மகளிர் தினம் – கழகப் பெண்கள் துண்டறிக்கை பிரச்சாரம்!

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிர் தின வாழ்த்துகள் கூறி 2000 துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.

08.03.25 அன்று மேட்டூர் அரசு கலைக் கல்லூரி முன்பு கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் சுதா, மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், தேன்மொழி, முத்துராஜ், இராமச்சந்திரன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் ஆகியோரும், வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், இந்திராணி, நந்தினி ஆகியோர்களும், கொளத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரசுவதி, தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், அழகேஸ்வரி, கோமதி ஆகியோர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள், இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

08.03.25 அன்று தொடர்ந்து சேலம் மாநகர் செளடேஸ்வரி மகளிர் கல்லூரி முன்பு சேலம் மாநகரத் தலைவர் மோ.பாலு, செயலாளர் ஆனந்தி, பொருளாளர் பிரபு, அமைப்பாளர் தேவராசன், சுதர்சன் ஆகியோரும், இளம்பிள்ளையில் சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திவ்யா, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, கோபி, அசோக் ஆகியோரும், மேச்சேரி பேருந்து நிலையத்தில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரபாகரன், அமைப்பாளர் சிவ சண்முகம், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள், இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்தனர்.

பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் துண்டறிக்கையைப் பெற்று பெரியாரும் பெண்ணுரிமையும் பற்றிய செய்தியை படித்தனர். மகளிர் தின நிகழ்வுக்கான பணியை சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுதா அவர்கள் முன்னின்று நடத்தினார். பெரியார் முழக்கம் 13032025இதழ்

You may also like...