Author: News DVK

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், கோவை மாநகர கழகத்தின் மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பு தபெதிக அமைத்த அம்பேத்கர் படம் முன்பு காலை 9.30 மணிக்கு கோவை தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் நிலவும் ஜாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை உறுதியாகப் போராடுவது என்று உறுதி ஏற்றனர். பன்னீர்செல்வம், வெங்கட், நிர்மல் குமார் உரையாற்றினர் தோழர்கள் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், நவீன், தரணி, சத்தியமூர்த்தி, மேட்டூர் பாலு, ஆதரவாளர்கள் சங்கனூர் கார்த்தி, பரத், இலக்கியா கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினர். திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவரது நினைவைப் போற்றும் விதமாக மாநகர அமைப்பாளர் இரா. சரசுவதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கழகப் பொருளாளர் சு.துரைசாமி, வீ.சிவகாமி (தலைவர்,...

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

இராயப்பேட்டையை திராவிட கோட்டையாக்கிய செயல்வீரர் பத்ரி நாராயணன்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி… எண் 61, வெங்கடாசலம் தெரு, ராயப்பேட்டை என்ற முகவரி கொண்ட ஒற்றைக் குடித்தன வாடகை வீடு, ஒரு உடைந்த நாற்காலி, ஓலைப்பாய், மர பீரோ… பத்ரி நாராயணனுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் அதற்குமேல் இல்லை. ஆனால், அவருடைய கண்ணசைவுக்கே கட்டுப்படும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை 1990-இல் உருவாக்கி வைத்திருந்தார் அவர். 1980-களில் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, பத்தாண்டுகளிலேயே பலமான கோட்டையாக ராயப்பேட்டையை மாற்றிய செயல் வீரர். ராஜீவ் காந்தி படுகொலையில் கைதாகி, 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த எழுவரை, விடுவிக்கக்கோரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டது இன்றைய...

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டங்கள்! பணிப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாதக பா.ஜ.க.!- அருண்கோமதி

தொழிலாளர்கள் மீது இதுவரை அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நிகழ்த்தி வந்த பல்வேறு வகையான உழைப்பு சுரண்டலை சட்டரீதியாக செய்வதற்கான ஒரு ஏற்பாடு புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பாகும். விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாக இந்நாட்டின் உழைக்கும் மக்களும் போராடிப் பெற்ற 29 சட்டங்களையும் நீக்கிவிட்டு அவற்றை நான்கு சட்ட தொகுப்புகள் ஆக சுருக்கி புதிய தொழிலாளர் சட்டங்களை நிறுவியுள்ளது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இந்த சட்டத் தொகுப்பில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்வது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்/ள்களின் கடமையாகும். இந்தச் சட்ட தொகுப்பில் உள்ள சிக்கல்களை சுருக்கமாகப் பார்ப்போம். புதிய சட்டத்தின் சிக்கல்கள்! ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதே தற்போதைய வேலை நேரமாக உள்ளது. புதிய சட்ட தொகுப்பு இதில் ஒரு முக்கிய திருத்தத்தை செய்கிறது. வாரத்திற்கு ஆறு நாள் வேலை என்பது கட்டாயம் அல்ல. மாறாக...

காதலர்களின் காவல்கோட்டை காவலாண்டியூர்!

காதலர்களின் காவல்கோட்டை காவலாண்டியூர்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வலுவான கோட்டையாக சேலம் மாவட்டம் காவலாண்டியூர் திகழ்கிறது. பாலமலையை ஒட்டியுள்ள அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள் குடும்பம் குடும்பமாக கழகப் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடெங்கும் ஜாதி மறுப்பு காதல் திருமணம் புரிவோருக்கு அடைக்கலம் தந்து, இணையேற்பையும் நடத்தி வைக்கும் சமத்துவ மண். காவலாண்டியூரைச் சேர்ந்த தலைமைக் குழு உறுப்பினரான காவை ஈஸ்வரன் இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்திவைத்துள்ளார். இதனால் ஜாதிச் சங்கங்களின் அச்சுறுத்தல்கள், கொடுந்தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளார். ஆனால் ஒருபோதும் தனது இலட்சியத்தில் இருந்து பின் வாங்கியதில்லை. இந்த வரலாறுகள் எல்லாம் நிகழ்காலத்திலேயே ஊடக வெளிச்சம் பெற்று சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. DW சேனலில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலாண்டியூரின் செயல்பாடுகள் குறித்து மிக நேர்த்தியான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. காவை ஈஸ்வரன், ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்த இணையர்களின் நேர்காணல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. சமூக ஊடகங்களில் சிறு சிறு துணுக்குகளாக இலட்சக்கணக்கோரிடம் அந்த...

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்!

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்!

மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்! ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புலனாய்வு செய்து ‘கேரவன்’ பத்திரிக்கை விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ஆர்.எஸ்.எஸின் சட்டப்பிரிவான ஏ.பி.ஏ.பி. அமைப்பு நீதித்துறையில் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சியான தகவல்களை அதன் அதிகாரபூர்வ பதிவேடுகளில் இருந்து அம்பலப்படுத்தி இருந்தது. நீதிபதிகளாக, வழக்கறிஞர்களாக, சட்டத்துறை அதிகாரிகளாக பல்வேறு மட்டங்களில் ஊடுருவி தங்களின் இந்துத்துவா கொள்கைக்காக நீதித்துறையை பயன்படுத்தி வருகிறார்கள். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கும் தீர்ப்புகளும்,சட்டத்துக்கு எதிரான எல்லை மீறிய செயல்பாடுகளும் இதற்கு சான்றாக நிற்கின்றன. இதற்கான வெகுமதி எதிர்காலத்தில் இவர்களுக்கு காத்திருக்கிறது. அதே நேரத்தில் மதவாத சக்திகளின் மிரட்டலுக்கு பணியாமல் நேர்மையாக மனித உரிமைக்காக குரல் கொடுத்த சென்னையைச் சேர்ந்த மற்றொரு நீதிபதியை பற்றியும் குறிப்பிட வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் பழிவாங்கலுக்கு உள்ளான. இந்த நீதிபதிக்கு இப்போது ஐ.நா.மனித உரிமை ஆணையம் மிக உயர்ந்த பதவியை வெகுமதியாக வழங்கி கவுரவித்திருக்கிறது. அவரது பெயர் “சீனிவாச முரளிதர்.” பாலஸ்தீன...

மதவெறிப் பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?

மதவெறிப் பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயல் குறித்து விவாதிக்க வேண்டுமென்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அதுகுறித்து விவாதிக்க முன்வரவில்லை. சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து விவாதமில்லை, மணிப்பூர் குறித்து விவாதமில்லை, இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து விவாதம் இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த எந்த விவகாரம் குறித்தும் விவாதம் இல்லை. ஆனால் வந்தே மாதரம் பாடல் குறித்து 10 மணி நேர விவாதம் நடத்தியிருக்கிறது பா.ஜ.க. அரசு. இப்பாடல் பாடப்பெற்று 150 ஆண்டுகள் ஆனதையொட்டி, நாடு தழுவிய அளவில் நவம்பர் 2025 தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட சென்ற அக்டோபரில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து, ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் ஓராண்டுத் தொடர் நிகழ்வுகளைக் கொண்டாட விரிவான செயல் திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் நாடாளுமன்றத்தில்...

மதவாத கும்பல்களின் கலவர முயற்சிகளை முறியடிப்போம்!

மதவாத கும்பல்களின் கலவர முயற்சிகளை முறியடிப்போம்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை! மதுரை திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்ய முயற்சிக்கும் பாஜக இந்து முன்னணி அமைப்புகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்! தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து வன்முறைக் காடாக்கி அதில் அரசியல் லாபம் அடைய முயற்சிக்கும் மத தீவிரவாத கூட்டத்தை அனுமதியோம்! இந்துத்துவ அமைப்புகளின் கலவரம் உருவாக்கும் சூழ்ச்சியை தக்க சமயத்தில் முறியடித்து அமைதியை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம்! மதவாத சக்திகளுக்கு எதிரான முதல்வரின் நடவடிக்கைகளுக்கு என்றும் துணை நிற்போம்! “மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு பல நூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக முருகன் கோயில் கருவறைக்கு நேர் மேலே இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் இருக்கும் தீபத்தூணில் ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. மேலும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தலைமை அர்ச்சகர் ராஜா...

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

நீதிபதியே மதக்கலவரத்தைத் தூண்டலாமா? ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்! சென்னை, திருப்பூர், ஈரோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஒட்டி வழக்கமான உச்சி பிள்ளையார் கோயில் பகுதிக்கு மாற்றாக, சிக்கந்தர் பாஷா தர்கா பகுதியில் தீபம் ஏற்ற வேண்டுமென்று, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட இந்த நீதிபதியின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, உறுதியான எதிர்வினையாற்றி, தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது திமுக அரசு. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருள வேண்டும் என தீர்ப்பளிப்பது, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை உமிழ்வது என தொடர்ந்து மதவாத நஞ்சை விதைக்கும் இந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித்துறையில் தொடர இடம் அளிக்கக் கூடாது என நாடு முழுக்க கண்டனங்கள் வலுத்துள்ளன. இவரை நீக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 107 பேர் கையெழுத்திட்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். நீதிபதி என்று மக்களவையிலேயே அழுத்தம் திருத்தமாகப் பதிவு...

