Category: பெரியார் முழக்கம்

ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஏற்காடு: 08.03.2026 அன்று ஏற்காடு பகுதியில் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்காடு டவுன், ஒண்டிக்கடை, மஞ்சக்குட்டை பகுதியில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது. ஏற்காடு ஒன்றிய செயலாளர் இரா. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் க. சரிதா முன்னிலை வகித்தார். தெருமுனைக் கூட்டத்தின் நோக்கம் குறித்து மக்களிடம் சேலம் மாவட்ட அமைப்பாளர் அ. பெருமாள், கோனூர் வைரமணி (திமுக தலைமைக் கழகப் பேச்சாளர், சேலம் மேற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவர்), தி.மு.க ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணித் தலைவர் ம. தேவபிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஏற்காடு பகுதி மக்கள் மட்டுமல்லாமல் ஏற்காடு சுற்றுலா பயணிகளும் பெருந்திரளாக நின்று கேட்டுச் சென்றனர். சுற்றுலா வந்த விசிகவை சேர்ந்த மகளிரணி தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு குடிநீர் வாங்கி கொடுத்து வாழ்த்தினார்கள். தெருமுனைக் கூட்டத்தை பொதுக்கூட்டத்தைப்போல த சுகந்தா ராமசந்திரன் (மஞ்சக்குட்டை பகுதியில் பஞ்சாயத்து தலைவர்), ராமசந்திரன்...

ஈரோடு, கடலூர், ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஈரோடு, கடலூர், ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!

ஈரோடு: தெற்கு மாவட்டக் கழகம் சார்பாக தொடரட்டும் “தமிழ்நாட்டில் சாதனைகள், திமுக ஆட்சியை உறுதி செய்வோம்” என்கின்ற முழக்கத்தோடு அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஒருங்கிணைப்பில் 4 நாட்களில் 13 இடங்களில் தெமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தெருமுனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. 11.03.26 புதன் அன்று காலை சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் தெருமுனைக் கூட்ட மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, சண்முகப்பிரியன் (திமுக)ஆகியோர் சிறப்புரையாற்றினர். 2வது நாள் (12.03.26): வியாழன் அன்று கனி ராவுத்தர் குளம், அக்ரகாரம், காமராஜர் நகர், காந்திநகர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டங்களுக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டங்களில் அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் பரிமளராசன், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரையாற்றினார்கள்.மதிய உணவு சண்முகப்ரியன்...

பாஜகவின் ஊழல் ஒழிப்பு நாடகம்

பாஜகவின் ஊழல் ஒழிப்பு நாடகம்

ஊழல் ஊழல் என்று கூப்பாடு போடும் பாஜக ஊழல் ஒழிப்பு உத்தமர்களின் ஊழல் பட்டியல் இதோ: ஜார்கண்ட் மாநில நிலக்கரி ஊழலில் வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்த திலீப் ராய் 3 ஆண்டுகள் சிறை தண்டனை. கர்நாடகத்தில் டெண்டர் முறைகேட்டில் கர்நாடக பாஜக அமைச்சர் நேரு கெலேகர் 2 ஆண்டுகள் சிறை. 2013 வியாபம் ஊழலில் உச்ச நீதிமன்றம் சி.பி.அய் விசாரணைக்கு உத்தரவிட்டது. ம.பி பாஜக அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா 18 மாதம் சிறை. 1 கோடி 37 லட்சம் ரூபாய் ஊழல் வழக்கில் மிசோரம் பாஜக எம்.எல்.ஏ புத்த தன்சக்மா உட்பட 12 பாஜகவினருக்கு 1 ஆண்டு சிறை. 2001-ல் பாதுகாப்புத்துறை தளவாடங்கள் வாங்கும் ஊழலில் பாஜக தலைவர் பங்காரு லஷ்மணனுக்கு 7 ஆண்டு சிறை. பெங்களூர் மெகா சிட்டி ஊழலில் கர்நாடக பாஜக அமைச்சர் யோகேஸ்வரர் மீதான ஊழல் வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. ஒரு கோடி...

தொழில் முனைவோராக 3 இலட்சம் கிராமப் பெண்கள்; திமுகவின் தேர்தல் அறிக்கை!

தொழில் முனைவோராக 3 இலட்சம் கிராமப் பெண்கள்; திமுகவின் தேர்தல் அறிக்கை!

50 துறைகளில் 5 ஆண்டுகளில் செய்து முடித்த சாதனைகளையும்; அதே துறைகளில் தொடரப் போகும் ஆட்சியில் அதன் தொடர்ச்சியாக திட்டமிட்டுள்ள செயல் திட்டங்களையும் விரிவாக விளக்குகிறது தேர்தல் அறிக்கை. குறிப்பாக மகளிர் நலன் எனும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய செய்திகளை நாம் குறிப்பிட்டாக வேண்டும். மகளிர் உரிமைக்கான திட்டங்களை இலவசம் என்றும் பிச்சை என்றும் சில பேர் வழிகள் மேடைகளில் பேசி வருகிறார்கள். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கான ரூ.8,000 கூப்பன் திட்டத்தை ஊழல் திட்டமாக எடப்பாடி மலினப்படுத்தி வருகிறார். குளிர்சாதன பெட்டிகளை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கும் அவரது திட்டம் தான் ஊழலுக்கு வழி வகுக்கக் கூடிய ஒரு திட்டம். மாறாக இல்லத்தரசி திட்டம் 8000 ரூபாய்களுக்கான கூப்பன் மட்டும் வழங்குவதோடு அரசு கடமை முடிந்து விடுகிறது ; எந்தப் பொருளை வாங்குவது ; எந்தக் கடையில் வாங்குவது என்ற முழுமையான விருப்பஉரிமை பெண்களுக்கே வழங்கப்படுகிறது. இதில் பயனடைவது பெண்கள் மட்டுமல்ல;...

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்: எடப்பாடியின் முகத்திரையை கிழித்தார் முதல்வர்!

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்: எடப்பாடியின் முகத்திரையை கிழித்தார் முதல்வர்!

“எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப தோல்வி பயத்தில் தொடர்ந்து அவதூறுகளைப் பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தனது எஜமானர்களின் பாணியில் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார். சங்கிகளும் தம்பிகளும் பேசும் அதே பாணியில் தற்போது அதிமுகவும் பேசுகிறது. உண்மைக்கு மாறான பொய் தகவல்களை கூச்ச நாச்சமின்றி பொதுவெளியில் பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் பேசிய பொய் பட்டியல்: 2002 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் பிரதமராவதற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சொல்லும் திமுக இஸ்லாமியரான அப்துல் கலாம் அவர்களுக்கு எதிராக வாக்களித்தது என்று கூறினார். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் 2002 குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கலைஞர் அங்கம் வகித்தார். திமுக உட்பட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அப்துல் கலாம் அவர்களை ஆதரித்தது....

மகளிர் முன்னேற்றம் ஒன்றிய ஆட்சி பாராட்டுகிறது

மகளிர் முன்னேற்றம் ஒன்றிய ஆட்சி பாராட்டுகிறது

தமிழ்நாட்டில் 2021-இல் ஒரு லட்சத்து 1,26,000 ஆக இருந்த மகளிர் தொழில் முனைவோர் எண்ணிக்கை 2024-25-ல் 9,04,000 ஆக உயர்ந்தது! பி.ஜே.பி ஆளும் குஜராத் மாநிலத்தில் மகளிர் தொழில் முனைவோர் 2,18,000 பேர் மட்டுமே. ராஜஸ்தான் மாநிலத்திலும் 3,36,000 பேர் மட்டுமே! மகளிர் சாதனையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பெருமைகள் குன்றின் மேலிட்ட விளக்காய் புகழொளி பரப்புகிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மனித சமுதாயத்தில் ஏறத்தாழ சரி பாதியாக இருக்கும் மகளிர் சமுதாய முன்னேற்றத்தில் திராவிட இயக்கம் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதனால் இந்தியாவிலேயே அதிகமாக பெண்கள் கல்வி, அறிவியல், பொருளாதாரம், தொழில் முதலிய அனைத்திலும் ஆற்றல்கள் பெற்று பன்முகத் திறன்களுடன் வளர்ந்து இந்திய அளவில் முன்னிலை பெற்றுத் திகழ்கிறார்கள். ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில்...

தேர்தல் களத்திலும் மாநில உரிமைகளை மீட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தேர்தல் களத்திலும் மாநில உரிமைகளை மீட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இரண்டு மாநில உரிமைகளை மீட்டு தந்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட ஆர்.என் ரவியை எதிர்த்து சட்டமன்றத்தில் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக 9 திருத்தங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்‌ முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை எதிர்த்து வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். நெல்லை மாவட்ட பாஜக தலைவர் என்ற அடையாளத்தை மறைத்து பொதுநல வழக்கு என்ற முகமூடியோடு வழக்கை தொடர்ந்தார். வழக்கை ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் தேர்தலுக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்போதே விசாரணையை நடத்த வேண்டும் என்று மனு போட்டார்.தனது வழக்கு வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இதை திமுகவுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்றுவது அவர்களின் திட்டம். ஆனால் திட்டம் பாஜகவுக்கு எதிராகவே திரும்பி விட்டது; வழக்கை விசாரித்த தலைமை நீதிபதியின் அமர்வு துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை மாநில சட்டமன்றத்திற்கே உண்டு என்றும்; ஆளுநரிடமிருந்து...

