வினா விடை

• பசு மாட்டைக் கடத்தியதாகக் கூறி அரியானாவில் பள்ளி மாணவனை பசுப் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். – செய்தி
பேசாம, ஒவ்வொரு பசுவுக்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போட்ருங்க, அப்போ தான் மனிதர்களாவது உயிர் பிழைக்க முடியும்.

• ஒரே இடத்தில் விநாயகன் சிலை அமைப்பதில் இந்து அமைப்புகளுக்குள் மோதல். – செய்தி
விநாயகா..! இந்துக்களையே இப்படி மோதவிடுகிறாயே, இது நியாயம் தானா?

• ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் தயாரிக்கும் உரிமை தென்கலை பிராமணர்களிடமே இருக்கலாம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
அதேப்போல் துப்பரவு பணியையும் தென்கலையிடமே குடுத்துருங்க, வடகலை எதிர்ப்பும் இருக்காது.

• தமிழ்நாட்டு பள்ளிப் பாடத்திட்டத்தின் தரம் குறைந்துவிட்டது. – ஆளுநர் ரவி
சரி, தரம்தாழ்ந்து கிடக்கும் ஆளுநர் பதவியை என்ன செய்வது?

பெரியார் முழக்கம் 05.09.2024 இதழ்

You may also like...