Category: பெரியார் முழக்கம்

வேதப் புரட்டைத் தகர்த்து திராவிட நாகரீகத்தை உறுதிப்படுத்திய ஜான் மார்ஷல்!

வேதப் புரட்டைத் தகர்த்து திராவிட நாகரீகத்தை உறுதிப்படுத்திய ஜான் மார்ஷல்!

19-ம் நூற்றாண்டில் உலகின் பழமையான நாகரீகமாக பார்க்கப்பட்டது எகிப்திய, சுமேரிய, மெசபத்தோமியா நாகரீகங்கள்தான். அதனைத் தொடர்ந்து மாயன் நாகரீகமும், சீன நாகரிகமும் மிகப் பழமையானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அதற்கு என தனி நாகரீகம் என்று எதுவும் இருந்ததாக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ஆரியர் வருகைக்கு பின்னர்தான் இந்திய நாகரீகம் வளர்ச்சி அடைந்தது என்றும், அதற்கு முன்னர் இங்கு இருந்த மக்கள் நாகரீக வளர்ச்சியின்றி நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பது தான் மேற்கத்திய ஆய்வாளர்களின் கருத்தாக இருந்தது. அவர்களை பொறுத்தவரை இந்தியாவின் முதல் நகரமே பாடலிபுத்திரா என்று அழைக்கப்பட்ட பாட்னாதான். ஆனால், இவைகள் எல்லாம் சிந்துநதிக் கரையில் ஒளிந்துகொண்டிருந்த மிகப்பெரும் பழங்கால நாகரீகத்தின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர்தான். அதாவது 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவை மட்டுமல்ல, உலகையே புரட்டிப்போட்ட ஒரு ஒரு ஆய்வு முடிவு ‘The Illustrated London News’ இதழின் முகப்புப் பக்கத்தில் வெளிவந்தது....

‘அய்யங்கார்’ புடிச்ச லட்டு

‘அய்யங்கார்’ புடிச்ச லட்டு

“பாவம்! பாவம்! அனாச்சாரம் பகவான் பிரசாதத்துலேயே மாமிசம் கலந்துடுச்சு! இது அடுக்குமா? எதுல கலப்படம்னு ஒரு விவஸ்தை வேண்டாமோ? இதுக்கெல்லாம் என்ன பரிகாரம் செய்யுறது? நேக்கு எதுவுமே பிடிக்கல” என்று பதறுகின்றன வைஷ்ணவ ஆன்மீக வட்டாரங்கள். “ஆபத்து வந்துடுச்சு, நாட்டுக்கே ஆபத்து, சங்கராச்சாரிகளே, வேதப் பண்டிதர்களே, முன்னாள், இன்னாள் ஏழுமலையான் அர்ச்சகர்களே! இதற்கு ஒரு பரிகாரம் காணுங்கள், ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்த போது தான் இந்த பாவம் நடந்திருக்கு. அவரை சிறையில் தள்ள ஆகமத்தில் ஏதேனும் விதி இருக்கிறதா? என்று பார்த்து சொல்லுங்க” என்கிறார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு. “ஆமாம்! அவா ஆட்சிக்காலத்திலே தான் இந்த அநியாயம் நடந்துடுச்சு, அப்பவே சொன்னேன்” என்கிறார் ரிட்டையர்டு தலைமை அர்ச்சகர். “ஓய் ஒன்றும் குடி முழுகிப் போயிடல நம்ம வைஷ்ணவ ஆகம ஆராய்ச்சிக்காரர்களெல்லாம் இதற்கு தீர்வு கண்டுட்டுடோம். அண்மையில் தான் சாமிக்கு மலையில் ‘பவித்ரோட்சவம்’ செய்து முடுச்சுருக்கோம். இது ஒன்றே போதும்....

தலையங்கம் – காவிக்கும்பலின் பிடியில் நீதித்துறை?

தலையங்கம் – காவிக்கும்பலின் பிடியில் நீதித்துறை?

உலகெங்கிலும் எல்லா மதங்களும் விழாக்களை கொண்டாட்டமாக மட்டுமே வைத்திருக்கின்றன. ஆனால் இங்கோ இந்து மதம் கலவரத்திற்காகவே ஒரு விழாவை வைத்துக்கொண்டிருக்கிறது, விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை கடப்பது சிறுபான்மை சமூகங்களுக்கு ஆழிப் பேரலையை கடப்பது போன்ற பேரச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. சென்னை திருவல்லிக்கேணியில் பெரிய மசூதி வழியாக விநாயகர் ஊர்வலம் செல்வோம் என்று இந்து முன்னணி முரண்டு பிடிப்பதும், காவல்துறை தடுத்து அவர்களை கைது செய்வதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் விநாயகர் ஊர்வலத்தின்போது சிறுபான்மை சமூகத்தினரின் கடைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டு, எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் மகோபா மாவட்டத்தில் இசுலாமியர்கள் அதிகமாக வாழும் கோத்வாலி பகுதி வழியாக இந்துத்துவா கும்பல் விநாயகர் சிலையை எடுத்துச் சென்று கலவரத்தை தூண்டி, கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம்...

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

சேலம் மேற்கு: சேலம் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பறை முழக்கத்தோடு தொடங்கிய இந்நிகழ்விற்கு மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக மேட்டூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி, அறிவுமதி, தேன்மொழி, காயத்ரி ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தோழர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா கொள்கை முழக்கங்களை எழுப்ப.. தொடர்ந்து தோழர்கள் கொள்கை முழக்கங்களை எழுப்பினர். அதன் பிறகு தோழர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணி சமத்துவபுரம் பெரியார் சிலையில் தொடங்கி நங்கவள்ளி, மேட்டூர் RS, மேட்டூர், கொளத்தூர், காவலாண்டியூரில் நிறைவுபெற்றது. நங்கவள்ளி...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு ஒன்றிய அரசு அலுவலகங்களில் வடநாட்டார் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு ஒன்றிய அரசு அலுவலகங்களில் வடநாட்டார் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் வட நாட்டு அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அதை எதிர்த்துப் போராட வேண்டுமென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியார் பிறந்தநாள் விழாவில் அறிவித்தார். அன்றே பெரியார் எச்சரித்தார்! பறிபோகும் மாநில உரிமைகள் என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பேசியக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பறிக்கப்படும் மாநில உரிமைகளைப் பட்டியலிட்டார். தன்னாட்சிக் குரல் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலேயே தொடங்கிவிட்டது. பெரியார் சுதந்திர நாளை துக்கநாள் – பார்ப்பனிய பனியாக்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்ட நாள் என்றார். தமிழ்நாடு விடுதலையே ஒரே தீர்வு என்றார். அண்ணா தென்னக மாநிலங்களின் கூட்டமைப்பைக் கொண்ட “திராவிட நாடு” கேட்டார். அரசியலுக்காக அதைக் கைவிட்ட போது கோரிக்கை கைவிடப்படுகிறது. ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே நீடிக்கிறது என்றார். இப்போது மாநில உரிமைகளுக்காகத்தான் நாம் போராட வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் அதிகாரிகளாக இந்தி பேசும்...