குலுங்க குலுங்க சிரிக்கலாம்!

குலுங்க குலுங்க சிரிக்கலாம்!

முதல்வர் வேட்பாளராக களத்தில் இறங்கி உள்ள விஜய்க்கு வேட்பு மனுவைக் கூட ஒழுங்காக பூர்த்தி செய்யத் தெரியவில்லை. பெரம்பூரில் அவர் காட்டிய சொத்து மதிப்பு அடுத்த இரண்டு நாளில் திருச்சியில் எகிறி உள்ளது. இணை பொதுச்செயலாளராக உள்ள நிர்மல் குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே ஓய்வுபெற்ற உள்துறை செயலாளர் பெயருக்கு பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதுகிறார். தேர்தல் பரப்புரைச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தேவையில்லாமல் நடிகர் ரஜினியை சீண்டி விஜய்க்கு எதிராக ரஜினி ரசிகர்களை தூண்டி விட்டார். வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜூனா பரப்புரை கூட்டத்தில் குவாட்டர் பாட்டில் விழுந்தவுடன் உடனே தனது நுண்ணறிவை கொண்டு சிந்தித்து திமுக வீசியது தான் என்றார். வீசிய வரை மேடைக்கு கொண்டு வர வேண்டும் என்று சவால் விட்டார் ஆதவ் அர்ஜூனா. குவாட்டர் பாட்டில் வீசியவர்களை உடனே காவல்துறை பிடித்தது. ஆனால் அவர்கள் இரண்டு பேரும் விஜய் ரசிகர்கள் என்ற உண்மைதான் அம்பலமானது. விஜய் பரப்பரை...

தேர்தல் களத்தில் பார்ப்பனர்கள்!

தேர்தல் களத்தில் பார்ப்பனர்கள்!

1967-ல் ஆட்சிக்கு வந்த அண்ணா அமைத்த அமைச்சரவையில் ஒரு பார்ப்பனர் கூட இடம்பெறவில்லை. பார்ப்பனர் அல்லாத அமைச்சரவை என்று பெரியார் பாராட்டினார். இப்போது களத்தில் நிற்கும் திமுகவும் அதிமுகவும் ஒரு பார்ப்பன வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் பார்ப்பனர் இல்லை. விஜய் கட்சியான தவெகவில் 2 பார்ப்பனர்கள். பார்ப்பனக் கோடாரிக்காம்பு சீமான் கட்சியில் மட்டும் 6 பார்ப்பனர்கள் நாம் தமிழர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். இரண்டு கட்சிகளும் பார்ப்பனர்கள் நிறைந்த பகுதிகளான ரீரங்கம், மயிலாப்பூர் தொகுதிகளில் பார்ப்பன வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனாலும் பாஜக வேட்பாளர் பட்டியலிலும் பார்ப்பனர்கள் இடம்பெறவில்லை.‌ பார்ப்பனர்களை அமைச்சரவையில் சேர்த்தவர் எம்.ஜி.ஆர்தான். 1980,1986 ஆண்டுகளில் எச்.வி ஹண்டேவை மருத்துவத்துறை அமைச்சராக்கினார்‌ எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இரா.ராமநாதன் என்ற உச்சிக்குடுமி அடையாளத்துடன் வலம் வந்தவரை குடந்தை தொகுதியில் வேட்பாளராக்கினார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். 2016-ல் ஜெயலலிதா...

வேதமத மரபு திணிப்புகளை முறியடிக்க தமிழ்நாடு அரசின் திட்டங்கள்

வேதமத மரபு திணிப்புகளை முறியடிக்க தமிழ்நாடு அரசின் திட்டங்கள்

திமுக தேர்தல் அறிக்கையில் சமூக நீதி மற்றும் தமிழ் மொழி காத்தல் என்ற இரண்டு தலைப்புகளில் வெளிவந்த கருத்துக்களை சுட்டிக்காட்ட வேண்டும். “சமூக நீதி என்பது உயர்ந்தவர்களை கீழே இறக்கி விடுவது அல்ல; மாறாக பள்ளத்தை சமப்படுத்தி மேடாக்குவது தான்” என்ற பெரியார் விளக்கத்தோடு துவங்குகிறது தேர்தல் அறிக்கை. இரண்டு முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. ஜாதி வாரி கணக்கெடுப்பின் தரவுகள் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.20 இலட்சத்துக்கு மேல் ஊதியம் பெறும் உயர் பதவிகளில், ஆதிதிராவிடர்; பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை அமர்த்துவதற்கான திட்டமொன்றை தேர்தல் அறிக்கை முன்வைத்திருக்கிறது. அதாவது இப்படி வாய்ப்பு அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அரசே மானியங்களாகமுதலீடு செய்வதோடு ,வேறு பல சலுகைகளையும் வழங்கும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. தனியார் நிறுவனங்களின் உயர் அதிகார மையங்கள் விளிம்பு நிலை மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்படுகின்றன;‌ இதை மாற்றி...

10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் மூடப்பட்ட பள்ளிகள் 89400!

10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் மூடப்பட்ட பள்ளிகள் 89400!

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் 89400 க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடியுள்ளனர். இதில் 60 விழுக்காடு டபுள் இன்ஜின் சர்க்கார் என்று சொல்லப்படுகிற பாஜக ஆளும் மாநிலங்களில் தான். மத்தியிலும் நாங்கள் தான் மாநிலத்திலும் நாங்கள் தான் என்று கூப்பாடு போடுகிறவர்கள் ஆட்சியிலே பள்ளிகளை மூடி வருகின்றனர். இதே வேளையில் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் 2,72,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. PM SVANidhi சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 கோடி குழந்தைகள் பள்ளி கல்வி கட்டமைப்பில் இருந்து தங்களை விடுவித்துள்ளனர். ஆக கல்வி கட்டமைப்பை சீர்குலைத்து மீண்டும் இளைஞர்களை குழந்தைகளை, பெண்களை உடல் உழைப்பு சந்தைக்கு தள்ளுகிற வேலையை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பள்ளிகள் ஏன் மூடப்படுகின்றன என்று கேள்விகள் கேட்டால் குறைவான குழந்தைகளே படிக்க வருகிறார்கள் என்று காரணத்தைச் சொல்கிறார்கள். நாங்கள் பள்ளிகளை மூடவில்லை...

கோடி கோடியாக சங்கிகளுக்கு குவியும் வெளிநாட்டுநிதி!

கோடி கோடியாக சங்கிகளுக்கு குவியும் வெளிநாட்டுநிதி!

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று செயல்படும் நிறுவனங்களைக் குறிவைத்து ஒழிக்கும் முயற்சிகளில் ஒன்றிய ஆட்சி இறங்கியுள்ளது. இதற்கான FCRA சட்டத்தில் திருத்தங்களை செய்யும் மசோதாவை கடந்த மார்ச்-25ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக கிறிஸ்துவ நிறுவனங்களை முற்றாக ஒழித்துக் கட்டும் மசோதா இது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் சுட்டிக்காட்டி மசோதாவைத் திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த மசோதா அமலுக்கு வந்தால் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெறும் உரிமையை ஒன்றிய ஆட்சி ரத்து செய்ய முடியும். உரிமையை ரத்து செய்து விட்டால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நிதிக்கு மட்டும் தடையில்லை; மாறாக நிதி உதவியோடு நடத்தப்படும் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், சர்ச்சுகள் இவைகளை அரசு தானாகவே கைப்பற்றிக் கொள்ள முடியும். இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அடிப்படை உரிமைகளையே முடக்கும் கொடூரமான சட்டம்! வேத பார்ப்பனியம் “சூத்திர பஞ்சமர்களின்” கல்வி உரிமையைத்...

திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்வோம்! சென்னையில் சுற்றிச்சுழன்று கழகம் பரப்புரை!

திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்வோம்! சென்னையில் சுற்றிச்சுழன்று கழகம் பரப்புரை!

சென்னை மாவட்டக் கழகங்களின் (தென்சென்னை, வடசென்னை) சார்பில் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்…திமுக ஆட்சியை உறுதிசெய்வேம்! என்ற தலைப்பில் தினமும் 2 கூட்டங்கள் என 30 கூட்டங்களை நடத்தியுள்ளனர். அரசியல் நையாண்டி, பாடல்கள் என கலைநிகழ்ச்சிகளுடன் மக்கள் மத்தியில் திமுக ஆட்சியை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று விளக்கி வருகின்றனர். தோழர்கள் இரா. உமாபதி – சத்யா – கார்மேகம் – பொன்ராஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் தொய்வில்லாமல் மூன்று வாரங்கள் நடைபெற்றன. தெருமுனைக் கூட்டங்களின் தொகுப்பு: மார்ச் 3 முதல் மார்ச் 9 வரையிலான 12 கூட்டங்களை, ம.கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்) – இரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மார்ச்-4: மாலை 5 மணிக்கு, பிரீத்தி தலைமையில், மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலும், மாலை 7 மணிக்கு, அபிநந்தன் தலைமையில், கீழ்க்கட்டளை பெரிய தெருவிலும், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றன.கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், U2BRUTUS மைனர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திமுக:...

