Category: பெரியாரியல் பார்வையில் அன்றாட நிகழ்வுகள்

பொதுச் செயலாளரின் அன்றாட whatsapp செய்திகள்

பாமக, அதிமுகவின் இனத் துரோகங்கள்!

பாமக, அதிமுகவின் இனத் துரோகங்கள்!

தமிழர்களுக்காக போராடி சிறை சென்று தியாகத் தழும்புகளை ஏற்ற இரண்டு தலைவர்கள் தமிழ்நாட்டைக் காப்பாற்ற இப்போது களம் இறங்கி இருக்கிறார்கள். அந்த இரண்டு தலைவர்களுக்கும் நீங்கள் வந்துதான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று பச்சைக்கொடி காட்டிக் கொண்டு நிற்கின்றன சில அரசியல் கட்சிகள். அந்த இரண்டு தலைவர்கள் யார் தெரியுமா? ஒருவர் அமித்ஷா; மற்றொருவர் ஆடிட்டர் குருமூர்த்தி. உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியை மறதி மனநோய்க்காரர் “செலக்ட்டிவ் அம்னீசியா” என்று துணிச்சலாகக் கூறினார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அந்த ஜெயலலிதாவின் தொண்டர்களை நீங்கள்தான் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா-விடம் மன்றாடி மனு போட்டுக் கொண்டிருக்கிறார் தினகரன். ஜெயலலிதாவின் படத்தை அவர் உயிருடன் இருக்கின்ற வரை சட்டையிலும், பேனாவிலும் சொருகிக்கொண்டு இருந்தவர்கள் இவர்கள்தான். தமிழ்நாட்டில் அமையப்போவது பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அடித்துச் சொல்லி எடப்பாடியை வாய் மூட வைத்து விட்டார் அமித்...

பேரன்பும் பெருங்கோபமும்

பேரன்பும் பெருங்கோபமும்

தங்கர்பச்சான் தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘பேரன்பும் பெரும்கோபமும்’ திரைப்படம் ஜாதி பெருசா? சாமி பெருசா? என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. மிகுந்த ஆழமான கேள்வியும் கூட இது. உண்மையில் சாமியை விட ஜாதிதான் பெரிது. அதைத்தான் இப்படம் பேசுகிறது. இதற்கு படம் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக் கரு வழக்கத்தில் இருக்கும் முத்தாலம்மன் கதை. முத்தாலம்மன் தென்மாவட்டம் முழுவதும் வழிபடக்கூடிய தெய்வமாகும். முத்தாலம்மன் உயர்குடி ஜாதியைச் சேர்ந்தவள். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவனை காதலித்து ஊரை விட்டு ஓடிவிடுகிறாள். வெளியூரில் திருமணம் முடித்து குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவள் வாழும் இடம் தெரிந்து சக்கரையாக பேசி ஊருக்கு அழைத்து வருகிறார்கள். ஊர்க்காரர்களின் பேச்சை நம்பி வந்த முத்தாலம்மன் கணவன் குழந்தைகளோடு சேர்த்து படுகொலை செய்யப்படுகிறாள். இன்னும் அந்த சம்பவத்தை நிகழ்த்திக் காட்ட திருவிழாக்களின் போது படுகளம் போடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் விரதமிருந்து படுகளத்தில் கழுகுமரம் ஏறுவதும், செத்தவர்கள் போல படுத்து கிடக்க, அந்த...

ஆணாதிக்கத்திற்கு எதிரான தீர்ப்பு!

ஆணாதிக்கத்திற்கு எதிரான தீர்ப்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்தத் தீர்ப்பு அரசியல் பார்வையில் விமர்சிக்கப்படுகிறது, அதுவும் தேவைதான் அதைவிட சமூகப் பார்வையில் இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவமானது‌‍. ஒரு பெண்ணுக்கு உயிரை விட கற்பு பெரிது என்ற ஆணாதிக்க சமூகப் பார்வைக்கு மரண அடி தந்திருக்கிறது இந்த தீர்ப்பு. கற்பு பெண்களுக்கு மட்டுமே புனிதமாக்கப்பட்டது, உடல் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள் துணிவுடன் வெளியே வருகிறார்கள். ஆனால் பாலியல் வன்முறை வழியாக பாதிக்கப்படும் பெண்கள் துணிவோடு வெளியே வருவது இல்லை; சமூகம் தன்னை இழிவாகப் பேசும் என்று அஞ்சுகிறார்கள். கட்டாய பாலியல் வன்முறை கூட ஒரு வன்முறைதான் என்ற புரிதலுக்கு சமூகம் வராததும் இதற்கு ஒரு காரணம். இதன் காரணமாகவே பல பெண்கள் பாலியல் வன்முறையை வெளிப்படுத்த அஞ்சுகிறார்கள். இந்த அச்சத்தை பொள்ளாச்சி கும்பல் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வீடியோக்களைக் காட்டி மிரட்டி அவர்களைப் பணிய வைத்து இருக்கிறது. ஆனாலும்...