மக்கள் திரளில் நடைபெற்ற தாரமங்கலம் பொதுக்கூட்டம்.!

மக்கள் திரளில் நடைபெற்ற தாரமங்கலம் பொதுக்கூட்டம்.!

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில்.. “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” பொதுக்கூட்டம் டிசம்பர் 14,.2025 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு தாரமங்கலம் அண்ணாதிடல் (சின்னப்பம்பட்டி சாலை) பகுதியில் மக்கள் பேராதரவுடன் நடைபெற்றது. சி.தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) தலைமை வகித்தார். (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்),டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) , குடந்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தோழர் சிற்பி ராசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்வு பொதுமக்கள், பெண்கள் என அனைவரையும் கவனம் ஈர்க்கச் செய்து மிகுந்த வரவேற்பை பெற்றது. பொதுக்கூட்டத்தில் கே.ஆர்.தோப்பூர் கண்ணன், (சேலம் மாநகரச்...

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்!   தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்! தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய நாகரீக உலகிலும் பல்வேறு வடிவங்களில் ஜாதியம் தலைதூக்கி நிற்கிறது. ஜாதிக் கயிறுகள், ஜாதிய குருபூஜைகள், ஜாதிய திருமண தகவல் மையங்கள், சமூக வலைதளங்களில் ஜாதி அடையாளத்தை வெட்கமின்றி ஒட்டிக்கொள்ளுதல் என ஜாதியை வலிமைப்படுத்தும் புதுவிதமான முயற்சிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. ஜாதிச்சங்கங்கள் இந்த வேலைகளை இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய ஜாதி வெறிச்செயல்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டிப்பதுடன், ஜாதிய நடவடிக்கைகளுக்கான எதிரான அரசின் உறுதியான சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, திராவிடர் விடுதலைக் கழகம் இந்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. தமிழ்நாடெங்கும் போராட்டத்திற்கு கழகத் தோழர்கள் தயாராகி வருவதுடன், “மனிதம் நம் அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பிலே போராட்ட நோக்கத்தை விளக்கி, பரப்புரைப் பயணங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த...

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்! கொட்டும் மழையிலும் கொள்கைப் பரப்புரை!

சேலம்: மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘மனிதம் நமது அடையாளம் -ஜாதி நமக்கு அவமானம்’ என்ற முழக்கங்களோடு ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சமத்துவப் பரப்புரை தெருமுனைக் கூட்டம் 29.11.2025 காலை 11.00 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. சமுத்திரமம், மூலப்பாதை, கொங்கணாபுரம் பேருந்து நிலையம், எட்டிக்குட்டைமேடு ஆகிய நான்கு இடங்களில் பரப்புரை நடைபெற்றது. கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), கவியரசு(தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர்), கொங்கணாபுரம் கோகுல் ஆகியோர் தலைமை வகித்தனர். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர்), முன்னிலை வகித்தனர். பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். இளம்பிள்ளை நகரச் செயலாளர் மோகன்ராஜ், குமரசேன், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். தங்கதுரை (சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), கோகுல் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. எடிசன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்....

கழக ஏட்டுக்கு தோழர் இரண்யா மாதந்தோறும் ரூ.2000 நன்கொடை

கழக ஏட்டுக்கு தோழர் இரண்யா மாதந்தோறும் ரூ.2000 நன்கொடை

கழகத் தோழர் இரண்யா சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக மாதம் ரூ.2000 கொடுப்பதாக தெரிவித்தார். டிசம்பர் மாத வளர்ச்சி நிதியாக ரூ.2000 தந்துள்ளார். சென்னை மாவட்டக் கழக தோழர் அன்பரசு முதல் கட்ட முழக்க சந்தாவாக ரூ.1000 மாவட்டச் செயலாளர் உமாபதியிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். -ஆசிரியர் பெரியார் முழக்கம் இதழ் 04122025

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

இதழ் தாங்கி வரும் கருத்துக்கள் மிகவும் சிறப்பானவை. வாசிப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. இந்த அளவுக்கு யாரும் இவ்வளவு விவரமாக யாரும் வாரப் பத்திரிகையில் எழுதவில்லை. எந்தவிதமான சினிமா விளம்பரங்கள் இல்லாமல், புரட்சிப் பெரியார் செய்திகள் மட்டுமே வெளிவருகிறது. தொடரட்டும் தங்கள் பணி வாழ்க! எஸ்.இராமுபிள்ளை நூலகம், சமூகநலம் வானொலியாளர், பெரம்பலூர். பெரியார் முழக்கம் இதழ் 04122025

நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

நிமிர்வோம் வெளியீடுகளுக்கு சிறப்பான வரவேற்பு!