கலால் வரி குறைப்பு யாருக்காக?

கலால் வரி குறைப்பு யாருக்காக?

பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை அவசர அவசரமாக குறைத்து இருக்கிறது ஒன்றிய ஆட்சி. டீசலுக்கு முழுமையாக கலால் வரி ரத்தாகி இருக்கிறது. பெட்ரோலுக்கு 13 ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக குறைத்து இருக்கிறது. போர் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்காக கண்ணீர் சிந்தி இந்த விலை குறைப்பு நடவடிக்கையை ஒன்றிய ஆட்சி எடுத்து இருக்கிறது. மக்கள் பயன்பாட்டுக்கான பெட்ரோல் டீசல் விலை குறையாது; அப்படியே நீடிக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் பெட்ரோல் டீசல் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு முதலமைச்சர் மாநாட்டை மோடி கூட்டுவதாக அறிவித்து, மாநாடு கூடுவதற்கு முன்பே இந்த முடிவை ஒன்றியஆட்சி எடுத்திருப்பது தான். முக்கிய முடிவுகளை எடுத்து விட்டு பிறகு முதலமைச்சர்கள் மாநாட்டை ஏன் கூட்ட வேண்டும்? தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். ரஷ்யாவில் இருந்து மிகக்குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த காலத்திலும் ஒன்றிய ஆட்சி பெட்ரோல் டீசல்...

வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுகவா? அஇஅதிமுகவா?

வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுகவா? அஇஅதிமுகவா?

அதிமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகள் ஒரு ஒப்பீடு. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கின்ற பொழுது மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டது., 2018- 2019-லேயே மாணவர்கள் போராடினார்கள். மதுரையில் லேப்டாப்பை கொடுங்க, அந்த அம்மா கொடுத்தார்கள் நீங்க கொடுங்க என்று கேட்டார்கள். வழங்கவில்லை. திமுக அரசு வழங்கியது. 20 இலட்சம் மாணவர்களுக்கு வழங்கியது. 5 ஆண்டுகளில் 2016 -2021 வரைக்கு எந்த அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிமுக ஆட்சி குறைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையில் லிட்டருக்கு 3 ரூவாயும், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாயும் குறைத்தது திராவிட மாடல் அரசு. தேவைக்கேற்ப சிறுபான்மையிருக்கான விடுதிகள் துவக்கப்படும். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியது தொடங்கினார்களா! இல்லை. தற்போது திமுக அரசு ஹ்ஜ் பயணிகளுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு விடுதிகள் கொண்டுவரப்படும் என்றது அதிமுக தேர்தல் அறிகை சொன்னார்கள்....

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்! அண்ணனுக்கும் ஆலோசகருக்கும் இடையே நடக்கும் ஓர் கற்பனை உரையாடல்:

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்! அண்ணனுக்கும் ஆலோசகருக்கும் இடையே நடக்கும் ஓர் கற்பனை உரையாடல்:

அண்ணன்: ஏம்பா ஆட்சியில பங்கு தருவோம் என்று நீங்கதான் பேச சொன்னீங்க, இப்ப ஒரு கட்சியும் திரும்பிப் பார்க்கல்ல. இந்த லட்சணத்துல எனக்குதான் மக்கள் ஆதரவுன்னு பேச சொல்றீங்க மக்கள் நம்புவார்களா? ஆலோசகர்: கவலைப்படாதீங்க அண்ணே! ; மக்களை நம்ப வைக்கிறதுக்கு நம்ம கிட்ட ஒரு அய்டியா இருக்கு. அண்ணன்: என்ன அய்டியா? ஆலோசகர்: அப்படி கேளுங்க.”எனக்கும் ஸ்டாலினுக்கும் தான் போட்டி”அப்படின்னு அடிச்சு பேசுங்க எட்டு கட்டையில ஓங்கி பேசணும். அண்ணன்: இப்படி பேசினா மக்கள் நம்புவாங்களா? இப்படி பேசினதுக்கு அப்புறம் தான் எடப்பாடியை எதிர்க்க வச்சிட்டீங்க; “அதோ பார் விஜய் கொடி பறக்குது” அப்படின்னு புல்லரிக்க பேசினவர், இப்போ நடிகர்களை நம்பாதீங்கன்னு பேச ஆரம்பிச்சுட்டாரு. இதுதான் மிச்சம்! ஆலோசகர்: அத விடுங்க அண்ணே… அவர் எதிர்த்தால் என்ன? பாஜக நம்மை எதிர்க்கக் கூடாது; அதுதான் முக்கியம். ஸ்டாலின் மாதிரி பாஜகவுக்கும் நமக்கும் தான் போட்டி என்று பேசக்கூடாது. அதுதான் நமக்கு...

திருநர் சமூகத்தை இழிவுபடுத்துகிறது மோடி அரசு!

திருநர் சமூகத்தை இழிவுபடுத்துகிறது மோடி அரசு!

திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இது திருநங்கைகளின் சுய-அடையாளத்தை (self-identity) உறுதிப்படுத்தும் உரிமையைப் பறிக்கிறது என திருநர் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக , இந்தத் திருத்தம், தனது பாலினத்தைத் தானே அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையைக் குறிப்பிட்டிருந்த 2019ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 4(2)ஐ நீக்கப் பரிந்துரைக்கிறது. திருநர் சமூகத்தை குற்றவாளிகள் போல சித்தரிக்கும் தோற்றத்தையும் இந்த சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. “வயது வந்தவர்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டு, கடுமையான உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் பல்வேறு விதமான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, திருநர் அடையாளங்களை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பிற்காலத்தில் பிச்சை எடுத்தல் போன்ற செயல்கள் மூலம் அவர்களைச் சுரண்டுவதற்காகவே இது பெரும்பாலும் செய்யப்படுகிறது” என்று ஒன்றிய அரசாங்கம் கூறுகிறது. பொதுச்சமூத்தால் புறக்கணிக்கப்பட்டு அனைத்து நிலைகளிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் திருநர் சமூத்தை ஒரு அரசாங்கமே இவ்வளவு மோசமாகத்தான் மதிப்பிடுகிறது என்பது இந்த சட்டம் வெளிப்படுத்தியிருக்கும் முக்கிய...

ஈழத்தமிழர்கள் குடியுரிமை மற்றும் கூட்டாட்சிக்கு திமுக குரல்!

ஈழத்தமிழர்கள் குடியுரிமை மற்றும் கூட்டாட்சிக்கு திமுக குரல்!

திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்களின் கூட்டாட்சிக்கு குரல் கொடுப்போம் என்று வலியுறுத்தியுள்ளது. இலங்­கைத் தமி­ழர்­க­ளின் அர­சி­யல் சமூக உரி­மை­களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது திமுக. இதற்­காக ஆட்சி­யையே இழந்த வர­லாறு திமுகவுக்கு உண்டு. இலங்கையில் நடை­பெற்ற இனப்­­படு­கொலையில் இருந்து தப்பி, தமிழ்­நாட்டில் 40 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாகத் தங்­கி­யுள்ள தமி­ழர்­க­ளுக்கு இருப்­பி­டம், கல்வி, மருத்­து­வம் போன்ற உத­வி­களை மாநில அரசு வழங்கி வரு­கி­றது. அக­தி­கள் முகாமை மறுவாழ்வு மைய­மா­கப் பெயர் மாற்­றம் செய்துள்ளது. 630 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 10,469 வீடு­கள் கட்ட அனு­ம­தி­ய­ளிக்கப்பட்டு, இது­வ­ரை­யில் 5,920 வீடுகள் கட்­டி ­மு­டிக்­கப்­பட்டு முகாம் வாழ்மக்­க­ளுக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. மீத­முள்ள வீடு­க­ளுக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது. இதன் தொடர்ச்­சி­யாக திரா­விட மாடல் 2.0 ஆட்சி­யில்… 2019–ஆம் ஆண்டு இந்­திய அரசு கொண்­டு­வந்த குடியு­ரி­மைத் திருத்­தச் சட்டத்­தின்­படி, இலங்­கைத் தமி­ழர்­கள் குடி­யு­ரி­மை கோரும் விண்­ணப்­பங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட மாட்­டாது என்ற நிலைப்பாட்­டைக் ­கை­வி­டு­மாறு ஒன்­றிய அரசை...

அழகிரி எனும் அஞ்சா நெஞ்சன்!

அழகிரி எனும் அஞ்சா நெஞ்சன்!

