Category: திவிக

தோழர்தமிழரசு நினைவேந்தல்

தோழர்தமிழரசு நினைவேந்தல்

பெரியார் தொண்டர், கழக களப்பணியாளர் கோ.தமிழரசு இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு 11.06.22 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. மயிலாப்பூர் பெரியார் படிப்பகத்தில் அறிவரசுவின் நினைவுகள் பகிரப்பட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டு அறிவரசு  படத்திற்கு கழகத் தோழர் இரண்யா மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து 9:30 மணியளவில் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், அறிவரசு படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வுகளில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 16062022 இதழ்

மருத்துவர்கள் தமிழரசி-அ.கிருபாகரன் ஜாதி மறுப்பு மணவிழா

மருத்துவர்கள் தமிழரசி-அ.கிருபாகரன் ஜாதி மறுப்பு மணவிழா

கழகத் தோழர் சி.சிகாமணி – ச.மோகனம்பாள் இணையரின் மகள் மருத்துவர் சி.தமிழரசி – மருத்துவர் அ.கிருபாகரன் ஆகியோரது இணையேற்பு நிகழ்வு 08.06.2022 அன்று மாலை 7 மணியளவில், வேப்பேரி ரித்திங்டன் சாலையில் உள்ள லுஆஊஹ கட்டடத்தில் நடைபெற்றது. புத்தர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோவன் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்விற்கு, மக்கள் அதிகாரம் ப.வினோத் வரவேற்பு கூறினார். சேத்துப்பட்டு க.இராசேந்திரன் முன்னிலை வகித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று வாழ்க்கை இணையேற்பை நடத்தி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்,  முனைவர் தொல்.திருமாவளவன், கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர், சமூகநீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு தலைமை செயலக ளுஊ/ளுகூ நலச்சங்கம் மீனலோசனி, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன்,...

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூரில் பா.ஜ.க.வினர் அரசு கல்லூரிகளின்  பெயர்களை முறைகேடாக பயன்படுத்தி துண்டறிக்கைகளை அச்சிட்டு “செல்பி வித் அண்ணாமலை” என்று விளம்பரப்படுத்தி கல்லூரி களுக்குள் அத்து மீறி நுழைய திட்டமிட்டு இருந்தார்கள். அண்ணாமலையைக் கூட்டி வந்து சாலைகளில் கூட்டமாக கூட காவல்துறையிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், அனுமதியும் பெறாமலும் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வினர் பேசினால் பரப்புரையில் ஈடுபட்டால் என்ன பேசுவார்கள் என்பதை பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய்வது போன்ற  பொது அமைதியை குலைக்கும் வகையில் தான் இவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இச்செய்தி பரவிய உடன் திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு கழகத்தின் கடும் கண்டனத்தை பதிவு...

கோவை அண்ணா சிலை முன்பு கலைஞர் பிறந்த நாள் நிகழ்வு

கோவை அண்ணா சிலை முன்பு கலைஞர் பிறந்த நாள் நிகழ்வு

3.6.2022அன்று காந்திபுரம் அண்ணா சிலை முன்பு திராவிட இயக்கத் தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை லோகு தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பிக் கொண் டாடப்பட்டது. கோவை மாநகரத் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரியார் முழக்கம் 09062022 இதழ்

சடங்குகள் இன்றி கோவை கழகத் தோழர் இல்லத் திறப்பு

சடங்குகள் இன்றி கோவை கழகத் தோழர் இல்லத் திறப்பு

கோவையில் கடந்த ஜூன் 5ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ‘டிட்டோ போட்டோஸ்’ புகைப்பட நிறு வனம் நடத்தும் சிவராஜ் கண்ணுமா இல்லத்தை புலவர் செந்தலை கவுதமன் திறந்து வைத்தார். இல்லத் திறப்பு நிகழ்ச்சியில் பார்ப்பனர்களின் வைதீக சடங்கு சம்பிரதாயங்கள் தவிர்க்கப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலராலும் பேசுப் பொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, கோவை மாவட்டச் செயலாளர் வெள்ளிங்கிரி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி மற்றும் திருப்பூர் கோவை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09062022 இதழ்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல்: திராவிட மாடல் விளக்கக் கூட்டம்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல்: திராவிட மாடல் விளக்கக் கூட்டம்

கழக செயல்வீரர், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன்  முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் நமக்கான அடையாளம் திராவிட மாடல் விளக்கப் பொதுக்கூட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 01.06.2022, புதன் கிழமை மாலை 6 மணியளவில் கணியூர் பெரியார் திடலில்  நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் கழகக் கொடி ஏற்றப்பட்டது.  முனைவர் பேராசிரியர் சுந்தரவள்ளி (தமுஎகச) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதிமணி மகள் அறிவுமதி மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் கணக்கன், சிவானந்தம், ஐயப்பன், சரவணன், வெள்ளிங்கிரி, ஆனந்த், நீலாம்பூர் கருப்புசாமி, பாண்டியநாதன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மாலை 6 மணி அளவில் கணியூர் பெரியார் திடலில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. யாழினி –  ஆனைமலை வினோதினி ஆகியோர் கொள்கைப் பாடல்களை...

சென்னை கழகத்தினர் முயற்சி வெற்றி; தெருக்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படுகின்றன

சென்னை கழகத்தினர் முயற்சி வெற்றி; தெருக்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படுகின்றன

சென்னை மயிலாப்பூர் கழகத் தோழர்கள், தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கக்கோரி கடந்த ஏப்.6ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகளிடம்  கோரிக்கை மனுவை வழங்கியதைத்  தொடர்ந்து நகரம் முழுதும் ஜாதிப்பெயைர நீக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் பெயர்ப் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி ரூ.8.43 கோடி செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்தப் பெயர் பலகைகளில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் பணியுடன் சேர்த்து தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 171-வது வார்டில் உள்ள சாலையின் பெயரை சென்னை...

வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்புக்கு இளைஞர்கள் சூளுரை : செஞ்சட்டைக் கடலில் மதுரை

வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்புக்கு இளைஞர்கள் சூளுரை : செஞ்சட்டைக் கடலில் மதுரை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் மே 29 அன்று நடந்த செஞ் சட்டைப் பேரணியால் மதுரை குலுங்கியது. கருஞ்சட்டைப் பேரணி, நீலச் சட்டைப் பேரணிகளைத் தொடர்ந்து செஞ் சட்டைப் பேரணிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருமான கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுது மிருந்தும் இளைஞர்கள் பெண்களும் ஆண்களு மாய் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து பார்ப்பபனிய பாசிசத்தை வீழ்த்துவோம்; இந்தியாவில் ஒற்றை ஆட்சியைத் திணிக்காதே; இது பெரியார் மண் – சனாதன சக்திகளை அனுமதியோம் என்று உணர்ச்சி முழக்கமிட்டு வந்தனர். திராவிடர் விடுதலைக்கழக சார்பில் சென்னை, மேட்டூர், சேலம், நங்கவள்ளி, கொளத்தூர், மயிலாடுதுறை, நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து தனிப் பேருந்துகளிலும் வேன்களிலும் திரண்டு வந்திருந்தனர். கழகப் பெயருடன் கழகக் கொடி செஞ் சட்டையில் அச்சிடப்பட்டிருந்தது. விடுதலை சிறுத்தைகள், தந்தை...

செஞ்சட்டைப் பேரணி மாநாட்டில் கொளத்தூர் மணி உரை கொள்கை எதிரியை அடையாளம் கண்டு விட்டோம்; கொள்கை அணியை உருவாக்குவோம்!

செஞ்சட்டைப் பேரணி மாநாட்டில் கொளத்தூர் மணி உரை கொள்கை எதிரியை அடையாளம் கண்டு விட்டோம்; கொள்கை அணியை உருவாக்குவோம்!

