இளம்பிள்ளையில் கலந்தாய்வு கூட்டம்

இளம்பிள்ளை நகர திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 08.07.2024 அன்று இளம்பிள்ளையில் மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் கடையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் முன்னிலையிலும் நடைபெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் 05.07.2024 அன்று படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இளம்பிள்ளை நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி இளம்பிள்ளையில் பொதுக் கூட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் சேலம் (கி) மாவட்டச் செயலாளர் டேவிட், மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம், நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் (கி) மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, இளம்பிள்ளை நகரத் தலைவர் ரமேஷ், சௌந்தரராஜன், தனசேகர், கோபி, திவ்யா, தமிழ்மணி, தமிழ், கவியரசு, சேகர், ரவி, ஜெகன், குட்டி, தங்கராஜ், அன்பு, மணிமாறன், மோகன்ராஜ், சதாசிவம், விஜி, நங்கவள்ளி நகரச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்

You may also like...