கழகத் தோழர் இளவரசனுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் வட சென்னை கழகத் தோழர் இளவரசனுக்கு பாராட்டு விழாவானது 19.07.2024 அன்று சேத்துப்பட்டு சமூக நலக் கூடத்தில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது..
நிகழ்விற்கு சிகாமணி, தனசேகர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

கழகத் தோழர் அருள்தாஸ் பெரியார் – அம்பேத்கர் பாடல்களை பாடினார்.
இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், விசிக மையச் சென்னை (கி) மாவட்டச் செயலாளர் பி.சாரநாத், விசிக மையச் சென்னை (வ) மாவட்டச் செயலாளர் இளங்கோ, மக்கள் அதிகாரம் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
பா.இராஜன் நன்றி கூற நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது..
இந்த இனிய நிகழ்வில் கழகத் தோழர்கள் – உறவினர்கள் – சட்டக் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு தோழர் இளவரசனை வாழ்த்தினர்..
முன்னதாக சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பண்டித அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் அண்மையில் சமூக விரோதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார்..

பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்

You may also like...