கழகத் தோழர் மதிவாணன் முடிவெய்தினார்

கோவை : வட சென்னையில் வசித்து வந்த கழகத் தோழர் மதிவாணன், 28.07.2024 அன்று அவரது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென முடிவெய்தினார். அவரின் பூர்வீகம் கோவை என்பதால் அவரது உடல் கோவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கோவை குறிச்சி அண்ணா நகரில் உள்ள மயானத்தில் எந்தவித மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளை கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், கழக மாநகர அமைப்பாளர் கிருட்டிணன், கழகத் தோழர் சதிஷ்குமார் ஆகியோர் மேற்கொண்டனர்.
தோழரின் உடலுக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர், குமரேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செந்தில்குமார் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தோழர் மதிவாணன் பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுப் பணியாற்றி வந்தவர் என்பதால் அவரது உடலை எந்த மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் முழு மனதுடன் ஒப்புக் கொண்டனர்.

பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

You may also like...