தி.க. கொடியை உருவக்கிய பெரியார், நடுவில் உள்ள சிவப்பு வட்டம் பெரிதாகி, சிவப்புக் கொடியாக மாறும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.  மதுரை செஞ்சட்டை பேரணிக்குத் தலைமை யேற்ற கழகத் தலைவர் மாநாட்டில் ஆற்றிய உரை: பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் நோக்கத்தை ஒருங்கிணைப்பாளர் பொழிலன் விளக்கியிருக்கிறார். இந்த மூன்று பேரணிகள் நடந்ததும் இதன் முதன்மை மாந்தர்களாக காட்டப்படுகிற பெரியாரும், அம்பேத்கரும், மார்க்சும் எளிய வஞ்சிக்கப்பட்ட மக்களை இலக்காக கொண்டு தத்துவங்களை உருவாக்கிப் போராடியவர்கள். இந்த மண்ணில், சுரண்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்கள் இன்னும் இருக்கிறார்கள். அந்த சூத்திரர்களும், பஞ்சமர்களும் தான் உழைப்புச் சுரண்டல்களுக்கு உள்ளானவர்களாக இருக் கிறார்கள். இந்த மூன்று பேரின் நோக்கமும் ஒன்று தான். ஆனால், தனித்தனியாக இயங்கி வந்திருக் கிறோம். இது இயங்கக் கூடாது என்ற கருத்து 30’களில் தோன்றியிருந்தாலும், இடையில் பிரிவு, உறவு இரண்டும் நடந்திருக்கின்றன. ஆனால், இந்த வேளையில், இந்த நாட்டில்...

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தையில்: ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கும்பகோணம் மீன் மார்க்கெட் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மண்டல மாநாடு 16.5.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு. இளங்கோவன் தலைமையில் சா.வெங்கடேசன் (ஒன்றிய அமைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. கு. பாரி (தஞ்சை மாவட்ட செயலாளர், தி.வி.க.), தெ. மகேசு (மாவட்டச் செயலாளர்), திருச்சி நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்தவரும், திராவிடர் கழகத் தோழருமான பவுண்டரீகபுரம் முருகேசன், பொறியாளர் திருநாவுக்கரசு (உழவர் இயக்கம்), சி.த. திருவேங்கடம் (மாவட்ட அமைப்பாளர்), சா. விவேகானந்தன் (மண்டல செயலாளர் வி.சி.க.) உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர். முன்னதாக, பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி மற்றும் தி.க. தோழர்கள் குணா, சங்கர், கழகத் தலைவர்-பொதுச் செயலாளருக்கு துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர். கரிகாலன் நன்றி கூறினார். தொடர்ந்து 20...

பார்ப்பன எதிர்ப்பு ஆன்மீகத்தையும் அரவணைத்ததே திராவிடக் கோட்பாடு

பார்ப்பன எதிர்ப்பு ஆன்மீகத்தையும் அரவணைத்ததே திராவிடக் கோட்பாடு

மே 21இல் குடியாத்தத்தில் நடந்த கழக மண்டல மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து: குடியாத்தம், வேலூர் மாவட்டங்கள் திராவிடத்தின் கொள்கை வேர்களைத் தாங்கி நிற்கிறது, ஆரிய எதிர்ப்பு என்ற சனாதன வர்ணாஸ்ரம பார்ப்பன எதிர்ப்புக்கு களமாடிய முன்னோடிகள் இந்த மாவட்டத்தில் உண்டு. பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, சமூக சீர்த்திருத்தப் படை ஒன்றை இப்பகுதியில் உருவாக்கி, தேனீர்க் கடை இரட்டைக் குவளைத் தீண்டாமை – பார்ப்பன உயர்ஜாதியினர் வீதிகளில் தீண்டப்படாத மக்கள் நடக்கும் உரிமை மறுக்கப்பட்ட சமூகக் கொடுமைகளை எதிர்த்து நேரடி நடவடிக்கையில் இறங்கினார். சாவு சேதி சொல்லவும், பறை அடிக்கவும் தீண்டப்படாத மக்கள் மீது அவமானங்கள் சுமத்தப்பட்டதை எதிர்த்து பறை எரிப்புப் போராட்டம் நடத்தியபோது திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற வேண்டும் என்று பெரியார் ‘விடுதலை’யில் அறிக்கை விடுத்தார். 1954இல் ஈரோட்டில் பெரியார் நடத்திய புத்தர் கொள்கை பரப்பு மாநாடு – குலக் கல்வி திட்ட எதிர்ப்பு மாநாடுகளில்...

சதுர்வேதிமங்கலம் – ஆரிய மாடல் சமத்துவபுரம் – திராவிட மாடல்

சதுர்வேதிமங்கலம் – ஆரிய மாடல் சமத்துவபுரம் – திராவிட மாடல்

தமிழ்நாட்டில் தமிழ் மன்னர்கள் பலரும் ஆரியத்தைக் கொண்டாடியதாகவே வரலாறு கூறுகிறது. ‘பிராமணர்’களுக்கு ஊர்களும் கிராமங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. வேதப் பார்ப்பனர்ககளின் வேத அறிவே உலகத்தை வாழ்விக்கும் என்று மன்னர்கள் நம்பினார்கள். அதற்குப் பெயர் ‘சதுர்வேதிமங்கலம்’; தமிழ் தாத்தா என்று கொண்டாடப்படும் சங்க இலக்கிய சுவடிகளைத் தொகுத்த உ.வே.சாமிநாதய்யர், தனது பிறந்த ஊரான ‘உத்தமதானபுரம்’ பிராமணர்களுக்கு ‘தானமாக’ வழங்கப்பட்ட ஊர் என்பதை தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். ஒரு அரசர், தனது வேதபண்டிதர் பரிவாரங்களுடன் தங்கள் கிராமத்தில் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்து, உணவு உண்டு, வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டாராம். பிறகுதான்  அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்து அதிர்ந்து போனாராம். அமாவாசையில் வெற்றிலைப் பாக்கு போடுவது- தெய்வக் குற்றமாம். இந்தக் ‘குற்றத்துக்கு’ பரிகாரம் தேட, அருகிலிருந்த வேத பண்டிதர்கள் ஆலோசனைப்படி  அந்தப் பகுதியை வேத பண்டிதர்களுக்கு தானமாக்கி வீடுகளைக் கட்டித் தந்தாராம். அதுவே தான் பிறந்த உத்தமதானபுரம் வரலாறு என்று...

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி ‘நீண்டகாலமாக சிறைப்படுத்தப்பட்ட இஸ்லாமியர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுவிக்க – அரசு முன்வர வேண்டும்!

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி ‘நீண்டகாலமாக சிறைப்படுத்தப்பட்ட இஸ்லாமியர் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுவிக்க – அரசு முன்வர வேண்டும்!

சன் தொலைக்காட்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி: பேரறிவாளன் விடுதலை என்பது அனை வருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஈழ ஆதரவாளன் என்ற முறையில், ஈழம் தொடர்பானது என்று கருதிக் கொண்டு, ஏதோ பயங்கரவாதம் நடந்து விட்டதாக பேசிக்கொண்டு அரசுகள் அவர் மீது வழக்கு புனைந்ததும், தண்டிக்கப்பட்டதும் வேறு கதை என்றாலும் கூட, இப்போது இவரது விடுதலையை 30 ஆண்டுகள் கடந்தும் காலம் தாழ்த்திக் கொண்டிருந்த அரசுகளுக்கு குறிப்பாக ஆளுநருக்கு தலையில் குட்டு வைத்ததைப் போல இந்த தீர்ப்பினை நான் பார்க்கிறேன். அவர் நேரடியான குற்றச் செயலில் ஈடுபடவில்லை என்று வழக்கே கூறினாலும், அவருக்கு உட்சபட்ச தண்டனை வழங்கப் பட்டது. அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின்பும், இவ்வளவு காலம் சிறையில் இருந்தார் என்பதை எந்த மனிதநேயர் களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பாலானோரால் தேசத் தந்தை என்று சொல்லப்படுகின்ற காந்தியைக் கொன்ற கோபால் கேட்சேவிற்கு 15...