ஜாதிக் குறியீடுகளை ஒழிப்பதும் ஜாதி ஒழிப்புதான்!

ஜாதிக் குறியீடுகளை ஒழிப்பதும் ஜாதி ஒழிப்புதான்!

கடவுள் ஜாதி மதத்தைக் கடுமையாக எதிர்த்த புரட்சிக் கவிஞருக்கு தமிழ்நாடு முதல்வர் அரசு விழா அறிவித்ததோடு காலனி என்ற சொல்லும் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைப் பார்வையாகவே இதைக் கருத வேண்டும். இதே போல் நீதிக் கட்சி ஆட்சி ஆணைகளில் குறிப்பிடப்பட்டு வந்த “பஞ்சமன், பறையன்” என்ற வார்த்தைகளை நீக்கி ஆதிதிராவிடர் என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தெருக்களில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க ஆணையிட்டார். இதிலும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள், `காலனி’ என்ற பெயரை நீக்கி விட்டால் ஜாதி ஒழிந்து விடுமா? என்று கேட்கிறார்கள். தனது பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பட்டத்தை பெரியார் ஒழித்தார் ஜாதிப் பெயரை போட வேண்டாம் என்ற ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் நடந்தது. இப்போது ஜாதிச் சங்க தலைவர்கள் கூட தங்கள் பெயருக்குப் பின்னால்...

திராவிட  மாடல் ஆட்சியும் ஆல்பர்ட்டா மாகாணமும்!

திராவிட மாடல் ஆட்சியும் ஆல்பர்ட்டா மாகாணமும்!

கனடாவில் நடந்து முடிந்த தேர்தலில் நான்காவது முறையாக லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கனடாவில் கூட்டாட்சி அரசியல் அமைப்பு என்ற நடைமுறை இருக்கிறது. ஆல்பர்ட்டா என்ற மாநிலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி தான் மக்கள் செல்வாக்கோடு ஆட்சியில் இருக்கிறது. கனடா கூட்டாட்சி ஆட்சியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று ஆல்பர்ட்டா மாநில ஆட்சி குற்றம் சாட்சி வருகிறது. அதிக வரி செலுத்தும் மாநிலமாகவும், வளர்ச்சி திட்டங்களில் முதலிடம் பெற்ற மாநிலம் ஆல்பர்ட்டா தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து மாநில மக்களும் மாநில ஆட்சியும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கன்சர் வேட்டிவ் வெற்றி பெற்ற அடுத்த நாளே ஆல்பர்ட்டா சட்டமன்றம் கூடி மசோதா ஒன்றை நிறைவேற்றி உள்ளது. கனடா கூட்டாட்சி அமைப்பிலிருந்து ஆல்பர்ட்டா தனியாக பிரிந்து செல்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்த மசோதா கூறுகிறது. ஆல்பர்டடா மாநில பிரிமியர் ஸ்மித் மார்கார்னி இவ்வாறு கூறியுள்ளார்: ஆல்பர்ட்டா மக்கள் பெருமைமிக்க கனடியர்கள் நாங்கள்...

விகடனின் ஜாதி ஒழிப்பு நாடகம்!-

விகடனின் ஜாதி ஒழிப்பு நாடகம்!-

விஜய் தொலைக்காட்சி நடத்திய ‘நீயா நானா நிகழ்ச்சியில்’ போடி நாயக்கனூரைச் சேர்ந்த ஒரு தலித் மாணவி ‘காலனி’ என்ற சொல் எப்படி காயப்படுத்துகிறது என்ற வேதனையை உருக்கமுடன் பேசினார். அடுத்த இரண்டு நாட்களில், தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் இனி அரசு பதிவேடுகளில் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த வாரம் வெளிவந்துள்ள ஆனந்த விகடன் வார ஏடு வார்த்தையை நீக்கி விட்டால் மட்டும் ஜாதி தீண்டாமை ஒழிந்து விடுமா? என்று தமிழ்நாடு அரசை கடுமையாக் கண்டித்து தலையங்கம் தீட்டி இருக்கிறது. ஜாதி ஒழிப்புக் களத்தில் குறியீட்டு ஒழிப்புகளும் ஒரு தேவைதான்; ஜாதி ஒழிப்புக்கு மந்திரக்கோல் எதுவும் கிடையாது.பல்வேறு களங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற வேண்டும். ஜாதி தீண்டாமைகளை முற்றிலும் ஒழித்து விடாமல் இப்படி பெயரை மட்டும் மாற்றுவது சரியா என்று கேட்கும் கேள்விகளில் திமுக எதிர்ப்பு என்ற உள்நோக்கத்தைத் தவிர கொள்கை பார்வை ஏதும் இருப்பதாக நமக்கு...

