Category: திவிக

சேலம் மாவட்டக் கழகம் தொடர் பரப்புரை                                          ஜாதிப் பெருமை பேசாதீர்!

சேலம் மாவட்டக் கழகம் தொடர் பரப்புரை ஜாதிப் பெருமை பேசாதீர்!

ஜாதிப் பெருமை அல்ல அது அவமானம் ஜாதிப் பெருமை பேசாதீர் அது மீண்டும் நம்மை அடிமையாக்கிவிடும் என்றும் மக்களிடம் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாடு முழுதும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை செய்து வருகிறது. உலகம் முழுதும் மனிதர்கள் பிறக்கிறார்கள் இந்த நாட்டில் மட்டும் தான் மனிதப் பிறவியோடு ஜாதி அடையாளமும் சேர்ந்து பிறக்கிறது. அந்த ஜாதியே சமூகத்தைப் பாகுப்படுத்துகிறது. ஜாதி அமைப்புக்குள் நாம் மூழ்கிக் கிடந்தால் பார்ப்பனியத்தின் அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறோம் என்று அதன் பொருள். கடந்த தலைமுறைகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதியைப் படிக்க விடவில்லை. ஜாதித் தொழிலை கட்டாயப்படுத்தினார்கள். இதிலிருந்து மீண்டு படித்து, ஜாதித் தொழிலில் இருந்து விடைபெற்ற பிறகு நாம் ஜாதிப் பெருமையை பேசிக் கொண்டிருக்கலாமா? வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே மனம் விரும்பி திருமணம் செய்தால் அதை தடுக்கலாமா? கழகத் தோழர்கள் அடுக்கடுக்கான கேள்வியை மக்கள் மன்றத்தில் எழுப்பி வருகிறார்கள். சேலம் இளைஞர் அணியின் சார்பில் “மனிதம் நமது...

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக;                       கடலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக; கடலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

“மனிதம் நமது அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் ஜாதி ஆணவப் படுகொலை தொடர்ந்து செய்து வரும் ஜாதி வெறியர்களை கண்டித்தும் கடுமையான சிறப்பு சட்டம் இயற்றிட தமிழ்நாடு அரசையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார் சிவா தலைமையில் ஆகஸ்டு-16 அன்று கடலூர் மஞ்சகுப்பம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), தொடக்கவுரையாற்றினார். இள.புகழேந்தி (வழக்குரைஞர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க), திருமூர்த்தி (வழக்குரைஞர் சென்னை உயர்நீதி மன்றம்), லோகு.அய்யப்பன்(தலைவர் புதுச்சேரி திவிக), லூசியா (வழக்குரைஞர் ஆற்றல் மாநில ஒருங்கிணைப்பாளர்), தி.ச திருமார்யன் ( வழக்குரைஞர் விசிக மாநில அமைப்புச் செயலாளர்), எழிலேந்தி (மாவட்ட செயலாளர் தி.க), கார்ல் மார்க்ஸ் (வழக்குரைஞர் பாலா பேரவை), புதுவை பிரகாஷ் (தலைவர் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), ராஜா (ஒருங்கிணைப்பாளர் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), பாலு (மாநில தலைமை குழு உறுப்பினர் மக்கள் அதிகாரம்),...

அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கோவை கெம்பனூர் கிராமத்தில் தொடரும் பேருந்து தீண்டாமை

அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கோவை கெம்பனூர் கிராமத்தில் தொடரும் பேருந்து தீண்டாமை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் ஓரளவு பெரிய கிராமம். இந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் பகுதியின் மத்தியில் பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம், அடுத்து 500 மீட்டர் தொலைவில் இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் வாழும் பகுதி அண்ணா நகர் என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. கெம்பனூருக்கு 21, 21b இரண்டு பேருந்துகள்தான். ஆனால் தற்போது 64D,1C, பேருந்துகள் செல்கின்றன, இடைப்பட்ட காலத்தில் 94 பேருந்து சென்றது. கொரானோ காலத்துக்குப் பிறகு செல்வது இல்லை. பொதுவாக மேலோட்டமாக பார்க்கும் போது அண்ணா நகருக்கு 21B காலை 8:30க்கு ஒரு முறையும் 1C ஒரு முறையும் 64D மூன்று முறையும் தானே செல்கிறது பிறகு என்ன பிரச்சனை என்று நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மை நிலை 21 காலை...

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

பெரியார் மீதான அவதூறுகளை மறுக்கும் ஆங்கில நூல் வெளியீடு – சிந்தனையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது

People’s literature பதிப்பகம் வெளியிட்டுள்ள “Periyar: Caste, Nation and Socialism” நூலின் அறிமுக விழா, (24.8.25), சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்தினார். பெரியார் மீது எழும் கேள்விகள் அல்லது குற்றச்சாட்டுகள், அல்லது மனதறிந்து பேசுகிற பொய்கள் எல்லாவற்றையும் விளக்கும் நோக்கத்தோடு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கரின் பார்வைகள், புத்தம் குறித்த பெரியார், அம்பேத்கர் கருத்துக்கள் ஆகியவற்றை முதன்மை தலைப்பாக பதிவு செய்துள்ளார். ரங்கூன் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் கலந்து கொண்ட செய்திகளையும், வன்முறைக்கு எதிராக பெரியார் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வை தொகுத்து வழங்கினார். கோவி. கனக விநாயகம் (துணைப் போராசிரியர், எஸ்.ஆர்.எம் சட்டக் கல்லூரி , சென்னை) பேசுகையில், எளிய மொழிநடையில், கேள்வி பதிலாக தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல். 21ம் நூற்றாண்டில் திராவிடர் இயக்கத்துக்கு கிடைத்த ஆவணம் இந்த நூல் என்று வாழ்த்துரை வழங்கினார்....

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்!

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்!

16.08.2025 மாலை 6.00 மணிக்கு நங்கவள்ளியில் கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) இல்லத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார். கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை வகித்தார். கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய கலந்துரையடால் தொடங்கியது. கூட்டத்தில் எடுக்கபட்ட தீர்மானங்கள்: 1). மேச்சேரியில் 03.08.2025 அன்று சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் நடைபெற்று முடிந்த “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கத்திற்கான வரவு, செலவு கணக்கு சார்பார்க்கப்பட்டது. வரவு- 74,500, செலவு- 70,160, மீதி= 4,340 2). சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் எதிர்வரும் 22.08.2025 வெள்ளி அன்று ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும் இறுதியாக நிறைவுக் கூட்டம் ஓமலூரில் பொதுக் கூட்டமாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ), சிவ சண்முகம்...

