Author: Vishnu

தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!

தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மிக மோசமாக சித்திரிப்பு செய்கிறது வேலையில் இறங்கியிருக்கிறது பாஜக. பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரப் பிரதேசத்தில் என்ன நிலைமை என்பது கூட தெரியாமல், தமிழ்நாட்டின் மீது சேற்றை வாரி இறைக்கும் பாஜகவினருக்கு பத்திரிகையாளர் அரவிந்தாக்‌ஷன் தரவுகளால் பதிலடி கொடுத்திருக்கிறார். 15.02.2024 அன்று West Delhi-ல் இருக்கும் Aventa Company-ன் basement -ல் போதை மருந்து தயாரிப்பதற்கான pseudoephedrine எனும் மூலப்பொருள் 50.070 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய அரசின் போதைத் தடுப்புப் பிரிவின் (NCB) டெல்லி மண்டல அலுவலகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கு எண்-VIII /03/DZU/2024 – இந்த வழக்குக்கு விகாஷ் ஷர்மா என்ற ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரி. இது சம்பந்தமாக 23-02-2024 அன்று ஜாபர் சாதிக் என்ற தமிழ்நாட்டைச் சார்ந்தவருக்கு சம்மன் வழங்கப்பட்டு,தொடர் சோதனைகள்...

தலையங்கம் – சி.ஏ.ஏ.-வை திரும்பப் பெறு!

தலையங்கம் – சி.ஏ.ஏ.-வை திரும்பப் பெறு!

இந்தியாவின் மதச்சார்பின்மையை சுக்கு நூறாக உடைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அண்டை நாடுகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயினர்கள், பாரசீகர்கள், கிறித்தவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்கள் குடியுரிமை பெறலாம். ஆனால் இசுலாமியர்கள் வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது. அதேபோல இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கும், அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படாது. ஆக, பாஜகவின் அணுவில் ஊறிப்போன மத வெறுப்பும், தமிழின விரோதப் போக்குமே இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழ், தமிழர் என்றெல்லாம் மோடி பேசுவதெல்லாம் பாஜக மீதான வெறுப்புணர்வை கரைக்கும் முயற்சியே தவிர, உண்மையான பற்றில்லை என்பதற்கு இது ஒன்றே போதுமானது. 2019ஆம் ஆண்டில் இந்த சட்டத்திற்கு எதிராக மிகக் கடுமையான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தன....

மோடி ஆட்சியின் மோசமான சர்வாதிகாரம்

மோடி ஆட்சியின் மோசமான சர்வாதிகாரம்

இந்தியாவில் மோடி ஆட்சி படு மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் தனது 2024ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் V-Dem Institute ஆகும். உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான ஜனநாயகங்கள் எப்படி செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து மிக நுட்பமாக ஆய்வு செய்யும் உலகின் முதன்மையானது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தில் மட்டும் 180 நாடுகளை சேர்ந்த 4080 பேர் பணியாற்றுகின்றனர். 201 நாடுகளை பற்றிய 31 மில்லியன் தரவுகள் இந்த நிறுவனத்திடம் உள்ளது. 1789 முதல் 2023 வரை உள்ள தரவுகள் இதில் அடங்கியுள்ளது. மிக துல்லியமாக ஒவ்வொரு நாட்டில் உள்ள வெவ்வேறு வகையான ஜனநாயகப் பண்பு குறித்து அறிக்கை தருவது இந்த நிறுவனம். அத்தகைய நிறுவனம் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் மோடி ஆட்சி மிக மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது....

மார்ச் 22-இல் கழக செயலவை கூடுகிறது!

மார்ச் 22-இல் கழக செயலவை கூடுகிறது!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயலவைக் கூட்டம் ஈரோட்டில் மார்ச் 21 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடைபெற உள்ளது. நாள் : 21.03.24 வியாழன் நேரம் : காலை 9.30 மணி முதல் இடம் : கே.கே.எஸ்.கே மகால், பவானி சாலை, ஈரோடு. பொருள் : • 2024 பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு. • கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்கள். • நடைபெற்று வரும் பரப்புரை பயண அனுபவங்கள். கழகத்தின் செயலவை உறுப்பினர்கள் (மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள்) இந்த செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். 11.03.2024 பெரியார் முழக்கம் 15032024 இதழ்

எழுதிய தீர்ப்பை திருத்துவதுதான் சனாதன தர்மமா? நீதிபதி அனிதா சுமந்துக்கு குவியும் கண்டனம்

எழுதிய தீர்ப்பை திருத்துவதுதான் சனாதன தர்மமா? நீதிபதி அனிதா சுமந்துக்கு குவியும் கண்டனம்

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் சனாதனத்திற்கு எதிராக பேசியது சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பதற்காக அந்த தீர்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். இந்த தீர்ப்பின் நகல் கடந்த மார்ச் 7ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. திடீரென்று அடுத்த தினமே அந்த தீர்ப்பு இணையதளத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. மார்ச் 9 ஆம் தேதி பல்வேறு திருத்தங்களுடன் அந்த தீர்ப்பு மீண்டும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சனாதனம் பற்றிய கருத்துக்கள் அதில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சனாதனம் பற்றி குப்புசாமி சாஸ்திரியின் ஆய்வு மையத்தில் உள்ள பேராசிரியரின் கருத்தை நீதிமன்றம் கேட்டதாகவும், அவர்கள் தந்த விளக்கத்தின் அடிப்படையில் “சனாதன தர்மம் பிராமண – வைசிய – சத்திரிய – சூத்திர வர்ணாசிரம தர்மத்திற்கு எந்தத் தொடர்பும் கிடையாது, சனாதன தர்மம் வாழ்க்கையின் விழுமியங்களை பேசுகிறது. அது...

தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

வேலூர் : ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபன், பெரப்பேரி கிராமத்தில் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பு தோழர் திலீபனை கடுமையாகத் தாக்கியது. தோழர் திலீபனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி 17.04.2023 அன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழக சார்பில் பானாவரம் காவல்நிலையம் முற்றுகையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 01.03.2024 அன்று தீர்ப்பானது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 40க்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த வெங்கடேசன். இந்த வழக்கில் கழக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 07032024 இதழ்

வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு கழகம் ஆதரவு

வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு கழகம் ஆதரவு

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றுவரும் உண்ணா விரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வழக்கறி ஞர்களை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா‌.உமாபதி ஆகியோர் 02.03.2024 அன்று சந்தித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்களது ஆதரவை தெரிவித்தனர். இராஜேஷ், அருண் கோமதி, எட்வின் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1-இல் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 07032024 இதழ்

உடுமலையில் கழக சார்பில் பரப்புரை இயக்கம்

உடுமலையில் கழக சார்பில் பரப்புரை இயக்கம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! தெருமுனைக் கூட்டங்கள் 20.02.24 மற்றும் 21.02.24 ஆகிய இரு நாட்கள் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. உடுமலை பேருந்து நிலையம் முன்பு, பெதப்பம்பட்டி, துங்காவி, காரத் தொழுவு, கணியூர், வடதாரை பூளவாடி பிரிவு, ஐந்து முக்கு, பேரறிஞர் அண்ணா சிலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் கணக்கன், ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், உடுமலை பகுதி பொறுப்பாளர் இயல்,கழகப் பொருளாளர் துரைசாமி, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, தமிழ்நாடு மாணவர் கழகம் மகிழவன், திவிக தாராபுரம் நகரப் பொறுப்பாளர் செல்வராசு, திருப்பூர் அய்யப்பன், சரசுவதி, விசிக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தங்கவேல், உடுமலை முற்போக்கு கூட்டமைப்பு...

நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

சேலம் : சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் தானாபதியூரில் இந்து முன்னணியின் தடையைத் தகர்த்து சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் 03.03.2024 அன்று தானாபதியூர் பகுதியில் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் சர்வாதிகார BJP அரசின் அவலங்களை விளக்கி பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து கார்ப்பரேட் சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல – தந்திரமே என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமையுரையாற்றினார். தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், தானாபதியூர் தி.மு.க.இளைஞரணி சந்திரசேகரன், இளம்பிள்ளை திவ்யா, நங்கவள்ளி CPI ஒன்றியச் செயலாளர் பழ. ஜீவானந்தம், தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் திருமதி வழக்கறிஞர் முத்து...

ஆளுநருக்கு அய்யாவழி தலைமை பதி பால பிரஜாபதி கடும் கண்டனம்

ஆளுநருக்கு அய்யாவழி தலைமை பதி பால பிரஜாபதி கடும் கண்டனம்

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து, ஆரிய கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பது போல் ஆளுநர் ரவி பேசியுள்ளார். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்திற்கு எதிராக போர்க்குரல் கொடுத்தார். சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். சாதியை மறந்து பூமியில் ஒத்த இனமாக வாழ வலியுறுத்தினார். ஆனால் மனுதர்மத்தை ஏற்றிருந்த அரசு தான், அய்யாவை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தியது. 800 ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றை சரியாக படிக்க வேண்டும். அய்யாவின் வரலாறு தெரியாமல் யாரும் வாய் திறக்க கூடாது. ஆளுநர் சொல்வது போல் அய்யா வைகுண்டர் சனாதனத்தை காக்க வரவில்லை. மக்களை அதிலிருந்து காக்க வந்தார். அவர்களிடம் இருந்த மடமையை, அறியாமையை போக்க வந்தார். தங்களுடைய சுயலாபத்திற்காக யாரும் வரலாற்றை திரித்து பேசக்கூடாது. ஜாதியை வகுத்தவனை நீசன் என கூறும் அய்யா வைகுண்டரை சனாதனத்தை ஆதரித்தவர் என ஆளுநர் கூறுவதை ஒருபோதும் ஏற்க...

சனாதனத்தை வேரறுக்க பாடுபட்டவர் அய்யா வைகுண்ட சுவாமிகள்

சனாதனத்தை வேரறுக்க பாடுபட்டவர் அய்யா வைகுண்ட சுவாமிகள்

வள்ளலார், திருவள்ளுவர் என சனாதனத்துக்கு எதிராக, சமத்துவத்தைப் பேசிய தமிழின் பெருமைக்குரிய தலைவர்களை எல்லாம் ‘சனாதனவாதிகள்’ என திரிபுவாதம் செய்கிற வேலையை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துகொண்டே இருக்கிறார். அந்த வரிசையில் இப்போது அய்யா வைகுண்ட சுவாமிகளையும் சேர்த்திருக்கிற ஆர்.என்.ரவி, “சனாதன தர்மத்துக்கு புத்துயிர் ஊட்டி வளப்படுத்தியவர் அய்யா வைகுண்டர்” என்று கூறியிருக்கிறார். அய்யா வைகுண்ட சுவாமிகளை இழிவுபடுத்துகிற ஆர்.என்.ரவியின் இப்பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள், தலைவர்களிடம் இருந்து கண்டனம் வலுத்து வருகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்ட சுவாமிகளைப் பற்றி 2018ஆம் ஆண்டு மே மாதம் நிமிர்வோம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகளை தருகிறோம். ஜாதி தீண்டாமை பார்ப்பனிய எதிர்ப்புடன் தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்பே 1833இல் இயக்கம் தொடங்கியவர் வைகுண்டசாமி. அவர் வாழ்ந்த குமரிப் பகுதி அன்றைக்கு திருவிதாங்கூர் இராஜ்யத்திலிருந்தது. அதனை அப்பொழுது ஆண்டு வந்தவர் சுவாதித் திருநாள் மகாராஜா, சங்கீத விற்பன்னர்கள் இன்றளவும் போற்றிப் புகழுகிற இந்த மன்னரின் ஆட்சியில்...

வினா விடை

வினா விடை

• எனக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு மிகப் பழமையானது. – மோடி ஆமாம், கீழடி அகழ்வாராய்ச்சியிலேயே அதற்கு ஆதாரம் இருக்குன்னு சொல்லுவிங்களோ, உங்கள் பெயரே பத்தாண்டுகளாகத்தான் எங்களுக்கு தெரியும். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு. • சென்னைக்கு வரும் போது தமிழர்களால் எனக்கு சக்தி கிடைக்கிறது – மோடி அதனால் தான் கல்பாக்கத்தில் ஈனுலை அழிவு சக்தியை எங்கள் தலையில் கட்டியிருக்கிங்களா? • பாஜக தேர்தல் சுவரொட்டியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் – செய்தி விட்டா… முனுசாமி, சி.வி. சண்முகம் படத்தை கூட போட்டுப்பாங்க. • புதுக்கோட்டை கோயில் கர்ப்பகிரகத்தில் அரிவாளுடன் நுழைந்த நபரை காவல்துறை தண்ணீரை பீய்ச்சி அடித்து வெளியேற்றியது. – செய்தி அய்யயோ ஆகமம் அனுமதிக்குமா? ஏன், வேத மந்திரங்களை வைத்து வெளியேற்ற முடியாதா? • ஆன்மீகம் தழைக்கும் நாடு நன்றாக மலரும் – ஆளுநர் தமிழிசை ஆனால், ஆன்மீக ஆளுநர்களை கொண்ட மாநிலங்கள் நன்றாக வதைபடும். •...

கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை

கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை

திராவிட இயக்கத் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் 55ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டக் கழக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது. எம்.ஆர்.இராதா கலைக்குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது. சூலூர் தமிழ்செல்வி கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன் தலைமை தாங்கினார், மாதவன் சங்கர் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து “கோயில்களும் சமூகநீதியும்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய செயலாளர் வழக்கறிஞர் ச.பாலமுருகன், திராவிட முன்னேற்றக் கழக கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், திராவிட இயக்க செயல்பாட்டாளர் லோகநாயகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “அறிஞர் அண்ணாவும் தமிழ்நாடும்” என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார். கருத்தரங்கின் முடிவில் ஜெகதீசன், கார்த்திக் ஆகியோர் கழகத் தலைவர் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கழகத்...

தலையங்கம் – பாஜகவால் யாருக்கு ஆபத்து?

தலையங்கம் – பாஜகவால் யாருக்கு ஆபத்து?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், வட மாநிலங்களில் வேலையின்மை, வறுமை போன்ற வாழ்வாதார சிக்கல்கள் மேலோங்கி இருக்கின்றன. பாஜகவின் வழக்கமான இந்துத்துவ கோஷம் இந்தத் தேர்தலில் எடுபடப் போவதில்லை, இந்தி ஹார்ட்லேண்ட் எனப்படும் இந்தி மொழி பேசும் மக்கள் அடர்த்தியாக வாழும் மாநிலங்களிலேயே பாஜகவுக்கு சறுக்கல் ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர். அதற்கேற்ப இந்தியா கூட்டணி தலைவர்களும் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு உரிமைகளையே அதிகம் முன் வைக்கின்றனர். பெரும்பான்மை மக்களாகிய பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி சமூகத்தினரிடம் இதற்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. குறிப்பாக, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் 10 நாட்களாக அம்மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மார்ச் 3ஆம் தேதி பாட்னாவில் “ஜன் விஸ்வாஸ்’ பரப்புரையின் நிறைவுக் கூட்டத்தை நடத்தினார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில், 15 நேரம் விட்டு விட்டு பெய்த...

பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக

பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறத் தொடங்கியிருக்கிறது. அதற்கேற்ப மக்கள் மனநிலையைக் கட்டமைக்கும் விதமாக, பல ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை திணிக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கும் அளவுக்குக்கூட வளர்ந்திடாத பாஜக 18% வாக்குகளுக்கு மேல் பெறும் என்றும், 4 முதல் 6 தொகுதிகள் வரை வெல்லக்கூடும் என்றும் புதிய தலைமுறை ஊடகம் கூட கருத்துத் திணிப்பு செய்தது. இப்படி பாஜகவிற்கு ஆதரவாக கருத்துருவாக்கம் செய்ய முயலும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு எப்படி நடத்தியிருக்கிறது என்பது பெரும் விவாதத்துக்கு உரியது. இதுகுறித்து “தி ஸ்கிரால்” ஊடகத்தில் அயூஷ் திவாரி என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: 2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 180 நாடுகளில் 140-வது நாடாக இருந்தது. அதுவே மோசமான நிலைதான் என்றால், இப்போது 163வது இடத்துக்கு மேலும்...

சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?

சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?

தமிழ்நாட்டு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சிற்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது. ஒரு அமைச்சரே இப்படி சனாதனத்தை எதிர்க்கலாமா? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், கருத்து சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளது. சனாதனம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. சனாதன தர்மம் என்றால் என்ன? என்பதை விவாதித்து விளக்கமளிக்காத உச்சநீதிமன்றம், ஒட்டுமொத்தமாக சனாதன தர்மத்தை எதிர்க்க கூடாது, அது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவது என்று கூறுவது சற்றும் நியாயமற்ற ஒரு வாதமாகும். சனாதன தர்மத்தை வாழ்க்கை முறை என்கிறார்கள். ஆனால் வேத பண்டிதர்கள் முதல் சங்கராச்சாரியார் வரை சனாதனம் என்பது வர்ணாசிரம தர்மம் தான் என்று கூறியுள்ளனர். பிராமணன் – சத்திரியன் – வைசியன் – சூத்திரன் என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது தான் சனாதன தர்மம் என்று கூறுகிறார்கள். கீதையிலே கிருஷ்ணனும் இந்த நான்கு வர்ணத்தை காப்பாற்றுவதற்கு...

ஆளுநரே திரும்பி போ திண்டுக்கல் மாவட்ட கழகம் கருப்புகொடி

ஆளுநரே திரும்பி போ திண்டுக்கல் மாவட்ட கழகம் கருப்புகொடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை மதர்தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் 10க்கும் மேற்பட்ட இயக்கத் தோழர்கள் ஒன்றாக இணைந்து பல்கலைக்கழகம் அருகே கருப்புக் கொடிகாட்டி போராட முயன்ற நிலையில் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து பழனி அழைத்து வரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து தமிழக கவர்னர் R.N.ரவியே திரும்பிப்போ சனாதானத்தின் மறு உருவமே வராதே உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பெரியார்முழக்கம் 07092023

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

காலை சிற்றுண்டி வழங்குவதன் காரணமாக பள்ளிக் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன என்ற வர்ணாசிரம திமிரோடு தலைப்பு செய்தி வெளியிட்ட தினமலம் நாளேட்டை கழகத் தோழர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். சென்னை : பள்ளி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தினமலம் நாளேடு அலுவலகம் அருகே இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலம் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை...

இழி தொழில்களை தலித் மக்கள் செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னாரா? அவதூறு பரப்புவோருக்கு மறுப்பு (1) – கொளத்தூர் மணி

இழி தொழில்களை தலித் மக்கள் செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னாரா? அவதூறு பரப்புவோருக்கு மறுப்பு (1) – கொளத்தூர் மணி

பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், அதனால் ஏற்படும் அதிர்வுகளும் தாக்கங்களும் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, தோழர் அல்லது அய்யா பெ.மணியரசன் (நோக்கம் வேறுவேறாகக் கூட இருக்கலாம்) போன்ற விபீசண, அனுமார் கூட்டங்கள் சில வரிகளை உருவி எடுத்தும், திரித்தும் எப்படியேனும் பெரியாரை, திராவிடத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்று செயல்பட்ட வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு தரவுகளைத் தேடும் சிரமத்தை இவர்களது முன்னோடிகளான ரவிக்குமார், குணா, ம.பொ.சி, வ.வே.சு அய்யர் போன்ற பலரின் அன்றைய பதிவுகள் பயன்படுகின்றன. ஒருமுறை பார்ப்பன பேச்சு அடியாள் எச்.ராஜாவிடம் “பெரியாரைப் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு “நான் மணியரசன் எழுதி வருவதைப் படிக்கிறேன்; அதுவே போதும்” என்றான். அப்படித்தான் பல வாழ்க்கை வரலாறுகளும் கூட எழுதப்பட்டு வருகின்றன. ஓர் எடுத்துக்காட்டாக தோழர் ‘பாலசிங்கம் இராஜேந்திரன்’ என்பவர் எழுதி ‘நீலம்’ வெளியீட்டில் “இளையபெருமாள்...

வினா விடை

வினா விடை

• ஒரே நாடு ஒரே தேர்தல் : ஒன்றிய ஆட்சி திட்டம் – செய்தி ஒரே ஜாதி, ஒரே மக்கள் என்ற திட்டத்தை எப்போது கொண்டுவர போறீங்க.. • அண்ணாமலை பிராமணர்களை புறக்கணிக்கிறார் – எஸ்.வி.சேகர் அப்படியா, விடாதிங்க; சத்ரு சம்ஹார யாகம் நடத்துங்க, நல்ல பலன் கிடைக்கும். • நெடுஞ்சாலை திட்டத்துக்கு கூடுதல் செலவு ஆகியுள்ளது என்று தான் சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. அது ஊழல் அல்ல–- அண்ணாமலை அந்த கூடுதல் செலவுக்கே காரணம் ஊழல் இல்லையா என்பதுதான் கேள்வியே? • சனாதன தர்மத்தை எதிர்க்க எதிர்க்க அது வளரும் – தமிழிசை அப்படியா, சனாதன தர்மம் மாறவே மாறாததுன்னு சொன்னீங்க, இப்ப எப்படி வளரும். • திராவிட கட்சிகள் எனது பங்காளிகள், எதிரி அல்ல – சீமான் பயப்படாதிங்க சீமான், அவ்வளவு சீக்கிரம் கைது செய்யமாட்டாங்க. • நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் எனக்கு கோயில் கட்டினார்கள். அதுதான்...

மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்

மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்

சென்னை : சென்னை மாவட்டக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் 28.08.2023 திங்கள் அன்று சிந்தாதிரிப்பேட்டை, சாமி நாயக்கன் தெருவில் மாலை 5 மணிக்கும், மாலை 7:30 மணியளவில் கலவைத் தெருவிலும் நடைபெற்றது. அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தமிழ்நாடு மாணவர் கழகம் தேன்மொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன் ஆகியோர் உரையாற்றினர். 29.08.2023 செவ்வாய் மாலை 6 மணிக்கு தரமணி நூறடி சாலையிலும், அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு பெருங்குடி நூறாடி சாலையில் நடைப்பெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, பெரியார் நம்பி, இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், இரண்யா ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்கள்.. கூட்டத்தில் பங்கேற்ற கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கருத்துரையாற்றிய தோழர்களுக்கு நூல்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்....