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மே18 அன்று திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர இசை திருவிழா கன்னிகுமரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட அறிக்கையை விடுத்து இருந்தார். துயர மிகுந்த இந்த நாளில் இவ்வாறான கொண்டாட்டத்தை நடத்துவது இன உணர்வுமிக்க தமிழர்களின் உணர்வுகளைப் பதறவைக்கும் ஒன்றாகும். அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை இதனை வேறு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டுமாறு முதற்கட்டமாக கனிவுடன் கோருகிறோம் என்று குறிப்பிட்டுருந்தார். அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்‌ நாசர்‌ இதில் தலையிட்டு நிகழ்ச்சியை தள்ளி வைக்க முயற்சிகளை எடுத்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டது. இத்தகவலை திரு நாசர் கழக தலைவருக்கு கடிதமாக எழுதியுள்ளார். இன‌முரசு சத்தியராஜ் இந்த கடிதத்தை கழக தலைவருக்கு அனுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கையில்: ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கழகத்...

சந்துரு பரிந்துரைகளை நிறைவேற்றுக!

சந்துரு பரிந்துரைகளை நிறைவேற்றுக!

“அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளங்களைக் குறிக்கும் கயிறுகள், டீ-சர்ட்டுகளை அணிய தடைவிதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும். கிருஷ்ணகிரி மாவட்டம் சொப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் வீரப்பன் உருவம் மற்றும் ஒரு அரசியல் கட்சியை அடையாளப்படுத்தும் டீ-சர்ட்டுகளையும் அணிந்து திரைப்படப் பாடலுக்கு நடனமாடி உள்ளனர். பெற்றோர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வந்தன. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறிச் செயல்படும் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது. அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அரசு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. அந்த விழாக்கள் இலக்கியம் மற்றும் பண்பாடுகளைப் போற்றும் விதமாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக சாதியைப் பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் இடம் பெறக்கூடாது...

ஆட்சிக்கு மதச்சாயம் பூசலாமா? அமைச்சரே?

ஆட்சிக்கு மதச்சாயம் பூசலாமா? அமைச்சரே?

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா? என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலளிக்கையில், மூடநம்பிக்கை மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது. எனவே, சட்டம் கொண்டு வர முடியாது என்று பதில் அளித்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் பகுத்தறிவும் அறிவியலும் பாடத்திட்டத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்று பேசி உள்ளார்.இந்திய அரசியல் சட்டம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அமலில் இருக்கிறது. கலைஞர் முதல்வராக இருந்தபோது பேராசிரியர் நன்னன் தலைமையில் ‘மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு’ ஒன்றை உருவாக்கினார். ‘பகுத்தறிவு கலை இலக்கிய மன்றம்’ திமுகவின் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு ஏற்கெனவே ராமன் சமூக நீதியின் சின்னம் என்று பேசிய அமைச்சர் ரகுபதி இப்போது மூடநம்பிக்கைகளை...

உண்மைக்கு அஞ்சும் கோழைகள்!

உண்மைக்கு அஞ்சும் கோழைகள்!

சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் புலே. இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தது படக்குழு. இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியம், படத்தின் பல காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து உரையாடல்களை நீக்க வலியுறுத்தியுள்ளது. இதனால் திரைப்படம் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குத் திரையிடத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மையமாக, படத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்டார்கள், ‘மஹர், மாங், பேஷ்வா என சாதிப் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது. மூன்றாயிரம் ஆண்டுகள் அடிமைத்தனம் என்றெல்லாம் குறிப்பிடக்கூடாது’ எனப் பல இடங்களில் உரையாடல்களை நீக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார்கள். படத்தின், முன்னோட்டக் காட்சிகளில் பார்ப்பன ஒடுக்குமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், திரைப்பட வாரியத்தின் இந்தப் போக்கு குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் “இந்த சாதிய, இன வெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது” என்று விமர்சனம் செய்துள்ளார். “எது அவர்களைத் தொந்தரவு...

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் கடிவாளம்!

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் கடிவாளம்!

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அரசியலமைப்புத் தலைவராக பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளின்படியே நடக்க வேண்டும். அவர்களுக்கென்று தனி அதிகாரம் உள்ளதாகக் கருதக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் 415 பக்க தீர்ப்பில், ஆளுநர்களின் எதேச்சதிகாரப் போக்கிற்குக் கடிவாளம் போடும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தீர்ப்பின் நகல் அனைத்து மாநில உயர்நீதிமன்றங்கள், ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கும் சில முக்கிய அறிவுரைகள் இத்தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புப் பிரிவு 201ன் கீழ் குடியரசுத் தலைவர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களை பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு காலதாமதம் ஏற்பட்டால் அந்த மசோதா கொண்டு வந்ததன் நோக்கம் நீர்த்துபோகிவிடும். பிரிவு 201-இன் கீழ் குடியரசுத் தலைவர் தேவையில்லாமல் காலதாமதம் செய்யக்கூடாது. எனவே, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை...

சென்னையில் மார்க்ஸ் சிலை!

சென்னையில் மார்க்ஸ் சிலை!

