Category: அண்மைச் செய்திகள்

ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா

ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா

கழகத் தோழர்கள் ஜெயந்தி-பாரி.சிவக்குமார் இல்லத் திறப்பு விழா பிப்ரவரி-01 அன்று காலை 9 மணியளவில் மந்தைவெளியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இருவரும் இணைந்து திறந்து வைத்தனர். பேராசிரியர்.சரசுவதி, மயிலாடுதுறை இளையராசா (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இணையர்களின் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். பாரி.சிவக்குமார் நண்பரான தோழர் சக்திவேல் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை மாவட்டக் கழகம் சார்பில் பெரியார் அம்பேத்கர் படம் பரிசாக கழகத் தலைவர் அவர்கள் பாரி சிவா அவர்களிடம் வழங்கினார். கழகத் தோழர் குமரன் தன்னுடைய ஆட்டோவில் எழுதியிருந்த ” மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்ற பெரியார் வாசகத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை.இராசேந்திரன் பார்வையிட்டனர். இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன் | ந. தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், ஊடகவியலாளர் பிரகாசு,...

நாமக்கல்லில் சமத்துவ பொங்கல் விழா

நாமக்கல்லில் சமத்துவ பொங்கல் விழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கம்பன் நகரில் தேவி மாதேஸ்வரன் இல்லத்தில் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கழகத் தலைமைக் குழு உறுப்பினர் கேப்டன் அண்ணாதுரை பொங்கல் விழா சிறப்புரை நிகழ்த்தினார். இலக்கிய தளம் அன்பழகன், பகலவன் (மொழிப்போர் தியாகிகள் நினைவு குழு), மு.சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்), ஆர் கே.குமார் (தி. க மாவட்டத் தலைவர்), ஸ்ரீ வடிவேலு (நகரச் செயலாளர்), மி.த தண்டபாணி (நகரத் தலைவர்), தோழர்கள் பிரகாஷ், மோகன், கார்த்தி சரவணன் ஆகியோரின் குடும்பமும் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். கம்பன் நகர் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.பகுதிக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாலை 4-மணியளவில் அனைவருக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவாக சுதாமணி ராஜ் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் இதழ்05022026.

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!

தை-2 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது! சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 16.01.2026 காலை 10 மணி அளவில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள திருவள்ளுவர் உருவச் சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தங்கதுரை, வெற்றிமுருகன், மாநகரத் தலைவர் பாலு, மாநகர செயலாளர் ஆனந்தி, மாநகரப் பொருளாளர் பிரபு, மாநகர அமைப்பாளர் தேவராஜ், செந்தில், FM பாலமுருகன், பரமேஷ், கோகுலகண்ணன், பாரப்பட்டி முருகேசன், நவராஜ், விக்ரம், அலாவுதீன், தமிழினி, நீலகண்டன், ஹரினி, சுதர்சன் ஆகிய கழகத் தோழர்கள் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

திருப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா!

திருப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா!

திருப்பூரில் கடந்த 10- ஆண்டுகளுக்கு மேலாக கழகத்தினர் தமிழர் திருநாள் பொங்கல்விழாவை பகுதி மக்கள் மற்றும் தோழமை சக்திகளின் ஆதரவுடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வீரபாண்டி பிரிவு பாரதி நகரில் கழகப் பொருளாளர் துரைசாமி , மாஸ்கோ நகரில் மாதவன் முன்னெடுப்பிலும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். வீரபாண்டி பிரிவு: பாரதி நகர் பெரியார் படிப்பகம் பகுதியில் பொங்கல் விழா 15.01.26 அன்று காலை பொங்கல் வழங்குதலில் தொடங்கி, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் வாழ்த்துரை வழங்குதல் பரிசு வழங்குதல் என மாலை வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சரசுவதி (கழக மாநகர அமைப்பாளர்) பொங்கல் வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளை வீரபாண்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், ஆர்.குமார் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்) தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளை ஆர்.கணேசன், சி.லட்சுமணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாலை வரை விளையாட்டுப்...

பாஜக முயற்சி முறியடிப்பு!

பாஜக முயற்சி முறியடிப்பு!

திருவல்லிக்கேணி பகுதி வி.பி ராமன் சாலையில் பெரியார் சிந்தனைப் பலகை அருகில் பாஜகவினர் இரவு நேரத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பத்தை வைக்க முற்பட்டனர். செய்தியறிந்த கழகத் தோழர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்து கொடிக் கம்பத்தை எடுக்க வைத்தனர். ப.அருண் (இளைஞரணி அமைப்பாளர்), திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் சு.கோபிநாத், சே.ராஜேஷ், த.நா.சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் குமார், யாழினி ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

சனவரி-25 அன்று நடராசன் – தாளமுத்து உள்ளிட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு மூலக்கொத்தலம் நினைவிடத்திற்கு பேரணியாகச் சென்று, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர்கள் சேத்துப்பட்டு இராசேந்திரன், மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, ம. கி. எட்வின் பிரபாகரன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.வ. வேலு, இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், சுகுமார், இரண்யா, குறளரசி, துரை, சு. கோபிநாத் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ்05022026.

யுஜிசி விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்!

யுஜிசி விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்!

ஆனால் “ஜாதிப் பாகுபாடு” என்பது எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஒபிசிபிரிவினருக்கு எதிரான பாகுபாடுகளை மட்டுமே குறிக்கும் வகையில் இருப்பதாக உயர்ஜாதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வி.பி. சிங் அமல்படுத்தியபோது வெளிப்படுத்திய கண்மூடித்தனமான எதிர்ப்பை இதற்கும் வெளிக்காட்டியுள்ளனர். உயர் ஜாதியினரே ஒடுக்குமுறையாளர்கள் என்று இந்த விதிகள் மறைமுகமாகக் கருதுகின்றன, இதனால் அவர்கள் துன்புறுத்தப்படலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். பொய்யான புகார்களுக்குத் தீர்வு காணும் வழிமுறைகள் இதில் இல்லை. இவற்றில் ஏதாவது அடிப்படை நியாயமோ, நேர்மையோ இருக்கிறதா? ஆனால் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த இந்த விதிகளுக்கு பா.ஜ.க.விலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் ரே பரேலி மாவட்டம் சலோனில் பாஜக கிசான் மோர்ச்சாவின் மாவட்டத் தலைவரான ஷியாம் சுந்தர் திரிபாதி, எதிர்ப்பின் காரணமாக ராஜினாமா செய்த தலைவர்களில் ஒருவர். ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், “விதிகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என்றார். “இன்று இல்லையென்றாலும் நாளை...

குன்னத்தூரில் ஜாதி வெறிச்செயல்  கழகம் எதிர்வினை!

குன்னத்தூரில் ஜாதி வெறிச்செயல் கழகம் எதிர்வினை!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருப்பண நாடார் பள்ளியில் 30-01-2026 அன்று சக மாணவர்களால் 8-ம் வகுப்பு பட்டியலின வகுப்பைச் சார்ந்த ரக்சத் என்னும் மாணவன் தீயில் தூக்கி வீசப்பட்ட ஜாதி வெறிச் சம்பவம் நடந்துள்ளது. தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட மாணவனை பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். உடனே செய்தி அறிந்த திராவிடர் விடுதலைக் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் அவர்களுடைய தலைமையில் முகில் ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), செல்வக்குமார் (கோபி மாவட்டச் செயலாளர்), மாரிமுத்து (திருப்பூர் மாநகர துணை தலைவர்), கோபி அருளானந்தம், ஈசுவரமூர்த்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவனைச் சந்திக்கச் சென்றனர். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆறுதல் கூறியதோடு அவனுடைய பெற்றோர்களிடமும் மற்றும் மாணவனிடமும் தோழர் இராம.இளங்கோவன் அவர்கள் நடந்த உண்மை சம்பவங்களைக் கேட்டு அறிந்தார். பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய லெனினிய அமைப்புகளை ஒன்றிணைத்து இச்சம்பவத்திற்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தையும் மற்றும் தொடர்ந்து பள்ளியில் ஜாதிய பாகுபாடுகளுக்கு எதிராக புகாரளித்தும் கண்டும் காணாமல்...

