பகுத்தறிவாளர் வி.பி.சண்முகசுந்தரம் மறைவு; கழகத் தலைவர் மரியாதை

கோபி : மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சீரிய பகுத்தறிவாளர் வி.பி. சண்முகசுந்தரம் 20.07.2024 அன்று முடிவெய்தினார்.
இந்நிலையில் 28.07.2024 அன்று கோபியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அன்பழகன் IAS, மதிமுக மாவட்டச் செயலாளர் கந்தசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட கழகத் தோழர்களும் ஆறுதல் தெரிவித்தனர்.

பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

You may also like...