பெரியார் இயக்கத்தின் போர் படைத் தளபதி‌ பட்டுக்கோட்டை அழகிரிசாமி. அழகிரி அவரது நினைவு போற்றும் கூட்டங்களை பெரியார் இயக்கங்கள் நடத்தி வருகின்றன. அவர் பெயரோடு பிரிக்க முடியாது இணைந்து நிற்பது “அஞ்சா நெஞ்சன்” என்ற பட்டம். பேச்சிலும் செயலிலும் இதை உறுதிப்படுத்தியவர். முதல் உலகப் போரில் இராணுவத்தில் சேர்ந்தார். படையிலிருந்து விடுவித்துக் கொண்டு பட்டுக்கோட்டையில் தனது சித்தப்பா வேணுகோபால் இல்லத்தில் தங்கினார். அப்போது நெற்றியில் நாமம் தரித்து கதர் ஆடை உடுத்தி காந்தியின் சீடராக இருந்தார். அக்காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் வ.வே.சு அய்யர் காங்கிரஸ் நிதியில் நடத்திய சேரன் மாதேவி குருகுலத்தில் நிகழ்ந்த வர்ணாஸ்ரம கொடுமைக்கு எதிராக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் போர்க்கொடி உயர்த்திய காலகட்டம். இந்த சம்பவம்தான் அழகிரி கண்களைத் திறந்தது. பெரியாரின் பார்ப்பனர் அல்லாதார் போராட்டங்களின் நியாயங்களை உணர்ந்தார். பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டார். அவரது வலிமையான ஆற்றல்மிகு மேடைப்பேச்சுக்கள் தமிழ்நாட்டை அதிர வைத்தன. அவரது கூட்டங்களில்...

திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு; அரசுத்துறை கெடுபிடிகள் எளிமையாக்கப்படும்

திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு; அரசுத்துறை கெடுபிடிகள் எளிமையாக்கப்படும்

ஒற்றைச் சாளரத்தின் (Single Window) வழியே அனைத்து சேவைகளும் வழங்கப்படும். இருந்த இடத்தில் இருந்தபடியே இணையத்தில் ஒரு சாளரத்தைத் திறந்து, தங்களுக்குத் தேவையான சேவையைச் சுட்டிச் சொடுக்கினால், அதற்கான தகவல்களுடன் விண்ணப்பப் படிவமும் வழங்கப்படும். அதனை நிரப்பி பதிவேற்றம் செய்தால் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதற்கான சான்று அப்போதே அளிக்கப்பட்டு விரைவில் கோரிய சேவையும் நிறைவேற்றப்படும். கணினித் தொழில்நுட்பத்தின் மூலம் அரசு சேவை வழங்குவதை இத்தகைய நடைமுறை மூலம் எளிமையாக்க உறுதியளிக்கிறோம் இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்…. அரசு விதிமுறைகள் சான்றுகள் ஆகியவற்றில் எவை தற்காலத்தில் தேவையற்றவை என்று ஆய்வு செய்து அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வழங்க வேண்டிய சேவைகளில் மக்கள் சந்திக்கும் குறைபாடுகளை கோரிக்கை மனுவின் நிலை ஆகியவற்றை ஒரு சாளரத்தின் (Single Window) வழியை எடுத்துக் கூறித் தேர்வு பெறும் நடைமுறை உருவாக்கப்படும். பொதுமக்களுக்கு அரசிடம் இருந்து தேவைப்படும் சேவைகளை எளிமையாகப் பெரும் வகையில்...

அகில இந்திய ஒதுக்கீடுகளுக்கு திமுக எதிர்ப்பு!

அகில இந்திய ஒதுக்கீடுகளுக்கு திமுக எதிர்ப்பு!

‘குலத்­துக்கு ஒரு நீதி என்­பது அநீ­தியே’ என்பதை முழங்கி எழுந்­ததே திரா­விட இயக்கம். “சமூ­க­நீதி என்பது சமு­தா­யத்­தில் முன்னே உயர்ந்த­வர்களை கீழே இறக்கி விடு­வது அல்ல. பள்­ளத்­தை சமப்படுத்தி மேடு ஆக்­கு­வதே சமூ­க­நீதி எனப்­ப­டும் இட­ஒ­துக்­கீடு” என விளக்­கி­னார் தந்தை பெரி­யார். இட ஒதுக்­கீடு எனப்­ப­டும் சமூ­க­நீ­திக் கொள்கையானது யாரா­லும் கைவைக்க முடி­யாத கொள்கை­யாக மாற திரா­விட இயக்­கத்­தின் தொடர் போராட்டங்­கள் தான் கார­ணம். இது இந்­திய அரச­மைப்­புச் சட்­டம் ஏற்­றுக்­கொள்­ளும் கொள்கையாக மாற­வும் திரா­விட இயக்­கத் தலைவர்­க­ளின் போராட்­டமே கார­ணம். இன்று அகில இந்­தியா முழு­மைக்­கும் இக்­கொள்கை நடை­மு­றைக்கு வர முன்­னோடி மாநி­ல­மா­கத் தமிழ்­நாடே இருந்­தது. சமூகநீதி கண்­கா­ணிப்புக் குழு அமைத்­தது திரா­விட மாடல் அரசு. இதன் தொடர்ச்சி­யாக மேலும் பல முன்­னெ­டுப்­பு­களை எடுக்க வேண்டியது அவ­சியம் என திரா­விட முன்­னேற்­றக் கழகம் கருதுகி­றது. இதன் தொடர்ச்­சி­யாக, திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் இட­ஒ­துக்­கீட்டை முழு­மையாக எல்லா நிலை­க­ளி­லும் நடை­மு­றைப்­ப­டுத்­திட...

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற ஒரே குற்றச்சாட்டையே அஇஅதிமுக, தவெக கூறி வருகின்றனர். இதற்கு ஒரு ஆணித்தர மறுப்பு! பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு மோசமான நிலையில் உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி வருகிறார். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2023 பதிவின்படி இந்தியாவில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் உத்தரப்பிரதேசம் 66381 சம்பவங்கள் நடந்துள்ளது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா -47101 சம்பவங்கள் நிகந்துள்ளது. மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் -45450 வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளது. முதல் 10 இடங்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமாக பெண்களுக்கு கொடுமைகள் நடந்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. குஜராத்தில் 2016-2021 வரை காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 41,627. 2021-ம் முதல் தற்போது தேசிய குற்றப்பதிவேட்டில் NCRB குஜராத் பதிவுகளே இல்லை. ஒரு நாட்டின் பிரதமரின் சொந்த மாநிலத்தில்...

தெருக்களுக்கு ஜாதிப்பெயரை நீக்கக்கோரி மனு!

தெருக்களுக்கு ஜாதிப்பெயரை நீக்கக்கோரி மனு!

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 6 தெருக்களில் ஜாதிப் பெயர் பலகை அடையாளமாக வைத்ததை கண்டித்து 09.03.2026 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், கவியரசு ஆகியோர் இருந்தனர். – பெரியார் முழக்கம் இதழ் 26032026

லெனின் சுப்பையா நினைவுநாள்

லெனின் சுப்பையா நினைவுநாள்

பெரியார் சிந்தனையாளர் இயக்கம் நடத்திய லெனின் சுப்பையா நினைவேந்தல் படத்திறப்பு மற்றும் புதுச்சேரி மண்ணில் ஓபிசி,எஸ்.சி,எஸ்.டி பூர்வீகப் பெண்களின் (தாய் வழி) பிள்ளைகள் அகதிகளாக? நீதிக்கேட்போம்! உரிமை மீட்போம் பொதுக்கூட்டம் 21.02.2026 அன்று மாலை 5-மணிக்கு சுதேசி மில் புதுச்சேரியில் நடைபெற்றது. விடுதலை கலைக்குழு தோழர்கள் பாடல்களால் லெனின் சுப்பையா அவர்களின் சமூக அரசியல் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பாடல்கள் வழியாக உணர்வு அலைகளில் காண்போரை மூழ்கடித்தார்கள். பாடல்களுக்கு இடையே இணைப்புகளையும் வழங்கினார்கள். திராவிட மகிழன் குழுவினருடன் இணைந்து லெனின் சுப்பையா பாடல்களை பாடினார். மகேசு (மக்கள் மன்றம்) லெனின் சுப்பையா மற்றும் செந்தாரகை படத்தினை திறந்து வைத்து பாடல்கள் வழியாக பாமரனுக்கும் உணர்வூட்டியவர் லெனின் சுப்பையா என்றும் புதுச்சேரி தாய்வழி பிள்ளைகள் பிரச்சனையில் போராட்டமே தீர்வு என்றார். கோவன் (செயலாளர் மகஇக) தன் பாடல்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு...

ஸ்ரீராம்-காயத்ரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா!

ஸ்ரீராம்-காயத்ரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா!