களம் இறங்கிறது சென்னை இளைஞரணி!

களம் இறங்கிறது சென்னை இளைஞரணி!

சென்னை மாவட்ட இளைஞர் அணி சார்பாக “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள் என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, செப்டம்பர்-17 தேதி வரை தொடர் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், சைதாப்பேட்டை, தியாகராயர் நகர், எம்.ஜி.ஆர் நகர், அம்பத்தூர், அமைந்தகரை, வேளச்சேரி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. 10 நாட்கள் தினமும் மாலை 5 மணியளவில் தெருமுனைக் கூடட்ங்கள் நடைபெறும். தெருமுனைக் கூட்டங்களில் கழகத் தோழர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் கருத்துரை ஆற்ற உள்ளனர். செப்-17 நிறைவு பொதுக் கூட்டம் இராயப்பேட்டை பெரியார் படிப்பகம் அருகில் நடைபெறும். இளைஞர்களே ஜாதியை தகர்த்தெறிவோம்! சமத்துவ சமுதாயம் படைப்போம் வாரீர்!

குமரி மாவட்டத்தில் கழக கலந்துரையாடல் கூட்டம்

குமரி மாவட்டத்தில் கழக கலந்துரையாடல் கூட்டம்

24.08.2025 அன்று மாலை 04.00 மணியளவில் தக்கலை அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் குமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் தி.வி.க.வின் களப்பணியினை தொடங்க வேண்டும் என்ற குமரி மாவட்ட தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெற்ற கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இயக்கம் செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்கண்ட தோழர்கள் மாவட்டத் தலைவர் – ஜா. சூசையப்பா மாவட்டச் செயலாளர் – நீதியரசர், மாவட்ட பொருளாளர் – ரமேஷ்பாபு, செய்தி தொடர்பாளர் – தமிழ்மதி ஆகியோர் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தோழர்கள் இயக்கத்தில் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என்றும் மாத சந்தாவாக ரூ – 100/- வசூலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. முன்னாள் மாவட்டச் செயலாளர் தமிழ்மதியிடம் கையிருப்பு தொகை ரூ. 4,660 இருப்பதை முறையான வரவு செலவு கணக்கினை கூட்டத்தில்...

பெரியார் எனும் பெருநெருப்பு                    மாநாடு போல் நடந்த கொளத்தூர் கருத்தரங்கு

பெரியார் எனும் பெருநெருப்பு மாநாடு போல் நடந்த கொளத்தூர் கருத்தரங்கு

கொளத்தூரில் நடந்த ‘பெரியார் எனும் பெருநெருப்பு’ கருத்தரங்கம் மாநாடு போல் எழுச்சியுடன் நடந்தது. அரங்கம் நிரம்பி வழிந்த்து. சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஆகஸ்ட்17-ல் கே.வி.ஆர் மண்டபத்தில் ஈசுவரன் (தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு கோவிந்தராஜ் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் இணைந்து பகுத்தறிவு பாடல்கள் பாடினார்கள். கொளத்தூர் இளைஞரணி தோழர் குமரேசன் வரவேற்புரையாற்றினார், ஆசிரியர் செல்வேந்திரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். மிதுன் சக்கரவர்த்தி (திமுக மேற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளர்) கருத்தரங்கத்தில் ஏராளமான தோழர்களுடன் கலந்து கொண்டு கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் அவசியத்தை பாராட்டி பேசினார். மில்டன்: பேரலை வலையொளி மில்டன் தனது உரையில்; பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதை திருமணம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது என்று குறிப்பிட்டார். ஜாதி கட்டமைப்பையும் பெண் அடிமையையும் சமூகத்தில் அது அசைத்தது. இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது மொழித் திணிப்பு எதிர்ப்பு மட்டுமல்ல! அது பண்பாட்டுத்...

இரசாயன விநாயகர் சிலைகளுக்குத் தடை கோரி கழகம் மனு

இரசாயன விநாயகர் சிலைகளுக்குத் தடை கோரி கழகம் மனு

திருப்பூர்: 08-08-2025 அன்று திருப்பூர் மாவட்டக் கழகம் சார்பக காலை 10 மணி அளவில் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்று சொல்லக் கூடிய வேதி பொருட்கள், இரசாயன பொருட்கள், சுட்டகளிமண் போன்ற பொருட்களால் விநாயகர் சிலைகளை தயாரிக்க கூடாது. அவ்வாறு இரசாயனம் கலந்து தயரிக்கப்பட்ட சிலைகளை நீரில் கரைத்து நீர்நிலைகளை மாசுபடுத்துவதை தடுக்க வேண்டும் அரசு முறையாக கண்காணித்து நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என வழியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் முகில் ராசு (மாவட்டத் தலைவர்) தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. நிகழ்வில் சு.துரைசாமி (கழகப் பொருளாளர்), மாதவன் (மாநகரச் செயலாளர்), வீ.தனபால் (மாநகரத் தலைவர்), முத்து (மாநகர அமைப்பாளர்), அய்யப்பன் (வடக்கு ஒன்றியச் செயலாளர்) தமிழமுதன் (உளவியலாளர்) மற்றும் தோழர்கள் இனியன் வசந்தி, பெரியார் பிஞ்சு மகிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 14.08.2025 அன்று மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில்...

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

கழகம் தொடங்கிய ஆக-12-ல் தோழர்கள் கொடியேற்று விழா

சென்னை: கழகம் 14-ம் ஆண்டு துவக்க விழா சென்னை மாவட்டக் கழகம் சார்பில் இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவு படிப்பகத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கொடியோற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கழகத் தோழர்கள் தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்),வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), ம.கி எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ப.அருண்( இளைஞரணி அமைப்பாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வடசென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), த.நா சூர்யா (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் தோழி, குறளரசி மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 12.08.2025 மாலை 5.00 மணியளவில் கோனூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து...

மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

மடியட்டும் ஆணவப் படுகொலைகள் கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்!” என்ற தலைப்பில் கழகத் தோழர்கள் ஜாதி எதிர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் செய்தி விவரம்: சென்னை: ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தெருமுனைக் கூட்டம் 12.08.2025 அன்று திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் நடைபெற்றது. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), தலைமையில், லட்சுமணன் முன்னிலையில் நடைபெற்றது. சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்களை தோழர்களை வெகுவாக ஈர்த்தது. ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நெல்லை கவின் படத்திறப்பு நடைபெற்றது. வழக்கறிஞர் சாரநாத் (மாவட்டச் செயலாளர் -விசிக) ஜாதி எதிர்ப்புப் பரப்புரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கழக செயல்பாடுகளை பாராட்டி உரை நிகழ்த்தினார். நிறைவாக சிறப்புரையாற்றிய பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் தேவை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இரண்டாம் நாள்: 13.08.2025 அன்று சென்னை சி.என்.கே சாலை...

ஈரோட்டில் ஜாதிமறுப்பு இணையர்கள் ஒன்றுகூடல்;  மாவட்டக் கழகம் முடிவு

ஈரோட்டில் ஜாதிமறுப்பு இணையர்கள் ஒன்றுகூடல்; மாவட்டக் கழகம் முடிவு

ஈரோடு தெற்கு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 10.8.25 அன்று ஞாயிற்றுக்கிழமை, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு மதிமுக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். எழிலன்( மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஈரோட்டில் ஜாதி மறுப்பு இணையர்களின் ஒன்று கூடல் நிகழ்வை முழு நாள் நிகழ்வாக நடத்துவது என்றும், தமிழ்நாடு முழுவதும் இருந்து ஜாதி மறுப்பு இணையர்களை அணிதிரட்டுவது என்றும், சிறப்பு அழைப்பாளர்களாக தலைவர் பொதுச் செயலாளர் உள்ளிட்டோரை அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கிருஷ்ணன், குமார், ஆசிரியர் சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கார்மேகம், நல்லதம்பி, சசிக்குமார் போதி சத்துவா, விருதுநகர் செந்தில், வீரப்பன்சத்திரம் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். * 10.08.2025 அன்று கழக செயல்பாடுகளை இணையத்தில் தொடர்ந்து கவனித்து வந்த தோழர் ந.கெளரி சங்கர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்....

சுயமரியாதை இயக்க சாதனை:  குடியாத்தத்தில் கழகத் தலைவர் பேச்சு:

சுயமரியாதை இயக்க சாதனை: குடியாத்தத்தில் கழகத் தலைவர் பேச்சு:

வேலூர் மாவட்டக் கழகம் சார்பில் குடியாத்தம் ஒன்றியத்தில் 08.08.2025 அன்று பரதராமி பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட நிகழ்விற்கு கழக குடியாத்தம் ஒன்றியச் செயலாளர் அ.அமல்ராஜ் தலைமையேற்றார். மோ. வை. யாழினி வரவேற்புரை -யாற்றினார். மதுரை சித்திரை சேனன், தெரு விளக்கு கோபிநாத் பெரியார், பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்கள். நாடக கலைஞர் ச. பார்த்திபன் குழுவினர் பறைஇசை வாசித்தனர். சிறப்பு நிகழ்வாக ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தோழர்கள். விமல் – ரேணுகோபால், தீபலட்சுமி – பாஸ்கரன், நந்தாதேவி – முரளி, மீனா – வேல் ராஜ்குமார் திருமணம் செய்து கொண்ட தோழர்கள் மற்றும் விதவை மறுமணம் செய்து கொண்ட தோழர்கள் ஷாலினி – சுரேஷ் குமார் ஆகியோரை கழகத் தலைவர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார். கலை இலக்கிய பேரவை மாநில துணைச் செயலாளர் திமுக, நிறுவனர் முரசொலி தமிழ் மன்றம் திரு.கெம்மாங்குப்பம், சி. கோபி...

ஆணவப் படுகொலை சட்டம் கோரி பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலை சட்டம் கோரி பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும், நெல்லை கவின் படுகொலை செய்தவர்கள் அனைவரின் மீதும் கடுமையான தண்டனையை நிறைவேற்ற கோரியும் கண்டன‌ ஆர்பாட்டம் பொள்ளாச்சி மாவட்டக் கழகம் சார்பில் 6.8.2025 அன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தோழர் யாழ் வெள்ளியங்கிரி தலைமையில் நடைபெற்றது. சபரிகிரி வரவேற்புரையாற்றினார். மாரிமுத்து (தி.க), சண்முகவேல் பிரபாகரன் (திஇதபே), தமிழ் குமரன் (ஆதித்தமிழர் பேரவை), வழக்குரைஞர் சேதுபதி (தமிழ் தன்னுரிமை மீட்பு இயக்கம்), மாரிமுத்து (மவிமு), தமிழ் பிரபாகரன் (மே17), மற்றும் கழகத் தோழர்கள் ரூபா, ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இலக்கியா நன்றியுரை ஆற்றினார். பெரியார்முழக்கம்இதழ்14082025

மேச்சேரியில் “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கம்!

மேச்சேரியில் “பெரியார் எனும் பெருநெருப்பு” கருத்தரங்கம்!

சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் 03.08.2025 ஞாயிறு மேச்சேரி VGP மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிவ சண்முகம் (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கதுரை, வெற்றிமுருகன், திவாகர் , மற்றும் ஏற்காடு தேவபிரகாஷ் (சேலம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரபாகரன்( மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜின் பகுத்தறிவு பாடல்களைப் பாடினார். U2Brutus தோழர்கள் மைனர் மற்றும் சத்யாவின் அரசியல் அரட்டை நடைபெற்றது. “மீண்டும் நடிகர்” எனும் தலைப்பில் பேரலை மில்டன், “மாடல்ல மற்றை யவை” எனும் தலைப்பில் U2Brutus மைனர், “நாக்பூர் ஏஜெண்டுகள்” எனும் தலைப்பில் இந்திரகுமார் தேரடி அவர்களும் கருத்துரை ஆற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கவியரசு (தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்) நன்றி கூறினார்....

வேலுபிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

வேலுபிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் 27.07.25 அன்று இயக்குனர் வேலு பிரபாகரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இனமுரசு சத்யராஜ் சிறப்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தபெதிக பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், ப்ளூ சட்டை மாறன், இயக்குனர் கதிர், திக பொருளாளர் வீ.குமரேசன், பாடகர் அந்தோணி தாசன், இயக்குனர் அகரன் உள்ளிட்ட பலரும் இயக்குனர் வேலு பிரபாகரனுடனான தங்கள் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். இரா. உமாபதி (திவிக சென்னை மாவட்டச் செயலாளர்), சேத்துப்பட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) , ம.கி.எட்வின் பிரபாகரன் (தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்), கோபி (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் ஒருங்கிணைத்தார். பெரியார்முழக்கம்இதழ்07082025

ஆணவப் படுகொலையை கண்டித்து  கோவையில் தெருமுனைக் கூட்டம்

ஆணவப் படுகொலையை கண்டித்து கோவையில் தெருமுனைக் கூட்டம்

“மடியட்டும் ஆணவப் படுகொலைகள் மனிதம் நம் அடையாளம் – ஜாதி அவமானம்” என்ற தலைப்பில் மாதவன் தலைமையில் கோவை மாவட்டக் கழகம் சார்பில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு மாலை 5 மணிக்கு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தெருமுனைக் கூட்டத்தில் ஜாதி ஆணவப் படுகொலைகள் உள்ளிட்ட ஜாதிய கொடுமைகளுக்கு காரணமானவற்றைப் பற்றி மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது. வழக்கறிஞர் வெண்மணி(திராவிட தமிழர் கட்சி), இளவேனில் (தமிழ்ப் புலிகள் கட்சி) மலரவன்(புஇமு), கா.சு.நாகராசு (திராவிட இயக்க தமிழர் பேரவை), மு.இனியவன் (மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார்) ப.மாணிக்கம் (விசிக) உள்ளிட்ட தோழமை அமைப்பு தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார்முழக்கம்இதழ்07082025

விநாயகர் ஊர்வலத்தில்   விதிமீறல்களை தடுக்க மனு

விநாயகர் ஊர்வலத்தில் விதிமீறல்களை தடுக்க மனு

கோவை: விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சியாக நீதிமன்ற ஆணைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கோவை மாநகர வடக்கு துணை காவல் ஆணையர், கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் ஜீலை 28 அன்று மனு அளிக்கப்பட்டது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பதிவு அஞ்சலில் மனு அனுப்பப்பட்டது. தோழர்கள் நிர்மல் குமார், வெங்கடேசன், கிருஷ்ணன், ஸ்டாலின், மாதவன், நவீன் கலந்து கொண்டனர். கடலூர்: விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சியாக நீதிமன்ற ஆணைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 1.8.25 அன்று பெரியார் சிவா தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. வழக்கறிஞர் இள.புகழேந்தி( திமுகவின் தேர்தல் பணி குழு...

திருப்பூரில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

திருப்பூரில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை

மனிதம் நமதுஅடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்! என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை திருப்பூர் மாவட்டக் கழகம் நடத்தவுள்ளது. 12.08.2025 செவ்வாய்க்கிழமை: அருள்புரம் மற்றும் பொங்கலூர் பகுதியில் மாலையில் நடைபெறும். 13.08.2025 புதன்கிழமை: பல்லடம் பகுதியிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறும். பெரியார்முழக்கம்இதழ்07082025.

20 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகை

20 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு கிடைத்த இழப்பீட்டுத் தொகை

கழக செயல் வீரர்கள் கண்ணன் மற்றும் குமார் இருவரையும் விபத்தில் கழகம் பறிகொடுத்தது. பெரியார் நினைவு நாள் சுவரொட்டிகளை ஒட்ட சென்றபோது களப்பணியில் அந்த தோழர்கள் உயிரிழத்தார்கள். உயிர் நீத்த டிசம்பர் 2005 ஆண்டு 24ம் நாள் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சுவரொட்டி அடித்து அவரது நினைவைப் போற்றி வருகிறது. இவர்களுக்கான காப்பீட்டுத் தொகைக்கான வழக்கு 20 ஆண்டு காலத்திற்கு மேல் நடந்தது. இப்போது அந்த தீர்ப்பு தோழர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பெரியார் நினைவு நாள் சுவரொட்டி சென்றபோது அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று மோதி தோழர்களின் உயிரைப் பறித்தது. இதற்காக காப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை வழக்கறிஞர் குமாரதேவன் நடத்தினார். நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக வழக்கு நிலுவையிலே இருந்தது. பிறகு முதலமைச்சர் தனிப்...

இனப்படுகொலையின் பேரவலம் கருத்தரங்கம்

இனப்படுகொலையின் பேரவலம் கருத்தரங்கம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை சர்பிடி தியாகராயர் அரங்கில் ஈழ மண்ணில் செம்மணி மனிதப் புதைக்குழி இனப்படுகொலையின் பேரவலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. செம்மணி மனிதப் புதைகுழி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் தியாகு (பொதுச்செயலாளர் தமிழ் தேசிய விடுதலை இயக்கம்), கோவை இராமகிருட்டிணன் ( பொதுச் செயலாளர் தபெதிக), சி. மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) வேல்முருகன் (சட்டமன்ற உறுப்பினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்) ஆகியோர் உரையாற்றினார். பெரியார்முழக்கம்இதழ்31072025

“கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி”  நூல் வெளியீடு!

“கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி” நூல் வெளியீடு!

தாய் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் டேவிட் பெரியார் தலைமையில் “கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி” நூல் சென்னை வடபழனியில் 26.07.25 அன்று வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகள் நடத்திய தரைவழித் தாக்குதல் பற்றி விவரிக்கிறது இந்நூல். லோகு அய்யப்பன் (புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்), மல்லை சத்யா, இயக்குனர் அமீர், தமிழ் சாக்ரடீஸ், ஊடகவியலாளர் இந்திரகுமார், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, இளைய கம்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இரவி பாரதி (காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்) தொகுத்து வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். தோழர் தியாகு சிறப்புப் பிரதியினை பெற்றுக் கொண்டார். தோழமை அமைப்புத் தோழர்கள் மனிதி செல்வி உட்பட பலர் கலந்து கொண்டு நூலை வாங்கி சென்றனர். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் தபசிகுமரன் (தலைமை நிலையச் செயலாளர்), வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்), இ.ரா.உமாபதி (மாவட்டச் செயலாளர்), எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), இராவணன் (தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்),...

வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்வு

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 29வது கூட்டம் அன்பு தனசேகர் (கழக தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்வை மாவட்டச் செயலாளர் இ.ரா.உமாபதி ஒருங்கிணைத்தார். மறைந்த பகுத்தறிவு இயக்குனர் வேலு பிரபாகரன் படத்தைத் திறந்து வைத்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். நினைவேந்தல் உரையாற்றிய திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கொள்கையில் சமரசமற்ற கடவுள் மறுப்பாளரின் பணிகளையும், வேலு பிரபாகரன் உடன் பயணித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். வேலுபிரபாகரன் இயக்கிய `கடவுள்’ படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), வேழவேந்தன்(மாவட்டத் தலைவர்), ம.கி.எட்வின் பிரபாகரன்(தென்சென்னை மாவட்ட அமைப்பாளர்), ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), சேத்துபட்டு இராசேந்திரன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), தட்சணாமூர்த்தி (வட சென்னை அமைப்பாளர்), ஆ.வ வேலு (வட சென்னை ஒருங்கிணைப்பாளர்), கோபி(திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), சூர்யா(திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) மற்றும் ஊடக நண்பர்கள்...

சேலத்தில் கழக சார்பில் தொடர் கூட்டங்கள்

சேலத்தில் கழக சார்பில் தொடர் கூட்டங்கள்

சேலம் மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்” தெருமுனைக் கூட்டம் 12.07.2025 அன்று அம்மாபேட்டை ரவுண்டானா அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் தலைமை வகித்தார். பரமேஷ் வரவேற்புரையாற்றினார். ஆத்தூர் நகரத் தலைவர் மகேந்திரன் அவர்களின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகரத் தலைவர் பாலு, ஆத்தூர் நகரத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சேலம் மாநகரப் பொருளாளர் பிரபு, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன் ஆகியோரின் அரசியல் நையாண்டி நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக சேலம் மாநகரச் செயலாளர் தோழர் ஆனந்தி நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. கலந்துகொண்டோர்: அவினேஷ், சுதர்சன், தோழர் ராஜசேகர், பாலாஜி, சித்தார்த்தன், தமிழ் இனியன்ஆகியோர். கூட்டத்திற்கு அம்மாப்பேட்டை பகுதி வாழ் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. பெண்கள், மாணவர்கள் என அனைவரும் ஆர்வமுடன்...

“மனிதம் நமது அடையாளம்!  ஜாதி அவமானம்!”

“மனிதம் நமது அடையாளம்! ஜாதி அவமானம்!”

சமூகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஜாதியப் படுகொலைகளை (ஆணவ கொலைகள்) தடுக்க சட்டம் மட்டும் போதாது மக்களின் மன உணர்வுகளில் இருந்து அதை நீக்க வேண்டும். நாகரீக சமூகமாக இந்த தமிழ் சமுதாயத்தை மாற்றி அமைக்கப் போராடியவர் பெரியார். அவர் தொடங்கிய இயக்கம் தொடர்ந்து ஜாதி எதிர்ப்பு, சடங்கு மறுப்பு கருத்தியலை வலிமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது. அதன் விளைவாக இன்று பல்வேறு மாற்றங்கள் வந்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் யாரும் பெயருக்குப் பின்னால் ஜாதி போடும் வழக்கத்தைப் பின்பற்றுவது இல்லை. ஆகவே அதன் தொடர்ச்சியாக திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு தலைப்புகளில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களை கள ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து SC/ST ஆணையத்திடம் மனு அளித்தது. தற்போது இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்து உள்ளது. ஜாதிவெறி சிந்தனைகளில் இருந்து இளைஞர்களை மீட்க சென்னை மாவட்டக் கழகம் “மனிதம் நமது அடையாளம்! ஜாதி...

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக 15-07-2025 மாலை 4 மணி அளவில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் மாநகரச் செயலாளர் மாதவன் முன்னிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கல்விக் கண் திறந்த காமராசர் அவர்களின் 123 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உரிமைப் பாதுகாப்புப் பரப்புரைப் பயணம் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலும், அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகிலும் காமராஜர் செய்த அரும்பணிகள் குறித்து மக்களிடத்தில் எடுத்துரைக்கும் விதமாக தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்வில் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத்தலைவர் முகில் ராசு, ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செல்வன்,மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, சரஸ்வதி,தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மற்றும் கழகத் தோழர்கள் ராஜசிங்கம்,ஸ் ரீஜா, ஆத்துப்பாளையம் மதன், முத்து...

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் மோடி அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 7.7.2025 அன்று மதுரையில் திருவள்ளுவர் சிலை அருகில் கிழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமாட்சி பாண்டி தலைமையில், சத்தியமூர்த்தி முன்னிலையில், வாசுகி அவர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். சிறப்புரையாக கழகத்தின் மாவட்ட காப்பாளர் தளபதி தொடக்க உரையாற்றினார். தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை இடம் மாறுதலுக்கு உட்படுத்திய ஒன்றிய மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமர்நாத் ராமகிருஷ்ணனை தமிழக தொல்லியல் துறை தலைவராக தேர்ந்தெடுத்து ஆய்வினை சிறப்புடன் நடத்த வழி செய்யவும், தமிழ்நாடு அரசை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழர் நாகரிகத்தை ‘பாரதீய’ நாகரிகம் என்று குழப்பும் சங்கி அடிமை மா.பா பாண்டியராஜனையும் – பாரதிய ஜனதா சங்கிகளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தோழமை அமைப்பு தோழர்கள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்தனர். பசும்பொன் பாண்டியன் (அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்...

திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டம்

மாநகர ஆலோசனைக் கூட்டம் 09-07-2025 மாலை 5 மணி அளவில் ஆத்துப்பாளையம் மதன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தலைமை: மதன் முன்னிலை, முத்து. தீர்மானங்கள்:  விநாயகர் சதூர்த்தி என்ற பெயரில் நீர் நிலைகளில் இரசாயன பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலை கரைப்பதை தடுத்து தலைமைக் கழக வழி காட்டுதலின் படி மாவட்ட ஆட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரியம், அறநிலையத் துறை, காவல் ஆணையாளர் அலுவலம் ஆகிய அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி நேரில் மற்றும், பதிவு தபால் மூலம் புகார் விண்ணப்பம் வழங்குவது.  கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடத்துவது.  பெரியார் முழக்க வளர்ச்சி நிதி வழங்குதல் கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா பொது கூட்டம் 15 வேலம்பாளையம் பகுதியில் நடத்துவது மற்றும் தோழர் மலரவன் அவர்களின் படத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரை...

