மானுடத்தை வாழவிடுங்கள்
நாடார்கள், கவுண்டர்கள், முதலியார், வன்னியர்கள் என்று ஜாதிக்கொரு திருமண சேவை மையங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் இதற்கான விளம்பரங்கள் வரிசை கட்டி வருகின்றன. மக்களுக்கான சேவை மையங்கள் இப்போது மறைந்து விட்டன. ஜாதி கடந்த திருமணங்கள் என்றாலே அதை குற்றமாகப் பார்க்கிறது சமூகம். இதே ஜாதி நம்பிக்கையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டால் ஜாதி பார்க்க மாட்டார்கள். எந்த வகை இரத்தம் என்று தான் பார்ப்பார்கள். அது தனது ஜாதிக்காரர்கள் வகை இரத்தமாகத் தான் இருக்க வேண்டும் என்று பொங்கி எழ மாட்டார்கள். “எந்த ஜாதியாக இருந்தால் என்ன நல்ல மனசு இருக்கிறதே” என்று மாலை போட்டு பாராட்டுவார்கள். தன் வீட்டுப் பெண்ணுக்கு திருமணமாகி மணமுறிவு ஏற்பட்டு இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடும்போது மட்டும், ஜாதி தடையில்லை. பையன் நல்லவனாக இருந்தால் போதும் என்று ஜாதி மறுப்புக்கு வந்து விடுவார்கள். இந்தியாவில் ஜாதி அடையாளம் இப்படி தடுமாறுகிறது. இப்போது ‘குடிமகன்’...