தலையங்கம் – உதயநிதி பேசியதில் என்ன தவறு

தலையங்கம் – உதயநிதி பேசியதில் என்ன தவறு

டெங்கு, காலரா, மலேரியா நோய்களை போல சனாதனம் என்ற சமூக நோயை ஒழிக்க வேண்டும் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, பாஜக திரித்து பொய்களை கலந்து மக்களிடம் விற்பனை செய்யத் தொடங்கியிருப்பது அவர்களின் தரம் தாழ்ந்த பிரச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, நிர்மலா, அண்ணாமலை போன்றவர்களே இந்த அற்ப பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். சனாதன தர்மம் தான் இந்து கலாச்சாரம் என்று கூறி இந்துக்களின் எதிர்ப்பை ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக திருப்பி விட முயற்சிக்கிறார் அமித்ஷா. சனாதன ஒழிப்பு என்றால் இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று சங்கிகள் அவரது ஆதரவு ஊடகங்கள் திரிபுவாதம் செய்கின்றன, திராவிடத்தை ஒழிப்போம், காங்கிரசை ஒழிப்போம், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்களே, அதன் அர்த்தம் அவர்களை எல்லாம் இனப்படுகொலை செய்வது என்பது தானா என்று அமைச்சர்...

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற பாஜக திட்டத்துக்கு அம்பேத்கர் தரும் பதில் இந்தியா இன்றும் ஒரே தேசமாக உருவாகவில்லை – கொளத்தூர்மணி

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற பாஜக திட்டத்துக்கு அம்பேத்கர் தரும் பதில் இந்தியா இன்றும் ஒரே தேசமாக உருவாகவில்லை – கொளத்தூர்மணி

இந்தியா முழுவதும் ஒரே தேர்தல்’என்ற முழக்கத்தை முன்வைக்கிறது பாஜக. ஆனால் இந்தியா இன்னும் ஒரே தேசமாக இருக்கவில்லை என்கிறார் அம்பேத்கர் என்று உறுதியாக கூறியதோடு வடநாடு பிற்போக்கானது, தென்னாடு முற்போக்கானது என்றும் தெளிவுப்படுத்தியிருப்பதை கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார். சூலூரில் 30.0.2023 அன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. அம்பேத்கர் 1955இல் ‘மொழி வழி மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள்’ என்ற ஒரு புத்தகம் எழுதுகிறார். அதுவரைக்கும் ஒன்றுபட்ட இந்தியா, இந்தி ஆட்சி மொழி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த அம்பேத்கர், அந்த நூலில் இந்த நாட்டில் எவ்வளவு வேறுபாடுகள் உள்ளன, கன்னியாகுமரியில் இருப்பவர்களுக்கு டெல்லி வெளிநாடு போல் தெரிகிறது. எனவே இந்தியாவிற்கு இரண்டாவது தலைநகரம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று எழுதுகிறார். இரண்டாவது தலைநகரமாக ஹைதராபாத்தை பரிந்துரைக்கிறார். எப்போதும் இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகர் வேண்டும், ஆங்கிலேயர் இருந்தபோது இரண்டாவது தலைநகரமாக சிம்லா இருந்தது; முகலாயர்...

வைக்கம் போராட்டம் : வெளிவராத செய்திகள்

வைக்கம் போராட்டம் : வெளிவராத செய்திகள்

1) வைக்கத்தில் சூத்திர வகுப்புப் பெண்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு அதிகாரிகள் மறுத்ததாக 15.6.1924 சுதேசமித்திரன் ஏட்டில் வெளிவந்த செய்தி தெரிவிக்கிறது. கோவில் மதில்களுக்கு வெளியே உள்ள பொதுச் சாலைகளில் தீண்டப்படாதார் நடக்கக் கூடாது என்பதும், சாதி இந்துக்கள் என்கிற சூத்திரர் குறிப்பாக பெண்கள் கோயிலுக்குள் போகக் கூடாது என்பதும் இந்துமத ஆசாரம். இதையும் மீறினார் ஈ.வெ.ரா. நாகம்மை. இந்நிகழ்ச்சி பற்றிய பின்வரும் செய்தி இதை எண்பிக்கிறது. கொச்சி, ஜூன் 20 – வைக்கத்தில் கிளர்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. வைக்கம் கோயிலுக்கு உள்ளே சாதி இந்துப் பெண்களான திருமதி நாயக்கரும், மற்றுமுள்ள பெண்களும் நுழையக்கூடாது என தேவசம் போர்டு தடை செய்திருந்தது. அதையும் மீறி அவர்கள் நுழைந்து விட்டார்கள். இது பற்றி தேவஸ்வம்போர்டு ஊழியர் ஒருவர் நேரில் சத்தியாகிரக ஆசிரமத்திற்கு வந்து, அங்கிருந்த பொறுப்பாளர்களிடம் திருமதி நாயக்கர் கோவிலுக்குள் நுழைந்தது கடுமையான குற்றம் (Grievous Error) என்றும், சாதி இந்துக்கள் கோயிலுக்குள் நுழைய...

சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்துகிறது பாஜகவுக்கு 77 கோடி நன்கொடை தந்ததற்காக விதிகளை மீறி டெண்டர்

சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்துகிறது பாஜகவுக்கு 77 கோடி நன்கொடை தந்ததற்காக விதிகளை மீறி டெண்டர்

மத்திய தணிக்கைத்துறை – ஒன்றிய ஆட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். அந்த நிறுவனமே இப்போது மோடி ஆட்சியின் ஊழல் முறைகேடுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திவருகிறது. • பாஜவுக்கு நிதி தந்தவர்களுக்கும் விதிகளை மீறி திட்ட அனுமதி • சமர்ப்பித்த ஆவணங்கள் தவறாக இருந்தும் அனுமதி வழங்கப்பட்ட அவலம் • உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து விசாரிக்கக்கூடிய அடுத்த ஊழல் அம்பலம் பிரதமரின் நெருக்கம் இருந்தால் போதும் கனவிலும் நினைக்காத திட்டங்களும் கிடைக்கும் என்பது ஒன்றிய பாஜ அரசின் சித்தாந்தமாக மாறிவிட்டதோ என்று ஐயப்படுகின்ற அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார் அதானி. நாட்டின் எல்லைப் பகுதிகள், கடலோரப் பகுதிகள், துறைமுகங்கள், சுற்றுலா தலங்கள், 100 மாவட்ட தலைமையகங்கள் ஆகியவற்றை இணைக்கும் 34,800 கிமீ நீள சாலை அமைப்பது தான் பாரத் மாலா திட்டத்தின் நோக்கமாகும். நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஒன்று என்பதால் தகுதி வாய்ந்த, முன் அனுபவம் பெற்ற நிறுவனங்களுக்குதான் இந்த திட்டம்...