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

கோவை: மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து 12.9‌.2024 அன்று கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் வெங்கட் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், திமுக மாணவரணிப் பொறுப்பாளர் மதிவாணன், மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் மூர்த்தி, பெண்ணிய செயற்பாட்டாளர் லோகநாயகி, மாநகரத் தலைவர் நிர்மல்குமார், CPIML ரெட்ஸ்டார் இனியவன், புரட்சிகர இளைஞர் முன்னணிப் பொறுப்பாளர் மலரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் சூலூர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். முன்னதாக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில்...

பெரியாரின் உருக்கமான கட்டுரை (2) விலக நினைக்கிறேன்; விலகுவதால் என்ன இலாபம்?

பெரியாரின் உருக்கமான கட்டுரை (2) விலக நினைக்கிறேன்; விலகுவதால் என்ன இலாபம்?

“ஆரம்பத்திலிருந்து இதுவரை முன்னாற் குறிப்பிட்ட கொள்கைகளில், அது ஒரு சிறிதும் தவறாமல் ஏற்றுக்கொண்டபடி நடந்து வந்திருக்கிறது என்பதையும் மெய்ப்பித்து விட்டோம். ஆகவே, “குடிஅரசு” குறைந்தது ஒரு பதினாயிரம் பிரதிகளாவது அச்சிட்டு வெளியாக வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் இந்நாலாயிரத்து ஐந்நூறைக் கொண்டு நான் சந்தோஷமடைகிறேனே தவிர, ஒரு சிறிதும் அதிருப்தி அடையவில்லை. அன்றியும், எமது விருப்பத்தை நிறைவேற்ற அநேக நண்பர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். 250 சந்தாதாரர் களை ஏற்படுத்திக் கொடுத்தும் இனியும் இருநூற்றைம்பது சந்தாதாரர்களை ஒரு மாதத்தில் சேர்ப்பதாய் வாக்களித்த சிங்கப்பூர் நண்பர்களுக்கும், மற்றும் 250 சந்தாதாரர்களை எதிர்பார்க்கும் மலேயா நண்பர்களுக்கும் எனது மன மார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். தமிழ்நாட்டிலும், ஊர்கள் தோறும் “குடி அரசின்” வளர்ச்சியையும் பரவுதலையும் எம்மைவிட அதிக கவலை கொண்டு எதிர்பார்க்கும் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள், என்பதும் எனக்குத் தெரியும். அவர்கள் “குடி அரசு”க்காக உழைத்து வந்ததற்கும், சந்தாதாரர் களைச் சேர்த்துக் கொடுத்ததற்காகவும்...

திருச்சியில் குடும்ப விழா!

திருச்சியில் குடும்ப விழா!

திருச்சி: மணப்பாறையைச் சேர்ந்த கழகத் தோழர் பாலசுப்பிரமணியம் – சித்ரா இல்ல குடும்ப விழா 08.09.2024 அன்று அவரது நடுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது‌. இதில் பெரியாரியலாளர் சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் விழா மகிழ்வாக பாலசுப்பிரமணியம் – சித்ரா ஆகியோர், கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.6000/- வளர்ச்சி நிதியாக வழங்கினார்கள். இந்த விழாவில் கழகத் தோழர்கள் மனோகரன், டார்வின் தாசன், குமரேசன், தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19.09.2024 இதழ்

நல்லாசிரியர் விருது பெற்ற வேலூர் கழகத் தோழர்

நல்லாசிரியர் விருது பெற்ற வேலூர் கழகத் தோழர்

தோழர் ‘தெருவிளக்கு’ கோபிநாத் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவராக தற்போது பணியாற்றிவருகிறார். மேலும் வேலூர் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் இரவு நேரப் பள்ளிகளை நடத்தி அவை பரவுவதற்கான தொடக்க புள்ளியாகச் செயல்பட்டவர். தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்திலிருந்து வெளிவரும் பாடப் புத்தகங்களில் உள்ள ஓவியங்களை வரையும் பணியைச் செய்தவர். பள்ளி மாணவர்களிடையே நாடகங்களைப் பயிற்றுவிக்கும் பயிற்றுநர். கிராமியக் கலைகளில் வித்தகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 19.09.2024 இதழ்

வினா விடை

வினா விடை

கூட்டணி குறித்து மேலிடம் தான் முடிவு செய்யும். – தமிழிசை அதாவது, தமிழிசை – அண்ணாமலை கூட்டணியா மேடம்? ஆதி கேசவன் காப்பாற்றுவான் என்று உத்திரகாண்ட் சென்றோம். ஆனால் தமிழ்நாடு முதல்வரும், இராணுவமும் தான் எங்களைக் காப்பாற்றினார்கள். – நிலச்சரிவில் இருந்து மீண்ட பக்தர்கள் பேட்டி! ஆதி கேசவன் தான் முதல்வர் உருவில் வந்து காப்பாற்றினார் என்று சொல்லாதவரை மகிழ்ச்சி.. மகா விஷ்ணுவின் முன் ஜென்ம பேச்சு; சென்னை அதிகாரி தஞ்சைக்கு மாற்றம். – செய்தி மகா விஷ்ணு கூறிய பூர்வ ஜென்ம பாவம், அதிகாரியையும் பிடிச்சு ஆட்டுது போல்.. விநாயகர் பூஜை பண்டிகையல்ல; அது தேச பக்தியுடன் தொடர்பு கொண்டது. – – மோடி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தடியடி வாங்கியவன் விநாயகன் தான். கர்நாடக அரசு விநாயகனைக் கைது செய்த போது போலீஸ் வண்டியில் ஏற்றியது இந்துக்களைக் கொந்தளிக்கச் செய்தது. – மோடி அதே இந்துக்கள் தான் விநாயகனை...

தலையங்கம் – இது வேத காலம் அல்ல!

தலையங்கம் – இது வேத காலம் அல்ல!

தி.மு.க.வின் பவள விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பார்ப்பன ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அன்று இராஜாஜி இந்தியைத் திணித்தார். இப்போது இருமொழிக் கொள்கையை நீக்க வேண்டுமென்று என்று சொல்லுகிறார்கள். அதே ஜாதிதான் மறைமுகமாக பல காரியங்களைத் தொடர்ந்து செய்கிறது. அண்மையில் ஒன்றிய அரசு இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதுவதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் 17 பேர் இடம்பெற்றுள்ளனர். 3பேர் அரசு அதிகாரிகள், மற்ற 14 பேரும் (பிராமணர்கள்) அதில் ஒருவர் கனடா நாட்டில் வாழும் பிராமணச் சங்கத் தலைவர். வெளிநாட்டிலிருந்து ஆட்களைத் தேடிப்பிடித்திருக்கிறார்கள். ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகம் திராவிட நாகரீகம்தான். ஆனால் ஆரிய நாகரீகம் அதாவது சரஸ்வதி நாகரீகம் என்று அந்தக் கமிட்டி கூறுகிறது. அந்த இனத்தின் பகை இன்றும் தொடர்கிறது. அது தொடர்ந்தால் திமுக தன் வீரியத்தைக் காட்டும் என்று துரைமுருகன் பேசியுள்ளார். உளம் திறந்து உண்மைகளை வெளிப்படுத்திய அமைச்சர் துரைமுருகன் அவர்களைப் பாராட்ட...

