ஜாதி பேசும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
பள்ளி மாணவர்களிடையே ஜாதிப்பாகுபாடுகளை உருவாக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. இது பாராட்டி வரவேற்கத்தக்கதாகும். இத்தகைய ஜாதி உணர்வு கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், அது பள்ளி வளாகத்தில் கடும் விளைவுகளை உருவாக்கி விடும்; பள்ளிகளின் நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும் என்றும் கல்வித்துறையின் சுற்றறிக்கை எச்சரிக்கிறது. சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்: * பள்ளி நிர்வாகம் மாணவர்களின் ஜாதி அடையாளத்தை ரகசியமாக பாதுகாக்க வேண்டும். * ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிடமிருந்து கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது. * இதுகுறித்து நிர்வாகம் விளக்கம் கேட்க விரும்பினால், மாணவர்களை தனித்தனியாக முதல்வர் அறைக்கு அழைத்துப் பேச வேண்டும். * மாணவர்களிடம் அலைபேசி இருந்தால் அதை பறிமுதல் செய்து பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்....