பெரியார் பற்றிய செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா! ஜீவாவின் வாழ்க்கை வரலாறுகளில் விடுபட்டது எப்படி?ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 12-கொளத்தூர் மணி

பெரியார் பற்றிய செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா! ஜீவாவின் வாழ்க்கை வரலாறுகளில் விடுபட்டது எப்படி?ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 12-கொளத்தூர் மணி

காந்தி ஆசிரமத் தலைவர் கும்பலிங்கம் அவர்களுடைய அறிக்கை கூறுகிறது, அந்த ஆசிரமம் 11.2.1926 அன்று தொடங்கப்பட்டது என்று. இந்த செய்தியைத் தாங்கி இருக்கிற அதே ‘குடிஅரசு’ இதழின் 5ஆம் பக்கத்தில் மற்றொரு செய்தியும் பதிவாகி இருக்கிறது. அச்செய்தி “ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் 6.4.1926-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீமான்கள் பிச்சா சுப்பிரமணிய செட்டியார், ராய. சொக்கலிங்கம் செட்டியார், வ.ராமசாமி அய்யங்கார் முதலியவர்களுடன் காரைக்குடியில் இருந்து காலை 9 மணிக்கு வந்ததும், வாத்திய கோஷத்துடன் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்காக ஸ்ரீமான் கும்பலிங்கம் பிள்ளை பார்வையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காந்தி ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்ற செய்தியை நாம் பார்க்கிறோம். பெரியாரை தவிர்த்த ஜீவா ஏற்கனவே 7.4.1926 நாளிட்ட ‘குமரன்’ இதழில் வந்திருந்த செய்தியை நாம் பார்த்திருக்கிறோம். அந்த செய்தியில் இதே நாளில் “6.4.1926 அன்று பெரியார் 10 மணிக்கு சிராவயல் வந்து காந்தி கிணற்றைத் திறந்து வைத்ததும், அதேபோல மாலை 6 மணிக்கு...

தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்

தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்

இளங்கலை ஃபிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி படிப்புகளுக்கும் நீட் (NEET) நுழைவுத் தேர்வு. நீட் நுழைவுத் தேர்வு எனும் அநீதியை மருத்துவப் படிப்புகளில் அரங்கேற்றி வருவதோடு தற்போது இளங்கலை ஃபிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி படிப்புகளுக்கும் நீட்டைக் கட்டாயமாக்கி அறிவித்துள்ளது தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP). தமிழ்நாட்டை ஆண்ட அ.இ.அ.தி.மு.க-வும் ஆளுகின்ற தி.மு.க-வும் பலமுறை நீட் தேர்விற்கு எதிராகவும் தமிழ்நாட்டிற்கு நீட்டிலிருந்து விலக்கு கேட்டும் சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிருந்தார்கள். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தற்போது துணை மருத்துப் படிப்புகளுக்கும் நீட் என்பது “தமிழ்நாடு தமிழருக்கே!” என்கிற முழக்கத்தை ஓங்கி ஒலிக்க வேண்டிய தேவையை உருவாக்குகிறது! ஒவ்வொரு வருடமும் நீட் நுழைவுத் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் அதிகரித்து வரும் சூழலில் NCAHP-ன் இந்த நடவடிக்கை பச்சை அயோக்கியத்தனமே. வேறெந்த மாநிலத்தை விடவும் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பிலும், மருத்துவம்...

எமர்ஜென்சியும் பார்ப்பனர்களும்!

எமர்ஜென்சியும் பார்ப்பனர்களும்!

50-ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் ஜனவரி 31 அன்று தமிழ்நாட்டில் முதல் முறையாக கலைஞர் தலைமையில் நடந்த திமுக ஆட்சி ஒன்றிய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்போது அவசர நிலை அமுலில் இருந்த காலம். அதாவது மக்களின் அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டு பேச்சுரிமை, எழுத்துரிமை அரசியல் உரிமைகள் அத்தனையும் பறிக்கப்பட்டிருந்தது. இந்த அடக்குமுறை சர்வாதிகாரத்தை எதிர்த்து துணிவோடு குரல் கொடுத்தார் கலைஞர். சென்னை கடற்கரையில் பல லட்சம் மக்களை திரட்டி அவசர நிலைக்கு எதிராக உறுதிமொழியை எடுக்க வைத்தவர் கலைஞர். இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்றும் ஜனதா கட்சி ஆட்சி செய்த குஜராத் மாநிலம் தான் அவசர நிலையை எதிர்த்தது. இதுகுறித்த வரலாற்றுக் குறிப்புகளை இன்றைய ‘இந்து ‘ஆங்கில நாளேடு வெளியிட்டு இருக்கிறது. அதிமுகவை தொடங்கியிருந்த எம்.ஜி.ஆர் இந்த அவசரநிலை பிரகடனத்தை வரவேற்றார்’ சர்வாதிகாரியாக மாறிய இந்திரா காந்தி ஆட்சியின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று அறிக்கை வெளியிட்டார். அப்போது...

நீதித்துறையில் காவி ஆடுகள்!

நீதித்துறையில் காவி ஆடுகள்!

“சனாதன ஒழிப்பு” பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய, சங்கி அமித் மாளவியா “80 சதவிகிதமான மக்களை இனப்படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா?” என்று பதிவிட்டிருந்தார். சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால் சனாதனம் என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிற பாகுபாடுகளை ஒழிக்க வேண்டுமென்பதுதான் அர்த்தமே தவிர, அதைப் பின்பற்றுகிற இந்துக்களை கொல்ல வேண்டுமென்பது அர்த்தம் கிடையாது. இது தெரிந்திருந்தாலும் சங்கிகள், இதைப்பயன்படுத்தி ஒரு சமூகப் பதற்றத்தை உருவாக்கலாம், அதன் மூலம் தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கு எதிராக ஒரு வெறுப்புணர்வை உருவாக்கலாம் என்ற உள்நோக்கத்தோடு வன்ம கருத்துக்களை பரப்பினர். இதனால், அமித் மாளவியாவுக்கு எதிராக திருச்சி நகர காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி ஸ்ரீமதி, அரசியலமைப்புக்கு புறம்பான, பல்வேறு அபத்தமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்....

அமோக வரவேற்பை பெற்ற நிமிர்வோம் பதிப்பகம்!

அமோக வரவேற்பை பெற்ற நிமிர்வோம் பதிப்பகம்!

சனவரி 8 முதல் 21 வரை, 14 நாட்கள், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த 49-வது சென்னை புத்தகக் காட்சியில், கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 4 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. ம.கி. எட்வின் பிரபாகரன், புத்தகக் காட்சி சார்ந்த அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தார். நிமிர்வோம் பதிப்பகத்துக்கு அரங்கை ஒதுக்கிக் தரக்கோரி, தோழர்கள் தபசி குமரன், கு. அன்பு தனசேகர். பிரகாசு ஆகியோர் விண்ணப்பித்து, அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு, நிமிர்வோம் அரங்கை அமைக்கும் களப்பணியில் தோழர்கள் தபசி குமரன், ம. கி. ‌எட்வின் பிரபாகரன், ஆ.வ. வேலு, ர. பிரகாசு, பேரன்பு, தாமரை, ஸ்ரீலேகா, மடிப்பாக்கம் அருண், புகழேந்தி, சிபி ஆகியோர் ஈடுபட்டனர். விளம்பர பதாகை காவை. இளவரசன் செய்து கொடுத்தார். அரங்கில் வைக்க வேண்டிய 300 புத்தகத் தலைப்புகளின் பட்டியலை, தோழர்கள் ம.கி. எட்வின்...

தோழர் திருமா பேசியதில் என்ன தவறு?

தோழர் திருமா பேசியதில் என்ன தவறு?

முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் திருமாவளவன், “எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. எவனையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது. சமஸ்கிருதமயமானது, இந்துத்துவமயமானது. கோயிலின் கருவறைக்குள்ளே இருந்த தமிழ் தூக்கி வெளியே வீசப்பட்டதெல்லாம் இந்த பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், சேர மன்னர்கள், பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில்தான். வேள்வி நடத்தியவன் யாகம் நடத்தியவன் எல்லாம், தமிழ் பெயர்களை மாற்றி வடமொழிப் பெயர்களை தங்கள் பெயருக்குப் பின்னால் சூட்டிக்கொண்டார்கள். ராஜ ராஜன் என்பது தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ்ப் பெயரா? எல்லாரும் வடமொழிப் பெயர்களைச் சூட்டிக் கொண்டவர்கள். வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்தவன் நான். எனவே எனக்கு...