சேலத்தில் பெரியார் முகமூடியுடன் தோழர்கள் அணிவகுப்பு தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடந்து முடிந்த பெரியார் பிறந்தநாள் விழா!

சேலத்தில் பெரியார் முகமூடியுடன் தோழர்கள் அணிவகுப்பு தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடந்து முடிந்த பெரியார் பிறந்தநாள் விழா!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா பழனியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பழனியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பழனி ஒன்றியத்துக்கு உட்பட்ட அ.கலையம்புத்தூர், அழகாபுரி, மானூர், புது ஆயக்குடி, பழைய ஆயக்குடி, பச்சளநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் பெயர் பலகையைக் கழகத் தலைவர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். கழகத் தலைவரை அப்பகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் மருதமூர்த்தி, மாவட்டச் செயலாளர் மாக்சிம் கார்க்கி, மாவட்ட அமைப்பாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாச்சிமுத்து, துணை அமைப்பாளர் சங்கர், பழனி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் பெரியார், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவர் கபாலி, ஒன்றிய அமைப்பாளர் சக்திவேல், ஆயக்குடி பேரூர் அமைப்பாளர் ஜெயசங்கர், தமிழ்நாடு...

காவல்துறையைக் கண்டித்துப் பொதுக்கூட்டம்

காவல்துறையைக் கண்டித்துப் பொதுக்கூட்டம்

மேட்டூர் நகரக் கழக சார்பில் மேட்டூர் சரகக் காவல்துறையினரின் போக்கைக் கண்டித்துக் கண்டனப் பொதுக்கூட்டம் 04.09.2024 அன்று மேட்டூர் சதுரங்காடியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு தலைமை வகித்தார். மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. இதில் சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இரா.திருமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மேட்டூர் சரகக் காவல் துறையின் அடாவடிப் போக்கினைக் கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் இருக்கும் காவல் நிலையங்களில் காவல்துறை அதிகாரிகளால் நடைபெறும் விதிமீறல்கள், லஞ்சம், போதை பொருள் விற்பனைக்கு ஆதரவு, எளிய மக்களிடம் மிரட்டி அடித்து பணம் பறித்தல் போன்ற விவரங்களைத் திரட்டி ஆதாரத்துடன் பொதுக்கூட்டத்தில் எடுத்துரைத்தார். மேலும் மேட்டூர் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் முதல் மேட்டூர் சரகச் சாதாரணக் காவலர் வரையில் உள்ளோர் சட்ட விரோதச் செயல்களை மீண்டும்...

தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித்...

“யாருடைய தயவுக்கோ, சுயநல வாழ்வுக்கோ ‘குடிஅரசு’ இல்லை” பெரியாரின் உருக்கமான கட்டுரை

“யாருடைய தயவுக்கோ, சுயநல வாழ்வுக்கோ ‘குடிஅரசு’ இல்லை” பெரியாரின் உருக்கமான கட்டுரை

சகோதர வாசகர்களே ! நமது “குடி அரசு” ஆரம்பமாகி இரண்டு வருஷம் முடிந்து மூன்றா வது வருஷத்தின் முதல் இதழ் இன்று வெளியாகிறது. “குடி அரசு” ஆரம்ப இதழில் “குடி அரசு” என்று ஒரு தலையங்கமும், ஆறு மாதம் கழிந்து “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது வருஷ ஆரம்பத்தில் “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் எழுதி இருக்கிறோம். இப்போது இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருஷ ஆரம்ப முதல் இதழிலும் அவ்வாறே “நமது பத்திரிகை” என்று தலையங்கமிட்டு ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம். நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கக் “குடி அரசு” என்னும் ஒரு பத்திரிகை யை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளையும் 1922ல் கோயமுத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம். அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச...

வினா விடை

வினா விடை

• போன ஜென்மப் பாவங்களுக்கு கடவுள் இந்த ஜென்மத்தில் தண்டனை தருகிறார். – மஹா விஷ்ணு அதனால் தான் மஹா விஷ்ணு இப்போது போலீஸ் விசாரணையில் இருக்கிறார். • என் கனவில் சித்தர்கள் சொன்னதைத்தான் நான் பேசினேன். – மகா விஷ்ணு வாக்குமூலம்! சித்தர்கள் கடவுள், ஆன்மாவை மறுப்பவர்கள் என்பது கூட இந்த அவதாரத்துக்குத் தெரியாது போலும். • நித்தியானந்தாவைப் போல பிரபலமாக ஆசைப்பட்டேன். – மஹா விஷ்ணு சித்தர்கள் தான் இந்த ஆலோசனையையும் கூறினார்களா? • ஆன்மீகவாதியைக் கைது செய்தது தவறு! – ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மோடிக்குச் சிபாரிசு செய்து பாரத ரத்னா வாங்கிக் கொடுத்துருங்க! பெரியார் முழக்கம் 12.09.2024 இதழ்

தலையங்கம் – எது ஆன்மீகம்?

தலையங்கம் – எது ஆன்மீகம்?

“பூர்வ ஜென்மப் பாவம்தான் இப்போது ஊனமாகப் பிறப்பதற்குக் காரணம். பாவங்களுக்கு நரகமும் புண்ணியங்களுக்கு மோட்சமும் தான் கிடைக்கும்” என்று பேசுவது தான் ஆன்மீகமா? பள்ளி மாணவர்களிடையே இந்தக் கருத்தை விதைக்கலாமா? சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் கல்வி அதிகாரிகளின் ஒப்புதலோடு மகா விஷ்ணு என்ற ஆன்மீகவாதி இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. செய்தி வெளிவந்தவுடனேயே தமிழ்நாட்டில் கட்சிகளைக் கடந்து வந்த எதிர்ப்புகளை வரவேற்க வேண்டும். இதனால் தான் தமிழ்நாட்டை “பெரியார் மண்” என்று கூறுகிறோம். இந்தப் பேட்டி ஆன்மீகம் தான் என்ற குரல் தமிழ்நாடு பாஜகவினரிடமிருந்து மட்டுமே கேட்கிறது. உடல் ஊனம் பூர்வ ஜென்மப் பாவமே என்ற வாதத்தை அப்படியே நீட்சியாக்கித் தீண்டாமை எனும் சமூக ஊனம். பூர்வ ஜென்மப் பயன் என்று பேசினாலும் வியப்பதற்கு இல்லை. எந்த முதலீடும் இல்லாமல் விரக்தி, குழப்பம் மற்றும் மூடநம்பிக்கைகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஆன்மீக வணிகம் பல கோடிகளில் புரள்கிறது. ஆன்மீகம் என்ற...

