் அரசியல் தத்துவம். அது எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சமூகத் தலையீடுகள் (Targeted Social Interventions) என்றழைக்கப் படுபவை அக்குறிக்கோளுக்கு வழிகாட்டு வதாக அமைந்துள்ளன. சமமின்மை (Inequality) என்பது இந்தியா வின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று என்கிறார் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கட். அப்பிரச்சினையை எதிர் கொள்வதில் சமூகத் தலையீடுகளின் பங்கு முக்கியமானது. சமவாய்ப்புக்கான செயல்பாடுகள் தமிழ் நாட்டில் நீதிக்கட்சியின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டன. சென்னை மாநகராட்சியால் பள்ளி மாணவர் களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம் நவம்பர் 17, 1920இல் தொடங் கப்பட்டது. 1956ஆம் ஆண்டு இத்திட்டம் காமராஜரால் விரிவுபடுத்தப்பட்டது. அதனை அடுத்து, ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் நலிந்தோருக்கான நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. சம வாய்ப்புக்கான சமூக நீதித் திட்டங்கள் திராவிட மாடலின் முக்கிய அம்சமாகும். இத் திட்டங்கள் ஏழை, எளியவர்களின்...

திராவிட மாடல் பயிற்சி பாசறையில் கொளத்தூர் மணி தொடர் உரை

திராவிட மாடல் பயிற்சி பாசறையில் கொளத்தூர் மணி தொடர் உரை

திமுக இளைஞர் அணி சார்பில் “திராவிட மாடல் பயிற்சிப்பாசறை” தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பாசறையில் திராவிட இயக்க வரலாறு , மாநில சுயாட்சி ஆகிய இரண்டு தலைப்புகளில் திராவிட இயக்கத் தலைவர்கள், ஆய்வாளர்கள் உரையாற்றி வருகின்றனர். இதில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிட இயக்க வரலாறு, தலைப்பில் 12.08.2022 அன்று கோவையில் சூலூர், கிணத்துக் கடவு, 17.08.2022 அன்று திண்டிவனத்திலும், 03.09.2022 அன்று திருச்சி துறையூர், மணச்ச நல்லூரிலும் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.   பெரியார் முழக்கம் 08092022 இதழ்

சென்னையில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்: “சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்”

சென்னையில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்: “சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்”

“சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம், 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்ஸ் சாலை, பி.எம்.தர்கா அருகில் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு, இரண்யா தலைமை வகிக்கிறார். கிருத்திகா வரவேற்று பேச வுள்ளார். தோழர்கள் தேன்மொழி, இரம்யா, யாழினி முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத்தின்பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி ஆகியோர் உரையாற்றவுள்ளனர். புதுவை விடுதலை கலைக் குழுவினரின் எழுச்சி இசையோடு நிகழ்வு கள் நடக்கும். இறுதியாக இசை இனியாள் நன்றி கூறுவார்.   பெரியார் முழக்கம் 08092022 இதழ்

பெரியார் பிறந்த நாள் கூட்டம் : சென்னை கழகத்தின் பணி

பெரியார் பிறந்த நாள் கூட்டம் : சென்னை கழகத்தின் பணி

“சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக் கூட்டம், 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்ஸ் சாலை, பி.எம்.தர்கா அருகில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, ஆதம் மார்கெட், அய்ஸ் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வீதி வீதியாக கடை வசூல் சென்னை கழகத் தோழர் களால் தூண்டறிக்கை கொடுக்கப்பட்டு கடை வசூல் செய்யப்பட்டு வருகிறது. வணிகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். மேலும், கூட்டத்திற்கு திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை சுற்றிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுவரெழுத்து எழுதப்பட் டுள்ளது.  தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் சுவரெழுத்துப் பணிகளை மேற்கொண்டார். பெரியார் முழக்கம் 08092022 இதழ்