மேட்டூரில் தை 1 தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா!

மேட்டூரில் தை 1 தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா!

மேட்டூர் நகர கழகத்தின் சார்பாக தை 1 தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் 15.01.2026 காலை 9 மணியளவில் மார்டின் (மேட்டூர் நகர தலைவர்) தலைமையில் நடைபெற்றது. சூரியகுமார் (சேலம் மேற்கு மாவட்ட தலைவர்), கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்), டைகர் பாலு (சேலம் மாவட்ட அமைப்பாளர்), குமரப்பா (மேட்டூர் நகரச் செயலாளர்), அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் அமுல்ராஜ் இசைக்குழு பறை இசை, பகுத்தறிவு திரைப்பட பாடல்கள் பாடினார்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கழகத் தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. சம்பத் (சேலம் மாவட்ட பொருளாளர்), கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), விஜயகுமார் (கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்), மகளிர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 29012026

தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

சென்னையில் கழகத்தினர் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக தமிழர் திருநாள் பொங்கல் விழாவை தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நடன நிகழச்சிகள் என கோலகல கொண்ட்டாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதன் செய்தி தொகுப்புகள்: சென்னை திருவல்லிக்கேணியில் மறைந்த கழகத் தோழர். பத்ரி நாரயணனின் முன்னெடுப்பில் பொதுமக்கள் அரசியல் கட்சியினர் என அனைவரும் இணைந்து தமிழர் திருநாள் பொங்கல் விழா கடந்த 26-ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை திருவல்லிக்கேணி பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என அனைவரும் இணைந்து, கோலாகல கொண்டாட்டத்துடன் சனவரி 13 மாலை 5 மணி அளவில் வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் நடைபெற்றது. தோழர் கார்மேகம் கலைக்குழுவினரின் பறை இசை ஆட்டம், ஒயிலாட்டம் மயிலாட்டம், கிராமிய பாடல்கள், பொக்களிக்கால் ஆட்டம், நெருப்பு நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மக்களை வெகுவாக ஈர்த்தது....

ஈழத்து அடிகளும், மறைமலை அடிகளாரும் பெரியாரை விமர்சித்தார்களா? பெரியார் பித்தலாட்டமா? -பெருமாள் முருகன்

ஈழத்து அடிகளும், மறைமலை அடிகளாரும் பெரியாரை விமர்சித்தார்களா? பெரியார் பித்தலாட்டமா? -பெருமாள் முருகன்

சென்னையில் நடைபெற்று முடிந்த 49-ஆவது புத்தகக் காட்சியில் வெளியான சில நூல்கள் அரசியல் ரீதியாகக் கவனத்தை ஈர்த்ததோடு பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தின. அவற்றில் இரண்டு நூல்கள் மொழிப்போர் பற்றியவை. இரண்டையும் வெளியிட்டது ‘நாம் தமிழர்’ கட்சி சார்புடைய ‘தமிழம் பதிப்பகம்.’ திராவிட இயக்க அரசியலுக்கும் தமிழ்த் தேசியம், இந்திய தேசியம் ஆகிய அரசியல் சக்திகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போராட்டத்தில் இந்நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தலைப்பில் இருந்து தகிடுதத்தம் ஈழத்துச் சிவானந்த அடிகள் எழுதிய ‘இந்தி எதிர்ப்புப் போரில் ஈவெரா பித்தலாட்டம்’ என்பது ஒருநூல். ஈழத்தடிகள், ஈழத்து அடிகள், கருவூர் ஈழத்து அடிகள், ஈழத்துச் சிவானந்த அடிகள் என்றெல்லாம் பெயர் காணப்படும் ஈழத்து அடிகள் 1965-இல் எழுதிய ‘இந்தி எதிர்ப்பு அன்றும் – இன்றும்’ என்னும் நூலே இதன் மூலம் ஆகும். தமிழம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இன்னொரு நூல் மறைமலையடிகள் எழுதிய ‘முதலாம் இந்தி எதிர்ப்புப் போர்: தொடங்கியது யார்?’ என்னும்...

பெரியார் முழக்கம் சந்தா குவிகிறது!

பெரியார் முழக்கம் சந்தா குவிகிறது!

தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு 25 பெரியார் முழக்கத்துகான சந்தா தொகை ரூ.7,500 கழகத் தலைவரிடம் வழங்கினார். தோழர் முருகேசன் மதுரை மாவட்டக் கழகம் சார்பாக 29 பெரியார் முழக்க சந்தா மற்றும் ரூ.8,700 தொகையை பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தோழர் துரை. தாமோதரன் பெரம்பலூர் மாவட்டக் கழகம் சார்பாக ரூ.10,000 பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தோழர் வேணுகோபால் (தர்மபுரி மாவட்டத் தலைவர்) தர்மபுரி மாவட்டக் கழகம் சார்பாக ரூ.12,900 தொகையை பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தோழர் திருப்பூர் முத்து 20 பெரியார் முழக்கச் சந்தாவுகான ரூ.6000 தொகையை பெரியார் முழக்க வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பெரியார் முழக்கம் இதழ் 29012026

ஊடகவியலாளர் மகிழ்நன் தாயார் மறைவு!

ஊடகவியலாளர் மகிழ்நன் தாயார் மறைவு!

அரண்செய் ஊடகவியலார் தோழர் மகிழ்நன் அவர்களின் தாய் உடல்நல குறைபாடு காரணமாக சனவரி 22 அன்று மறைவுற்றார். அவரது தாயின் உடலுக்கு சென்னை மாவட்டக் கழகம் சார்பில் அவரது இல்லத்தில் உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), அருண் (இளைஞரணி அமைப்பாளர்), த.நா.சூர்யா (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பெரியார் முழக்கம் இதழ் 29012026

ஊழல் வழக்குகளால் உருவான என்.டி.ஏ. கூட்டணி!

ஊழல் வழக்குகளால் உருவான என்.டி.ஏ. கூட்டணி!

`பாரத் மாதா க்கி ஜே, வந்தே மாதரம்’ முழக்கங்களோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் மதுராந்தகத்தில் துவங்கி இருக்கிறது. இதில் சுவையான பல காட்சிகள் அரங்கேறி இருக்கின்றன. “நாங்கள் ஜெயலலிதாவின் பிள்ளைகள், அண்ணன் தம்பிகளான நாங்கள் எங்களுக்குள் அடித்துக் கொள்வோம், அதை எல்லாம் நம்பாதீர்கள். இப்போது எங்கள் குடும்பத் தலைவர் மோடி எங்களை சேர்த்து வைத்து விட்டார்” என்கிறார்கள் தினகரனும் எடப்பாடியும். தேர்தல் ஆணையத்திடம் தினகரன் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்று பிடிபட்ட வழக்கு நிலுவையில் இருப்பதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் சத்தியமாக இல்லை. திமுக ஆட்சியின் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே “இலட்சியத்திற்காக”வே இந்த திடீர் பாசம்! `ஊழல் ஆட்சி ஒழியும்’ என்று இடி முழக்கம் செய்திருக்கிறார் அன்புமணி. இவர் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது தனியார் மருத்துவக் கல்லூரி அனுமதிக்காக லஞ்சம் வாங்கிய வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதை அவரது அன்புத் தந்தை மருத்துவர்...

டிரம்பின் திமிர்த்தனம் அடக்கப்பட வேண்டும்!

டிரம்பின் திமிர்த்தனம் அடக்கப்பட வேண்டும்!

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே சர்வதேச அளவில் குழப்பங்கள், பொருளாதார நெருக்கடிகள், போர்ப்பதற்றங்களை உருவாக்கும் செயல்களைத் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது, குறிப்பாக அமெரிக்காவின் டாலரைத் தவிர்த்துவிட்டு ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யவே கூடாது என மிரட்டல் விடுத்து, இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்திருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் அம்பானி நிறுவனம் கச்சா எண்ணெய் வாங்கினாலும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதன் பலன் இந்தியர்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டது ஒன்றிய அரசு. பலனை அனுபவித்தது பெரும்பாலும் அம்பானிதான். ஆனால் இப்போது வரியேற்றத்தால் ஜவுளிகள், நகைகள், மீன்கள், தோல் பொருட்கள் ஏற்றுமதி துறையினரே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, பல லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டிரம்பை எதிர்த்து கருத்துச்சொல்லவோ, வரிவிதிப்பை நீக்கவோ எந்த முயற்சியும் எடுக்காமல் கள்ள மவுனம் காக்கிறது மோடி அரசு. அதேபோல உலக அளவில் 17%...

