ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக; கடலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்
“மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் ஜாதி ஆணவப் படுகொலை தொடர்ந்து செய்து வரும் ஜாதி வெறியர்களை கண்டித்தும் கடுமையான சிறப்பு சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார் சிவா தலைமையில் ஆகஸ்டு-16 அன்று கடலூர் மஞ்சகுப்பம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), தொடக்கவுரையாற்றினார். இள.புகழேந்தி (வழக்குரைஞர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க), திருமூர்த்தி (வழக்குரைஞர் சென்னை உயர்நீதி மன்றம்), லோகு.அய்யப்பன்(தலைவர் புதுச்சேரி திவிக), லூசியா (வழக்குரைஞர் ஆற்றல் மாநில ஒருங்கிணைப்பாளர்), தி.ச திருமார்யன் ( வழக்குரைஞர் விசிக மாநில அமைப்புச் செயலாளர்), எழிலேந்தி (மாவட்ட செயலாளர் தி.க), கார்ல் மார்க்ஸ் (வழக்குரைஞர் பாலா பேரவை), புதுவை பிரகாஷ் (தலைவர் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), ராஜா (ஒருங்கிணைப்பாளர் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), பாலு (மாநில தலைமை குழு உறுப்பினர் மக்கள் அதிகாரம்), பஷிர் அகமது( பிபோல்ட் இயக்கம்), சி.சு சாமிநாதன் (நிறுவனர் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு), சக்திவேல் (அமைப்பாளர் தாயுமானவர் தபெதிக), புதுச்சேரி தீனா( அமைப்பாளர் பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) ஆகியோர் கண்டனவுரையாற்றினார்கள்.
கனிமொழி, பெரியார் பிஞ்சு திராவிட மகிழன் புரட்சிகர பாடல்களைப் பாடினார்கள். கழகத் தோழர்கள் ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்-சென்னை), கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), பழனிவேல் (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்), குணசேகரன், சீதர், சத்தியராஜ், திருஞானம், அறிவழகன் (அறிவியல் மன்றம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெரியார்முழக்கம்இதழ்04092025