கோவையில் ஆளுநருக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்

கோவையில் ஆளுநருக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்

கோவை : பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொள்ள வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், கோவை மாவட்ட தலைவர் இராமச்சந்திரன், திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு திண்டுக்கல் மாவட்ட தலைவர் மருதமூர்த்தி, திராவிடத் தமிழர் விடுதலை இயக்க நந்தன் தம்பி உட்பட 37 தோழர்கள் கைதாகினர். கைதான தோழர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உக்கடம் கண்ணன், கல்லூரி மாணவர் தொண்டாமுத்தூர் நவீன் ஆகியோர் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். பெரியார்முழக்கம் 31082023

200 வயதில் மோடி ஆட்சியில் அறுவை சிகிச்சை செய்து காப்பீடு பெற்றவர்கள்

200 வயதில் மோடி ஆட்சியில் அறுவை சிகிச்சை செய்து காப்பீடு பெற்றவர்கள்

மோடி ஆட்சியில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மெகா ஊழல்கள் நடந்துள்ளது. தணிக்கை ஆணையம் வெளி யிட்டுள்ள இன்னொரு முக்கியமான ஆய்வறிக்கை பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜ்னா (ABPMJAY எனப்படும் மருத்துவ சிகிச்சை திட்டம் குறித்ததாகும். இந்த திட்டத்துக்கு அடிப்படை Socio Economic Caste Census எனப்படும் சமூக பொருளாதார சாதிய மக்கள் தொகை கணக் கெடுப்பு என ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் இந்த அடிப்படையே பல குறைபாடுகளை கொண்டுள்ளது என்பது தணிக்கை ஆணையத்தின் கருத்து. இந்த திட்டத்துக்கு பல்வேறு தகவல் தொழில்நுட்பத்தையும் தரவுகள் சேகரித் தலுக்கான மென் பொருளையும் ஒன்றிய அரசு தான் உருவாக்கியது. இதில் பல கோளாறுகளும் குறைகளும் உள்ளன. இதன் விளைவாக பல முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தவற்றை தணிக்கை ஆணையம் பட்டியலிடுகிறது. அவற்றில் சில: சிகிச்சை பெற தகுதிகள் இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 60 லட்சம். தகுதிகள் இல்லாமலேயே சிகிச்சை...

தலையங்கம் சிவனின் சக்தியா? அறிவியலின் வளர்ச்சியா?

தலையங்கம் சிவனின் சக்தியா? அறிவியலின் வளர்ச்சியா?

சந்திராயன் நிலவில் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டியுள்ளார் மோடி. சிவசக்திக்கும் இந்த சந்திராயன் அறிவியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. சந்திராயன் என்ற அறிவியலை உருவாக்கி அதற்காக உழைத்து சாதனை படைத்த விஞ்ஞானிகள் இப்படி சிவசக்தி என்று பெயர் சூட்டியதை ஏற்றுக் கொள்கிறார்களா என்ற ஒரு கேள்வி அடிப்படையில் இருக்கிறது. மத நம்பிக்கையற்றவர்கள், பிற மதத்தவர் என பலரும் இந்த விஞ்ஞானிகள் குழுவில் பணியாற்றி உள்ளனர். நிலவில் சந்திராயன் இறங்கிய இடத்திற்கு ஏதோ நிலவில் உள்ள தாசில்தார் அலுவலகம் மோடியின் ஆட்சிக்கு அந்த இடத்தை பட்டா போட்டு கொடுத்துவிட்டதை போல சொந்தம் கொண்டாடி அதற்கு பெயர் சுட்டுவது என்ற எல்லைக்கு போய்விட்டார். அறிவியலும் மூடநம்பிக்கையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் இன்றைக்கு அறிவியல் விடை கண்டு வருகிறது. பிரபஞ்சத்தில் பல புதிர்கள் கண்டுபிடிக்கப்படாத போது, கடவுள்களால் உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டவை அனைத்திற்கும் இன்றைக்கு அறிவியல் அதற்கான விடைகளை தந்து...

கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை கோரி நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை கோரி நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

நங்கவள்ளி கிளைக் கழக சார்பில் எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் 26.07.2023 அன்று மாலை 5 மணியளவில் தானாபதியூர் பகுதியில் காவல் துறை அனுமதியுடன் நடைபெற்ற போது, திட்டமிட்டு தெருமுனைக் கூட்டத்தை தடுத்து நிறுத்தி கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்ட இந்து முன்னணியினர் மீது கழக தோழர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு மாத காலம் ஆகியும், வழக்கு பதிவு செய்யாத நங்கவள்ளி காவல் துறையை கண்டித்து. 24.08.2023 (வியாழன்) மாலை 4 மணிக்கு நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூர்யகுமார், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் இராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி...

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை : சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக 21.08.2023 திங்கள் மாலை 5 மணிக்கு கோடம்பாக்கம் மார்கெட் அருகிலும், மாலை 7 மணிக்கு தர்மாபுரம் மாரியம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 செவ்வாய் மாலை 5 மணிக்கு, மடுவாங்கரை புதியத் தெருவிலும் இரவு 7:30 மணிக்கு, பழைய பூந்தமல்லி சாலை, கங்கை அம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஜாபர்கான்பேட்டை, கங்கையம்மன் கோயில் அருகிலும், மாலை 7 மணி ஜோன்ஸ் சாலை சாரதி நகர் சந்திப்பிலும், 24.08.2023 வியாழன் அன்று மாலை 5.30 மணிக்கு ஜோன்ஸ் சாலை கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவிலும், மாலை 7.30 மணிக்கு சைதாப்பேட்டை, குயவர் வீதியிலும், 25/08/2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகிலும், மாலை 7.30 மணிக்கு அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகிலும், 26.08.2023 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையிலும்,...

சனாதனம் அன்றும் இன்றும்

சனாதனம் அன்றும் இன்றும்

• வேத கால சனாதனம் வேத பாடசாலை மட்டுமே நடத்தியது மோடி கால சனாதனம் மக்கள் பேசாத சமஸ்கிருதத்திற்கு மட்டுமே கூடுதல் நிதியை ஒதுக்குகிறது. • வேத கால சனாதனம் கல்வி உரிமையைத் தடுத்தது, மோடி கால சனாதனம் சூத்திரர் உயர்கல்வியைத் தடுக்க நீட், நெக்ஸ்ட் தேர்வுகளை நடத்துகிறது. • வேத கால சனாதனம் பெண்களை விதவையாக்கி – மொட்டை அடித்து இழிவுபடுத்தியது, மோடி கால சனாதனம் பழங்குடிப் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் போகும் வன்முறையாளர்களுக்கு ஜே போடுகிறது. • வேத கால சனாதனம் கோயில் பூஜைகளில் பெண்களை தடுத்தது, மோடி கால சனாதனம் ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையவே தடுக்கிறது. • வேத கால சனாதனம் கடல் பயணத்திற்கு தடைப் போட்டது, மோடி கால சனாதனம் கடல் தாண்டிப் போய் சனாதனத்தை பரப்புகிறது. • வேத கால சனாதனம் அரசர்களை ராஜ குருவின் கட்டளைக்கு அடக்கி வைத்தது, மோடி கால...

மணிப்பூர் கலவரம்; பாஜக ஆட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரம்; பாஜக ஆட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் : ஜூலை 23- ஆம் தேதியன்று கொளத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப் புலிகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளை தடுக்கத் தவறிய ஆளும் பாஜக மற்றும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர் பன்னீர்செல்வம், கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கொளத்தூர் நகரத் தலைவர் சி.இராமமூர்த்தி, கொளத்தூர் வி.சி.க மாணவரணி ஜீவா, வி.சி.க. கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் சேட்டுகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.வி.சி.க. நகர து.செயலாளர் பழனி நன்றி கூறினார்.