சேலம் மாவட்டம் R.T.கிருஷ்ணன் – கவிதா ஆகியோரின் மகன் ஸ்ரீராம் அவர்களுக்கும், சென்னை மாவட்டம் R.சிவகுமார் – சாந்தகுமாரி ஆகியோரின் மகள் காயத்ரி அவர்களுக்கும், 15.03.2026 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் அயோத்தியாபட்டினம் வாசு மஹால் திருமண மண்டபத்தில், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலையில், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்தார். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், செட்டியூர் மாரி, கொளத்தூர் கணேசன், அமஜத்கான், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சுதர்சன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் நாகராஜ், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், கீதா, அமுதன், ஆனந்த், வெங்கடேஷ், இனியா, நந்தினி, தமிழ்நாடு மாணவர் கழக கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சுகந்தன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்....

ஜாதிப்பெருமை நூல் அறிமுக விழா!

ஜாதிப்பெருமை நூல் அறிமுக விழா!

மதுரை: திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி இணைந்து ஜாதிப் பெருமை நூல் அறிமுக கூட்டம், மதுரையில் உள்ள மணியம்மை பள்ளியில் 08.03.2026 நடைபெற்றது. ஊடகவியலாளர் சத்யராஜ் குப்புசாமி, கனியமுதன் (விசிக துணைப் பொதுச் செயலாளர்), பேரறிவாளன் (தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர்) மற்றும் பிரபாகரன் (புஇமு) ஆகியோர் புத்தகத்திற்கான கருத்துரை நிகழ்த்தினார்கள். காமாட்சி பாண்டியன் (மதுரை மாவட்டத் தலைவர்) வரவேற்புரை ஆற்றினார். தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி தலைவர் மணிபாபா தலைமையில் நடைபெற்றது. மதுரைச் சேர்ந்த அனைத்து ஜனநாயக இயக்கங்களும், பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய தோழர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வினை தோழர் தவம் அறக்கலம் வலையொலி (YouTube) பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். குமரன் (புஇமு) நன்றி கூறினார். – பெரியார் முழக்கம் இதழ் 26032026

கோவை, திருப்பூரில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்!

கோவை, திருப்பூரில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்!

திருப்பூர்: மார்ச்04 (4வது நாள்): கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் முகில் இராசு மாவட்டத் தலைவர் முன்னிலையிலும் “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள், திமுக அரசை உறுதி செய்வோம்” என்ற தலைப்பில் 4வது நாளாக 04.03.2026 அன்று காங்கேயம், பேருந்து நிலையம், வெள்ளக்கோவில் பகுதியில், முத்தூர் (மூன்று சந்திப்பு சாலையில்), நத்தகாடையூர் ஆகிய பகுதிகளில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன. மார்ச்-05 (5வது நாள்): தாராபுரம், வட தாரை பகுதி, தாராபுரம் அய்ந்து முக்கு சாலை, தாராபுரம், அண்ணா சாலை, தாராபுரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஈரோடு இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), சூலூர் பன்னீர்செல்வம் (தலைமைக் குழு உறுப்பினர்), பரிமளராசன் (சமூக வலைதளப் பொறுப்பாளர்), முகில் இராசு (மாவட்டத் தலைவர்), சங்கீதா (மாவட்ட அமைப்பாளர்), முத்து (மாநகர அமைப்பளர்), கவி பு.இ.மு காங்கேயம் பகுதி பொறுப்பாளர், ஆறுமுகம் ஆசிரியர் (தி.க காங்கேயம் ஒன்றியத் தலைவர்) கதிர்வன் (தாராபுரம் பகுதியின்...

தாய்கிழவி பேசும் மகளிர்  “உரிமைத் தொகை”

தாய்கிழவி பேசும் மகளிர் “உரிமைத் தொகை”

பாட்டியை கதையின் நாயகியாக்கி வெளிவந்துள்ள “தாய் கிழவி” திரைப்படம் மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகை ராதிகா மிகச்சிறப்பான குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். தனது தந்தை நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய நடிப்பை அப்படியே பிரதிபலித்து இருக்கிறார். பாட்டி தன்னுடைய சொந்த உழைப்பில் நகைகளையும் பணத்தையும் ஈட்டி வட்டிக்கு விடுகிறார். பாட்டி 160 பவுன் நகைகளை தனது கடையில் வாங்கினார் என்று ஒரு மனநோயாளி நகைக்கடைக்காரர் பொய்யாகக் கூறியதை நம்பி அவரது 3 மகன்களும் பாட்டியிடம் இருந்து நகையை தட்டிப் பறிக்கும் சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள். அந்த மூன்று மகன்களில் ஒருவர் கமல்ஹாசன் ரசிகர்; மற்றொருவர் கருப்பண்ண சாமியின் தீவிர பக்தர்; மற்றொருவர் ஆட்டோ தொழிலாளி. பாட்டியிடம் இருந்து நகைகளை பறிக்க இவர்கள் அரங்கேற்றும் திட்டங்கள் அத்தனையும் தற்குறித்தனமானவை. இடையில் நோய்வாய்ப்பட்டு பாட்டி படுத்த படுக்கையாகி விடுகிறார். அப்போது மூன்று விரல்களை அவர் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த மூன்று விரல்களும்...

மாப்பிள்ளை பாஜகதான்; ஆனால் சட்டை என்னுடையது

மாப்பிள்ளை பாஜகதான்; ஆனால் சட்டை என்னுடையது

அதிமுக பாஜக கூட்டணியை அமித் ஷாதான் அறிவித்தார்; இப்போது கூட்டணிக்கான தொகுதி பங்கீடுகளை எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி அலுவலகத்தில் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் கூட்டணிக்கான தலைமை தனது கட்சிதான் என்றும் பாஜக அல்ல என்றும் மக்களுக்கு சூசகமாக கூறுகிறார். பாஜக என்ற அடையாளத்தை முன்னிறுத்தினால் தமிழ்நாட்டு மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்; இந்த உண்மை கட்டாயத்தின் பேரில் கூட்டணியில் இணைக்கப்பட்ட எடப்பாடிக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. இதன் காரணமாகவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அணியில் சேர மறுத்தார்; இதன் காரணமாகவே இந்த தேர்தல் களம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டி என்று சித்தரிக்க விரும்புகிறார் எடப்பாடி.விருப்பமில்லாமல் பாஜக என்ற லக்கேஜை சுமக்க வேண்டி இருக்கிறது என்ற குமுறல்களின் வெளிப்பாடு இது! இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது திமுக அணிதான் என்று அமித் ஷாவே தன்னிடம் ஒப்புக்கொண்டதை ஓபிஎஸ் பொதுவெளியில் போட்டு உடைத்து விட்டார். இதற்கு அமித் ஷா -விடமிருந்து எந்த...

சட்டம் ஒழுங்கு மீறலா? சமூக ஒழுங்கு மீறலா? ” தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்!

சட்டம் ஒழுங்கு மீறலா? சமூக ஒழுங்கு மீறலா? ” தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்!

“என்.டி.ஏ. கூட்டணியை ஒரே மேடையில் ஏற்றி ஒற்றுமையை மக்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த போராட்டம் தான் “சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கான ஆர்ப்பாட்டம்”. ஆனால் இந்தப் போராட்டம் கூட்டணியின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்துவிட்டது. திமுக எதிர்ப்பு இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்ப்பாக உருமாறி விட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவினரே அதிமுக சண்முகத்தை வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.சொந்தக்காசில் சூடு வைத்த கதை தான். அஇஅதிமுக ஆட்சிக் காலத்தைவிட திமுக ஆட்சிக் காலத்தில் குற்றங்கள் குறைவு என்று புள்ளி விவரங்களுடன் உள்துறை செயலாளர் அறிக்கை விடுத்திருக்கிறார். நடப்பது எந்த ஆட்சியாக இருந்தாலும் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, வன்முறை, பாலுறவு வன்கொடுமை குற்றங்களுக்கு ஆட்சியை குற்றம் சாட்டுவது நியாயமும் இல்லை.அர்த்தமும் இல்லை என்பதே நமது உறுதியான கருத்து. இவை அனைத்தும் சமூகம் சார்ந்த குற்றங்கள் வன்முறைகள். நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து தடுக்கக்கூடிய “மந்திரக் கோல்” எந்த...

பாலியல் கொலையாளிக்கு துணை போகிறதா  காவல்துறை?

பாலியல் கொலையாளிக்கு துணை போகிறதா காவல்துறை?

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 11.12.2025 அன்று இரண்டரை வயது பெண் குழந்தை சாதிய மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியாக கைது செய்யாமலும், சட்டப்படியான சரியான விசாரணையை மேற்கொள்ளாமலும் அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் சுமித்ரா மிகுந்த அலட்சியமாக செயல்பட்டு வந்தார். அதனால் காவல் ஆய்வாளர் சுமித்ராவையும், இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டிருந்தால் அவர்களையும் விசாரித்து கைது செய்ய வேண்டும் என 17.03.2026 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மானுஷ், செய்தியாளர் சிவசுப்ரமணி, சமூக செயல்பாட்டாளர் சுரேஷ், செய்தியாளர் சிவகுரு மற்றும் பாதிக்கப்பட்டு இறந்த பெண் குழந்தையின் தந்தை வீட்டார் முறையிட்டனர். இதில் திராவிடர் விடுதலைக் கழக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச்...