தமிழ்நாட்டில் காரல் மார்க்ஸ் சிலை திறக்கப்படும் என்று திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார் சோவியத் சோஷலிச ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பு புரட்சிகளை உறுதியாக அடக்கியவர் ஸ்டாலின், பெரியார் இயக்கம் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவை உறுதியாக ஆதரித்தது அதன் நினைவாகத்தான் கலைஞர் தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார் சோவியத் பயணம் மேற்கொண்ட பெரியார், ஸ்டாலின் பங்கேற்ற மே தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலகட்டத்தில் தான் ஸ்டாலின் அதிபர் பதவிக்கு வந்தார் எதிர் புரட்சிகளை முறியடித்து சோவியத்தில் சோசியலிசத்தை உறுதிப்படுத்திய ஸ்டாலின் பெயரை த் தாங்கி நிற்கும் உலகின் ஒரே முதல்வர் திராவிட ஆட்சியின் முதல்வர் தான் : காரல் மார்க்சின் சிலையை திறந்து வைக்கும் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது மிகச் சிறப்பு; மிகப் பொருத்தம். – விடுதலை இராசேந்திரன் பெரியார் முழக்கம் 10042025இதழ்

வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது. இந்த 4 ஆண்டுகளில் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. அவற்றினால் எட்டப்பட்ட பலன்கள் என்னவென்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சி, 9.69% என அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட 8% வளர்ச்சி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆய்வறிக்கையில் உத்தேசிக்கப்பட்ட 9.3% வளர்ச்சி ஆகியவற்றை விடவும் அதிகமான வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு எட்டியிராத அதிகபட்ச வளர்ச்சி என்பது மட்டுமல்ல, இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை இந்த ஆண்டு பதிவு செய்திருப்பது தமிழ்நாடுதான். குறிப்பாக சேவைகள் துறை 12.7%, இரண்டாம் நிலை துறைகள் 9% வளர்ச்சி கண்டுள்ளன. ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க...

ம.பி.யில்  பார்ப்பனரின் ‘இன ஒதுக்கல்’ சனாதன இந்துக்களுக்கு மட்டும் தனிக் கிராமாம்!

ம.பி.யில் பார்ப்பனரின் ‘இன ஒதுக்கல்’ சனாதன இந்துக்களுக்கு மட்டும் தனிக் கிராமாம்!

சனாதன இந்துக்களுக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனி கிராமம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அனுமார் கோயில் பார்ப்பன அர்ச்சகர். 1000 சனாதன இந்துக்கள் இந்த கிராமத்தில் குடியேறுகிறார்கள். சனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த கிராமத்தில் நுழைய தடை விதிக்கப்படும். அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்த தனிக் குடியிருப்புக்கு மாநில பாஜக ஆட்சி பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்துக்கள் மட்டும் வாழும் முதல் கிராமம் ம.பி. பாகேஷ்வர் அனுமர் கோயில் சார்பில் அமைகிறது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் கன்ஞ் மாவட்டத்தின் சத்தர்பூரில் உள்ளது கதா கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ‘பாகேஷ்வர் தாம்’ எனும் அனுமர் கோயில் உள்ளது. இதன் தலைமை அர்ச்சகர் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, பாகேஷ்வர் தாம் ஜன் சேவா சமிதி என்ற சமூக நல அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பின் சார்பில் கோயிலுக்கு அருகில் உள்ள பரந்த பகுதியில் ஒரு இந்து கிராமத்தை உருவாக்க இதற்காக...

மோடி நடத்துவது “உயர்ஜாதி” ஆட்சி –

மோடி நடத்துவது “உயர்ஜாதி” ஆட்சி –

“பார்ப்பன‌ உயர் ஜாதி சுரண்டலுக்கு வழிவகுக்கும் ஜாதி அமைப்பு. இதுகுறித்து நான் ஆழமாக ஆராய்ந்தேன். இந்த நாட்டில் பார்ப்பன உயர் ஜாதியில் பிறக்காத ஏனையோர் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்கின்றனர்” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார். கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பாட்னாவில் நடந்த ‘அரசியல் சட்டத்தை காப்போம்’ மாநாட்டில் ராகுல் காந்தி பேசினார். மூன்றாவது முறையாக பீகார் வந்துள்ளார் ராகுல் காந்தி, “காந்தியடிகள் உண்மையின் சோதனை நூலை எழுதினார். மோடி பொய்களின் சோதனையை எழுதிக் கொண்டிருக்கிறார்” என்று கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாகத் தாக்கினார். மேலும் அவர் பேசியதாவது: அரசியல் சட்டம் சாவர்க்கரின் சிந்தனை அல்ல; மாபெரும் தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனையைக் கொண்டது. இப்போது நடக்கும் ஆட்சி பார்ப்பன உயர்ஜாதி நலனுக்காகவே நடக்கிறது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிறப்படுத்தப்பட்ட மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்த நாட்டில் நீங்கள் பார்ப்பனராகவோ,‌‌ உயர் ஜாதியினராகவோ பிறக்காவிட்டால் இரண்டாம்...

பஞ்சாங்கப் புரட்டு அம்பலம்!

பஞ்சாங்கப் புரட்டு அம்பலம்!