மணிப்பூர் மக்களுக்கு தமிழகம் துணை நிற்கும்

மணிப்பூர் மக்களுக்கு தமிழகம் துணை நிற்கும்

ஜுலை 18 அன்று சென்னையில் மணிப்பூர் மாணவர்கள் அங்கு நடக்கும் கலவரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கி தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் , இயக்கங்கள் மக்களின் ஆதரவைக் கேட்டனர். இந்த சந்திப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று மணிப்பூரில் மத வெறி மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு மாநில, ஒன்றிய பாஜக செய்யும் சதிகளை விளக்கினார். உலக நாடுகள், ஐநா மனித உரிமைகள் ஆணையம் மணிப்பூர் பிரச்சனையை கவலையுடன் அணுகும் போது பிரதமர் மோடி அதுகுறித்து வாய்திறக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டினார். மெய்தீஸ் பிரிவினருக்கு மாநில பாஜக ஆட்சியே கமாண்டோ போலீஸ் உதவியுடன் ஆயுதங்களைத் தந்து தாக்குதலை தூண்டிவிடுவதையும் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில், பச்சை தமிழகம் சுப.உதயகுமார் ஆகியோரும் பங்கேற்றனர். கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் உமாபதி, கரு.அண்ணாமலை, கழகத் தோழர்கள் அஜித்,விஷ்ணு ஆகியோர் பங்கேற்றனர்.

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட ஆய்வு

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட ஆய்வு

மதுரை மாவட்டக் கழக சார்பில் சமத்துவ சமுதாயத்தை நோக்கிய கலைப் படைப்பான “கழுவேத்தி மூர்க்கன்” திரைப்படத்திற்கு பாராட்டு விழா, ஜூலை 21, மாலை 5 மணிக்கு மதுரை பிரசிடென்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலூர் சத்யமூர்த்தி வரவேற்புரையாற்றினார், மாவட்ட செயலாளர்.மா.பா.மணி அமுதன் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார், மாவட்ட கழக காப்பாளர் தளபதி வாழ்த்துரை வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட இயக்குநர் சை.கெளதமராஜ் ஏற்புரையாற்றினார். வாசுகி நன்றி கூறினார்.

மதுரையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம்

மதுரையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம்

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூலை 1 அன்று மெஜஸ்டிக் ஹோட்டலில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் யோகேஸ் வரவேற்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமை தாங்கினார், சத்தியமூர்த்தி – முருகேசன் முன்னிலை வகித்தனர். சேரன் மாதேவி போராட்டம் குறித்து மாவட்ட கழக காப்பாளர் தளபதியும், திராவிடமும் சமூக நீதியும் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணித் தலைவர் ராஜிவ் காந்தியும், வைக்கம் போராட்டத்தின் தேவை நேற்றும் இன்றும் எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் கருத்துரையாற்றினார்கள். அழகர் பிரபாகரன், வாசுகி, வேங்கைமாறன், விஜய், வீரலட்சுமி, கண்ணன், காமாட்சி உள்ளிட்ட கழகத் தோழர்களும், பல்வேறு தோழமை அமைப்பு தோழர்களும் மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளும் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்

கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்

84. மாடர்ன் தியேட்டர் தயாரித்த மாயாவதி திரைப்படம் தோல்வியை தழுவியது, அதை சரி செய்ய கலைஞரின் மந்திரி குமாரி நாடகத்தை திரைப்படமாக்கி கலைஞர் வசனம் எழுத மாடர்ன் தியேட்டர் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்தார். பல தொடக்க விழாவுக்கு நல்ல நாள் தேதி குறிக்க ஒரு சோதிடரை கூட்டி வந்தார்கள். அவரிடம் கலைஞர் தோல்வி அடைந்த மாயாவதி படத்திற்கும் நீங்கள் தானே தொடக்க விழாவுக்கு நல்ல நாள் பார்த்தீர்கள் என்று கேட்க சோதிடர் தலை குனிந்து நின்றார். 85. பராசக்தி படம் குறித்து பேராசிரியர் அன்பழகன் இவ்வாறு கூறினார், ‘இந்த படம் பார்த்ததும் நின்று விடும் அளவில் ஒரு கலைக்காட்சி அல்ல, பார்ப்போர் உள்ளத்தைத் தடவி அதில் படிந்துள்ள வஞ்சக சூழ்ச்சி கருத்துக்களைத் துடைத்து வெளியேற்றி அங்கு குடிகொள்ளும் அறசக்தி என்று குறிப்பிட்டார் ’ 86. பராசக்தி படத்துக்கு போட்டியாக பக்தியை வளர்க்க எஸ்.எஸ்.வாசன் தயாரித்த படம் தான் அவ்வையார். அதில்...

5 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.2,700 கோடி செலவிட்ட மோடி அரசு!

5 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.2,700 கோடி செலவிட்ட மோடி அரசு!

புதுதில்லி, ஜூலை 22 – கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு விளம்பரத்திற்காக மட்டும் ரூ.2 ஆயிரத்து 700 கோடி அளவிற்கான தொகையை செலவிட்ட நிலையில், இந்த தொகை, ஓராண்டில் 8 வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு இணையான ஒன்றாகும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு முக்கிய மான கேள்விகளை அரசிடம் எழுப்பியிருந்த னர். அதில், கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசு விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை எவ்வளவு? என்ற கேள்வியும் முன்வைக்கப் பட்டு இருந்தது. இதற்கு ஒன்றிய அரசு தற்போது பதில ளித்துள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் விளம்பரச் செலவு ரூ. 2 ஆயி ரத்து 700 கோடி என தெரிவிக்கப்பட்டு உள் ளது. கடந்த 2014 – 2015 நிதியாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ.424.84 கோடி, மின்னணு ஊடகங்களுக்கு...

மோடி ஏன் அஞ்சுகிறார்

மோடி ஏன் அஞ்சுகிறார்

மணிப்பூரில் மே 3-ஆம் தேதி தொடங்கிய கலவரம் இப்போது 82 நாட்களாக தொடர்கிறது. தொடர்ந்து அங்கே வன்முறைகள் மிக மோசமான அளவில் நடந்து வருகிறது. மே நான்காம் தேதி இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட செய்தி உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பவம் நடந்த அடுத்த நாளே 27 பழங்குடிகள் மோசமாக பாதிக்கப்பட்டது இப்போது வெளியாகியிருக்கிறது. இதில் 7 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர், 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 5-பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக அடுத்தடுத்த அதிர்ச்சிகரமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சுதந்திர போராட்ட வீரரின் மனைவி 80 வயதுடைய, அவரை வீட்டிற்குள்ளேயே வைத்து உயிருடன் எரித்துக் கொன்றிருக்கிறார்கள் கலவரக்காரர்கள். அண்டை மாநிலமான மிசோராமிலும் இந்த கலவரம் பரவத் தொடங்கியிருக்கிறது. மெய்தீஸ் இன மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுமளவுக்கு வந்துவிட்டது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்...

தலையங்கம் சமூகநீதிக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் கொலிஜியம்

தலையங்கம் சமூகநீதிக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் கொலிஜியம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக என். செந்தில்குமார், ஜி.அருள் முருகன் என்ற இரண்டு வழக்கறிஞர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம் நியமித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை உள்ளடக்கிய கொலிஜியம் எந்த அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை ஒளிவு மறைவின்றி வெளிப்படைத்தன்மையோடு அறிவித்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கதாகும். வழக்கறிஞர் என்.செந்தில்குமார் பட்டியலினப் பிரிவை சார்ந்தவர், விளிம்பு நிலை சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடும், கடந்த காலங்களில் அரசியல் சட்டம் மற்றும் கிரிமினல் சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் திறமையாக வாதாடியதற்கான சான்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அதேபோல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஜி.அருள் முருகன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், இந்த சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்துடனும், சிவில், கிரிமினல் மற்றும் ரிட் மனுக்கள் மீதான வழக்குகளில் அனுபவம் மிக்கவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற கொலிஜியம் செய்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம்...