தி.மு.க.- 75 அறிவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் 8 முதல் 16 வரை வள்ளுவர் கோட்டத்தில், சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கேற்க, ஊடவியலாளர் ர.பிரகாசு, தோழர் மகிழவன் முயற்சியில் அரங்கு ஒதுக்கப்பட்டது. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைப்பில், 9 நாட்கள் நிமிர்வோம் பதிப்பக அரங்கு செயல்பட்டது. கழக வெளியீடுகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் கழக வெளியீடுகளை தேடி வந்து வாங்கிச் சென்றனர். மொத்தம் ரூ.82,000-க்கு கழக நூல்கள் விற்பனையானது. இளைஞர் அணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு.கோபிநாத், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, காவை அஜித், முழக்கம் செய்தியாளர் பிரசாந்த், சுகந்தன், வீரா, யாழினி, அசோக், ஓவியா ஆகிய தோழர்கள் அரங்க வடிவமைப்பு பணிகளை முனைப்புடன் செய்தனர். தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி,...

பத்ரி நாராயணன் – இயக்கமாய் ஒரு தனிமனிதன்!

பத்ரி நாராயணன் – இயக்கமாய் ஒரு தனிமனிதன்!

(முரசொலி பாசறைப் பக்கத்தில் ஊடகவியலாளர் பிரகாசு எழுதி வரும் பெரியார் மண் தொடரில், ராயப்பேட்டையை இலட்சியக் கோட்டையாக்கிய கழக செயல் வீரர் மறைந்த பத்ரி நாராயணனின் குறித்து எழுதப்பட்ட கட்டுரை இது) ஒரு தனிமனிதன் வீழ்த்தப்பட்டால் அவர்களின் உடல் இயக்கம் மட்டும்தான் நின்று போகுமே தவிர, அவர்களின் சித்தாந்தம் வீழ்ந்துவிடாது. சிந்தனையாளர்களுக்கு அவர்களின் இறப்பு என்பது ஒருகாலும் மறைவாகாது’ என்பதற்கு திராவிட இயக்கத்தில் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. அதில் தலைநகர் சென்னையின் ஓர் உதாரணம் `பத்ரி நாராயணன்’. 2004-ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருந்தது. `மதமாற்றத் தடைச்சட்டம்’, `ஆடு – கோழி பலியிட தடை’ என ஆர்.எஸ்.எஸ். அரசாகவே மாறியிருந்த அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க ஓரணியில் திரண்டிருந்தன தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகள். சென்னையில் ஏப்ரல் 26-ஆம் தேதியில் இருந்து, தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது பெரியார் திராவிடர் கழகம். ஏப்ரல் 30-ஆம் நாள்...

தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி

தமிழர் இயக்கத்தை முன்னெடுத்த பெரியார்! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (6)- கொளத்தூர் மணி

‘ஈரோட்டுப் பாதை சரியா?’ நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களுக்கான பதிலின் தொடர்ச்சி. தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியாக 22.11.1925 குடிஅரசு இதழில் ‘தமிழ் தினசரி பத்திரிக்கை’ என்ற ஒரு தலையங்கத்தை பெரியார் எழுதியுள்ளார். அதில், ‘தென்னிந்தியாவுக்கு, தென் இந்தியர்களுக்கு, ஒரு நம்பிக்கையும் யோக்கியமும் உள்ள தமிழ் தினசரி பத்திரிக்கை வேண்டுமா? வேண்டாமா? என்று யோசிக்க வேண்டும். குறைந்தது ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். ஒரு வருடத்தில் பத்தாயிரம் சந்தாக்கள் சேர வேண்டும். 50,000 இல்லாமல் ஆரம்பிப்பது நிலை பெற தக்கதாகாது. அதற்கு பங்கு ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் 20 ஆயிரம் பங்கு கொண்ட ஒரு லட்ச ரூபாய் மூலதனம் வேண்டும். 50 ஆயிரம் ரூபாய் வசூலித்த பிறகுதான் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் ஜில்லாக்களாகிய 12 ஜில்லாக்களுக்கும் ஜில்லா ஒன்றுக்கு 5000 ரூபாய் முன்பணம் வசூலிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டு, “பத்திரிகையின் கொள்கை பிராமணரல்லாதாருடையவும்...

ஆர்.எஸ்.எஸ்க்காக கோயில் இடிப்பு!

ஆர்.எஸ்.எஸ்க்காக கோயில் இடிப்பு!