சனாதனமும் கோயில் நுழைவும்!

சனாதனமும் கோயில் நுழைவும்!

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழு தனது கட்டுப்பாட்டில் உள்ள 45 கோயில்களில் “இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை அனுமதிப்பதில்லை” என்று முடிவு எடுத்துள்ளது. பாலிவுட் நடிகையான சாரா அலிகான் இந்தக் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி கேட்டார்; அதற்கு பதில் அளித்துள்ள கோயில் தலைமை நிர்வாகி ஹேமந்த் திரிவேதி “தனக்கு சனாதன தர்மத்தில் நம்பிக்கை உண்டு” என்று விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தந்தால் அனுமதிக்கப்படுவார் என்று கூறியுள்ளார். இந்து அல்லாதோர் கோயில்களுக்குள் தரிசனம் செய்ய விரும்பினால் சனாதன தர்மத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று உறுதிமொழி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தர வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். இந்துக் கடவுள் மீது நம்பிக்கை உண்டு என்று கூறவேண்டிய தேவையில்லை. மாறாக சனாதான தர்மத்தின் மீது அதாவது வர்ணாசிரம தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்று கூற வேண்டுமாம். சனாதனம் என்றால் என்ன? வடக்கில் இமயமலை முதல் தெற்கில் விந்திய மலைத்தொடர் வரையிலும்;...

தலையங்கம்: உடல் உழைப்பு இழிவானதா?

தலையங்கம்: உடல் உழைப்பு இழிவானதா?

40 சதவித மக்கள் இந்தியாவில் வேலை வாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்று அசிம்பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 40 ஆண்டுகளாக வேலையில்லாத பிரச்சனை நீடித்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்துக்கான அடிப்படை காரணங்களாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ள கருத்து மிகவும் முக்கியமானது. மூளையை பயன்படுத்தி செய்யும் வேலை மரியாதைக்குரியதாகவும், உடல் உழைப்பு வேலை இழிவாகவும் கருதும் மனநிலைதான் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கான அடிப்படையான காரணம் என்று சுட்டிக் காட்டுகிறது இந்த ஆய்வு. ஜாதிக் கட்டமைப்பும் வர்க்க வேறுபாடுகளும் இதற்கு அடிப்படையான காரணம் என்றும் கூறுகிறது. நடுத்தர வர்கத்தினரும் அதை நோக்கி செல்லத் துடிப்பவரும் மூளை வேலைகளை உயர்வாகவும் உடல் உழைப்பு வேலைகளை இழிவாகவும் கருதுவதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது. இதற்கு ஜாதி வர்க்கப் பார்வையில் இருந்து சமூகத்தை விடுவிக்க வேண்டும். அப்போதுதான் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க முடியும் என்று ஆய்வு சுட்டி காட்டியிருப்பது மிகச் சரியான கருத்தாகும். பார்ப்பனியம் உருவாக்கிய ஜாதிக் கட்டமைப்பு...

ஜாதி தேவை என்கிறது ஆர்.எஸ்.எஸ்!

ஜாதி தேவை என்கிறது ஆர்.எஸ்.எஸ்!

ஜாதிக் கட்டமைப்பு நீடிக்க வேண்டும்; ஆனால் ஜாதிகளுக்குள்ளே நல்லிணக்கம் வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கொள்கை என்று அமைப்பின் தேசிய பரப்புரைத் தலைவர் சுனில் அம்பேத்கர் “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆர்.எஸ்.எஸ் ஆதரிக்கிறது. ஆனால் அந்த கணக்கெடுப்பை அரசியலுக்கு பயன்படுத்தி சமூகத்தைப் பிளவுபடுத்தக் கூடாது என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு ஜாதியும் மற்ற பிற ஜாதிகளுடன் நட்புடன் பழகி பாகுபாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை என்றார். கோயில், சுடுகாடு, நீர்நிலை, பொது இடங்களில் ஜாதிப் பாகுபாடுகளை ஆர்.எஸ்.எஸ் சேர்க்கவில்லை என்றும் சுயம் சேவக்குகள் உள்ளூர் வட்டங்களில் இந்த பாகுபாடுகளை நீக்குவதற்கு செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்கள் சேர்க்கப்படுவது இல்லை; சுயம் சேவக்குகளாக பெண்கள் வர முடியாது என்ற கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் உறுதியாக இருக்கிறது என்பதை அவரது பேட்டி உறுதிப்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இணையாக “ராஷ்டிய சேவிகா...

`பெண்கள் பாதுகாப்பு’ தமிழ்நாட்டுக்குப் புகழாரம் சூட்டுகிறார் ஆர்.என்.ரவி!

`பெண்கள் பாதுகாப்பு’ தமிழ்நாட்டுக்குப் புகழாரம் சூட்டுகிறார் ஆர்.என்.ரவி!

அருணாச்சல பிரதேசம், மிசோரம் போன்ற மாநிலங்கள் உருவான தினவிழாவில் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என் ரவி பேசிய கருத்து சமூகவலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வடகிழக்கு பெண்கள் தமிழ்நாட்டிற்கு படிக்க சென்றால் அவர்கள் பெற்றோர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் தமிழ்நாட்டிற்கு அனுப்பலாம். தமிழ்நாடுபோல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அக்கறையுடன், நண்பர்களாக நம்மை கவனித்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டைப் போல் டெல்லி போன்ற மாநிலங்களுக்கு பெண்களை அனுப்ப இயலாது என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்ற ஆளுநர் ரவிக்கு இந்த “அறிவு ஒளி” கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று புலம்பும் சங்கிகளுக்கு ஆளுநர் ரவியே பதில் கூறிவிட்டார். – பெரியார் முழக்கம் இதழ் 26032026

பாஜகவுக்கு ஒரே நெருக்கடி திமுகதான்

பாஜகவுக்கு ஒரே நெருக்கடி திமுகதான்

ஒன்றிய ஆட்சிக்குக் கடும் நெருக்கடிகளைத் தந்து வரும் ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்று கோலாகல சீனிவாசன் என்ற பார்ப்பன பத்திரிகையாளர் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். தீவிர ஆர்.எஸ்.எஸ்-க்காரான இவரது பேட்டி: அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்க்கக் கூடிய எதிர்க்கட்சிகளின் ஆட்சிகள் பல மாநிலங்களில் இருந்தாலும் ஒன்றிய அரசுக்குத் தலைவலியை தரக் கூடிய ஆட்சி திமுக ஆட்சிதான். சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியது ஆளுநர்களுக்கு எதிரான மிகவும் கடுமையான தீர்ப்பு. இந்த தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு விழுந்த அடி. ஒரே நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாக தலைவலி மேற்கு வங்கத்தில் வர உள்ளது. கேரளாவில் பினராயி விஜயனுக்கு உள்ளது. ஆனால் இவர்கள் மூலம் ஒன்றிய அரசுக்குத் தொந்தரவு இருந்ததே கிடையாது. ஆனால் திமுக மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. ஒவ்வொரு நாளும் திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள். மம்தா, பினராயைக் காட்டிலும் மோடி எதிர்ப்பில் வலுவாக உள்ளார் மு.க ஸ்டாலின். பெரியார் முழக்கம்...

தீர்வுதேடி தமிழ்நாடு வந்துள்ள உத்தரப்பிரதேசம்

தீர்வுதேடி தமிழ்நாடு வந்துள்ள உத்தரப்பிரதேசம்

மகப்பேறு விகிதத்தை குறைக்க தீர்வுகாண தமிழ்நாடு வந்துள்ளது உத்தரப்பிரதேச திட்டக்குழு. இங்கு செயல்பாட்டில் உள்ள சுகாதார நலத் திட்டங்கள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு வந்துள்ள அம்மாநில திட்டக் குழுவினர் இங்கு மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கள ஆய்வுகளில் ஈடுபட்டனர். பிரசவத்தின் போது அல்லது பிரசவம் முடிந்த 42 நாட்களுக்குள் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை மகப்பேறு இறப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி ஒரு இலட்சம் பிரசவத்தில் தமிழ்நாட்டில் 35 பேர் மட்டுமே உயிரிழக்கின்றனர். இது உ.பியில் 140-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் இதழ் 26032026

திராவிட மாடலும் குஜராத் மாடலும்!

திராவிட மாடலும் குஜராத் மாடலும்!

