அமலாக்கத்துறைக்கு கடும் கட்டுப்பாடு
கடந்த 10 ஆண்டுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை செய்திருக்கிறது. பணமோசடியின் வரையறை மாற்றப்பட்டது. பிரிவு 19-இன் கீழ் அமலாக்கத்துறைக்கு கைது செய்வதற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு பிறகு சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடை சட்டம் ஆளும் கட்சிக்கு வேண்டாத எதிர்க்கட்சியினர், தொழிலதிபர்கள் மீது அதிகம் பாய்ந்திருக்கிறது. இந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், அந்த சட்டத்தின் பிரிவு 45ன் கீழ் ஜாமீன் பெறுவதற்கான இரட்டை நிபந்தனைகள் என்பது பொருந்தக் கூடியதா என்று தெரிவிக்க வேண்டும் என்று ஜலந்தரை சேர்ந்த தர்சம் லால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. “ஜாமீன்...