தமிழ்நாடு அரசியலில் “ கூட்டணிப் பெயர்ச்சிகள்’ தொடங்கி உள்ளன. மக்கள் குழம்பி நிற்கிறார்கள் அதே போல் “சனிப் பெயர்ச்சியிலும்” குழப்பங்கள். வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது என்று ‘த்ருக்’ பஞ்சாங்கம் கூறுகிறது. வாக்கிய பஞ்சாங்கம் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி இல்லை என்று கூறுகிறது. திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி இல்லை என்று கூறிவிட்டது. ஏனைய‌ சோதிடர்கள் உண்டு என்று கூறுகிறார்கள். அன்றாடம்‌ ராசி பலன்களை நம்பும் நம்பிக்கையாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள். பஞ்சாங்கங்கள் அறிவியலுக்கு எதிரானது என்பதற்கு இதுவே சான்று. அறிவியல் என்றால் ஒரு கருத்துதான் இருக்க முடியும் விண்வெளியில் நிகழும் மாற்றங்களை அறிவியல் ரீதியாக ‘ஜீயோ சென்டிரிக் டாட் காம்’ என்ற‌ இணையதளம் விளக்குகிறது. ஆனால் இது மக்களுக்கான கிரகப் பலன்களைக் கூறாது. காரணம், அது அறிவியல் அல்ல மக்களோ பஞ்சாங்கத்தைதான் நம்புகிறார்கள் அறிவியலை மறுக்கிறார்கள். சனிப்பெயர்ச்சி போல் கூட்டணி பெயர்ச்சியும்...

மோடிக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பா?

மோடிக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பா?

மோடி பதவியேற்ற 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக நாக்பூர்‌ ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் சென்று உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மோடிக்கும் ஏதோ முரண்பாடு இருப்பது போலவும் மோடி பதவி விலக ஆர்.எஸ்.எஸ். நிர்பந்திப்பது போலவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. மோடி போய் வேறு எந்த ஜோடி வந்தாலும் அவர்கள் நிறைவேற்றப் போவது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை மட்டும் தான். மோடி ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கைகளைத் தான் தனது ஆட்சியில் அமல்படுத்தி‌ வருகிறார். இதில் முரண்பாடுகள் மோதல்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் பித்தலாட்டமான செய்திதான். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைத் தான் மோடி ஆட்சி‌ அமல்படுத்துகிறது என்பதில் இருந்து திசைத் திருப்பி மோடிக்கு ஆர்.எஸ்.எஸ்.-க்கும் மோதல் என்பது போன்ற‌ செய்திகளை உருவாக்கி அடிப்படையான கருத்துக்களை திசைமாற்ற பார்க்கிறார்கள். பெரியார் முழக்கம் 03042025இதழ்

சங்கராச்சாரிகளை அம்பலப்படுத்துவோம்!

சங்கராச்சாரிகளை அம்பலப்படுத்துவோம்!

“சமூக மாற்றத்திற்கு வாழ்நாள் முழுதும் போராடியவர் பெரியார். சமூகத்தை அடிமைப்படுத்திய சக்திகளை சரியாக அடையாளம் கண்டார். ”ஜாதி வர்ணாசிரம” கட்டமைப்பே தமிழர்களின் எதிரி என்ற முடிவுக்கு வந்தார். அதற்கான கருத்தியல்களை வழங்கிய பார்ப்பனியத்தையும், அதன் தலைமை பீடமான சங்கராச்சாரிகளையும் கடுமையாக எதிர்த்தார். பெரியார் ஜாதி ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பிறவியின் அடிப்படையில் பிராமண, சூத்திர பேதத்தை நியாயப்படுத்தும் வர்ணாசிரமமே நமக்கான தர்மம் என்றனர். பெரியார் தீண்டாமைக்கு எதிராகக் களமாடினார். வைக்கத்தில் போராடினார். சங்கராச்சாரிகள் தீண்டாமை தேவை அது ஷேமகரமானது என்றார்கள். பெரியார் பெண்ணடிமை ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பெண்கள், ஆண்களுக்கு அடிமைப்படுவதே நமக்கான தர்மம் என்றனர். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள் தரிசு நிலம். அவர்கள் பார்க்கக்கூடாதவர்கள், தீண்டப்படாதவர்கள் இதுவே நமது தர்மம் என்றார்கள். பெரியார் தமிழை அறிவியல் மொழியாக்க விரும்பினார். இன்னும் தமிழ் காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கலாமா என்று கவலைப்பட்டார். திருக்குறள்...

எளிதில் கிட்டும் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு!

எளிதில் கிட்டும் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு!

தமிழ்நாட்டில் சுமார் 10 ஆண்டுகளாக, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் MS / PhD போன்ற மேற்படிப்பு படிப்பதற்கு என்று உதவித்தொகை திட்டம் நடைமுறையில் இருக்கிறது. 2021-ஆம் ஆண்டுவரை இந்த திட்டத்தினால் பயன்பெற்றவர்கள் மொத்தம் 10 பேர்கூட கிடையாது. ஆனால், 2021ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இப்போது வரை மட்டும் சுமார் 135 பேர் இந்த திட்டத்தினால் பயன்பெற்று வெளிநாட்டில் படிக்கிறார்கள். பல மாணவர்கள் வருடத்திற்கு 30 லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்தில் நிதியுதவி பெறுகிறார்கள். கடந்த நிதி ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு சுமார் 30 கோடி ரூபாய் இதற்காக செலவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

மும்மொழிக் கொள்கை சீரழிவு!