சிவகங்கை மண்டலத்தில் தொடர் பரப்புரை  மாநில கல்வி உரிமைகளைப் பறித்து, மதவெறியைத் திணிக்கிறது, ஆரிய மாடல்

சிவகங்கை மண்டலத்தில் தொடர் பரப்புரை மாநில கல்வி உரிமைகளைப் பறித்து, மதவெறியைத் திணிக்கிறது, ஆரிய மாடல்

மதுரை – சிவகங்கை : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” தெருமுனைக் கூட்டங்களின் நிறைவாக சிவகங்கையில் 13.05.2022 வெள்ளி மாலை 5.00 மணியளவில் சிவகங்கை சண்முக ராஜா கலையரங் கில் இராமச்சந்திரனார் நினைவரங்கத் தில் மண்டல மாநாடு நடை பெற்றது. மண்டல மாநாட்டிற்கு நா.முத்துக் குமார் தலைமை தாங்கினார். தவச் செல்வன், ரமேஷ் முன்னிலை வகித்தனர். அறிவுமதி வரவேற்புரை யாற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநிலப் பொரு ளாளர் திருப்பூர் துரைசாமி, மதுரை மாவட்டச் செயலாளர் மணியமுதன், மா.பா., மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் பெரியார் முத்து நன்றி கூறினார். முன்னதாக மாநில உரிமையை பறிக்காதே! கல்வி உரிமையை தடுக்காதே! மத வெறியை திணிக்காதே! எனும் முழக்கத்தோடு நமக்கான அடையாளம் திராவிட மாடல் தெருமுனைக்...

குடந்தையில் கொளத்தூர் மணி பேட்டி: தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

குடந்தையில் கொளத்தூர் மணி பேட்டி: தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

குடந்தையில் நடைபெற்ற கழக மண்டல மாநாட்டுக்கு வருகைப் புரிந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. குடியரசுத் தலைவர் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிற ஒரு அரசு ஊழியர் என்பது தான் இவரது தகுதி நிலை ஆகும். ஆளுநர் தன்னிச்சையாக எதிலும் செயல்பட முடியாது. அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பது தான் அரசியலமைப்பு அவருக்கு விதித்திருக்கிற கடமை ஆகும். ஆளுநர் உரை என்பது கூட அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பது தானே தவிர ஆளுநர் தனது கருத்தை சொல்வதற்கு உரிமை இல்லை. ஆனால், அண்மைக் காலங்களில் தமிழ்நாடு ஆளுநர், ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினால், அரசியலமைப்புச் சட்டத்தில், மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க காலவரையறை இல்லை என்பதை மட்டும் வைத்துக் கொண்டு, இதுவரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களைக் கூட முடக்கிப் போட்டிருக்கிறார்....

28 தெருமுனைக் கூட்டங்கள்; கோவையில் மண்டல மாநாடு : ‘திராவிட மாடலின்’ சமூகநீதி – சுயமரியாதை கொள்கைகளுக்கு மக்கள் பேராதரவு

28 தெருமுனைக் கூட்டங்கள்; கோவையில் மண்டல மாநாடு : ‘திராவிட மாடலின்’ சமூகநீதி – சுயமரியாதை கொள்கைகளுக்கு மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கோவை டாடாபாத் ஆறுமுக்கு சாலையில் 11.5.2022 புதன் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. முன்னதாக 23.04.2022 அன்று கோவை மேட்டுப் பாளையத்தில் துவங்கி கோவை திருப்பூர் உடுமலை பொள்ளாச்சி என பல்வேறு பகுதிகளில் 07.05.2022 வரை 28 தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து நமக்கான அடையாளம் திராவிட மாடல் எனும் பரப்புரையை கோவை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. நிறைவாக மண்டல மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் துவக்க நிகழ்வாக திராவிட மாடல் குறித்தப் பாடல்களை மேட்டூர் டி.கே. ஆர் இசைக் குழு வினர் பாடினர். இதில் கழகத் தோழர்கள் மேட்டூர் கோவிந்த ராஜ், கோவை கிருஷ்ணன், புரட்சித் தமிழன், பொள்ளாச்சி வினோதினி ஆகியோர் பாடல்களை பாடினர். பின்பு திராவிட மாடல் மண்டல மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு கோவை மாநகர கழகச்...

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

ஈரோடு மண்டல மாநாடு – பள்ளிப்பாளை யத்தில் எழுச்சியுடன் நடந்தது. நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை விளக்கி 33 தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து மண்டல மாநாடு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக 8 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக 25 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், நாமக்கல் மாவட்டம் சார்பாக 10 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும் நடைபெற்று முடிந்திருந்தன. தெருமுனைக் கூட்டங்களில், மாவட்ட இயக்க முன்னோடிகளும் ,திரளான தோழர்களும், தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில் மண்டல மாநாடு : ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாடு 09.05.22 திங்கள் மாலை 5 மணிக்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு திடலில் தொடங்கியது. மாநாட்டையொட்டி பள்ளிபாளையம் நகர் முழுவதும் சுவரொட்டிகளும்...

இராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா, ஆணவப் படு கொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் பாராட்டு விழா, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற (தி.மு.க.கூட்டணி) முதல் நகர்மன்ற பெண் தலைவர், மற்றும் நகர்மன்ற பெண் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடைபெற்றன. இம்முப்பெரும் விழா 25.04.2022 அன்று மாலை 5 மணியளவில், ராசிபுரம் கன்னட சைனியர் மண்ட பத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு, திராவிடர் விடுதலைக் கழக நகரச் செயலாளர் பிடல் சே குவேரா தலைமை வகித்தார்.திராவிடர் விடுதலை கழக நகர அமைப் பாளர் சுமதி மதிவதனி வரவேற்பு கூறினார். நிகழ்விற்கு, மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, இராசிபுரம் நகரத் தலைவர் அன்பரசன், வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய...

திருப்பூர்-ஈரோடு மாவட்டங்களில் திராவிட மாடல் விளக்கம்

திருப்பூர்-ஈரோடு மாவட்டங்களில் திராவிட மாடல் விளக்கம்

திருப்பூரில் தெருமுனை கூட்டங்கள் :  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு திருப்பூரில் தெருமுனைக் கூட்டங்கள் 01.05.22 அன்று காலை 11 மணியளவில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலை அருகிலிருந்து துவங்கியது. நிகழ்வு பெரியார் பிஞ்சு யாழினி மற்றும் து.சோ.பிரபாகர் ஆகியோரின் பகுத்தறிவு பாடல்களுடன் துவங்கியது. மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு தெருமுனை கூட்டத்தில் துவக்க நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மதிப்பிற்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், தெருமுனைக் கூட்டங்களை துவக்கி வைத்து தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி குறித்தும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சி குறித்தும் சிறப்பானதொரு கருத்துரையை வழங்கினார். கழகப் பொருளாளர் துரைசாமி, தெருமுனை கூட்டங்களின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர்...