சேலத்தில் கழக தெருமுனைக் கூட்டம்

சேலத்தில் கழக தெருமுனைக் கூட்டம்

“இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்” என்ற தலைப்பில் சேலம் மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டம் 05.07.2025 அன்று பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி அருகில் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாநகரத் தலைவர் பாலு தலைமை வகித்தார். சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகர தலைவர் பாலு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சேலம் மாநகர பொருளாளர் பிரபு மற்றும் சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன் ஆகியோரின் அரசியல் நையாண்டி நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக நந்தகுமார் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவு மற்றும் தேநீர் தோழர் நந்தகுமார் அவர்கள் வழங்கினார். தோழர்கள் அருண்பாண்டியன், பாலு ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். சங்கிகளின் மிரட்டல் கூட்டம் தொடங்குவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்பாகவே 30க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தோழர்கள் காவல்துறை அதிகாரிகளிடம்...

வடசென்னையில் கழக கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னையில் கழக கலந்துரையாடல் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வடசென்னை கலந்துரையாடல் கூட்டம் 13.07.25 ஞாயிறு அன்று மாலை 06.30 மணியளவில் சென்னை அயனாவரத்தில் உள்ள சேத்துப்பட்டு இராஜேந்திரன் இல்லத்தில் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் புதிய தோழர்களை சேர்ப்பது வட சென்னையில் கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் தெருமுனை, பரப்புரை கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு வடசென்னை மாவட்டம் சார்பில் 100 உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, தோழர்கள் ராஜன், தினகரன், சிகாமணி, கழகப் பணிகளை முன்னெடுப்பதை குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத்‌ தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தமிழ்நாடு...

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

சென்னை மாவட்டக் கழகத் தோழர் கன்னியப்பன் உடல்நலக் குறைவால் கடந்த 12.07.2025 அன்று முடிவெய்தினார். அவரின் உடலுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தட்சிணாமூர்த்தி, ஏசுகுமார், மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

நிமிர்வோம் வாசகர் வட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 28வது கூட்டம் தோழர் சிரிஜன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்வை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார். மறைந்த கழகத் தோழர் கன்னியப்பன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. அரசியலாக்கப்படுகிறதா நீதித்துறை? என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். ‘அம்பேத்கரின் முகவுரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ரகசிய வரலாறு’ என்ற நூலை எட்வின் பிரபாகரன் திறனாய்வு செய்தார். பேராசிரியர் சுப்பிரமணியின் ‘இதழியல் களத்தில் பெரியார்- ஆய்வும் தொகுப்பும்’ நூலை ர.பிரகாசு திறனாய்வு செய்தார். நிகழ்வில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார அமைப்புகளைக் கட்டுப்படுத்தவும், அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைத்து மத மோதல்களைத் தூண்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலி பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள், தமிழ்நாடு அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்ய வலியுறுத்தி மனுக்களை நீதிமன்ற ஆணை நகல்களுடன் இணைத்து கோரிக்கை மனு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,மாவட்ட...

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் வருமான வரித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி 36 வருட பணிக்குப் பின் ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வு பாராட்டு விழா கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் சிறப்புடன் நடைபெற்றது. உடன் பணியாற்றிய அலுவலர்கள், உறவினர்கள், கழகத் தோழர்கள் நண்பர்கள் திரண்டு வந்திருந்தனர். அன்பு தனசேகர் மகள் வழக்கறிஞர் இளவேனில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். உரையாற்றியவர்கள் அன்பு தனசேகரின் சமூகத் தொண்டுகளை சமூக தொண்டாற்றுவதில் அவரின் ஆர்வத்தையும் பாராட்டினர். தனது பெண் மக்களை முழு சுதந்திரத்துடன் வளர்த்தார். அலுவலகத்தில் ஆளுமைகளை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். அதிகாரியாக இருந்தும் ஒரு அதிகாரியாக நடந்து கொள்ளாமல் எளிமையான மனிதராக எல்லோரிடமும் பழகியவர். தனக்கு கீழே பணியாற்றும் ஊழியர்களுக்கு உதவியவர். அமைப்புகளை உருவாக்கி வழி நடத்தியவர். பிற்படுத்தப்பட்டோர் சமூக உரிமைக்காக தொடர்ந்து களத்தில் நின்றவர். பல ஊர்களுக்கு சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தியவர். நடைபயிற்சி...

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் வெள்ளார் பகுதியில் 06.07.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம், சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து தோழர்கள் அனைவரும் தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கினார்கள். தீர்மானங்கள்: 1). ஜூலை மாத இறுதிக்குள் சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் மேச்சேரியில் கருத்தரங்கம் நடத்துவது எனவும், 2). கிராமப்புற பகுதிகளில் மாதம் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்துவது, 3). மாதம் ஒரு பகுதியில் கிளைக் கழக சந்திப்பு நடத்தி புதிய இளைஞர்களை திரட்டுவது. 4). புதிய இளைஞர்களுக்கு வருடம் ஒரு பயிலரங்கம் இளைஞர் அணி சார்பாக நடத்துவது,...

உடற் கொடை அளிப்பு!

உடற் கொடை அளிப்பு!

திருப்பூர் தி.வி.க தோழர் மலரவன் என்கிற மலர் மணி நாதன் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 28.06.2025 இரவு 8. 30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது உடல் சோளிபாளையம் பாரதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பிறகு அவரது விருப்பத்தின் பேரில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக் கிழமை 29.6.2025 காலை 12.30 மணிக்கு அவரது உடல் கொடையாக வழங்கப்பட்டது. தோழர் மலரவனின் உடலுக்கு எந்தவிதமான ஜாதி மத சடங்குகளும் செய்யப்படவில்லை. மலர் மாலை கூட அணிவிக்கப்படாமல் பெண் தோழர்கள் கொள்கை முழக்கமிட்டு உடலை சுமந்து வந்தனர். தோழரின் இணையர் பாண்டிச்செல்வி, மகள் மதுலதா, மகன் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கொடையாக வழங்கப்பட்டது. மலரவன் அவர்கள் 41 ஆண்டுகளாக தந்தை பெரியார் கொள்கையை கடைபிடித்தவர். தனது குடும்ப உறுப்பினர்களை பெரியார் வழியில் நடத்தியவர் ஆவார். நிகழ்வில் சு.துரைசாமி பொருளாளர், வீ.சிவகாமி தலைவர் தமிழ்நாடு...

கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

20.06.2025 அன்று கழகத் தலைவரின் 78 வது பிறந்தநாளில் சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில் தலைவரை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கழகத் தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக மகளிர் அணி சார்பில் ரூ.10,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி மற்றும் தோழர்கள் கலைச்செல்வி, காயத்ரி, கோமதி, கீதா, தேன்மொழி, இராணி, அருள்மொழி, மகிழினி ஆகியோர் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 10072025இதழ்

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

5/7/25 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை நங்கநல்லூரில், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் தலைமையில், ம.குகாநந்தன் முன்னிலையில் நடைபெற்றது. இரண்யா வரவேற்புரையாற்றினார். “சுயமரியாதை இயக்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள்” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். வரலாற்று ஆவணமாக இவ்வுரை அமைந்தது. “குடிஅரசு உருவாக்கிய அதிர்வலைகள்” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆழமான ஆய்வுரையை நிகழ்த்தினார். பொதுக்கூட்டத்தின் சிறப்பம்சமாக, பொதுக்கூட்ட மேடையிலேயே ஆனந்தகுமார் – ஷர்மிளா இணையரின் சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணமும் நடைபெற்றது. இந்நிகழ்வு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. கார்மேகம் – வீரமணி – பேரன்பு – திராவிட மகிழன் குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்கள் மக்களை சிந்திக்க வைத்தன. தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி நன்றியுரையாற்றினார். களப்பணியாற்றிய தோழர்களுக்கும் கலைஞர்களுக்கும் நினைவுப்பரிசாக புத்தகங்களை, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, தென்சென்னை மாவட்டத்...

கருநாடக கழகத் தலைவர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு!

கருநாடக கழகத் தலைவர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு!

கருநாடக திவிக மாநிலத் தலைவர் தோழர் இராவணன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூரு ஜெய்பீம் பவன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று தோழர் இராவணன் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்தியாவில் பௌத்தம் முன்னெடுத்த சமத்துவம் குறித்தும், ஆரியர்கள் படையெடுப்பு பற்றியும், ஆரிய பண்பாட்டு படையெடுப்பால் நாம் இழந்தவற்றை திணிக்கப்பட்ட ஆரிய பண்பாட்டில் இருந்து நாம் மீள்வதற்கு பெரியார் கையாண்ட விழாக்கள் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தினார். பெரியார் முழக்கம் 03072025இதழ்

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

சமூக நீதிக் காவலர் விபி சிங் பிறந்தநாளான (25/6/25), சென்னை பிரசிடென்சி கல்லூரியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாலை 5 மணியளவில், திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா.சூர்யா, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இளவரசன் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம்03072025இதழ்

தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

சென்னை கழக தலைமை அலுவலகத்தில் ஜூன் 29 மாலை 5 மணி அளவில் சென்னை மாவட்ட இளைஞரணி மற்றும் தொழில்நுட்ப அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இரு அணிகளை சேர்ந்த 40 தோழர்கள் பங்கேற்றனர். சென்னை மாவட்ட இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில், எழுத்தாளர்களை உருவாக்குவது, வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல், தோழமை உணர்வை மேம்படுத்துதல், அறிவியல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 1. மாதம் ஒரு புத்தக திறனாய்வு கூட்டத்தை இளைஞரணி முன்னெடுக்கும். 2. மாதம் இரண்டு தெருமுனை கூட்டங்கள் நடத்துவது 3. ஆண்டுக்கு இரண்டு பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக அம்பத்தூர் பகுதியில் பகுத்தறிவு பரப்புரை பிரச்சாரம் நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. தொழில்நுட்ப அணி சார்பில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தகவல் தொழிட்நுட்ப் அணி சார்பாக புகைப்படக் கருத்து வடிவ உருவாக்கம், காணொலிப் பிரச்சாரம், இணையதள வடிவமைப்பு, சமூக வலைத்தள செயல்பாடுகள், ஆவணப்படுத்துதல்,...

விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலம் கழகத் தலைவர் அறிக்கை

விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலம் கழகத் தலைவர் அறிக்கை

விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை ! அன்பார்ந்த தோழர்களே! “முருகன் முகமூடியோடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களைக் கொள்ளை அடிக்க சிலர் எடுத்த முயற்சி, பல வகைகளிலும், பல தரப்பிலும் நிகழ்ந்த அசைவுகள், நகர்வுகள், எச்சரிக்கை மணிகள் என விழிப்போடு இருந்து நா(வீ)ட்டாரால் தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால், ‘மயானக் கொள்ளை’ என்பதைப் போல மக்களையும் உடன் அழைத்துக் கொண்டு, பறைகள் முழங்க, பட்டப்பகலில், ஒலிபெருக்கிகள் அலற ஆண்டுதோறும் நடக்கும் அடுத்த ‘மனங்கள் கொள்ளை’ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் நாள் பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில் நடக்க உள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் களை, இரசாயன சாயப் பூச்சோடு இப்போதே ஜோராக உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டார்கள். மூன்று அங்குல விட்டமுள்ள...

முழக்கத்திற்குப் பாராட்டு!

முழக்கத்திற்குப் பாராட்டு!

கொளத்தூரில் நடைபெற்ற நாத்திகர் விழா நிகழ்ச்சியில் மாநாட்டில் மூன்றாவது தீர்மானமாக கணவன் இறந்த பிறகு பெண்களுக்கு நடக்கும் சடங்குகளின் தடுக்க கோரி மூடநம்பிக்கைகளில் இது கொடூரமான மூடநம்பிக்கை என்பதை சுட்டிக்காட்டி தீர்மானம் இருப்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது, படிக்கிற போது நா தழுதழுக்கிறது. அதேபோல கடந்த வாரம் வந்த முழக்கத்தில் ‘நாத்திகர் விழா சிந்தனை இரண்டு தொகுப்பில்’ 1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பு கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதற்கு கீழே இருக்கிற கட்டுரையில் ஆசிரியர் ஊசி ஒன்று எனக்கு வேண்டும் மாணவர்கள் வாங்கி வர வேண்டும் என்று சொல்லி ஒரு மாணவர் கிளம்ப எல்லோருமாக சேர்ந்து வாங்கி வருகிறோம் என்று, உடன் இருந்த மாணவர்களும் உடன் செல்ல அவர்கள் வாங்கி வந்த விதமும் அந்த ஊசியின் கதையும், தெருவில் இழுத்து வருகிற தேரின் கதையையும் எளிமையாக புரிய வைத்த பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நா...