மும்மொழிக் கொள்கை சீரழிவு!

புதிய கல்விக்கொள்கையை இந்தியாவிலேயே முதன்முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம் கர்நாடகா. 2021-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசு, புதிய கல்விக்கொள்கையை அம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்தியது. 2023-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்தவுடன், இந்தப் புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெறுவது குறித்தும், மாநிலக் கல்விக் கொள்கையை வரையறுப்பது தொடர்பாகவும் 15 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு இதுவரை தங்களது வரைவறிக்கையைச் சமர்பிக்கவில்லை. இதனால், புதிய கல்விக்கொள்கை இன்னும் அம்மாநிலத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி மும்மொழிக் கொள்கையும் கடைபிடிக்கப்படுகிறது. மூன்றாவது மொழியாக எந்த இந்திய மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று, தமிழ்நாட்டில் பா.ஜ.க. சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் மூன்றாவது மொழியாக இந்திதான் கற்பிக்கப்படுகிறது. 6, 7-ஆம் வகுப்புகளில் இந்தி கற்றுக்கொடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதும் முழுமையாக இந்தி ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இப்படி, கற்றல் குறைபாட்டோடும், அதனால் ஏற்படும் மனச்சுமையோடும் இருக்கும் மாணவர்களுக்குப்...

தரிசனத்துக்கு சட்டையை கழற்ற மறுப்பு! கேரளாவில் போராட்டம்

தரிசனத்துக்கு சட்டையை கழற்ற மறுப்பு! கேரளாவில் போராட்டம்

திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அறிவிப்பை மீறி பத்தனம்திட்டா அருகே சம்பவம்! கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள தர்மசாஸ்தா கோயிலில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அறிவிப்பை மீறி சட்டை அணிந்து தரிசனம் செய்த பக்தர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் குருவாயூர் கிருஷ்ணன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்பட பல முக்கிய கோயில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மரபு கடந்த பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள சிவகிரி நாராயண குரு ஆசிரமத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆசிரமத்தின் தலைவர் பேசும் போது கோயில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். சிவகிரி மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இந்த வழக்கம் பின்பற்றப்பட மாட்டாது என்று அவர் மேலும் கூறினார். காலம் மாறும் போது இது போன்ற நம்பிக்கைகள் தேவையில்லாதது என்று முதல்வர்...

உயிரிழப்புகளை மறைக்கிறது ஒன்றிய அரசு?

உயிரிழப்புகளை மறைக்கிறது ஒன்றிய அரசு?

உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெற்ற கும்ப மேளாவில் 66 கோடி பேர் திரண்டதாகவும், உலகின் மிகப்பெரிய ஆன்மீகத் திருவிழா இதுதான், இதற்கு ஈடாக மக்கள் கூடிய இன்னொரு கொண்டாட்டத்தை காட்ட முடியுமா என்றும் சங்கிகள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். ஆனால் 66 கோடி பேர் என்று சங்கிகள் கூறுவது வாய்க்கு வந்ததை அள்ளிவிடும் கட்டுக்கதை என்று ஊடகங்கள் அம்பலப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஏனெனில் கும்பமேளா நடைபெற்ற பிரயாக்ராஜிற்கு விமானத்தில் சென்றவர்கள் எண்ணிக்கை 5.6 லட்சம் பேர். ரயிலில் சென்றவர்கள் எண்ணிக்கை 4.24 கோடி பேர். அரசுப் பேருந்துகளில் சென்றவர்கள் 3.25 கோடி பேர். தனியார் பேருந்துகளில் சென்றவர்கள் 2.7 கோடி பேர். ஒட்டுமொத்தமாக சேர்த்தால் 10.25 கோடி பேர்தான் ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் மூலம் சென்றிருப்பார்கள். இதில் கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் எண்ணிக்கை குறித்து எந்த கணக்கும் இல்லை. ஆனால் ரயிலில் சென்றவர்களை விடவோ,...

மோடி யார்? உண்மைகளை உடைக்கும் Grok!

மோடி யார்? உண்மைகளை உடைக்கும் Grok!

