இலக்கியா-பிரகாஷ் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தோழர்கள் இலக்கியா- பிரகாஷ் சுயமரியாதை ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு புதுவை அரியாங்குப்பத்தில் நடைபெற்றது.

காசு.நாகராசன் (அமைப்பு செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை) வாழ்த்துரை வழங்கினார். சடங்குகளால் மணமக்கள் படும் தொல்லைகளை, அவமதிப்புக்களை எடுத்துரைத்தார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இணையேற்பை நடத்தி வைத்து மந்திரங்கள் அதன் வழியாக சடங்குகள் மூலம் அடிமைத்தனத்தைத் திணிக்கும் பார்ப்பன புரோகித திருமண முறையும், எவ்வித சடங்குகள் இல்லாமல் நடைபெறும் சுயமரியாதைத் திருமணம் பற்றி விளக்கிப் பேசினார்.
நிறைவாக மணப்பெண் இலக்கியா பேசுகையில் “பெற்றோர்கள் பிள்ளைகளை ஆசை ஆசையாக வளர்க்கிறார்கள் ஆனால் அவர்களின் சுய விருப்பத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஜாதி, மதத்தை காரணம் காட்டி பல பேர் இல்லறம் சரியாய் அமைவதில்லை. ஆகவே பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். பிள்ளைகளின் சுய விருப்பத்தை பாருங்கள், ஜாதி, மத, சொந்தக்காரர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள்.

என்னுடைய குடும்பம் ஆச்சாரமான கடவுளை நம்பும் குடும்பம். ஆனால் இன்றைக்கு என்னுடைய விருப்பத்தை ஏற்று இந்த ஜாதிமறுப்பு இணையேற்பை நடத்துகிறார்கள்”.

மணமகன் பேசுகையில் கணவனை இழந்த பெண்கள் திருமண நிகழ்வில் ஒதுக்கிவைக்கும் புரோகித திருமணத்தை விட கணவனை இழந்த பெண் என்னுடைய தாயார். அவர் அருகிலேயே மேடையில் இந்த சுயமரியாதை திருமணம் நடக்கிறது என்று கூறினார். புதுவை தீனா நிகழ்வை ஒருங்கிணைத்தார். கழகத் தோழர்கள் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண், கடலூர் சிவா மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.2000 மணமக்கள் வழங்கினர்.
பெரியார் முழக்கம் 19062025இதழ்

You may also like...