பெரியார் எனும் பெருநெருப்பு மாநாடு போல் நடந்த கொளத்தூர் கருத்தரங்கு
கொளத்தூரில் நடந்த ‘பெரியார் எனும் பெருநெருப்பு’ கருத்தரங்கம் மாநாடு போல் எழுச்சியுடன் நடந்தது. அரங்கம் நிரம்பி வழிந்த்து. சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஆகஸ்ட்17-ல் கே.வி.ஆர் மண்டபத்தில் ஈசுவரன் (தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு கோவிந்தராஜ் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் இணைந்து பகுத்தறிவு பாடல்கள் பாடினார்கள். கொளத்தூர் இளைஞரணி தோழர் குமரேசன் வரவேற்புரையாற்றினார், ஆசிரியர் செல்வேந்திரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். மிதுன் சக்கரவர்த்தி (திமுக மேற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளர்) கருத்தரங்கத்தில் ஏராளமான தோழர்களுடன் கலந்து கொண்டு கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் அவசியத்தை பாராட்டி பேசினார். மில்டன்: பேரலை வலையொளி மில்டன் தனது உரையில்; பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதை திருமணம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது என்று குறிப்பிட்டார். ஜாதி கட்டமைப்பையும் பெண் அடிமையையும் சமூகத்தில் அது அசைத்தது. இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது மொழித் திணிப்பு எதிர்ப்பு மட்டுமல்ல! அது பண்பாட்டுத்...
