புதிய குற்றவியல் சட்டங்களின் ஆபத்துகள் விளக்கக் கருத்தரங்கம்

பொள்ளாச்சி: சமஸ்கிருத பெயரிலான நஞ்சு தடவிய மூன்று குற்றவியல் சட்டங்களை அனுமதியோம்! சிறப்புக் கருத்தரங்கம் 28.07.2024 அன்று பொள்ளாச்சி பர்வானா அரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு பொள்ளாச்சி யாழ்.வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். சபரிகிரி வரவேற்புரையாற்றினார். அரிதாசு முன்னிலை வகித்தார்.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலாளர் வழக்குரைஞர் ச.பாலமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் கா.சு.நாகராசன், மக்கள் விடுதலை முன்னணி தலைவர் கா.மாரிமுத்து, தமிழ்நாடு தன்னுரிமை மீட்புக் கழகம் வழக்குரைஞர் சேதுபதி, திராவிடர் கழகம் மாரிமுத்து, தமிழ்ப்புலிகள் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வானுகன், புரட்சிகர இளைஞர் முன்னணி வழக்குரைஞர் மலரவன் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினார்கள்.
நிறைவாக வினோதினி நன்றி கூற கருத்தரங்கம் நிறைவு பெற்றது.
இதில் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு, உடுமலை இயல், ஆனந்த், கணேசு, நடராஜ், மணி, ரூபா மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர்‌ பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

You may also like...