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மக்கள் பேராதரவுடன் நடந்த சேலம்-தருமபுரி- கிருட்டிணகிரி மாவட்ட பரப்புரைப் பயணம்

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மக்கள் பேராதரவுடன் நடந்த சேலம்-தருமபுரி- கிருட்டிணகிரி மாவட்ட பரப்புரைப் பயணம்

ட         பறை இசைப் பாடல்கள்; வீதி நாடகங்களுடன் திராவிட மாடல் மக்களிடம் விளக்கம். ட         கெலமங்கலம் மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் பேச்சு. ட         கழகச் செயல்பாட்டாளர்களுக்கு உற்சாகத்தைத் தந்த பரப்புரை நிகழ்வுகள். முதல் நாள் : 01.05.2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் சேலம் – தருமபுரி – கிருட்டிணகிரி மாவட்ட திராவிட மாடல் தொடர் பரப்புரைப் பயண தெருமுனைக் கூட்டம் ஏற்காட்டில் தொடங்கியது. கூட்டத்தில் முதல் நிகழ்வாக பறை முழக்கம், பாடல்கள், வீதி நாடகம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.     முதல் நிகழ்வு ஏற்காடு ரவுண்டானா, இரண்டாவது நிகழ்வு ஏற்காடு டவுன், மூன்றாவது நிகழ்வு ஏற்காடு பேருந்து நிலையம், நிறைவாக மஞ்சக்குட்டை ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.   மஞ்சக்குட்டை நிகழ்வில் திமுக பொறுப்பாளர் பாபு கலந்து கொண்டு உரையாற்றினார். மாலை 6.00 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது. தெருமுனைக் கூட்டத்தில் ஏற்காடு...

பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

மயிலாடுதுறை கடலூர் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்கள் இணைந்து மே 4ஆம் தேதி மயிலாடுதுறையில் மாநாட்டினை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநாட்டின் நோக்கத்தினை வலியுறுத்தி 16 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. 10000 வண்ண துண்டறிக்கைகள் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்புரை செய்யப் பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் சுவர் விளம்பரமும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 500 சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மாலை 5 மணி அளவில் பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வு தொடங்கியது. மாநாட்டிற்கு  மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை ஏற்றார். வரவேற்புரை கடலூர் மாவட்ட தலைவர் மதன்குமார் வழங்க, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற மாநாட்டின் கோரிக்கையை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலு. குணவேந்தன், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் சுப்பு மகேஷ் பேசினார்கள். மந்திரம் இல்லை தந்திரமே என்ற...

சங்கராபுரத்தில் மாபெரும் எழுச்சி

சங்கராபுரத்தில் மாபெரும் எழுச்சி

  சங்கராபுரம் மாநாடு மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. புதுவை ‘விடுதலைக் குரல்’ இசைக் குழுவினர் லெனின் சுப்பையா பாடல்களைப் பாடி நிகழ்ச்சிக்கு எழுச்சியூட்டினர். சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு பங்கேற்றுப் பேசினார். ஏப்ரல் 3 ஈரோட்டில் நடைபெற்ற கழகத்தின் செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, மாநில உரிமைகளைப் பறிக்காதே, கல்வி உரிமைகளைத் தடுக்காதே, மதவெறியைத் திணிக்காதே என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்று மண்டல மாநாடு நடத்துவது, அதனை விளக்கி மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்கள் இணைந்து மே 3 ஆம் நாள் சங்கராபுரத்தில் மாநாட்டினை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மாநாட்டின் நோக்கங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் 3000 எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்பப்பட்டது. 27 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது. 500 சுவரொட்டிகள்...

நன்கொடை

நன்கொடை

திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா – திருப்பூர் மாநகர அமைப்பாளர் தனபால் இணையரின் மகள் பெரியார் பிஞ்சு யாழினி தனது சேமிப்புத் தொகையான ரூ.550-அய் தனது பிறந்தநாளையொட்டி 10.4.2022 அன்று ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வளர்ச்சி நிதியாக வழங்கினார். பெரியார் முழக்கம் 05052022 இதழ்

விழுப்புரம், கோவையில் பரப்புரைப் பயணம்

விழுப்புரம், கோவையில் பரப்புரைப் பயணம்

விழுப்புரம்-கோவை மாவட்டங்களில் “நமக்கான அடையாளம் திராவிட மாடல்” பரப்புரை – மக்கள் பேராதரவுடன் நடந்தது. விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் 23-04-22 அன்று காலை11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் தலைமையில் கண்டமங்கலத்தில் தொடங்கியது.  பாக்கம் கூட்ரோடு, வளவனூர், கோலியனூர், விழுப்புரம் இரயில் நிலையம் நிறைவாக பழைய பேருந்து நிலையத்தில் இரவு 9 அளவில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் ம.க.இ.க கலைக் குழுவின் இசை நிகழ்ச்சி பிரகாஷ், ராஜ் ஆகியோர் மக்களைக் கவரும் வகையில் பாடல்களை பாடி சிறப்பித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்புரை செயலாளர் விஜி பகுத்தறிவு, பா. விஜய குமார், திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் தோழர்கள் அழகர், தமிழ், லிங்க...

நமக்கான அடையாளம் : ‘திராவிட மாடல்’ கலை நிகழ்வு – கருத்துச் செறிவுடன் சென்னையில் முதல் மண்டல மாநாடு

நமக்கான அடையாளம் : ‘திராவிட மாடல்’ கலை நிகழ்வு – கருத்துச் செறிவுடன் சென்னையில் முதல் மண்டல மாநாடு

கழக செயல் வீரர் தோழர் பத்ரி நாராயணன் 18ஆவது நினைவு நாளையொட்டி, 30.04.2022 காலை 9 மணியளவில், பத்ரி நாராயணன் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் நினைவு கூறல் நிகழ்வு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்று பத்ரி நாராயணனின் சமரசம் இல்லாத இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்தனர். இறுதியில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதன்பின் பத்ரி நாராயணன் படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. திராவிட மாடல் முதல் மண்டல மாநாடு 30.04.2022 அன்று மாலை 5 மணியளவில் இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகம் அருகில், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜி வரவேற்பு கூறினார். மயிலை சுகுமார், முனு சாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் பீமாராவ்-சந்தியாராணி இணையேற்பு விழா

கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் பீமாராவ்-சந்தியாராணி இணையேற்பு விழா

24-04-2022 ஞாயிறு மாலை 4.00 மணியளவில் பெங்களூர் ஹோட்டல் கேபிடல் அரங்கில் தாமரை வேணி – ஜார்ஜ் இணையரின் மகன் பீமாராவ் க்கும் மங்கம்மா-புஷ்பராஜ் இணை யரின் மகள் சந்தியாராணிக்கும் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி   தலைமையில் இணையேற்பு விழா நடைபெற்றது. மணவிழா மேடையில் பெரியார், அம்பேத்கர் படங்கள் சுயமரியாதைத் திருமணம் என்ற எழுத்துகளோடு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் தொடக்கத்தில் நிமிர்வு கலையகத் தோழர்களின் பறையிசை எழுச்சி யோடு முழங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சமதா  தேஷ்மானே, ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜிகானி சங்கர், மனநல மருத்துவரும் சமூக செயல்பாட்டாளருமான  டாக்டர் பத்மாக்ஷி லோகேஷ், முனியஜினப்பா, லோகேஷ் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். முனைவர் சமதா தேஷ்மானே பேசும்போது, தான் தாலியில்லாத சடங்கில்லாத திருமணத்தை 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திக் கொண்டு நலமாக வளமாக வாழ்ந்து வருவதை எடுத்துக்கூறி, வேத, புராண, சாத்திர...

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கழகம் நடத்தும் 400 தெருமுனைக் கூட்டங்கள், 11 மண்டல மாநாடுகளில் பொது மக்களிடம் பரப்ப கழகத்தின் வெளியீடுகள்…. 1)         பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்(விடுதலை இராசேந்திரன்) – ரூ. 100 2)         மோடி ஆட்சி ‘இந்து’க்களுக்கு என்ன செய்தது? (ர.பிரகாசு) – ரூ. 30 3)         50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ்நாடு (ஜெயரஞ்சன்)         – ரூ. 30 4)         மக்களை குழப்பும் ‘போலி அறிவியல்’(எட்வின் பிரபாகரன்) -ரூ. 60 5)         தில்லை தீட்சதர்கள் – முறைகேடுகள்                 – ரூ.  30 6)         பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்(விடுதலை இராசேந்திரன்)       – ரூ. 60 7)         திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு (1912 முதல் 1973 வரை)      – ரூ. 60 8)         கீழ் வெண்மணியும் பெரியாரும்         – ரூ. 60 9)...