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் கட்டியுள்ள புதிய தலைமையகத்தின் வாகன நிறுத்துமிட வசதிக்காக, அப்பகுதியில் இருந்த பழமையான கோயில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி, மாநகராட்சியின் துணைகொண்டு இந்த ‘கர’சேவையை நடத்தியிருக்கிறது ஆர்எஸ்எஸ். இந்துக்கள், ஆலயங்கள் என்றெல்லாம் பாஜகவும், சங் பரிவார் கும்பலும் பேசுவது வெறும் அரசியலுக்காகத்தானா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் நிர்வாக நடைமுறையைப் பின்பற்றித்தான் கோயில் இடிக்கப்பட்டுள்ளது இதில் எந்த விதிமீறலும் இல்லை என விளக்கம் தந்திருக்கிறது பாஜக தரப்பு. நடைபாதை கோயில்களை அகற்ற வேண்டுமென்று நீதிமன்றங்கள் எத்தனையோ முறை கூறிவிட்டன. விதிமுறைகளைப் பின்பற்றித்தான் அந்த கோயில்களையும் அதிகாரிகள் இடிக்க முயன்றனர். ஆனால் இந்துத்துவாதிகள் விட்டார்களா? ஜெய்பூரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இப்போது தங்கள் தேவைக்காக கோயிலை இடித்திருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு பக்தியைப் பரப்பும் இயக்கமல்ல, பாகுபாட்டை விதைக்கும் நஞ்சு. அதற்கு...

கொழுக்கும் கோச்சிங் செண்டர்கள்!

கொழுக்கும் கோச்சிங் செண்டர்கள்!

`நீட்’ என்பது சமமற்ற வாய்ப்பு. `நீட்’ என்பது அநீதி. ஏழைகள், கிராமப்புற மக்களுக்கு எதிரானது. சமச்சீரான கல்விமுறையை சீரழித்துவிடும். எனவே, நீட் ரத்து செய்யப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு போராடி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத ஒன்றிய அரசு, இப்போது தகுதித் தேர்வுகளை நடத்துவதில் சீர்திருத்தம் செய்யலாமா எனத் தேர்வு முகமை ஆலோசித்து வருவதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வெளியான செய்தியைப் பகிர்ந்து தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன். “நீட் தேர்வு பள்ளிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து, கோச்சிங் நிறுவனங்களின் வணிக வேட்டைக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தது தமிழ்நாடு! dummy schools அதிகரித்துவிட்டன; நாள்தோறும் 6 மணி நேரம் கோச்சிங் மையங்களில் மாணவர்கள் வதைபடுகிறார்கள் என்ற அவலம் டெல்லியை, இப்போதுதான் உறுத்தத் தொடங்கி இருக்கிறது. ப்ளஸ்-ஒன் படிக்கும்போதே நீட்டை நடத்திவிடலாமா? கோச்சிங் மையத்தில் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என...

பெண்ணுரிமைக்கான உரையாடல்கள் பெருகட்டும்!

பெண்ணுரிமைக்கான உரையாடல்கள் பெருகட்டும்!

பழம்பெரும் பாலிவுட் நடிகையும், சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான ஜெயா பச்சன் (அமிதாப் பச்சனின் மனைவி) சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “தனது பேத்தி நவ்யா நவேலி நந்தாவுக்கு விரைவில் 28 வயதாகப்போகிறது. அவர் திருமண வாழ்வில் ஈடுபடுவதில் எனக்கு விருப்பமில்லை. திருமணம் என்பது காலாவதியான நடைமுறை. இன்றைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு என்னுடைய வயதும் இல்லை. இப்போதைய குழந்தைகள் நம்மை விட மிகவும் புத்திசாலிகள். திருமணத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் மட்டுமே ஒரு உறவைத் தீர்மானிக்காது. வாழ்க்கையைச் சிக்கலாக்கி கொள்ளாமல், அப்படியே அனுபவித்துக் கொண்டாடுங்கள்” என்று பேசியிருக்கிறார். இது ஏதோ தனி நபரின் கருத்து என்ற அளவில் சுருக்கிப் பார்க்க வேண்டியதல்ல. பெண்களின் உளவியல் போக்கும் ஏற்படும் பண்பு மாற்றமாக இப்பேச்சை கருத வேண்டியுள்ளது. வளர்ந்த நாடுகளில் இந்த கருத்தாக்கம் பொதுச்சமூகமாக உளவியலாகவே மாறியிருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக, அமெரிக்காவில் 2030-ஆம் ஆண்டுக்குள்...

தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

தமிழீழ போர்க்களத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலி!

ஆஸ்திரேலியா: தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டு மாவீரர் நாள் தமிழ் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நவம்பர் 27 மாலை நடைபெற்றது இத்தாலி செயின்ட் ஜோசப் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார் அவர் தனது உரையில்”போர் தான் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போராட்ட களம் அரசியல் நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறது என்றும் விடுதலைப் புலிகளின் மகத்தான தியாகங்கள் குறித்தும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர் அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஐநாவின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாட்டில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை வலியுறுத்தி ஸ்ரீதர் ராஜ் உரையாற்றினார். சதீஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் பாடல்களை பாடியதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கொளத்தூரில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக 27.11.2025 வியாழக்கிழமை...

