ஆம்ஸ்ட்ராங் வீட்டில் கழகத் தலைவர்

அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சமூக விரோதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, 20.07.2024 அன்று காலை 10:30 மணியளவில் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொண்டார்.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்தனர்.

பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்

You may also like...