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டங்கள் சென்னை மாவட்டக் கழகம் சார்பாக இரண்டாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது பின்வருமாறு :- ஜுலை 15-ஆம் தேதியன்று ராயப்பேட்டை இலாயிட்ஸ் காலனி மற்றும் வி.எம்.தெருவிலும், ஜுலை 17-ஆம் தேதியன்று இராயபேட்டை பகுதிகளில் உள்ள கொலைகாரப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பெருமாள் கோயில் வீதியிலும், ஜுலை 18-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் NKT பள்ளி அருகில் மற்றும் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் சாலையிலும், ஜுலை 19-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் இஸ்ஸபா தெரு மற்றும் ஷேக் தாவூத் தெருவிலும் ஜூலை 20-ஆம் தேதியன்று மீசார்பேட்டை மார்கெட் மற்றும் ஜாம் பஜார் சிட்டிபாபு சாலையிலும், ஜுலை 21-ஆம் தேதியன்று திருவல்லிக்கேணி மாணிக்கவாசகம் தெரு மற்றும் தேவராஜ் தெருவிலும் ஜுலை 22-ஆம் தேதியன்று ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி அருகில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள மக்கிஸ் கார்டனிலும் நடைபெற்றது. நாத்திகன் – உமாபதி குழுவின் அரசியல்...

பட்டியல் தயாரிப்பு ; வழிகாட்டுகிறது திண்டுக்கல் மாவட்டம்

பட்டியல் தயாரிப்பு ; வழிகாட்டுகிறது திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 9.7.2023 அன்றுகாலை 10 மணியளவில் பழனியில் உள்ள பூம்புகார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார், மாவட்ட அமைப்பாளர் மருத மூர்த்தி முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர்.துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் செயற்குழு உறுப்பினர் இரா.உமாபதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் “வைக்கம் போர் இன்னும் முடியவில்லை” என்கிற தலைப்பில் சேகரிக்கப்பட்ட ஜாதித் தீண்டாமை குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலை தலைமைக் குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர்.பட்டியல் தயாரிப்புக்கு தனிப் படிவங்களை அச்சிட்டு நூறு கிராமங்களுக்கு மேள் நேரில் சென்று தீண்டாமைக் கொடுமைகளை திரட்டியுள்ளனர். 1. எது திராவிடம்? எது சனாதனம்? என்னும் தலைப்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 50 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது. 2 ஐம்பது புரட்சிபெரியார் முழக்கம் இதழுக்கு ஒரு மாதத்திற்குள் சந்தா சேர்த்து...

‘ராஜாஜி’க்கு ‘மூக்காஜீ’ பதிலடி

‘ராஜாஜி’க்கு ‘மூக்காஜீ’ பதிலடி

74. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பார்ப்பனர் ஹெச்.வி.ஹண்டே இது மூன்றாம் தர ஆட்சி என்று திமுகவை சாடிய போது முதல்வராக இருந்த கலைஞர் எழுந்து அதற்கு பதிலடி தந்தார். “இது மூன்றாம் தர ஆட்சி அல்ல, நான்காம் தர ஆட்சி, சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக ஆளப்படும் ஆட்சி” என்று பதிலடி தந்து சட்டப்பேரவை குறிப்பிலும் அதை பதிவேற்ற வைத்தார். 75. இட ஒதுக்கீடு அமல்படுத்துவதால் உயர் சாதியினர் பாதிக்கப்படுகிறார்கள் என்று எதிர்ப்பு எழும்பிய போது கலைஞர் அதற்கு ஒரு உதாரணத்துடன் பதில் அளித்தார். சலவை செய்து அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்ட துணிகளுக்கு மீண்டும் சலவை செய்ய தேவையில்லை, அழுக்காகி கிடைக்கும் துணிகளுக்குத் தான் சலவை செய்ய வேண்டும் என்று பதில் அளித்தார். 76. சாலையில் தார் ஊற்றி கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளிகளின் அவலம் கலைஞரின் கண்ணில் தான் பட்டது. நேரில் கண்ட அவர் காலில் சாக்கு துணியை கட்டிக்...

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவை எனும் சனாதனத்தை பனகல் அரசர் எப்படி நிறுத்தினார்?

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவை எனும் சனாதனத்தை பனகல் அரசர் எப்படி நிறுத்தினார்?

1925-இல் நீதிக்கட்சியில் இருந்த கிஆபெ விஸ்வநாதன் திருச்சி நகர நீதிக்கட்சி தலைவர் மகனை உடன் அழைத்துச் சென்று முதன்முதலில் பனகல் அரசரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் கூட நீதிக்கட்சியின் தலைவர் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததை சுட்டிக்காட்டினார். உடனே பனகல் அரசர் மருத்துவக் கல்லூரி அதிகாரியை தனது அறைக்கு அழைத்து விவரம் கேட்கிறார். அந்த மாணவருக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை, அதனால் தான் இடம் கிடைக்கவில்லை என்று அதிகாரி விளக்கம் தருகிறார். அப்படி ஏதும் சட்டம் இருக்கிறதா என்று பனகல் அரசர் கேட்க, சட்டம் ஏதுமில்லை அது மரபாகத்தான் பின்பற்றப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறுகிறார். அத்தகைய மரபுகள் தேவையில்லை, அதை பின்பற்ற வேண்டாம் என்று பனகல் அரசர் கூற மாணவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த தகவல் முத்தமிழ்காவலர் கி.ஆ.பெ விஸ்வநாதன் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வரலாற்று நூலை எழுதியவர், பிரபல எழுத்தாளர் முகம்...

வாலாஜா வல்லவனின் உரை; கடந்த இதழின் தொடர்ச்சி! தேவதாசி முறை –  ‘மனுநீதி’ சனாதனங்களை எதிர்த்தது திராவிடம்

வாலாஜா வல்லவனின் உரை; கடந்த இதழின் தொடர்ச்சி! தேவதாசி முறை – ‘மனுநீதி’ சனாதனங்களை எதிர்த்தது திராவிடம்

நீங்கள் நான்கு வருணங்களாக பிரித்து வைத்தீர்கள், ஊருக்கு வெளியே தான் குடியிருக்க வேண்டும், நல்ல நகை போடக்கூடாது, சூத்திரர்கள், மேல் ஜாதிக்காரர்கள் பயன்படுத்திய பழைய ஆடைகளைத் தான் உடுத்த வேண்டும், ஈய பாத்திரம் தான் பயன்படுத்த வேண்டும், பொன் வெள்ளி நகைகளை அணியக்கூடாது என்று துரத்திய மக்களை ஊருக்குள் அழைத்து சமத்துவபுரம் கட்டிக் கொடுத்தவர் தான் கலைஞர், இதுதான் திராவிடம். மேற்கூறியவை சனாதனம், அதற்கு எதிரானது தான் திராவிடம். ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து நீங்கள் தேவதாசி முறையை கொண்டு வந்தீர்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மசோதா காரணமாக 1929 இல் தேவதாசி முறையை ஒழித்துக் கட்டியது எங்கள் திராவிடம். சனாதனத்திற்கு நேர் எதிரானது திராவிடம், ‘எதைக் கொடுத்தாலும் கொடு ஆனால் சூத்திரனுக்கு கல்வியை மட்டும் கொடுக்காதே என்கிறது மனுநீதி’, அதற்கு நேர் எதிராக சென்னை மாகாணத்தில் 1922 முதல் 1926 க்குள் பனகல் அரசர் ஆட்சியில் 12250 தொடக்கப் பள்ளிகள்...