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை இயக்கங்கள் தொடங்கி எழுச்சி நடைபோட்டு வருகின்றது. சென்னை : முதல் நாள் தெருமுனைக் கூட்டம் : மாநில உரிமையைப் பறிக்கும், கல்வி உரிமையைத் தடுக்கும், மதவெறியைத் திணிக்கும் பாஜகவை எதிர்த்து, தமிழ்நாடு அரசின் ‘திராவிட மாடல்’-அய் ஆதரித்து, நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” மண்டல மாநாட்டை விளக்கி, தெருமுனைப் பிரச்சாரம், சென்னை இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில், (19.04.2022 மாலை 5:30 மணிக்கு மீர்சாகிப் பேட்டை மார்கெட் பகுதியில் 119ஆவது வட்ட கவுன்சிலர் திமுக கமலா செழியன் தொடங்கி வைத்தார். அடுத்ததாக அய்ஸ்ஹவூஸ்ஷேக் தாவூத் தெரு, இறுதியாக அய்ஸ்ஹவூஸ்கிருஷ்ணாம்பேட்டை பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி, பிரகாசு, ஜெய பிரகாசு, தேன்மொழி ஆகியோர் மக்களிடம்  ‘திராவிட மாடல்’-அய் ஏன் ஆதரிக்க வேண்டும்...

ஜாதி ஆணவப் படுகொலைச் சட்டம் கோரி கள்ளக்குறிச்சியில் கழகப் பரப்புரைப் பயணம்

ஜாதி ஆணவப் படுகொலைச் சட்டம் கோரி கள்ளக்குறிச்சியில் கழகப் பரப்புரைப் பயணம்

திராவிடர் விடுதலைக்கழகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் 12.4.2022 செவ்வாய் கிழமை அன்று நயினார்பாளையம் சின்னசேலம், சங்கராபுரம், வாணாபுரம் பகண்டை கூட்ரோடு,ஆகிய நான்கு இடங்களில் ஜாதிய ஆணவ படுகொலைக்கு எதிராக  சிறப்பு சட்டம் இயற்றக் கோரி ஒரு நாள் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பரப்புரையில் ஆணவக் கொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பிய பின் கோரிக்கையை விளக்கி பேசப்பட்டது, மாவட்ட தலைவர் க. மதியழகன், மாவட்ட  செயலாளர் க.ராமர், மாவட்ட அமைப்பாளர். சி.சாமிதுரை, மாவட்ட துணை செயலாளர் மு.நாகராஜ், ரிசிவந்தியம் ஒன்றிய செயலாளர் இரா. கார்மேகம், பாக்கம் ராமச்சந்திரன், ரிசிவந்திய ஒன்றிய தலைவர் மா.குமார், மு.குமரேசன், இரா.ஜீவா, கு.பாபா மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர் மதன்குமார்,  கடலூர் மாவட்ட அமைப்பாளர் ஆசியஜோதி , விழுப்புர மாவட்ட தலைவர் பூ.ஆ. இளையரசன், திராவிடர் விடுதலைக் கழக மாநில செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் ஆகியோர் பரப்புரையில் கலந்து கொண்டனர்.     பெரியார் முழக்கம் 21042022...

கொளத்தூரில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு கழகம் எடுத்த அம்பேத்கர் விழா எழுச்சி கழக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.

கொளத்தூரில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு கழகம் எடுத்த அம்பேத்கர் விழா எழுச்சி கழக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.

15.4.2022 திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மேற்கு மாவட்டம் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் மாலை 6.00 மணியளவில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா சாதி மறுப்பு இணையர்கள் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கொளத்தூர் நகரச் செயலாளர் பா. அறிவுச்செல்வன் வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராசு, கொளத்தூர் நகர தலைவர் சி.இராமமூர்த்தி, பெரியாரிய அம்பேத்கரிய உணர்வாளர் தீன ரட்சகன் ஆகியோர் முன்னிலை வகிக்க கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் தலைமை ஏற்றார். தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் சந்தோஷ் உரையை தொடர்ந்து ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் ப.பா. மோகன், வழக்கறிஞர் கார்த்திகேயன், பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் பார்த்திபன் மற்றும் கொளத்தூர் பகுதியில் சாதி மறுப்புத் திருமணங்களை முன்னின்று நடத்திவரும்...

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மண்டல மாநாடு ஒட்டி மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல்களை நடத்தி தோழர்கள் பயணத்துக்கு திட்டமிட்டு வருகிறார்கள். சென்னை : கடந்த ஏப்ரல் 02, 03 ஆகிய நாட்களில், ஈரோட்டில் நடைபெற்ற தலைமைக்குழு, செயலவையில், மண்டலம் வாரியாக மாநாடு நடத்துவது என்றும், மாநாட்டிற்கு முன்னதாக 15 தெருமுனைக் கூட்டங்கள் மாவட்டம் வாரியாக நடத்த வேண்டும் என்றும், முடிவுகள் எடுக்கப்பட்டன. செயலவை முடிவுகளின் படி, சென்னை மாவட்டம் சார்பாக மாநாடு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது பற்றி சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல், 05.04.2022 செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உட்பட மாவட்ட, பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சேலம் – தருமபுரி...

மாநில உரிமைகளைப் பறிக்காதே! கல்வி உரிமைகளைத் தடுக்காதே!  மத வெறியைத் திணிக்காதே!  நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

மாநில உரிமைகளைப் பறிக்காதே! கல்வி உரிமைகளைத் தடுக்காதே! மத வெறியைத் திணிக்காதே! நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

இடஒதுக்கீடு, சமூக நலனுக்கான திட்டங்கள், மாநில சுயாட்சி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பெண்களை அதிகாரப்படுத்தல், மதவெறி யற்ற – மக்களின் ஒற்றுமை, மூட நம்பிக்கையற்ற அறிவியல் சமுதாயம் – இவை திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டுக்குத் தந்த அடையாளங்கள். அனைத்துப் பிரிவு மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய திட்டங்களை உருவாக்குவது என்பதே நமது தமிழ்நாட்டின் தனித்துவம். இந்த அடையாளங்கள், இப்போது ஒன்றிய ஆட்சியால் அழிக்கப்படுகின்றன; படிப் படியாக மறுக்கப்படுகின்றன; இதை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார். திட்டங்களை வகுத்து செயல் படுத்துகிறார். அதில் வெற்றி களையும் குவித்து வருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு எடுப்பது ஒரு பக்கம், மற்றொரு பக்கம் வலிமையான தமிழகத்தை கட்டமைப்பதற்கான திட்டங் களை உருவாக்குவது என்று, முதலமைச்சர் ஒரு கையில் வாளும், மற்றொரு கையில் கேடயமும் ஏந்தி நிற்கிறார். இதுதான் நாம் கூறும் “திராவிட மாடல்”. என்ன நடக்கிறது ? பெட்ரோல் டீசல் விலை...

செயலவைக்கு உதவியோருக்கு நன்றி!

செயலவைக்கு உதவியோருக்கு நன்றி!

தலைமைக்குழு செயலவை நிகழ்ச்சிகளை அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி முன்னின்று ஒருங்கிணைத்தார். அவருடன் ஈரோடு மாவட்டத் தோழர்கள் இணைந்து பணியாற்றினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ரூ.10,000; ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி ரூ.5,000,  ஈரோடு சீனிவாசன் ரூ.5000, பொறியாளர் அன்பு செல்வன் ரூ.10,000 ஆகியோர் நன்கொடை வழங்கினர். பிரியாணிபாளையம் ஓட்டல் உரிமையாளரும் கரூர் மாவட்ட கழக முன்னாள் மாவட்ட தலைவருமான பாபு, தலைமைக் குழுவுக்கு இடம் வழங்கி மிகக் குறைந்த விலைச் சலுகையில் இரு நாளும் பிரியாணி உணவு வாங்கினார். சென்னிமலை கழகத் தோழர் ஜோதி ரவி 15 கிலோ இறைச்சியையும், ‘அன்பு மிக்சர்’ உரிமையாளர் அனைவருக்கும் சிற்றுண்டிகளையும் தின்பண்டங் களையும் வழங்கினார். கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் செயலவைக் கூட்டம் இலவசமாக நடத்திக் கொள்ள அனுமதி வழங்கினர்.  அனைவருக்கும் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி நன்றி தெரிவித்துக் கொள்கிறார். பெரியார் முழக்கம் 07042022 இதழ்

ஏப்.30 தொடங்கி மே 14 வரை 11 மண்டல மாநாடுகள் :  400 தெருமுனைக் கூட்டங்கள் கழக செயலவை முடிவு

ஏப்.30 தொடங்கி மே 14 வரை 11 மண்டல மாநாடுகள் : 400 தெருமுனைக் கூட்டங்கள் கழக செயலவை முடிவு

தமிழ்நாட்டின் பறிக்கப்படும் உரிமைகள், ஒன்றிய ஆட்சியின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கை; மறுக்கப்படும் ‘நீட்’ விலக்குச் சட்டம்; திணிக்கப்படும் மதவெறி; அதற்கு கருவிகளாகப் பயன்படும் மக்களின் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை விளக்கி ‘திராவிடன் மாடல்’ அதுவே நமக்கான அடையாளம் என்பதை விளக்கி, 11 மண்டல மாநாடுகளையும் மாவட்டத்துக்கு குறைந்தது 15 தெருமுனைக் கூட்டங்களையும் நடத்த திவிக செயலவை முடிவு செய்துள்ளது. பெரியார் முழக்கம் 07042022 இதழ்

செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ. 1000/- நன்கொடை திட்டம்

செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ. 1000/- நன்கொடை திட்டம்

தி.வி.க. செயலவை உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ.1000/- நன்கொடை வழங்குவது என்று செயலவையில் முடிவெடுக்கப்பட்டது. செயலவை உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கியதோடு மூன்று பேர் உடனடியாக நன்கொடையையும் வழங்கிவிட்டனர். இது தவிர கழகத்தின் முழு நேர செயல்பாட்டாளர்களை நியமிக்கும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது. இதற்கான செலவை தோழர்கள் பகிர்ந்து கொள்ள முன் வந்தனர். அதன்படி தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், ஆசிரியர் சிவகாமி, இராம இளங்கோவன், நாத்திகஜோதி (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர்), சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சேலம் டேவிட் ஆகியோர் முழு நேரப் பணியாளர் நியமன திட்டத்துக்கு மாதம் ரூ.1000/- வீதம், வருடத்துக்கு ரூ.12,000/- வழங்குவதாக அறிவித்தனர். திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, காவை ஈசுவரன் முழுநேரப் பணியாளர் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.6000/- வழங்குவதாக அறிவித்தனர். நாமக்கல் மாவட்டக் கழக சார்பில் மூன்று செயலவை உறுப்பினர்கள், செயலவை உறுப்பினருக்கான கட்டணமாக ரூ.1000 செலுத்துவதாகவும், முழு நேரப் பணியாளர் திட்டத்துக்கு...

மு.மீனாட்சி சுந்தரம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

மு.மீனாட்சி சுந்தரம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்நாட்டரசின் 2022 திருவள்ளுவர் விருதாளரும் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அனைத்து இந்திய தமிழ்ச் சங்க பேரமைப்பின் தலைவரும், திராவிடர் கழகத்தின் மூத்த  கருஞ்சட்டைத்  தோழருமான மு.மீனாட்சி சுந்தரம் (முத்து செல்வன்) நினைவேந்தல் நிகழ்வு 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் பெங்களூர் தமிழ்ச் சங்க திருவள்ளுவர் அரங்கத்தில், பெங்களூர் தமிழ்ச் சங்கம்  நடத்தியது. இந்நினைவேந்தல் நிகழ்வுக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கோ. தாமோதரன் தலைமை தாங்கினார்.  திராவிடர்  விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மீனாட்சி சுந்தரத்தின் (முத்து செல்வன்) உருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.  நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் சானகிராமன், க.த.ம.இ. தலைவர் சி. இராசன்,  பெரியாரிய பொதுவுடமை இயக்கத்தின் அமைப்பாளர் கி.சு. இளங்கோவன், கருநாடக திமுக அமைப்பாளர் இராமசுவாமி, உ.த.க. தலைவர் மதலைமணி, மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் பிரான்சிஸ்,...

“நமக்கான அடையாளம் – திராவிடன் மாடல்” : மண்டல மாநாடுகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

“நமக்கான அடையாளம் – திராவிடன் மாடல்” : மண்டல மாநாடுகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

ஈரோடு தி.வி.க. செயலவை – மண்டல மாநாடுகளுக்கு கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. கழகத் தலைவர் செயலவையில் இதை அறிவித்தார். 30.04.2022 சனிக்கிழமை – சென்னை 02.05.2022 திங்கள் கிழமை – விழுப்புரம் 04.05.2022 புதன் கிழமை – மயிலாடுதுறை 06.05.2022 வெள்ளிகிழமை – தஞ்சாவூர் 06.05.2022 வெள்ளிக்கிழமை – சேலம் 07.05.2022 சனிக்கிழமை – திருச்சி 09.05.2022 திங்கள் கிழமை – ஈரோடு 10.05.2022 செவ்வாய் கிழமை – வேலூர் 11.05.2022 புதன் கிழமை – கோவை 13.05.2022 வெள்ளி கிழமை – மதுரை 14.05.2022 சனி கிழமை – தூத்துக்குடி மாநாட்டிற்கான பொறுப்பாளர்கள் : தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி : மாசிலாமணி, குறுப்பலாய்பேரி மதுரை, சிவகங்கை, தேனி :  மா.பா மணியமுதன் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் : மனோகரன், தாமோதரன் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை : சாக்கோட்டை இளங்கோ, பேராவூரணி திருவேங்கடம், பாரி மயிலாடுதுறை, நாகை, கடலூர் :...

கரூர்-க.பரமத்தியில் எழுச்சி நடைபோட்ட கழகக் கொடியேற்று விழா – கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

கரூர்-க.பரமத்தியில் எழுச்சி நடைபோட்ட கழகக் கொடியேற்று விழா – கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

22.03.2022 செவ்வாய்கிழமை கரூர் மாவட்டத்தில் கழகக் கொடியேற்று விழா தி.க.சண்முகம் தலைமையில் காலை 11.00 மணிக்கு துவங்கி மாலை வரை நடை பெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தென்னிலை சமத்துவபுரம், மலைச்சியூர் பிரிவு, சின்னதாராபுரம் பேருந்து நிலையம், அமராவதி ஆற்றுப் பாலம், டி.வெங்கிடாபுரம், இராஜபுரம் பிரிவு, அரவக்குறிச்சி பேருந்து நிலையம், தேர்வீதி, வட்டாட்சியர் அலுவலகம் அருகில், பள்ளபட்டி, அண்ணாநகர், தடா கோவில் ஆகிய 11 இடங்களில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். கொடியேற்று நிகழ்வில், தமிழன் சு.கவின்குமார், ராம்ஜி (எ) தொல் காப்பியன், இரா.காமராஜ், மலைக் கொழுந்தன், ந.முத்து மருதநாயகம், சிலம்பம் கொ.சரவணன், பெ.ரமேஷ், பெ.குமரேசன், ர.ராகவன், பிரசன்னா, தா.பெரியசாமி, நாகராஜ் அரவக் குறிச்சி ஆகிய தோழர்கள் உடனிருந்தனர். மாலை 06.00 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம், கழகத் தோழர் வடிவேல் இராமசாமி தலைமையில் நடை பெற்றது. பொதுக் கூட்டம் துவங்கும் முன்...

ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு (2) ‘மத அடிப்படை வாதம்’ வளருவது சமூக அமைதியை சீர்குலைத்து விடும்

ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு (2) ‘மத அடிப்படை வாதம்’ வளருவது சமூக அமைதியை சீர்குலைத்து விடும்

ஃபாரூக் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் தலைமை உரை. (சென்ற இதழ்  தொடர்ச்சி) ஃபாரூக் கொலையில் இருந்து நாம் பார்த்தோம். அதில் பல பேர் கண்டனம் தெரிவித்தார்கள். சென்னையில் ஒரு கண்டனக் கூட்டத்தை சில இஸ்லாமியர்கள் நல்லெண்ணத்தோடு முயற்சி எடுத்து நடத்தினார்கள்.  கோவையில் நடக்கும் என்றார்கள். கோவையில் யாரும் இப்படி கண்டனக் கூட்டம் நடத்தவில்லை. அந்த வருத்தம் எங்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஒருபுறம் இருந்தாலும், எந்த ஒன்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது அல்ல; விமர்சனத் திற்கு அப்பாற்பட்டது அல்ல; பெரியாரையும் சேர்த்துத் தான் சொல்கிறோம். இஸ்லாமியர்கள் ஒரு வேளை இங்கே கேள்வி கேட்க வந்திருந்தாலும் நீங்கள் கேளுங்கள். நிகழ்ச்சி முடிந்த பின், உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும். நீங்கள் பேசுங்கள், உங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப் படும். அதில் ஒன்றும் எங்களுக்கு தயக்கமே கிடையாது. ஒருவேளை எங்கள் கருத்து தவறாக...

கழக செயலவை ஈரோட்டில் ஏப்.3இல் கூடுகிறது

கழக செயலவை ஈரோட்டில் ஏப்.3இல் கூடுகிறது

எதிர்கால செயல் திட்டங்களை உருவாக்கிடவும் கடந்தகால செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தவும் கழக அமைப்புகளின் செயல்பாடுகளை பரிசீலிக்கவும் திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை 3.4.2022 ஞாயிறு காலை 10 மணியளவில் ஈரோட்டில் கூடுகிறது. செயலவை உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இடம் : கே.கே.எஸ்.கே. திருமண மகால், பவானி ரோடு. தோழமையுடன் கொளத்தூர் மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் குறிப்பு: செயலவை உறுப்பினர்கள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா புத்தகங்களை பெயர், முகவரி மற்றும் உரிய தொகையோடு செயலவையில் மீதமுள்ள சந்தா புத்தகங்களை ஒப்படைக்க தயாராக வருமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 24032022 இதழ்

கருத்துச் செறிவுடன் நடந்த ஃபாரூக் நினைவு சிந்தனை அரங்கம்

கருத்துச் செறிவுடன் நடந்த ஃபாரூக் நினைவு சிந்தனை அரங்கம்

இஸ்லாமிய மத அடிப்படை வாதத்திற்குப் பலியான மனிதநேயன் ஃபாருக் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின், சிந்தனை அரங்கம் 19.03.2022 சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்வை தலைமையேற்று வழிநடத்தினார். ‘இஸ்லாத்தில் நாத்திகர்கள்’ என்ற தலைப்பில் இந்திய முற்போக்காளர்கள் கூட்டமைப்பு – ஜின்னா மாச்சு, ‘அறிவியலுக்கு முரணான கிருஸ்துவம்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கூடம் – நாத்திக வசந்தன், ‘இந்து மதமும் – பெண்களும்’ என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் இரா. உமா, ‘இஸ்லாமும் பெண்களும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பீர் முகமது, முன்னாள் முஸ்லீம் அமைப்பைச் சார்ந்த உமர் – ஹிஜாப், இஸ்லாத்தில் பெண்களின் அவலங்களைப் பற்றியும் உரையாற்றினர். இறுதியாக ‘மானுடத்துக்கு மதம் தேவையா?’ என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். நிகழ்விற்கு ஃபாருக் நண்பர் மணிவண்ணன் நன்றி கூறினார்....

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாதன் 95ஆவது அகவை நாள் விழா

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாதன் 95ஆவது அகவை நாள் விழா

திவிக ஈரோடு தெற்கு மாவட்ட ஆலோசகரும், பெரியாரின் பெருந் தொண்டரும், பெரியார் விருதாளருமான இனியன் பத்மநாதன் 95 ஆவது அகவை நாள் விழா, திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக 06.03.2022 ஞாயிறன்று மகிழ்வும், நெகிழ்வும் சூழ கொண்டாடப்பட்டது. விழாவின் வரவேற்புரை யை மாவட்ட அமைப்பாளர் பெ.கிருஷ்ணமூர்த்தி வழங்க கழகத்தின் மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் இதுபோன்ற நிகழ்வின் அவசியத்தையும், மூத்த கழகச் செயல்பாட்டாளர்களை அடையாளங்கண்டு அவர்களை போற்ற வேண்டியது பற்றியும் உரையின் வழியே பகிர்ந்து கொண்டார்கள். மாவட்டச் செயலாளர் யாழ் எழிலன், ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நாத்திகஜோதி, வேணுகோபால், வேல்முருகன், ராசிபுரம் பிடல் சேகுவேரா, சுமதி, விருதுநகர் செந்தில், கடலூர் போதி சத்வா, திருப்பூர் தனபால், திமுக தொழிற் சங்கத்தைச் சார்ந்த இராவணன் உள்ளிட்ட பிற மாவட்டக் கழகத் தோழர்களும் வருகை தந்து இனியன்...

ஆயக்குடியில் பெரியாரியல் கொள்கை விளக்கக் கூட்டம்

ஆயக்குடியில் பெரியாரியல் கொள்கை விளக்கக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 11-3 – 2022 அன்று புது ஆயக்குடி அரிசி ஆலை பகுதியில் உள்ள வ.பழனிச்சாமி நினைவுத் திடலில் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு புது ஆயக்குடி பகுதி தோழர் வே.சங்கர் தலைமை வகித்தார். ஒட்டன்சந்திரம் தங்கவேல் முன்னிலை வகித்தார். நிகழ்வின்தொடக்கமாக ஆயக்குடி பகுதி பொறுப்பாளர் சு.அழகர்சாமி மந்திரமா? -தந்திரமா?அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தி, சாமியார்கள் செய்வது மந்திரமல்ல மக்களை ஏமாற்றும் தந்திரமே என்று செய்து காட்டினார். அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட தோழர் சண்முகம், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தொழில் முனைவோர் மோடியின் ஆட்சியில் சந்திக்கும் இடர்களை குறித்து விளக்கினார். தொடர்ந்து உரையாற்றிய கழக பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் படும் வேதனைகளையும், விளக்கினார். அடுத்து உரையாற்றிய அமைப்புச்...

சூர்யா திரைப்படம் பா.ம.க. மிரட்டலுக்கு பதிலடி

சூர்யா திரைப்படம் பா.ம.க. மிரட்டலுக்கு பதிலடி

செஞ்சி பாலசரவணா திரையரங்கில் 9.3.2022 அன்று நடிகர் சூரியா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று பா.ம.கவினர் கடிதம் முலம் மிரட்டல் விடுத்தனர். கடிதத்தை திரையரங்க உரிமையாளர் காவல்துறைக்கு அனுப்பி உள்ளார் . மறுநாள் 10.03.2022 பா.ம.கவினர் திரைப் படம் திரையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரையரங்கிற்கு ஒருநாள் பாதுகாப்பாக காவல்துறையினர் இருந்தனர். படம் பார்க்க வந்த ரசிகர்கள் மற்றும் மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். பா.ம.கவினர் தொடர் மிரட்டலால் திரைப்படம் வெளியிடவில்லை. 11.03.2022 அன்று அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிபாண்டியன், படம் பார்க்கச் சென்று கேட்டபோது நடந்த நிகழ்வுகளை சொல்லி படம் வெளியிட முடியாது என்றனர். அ.ம.கட்சியினர் வெளியிட சொல்லி கோசங்களை எழுப்பினர். நியூஸ் செவன் தொலைக்காட்சிக்கு அ.ம.கட்சி மழை மேனி பாண்டியன் பேட்டியளித்தார். இந்த தகவலறிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பெரியார் சாக்ரடீஸ் அரசியல் கட்சிகள் இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை...

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் தில்லை தீட்சதர்களை கைது செய்க!

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் தில்லை தீட்சதர்களை கைது செய்க!

தில்லை சிற்றம்பல மேடையில் தலித் ‘பெண்’ வழிபாட்டு உரிமையைத் தடுத்து நிறுத்திய தீட்சதர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தீட்சதர்களை சட்டப்படி கைது செய்யக் கோரியும், நடராசன் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வற்புறுத்தியும்  சென்னையில் மார்ச் 11, 2022 பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும் எங்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை; ஆனால் நம்பிக்கை யாளர்கள் உரிமைகளைத் தடைப்படுத்துவதை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டனர். மனித உரிமைகளுக்கு எதிராக நம்பிக்கைகள் திணிக்கப்படும்போது அதை கண்டிக்கிறோம். தில்லையில் தலித் பெண் சிற்றம்பல மேடையில் வழிபடுவது அவரது மனித உரிமை; அதைத் தடுப்பது தீண்டாமைக் குற்றம்; மனித உரிமைக்கு எதிரானது; தமிழில் பாடுவது மனித உரிமை; அதைத் தடுப்பது மனித உரிமைக்கு எதிரானது; ஹிஜாப் அணிவதும் அணிய விரும்பாததும் அவர்கள் மனித உரிமை; அதைத்...

மின்னூல் தொகுப்பு

மின்னூல் தொகுப்பு

பல்வேறு காலகட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடுகள், பரப்புரைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் தலைவர்களால் பேசப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் அடங்கிய மின்னூல் தொகுப்பு. புத்தகத்தை பெரியார் முழக்கம் பிப் 10, 2022 இதழில் மொத்தமாக 52 புத்தக பட்டியல் வெளிவந்து கழகத் தோழர்களால் பெருவாரியாக பதிவிறக்கி படிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக  இணைய தளப் பிரிவின் முயற்சியால் மேலும் 45 புதிய தலைப்புகளில் மின்னூலாக்கி பதிவேற்றி உள்ளோம். கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம்.   http://dvkperiyar.com/?page_id=17518 கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல் பட்டியல்: 1. இந்துக்களின் விரோதி யார்? நண்பன் யார்? சிற்றுரைகள் தொகுப்பு 1; 2. கசக்கும் ஒன்றிய(ம்) அரசு – விடுதலை இராசேந்திரன்; 3. கீதையின் வஞ்சகப் பின்னணி – விடுதலை இராசேந்திரன்; 4. சினிமா கண்டு வந்தவன் – விடுதலை இராசேந்திரன்; 5. மக்களைக் குழப்பும்...

ஹிஜாப் – பா.ஜ.க. மிரட்டலுக்கு பதிலடி: மதுரையில் கருத்தரங்கம்

ஹிஜாப் – பா.ஜ.க. மிரட்டலுக்கு பதிலடி: மதுரையில் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் – தமிழ் தேச மக்கள் முன்னணி இணைந்து நடத்திய “மத வெறியர்களால் தூண்டப்படும் ஹிஜாப் அரசியல்” கருத்தரங்கம் மேலூரில் உள்ள ரஹ்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி வரவேற்புரையாற்றினார். தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்டத் தலைவர் ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட செயலாளர் மா.பா மணி அமுதன் தலைமை தாங்கினார். அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன். பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு அரசின் முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வாஞ்சி நாதன், தமுமுக (ஹைதர் அலி) மாவட்ட துணைச் செயலாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள்.. தமுமுக (ஹைதர் அலி ) மாவட்ட பொறுப்பாளர் பக்ருதீன் நிகழ்விற்கான பல உதவிகளை செய்து கொடுத்தார்...

நாமக்கல் மாவட்டம் வழி காட்டுகிறது; கழக ஏட்டுக்கு 86 சந்தாக்கள்

நாமக்கல் மாவட்டம் வழி காட்டுகிறது; கழக ஏட்டுக்கு 86 சந்தாக்கள்

நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 4.3.2022 அன்று காலை 11 மணி யளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, மாநிலப் பொருளாளர் சு.துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், காவை ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் முதல் கட்டமாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான 86 சந்தா தொகை 21500 கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது. கலந்துரையாடலில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மடத்துக்குளம் மோகன், தலித் சுப்பையா ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இயக்க வளர்ச்சிக்கு மாதம் ஒருமுறை தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. புதிய பொறுப்பாளர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். குமாரபாளையம் நகர செயலாளராக செ.வடிவேல் செயல்படுவார் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய அமைப்பாளராக விஜயகுமார் மட்டுமே செயல்படுவார் என தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன்,...

‘நீட்’ எதிர்ப்பு மசோதாவைக் கிடப்பில் போடாதே; ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

‘நீட்’ எதிர்ப்பு மசோதாவைக் கிடப்பில் போடாதே; ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ‘நீட் விலக்கு’ மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்தும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்ப பெறக்கோரியும், சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம், 28.02.2022 அன்று காலை 11:30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டம் திராவிடர் தமிழர்கட்சி சார்பில் நடைபெற்றது. திராவிடர் தமிழர்கட்சித் தலைவர் வெண்மனி முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். நிகழ்வில், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தார். விடுதலை இராசேந்திரன் “ஆளுநர் எவ்வளவு நாள் இந்த மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறாரோ அவ்வளவு நாள் வரை இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். இதற்கு முன் ஆளுநராக இருந்தவர், அதிமுக அனுப்பிய நீட்விலக்கு மசோதாவை நீண்ட நாட்கள் கிடப்பில் வைத்திருந்தார். பின், நீதிமன்றம் தலையிட்டது. அதற்குப் பிறகு, இந்த மசோதாவிற்கு...

தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் முதல்வர்!

தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் முதல்வர்!

வரலாறு, தலைவர்களை உருவாக்கி வருகிறது; தமிழ்நாட்டு அரசியல் களம் பல தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. காலத்தின் அறைகூவலுக்கு முகம் கொடுத்து, மக்களின் மனதை வென்ற தலைவர்களை தமிழ்நாட்டில் பட்டியலிட வேண்டும் என்றால் காமராசரிடமிருந்து தொடங்க வேண்டும். அடுத்து அண்ணா; அடுத்து கலைஞர்; அடுத்து எம்.ஜி.ஆர்., அடுத்து ஜெயலலிதா. தமிழ்நாட்டின் அரசியல் தலைமை, கலைஞர் எம்.ஜி.ஆர். என்ற நிலையிலிருந்து எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கலைஞர் – ஜெயலலிதா என்ற ஆளுமைகளிடம் வந்து சேர்ந்தது. இருவரும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில் தமிழ்நாட்டின் சமூக அரசியல் வரலாற்றுப் போக்கை மாற்றி அமைத்த ‘பெரியார்-அண்ணா கலைஞரின்’ திராவிட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வர சனாதன சக்திகள் திட்டமிட்டுக் காய் நகர்த்தின. அப்போது அவர்கள் ஒரு கருத்தைப் பரப்பினார்கள். “தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகி விட்டது; அதை நிரப்பக் கூடிய தலைமை இல்லை” என்ற குரல் தமிழகமெங்கும் ஒலித்தது. அதற்குப் பின்னால் மாபெரும் ‘சனாதனச் சதி’ பதுங்கியிருந்தது...