புதிய கல்விக்கொள்கை – பாஜக பதில் சொல்லுமா? – ர.பிரகாசு

புதிய கல்விக்கொள்கை – பாஜக பதில் சொல்லுமா? – ர.பிரகாசு

கல்வித் தரத்தில் இந்தியாவில் உயர்ந்து நிற்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுப்பதாக தி இந்து பத்திரிகையில் செப்டம்பர் 9ஆம் தேதி ஆதாரத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை. ஒன்றிய பாஜக அரசு தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிப்பது இப்படித்தானா? இதை முடிவு செய்ய நம் தேசம் மற்றும் நம் மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார். ஒன்றிய அரசு நியாயமாக நடந்துகொள்வதென்றால் நிலுவை நிதியை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானோ, முதலமைச்சரின் பதிவைப் பகிர்ந்து சில அபத்தமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்ப தென்றால், 1. தமிழ் உள்ளிட்ட தாய்மொழிக் கல்வியை எதிர்க்கிறீர்களா?...

சேலத்தில் தலைவர், சென்னையில் பொதுச்செயலாளர் பங்கேற்பு கல்வி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலத்தில் தலைவர், சென்னையில் பொதுச்செயலாளர் பங்கேற்பு கல்வி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித்...

ரூ.10,000 நன்கொடை

ரூ.10,000 நன்கொடை

திருப்பூர் மாநகரக் கழகச் செயலாளர் மாதவன், தனது புது இல்லத் திறப்பின் மகிழ்வாக புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.10,000/-யைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்

கோவை: பெரியார் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாட முடிவு

கோவை: பெரியார் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாட முடிவு

கோவை: கோவை மாவட்டக் கழக ஆலோசனைக் கூட்டம் 01.09.2024 அன்று கோவை தமிழ்ப்புலிகள் கட்சி அலுவலகத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைவர் பெரியாரின் 146ஆவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் காந்திபுரம் பெரியார் சிலை, நியூ சித்தாபுதூர், பீளமேடு, உப்பிலிபாளையம் காந்தி நகர், உக்கடம், கவுண்டம்பாளையம், சிவானந்தகாலனி உள்ளிட்ட பகுதிக் கழகங்களில் பெரியார் பிறந்தநாள் விழா – சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. கோவையின் புறநகர் பகுதிகளான அன்னூர், காரமடை, சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளிலும் பெரியார் பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதில் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் நிறைவு!

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் நிறைவு!

திண்டுக்கல்: திண்டுக்கல் – தேனி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 22.08.2024 அன்று பழனி அ.கலையம்புத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கழகப் பொருளாளர் சு.துரைசாமி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், கழகத் தலைமைக்குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், இரா.உமாபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கடந்த ஒரு ஆண்டாகத் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும், இணையதள செயல்பாடுகளில் கழகத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றுப் பேசினார். கூட்டத்தின் முடிவில் திண்டுக்கல் – தேனி மாவட்டப் பொறுப்பாளர்களைக் கழகத் தலைவர் அறிவித்தார். அவை பின்வருமாறு:- திண்டுக்கல் மாவட்டத் தலைவராக மருதமூர்த்தி, மாவட்டச் செயலாளராக மாக்சிம் கார்க்கி, மாவட்ட அமைப்பாளர் மற்றும் இணையதளப் பொறுப்பாளராக ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நாச்சிமுத்து, தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளராக ஆயுதன், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவராக கபாலி, ஒன்றியச் செயலாளராக ஜோசப், ஒன்றிய அமைப்பாளராக...

காவிமயத்தில் கரையும் கல்வித்துறை! – ர.பிரகாசு

காவிமயத்தில் கரையும் கல்வித்துறை! – ர.பிரகாசு

ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் கட்டாயக் கல்வி (சர்வ சிக்சா அபியான்) சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இத்திட்டத்திற்கான நிதியில் 60 விழுக்காடு ஒன்றிய அரசும், 40 விழுக்காடு மாநில அரசும் பங்களிப்புச் செய்கின்றன. அதன்படி பார்த்தால் 2024-25 கல்வி ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு 4 தவணைகளில் ரூ.2,152 கோடி வழங்க வேண்டும். கடந்த ஜூன் மாதமே ஒன்றிய அரசு முதல் தவணையாக ரூ.573 கோடியை வழங்கியிருக்க வேண்டும். இதை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு பல முறை கடிதம் எழுதியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை, என்றும் கடந்த சில மாதங்களாக மாநில அரசின் முழுமையான நிதியில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டை வைத்துள்ளார். கைவிரிக்கும் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி...

சேலத்தில் இளைஞர் – மகளிர் – மாணவர் அணிகள்  கலந்துரையாடல்

சேலத்தில் இளைஞர் – மகளிர் – மாணவர் அணிகள் கலந்துரையாடல்

சேலம் : சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – மகளிர் அணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 01.09.2024 இளம்பிள்ளை நேரு,வேடியப்பன் இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. சேலம் (கி) மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலை வகித்தார். கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் (கி) மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் தமிழரசன் ஆகியோர் இளைஞர்கள் மத்தியில் தங்களது கள அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேலும் சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – மகளிர் அணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகக்த்திற்குப் புதியப் பொறுப்பாளர்களை நியமித்தார். அவை பின்வருமாறு:- மாவட்ட இளைஞர் அணித் தலைவராக ஏற்காடு தேவபிரகாஷ்,...

வினா விடை

வினா விடை

• பசு மாட்டைக் கடத்தியதாகக் கூறி அரியானாவில் பள்ளி மாணவனை பசுப் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். – செய்தி பேசாம, ஒவ்வொரு பசுவுக்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போட்ருங்க, அப்போ தான் மனிதர்களாவது உயிர் பிழைக்க முடியும். • ஒரே இடத்தில் விநாயகன் சிலை அமைப்பதில் இந்து அமைப்புகளுக்குள் மோதல். – செய்தி விநாயகா..! இந்துக்களையே இப்படி மோதவிடுகிறாயே, இது நியாயம் தானா? • ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் தயாரிக்கும் உரிமை தென்கலை பிராமணர்களிடமே இருக்கலாம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு. அதேப்போல் துப்பரவு பணியையும் தென்கலையிடமே குடுத்துருங்க, வடகலை எதிர்ப்பும் இருக்காது. • தமிழ்நாட்டு பள்ளிப் பாடத்திட்டத்தின் தரம் குறைந்துவிட்டது. – ஆளுநர் ரவி சரி, தரம்தாழ்ந்து கிடக்கும் ஆளுநர் பதவியை என்ன செய்வது? பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்

தலையங்கம்  – பெரியார் மானுடத்தின் திறவுகோல்

தலையங்கம் – பெரியார் மானுடத்தின் திறவுகோல்

பெரியார் தொடங்கிய குடி அரசுக்கு வயது 100; 1925இல் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிக்கை பார்ப்பனரல்லாத சமூகத்தின் புரட்சிகர மாற்றத்திற்கு வித்திட்டது என்பதை மறுத்துவிட முடியாது. பெரியார் முதல் சுயமரியாதை மாநாட்டை 1929இல் நடத்தினார். அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே குடிஅரசு தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. இது மானத்திற்கான மீட்புக்களம். பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்ற போராட்டக் களத்தை முன்னெடுத்து அதை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருமை சுயமரியாதை இயக்கத்திற்கும் குடிஅரசு ஏட்டிற்கும் உண்டு. பார்ப்பன ஆதிக்கம் முழு வீச்சில் இருந்த காலகட்டம் அது. அப்போது பார்ப்பனரல்லாத மக்களின் மானத்தையும், அறிவையும் மீட்பதற்காகப் பெரியார் களம் இறங்கினார். மானம் பெறுவதற்கு சூத்திர இழிவிலிருந்து விடுதலைக் கோரினார். அந்த இழிவைக் கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், பழக்கவழக்கம் என்ற நம்பிக்கைகளின் வழியாகத் திணிக்கப்பட்டதை உறுதியோடும் அச்சமின்றியும் எதிர்த்து நின்றார். அறிவுக்கான மீட்புக் களத்தில் அவர் முன்வைத்த முழக்கம் வகுப்புரிமை எனும் இட ஒதுக்கீடு. நீதிக்கட்சி...

தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பாதுகாத்திட மாவட்டத் தலைநகரங்களில் கழகம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பாதுகாத்திட மாவட்டத் தலைநகரங்களில் கழகம் ஆர்ப்பாட்டம்

மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! எனும் முழக்கத்தோடு தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை! அன்பு தோழர்களுக்கு, வணக்கம். அண்மைக் காலமாக ஒன்றிய அரசும் ஒன்றிய அரசின் முகவராக தமிழ்நாட்டில் செயல்படும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். ரவியும் கல்வியில் முன்னேறி உள்ள தமிழ்நாட்டின் கல்வி நிலையைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒன்றிய அரசின் கல்வித் துறை இந்த ஆண்டு கல்வி நிலையங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் சிறந்த பல்கலைக் கழகங்கள் 100இல் 22 தமிழ்நாட்டில் இருப்பதையும், சிறந்த கல்லூரிகள் 100இல் 37உம், சிறந்த பொதுப் பல்கலைக் கழகங்கள் 50இல் 10உம், சிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் 13உம், சிறந்த ஆய்வு நிறுவனங்கள் 50இல் 9உம் தமிழ்நாட்டில் இருப்பதை...

ஆதிதிராவிடர் நல ஆணையத்திடம் நேரில் வழங்கப்பட்டது! தமிழ்நாட்டுக் கிராமங்களில் நிலவும் தீண்டாமைகள் பட்டியல் தயாரித்தது கழகம்

ஆதிதிராவிடர் நல ஆணையத்திடம் நேரில் வழங்கப்பட்டது! தமிழ்நாட்டுக் கிராமங்களில் நிலவும் தீண்டாமைகள் பட்டியல் தயாரித்தது கழகம்

சேலத்தில் 2023, ஏப்ரல் 29,30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டில், வைக்கம் நூற்றாண்டை முன்னிட்டு ஜாதி – தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்கட்டமாகத் தேநீர்க் கடைகளில் நிலவும் இரட்டைக்குவளை முறை, வைக்கத்தைப் போலவே தாழ்த்தப்பட்ட மக்கள் பொது வீதிகளில் நடமாடும் உரிமைகளைத் தடுத்தல், கோயில் நுழைவு அனுமதி மறுப்பு என்று ஜாதி தீண்டாமைகள் நிகழும் கிராமங்களைக் கண்டறிந்து, அதன் பட்டியலைக் கழகத் தலைமைக்குச் செயல்வீரர்கள் அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் திண்டுக்கல், கோவை, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, திருப்பூர், ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் ஜாதித் தீண்டாமைக் கணக்கெடுப்புப் பணிகளைக் கழகச் செயல்வீரர்கள் மேற்கொண்டனர். கணக்கெடுப்புப் பணிகளுக்கு என்று பிரத்யேகமாக படிவங்களைத் தயாரித்து களத்தில் இறங்கினர் கழகச் செயல்வீரர்கள். தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகக் கிராமம், கிராமமாகச் சென்றும், பல்வேறு ஊர்களில் தங்கியும் இந்தக்...

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட திவிக கலந்துரையாடல் கூட்டம் பள்ளிபாளையம் ஐந்து பனையில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட சமுதாயக் கூடத்தில் 14.08.2024 மாலை 05.00 மணி அளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலந்துரையாடல் கூட்டத்தில் நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.சரவணன், மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, ராசிபுரம் நகரச் செயலாளர் பிடல் சேகுவாரா, காளிப்பட்டி பெரியண்ணன், திருச்செங்கோடு பொறுப்பாளர் பூபதி, கீற்று இணையதளப் பொறுப்பாளர் கார்த்தி, குமாரபாளையம் நகரத் தலைவர் மீ.தா.தண்டபாணி, செயலாளர் செ வடிவேல், தோழர்கள் மோகன், சந்திரா, மணியம்மை, மாதேஸ்வரன், ஆ பிரகாஷ், நாகராஜ், கடச்சநல்லூர் அமைப்பாளர் செல்வகுமார் ஐந்து பனை வாசகர் வட்ட சக்திவேல் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைக் பகிர்ந்து கொண்டனர். ஜாதி ஆணவப் படுகொலைகளைத்...

‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு

‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு

நாடு முழுக்க இந்துத்துவா அரசியலை இந்துக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதன்பேரில் அவர்களை ஒன்று திரட்டவும் அறிவிக்கப்படாத ரத யாத்திரையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் இதன் வரலாறு பால கங்காதர திலகருடனும், கடைசி இந்து அரசன் சிவாஜியுடனும் தொடங்குகிறது. புராண புரட்டு ஒருமுறை சிவன் வெளியே சென்றிருந்த நேரம் பார்வதி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல் காக்க ஒருவரும் இல்லை என்பதால் தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிர் ஊட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளையாகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது எனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி நீராடச் சென்றுவிட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவனை உள்ளே செல்ல பிள்ளையார் அனுமதிக்கவில்லை. இதனால் கோபம்கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். நீராடி முடிந்ததும் பார்வதி வெளியே வந்து பிள்ளையார் தலை இல்லாமல்...

சென்னையில் மாணவர், இளைஞர் அணிகள் ஆலோசனை

சென்னையில் மாணவர், இளைஞர் அணிகள் ஆலோசனை

சென்னை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 18.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி மாணவி தோழி தலைமைத் தாங்கினார். தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, மாணவர்கள் முன்வைத்தக் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். கூட்டத்தில் பங்கேற்ற ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் எதிர்வரும் காலங்களில் மாணவர் நலன் சார்ந்தப் போராட்டங்களை முன்னெடுப்பது, தோழமை மாணவர் இயக்கங்களுடன் இணைந்துப் பணியாற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. நிறைவாகத் திருப்பூர் பிரசாந்த் நன்றி கூறினார். சென்னை மாவட்டக் கழக இளைஞரணியில் இளைய தலைமுறையினர் சந்திப்பு நிகழ்வு 25.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமையகத்தில் இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாசு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி பங்கேற்றுச் சிறப்பித்தார். மேலும் இட ஒதுக்கீடு – பெரியார் – திராவிடம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து...

நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம் கருத்தரங்கம்

நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம் கருத்தரங்கம்

திருப்பூர்: திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மகன் பிறந்தநாள் விழா மற்றும் ‘நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம்’ கருத்தரங்கம் 10.08.2024 அன்று பொங்குபாளையம் கூத்தநாயகி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மாநகர அமைப்பாளர் முத்து வரவேற்புரையாற்றினார். திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கோவை மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் வீ.சிவகாமி, பல்லடம் தேன்மொழி, சூலூர் தமிழ்ச்செல்வி, கோவை மாநகரச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், கழகப் பொருளாளர் சு.துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக “நூற்றாண்டு கண்ட திராவிடர் இயக்கம்” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிகழ்வின் மகிழ்வாகப் புரட்சி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ 2000/- யைப் பெரியார் விழுது...

பேச்சுப்போட்டியில் திருப்பூர் மகிழவன் இரண்டாம் இடம்

பேச்சுப்போட்டியில் திருப்பூர் மகிழவன் இரண்டாம் இடம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறியாளர் அணி நடத்திய மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் இரண்டாம் இடத்தைப் பிடித்து ரூ.3,00,000/- பரிசுத் தொகையை வென்றார். பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததையடுத்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும் குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத்திற்கு ரூ.1000/- மற்றும் பெரியார் முழக்கத்திற்கு ரூ.5000/- நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்

கோவையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கதே” பரப்புரைக் கூட்டம்

கோவையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கதே” பரப்புரைக் கூட்டம்

கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் “அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கதே” பரப்புரை விளக்கக் கூட்டம் 28.08.2024 அன்று உக்கடம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகரச் செயலாளர் வெங்கட் தலைமை தாங்கினார். சூலூர் தமிழ்ச்செல்வி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற தோழமை இயக்கத் தலைவர்களான திராவிடத் தமிழர் கட்சி வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார், திமுக வழக்கறிஞரணி அன்புச் செழியன், தமிழ்ப்புலிகள் கட்சி தம்பி செந்தில், வழக்கறிஞர் சரவணன், கழகக் கோவை மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், கழகக் கோவை மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். நிறைவாகக் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. பெரியார் முழக்கம் 29.08.2024 இதழ்

தலையங்கம் – மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டம் வருமா?

தலையங்கம் – மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டம் வருமா?

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ‘தேசிய அறிவியல் மனப்பான்மை’ தினக் கருத்தரங்கம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்றுள்ளது. எழுத்தாளர் எஸ்.மோசஸ் பிரபு எழுதிய ‘நரேந்திர தபோல்கர் – மூடநம்பிக்கை ஒழிப்புபோராளி’, ஆயிஷா இரா. நடராசன் எழுதிய ‘அறிவியலின் குழந்தைகள்’ ஆகிய 2 நூல்களை வெளியிட்டுப் பேசிய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, “பள்ளி பாடப் புத்தகங்களில் இருக்கும் அறிவியல் பாடத்தை மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க எதுவுமே செய்வதில்லை. ஆசிரியர்கள் அறிவியல் மனப்பான்மை அற்றவர்களாக இருப்பதே இதற்குக் காரணம். மேம்பட்ட சமுதாயம் அமைய வேண்டுமானால், முதலில் ஆசிரியர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்துள்ளார். பள்ளிகளில் நடைபெறும் ஜாதிய மோதல்களைத் தடுக்க சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையை அரசிடம் ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதுடன், ஆசிரியர்கள் மத்தியிலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான,...

விநாயகர் சதுர்த்தி அத்துமீறலைத் தடுக்க வேண்டும்! கழகம் சார்பில் காவல்துறைக்குக் கோரிக்கை!

விநாயகர் சதுர்த்தி அத்துமீறலைத் தடுக்க வேண்டும்! கழகம் சார்பில் காவல்துறைக்குக் கோரிக்கை!

விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களைத் தடுக்கக் கோரி கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனு அளிக்கப்பட்டுவருகிறது. சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலிப் பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்டு அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 20.08.2024 அன்று சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் சென்னை மாவட்டக் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளைத் துளியும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும்...

கவனம் ஈர்க்கும் கழகம்!

கவனம் ஈர்க்கும் கழகம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஓராண்டுக்கும் மேல் திராவிடர் விடுதலைக் கழகம் மாநிலம் தழுவிய அளவில் தீவிர பரப்புரை மேற்கொண்டு, பாஜக ஆட்சியின் பேராபத்துகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தது. அரசியல் கட்சிகளுக்கு முன்பாகவே பரப்புரைக் களத்தில் முதலில் இறங்கிய இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம். எது “சனாதனம்? எது திராவிடம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுக்க சுமார் ஆயிரம் தெருமுனைக் கூட்டங்களும், தேர்தல் நெருங்கிய சமயத்தில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் ஜனநாயகம் காப்போம்” என்ற தலைப்பில் சுமார் 300 தெருமுனைக் கூட்டங்களும் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட மாடல் என்றால் என்ன என்பதை விளக்கி தெருமுனைக் கூட்டங்களும், அதனையொட்டிய மண்டல மாநாடுகளும் நடத்தப்பட்டன. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக கடந்த 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கழகம் முன்னெடுக்கும் இந்தப் பணிகளுக்கு களத்தில் இருந்து கிடைத்த பேராதரவுக்கு அடையாளமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்...

பழனி கோயிலைப் பார்ப்பனர்கள் அபகரித்தது எப்படி? முருகன் மாநாட்டில் 3,000 நூல்கள் வழங்கி கழகம் பரப்புரை

பழனி கோயிலைப் பார்ப்பனர்கள் அபகரித்தது எப்படி? முருகன் மாநாட்டில் 3,000 நூல்கள் வழங்கி கழகம் பரப்புரை

தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அம்மாநாட்டில் கழக இணையதளப் பிரிவு வெளியிட்ட “பழனி கோயில் வழிபாட்டு உரிமையைப் பறித்தப் பார்ப்பனர்கள்” என்ற நூல் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என்று திண்டுக்கல் மாவட்டக் கழகம் அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் மருதமூர்த்தி பழனி காவல்துறையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டார். கைதுக்கு அஞ்சாத கழக செயல்வீரர்கள், ஏற்கனவே திட்டமிட்டபடி காலை 7 மணி முதலே பழனி ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நூல்களை இலவசமாக வழங்கினர். மாநாடு நடைபெற்ற பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் நூல்களை விநியோகம் செய்வதற்காகச் சென்ற திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் மாக்சிம் கார்க்கி, மாவட்ட அமைப்பாளர் ராஜா ஆகிய...