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் கவனம் பள்ளிக் கல்வித்துறையில் தீவிரமாக இருந்தது. பல்வேறு திட்டங்கள் மூலமும் தொடர் சாதனைகளை செய்து வருகிறது. “இல்லம் தேடி கல்வி தொடங்கி, காலைச் சிற்றுண்டி, கலைத் திருவிழா, புதுமைப் பெண், தாயுமானவர் திட்டம், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், கல்விச் சுற்றுலா என ஏராளமான திட்டங்களை வகுத்து அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டு கல்விக் கட்டமைப்பை அய்ரோப்பிய நாடுகளுக்கு இணையாக உருவாக்கி வருகிறது. அரசின் தொடர் சாதனைகளால் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களில் 44,439 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். மேலும் கல்வியில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை 76% விழுக்காடக உயர்ந்துள்ளது. மாணவர்கள் சேர்க்கை 71% விழுக்காடாக அதிகரித்துள்ளது என ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறாக கல்விக் கட்டமைப்பை சீர்குலைத்து வருகிறது குஜராத் மாடல் பாஜக அரசு. தொடக்கப் பள்ளி,...

26,000 ஒபிசி மருத்துவ மாணவர்களின்கல்வி உரிமையை மீட்டுத்தந்த மு.க.ஸ்டாலின்

26,000 ஒபிசி மருத்துவ மாணவர்களின்கல்வி உரிமையை மீட்டுத்தந்த மு.க.ஸ்டாலின்

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கோட்டாவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டுமென்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்போராட்டம் நடத்தி, ஒட்டுமொத்த இந்திய இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குமான உரிமையை 2021-இல் நிலைநாட்டினார். அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்ற விவரங்களை, அந்த வழக்கை நடத்திய திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் நாடாளுமன்றத்தில் கேட்டுப் பெற்றுள்ளார். அதன்படி, 2021 ஆம் ஆண்­டில் முதன்­மு­றை­யாக இந்த நடை­முறை அம­லுக்கு வந்­த­போது 4,422 ஓபிசி மாண­வர்­கள் மருத்­து­வப் படிப்­பு க­ளில் சேர்ந்­த­னர். இதில் 2,633 பேர் முது­நிலை (PG) படிப்­பு­க­ளி­லும், 1,662 பேர் MBBS படிப்­பி­லும், 127 பேர் BDS படிப்­பி­லும் இடங்­க­ளைப் பெற்­ற­னர். 2022 ஆம் ஆண்­டில் இந்த எண்­ணிக்கை 4,907 ஆக உயர்ந்­தது. அதில் 2,982 முது­நிலை, 1,804 MBBS மற்­றும் 121 BDS சேர்ந்­துள்­ள­னர். 2023 ஆம் ஆண்­டில் 5,484 ஓபிசி மாண­வர்­கள் மருத்­து­வக் கல்­வியில் சேர்ந்­த­னர்....

கழகப்பணிகளைப் பாராட்டி நன்கொடை!

கழகப்பணிகளைப் பாராட்டி நன்கொடை!

கோவை:- சிறுமுகை அருகே உள்ள வெள்ளிக்குப்பம்பாளையத்தைச் சார்ந்தவர் மாரண்ணன். இவர் அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். தனது இளம் வயதில் இருந்தே பொதுவுடைமைக் கொள்கைகள் மீதும், திராவிடர் இயக்கக் கொள்கைகள் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டவர். மேலும் தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் இயக்கங்களை ஊக்குவிப்பதைத் தனது தலையாய கடமையாகக் கொண்டவர் ஆசிரியர் மாரண்ணன். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் இயங்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஜாதி ஒழிப்புப் பணிகளை பாராட்டியும் மேலும் தொடர்ந்து செயல்பட விருப் பத்தைத் தெரிவித்து ரூ.10,000/-யை கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமாரிடம் அவர் வழங்கினார். பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியுடன் சில நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார். நிறைவாகக் கழகத்தின் வார இதழான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு ஆண்டு சந்தா ரூ.300/- செலுத்தி மகிழ்ந்தார். மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர் அமுல்ராஜ், மற்றும் அன்னூர் விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் இதழ்...

கழகம் இறங்கியது சேலம் கிழக்கு! –  இளம்பிள்ளை  சிந்தாமணியூர்  கே.ஆர் தோப்பூர்  ஏற்காடு  சேலம் மாநகரம்   கொளத்தூர்  பகுதிகளில் கழகப் பிரச்சார அலை!

கழகம் இறங்கியது சேலம் கிழக்கு! –  இளம்பிள்ளை  சிந்தாமணியூர்  கே.ஆர் தோப்பூர்  ஏற்காடு  சேலம் மாநகரம்  கொளத்தூர் பகுதிகளில் கழகப் பிரச்சார அலை!

சேலம் கிழக்கு மாவட்டக் கழகம் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்.. திமுக ஆட்சியை உறுதிசெய்வோம்” என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை முனைப்புடன் நடத்தி வருகிறது. கிளைக் கழகத் தோழர்கள் ஏற்பாட்டில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் மக்களை சந்தித்து பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் தொகுப்பு: 3வது நாள் மார்ச்-02 இளம்பிள்ளை: கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் 02.03.2026 நாள் முழுவதும் தாரமங்கலம் பேருந்து நிலையம், சின்னப்பம்பட்டி பேருந்து நிறுத்தம், கொல்லப்பட்டி பேருந்து நிறுத்தம் ஆகிய 3 இடங்களில் கூட்டம் நடைபெற்றது. தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), குடந்தை பாலன், ரமேஷ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்) ஆகியோர் தலைமை வகித்தனர். சக்திவேல் (சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர்), டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரை ஆற்றினார். திமுக தலைமைக்...

வந்துட்டாங்கப்பா தேர்தல் ஆணையம்!

வந்துட்டாங்கப்பா தேர்தல் ஆணையம்!

டும் டும்..டும்…டும்..தேர்தல் அறிவிப்பு வந்தாச்சு; தேர்தல் ஆணையம் களத்தில் இறங்கி விட்டோம்.  இனி வாகனங்களில் லட்சக்கணக்கில் வணிகத்துக்கோ குடும்ப செலவுக்கோ திருமணத்துக்கோ பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து விடுவோம். நாங்கள் தேர்தலில் பணப்பழக்கத்தையே முற்றாக ஒழித்து விட உறுதி எடுத்து வந்து விட்டோம் இதை நீங்கள் நம்ப வேண்டும்.  அடுத்த 30-நாட்களுக்கு கட்சி அடையாளங்களையே உங்கள் நினைவில் இருந்து அகற்றப் போகிறோம்; இதற்காக சுவர் எழுத்துக்களை அழிக்க கிளம்பிவிட்டோம்; எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்களை பூட்டு போட புறப்பட்டு விட்டோம்; தலைவர்கள் படங்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு அரசு அலுவலகத்தில் இருக்கவே கூடாது அகற்றப் போகிறோம். எந்தத் தலைவரின் நினைவும் உங்கள் கனவில் கூட வரக்கூடாது அதற்கான மந்திரக்கோல் எங்களிடம் இருக்கிறது.  ஆனால் அலுவலகங்களில் பூஜை போடும் சரஸ்வதி,விநாயகர், ராமன் படங்களில் கை வைக்க மாட்டோம். இது பாஜகவின் சின்னம்தான் என்பது எங்களுக்கும் தெரியும். இதில் கை வைத்தால்...

காதில் பூ சுத்துகிறார் எடப்பாடி!‌

காதில் பூ சுத்துகிறார் எடப்பாடி!‌

மதச்சார்பின்மை கொள்கையில் அணுவளவும் மாற மாட்டோம்! – இசுலாமியர்கள் மத்தியில் எடப்பாடி பேச்சு.  முத்தலாக் தடை சட்டத்தை ஆதரிப்பார்.  குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பார்.  திருப்பரங்குன்றத்தில்‌ எல்லைக் கல்லில் விளக்கேற்றி – மதக்கலவரத்தை உருவாக்கும் சங்கிகளை ஆதரிப்பார்.  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை ஏன் திமுக ஆட்சி ஏற்கவில்லை? என்று கேள்வி கேட்பார். ”திராவிடத்தை அழிக்க முருகா வா!” என்று முருகன் மாநாட்டில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டபோதும், கலவர மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்புவார்.  தங்கள் சகாக்களான செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா, ராஜ் சத்தியன் அவர்களையும் மாநாட்டுக்கு வழியனுப்பி வைப்பார்.  ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணியை அனுப்பி வைப்பார்.  அதே முருகன் மாநாட்டில் பெரியார் அண்ணாவை அவமதிக்கும் விடியோ ஒளிபரப்பிய போது பங்கேற்ற அதிமுகவினர் மவுனம் சாதித்தார்கள்.‌எடப்பாடி இதை கண்டிக்க மாட்டார்.  கோயில்...

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்

தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்

தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு:  பாஜக தூண்ட முயற்சித்த கலவரங்களும்; உறுதுணையாக இருந்த அதிமுகவும்.  தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்; மதமாற்றம் காரணமல்ல சிபிஅய் அறிக்கை:  அதே 2022 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள ஒரு கிறுத்துவ பள்ளியில் பயின்ற மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, “மத மாற்றம் தான் காரணம்” என்று பேசியது போல ஒரு காணொளி தஞ்சாவூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவரால் பகிரப்பட்டது. அந்தக் காணொளியை பாஜக அண்ணாமலை பகிர்ந்து பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். காவல்துறை விசாரணையில் அந்த காணொளி வதந்தி என கண்டறியப்பட்டது. அண்ணாமலை பள்ளி நிர்வாகத்தை குறி வைத்ததற்கான காரணம் பள்ளி நிர்வாகம் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தது.  தமிழ்நாடு அரசு மிக...

