கலைஞர் 100 ; வரலாற்றுப் பக்கங்களில் இருந்து (2) கலைஞர் முதல்வராக விரும்பிய பெரியார்
1952-இல் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒருவருக்கொருவர் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒரே பாணியில் போராட்டம் நடத்தினர். திருச்சி ரயில் நிலையத்தில் பெரியாரும் கலைஞரும் ஒன்றாக நின்று இந்தி எழுத்துக்களை கறுப்பு மை பூசி அழித்தனர். 1952-இல் கலைஞர் கதை, வசனம் எழுதி வெளியான பராசக்தி திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி அடைந்தது. சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் அதுதான். கிட்டத்தட்ட 72 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்றளவிலும் பராசக்தி திரைப்படத்தின் வசனங்கள் பேசப்படுகின்றன. 1953-இல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் கலைஞரின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமானது. ராஜாஜியின் குலக்கல்வி திட்ட எதிர்ப்பு, தமிழர்கள் பற்றிய நேருவின் கருத்துக்கு எதிர்ப்பு, டால்மியாபுரம் ரயில் நிலையத்தை கல்லக்குடி என பெயர் மாற்றுவது இப்போராட்டத்தின் நோக்கம். ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ என நாகூர்...