கோவையில் கலைஞர் பிறந்தநாள் விழா!

கோவையில் கலைஞர் பிறந்தநாள் விழா!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகில் கலைஞர் பிறந்த நாள் கூட்டம் நடைப்பெற்றது. திவிக தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், சிவானந்தா காலனி திமுக பகுதிச் செயலாளர் டெம்போ சிவா, தமிழ்ப்புலிகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் இராமச்சந்திரன், கோவை குமார், விசிக மாவட்ட செய்தி அமைப்பாளர் கோவை ராசா, திமுக முனீர் அகமது, திக தோழர் ராஜா, திவிக மாநகரத் தலைவர் நிர்மல், சதீஷ், மாதவன், ஸ்டாலின் ராஜா கதிரவன் மற்றும் தோழமை கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!

சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!

பாலஸ்தீன ஆதரவுக் குழு நடத்திய பாலஸ்தீன விடுதலைப் பேரணி 21.06.25 அன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதான த்தில் தொடங்கி எழும்பூர் ரவுண்டானா அருகில் நிறைவு கண்டனக் கூட்டமாக நிறை வடைந்தது. கண்டனக் கூட்டத்தில் குழந்தைகளைத் திட்டமிட்டு கொன்றுகுவிக்கும் இஸ்ரேல்! காசா மீதான இனஅழிப்புப் போரை நிறுத்தக்கோரி திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி அவர்கள் உரையாற்றினார். பேரணியில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் , மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வடசென்னை மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண், மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, தட்சணாமூர்த்தி, ஏசு குமார், தினகரன் மற்றும் கழக தோழர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

பொள்ளாச்சியில் கழகப் பொதுக்கூட்டம்!

பொள்ளாச்சியில் கழகப் பொதுக்கூட்டம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக குடிஅரசு மற்றும் சுயமரியாதைஇயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் 10.06.2026 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணம் பகுதியில் வே.அரிதாசு தலைமையில் நடைபெற்றது. யாழ் வெள்ளிங்கிரி வரவேற்புரை ஆற்றினார். கோவன் கலைக்குழுவின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் பேரூராட்சி தலைவர், ஆசிரியர் சிவகாமி (தலைவர், தமிழ்நாடுஅறிவியல் மன்றம்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழக தலைவர் கொளத்தூர் மணி, காசு.நாகராசன் (திராவிட இயக்கத்தமிழர் பேரவை) சிறப்புரையாற்றினர். நிகழ்வில் தினேசு குமார் கழகத்தில் தன்னை கழகத்தில் இணைத்து கொண்டார். தோழருக்கு கழகத் தலைவர் புத்தகம் வழங்கினார். 15 பேர் உடற் கொடை வழங்க முன்வந்துள்ளனர். இதற்கான சான்றிதழை தோழர் அறக்கட்டளைத் தலைவர். சாந்தகுமார் மற்றும் கழக தலைவர் கொளத்தூர் மணி வழங்கினர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண், பொள்ளாச்சி கழக தோழர்கள் மற்றும் தோழமை அமைப்பு...

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன் மகன் கி.பிரபாகரன், ஆனைமலை ஒன்றியச் செயலாளர் நடராஜ் மகள் ந.கஸ்தூரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை இணை யேற்பு விழா ஆனைமலை பரிமளா சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில் 11.06.2025 புதன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. இணையர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை ஏற்று தாங்களும் மலர் மாலையை மாற்றிக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு நடைபெற்றது. நிமிர்வு கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. யாழ்.வெள்ளிங்கிரி வரவேற்புரை நிகழ்த்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் இணையேற்பினை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், வேலூர் மாவட்டச் செயலாளர் சிவா, சேலம்...

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் 21-06-2025 மாலை 5 மணி அளவில் வ.உ.சி திடல் (செங்காடு) அவினாசி பகுதியில் ஒன்றிய அரசே! கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடு எனக் கோரி திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய கழகம் சார்பாக கையெழுத்து இயக்கம், மற்றும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் திவிக சார்பாக மாவட்டச் செயலாளர் முகில்ராசு கண்டன உரையாற்றினார். நிகழ்வில் மாரிமுத்து மாநகர துணைத் தலைவர், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

பாராட்டத்தக்க முயற்சி!  பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

பாராட்டத்தக்க முயற்சி! பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

ஆசிரியர் சிவகாமி முன்னெடுப்பில் புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஒரு வருட செயல் திட்டமாக மாதம் 500 ரூபாய் நிதி பங்களிப்பு செய்வதாக தீர்மானித்து செயல்பட்டு வருகிறது. முதல் தவணையாக ஜூன் மாதம் ரூ.8000 வழங்கியள்ளனர். குழுவில் இணைந்து ஒரு வருடத்திற்கு வளர்ச்சி நிதி வழங்க விருப்பமுள்ள தோழர்கள் தகவல் தெரிவிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். பெரியார் முழக்கம் 26062025இதழ்

மலக்குழி சாவுகள் தொடரக்கூடாது பால்.பிரபாகரன் வலியுறுத்தல்

மலக்குழி சாவுகள் தொடரக்கூடாது பால்.பிரபாகரன் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பாதாள சாக்கடை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கி கங்கைகொண்டான் – ஆலடிப்பட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுடலைமணி (வயது 40) என்ற தூய்மை பணியாளர் கடந்த 08.06.2025ல்உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: பாதுகாப்பற்ற முறையில் ஒப்பந்த தூய்மை பணியாளரை எவ்வித பாதுகாப்பு கருவியுமின்றி பாதாள சாக்கடைக்குள் இறக்கி தூய்மைப் பணி செய்ய வைத்துள்ளனர். மனிதக்கழிவை மனிதன் அகற்றத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 இருந்தும் அச்சட்டம் மிகத் தெளிவாக மனிதனைப் பாதாள சாக்கடை மற்றும் மனிதக் கழிவு குழிக்குள் இறங்கத் தடை விதித்து இருந்தும் அந்த சட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் சற்றும் சட்டை செய்யாமல், மனிதர்களை பாதாள சாக்கடைக்குள் எவ்வித பாதுகாப்பு கருவிகள் கூட இல்லாமல் இறக்குவதும் அதனால் மனித உயர்கள் பலியாவதும் வாடிக்கையாகிவிட்டது. நீதிமன்றங்கள் இச்செயல்பாடுகளைக் கண்டித்து பல தீர்ப்புகளை தந்து...