மக்கள் திரளில் நடைபெற்ற தாரமங்கலம் பொதுக்கூட்டம்.!
திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில்.. “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” பொதுக்கூட்டம் டிசம்பர் 14,.2025 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு தாரமங்கலம் அண்ணாதிடல் (சின்னப்பம்பட்டி சாலை) பகுதியில் மக்கள் பேராதரவுடன் நடைபெற்றது. சி.தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார். (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்),டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) , குடந்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தோழர் சிற்பி ராசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்கள், பெண்கள் என அனைவரையும் கவனம் ஈர்க்கச் செய்து மிகுந்த வரவேற்பை பெற்றது. பொதுக்கூட்டத்தில் கே.ஆர்.தோப்பூர் கண்ணன், (சேலம் மாநகரச்...