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

அரசிலமைப்புச் சட்டத்தில் 25, 26, 13, 19, 368, 372(1) ஆகிய பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கும் விதமாக உள்ளது என்றும், அவற்றை நீக்க வேண்டுமென்றும் 03.11.1957 அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக ஸ்பெசல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய பெரியார், கோரிக்கைக்கு செவிசாய்க்க அரசுக்கு 30 நாட்கள் கெடு விதித்தார். ஆனால் கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய அரசாங்கமோ, சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்று வரையறுத்து மசோதாவை இயற்றி நிறைவேற்றியது. 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமியற்றி அச்சுறுத்திய பின்பும், முதல் நாளே தந்தை பெரியாரை திருச்சியில் வைத்து கைது செய்த பின்பும், 26.11.1957-இல் நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நான்காயிரம் பேர் சிறைபுகுந்து, சிறைக்குள்ளேயும் விடுதலை ஆன ஒரு மாதத்தில் 18 பேர் உயிர் நீத்த வீரஞ்செறிந்த ஜாதி ஒழிப்புப் போராட்டம் இந்தியக் கண்டம் கண்டிராதது....

57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

57 நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை மாவட்டக் கழகம்!

மயிலாப்பூரில் கழகத் தலைமை அலுவலகத்தில் 18.11.2025 அன்று சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமையில் சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தோழர் இரண்யா கடவுள் மறுப்பு உறுதிமொழியை வாசித்தார். கடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் இருந்து தற்போது வரை 57 நிகழ்ச்சிகளை சென்னை மாவட்டக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்றிருக்கிறது. கடந்த ஜூன் முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளின் பட்டியலை தோழர் உமாபதி வாசித்தார். திமுக இளைஞர் அணி நடத்திய அறிவுத் திருவிழாவில் கழக வெளியீடுகள் ரூ. 81980 விற்பனையானது. அதை முழுபொறுப்பேற்று நடத்திய தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் மற்றும் அதற்கு மூலக் காரணமாக இருந்த தோழர் பிரகாசு இருவரையும் பாராட்டி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் சால்வை அணிவித்தார். முற்போக்கு புத்தகக் காட்சியில் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் இடம்பெற்று, நூல்கள் விற்க துணைநின்ற மாவட்டக் கழகத்தோழர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தோழர்கள் எட்வின்...

சேலம் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள்!

சேலம் இளைஞர் அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள்!

கே.ஆர்.தோப்பூரில் கணேசன் இல்லத்தில் 18.11.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: தீர்மானம்-1: “மனிதம் நமது அடையாளம் – ஜாதி நமக்கு அவமானம்” தெருமுனைக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 29,30 ஆகிய நாட்களில் புதிய பகுதிகளில் நடத்துவது. தீர்மானம்-2: டிசம்பர் 14 அன்று “மனிதம் நமது அடையாளம்” “ஜாதி நமக்கு அவமானம்” நிறைவுக்கூட்டம் பொதுக்கூட்டமாக தாரமங்கலம் அண்ணா சிலை பகுதியில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம்-3: புரட்சிப் பெரியார் முழக்க இதழை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் கொண்டு சேர்ப்பது குறித்தும், புதிய சந்தாக்களை அதிகப்படுத்தி வருகிற டிசம்பர் 24 அன்று மாவட்டக் கழகத்திடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தீர்மானம்-4: டிசம்பர் 24 கோவையில் நடைபெறும் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்வது எனவும்...

கழக நாட்காட்டிக்கு முன்பதிவு செய்யலாம்!

கழக நாட்காட்டிக்கு முன்பதிவு செய்யலாம்!

திரைத்துறையைச் சார்ந்த (மறைந்த) கடவுள், மத மறுப்பாளர்களின் படங்கள், கருத்துக்கள் அடங்கிய, 2026-ஆம் ஆண்டுக்கான கழக நாட்காட்டி விரைவில் தயாராக உள்ளது. ரூ.100 மதிப்புள்ள நாட்காட்டி முன்பதிவு சலுகை விலையில் ரூ 75/- மட்டும். 2025 டிசம்பர் 15-க்கு முன்னதாக முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே நாட்காட்டி வழங்கப்படும். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். 22.11.25. தொடர்பு எண்: 99417 59641 புரட்சிப் பெரியார் முழக்கம் 27112025