அமலாக்கத்துறையா? ஆளும்கட்சி எடுபிடியா?

அமலாக்கத்துறையா? ஆளும்கட்சி எடுபிடியா?

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டித்தது சட்ட விரோதம், வரும் ஜூலை 31ஆம் தேதியோடு அவரை பணியில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்க மிக முக்கிய கேடயமாக அமலாக்கத்துறையை பயன்படுத்தி வந்த பாஜகவிற்கு இத்தீர்ப்பு பேரதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 1984-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய்த்துறை அதிகாரி சஞ்சய் குமார் மிஸ்ரா. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான இவரை, 2018ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை இயக்குநராக ஒன்றிய பாஜக அரசு நியமித்தது. 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இவருடைய பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், ஒன்றிய அரசால் மேலும் ஒரு ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. மீண்டும் 2021-ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2022-ஆம் ஆண்டில் ஒருமுறையும் என தொடர்ந்து பணி நீட்டிப்பு கொடுத்துக்கொண்டே இருந்தது ஒன்றிய அரசு. 2020-ஆம் ஆண்டு மே மாதத்திலேயே 60 வயதை நிறைவு செய்த சஞ்சய்...

கழகக் கூட்டங்கள் முரசொலி ஏடு பாராட்டுகிறது!

கழகக் கூட்டங்கள் முரசொலி ஏடு பாராட்டுகிறது!

சமூகநீதிப் போராட்டங்கள் பெற்றுத்தந்த உரிமைகள், நமது தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்றியுள்ளது. திராவிடக் கொள்கைகளே நமது மாற்றங்கள், கட்டமைப்புகள் அனைத்துக்கும் காரணமாக உள்ளன. இந்த நிலையில் தான் வல்லூருகள் போல நம்மைச் சூழ்ந்துகொள்ள துடிக்கின்றன வகுப்புவாத அரசியல் சக்திகள். சனாதனத்தை விரட்டி சமூகநீதி காத்த திராவிட நிலத்தில் மீண்டும் சனாதனத்தை நிறுவ விரும்புகின்றனர். முயற்சி செய்கின்றனர். அதற்காக பல மட்டங்களில் அரசியல் செய்து வருகின்றனர். கிடைக்கும் மேடைகளில் சனாதன கருத்துக்கு ஆதரவாக பேசி, மக்களை திசை திருப்புகின்றனர். இந்த வேளையில் திராவிடர் விடுதலைக் கழகம் எது திராவிடம்? எது சனாதனம்? என நடத்தும் தெருமுனைக் கூட்டம் நடத்தி வருகிறது. சென்னையில் 200 இடங்களில் நடத்த திட்டமிட்டு, அதற்கான பிரச்சார வாகனத்தையும் வடிவமைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளன. தேர்தல் காலம் நெருங்கி வருவதால் முன் எப்போதை விடவும் வகுப்புவாத சக்திகளும் சாதிய சக்திகளும் தமிழ்நாட்டைச் சூழ்ந்து...

தெருமுனைக் கூட்டங்கள் வெற்றிநடை; மக்கள் பேராதரவு

தெருமுனைக் கூட்டங்கள் வெற்றிநடை; மக்கள் பேராதரவு

சென்னை : எது திராவிடம்? எது சனாதனம்? முதல் தெருமுனைக் கூட்டம், ஜுலை 10, மாலை 5 மணிக்கு மடிப்பாக்கத்தில் நடைப்பெற்றது. பாடகர் ஜெய்பீம் அறிவுமானன் பகுத்தறிவு பாடல்களை பாடினார், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, எட்வின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இரண்டாவது கூட்டம் கீழ்க்கட்டளை பெரிய தெருவில் மாலை 7 மணிக்கு தொடங்கி நடைப்பெற்றது. பாடகர் ஜெய்பீம் அறிவுமானன் பகுத்தறிவு பாடல்களை பாடினார், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, சேத்துப்பட்டு இராசேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மூன்றாவது கூட்டம் 11.07.2023 அன்று மாலை 5 மணிக்கு நங்கநல்லூரில் எட்வின் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இரா.உமாபதி, இரண்யா ஆகியோர் பறை இசைக்க கூட்டம் தொடங்கியது. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, எட்வின் பிரபாகரன், அன்னூர் விஷ்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சி முடிந்த...

ஆனைமலையில் – கழகத் தலைவர் நடத்தி வைத்த திருமணம்

ஆனைமலையில் – கழகத் தலைவர் நடத்தி வைத்த திருமணம்

பொன்னமராவதி திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஆறுமுகம் – அமுதா ஆகியோரது மகன் அ.ஆ.பாலச்சந்தர் (எ) இனியவன், ஆனைமலை வெல்ஃபேர் கட்சி மாநில துணைத் தலைவர் மணிமாறன் – திலகவதி ஆகியோரது மகள் ம.தி.புனிதா ஆகியோரது “ வாழ்க்கை இணை ஏற்பு விழா” ஆனைமலையில் 25.06.2023 ஞாயிறு அன்று நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. ம.தி. பிரபு அம்பேத்கர் வரவேற்புரை ஆற்றினார். இரா அதியமான், நிறுவனத் தலைவர் – ஆதித் தமிழர் பேரவை. கே.எஸ். அப்துல் ரஹ்மான், மாநிலத் தலைவர் – வெல்ஃபேர் கட்சி. பேராசிரியர் சுந்தரவள்ளி, த.மு.எ.க.ச. சி.விசயராகவன், பெரியாரியல் சிந்தனையாளர். காசு.நாகராசன், அமைப்பு செயலாளர் – தி.இ.த.பே. இரா.கருப்புச்சாமி, கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம். முகமது கவுஸ், மாநில செயலாளர் – வெல்ஃபேர் கட்சி. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழகத் தோழர் ம.ஏ. இளங்கோவன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 06072023 இதழ்

பொள்ளாச்சியில் கழக மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

பொள்ளாச்சியில் கழக மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநில மாநாட்டின் விளக்கப் பொதுக்கூட்டம், திருவள்ளுவர் திடலில் மடத்துக்குளம் மோகன் நினைவு மேடையில், 24.06.2023 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக கோவன் தலைமையிலான ம.க.இ.க மய்யம் தோழர்களின் புரட்சிகரப் பாடல்களுடனும், கண்ணையா திவிக-விற்கு என்று அவரே எழுதிய பாடலுடன் நிகழ்வுகள் தொடங்கியது. சபரிகிரி வரவேற்புரையாற்ற, பொள்ளாச்சி நகரமன்ற தலைவர். சியாமளா நவநீதகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து மாரிமுத்து மக்கள் விடுதலை முன்னணி, தி.செ.கோபால் ஆதித்தமிழர்பேரவை, வானுகன் தமிழ்ப்புலிகள்கட்சி, வழ.சேதுபதி தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம், ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். அதைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுந்தரவள்ளி – த.மு.எ.க.ச, இராஜீவ் காந்தி தலைவர் – திமுக மாணவரணி, காசு. நாகராசன் – அமைப்புச் செயலாளர் – தி.இ.த.பே., இரா.நவநீதகிருஷ்ணன் – நகரசெயலாளர் – திமுக ஆகியோர்...

சாதியப் பாகுபாடு அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறது பா.இரஞ்சித்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

சாதியப் பாகுபாடு அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறது பா.இரஞ்சித்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ’மாமன்னன்’ திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூகநீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன? அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும் பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று ‘மாமன்னன்’. உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திமுகவில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒண்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை...