26,000 ஒபிசி மருத்துவ மாணவர்களின்கல்வி உரிமையை மீட்டுத்தந்த மு.க.ஸ்டாலின்
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கோட்டாவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டுமென்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்போராட்டம் நடத்தி, ஒட்டுமொத்த இந்திய இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குமான உரிமையை 2021-இல் நிலைநாட்டினார். அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்ற விவரங்களை, அந்த வழக்கை நடத்திய திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் நாடாளுமன்றத்தில் கேட்டுப் பெற்றுள்ளார்.
அதன்படி, 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்த நடைமுறை அமலுக்கு வந்தபோது 4,422 ஓபிசி மாணவர்கள் மருத்துவப் படிப்பு
களில் சேர்ந்தனர். இதில் 2,633 பேர் முதுநிலை (PG) படிப்புகளிலும், 1,662 பேர் MBBS படிப்பிலும், 127 பேர் BDS படிப்பிலும் இடங்களைப் பெற்றனர்.
2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4,907 ஆக உயர்ந்தது. அதில் 2,982 முதுநிலை, 1,804 MBBS மற்றும் 121 BDS சேர்ந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் 5,484 ஓபிசி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்தனர். இதில் 3,295 முதுநிலை, 2,057 MBBS மற்றும் 132 BDS சேர்ந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் 5,694 ஒபிசி மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் 3,425 முதுநிலை, 2,133 MBBS மற்றும் 136 BDS சேர்ந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் 5,697 ஒபிசி மாணவர்கள் அகில இந்திய தொகுப்பில் இடஒதுக்கீட்டின் பயனை பெற்றனர். இதில் 3,404 முதுநிலை, 2,160 MBBS மற்றும் 133 BDS சேர்ந்துள்ளனர்.
இதன் மூலம் 2021 முதல் 2025 வரை மொத்தமாக 26,204 ஓபிசி மாண
வர்கள் அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்வியில் சேர வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 15,739 முதுநிலை மருத்துவ இருக்கை
களும், 10,465 பட்டப்படிப்பு (MBBS மற்றும் BDS) இருக்கைகளும் அடங்குகின்றன. பெரியார் முழக்கம் இதழ் 26032026