க.கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு & நினைவேந்தல்

க.கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு & நினைவேந்தல்

திராவிடர் விடுதலைக் கழக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் கருப்பூர் க.சக்திவேல் சகோதரரும், ஓய்வுபெற்ற ஆசிரியரும், சேலம் மாவட்ட திராவிடர் கழக காப்பாளருமான க.கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 11.11.2025 செவ்வாய்கிழமை கருப்பூர் சாமிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில், திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் பழநி.புள்ளையணன் தலைமையில் நடைபெற்றது. சேலம் அம்மணி மருத்துவமனை நிர்வாக இயக்குனர், மருத்துவர் இரா. சரவணன் முன்னிலை வகித்தார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசும்போது, தோழர் க.கிருட்டிணமூர்த்தியும் அவரது குடும்பமும் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததையும், அவர் பெரியாரிய இயக்கப் பணிகளை செய்த உணர்வுகளைப் பகிர்ந்து நினைவேந்தல் உரையாற்றினார். இறுதியாக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள், தி.க., தி.மு.க. தோழர்கள், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், அ.இ.தி.மு.க.வினர், பா.ம.க.வினர் பலர்...

இளங்கோவன்- வினிதா சுயமரியாதை திருமணம்!

இளங்கோவன்- வினிதா சுயமரியாதை திருமணம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், குறுக்குப்பட்டி கிராமம், பவளத்தனூர் பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர். சரவணன்- சித்ரா ஆகியோரின் மகன் இளங்கோவன் அவர்களுக்கும் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், உடையார்குடி கிராமம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன்- ஆனந்தி ஆகியோரின் மகள் வினிதா அவர்களுக்கும் 04.11.2025 காலை 11 மணியளவில் மேட்டூர்ள பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் இணையர்களுக்கு சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட இணையர்கள் கழகத் தலைவரிடம் பயணச் செலவிற்காக ரூ. 5000 வழங்கினர். பெரியார் முழக்கம் இதழ் 27112025

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்- கொளத்தூரில் கண் மருத்துவ முகாம்!

கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்- கொளத்தூரில் கண் மருத்துவ முகாம்!

இலவச மருத்துவ முகாமை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். சேலம் வள்ளி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை சார்பாக 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூர் ஸ்ரீ கொளத்தூர் கஃபே, S. K. C கார்னரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். இம்முகாமை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் கழகத் தோழர். ஜலகண்டாபுரம் ரமேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் கழக தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், செட்டியூர் மாரி, கத்தரிப்பட்டி பழனியப்பன் ஆகிய கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 27112025

தமிழர் இயக்கம் உருவானதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5)- கொளத்தூர் மணி

தமிழர் இயக்கம் உருவானதன் பின்னணி! ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (5)- கொளத்தூர் மணி

“ஈரோட்டுப் பாதை சரியா?” நூலில் ஜீவா அவர்கள் பெரியார் மீது வைத்துள்ள விமர்சனங்களைப் பார்ப்போம். ஈரோட்டுப் பாதையின் 20 ஆண்டுகள் என்ற தலைப்பில், “இன்று ஈரோட்டுப் பாதை திராவிடர் கழகம் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பித்த பொழுது இதற்கு இந்தப் பெயர் இல்லை; கூடு விட்டு கூடு பாய்வதைப் பாய்வது போல பல பெயர்களைத் தாங்கி ஈரோட்டுப் பாதை 20 ஆண்டுகளைக் கழித்து இருக்கிறது. பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமூகச் சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சமதர்ம நாஸ்திக இயக்கம், தமிழர் இயக்கம், திராவிடர் இயக்கம் என்ற பல பெயர்களோடு பாதை காட்டி வந்திருக்கிறார் தன்னைப் பின்பற்றிய தமிழ் மக்களுக்கு ஈரோட்டுப் பெரியார்” என்று எழுதியுள்ளார் ஜீவா. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மார்க்சியர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் ஆகும். வரலாற்றின் தொடக்கத்தில் கிரேக்க தத்துவஞானி ஹிராகிளிடஸ் சொல்லியிருந்தாலும், நவீன வரலாற்றில் பேராசான் மார்க்சும் இதனைச் சொல்லி உள்ளார். ஆனால்...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

