கோடி கோடியாக சங்கிகளுக்கு குவியும் வெளிநாட்டுநிதி!
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று செயல்படும் நிறுவனங்களைக் குறிவைத்து ஒழிக்கும் முயற்சிகளில் ஒன்றிய ஆட்சி இறங்கியுள்ளது. இதற்கான FCRA சட்டத்தில் திருத்தங்களை செய்யும் மசோதாவை கடந்த மார்ச்-25ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக கிறிஸ்துவ நிறுவனங்களை முற்றாக ஒழித்துக் கட்டும் மசோதா இது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் சுட்டிக்காட்டி மசோதாவைத் திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த மசோதா அமலுக்கு வந்தால் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெறும் உரிமையை ஒன்றிய ஆட்சி ரத்து செய்ய முடியும். உரிமையை ரத்து செய்து விட்டால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நிதிக்கு மட்டும் தடையில்லை; மாறாக நிதி உதவியோடு நடத்தப்படும் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், சர்ச்சுகள் இவைகளை அரசு தானாகவே கைப்பற்றிக் கொள்ள முடியும். இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அடிப்படை உரிமைகளையே முடக்கும் கொடூரமான சட்டம்! வேத பார்ப்பனியம் “சூத்திர பஞ்சமர்களின்” கல்வி உரிமையைத்...