மூடப்பட்ட தீண்டாமை தேநீர் கடை

மூடப்பட்ட தீண்டாமை தேநீர் கடை

ஸ்ரீபாலதண்டாயுதபாணி டீக்கடை தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி டம்ளர்; தனி இடம் என்று ஜாதிய தீண்டாமையை கடைப்பிடித்து வந்த. கோயம்புத்தூரில் உள்ள நாதேகவுண்டன் புதூர் என்ற ஊர். இதனை கோவை மாவட்டக் கழகம் ஏற்கனவே வைக்கம் போர் முடியவில்லை என்ற தலைப்பில் தீண்டாமையைக் கடைபிடிக்கும் ஊர்களில் களஆய்வு செய்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறையிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளது. தற்போது இதனை (The Hindu) பொதுவெளியில் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஆகவே அதன் எதிரொலியாக ஸ்ரீ பாலதண்டாயுதபாணி டீக்கடை மூடப்பட்டது. ஏற்கனவே தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்த ஊர்களில் தற்போது ஒரு தனியார் செய்தி நிறுவனம் களஆய்வு செய்து வடிவேலம்பாளையம், மெட்டுவாவி பெரியகளந்தை ஊர்களிலும் அனைவருக்கும் சரிசமமாக ஒன் யூஸ் டம்ளரில் (காகிதக் குவளையில்) தான் தேநீர் தருகிறார்கள் என்ற செய்தியும் தற்போது வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர்-29, 2025 கோவையில் மாநிலம் தழுவிய ஜாதி தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை கழகம் நடத்தியது...

ஊழலால் ஊசலாடுகிறார் அதானி!

ஊழலால் ஊசலாடுகிறார் அதானி!

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அந்த அடையாளத்தை பா.ஜ.க.விடம் கொடுத்துவிட்டு, தலையாட்டி பொம்மை போல, பா.ஜ.க.வின் முடிவுகளுக்கு இணங்கி கட்டுப்பட்டு நிற்கிறது. கூட்டணியை அறிவிக்கும் துணிச்சல் கூட அ.தி.மு.க.வுக்கு இல்லாமல், அமித் ஷா சென்னை வந்து அறிவித்துவிட்டுப்போனார். அதன்தொடர்ச்சியாக இப்போது அ.தி.மு.க. தலைமையில் முதல் பிரச்சார கூட்டத்தை நடத்தாமல், பா.ஜ.க செங்கல்பட்டில் நடத்திய கூட்டத்தில் அ.தி.மு.க.வும் பத்தில் ஒன்றாக கலந்துகொள்ளும் பரிதாபத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. அக்கூட்டத்தில் பலரும் ஊழல்… ஊழல் என்று பேசியிருக்கிறார்கள். ஆனால் அதானியின் ஊழல்தான் இன்றைக்கு உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதானி கிரீன் எனர்ஜி திட்டங்களுக்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும், இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாகப் பாதித்திருக்கிறது என்றும் குற்றம்சாட்டி, அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) அமெரிக்க...

மதவெறிக் காடாகிறதா ஒடிசா?

மதவெறிக் காடாகிறதா ஒடிசா?

ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள பர்ஜாங் கிராமத்தில், ஜனவரி 4-ஆம் தேதி கிறிஸ்தவ பாதிரியார் பிபின் பிஹாரி நாயக்கை தாக்கி, அவர் வாயில் மாட்டுச் சாணத்தை திணித்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லச்சொல்லி வற்புறுத்தியுள்ளது பஜ்ரங் தள் அமைப்பு. அவரை வலுக்கட்டாயமாக திலகம் அணியச் செய்ததுடன், செருப்பு மாலையிட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்துத்துவா கும்பலால் பாதிரியார் கொடூரமாக தாக்கப்பட்டு, பொதுவெளியில் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சி ஒடிசாவில் ஆட்சி அமைத்த நாள்முதல் இத்தகைய சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் மாடுகளை ஏற்றிச் சென்றதற்காக ஒரு முஸ்லிம் நபர் பசு பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். மயூர்ஞ்ச் மாவட்டத்தில் மற்றொரு முஸ்லிம் இளைஞர் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மல்கங்கிரி மாவட்டம் கோட்டமத்தேரு கிராமத்தில் தேவாலயத்திலிருந்து திரும்பிய கிறிஸ்தவர்கள்...

தாய்மை புனிதம் உடைகிறது!

தாய்மை புனிதம் உடைகிறது!

பாஜக ஆளும் வடமாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள்தொகை ஒருபக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வந்தாலும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறும் மாநிலங்களில் பழமைவாத சிந்தனைகள், பிற்போக்குத்தனங்கள் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் காண முடிகிறது. கல்வியில், பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பில் முன்னேறாத மாநிலங்களில் பெண்கள் எத்தனை முறை கருவுற்றாலும் குழந்தை பெற்றுக்கொண்டே ஆக வேண்டுமென்ற சமூக அநீதியை சுமக்க நேரிடுகிறது. அதுதான் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும் காரணமாகிறது. ஆனால் கல்வியில் முன்னேறி வரும் மாநிலங்களில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா அல்லது பின்னர் அதுகுறித்து முடிவெடுத்துக்கொள்ளலாமா என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் மருத்துவ ரீதியாக பதிவு செய்யப்படும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் (2021-2025) வழக்கத்தை விட, கருக்கலைப்புகள் 67% உயர்ந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிப்பதே இதை உறுதிப்படுத்துகிறது. ஒப்பீட்டளவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா போன்ற மாநிலங்களில்தான் அதிகளவு கருக்கலைப்புகள்...

துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வா? தமிழ்நாடு ஏற்காது! எதிர்த்து வெல்லும்!

துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வா? தமிழ்நாடு ஏற்காது! எதிர்த்து வெல்லும்!

‘அலைடு ஹெல்த்’ எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று அறிவித்திருக்கிறது தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (என்.சி.ஏ.எச்.பி.). எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், மற்றும் படிப்புகள் அனைத்திற்கும் தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பையும், கல்வி பொதுப்பட்டியலில் உள்ள அரசியலமைப்பு நியதிகளையும் மீறி நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை- எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, மருத்துவக் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் நீட் தேர்வு கூடாது என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. இந்நிலையில் மருத்துவ துணைப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்பது மோசடியானது. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்களின் அடுத்த கட்ட மருத்துவக் கனவாக துணை மருத்துவப் படிப்புகள் உதவுகின்றன. குறிப்பாக பி.எஸ்சி, பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, மருத்துவஆய்வகத் தொழில்நுட்பம், ரேடியாலஜி, ஆப்டோமெட்ரி, டயாலிசிஸ் உட்பட 56 வகை படிப்புகள் துணை மருத்துவப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றுக்கு நீட் தேர்வு கிடையாது. பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்...

பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஏரியை புனரமைத்து மேட்டூர் உபரி நீரை தேக்கி, சுற்றுலாத்தளமாக்க வேண்டி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை அப்பகுதி விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி, ஏரியை புரைமைத்து முகப்பில் சோழர்கள் சிலையை நிறுவ வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாடு ஏரி, இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில் 05.01.2025 திங்கள் காலை 10.00 மணியளவில் பனமரத்துப்பட்டி ஏரி அருகில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் தோழர் டேவிட் கலந்து கொண்டு போராட்டத்தை ஆதரித்து கண்டன உரை நிகழ்த்தினார். பெரியார் முழக்கம் இதழ் 22012026

சென்னை, கோவை, சேலத்தில் “வெனிசுலா ஆதரவுப் போராட்டம்”

சென்னை, கோவை, சேலத்தில் “வெனிசுலா ஆதரவுப் போராட்டம்”

சென்னையில் வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்காவின் போர் வெறியை முறியடிப்போம் என்ற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் 10.01.26 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) உரையாற்றினார். வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்) மற்றும் கழகத் தோழர் அசோக் ஆகியோர் பங்கேற்றனர். கோவையில் மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே மதுரோவை விடுதலை செய்,வெனிசுலாவிலிருந்து இராணுவத்தை வெளியேற்று என்ற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம், சிபிஎம்எல் ரெட் ஸ்டார், மக்கள் விடுதலை முன்னணி ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் நிர்மல் (கோவை மாநகரச் செயலாளர்) உரையாற்றினார். தோழர்கள் வெங்கட், தரணி, அறிவுக்கனல் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சேலத்தில், வெனிசுலா இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்க துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஆகியோர் கடத்தலை...

