விளையாட்டு போட்டிகளின் தலைநகரம்

துணை முதலமைச்சர் உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக வந்தபிறகு தமிழ்நாடு விளையாட்டுத் துறையின் தலைநகரமாக மாற்றப்பட்டுள்ளது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு கண்டது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றிகளை குவித்து வருகிறார்கள். அதற்கு அவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். வெற்றி குவித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? 6,689 பேருக்கு அரசு பரிசாக வழங்கிய தொகை 215.78 கோடி.
செம்மஞ்சேரியில் ரூ.261 கோடியில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு ஒரு சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது. அவற்றுள் இதுவரை 141 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய அரங்கங்களின் கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் வாழும் அனைத்து இளைஞர்களுக்கும் மகளிர்க்கும் அவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு ஏற்ப அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் தேவைப்படும் விளையாட்டுக் கருவிகள், எல்லா ஊர்களிலும் கிடைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம் ஊராட்சிகளுக்கும், 12,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியத் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் விளையாட்டுகளை ஊக்குவித்திடும் சிறந்த மாநிலம் என தமிழ்நாட்டை தேர்வு செய்து 2025 ஆம் ஆண்டிற்கான விருதினை வழங்கிப் பாராட்டியுள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 12032026

You may also like...