தோழர் ஆனைமுத்து நூற்றாண்டு வாசகர் வட்டம் – பேராசிரியர் நாகநாதன் பங்கேற்பு

தோழர் ஆனைமுத்து நூற்றாண்டு வாசகர் வட்டம் – பேராசிரியர் நாகநாதன் பங்கேற்பு

சென்னை: பெரியாரியல் பேரறிஞர் தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு 23ஆவது நிமிர்வோம் வாசகர் வட்ட சந்திப்பு 17.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாகத் தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் படத்தைத் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்துவைத்தார். கூட்டத்திற்கு திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் இராஜேசு தலைமைத் தாங்கினார். திருப்பூர் பிரசாந்த் வரவேற்புரையாற்றினார். அழகிரி முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து மேனாள் திட்டக்குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன், வகுப்புரிமைப் போரில் தோழர் ஆனைமுத்து என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், ஜாதிவாரி கணக்கெடுப்பு; தேவையும் திசைத்திருப்பலும் என்ற தலைப்பிலும், தோழர் திருப்பூர் மகிழவன், உள் ஒதுக்கீடு; அவசியமும் அரசியலும் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். நிறைவாகத் தோழர் எழிலரசன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டத்தை நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாசு ஒருங்கிணைத்தார். இதில் கழகப்...

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்; கழகத் தலைவர் பங்கேற்று சிறப்புரை

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்; கழகத் தலைவர் பங்கேற்று சிறப்புரை

ஈரோடு தெற்கு: திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு தெற்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 14.08.2024 காலை 11 மணியளவில் சூரம்பட்டி நால்ரோடு அருகில் உள்ள மதிமுக அலுவல அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்வராசு, மாவட்டச் செயலாளர் எழிலன், அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, அறிவியல் மன்றப் பொறுப்பாளர் சிவக்குமார், மணிமேகலை, ஜோதி, திருமுருகன், கௌதம், கோபிநாத், விக்னேஸ், இரவி, அழகு, குமார், பிரபு, முருகேசன், ரங்கம்பாளையம் பிரபு, முகுந்தன், அய்யப்பன், நல்லதம்பி, சுரேஷ், விஜய்ரத்தினம், பழனிசாமி, சத்திய மூர்த்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். இதில் மாணவர்களிடையே நிலவிவரும் போதைப் பழக்கத்திற்கு எதிரான பரப்புரையை மேற்கொள்வதெனவும், ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்டவைகளை இயற்றக்கோரி அரசை வலியுறுத்துவதோடு...

கடவுள் உரிமைகளைப் பறிக்கும் AI தொழில்நுட்பம் – கோ.ஒளிவண்ணன்

கடவுள் உரிமைகளைப் பறிக்கும் AI தொழில்நுட்பம் – கோ.ஒளிவண்ணன்

* மனித குல வரலாற்றில் மாற்றங்கள் இன்றியமையாதவை. மனிதர்களின் கண்டுபிடிப்புகளின் வரிசையில் இன்னுமொரு சிகரம் செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் வருகை ஒருவித பதற்றத்தையும் அச்சத்தையும் அளிக்கிறது. மனிதர்கள் இதுவரை கண்டுபிடித்தவை, அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஒரு துப்பாக்கியோ, அணுகுண்டோ அதற்குரிய விசையை இயக்கினால் மட்டுமே இயங்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவு, மனிதர்களிடமிருந்து எவ்வளவு விரைவாக, ஆழமாகக் கற்றுக் கொள்ள முடியுமோ கற்றுக் கொண்டு, பன்மடங்கு ஆற்றலுடன் சுயமாக இயங்கக் கூடிய வல்லமையைக் கொண்டுள்ளது. • மாபெரும் மாற்றங்கள், எப்போதாவது ஏற்படுவதைத்தான் உலகம் கண்டுள்ளது. இப்போது ஒரு சில மணி நேரத்திலேயே புதிய கண்டுபிடிப்புகள் ‘பிரேக்கிங் நியூஸ்’ போல வெளிப்படுவதைக் காண்கிறோம். இனி வரும் உலகம் எப்படி இருக்கும் என்பதுதான் உலகெங்கும் எழுந்து கேள்வி. அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கண்டறிவதே நம் முன்னுள்ள சவால். * மரபியலில் நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை செயற்கை நுண்ணறிவு உண்டாக்கும் என...

அமைச்சர் மனோ தங்கராஜுடன் சந்திப்பு

அமைச்சர் மனோ தங்கராஜுடன் சந்திப்பு

சென்னை: 18.08.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்களை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் சந்தித்து எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் தேதி இராயப்பேட்டையில் நடைபெறவுள்ள பெரியார் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் கலந்து அழைப்பு விடுத்தோம். அவரும் நமது அழைப்பை ஏற்றுப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக ஒப்புதல் அளித்தார். சந்திப்பில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் சூர்யா, அஜித் மற்றும் அன்னூர் விஷ்ணு உடனிருந்தனர். பெரியார் முழக்கம் 22.08.2024 இதழ்

கலைஞர் நூல்கள் நாட்டுடமை

கலைஞர் நூல்கள் நாட்டுடமை

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை யாக்கப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் தனது 15 வயது முதல் 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகளை எழுதியுள்ளார். அதனை நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கலைஞர் கருணாநிதியின் நூல்களை படிக்க வாய்ப்பாக அமையும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் தனியொருவரால் வாழ்நாள் காலத்தில் இத்தனை படைப்புகளை வழங்க இயலுமா என வியப்புறும் வண்ணம் சாதனை 108 தமிழறிஞர்கள் நூல்களை நாட்டுடைமையாக்கி மரபுரிமையருக்கு ரூ.7.76 கோடி தந்தவர் கலைஞர் என்றும் கூறியிருக்கிறார். பெரியார் முழக்கம் 22.08.2024 இதழ்

வினா விடை – ஆளுநர் ஸ்பெஷல்

வினா விடை – ஆளுநர் ஸ்பெஷல்

1. ஞானத்தைக் கற்றுத்தரும் மொழி சமஸ்கிருதம் – ஆளுநர் ரவி ரவி சார். அப்போ நீங்கதான் கட்டாயம் சமஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும். 2. சமஸ்கிருத மொழியைக் கற்றுத்தருகிறவர்கள் நாட்டுக்கு சிறந்த சேவையை ஆற்றி வருகின்றனர். – ஆளுநர் ரவி அப்படியா! கட்டடம் கட்டுகிறார்களா? நெசவு செய்கிறார்களா? தெருவைக் கூட்டுகிறார்களா? 3. ரிஷிகள் தான் நமக்கு வெளிச்சம், ஒளி என்றப் பரிசைத் தந்தார்கள் – ஆளுநர் ரவி அப்போ மின்சாரத்தைக் கண்டுபிடித்தது எடிசன் இல்லை ரிஷிகள் தான் என்று சொல்றீங்க! 4. நாம் அனைவரும் பாரத மண்ணில் ஒரே குடும்பமாகத்தான் வாழ்கிறோம் – ஆளுநர் ரவி ஆனால் திராவிட மாடல் ஆட்சி மட்டும் எங்கக் குடும்பம் இல்ல. அதை ஒழித்துக் கட்டனும். 5. பாரதத்தின் தாயாக சமஸ்கிருதம் விளங்குகிறது – ஆளுநர் ரவி ஆனால் அந்த தாய், தாய் மொழியாக எந்த மாநிலத்திலும் இருக்க மாட்டார். 6. இந்தியத் தத்துவம், கலாச்சாரம் இவை...