காரமடை கழகத்தோழர் ஜெகதீஷ் காலமானார்!

காரமடை கழகத்தோழர் ஜெகதீஷ் காலமானார்!

கோவை மாவட்டக் கழகத்தின் காரமடை பகுதி அமைப்பாளர் ஜெகதீஷ் 31.12.2025 அன்று மறைவுற்றார். பெரியார் கொள்கைகளை பரப்புவதிலும் பரப்புகிறவர்களுக்கு துணை நிற்பதிலும் தோழர் ஜெகதீஷ் முன்மாதிரியானவர். தோழரின் இணையர் கவிதா அவர்களும் பெரியாரிய கொள்கைப் பற்றாளராவார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி 17.01.2026 சனிக்கிழமை அன்று, மத்தாம்பாளையம், கோட்டை பிரிவு, இன்னிசை நகரில் உள்ள ஜெகதீஸ்-கவிதா இல்லத்திற்கு சென்று தோழரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். நிகழ்வில் துரைசாமி (கழகப் பொருளாளர்), ரத்தினசாமி (மாநில அமைப்புச் செயலாளர்), பன்னீர் செல்வம் (கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல்குமார் (கோவை மாநகரத் தலைவர்), அமுல்ராஜ் (மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர்), அய்யப்பன் (திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), முத்து(திருப்பூர் மாநகர அமைப்பாளர்), சண்முகம் ( பல்லடம் ஒன்றிய அமைப்பாளர்), திருப்பூர் இனியன், ராமசாமி (திருப்பூர் தெற்கு பகுதி அமைப்பாளர்), காவை அவினாசி ஆகிய கழகத் தோழர்கள்உடனிருந்தனர். பெரியார் முழக்கம் இதழ் 22012026

ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்!

ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டக் கழத்தின் சார்பில் திருப்பரங்குன்றத்தில் மதவெறியை தூண்டும் நீதிபதி சாமிநாதனே பதவி விலகு இந்து, இஸ்லாமியர் ஒற்றுமையை வலியுறுத்தி பரப்புரைக் கூட்டம் 18/12/25 அன்று மாலை 5 மணியளவில் பாக்கம் கூட்ரோடு சந்திப்பில் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் தலைமையில் நடைபெற்றது. பெரியார் தொண்டர் சிற்பி ராசன் அவர்களின் மந்திரமல்ல! தந்திரமே! என்ற சாமியார்களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் சாக்ரட்டீஸ் (மாவட்டச் செயலாளர்) முன்னிலை வகித்தார். சீனு செல்வரங்கம் (கண்டமங்கலம் மையக் குழு ஒன்றியச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர்), டிவி.நகர் ராஜா (தலித் பபாதுகாப்பு இயக்கம்), விஜி (பகுத்தறிவு வாழ்வுரிமைக் கட்சி), வீராணம் சு. ஆற்றரலசு (மேனாள் மாவட்டச் செயலாளர் விசிக), தீனா (தலைவர்,பெரியார் சிநந்தனையாளர் இயக்கம்), ந.அய்யனார் (கழக தலைமைக்குழு உறுப்பினர்) ஆகியோர் உரையாற்றினர். வழக்கறிஞர் வீ.அழகரசன் சிறப்புரையாற்றினார். கழகத் தோழர் அழகர் நன்றி கூறினார். கு.செல்வமணி (திமுக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்), ந.புருசோத்தமன் (தி.மு.க...

பொள்ளாச்சியில் சீமானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் சீமானைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியாரைப் பற்றி தொடந்து அவதூறு பரப்பி வரும் சீமானைக் கண்டித்து அனைத்து கட்சி இயக்கங்கள் சார்பாக 06.01.2026 அன்று பொள்ளாச்சி காந்தி சிலை புதிய திட்ட சாலையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வே.வெள்ளிங்கிரி திவிக தலைமையில், கோ.சபரிகிரி தொடக்க உரையாற்ற கா.சு.நாகராஜ் (திராவிட இயக்க தமிழர் பேரவை), கா. மாரிமுத்து (மக்கள் விடுதலை முன்னணி), சி மாரிமுத்து (திக), தமிழ்க் குமரன் (ஜெய்பீம் அறக்கட்டளை), குட்டி (விசிக), வாணுகன் (தமிழ்ப் புலிகள் கட்சி), தமிழ்பிரபா (மே 17), கவிஞர். முருகானந்தம் (மாற்று திறனாளிகளுக்கான நியமன நகர மன்ற உறுப்பினர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். சண்முக வேல் பிரபகரன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை) நன்றியுரையாற்றினார். கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 22012026

கோபியில் தெருமுனைப் பிரச்சாரம்!

கோபியில் தெருமுனைப் பிரச்சாரம்!

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 04.01.2026 ஞாயிறு அன்று கோபி அம்மாபேட்டை ஒன்றியம் சனி சந்தை பகுதியில், ‘மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!’ தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. செல்வகுமார் (மாவட்டச் செயலாளர்) தலைமையேற்றார். சிவானந்தம் (தோணி மடுவுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்), தைரியமணி (புஇமு), பாரி (அருந்தமிழர் வாழ்வுரிமைக் கட்சி), காவலாண்டியூர் குமரேசன், நாத்திகசோதி (மாவட்டத் தலைவர்) ஆகியோர் உரையாற்றினர். பரப்புரை பயணத்தின் நோக்கத்தினை விளக்கி இராம. இளங்கோவன் (வெளியீட்டுச் செயலாளர்) விளக்க உரையாற்றினார். இரமேசு நன்றி கூறினார். பெரியார், அம்பேத்கர், கழகத்தின் செயல்பாடுகள் குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டன. கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தோழர்களும், காவலாண்டியூர் பகுதி கழகத் தோழர்களும், பெரியார் தொழிற்சங்க பேரவை தோழர்களும் கலந்து கொண்டனர். தோழருக்கான உணவு ஏற்பாடுகளை தோனிமடுவு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் ஏற்பாடு செய்தார். பெரியார் முழக்கம் இதழ் 22012026

கிராமங்கள்தோறும் பிரச்சாரம் – கோவை மாவட்டக் கழகம் முடிவு!

கிராமங்கள்தோறும் பிரச்சாரம் – கோவை மாவட்டக் கழகம் முடிவு!

கோவை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 03.01.2026 அன்று தமிழ்ப் புலிகள் கட்சி தலைமை அலுவலகத்தில் சூலூர் பன்னீர்செல்வம் (மாவட்டக் கழகச் செயலாளர் ) தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் 2025-ஆம் ஆண்டு செயல்பாடுகள், 29.12.2025 அன்று அன்று கோவையில் நடந்து முடிந்த போராட்டத்தின் நிறைகுறைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டு போராட்ட வரவு – செலவுக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் பின்வருமாறு:- 1. அண்மையில் மாரடைப்பால் முடிவெய்திய கழகக் காரமடை பகுதி அமைப்பாளர், பொறியாளர் ஜெகதீசு அவர்களுக்கு கோவை மாவட்டக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மிகவிரைவாக அவர் வாழ்ந்த காரமடையில் நினைவேந்தல் கூட்டம் நடத்துவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது. 2. கோவையில் நடந்து முடிந்த ஜாதியத் தீண்டாமைக்கு எதிரானப் போராட்டத்திற்கு முகம் அறியாத – வெளிநாட்டில் வசிக்கும் பலரும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து 100, 200, 500,1000...