கருநாடகத்தில் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம்

கருநாடகத்தில் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம்

கர்நாடக மாநில அரசு ஆணவப் படுகொலை தடுப்புச்சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்து இருக்கிறது; மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க முடிவாகும். இந்த சட்டத்திற்கு “இவர் நம்மவர்” என்ற மிக அழகான பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஒரு ஆண் பெண்ணிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்டு பிறகு ஜாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்தால் அது பாலியல் வன்கொடுமை என்று இந்தச் சட்டம் கூறுகிறது. குடும்ப அழுத்தம் அல்லது ஜாதி சார்ந்த காரணங்களைக் காட்டி திருமணம் செய்ய மறுக்கும் நபருக்கு 5 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ வழங்குவதற்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது. தமிழ்நாடு அரசும் இதேபோன்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்! சமூகத்தில் ஜாதி ஒரு புற்றுநோயாக பரவி நிற்கிறது. இதை அழிப்பதற்கு சட்டங்களும் தேவை; அத்துடன் சமூகத்தில் ஜாதி எதிர்ப்புக்கான இயக்கங்கள் நடத்துவது இதைவிட முக்கியமானது! எந்த ஒரு அரசியல் கட்சியும்...

மோடி ஆட்சியின் சமூகநீதி துரோகம்!

மோடி ஆட்சியின் சமூகநீதி துரோகம்!

சமூக மற்றும் கல்வி அடிப்படையில் தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் பின்தாங்கினார்களே தவிர பொருளாதார காரணங்களால் அல்ல என்று அரசியல் சட்டம் தெளிவாக கூறியது. பின்தங்கியதற்கான காரணம் அவர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்ததுதான்; பொருளாதார வசதிகள் இருந்தாலும் கூட பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பொருளாதார வசதிகளே இல்லாத பார்ப்பனர்களிடமும் உயர் ஜாதியினரிடமும் கீழ்ப்படியும் நிலையே நீடித்தது. மனுதர்மத்தை காப்பாற்றத் துடிக்கும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கம் பறிபோய்விடும் என்பதால் இந்த இட ஒதுக்கீடுகளை பொருளாதார அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 1992-ல் இந்திரா-சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் “கிரிமிலேயர்” என்ற பொருளாதார வரம்பை புகுத்தியது. இந்தக் “கிரிமிலேயர்” குடும்பத்தில் பொருளாதார வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்படுத்தப்பட்டோரை நிர்ணயம் செய்தது. இதனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். இப்போது உச்ச நீதிமன்றம் இந்த “கிரிமிலேயர்” வடிகட்டுதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வழக்கு இதுதான்: பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தைச் சார்ந்த 60 மாணவர்கள் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், அய்.எப்.எஸ்...

திராவிட மாடல் ஆட்சியின் தனித்துவம்!

திராவிட மாடல் ஆட்சியின் தனித்துவம்!

திராவிட மாடல் ஆட்சி இந்திய அரசியலுக்கு ஒரு புதிய திசையை வழிகாட்டி இருக்கிறது.  1990க்கு பிறகு “உலகமயமாக்கல்” கொள்கை அறிமுகமான பிறகு தனியார் துறைகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் தலை தூக்கின; அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மறையத் தொடங்கி விட்டன.  விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியது. இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற மக்களுக்கு நேரடியாக பயனளிக்க கூடிய மக்கள் நலத்திட்டங்கள் மாற்று வழி என்ற நிலையை உருவாக்கி விட்டது.  1990க்கு முன்பு சோவியத் ஒன்றியம் சிதையாத நிலையில் சோசியலிசக் கொள்கைகள் செல்வாக்கு பெற்றிருந்தன. திராவிட அரசியல் சோசியலிசத்தின் பக்கம் உறுதியாக நின்றது. அதன் காரணமாகவே கலைஞர் பேருந்துகளை அரசுடைமையாக்கினார்.  நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தார் .  தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் வீழ்த்தப்பட்டது‌.  தொடர்ந்து தனியார் துறை வேகமாக தலையெடுத்தபோது விழித்துக்கொண்ட கலைஞர் இந்தியாவில் முதன்முதலாக தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கினார்....

என்.டி.ஏ தோல்வியை உறுதிசெய்வோம்! கள்ளக்குறிச்சியில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உரை

என்.டி.ஏ தோல்வியை உறுதிசெய்வோம்! கள்ளக்குறிச்சியில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உரை

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகில் உள்ள கடுவனூர் கிராமத்தில் 2005-ஆம் ஆண்டு நடந்த ஜாதிக் கலவர மோதலில் களமாடி சிறை சென்று 21 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த தோழர்கள் அ.சக்தி, ஆ.தங்கராசு, ஆ.சங்கர், மா.சங்கர் குரு, ச.கு.செயபால், ஆ.முனுசாமி, அ.பாலு, க.சங்குபாலகன், மா.குமார் உள்ளிட்ட தோழர்கள் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை பாராட்டியும், “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள், தி.மு.க ஆட்சியை உறுதி செய்வோம்! மதவெறி கூட்டணியை விரட்டி அடிப்போம்! என்ற தலைப்பிலும் 07.03.2026 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தோழர்களுக்கு கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்திற்கு மா.குமார் தலைமை வகித்தார், மு.நாகராஜ் வரவேற்புரையாற்றினர். க.இராமர் (மாவட்டச் செயலாளர்), ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), செ.பிரபு (த.பெ.தி.க.கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்) ஆகியயோர் கலவரம் மற்றும் வழக்கு குறித்து விரிவாகப் பேசினார்கள். க.மதியழகன் (மாவட்டத் தலைவர்), ந.வெற்றிவேல் (மாவட்டத் துணைச் செயலாளர்), பூ.ஆ.இளையரசன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்),...

திருப்பூர்,சேலம்,கோவையில் ஒவ்வொரு நாளும் 4 கூட்டங்கள்  கலைநிகழ்ச்சியுடன் சென்னை கூட்டங்கள் களம் இறங்கியது கழகத்தின் பரப்புரை படை!

திருப்பூர்,சேலம்,கோவையில் ஒவ்வொரு நாளும் 4 கூட்டங்கள் கலைநிகழ்ச்சியுடன் சென்னை கூட்டங்கள் களம் இறங்கியது கழகத்தின் பரப்புரை படை!

திருப்பூர், கோவை, சேலம், சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தினமும் 2 முதல் 4 இடங்களில் மாவட்டத்தின் பல முக்கிய சாலைகளில் நாள் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைமைக்குழு அறிவித்த சில நாட்களில் தோழர்கள் சுமார் 90-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களில் திமுக ஆட்சியை ஆதரித்து பரப்புரை செய்து வருகிள்ளனர். தொய்வில்லாமல் தோழர்கள் கடும் வெயிலிலும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் செய்தி தொகுப்பு. திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பில் 5 நாட்கள் தினமும் 4 இடங்களில் தேர்தல் பரப்புரை கூட்டங்களை தோழர்கள் மாவட்டத்தின் மங்கலம் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு என பல முக்கிய சாலைகளில் பரப்புரைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். முதற்கட்டமாக 5 நாட்களில் 20 கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். தோழர்களின் இந்த பரப்புரையில் பேசிய கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் முகில் இராசு (மாவட்ட தலைவர்)...

கருப்பை புற்றுநோய் தடுப்பில் மோடிக்கு வழிகாட்டிய மு.கஸ்டாலின்!

கருப்பை புற்றுநோய் தடுப்பில் மோடிக்கு வழிகாட்டிய மு.கஸ்டாலின்!

பெண்களுக்கான கருப்பை புற்றுநோய் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்தைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியது திராவிட மாடல் ஆட்சி. கடந்த சனவரியில் அரசு இத்திட்டத்தை அறிவித்து மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. ஒரு ஊசியின் மதிப்பு ரூ.14,000. தமிழ்நாட்டில் இலவசமாக போடப்படுகிறது. இதுவரை 4 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமாக தொடரும்.தமிழ்நாடு அரசின் பெண்கள் உரிமைக் கான திட்டங்களை வாக்கு திரட்டும் திட்டமாக சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த திட்டம் வாக்களிக்கும் வயதிற்கு வராத 14 வயது சிறுமிகளுக்கான திட்டம். தமிழ்நாட்டைப் பார்த்த பிறகு தான் மோடி கடந்த பிப்ரவரியில் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மோடி வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இந்தியா முழுவதும் 14 வயதான 1.5 கோடி பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படும் என்று கூறியிருக்கிறார். உலகளாவிய புற்றுநோய் ஆய்வகம் `Globocan’ 2022-ல் வந்துள்ள தகவலின் படி இந்தியாவில் 35...