முருகனை சு-பிராமணனிடம் இருந்து உலக மாநாடு மீட்டெடுக்குமா? – விடுதலை இராசேந்திரன்

முருகனை சு-பிராமணனிடம் இருந்து உலக மாநாடு மீட்டெடுக்குமா? – விடுதலை இராசேந்திரன்

தமிழ்நாடு முதல்வர் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி தமிழகத்தின் தொழில் கட்டமைப்புகளை வளர்க்கத் துடிக்கிறார். ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முருகனுக்கு ‘உலக மாநாடு’ நடத்த முனைப்புக் காட்டுகிறார். கோயில் நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய அறநிலையத்துறை முருக பக்தியை மக்களிடம் பரப்புவதில் ஏன் இப்படி முனைப்புக் காட்ட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ‘திராவிட மாடல்’ ஆட்சி இந்து விரோதமானது என்ற பார்ப்பனியப் பரப்புரைகளை முறியடித்து அமைச்சர் சேகர்பாபு நடத்திவரும் கோயில் திருப்பணிகளே இதற்கு சரியான பதிலாக இருக்கும் போது இப்போது ஏன் இந்த மாநாடு? என்ற கேள்வியுடன் இந்த மாநாட்டை பரிசீலிப்போம். தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகன் ஆகமப் பிடிக்குள் தான் சிக்கியிருக்கிறான். அன்றாடம் வேத மந்திரங்கள், அபிஷேகம், அர்ச்சனை, கும்பாபிஷேகம் என்று வேத சடங்குகள் நடத்தப்படுகின்றன. ஆகமப் பிடிக்குள் இருந்து ஆராய்ச்சிக் கருத்தரங்கிற்குள் முருகன் கொண்டுவரப்பட்டிருப்பதைக்கூட ஒரு வகையில் ஆகம எதிர்ப்பு தான் என்று...

கலைஞர் நினைவுநாளில் மரியாதை

கலைஞர் நினைவுநாளில் மரியாதை

சென்னை : மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில் இராயப்பேட்டை படிப்பகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. இதில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, தென் சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அ.வ.வேலு உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கோவை: கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் அண்ணா சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகரத் தலைவர் நிர்மல் குமார், மாநகரச் செயலாளர் வெங்கடேசன், பீளமேடு பகுதி அமைப்பாளர் இராஜாமணி, மாதவன், சதீஷ் கல்லூரி மாணவர் ஏற்காடு கோகுல் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 15.08.2024 இதழ்

ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று தர்மபுரி B.அக்ரகாரத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழகத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது. நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தர்மபுரி மாவட்டத் தலைவராக வெ.வேணுகோபால், தர்மபுரி மாவட்டச் செயலாளராக கு.நாகராஜ், மாவட்ட அமைப்பாளராக மா.பரமசிவம், பென்னாகரம் ஒன்றிய அமைப்பாளராக இரா.சரவணன் (B.அக்ரஹாரம்), காரிமங்கலம் ஒன்றிய அமைப்பாளராக கோ.செந்தில்குமார், நல்லம்பள்ளி ஒன்றிய அமைப்பாளராக மு.இராமதாஸ், தர்மபுரி ஒன்றிய அமைப்பாளராக பி.முத்துலட்சுமி, அரூர் ஒன்றிய அமைப்பாளராக பெருமாள், ஏரியூர் ஒன்றிய அமைப்பாளராக மா.அசோக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளராக சா.வையாபுரி ஆகியோரை நியமனம் செய்தார். சேலம் கிழக்கு: சேலம் கிழக்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று மாலை 6 மணியளவில் கருப்பூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில்...

மோடியின் போலித் தமிழ்ப்பாசம்; அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ.!

மோடியின் போலித் தமிழ்ப்பாசம்; அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ.!

ஒன்றிய பாஜ அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.. ரயில்வே நிதி, வெள்ள நிவாரண நிதி, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தேவையான நிதிகளைகூட வழங்காமல் ஏதோ தமிழ்நாட்டினர் அந்நியர்கள் என்ற அளவில்தான் ஒன்றிய அரசு வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டு மக்கள் பாஜவைப் புறந்தள்ளி வைத்திருப்பதால்தான். எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலமாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யக்கூடாது என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து தமிழர்கள் மீது பாசம் கொண்டவர்போல பிரதமர் காட்டிக்கொண்டார். ஆனால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்காததால் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் திட்டப்பணிகளுக்கு ஒதுக்கிய நிதியைக்கூட குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி வந்து ஒரு திருக்குறளைச் சொல்லியும், உலகின் மூத்த மொழி தமிழ் என்று பெருமை...

அடக்குமுறைகளைச் சந்தித்த “குடிஅரசு”

அடக்குமுறைகளைச் சந்தித்த “குடிஅரசு”

1922 ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டபோது, அவரும் அவருடன் சிறையில் உடனிருந்த ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கறிஞர் தங்கப்பெருமாள் பிள்ளையும் இணைந்து சிந்தித்த திட்டத்தின் விளைச்சல்தான் ‘குடிஅரசு.’ சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், 1923 ஆம் ஆண்டிலேயே ‘ குடிஅரசை’ பதிவுசெய்த பெரியார், 02.05.1925 ஈரோட்டில் ஞானியார் அடிகளைக் கொண்டு வெளியிட்டார். ஞாயிறுதோறும் ஓரணா விலையில் வெளிவரத் தொடங்கியது குடி அரசு. முதலில் அட்டையில் பாரதத் தாய், இராட்டை சுற்றும் காந்தியார், நெசவு செய்யும் பெண், உழவு செய்யும் விவசாயி, சுத்தியால் அடிக்கும் தொழிலாளி, மூட்டை சுமக்கும் பாட்டாளி படங்களோடும், ‘எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர் இனம்,’ ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பாடல்களோடும் குடி அரசு வெளிவரத் தொடங்கியது. தொடக்கக் காலங்களில் வார இதழின் 12 பக்கங்களையும் தாமே எழுதி வந்ததாய்ப் பெரியார் குறிப்பிடுகிறார். ( குடிஅரசு 18.04.1926 ) பின்னர், ம.சிங்காரவேலர், சாமி.சிதம்பரனார்,...

தலையங்கம் – அதானிக்கு கடிவாளம் எப்போது?

தலையங்கம் – அதானிக்கு கடிவாளம் எப்போது?

அதானிக் குழுமம் பங்குச்சந்தையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தது. தொட்டதற்கெல்லாம் எதிர்க்கட்சிகள் மீதும், பல்வேறு நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவி விசாரணை நடத்தும் ஒன்றிய அரசு, அதானியிடம் விசாரணை நடத்த மறுத்தது. அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரித்தது. அதானி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, மேற்கு வங்கத்தின் மகுவா மொய்த்ராவை தகுதிநீக்கம் செய்து பழி தீர்த்தது. அதையும்தாண்டி உச்சநீதிமன்றத்திற்கு வழக்குகள் சென்றபோது, பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் இன்றுவரை முறையான விசாரணை நடைபெறவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதையும் ஹிண்டன்பர்க் நிறுவனம் இப்போது அம்பலப்படுத்தியுள்ளது. அதானிக் குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரிபுச் மற்றும் அவரது கணவர் தவல்...