இங்கர்சால் மறைவு

இங்கர்சால் மறைவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் அவர்களின் மகன் “இங்கர்சால்” 17.01.26 சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் முடிவெய்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை 4 மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்டயூரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று “இங்கர்சால்” உடலுக்கு புகழ்வணக்கம் செலுத்தி, நினைவேந்தல் உரையாற்றி இரங்கல் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் எஸ்.எம்.எஸ் சிக்பால் (ம.தி.மு.க), சந்திரசேகர் (த.பெ.தி.க), அஷ்ரப் அலி (தி.மு.க), வேலுச்சாமி (தி.க), கோபால் (பா.ஜ.க.), அருள்வடிவு (மேட்டுப்பாளையம் நகர மன்ற துணைத் தலைவர்), முனுசாமி (தி.மு.க தெற்கு நகரச் செயலாளர்) ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். துரைசாமி (கழகப் பொருளாளர்), ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), பன்னீர் செல்வம்(கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல்குமார்( கோவை மாநகரத் தலைவர்), அமுல்ராஜ் (மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர்), அய்யப்பன் (திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), சண்முகம் (பல்லடம் ஒன்றிய அமைப்பாளர்), திருப்பூர் இனியன், ராமசாமி (திருப்பூர் தெற்கு...

சிராவயல் ஆசிரமம் தொடங்கப்பட்டதன் பின்னணி!      ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (11) – கொளத்தூர் மணி

சிராவயல் ஆசிரமம் தொடங்கப்பட்டதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (11) – கொளத்தூர் மணி

ஜீவாவின் காந்தி ஆசிரமக் கதைகளில் எதிலும் பதிவிடப்படாத அல்லது ஜீவாவால் சொல்லப்படாமல் தவிர்த்தத் தலைவரைப் பற்றி அறியும் முன்னர் வேறு சில செய்திகளையும் அறியவேண்டியுள்ளது. ஜீவா நிறுவியதாகவும் அதனுடைய செயலாளராக இருந்து பணியாற்றியதாகவும் நம்ப வைக்கப்பட்டிருக்கும் அந்த சிராவயலில் இயங்கிய நிறுவனங்களை முதலில் நாம் அறிந்தாக வேண்டும். சிராவயலில் 1923-ஆம் ஆண்டிலிருந்து காந்தி வாசக சாலை என்ற ஒன்று செயல்பட்டு வந்திருக்கின்றது. அதன் பின்னரே ‘தனவைசிய நாட்டுத் தமிழ்க் கல்விக் கழகம்’ உருவாக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏடுகள் தரும் செய்தி! அவ்வாறான காந்தி வாசக சாலையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா ஒன்று 12.05.1925 அன்று நடைபெற்றிருக்கிறது. அவ்விழா ‘நவசக்தி ஆசிரியர் திருவாளர் திரு.வி.கல்யாண சுந்தரம் முதலியார்’ அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும், அந்த விழாவில் திரு.வி.க. அவர்கள் ‘காந்தி தருமம், ஜீவகாருண்யம், தமிழின் இனிமை’ முதலியவைகளைப் பற்றி மிக அழகாக எடுத்துரைத்து உரையாற்றியதாகவும் ‘தனவைசிய ஊழியன்’ ஏட்டின் 12.05.1925...

வன்மவாதிகளுக்குப் பாடம் எடுத்த மாரி செல்வராஜ்!

வன்மவாதிகளுக்குப் பாடம் எடுத்த மாரி செல்வராஜ்!

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் இந்த ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜிற்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. பெரியார் மீது வன்மக் கணைகளை வீசும் கூட்டத்துக்கு அப்போது தக்க பதிலடி கொடுத்த மாரி செல்வராஜின் பேச்சு இணையத்தில் கவனம் பெற்றது. அவரது பேச்சில் இருந்து. “திருமணத்திற்கு என் இணையர் வீட்டில் எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். ஏனென்றால் அவர்கள் வீட்டில் பெரியார் இருந்தார். எனக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தியதே என் இணையர்தான். நான் பெரியாரை விட மிகச்சிறந்த சிந்தனையாளன் என என்னை நிரூபிக்க வேண்டும் என்றால் பெரியாரைத் திட்டி நிரூபிக்க கூடாது. அதற்கும் மேலானதாக சிந்திக்கவேண்டும். பெரியாரை புரிந்து கொள்வது சாதாரணமான விஷயம் கிடையாது. அவர் எப்போதும் நம்மை மேம்படுத்துவதற்கான விஷயங்களையே சொல்லி இருக்கிறார். இன்னும் பெரியாரை வாசிக்க வாசிக்க, நன்றாகப் பேச கற்றுக் கொள்ளலாம். பின்பு அவரையே எதிர்த்துப் பேசலாம். இன்னொன்று அவரைப் பற்றி பேசும்போது மட்டும்தான் நீங்கள் பெரிய ஆளாக...

வன்மவாதிகளுக்குப் பாடம் எடுத்த மாரி செல்வராஜ்!

வன்மவாதிகளுக்குப் பாடம் எடுத்த மாரி செல்வராஜ்!

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் இந்த ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜிற்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. பெரியார் மீது வன்மக் கணைகளை வீசும் கூட்டத்துக்கு அப்போது தக்க பதிலடி கொடுத்த மாரி செல்வராஜின் பேச்சு இணையத்தில் கவனம் பெற்றது. அவரது பேச்சில் இருந்து…… “திருமணத்திற்கு என் இணையர் வீட்டில் எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். ஏனென்றால் அவர்கள் வீட்டில் பெரியார் இருந்தார். எனக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தியதே என் இணையர்தான். நான் பெரியாரை விட மிகச்சிறந்த சிந்தனையாளன் என என்னை நிரூபிக்க வேண்டும் என்றால் பெரியாரைத் திட்டி நிரூபிக்க கூடாது. அதற்கும் மேலானதாக சிந்திக்கவேண்டும். பெரியாரை புரிந்து கொள்வது சாதாரணமான விஷயம் கிடையாது. அவர் எப்போதும் நம்மை மேம்படுத்துவதற்கான விஷயங்களையே சொல்லி இருக்கிறார். இன்னும் பெரியாரை வாசிக்க வாசிக்க, நன்றாகப் பேச கற்றுக் கொள்ளலாம். பின்பு அவரையே எதிர்த்துப் பேசலாம். இன்னொன்று அவரைப் பற்றி பேசும்போது மட்டும்தான் நீங்கள் பெரிய ஆளாக...

பேராசிரியர் சக்குபாய் மறைவு

பேராசிரியர் சக்குபாய் மறைவு

பேராசிரியர் சக்குபாய் மறைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது எங்களுடன் திராவிடர் கழகத்தில் பெரியார் இயக்கத்தின் குடும்பமாக இணைந்து பழகியவர்கள் பேராசிரியர் சக்கு பாயும் அவரது இணையர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களும் ஆவார்கள். 1979 ஆம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு விழாவில் முதன்முறையாக பெரியார் மேடையில் பேசினார் பேராசிரியர் சக்குபாய். அப்போதுதான் அந்த இணையர்களை நான் சந்தித்தேன். தொடர்ந்து திராவிடர் கழக மேடைகளில் கருத்தரங்குகளில் இருவரும் பேசினார்கள். இந்த நட்பு குடும்ப உறவுகளாக மலர்ந்தது. திருச்சி பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராக பேராசிரியர் சக்குபாய் செயல்பட்டார். அப்போது வைக்கம் நூற்றாண்டு விழாவை ஒட்டி கருத்தரங்கம் நடத்தி அந்த உரைகளை பல்கலைக்கழகம் சார்பில் நூலாக வெளியிட்டார். ஈழப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பெரியார் இயக்கத் தோழர்கள் மிகத் தீவிரமாக களம் இறங்கி செயல்பட்ட காலத்தில் இந்த இணையர்களின் பங்கு...

நீலிக்கண்ணீர் வடிக்கும் மோகன் பகவத்!

நீலிக்கண்ணீர் வடிக்கும் மோகன் பகவத்!

ஜாதி ஒழிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன. இதில், மோகன் பகவத்தின் கருத்தை சற்றே உற்று நோக்க வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசும்போது, “சமூக நடைமுறையில் இருந்து ஜாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில் மனதிலிருந்து ஜாதியை அகற்ற வேண்டும். கடந்த காலங்களில் ஜாதி என்பது தொழில் மற்றும் வேலையுடன் தொடர்புடையதாக இருந்தது. பின்னர் அது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, பாகுபாட்டிற்கு வழிவகுத்தது. இதற்கு முடிவுகட்ட, ஒவ்வொரு மனதிலிருந்தும் ஜாதியை அகற்ற வேண்டும். இதை நேர்மையாகச் செய்தால், 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் ஜாதிப் பாகுபாடு ஒழிக்கப்படும்” என்று பேசியிருக்கிறார். அடடே, மோகன் பகவத்திற்கு ஜாதி ஒழிப்பில் எவ்வளவு அக்கறை பாருங்கள் என்ற ஆச்சரியக் குரல்களும் எழுந்திருக்கின்றன. இந்த சமயத்தில் மோகன் பகவத்திற்கு நாம் சில கேள்விகளை...