கடந்த சில வாரங்களாக இந்திய இணைய உலகை கலக்கிக் கொண்டிருக்கிறது எக்ஸ் சமூக ஊடகத்தின் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான Grok. இந்த ஏ.ஐ. இந்த தளத்தில் கேள்விகள் எழுப்பினால் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தரவுகளின் அடிப்படையில், பகுத்தறிந்து சரியான பதிலைத் தர முயற்சிக்கிறது. எக்ஸ் தள பயனாளிகள் மிகுந்த ஆர்வத்தோடு @Grok என டைப் செய்து, கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெற்று சோதித்துப் பார்க்கின்றனர். சேட் ஜிபிடி போன்ற இதற்கு முந்தைய செயற்கை நுண்ணறிவுத் தளங்களைக் காட்டிலும், கூடுதல் துல்லியமான பதிலைத் தருகிறது Grok. அது இணைய பயன்பாட்டாளர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பாஜக, சங் பரிவார்களுக்கு மட்டும் இந்த பதில்கள் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நேர்மையான தலைவர் யார்? மோடியா? ராகுல் காந்தியா? என Grok-யிடம் கேள்வி எழுப்பினால், தரவுகளை ஆராய்ந்து மோடியை விட ராகுல் நேர்மையானவர் என பதில் தருகிறது. ராகுல் காந்தி உண்மையிலேயே...

ஜாதியைத் தூக்கிட்டு வராதீங்க!

ஜாதியைத் தூக்கிட்டு வராதீங்க!

அமெரிக்காவில் வாழும் குஜராத்தைச் சேர்ந்த டயலன் பட்டேல் என்பவர், “டல்லாஸில் எனது சாதிக்கான (லியுவா படிதார் சமாஜ் சாதி) வாலிபால் போட்டி நடைபெறுகிறது. அமெரிக்காவில் 40,000 பேர் எங்கள் சாதியினர். அதில் 8,000 பேர் இங்கு உள்ளனர். குஜராத்தின் ஒரு சில பகுதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறோம். நாங்கள் கிராமப்புற அமெரிக்காவில் மோட்டல் அல்லது பெட்ரோல் பம்ப் வைத்து உள்ளோம்” என்று ஜாதிப் பெருமையுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த பதிவுக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஜாதிப் பெருமை பேசிய இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்து அமெரிக்கா அரசியல்வாதிகள் போஸ்ட் செய்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டன் கில் செய்துள்ள பதிவில், “அமெரிக்கா என்பது தகுதி வாய்ந்தவர்களுக்கான நாடு. இதற்கு காரணம் நம்மிடம் சாதி அமைப்பு இல்லை. இந்தியா போன்ற வெளிநாட்டில் உள்ள வர்க்க வேறுபாட்டை, ஜாதி வேறுபாட்டை இங்கே...

பார்ப்பனர்கள் கூட்டத்தில் நீதிபதிக்கு என்ன வேலை?

பார்ப்பனர்கள் கூட்டத்தில் நீதிபதிக்கு என்ன வேலை?

கேரளாவில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் பங்கேற்றதைப்போல, பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டிலும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் என்ற பார்ப்பனர் பங்கேற்றுப் பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடித்துப் பேசி இருக்கிறார். ‘பிராமண மகா சபையின் பொன் விழா’ இரண்டு நாட்கள் நடைபெற்றது. அம்மாநாட்டில் பேசிய அவர், “பிராமணர்கள் என்ற வார்த்தையை ஒரு ஜாதியாக பார்ப்பதைவிட, வர்ணாசிரம தர்மத்துடன் பார்க்க வேண்டும். வேதங்களை தொகுத்த வேதவியாசர், மீனவப் பெண்ணின் மகன்; ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இவர்களை கீழானவர்களாக பிராமணர்கள் பார்த்தது இல்லை. ஹிந்து கடவுளான ராமரின் கருத்துக்கள், நம் அரசமைப்பிலும் இடம் பெற்றுள்ளன.’’ என்று பேசியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நீதிபதி சிறீசானந்தா, “மக்கள் கல்வி, உணவுக்காக போராடும்போது, இதுபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகள் தேவையா என்று விமர்சிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளே சமூகத்தினர்...

பார்ப்பனர்கள் கூட்டத்தில் நீதிபதிக்கு என்ன வேலை?

பார்ப்பனர்கள் கூட்டத்தில் நீதிபதிக்கு என்ன வேலை?

கேரளாவில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் பங்கேற்றதைப்போல, பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டிலும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் என்ற பார்ப்பனர் பங்கேற்றுப் பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடித்துப் பேசி இருக்கிறார். ‘பிராமண மகா சபையின் பொன் விழா’ இரண்டு நாட்கள் நடைபெற்றது. அம்மாநாட்டில் பேசிய அவர், “பிராமணர்கள் என்ற வார்த்தையை ஒரு ஜாதியாக பார்ப்பதைவிட, வர்ணாசிரம தர்மத்துடன் பார்க்க வேண்டும். வேதங்களை தொகுத்த வேதவியாசர், மீனவப் பெண்ணின் மகன்; ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இவர்களை கீழானவர்களாக பிராமணர்கள் பார்த்தது இல்லை. ஹிந்து கடவுளான ராமரின் கருத்துக்கள், நம் அரசமைப்பிலும் இடம் பெற்றுள்ளன.’’ என்று பேசியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நீதிபதி சிறீசானந்தா, “மக்கள் கல்வி, உணவுக்காக போராடும்போது, இதுபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகள் தேவையா என்று விமர்சிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளே சமூகத்தினர்...

உதயநிதி மீது வழக்குத் தொடர தடை!

உதயநிதி மீது வழக்குத் தொடர தடை!

உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்புப் பேச்சுக்கு எதிராக மேலும் வழக்குகள் போடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், “ ‘சனாதன தர்மத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அவதாரம் எடுத்து வருவேன்’ என்று கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் அப்படியெல்லாம் அவதாரம் எடுத்து கிருஷ்ணன் வர மாட்டார், நாம்தான் வழக்கு தொடர வேண்டும் என்று பகவான் கிருஷ்ணனை அவமதித்து சனாதனவாதிகள் நீதிமன்றத்தை அணுகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் இதுவும்கூட கடவுளை அவமதிப்பதுதான். இதற்காகவே சனாதனவாதிகள் மீது வழக்குத் தொடரலாம். இந்துத்துவ அரசியல் மதத்தையும் கடவுளையும் புறந்தள்ளிவிட்டு கூட்டணி அரசியலாக உருவெடுத்து நிற்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். பெரியார் முழக்கம் 13032025இதழ்

கும்ப மேளாவில் கொடிகட்டப் பறந்த    திருட்டுத்தொழில்!

கும்ப மேளாவில் கொடிகட்டப் பறந்த திருட்டுத்தொழில்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ஆம் தேதிமுதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை கும்ப மேளா நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழா என பாஜக மார்தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் உலகில் எங்குமே நடக்காத பேரவலங்கள் அங்கே நடந்தன. கோடிக்கணக்கான பேர் கூடியதாக செய்திகள் வந்தன. ஆனால் சில லட்சம் பேரை கையாளும் திறன் கூட உத்தரப் பிரதேச பாஜக அரசுக்கு இல்லை. போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லை, ரயில்கள் இல்லை, போக்குவரத்து வசதியே இல்லை. ரயில்களில் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக்கொண்டே உள்ளே ஏறிய காணொளிகளைஇப் பார்த்தோம். ஜனவரி மாதம் இறுதியில் கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்தோர் பற்றிய தெளிவான விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. இவற்றுக்கெல்லாம் மேலாக, “கங்கை நதியின் தரம் குளிப்பதற்கான முதன்மை நீரின் தரத்துடன் ஒத்துப்போகவில்லை. கங்கை நீர் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைத்து இடங்களிலும், மல பாக்டீரியாக்கள் எனப்படும் ஃபெக்கல் கோலிஃபார்ம் அதிகரித்துள்ளது. தற்போது மகா...

முதலில் இந்தி வரும்!     பிறகு சமஸ்கிருதம் வரும்!

முதலில் இந்தி வரும்! பிறகு சமஸ்கிருதம் வரும்!

உத்தரப் பிரதேசத்தில் இந்திக்கு அடுத்து உருது பேசும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் பாடத்திட்டங்கள், அரசுத்துறைகளில் இருந்து உருது வார்த்தைகளை தேடித்தேடி நீக்குகிறது அம்மாநில பாஜக அரசு. இதே தூய்மைவாதத்தை போஜ்புரியில் எதிர்பார்த்தால் அது தேசத்துரோகம் ஆகிவிடும்! பள்ளிகளில் உருதுவில் இறை வணக்கம் செய்ய அனுமதி மறுக்கிறார்கள். உருது ஆசிரியர்கள் பணி நியமனங்களை அலசி ஆராய்ந்து,அவர்களின் கோப்புகளில் எங்கேனும் சிறு பிழை இருக்காதா என தேடித்தேடி பணி நீக்கம் செய்கின்றனர். குஜராத்தில் அம்மாநில மொழியான குஜராத்திக்கே பரிதாப இடம்தான் மிஞ்சியிருக்கிறது. அதனால்தான் 2023-24 நிதியாண்டில் 1-8ஆம் வகுப்பு வரை குஜராத்தியை கட்டாயமாக்கும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது. மூன்றாவது மொழியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மற்ற மொழிகளை கற்பிக்கலாம் என பெயரளவில் சொல்லியிருக்கிறார்களே தவிர, ஒரு மாநிலத்தில் கூட விருப்பப்பாடமாக தென்மாநில மொழியை மாணவர்கள் தேர்ந்தெடுத்ததாகவோ அல்லது ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவோ தகவல் இல்லை. ஏன், பல வட இந்திய...

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவில் கூடும் சாமியார்கள், 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இந்து நாடாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்து அரசமைப்புச் சட்டம் கும்பமேளா தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதுவே மனிதத்தின் மதம். நமது வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், மதம் ஒன்றுதான். அந்த மதம் சனாதன தர்மம். அந்த சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது. பிரயாக்ராஜில் நடந்து வரும் மாபெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, எந்த ஒரு ஜாதி அல்லது மதத்திற்கும் உட்பட்டது அல்ல. இது அனைத்து மதம், கலாசாரம் மற்றும் சமயங்களின் மாபெரும் கலவையாக திகழ்கிறது.’’ என்று கூறியுள்ளார். ஆனால் கும்பமேளாவில் கூடிய சாமியார் கூட்டம் இந்து அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கக் குழு அமைத்துள்ளது....