ஈழத்தமிழர் நலனுக்காக முதல்வர் கடிதம் அனுப்பியதற்கு  வரவேற்பு!

ஈழத்தமிழர் நலனுக்காக முதல்வர் கடிதம் அனுப்பியதற்கு வரவேற்பு!

ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்! தமிழின அழிப்புக்கு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை கடந்த சனவரி 11 -ஆம் நாள் ஈழத் தமிழரின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்திட தூதரக உறவுகளைப் பயன்படுத்தி உடனடியாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதை ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. அதுபோலவே, ’தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் முன்னெடுத்து வரும் அயலக தமிழர் மாநாடு பாராட்டுக்குரியது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகளை அழைத்து பண்பாடு, கலை, இலக்கியம், வணிகம், தொழில் வளர்ச்சி ஆகியவை குறித்துப் பேசுவது தமிழர்கள் கூட்டுப் பலத்துடன் உயர்வதற்கு உதவும் என்ற வகையில் இம்முயற்சி தொடர வேண்டும். தமிழீழத் தாயகத்தில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில்...

ஆளுநர் பதவியை ஒழித்துக்கட்ட வேண்டும்!

ஆளுநர் பதவியை ஒழித்துக்கட்ட வேண்டும்!

ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் ஆளுநர் ரவி சட்டமன்றத்தின் மரபுகளை மீறுகிறார்; சட்டத்தை அவமதிக்கிறார்; அதற்குப் பதிலாக சரியாக வாங்கி கட்டிக் கொள்கிறார். இந்த ஆண்டும் இதுதான் நடந்து இருக்கிறது. அமைச்சரவை தயாரிக்கும் உரையை சட்டரீதியாக படிக்க வேண்டிய ஒரு ஆளுநர், அதை அதிமுக, பாஜக கூட்டணியின் பிரச்சார உரையாக மாற்ற முயற்சி செய்து இருக்கிறார். அதனால் சட்டமன்றத்துக்குள்ளே உறுப்பினர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பாஜகவின் பிரதிநிதிகளான ஆளுநர்கள் செயல்பாடுகளால் கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் மோதல்கள் வெடித்தன. 2022-ல் தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இதே போன்று ஆளுநர்‌ தமிழிசையுடன் ஏற்பட்ட மோதலில் ஆளுநர் இல்லாமலே சட்டமன்றத்தைக் கூட்டினார். ஆளுநர் உரை கட்டாயம் அல்ல என்று அறிவித்தார்.‌ நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ஆளுநர் தமிழிசை பணிந்து அமைச்சரவை உரையை அப்படியே படிக்க முன் வந்தார். இது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிமன்றங்கள்...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் தனித்துவமும் உறுத்துகிறதா?

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் தனித்துவமும் உறுத்துகிறதா?

ஆளுநர் வாசிக்க மறுத்த உரையில் இருந்தது இதுதான்! தேசிய கீதத்தை பாட மறுத்ததால் உரையை வாசிக்காமல் சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டமன்ற மரபுப்படி அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுகிறது. அந்த நடைமுறைதான் இம்முறையும் பின்பற்றப்பட்டது. எனினும் அரசியலமைப்பு கடைமையைச் செய்யக்கூடாது என்ற கொள்கையோடு வாழும் ஆர்.என்.ரவி தொடர்ந்து முன்றாவது ஆண்டாக உரையை வாசிக்காமல் ஓட்டம் பிடித்தார். ஆர்.எஸ்எஸ் ரவியால் ஏற்றுக் கொள்ள இயலாத அளவுக்கு சாதனைகளும், பா.ஜ.க.வுக்கு எதிரான தமிழ்நாட்டின் தனித்துவப் பார்வையும் இருந்ததே உரையை வாசிக்க மறுத்ததற்குக் காரணம் என்பதே உண்மை. அவற்றில் இருந்து சில துளிகளை மட்டும் தருகிறோம். ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையில் வரையறுக்கப்பட்ட மும்மொழிப் பாடத்திட்டத்தை இந்த அரசு ஏற்கவில்லை. இதனால், தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் நிறுத்திவைக்கப்பட்ட போதும், அதனால் பெரும் நிதிச்சுமை ஏற்பட்டபோதும், ஒன்றிய அரசின் மும்மொழிப் பாடத்திட்டத்தை ஏற்பதில்லை என்பதை பல்வேறு தருணங்களில்...

மண்டல் குழுப் போராளி நூல் வெளியீட்டு விழா

மண்டல் குழுப் போராளி நூல் வெளியீட்டு விழா

கிருஷ்ணகிரி ஈடன் கார்டன் வளாகத்தில் திருவள்ளுவர், பெரியார் மானுட ஒன்றிய அமைப்பின் சார்பில் திரு.வழ.முகமது சாதிக் (வெல்பேர் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர்) தலைமையில், திருவாளர்கள் கா.மாணிக்கம், கோ.தங்கராசு, ரபீக் அகமது, சென்னை அன்புசீலன், காமராசு ஆகியோர் முன்னிலையில் “மண்டல் குழுப் போராளி அறிஞர் ஆனைமுத்து” எனும் நூல் வெளியீடு 21-12-2025 அன்று நடைபெற்றது. வே.இராசா (வட்டாட்சியர் ப.நி) வரவேற்புரையாற்றினார். வழ. அன்பு தனசேகர் ( வருவாய் வரித்துறை அதிகாரி ப.நி) அறிமுகவுரையாற்றினார். கு.முத்துசாமி (செயற்பொறியாளர், மின்சார வாரியம். ப.நி) நூலை வெளியிட்டு உரையாற்றினார். கல்வி வள்ளல் PSV கல்லூரி தாளாளர் முனைவர் பி.செல்வம் சார்பாக அவர்தம் நண்பர் இராமசாமி நூலினைப் பெற்றுக் கொண்டார். பேரா.சிற்பி இராசன் அவர்கள் “மந்திரமா? தந்திரமா?” மூலம் மூட நம்பிக்கைகளைப் போக்கும் உரை நிகழ்த்தினார். கிருஷ்ணமூர்த்தி (அரசு ஊழியர் அய்க்கிய பேரவை) நன்றி கூறினார். நிகழ்வை குயில்தாசன் ஒருங்கிணைத்தார். மாணவர்களும், பொது மக்களும் பங்ககேற்று சிறப்பித்தனர்....

பாலமலை மலையாளி மக்களுக்கு பட்டா வழங்குக!

பாலமலை மலையாளி மக்களுக்கு பட்டா வழங்குக!

மேட்டூரில் வன உரிமை மீட்புக்குழுவின் சார்பில் பாலமலையில் வாழும் மலையாளி இன மக்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வன உரிமை மீட்புக்குழுவின் சார்பில் பாலமலையில் வாழும் மலையாளி இன மக்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 15.12.2025 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மேட்டூரில் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்றது. வன உரிமை மீட்புக்குழுத் தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். புள்ளாம்பட்டி ராஜேந்திரன், பெரியகுளம் ஜெயராமன், துவரங்காடு பொன்னுசாமி, ராமன் பட்டி பாலமுருகன், திம்மப்பொதி ராமலிங்கம், பாலமலையின் அனைத்து கிராமங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். பாலமலை பழங்குடி மலையாளி இன மக்களின் பட்டா நிலங்களை மோசடியாக, பழங்குடி அல்லாதவர்களுக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்றும், மலையாளி இன மக்களின் அனுபவத்தில் உள்ள நிலங்களை முறையாக அளவீடு செய்து பட்டா வழங்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசிய...

தாராபுரம் தோழர் ‘ஈவெரா’ இல்ல திறப்பு விழா!

தாராபுரம் தோழர் ‘ஈவெரா’ இல்ல திறப்பு விழா!

தாராபுரத்தில் வழக்கறிஞர் கிருட்டிணகுமார்-ஆசிரியர் சுமித்ரா, ஈவெரா குடும்பத்தினரின் புதிய இல்ல திறப்பு விழா டிசம்பர் 25 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று இல்லத்தைத் திறந்து வைத்தார். SFD மாணவர்கள் யாழ்மொழி, இசைப்பிரியா, செந்தணல் மூவரும் கடவுள் மறுப்பு உறுதிமொழி முன்மொழிந்தனர். பங்கேற்ற அனைவரும் உறுதி ஏற்றனர். பெரியகுளம் குமரேசன் வரவேற்புரை ஆற்றினார். ஜவஹர், முனைவர் ஆ.புரட்சிக்கொடி, திராவிடர் தளம் அதிஅசுரன் ஆகியோரது கருத்துரைகளுக்குப் பிறகு கழகத் தலைவர் கொளத்தூர் மணி வீடு கட்டும் பொழுது மூடநம்பிக்கை இல்லாமல் அவர்களுக்கு ஏற்றவாறு அறிவியல் முறையில் இணைத்து வீட்டை கட்டியிருக்கிற வழக்கறிஞர் கிருட்டிணகுமார் – ஆசிரியர் சுமித்ரா இணையர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் இம்மாதிரியான அறிவியல் முறையை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோளாக முன்வைத்து உரையாற்றினார். தாராபுரம் பூங்கொடி அவர்கள் நன்றியுரையாற்றினார். திருவள்ளுவர் படிப்பகம் இராசாமணி இவ்விழாவினை ஒருங்கிணைத்தார். மனித வள மேம்பாட்டுத் துறை...

ஆளுநர் பதவியை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

ஆளுநர் பதவியை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

ஆளுநர் பதவியை ஒழித்துக்கட்ட வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பில் பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் இணைந்து, டிச-15,2025, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் உள்ளிட்ட பல இயக்கத் தலைவர்கள் சிறப்புரையாற்றினர். இரா. உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), ம.கி.எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), வீரா, அசோக் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்று கண்டனம் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 15012026

‘ஜாதி அடையாளம் அல்ல அவமானம்’ – புதுச்சேரியில் கருத்தரங்கம்!

‘ஜாதி அடையாளம் அல்ல அவமானம்’ – புதுச்சேரியில் கருத்தரங்கம்!

பெரியாரிய பற்றாளர் தோழர் சிற்பி ராசன் அவர்களின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில், ‘ஜாதி அடையாளம் அல்ல அவமானம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதுச்சேரி ராசா நகரில் டிசம்பர் 25 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. தியாகு தலைமையில் பாரதி வரவேற்புரையாற்ற புதுவை தீனா தொடக்க உரையாற்றினார். யூ2புரூடஸ் மைனர், இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), முனைவர் பன்னீர்செல்வம் (சமூக செயற்பாட்டாளர், புதுச்சேரி), வீ.ரா.பாலகிருஷ்ணன் (ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். திரைத்துறையில் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பேசிய திரை கலைஞர்களைச் சிறப்பிக்கும் விதமாக வெளிவந்துள்ள 2026-ஆம் ஆண்டுக்கான கழக நாட்காட்டியை (ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர்) பாலகிருஷ்ணன் வெளியிட அய்யா சிற்பி ராசன் பெற்றுக்கொண்டார். பா.சந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பெரியாரிய சிந்தனையாளர் இயக்கத் தோழர்கள் மற்றும் முற்போக்கு இயக்கத் தோழர்கள், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கடலூர் சிவா, சென்னை அசோக், வீரா,...

பெரியார் தொழிற்சங்கப் பேரவை பெயர்ப்பலகை திறப்பு!

பெரியார் தொழிற்சங்கப் பேரவை பெயர்ப்பலகை திறப்பு!

கருஞ்சட்டைப் படைகளுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தந்தை பெரியார் தொழிற்சங்கப் பேரவையின் பவானி கிளை பெயர் பலகைத் திறப்பு விழா நடைபெற்றது. தந்தை பெரியார் தொழிற்சங்கப் பேரவையின் பவானி கிளையின் பெயர் பலகைத் திறப்பு விழா 22. 12. 2025 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்டம், ஊராட்சி கோட்டையில் உள்ள பவானி பணிமனையில் த.பெ.தொ.பே பவானி கிளைத் தலைவர் சி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. த.பெ.தொ.பே பவானி கிளையின் துணைத் தலைவர் மா. சு. சந்திரகாந்த், அந்தியூர் கிளையின் தலைவர் கோ. செல்லத்துரை, அந்தியூர் கிளைச் செயலாளர் சி. முருகேசன், அந்தியூர் கிளை துணைச் செயலாளர் குப்புசாமி ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர். த.பெ.தொ.பே. பவானி கிளையின் தலைவர் வீ. வெங்கடாசலம், பொதுச்செயலாளர் சி. குப்புசாமி, செயலாளர் மா. சரவணன், பொருளாளர் சா. செல்வன் ஆகிய தோழர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். மக்கள் வழக்கறிஞர் ப.பா...

அரணாக நிற்கிறது தமிழ்நாடு அரசு!

அரணாக நிற்கிறது தமிழ்நாடு அரசு!

“அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சட்டத்தை அமல்படுத்தி இந்து சமூகத்தின் தன்மானத்தை மீட்டது திராவிட மாடல் ஆட்சி. ஆனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிராமணர் அல்லாத இந்து அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்து பிராமணர்கள் மட்டுமே’ அர்ச்சகராக இருக்க முடியும் என்று தீர்ப்பு அளித்தார். பார்ப்பனரல்லாத சூத்திர, பஞ்சம இந்துக்களை இப்படி நீதிமன்றம் அவமதித்த போது பாஜகவும் இந்து முன்னணியும் எங்கே போயின?.. இந்துக்களின் தன்மானத்துக்காக அரசு கொண்டுவந்த சட்டத்தை நீதிமன்றம் அவமதிக்கலாமா என்று அண்ணாமலைகள் பொங்கினார்களா?.. பார்ப்பனியம் சக இந்துக்களை அவமதிக்கும் போது வெட்கம், மானம் இன்றி மண்டியிட்டுக் கிடப்பார்கள்: அதுதான் ஆகமம் என்று நியாயம் பேசுவார்கள். திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயிலுக்குள் தீப விளக்கு ஏற்ற வேண்டும் என்பதுதான் ஆகமம் என்று அந்த கோயிலின் அர்ச்சகர்களே கூறுகிறார்கள். ஆனாலும் கூட தர்காவுக்கு அருகில் உள்ள எல்லைக்கல்லை தீபத்தூண் என்று கூறி அதில்தான் விளக்கேற்ற வேண்டும் என்று நீதிமன்றத் தீர்ப்பையும்...

சேரன்மாதேவி குருகுலத்தில் பணிபுரிந்தாரா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (10)- கொளத்தூர் மணி

சேரன்மாதேவி குருகுலத்தில் பணிபுரிந்தாரா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (10)- கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் காலத்தில் அவரது கருத்துக்களை நேரடியாக அறிந்து எழுதப்பட்டுள்ள தோழர் இஸ்மத் பாஷா, தோழர் கே.பாலதண்டாயுதம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் பல செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் முதன்மையானது சிராவயல் காந்தி ஆசிரமம் (பள்ளி வாசகசாலை) பற்றியது; அதாவது இந்த ஆசிரமத்தை தோழர் ஜீவானந்தம்தான் உருவாக்கினார் என்ற ஒரு அதீதமாக எழுப்பபட்டுள்ள மாய பிம்பம். தோழர் அ.ப.பாலையன் தொகுப்பாசிரியராக இருந்து தொகுத்த “ஜீவா தேடிய மானுடம்” என்ற நூலின் நான்காம் கட்டுரையான ‘பெரியார் ஜீவா – உறவும் பிரிவும்’ என்ற கட்டுரையில் “ நீண்ட நாட்கள் நடைபெற்ற கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்திலும் ஜீவா பங்கேற்கிறார் (1924) ”, (நூலில் 1924 என கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டு இருந்தாலும் 1924 ஏப்ரல் முதல் 1925 டிசம்பர் வரை போராட்டம் நடந்தது) என்றும் “சேரன்மாதேவி குருகுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜீவா, அங்கு நடைபெற்ற அநீதிக்கு எதிராக போராட்டத்தில் ஈவெரா, வரதராஜர்...