தமிழ்நாடு அறிவியல் மன்ற நிர்வாகிகளான ஆசிரியர்கள் சிவகாமி, ஆசிரியர் சிவகுமார் (ஈரோடு) ஆகியோர் முன்னெடுப்பில் பெரியார் முழக்கம் வளர்ச்சிக் குழு உருவாக்கப்பட்டு, பல்வேறு தோழர்கள் மாதம்தோறும் தலா ரூ.500 வழங்கி வருகிறார்கள். அவர்களின் பெயர் பட்டியல்: தலைமைக் குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகர், இளையராஜா, துரை. தாமோதரன், தோழர்கள் நாத்திக ஜோதி (ஈரோடு), முத்து (திருப்பூர்), சண்முகசுந்தரம் (மயிலாடுதுறை), பிரபாகரன் (மேட்டூர்), பிரபாகரன் (பவானிசாகர்), ஜோதி (மடத்துக்குளம்), சாக்கோட்டை இளங்கோவன், அஜீத் (மேட்டூர்), அறிவழகன் (கடலூர்), வீரமணி, முத்து (சத்தியமங்கலம்), சுந்தரம் (பவானி), தினேஷ், சந்தோஷ், அறிவழகன், மலைக் கொழுந்தன், வெங்கட், வீரன், கோபிநாத், வடிவேல் ராமசாமி, செளந்தர்யன், சரவணகுமார், மதன், மகேஷ், பழனிச்சாமி கோபி, அழகர் பிரபாகரன், ஆனந்த், மாதவன், இளங்கோ, ரவி, கோடி சுந்தரம். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். நவம்பர் மாத நன்கொடையாக ரூ.15,500 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). ——————————————————————————————————————————- கழகத் தலைமை...

குலுங்கிய கைகள்

குலுங்கிய கைகள்

புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழாவில் மோடியை மேடையில் வைத்துக் கொண்டே நடிகை ஐஸ்வர்யா ராய் வெளுத்து வாங்கி விட்டார். உலகின் ஒரே மதம் அன்பு; ஒரே மொழி அன்பின் மொழி ஒரே கடவுள் -உலகம் முழுதும் நிறைந்துள்ள சக்தி என்று பேசியதோடு உரையை முடிக்கும் முன் நக்கலாக ஒர் பஞ்ச் வைத்தார்”ஜெய் ராம்; ஜெய்ஹிந்த்” மோடியின் முகம் செத்து கிடந்தது. அடுத்த நாள் தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச மாநாட்டில் ஆஸ்திரேலியா நாட்டு பிரதமரை மோடி சந்தித்து உடன்பாடுகளை செய்து கொண்டார் என்ற செய்தி வந்தது. ஆஸ்திரேலியாவில் இப்போது தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களின் தேசம். கூட்டாட்சி அரசாங்கம் நடக்கிறது. அனைத்து இனங்களுக்கும் சம உரிமை, தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலாய்டு நகரில் கடந்த 14ஆம் தேதி கலாச்சாரங்களின் திருவிழா ஒன்று அரசு சார்பில் நடத்தப்பட்டது. இது ஆண்டுதோறும் நடக்கும் விழா. ஒவ்வொரு தேசிய இன...

தலையங்கம்: குழப்பத்தை விளைவிக்கும் உச்சநீதிமன்றம்!

தலையங்கம்: குழப்பத்தை விளைவிக்கும் உச்சநீதிமன்றம்!

தமிழ்நாடு அரசின் `10-க்கும் மேற்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், “ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல், சட்டத்துக்கு எதிரானது. மசோதா மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும், மசோதாவை நிறுத்திவைப்பதாக இருந்தால், 3 மாதங்களுக்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் 3 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும், மறுபரிசீலனை செய்வதற்காக மசோதா திருப்பி அனுப்பப்பட்டால் ஒரு மாதத்துக்குள் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். எதுவுமே செய்யாமல் மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைத்திருக்க ஆளுநருக்கு எவ்வித தனி அதிகாரமும் (வீட்டோ) கிடையாது” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பு தொடர்பாக, உரிய காலக்கெடு தாண்டிய பிறகு, திடீரென 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்துக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...

ஈரோடு தமிழன்பனுக்கு புகழ்வணக்கம்!

ஈரோடு தமிழன்பனுக்கு புகழ்வணக்கம்!

திராவிட இயக்கக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 22.11.2025 அன்று தனது 92ஆம் வயதில் காலமானார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் நெருங்கி பழகியவர் ஈரோடு தமிழன்பன். சீரிய பகுத்தறிவாளர். பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதுடன், சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். `வணக்கம் வள்ளுவ’ என்னும் புகழ்பெற்ற கவிதை நூலுக்காக இந்திய அரசின் சாகித்திய அகாடெமி விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ‘உலகத் தமிழ்ப் பீட விருது’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். ஈரோடு தமிழன்பனின் இழப்பு தனிப்பட்ட அவருடைய குடும்பத்திற்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த திராவிட இயக்கத்திற்குமான பேரிழப்பு. கவிதைகள், இலக்கியத்தின் ஊடாக அவர் விட்டுச்சென்ற பெரியாரியல் பணியை, விதைத்துச் சென்ற சுயமரியாதைச் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும்...

நாகரீக உலகிலும் ஜாதிவெறி தலைதூக்கலாமா?  சமத்துவ சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்க ஜாதி ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது கழகம்!

நாகரீக உலகிலும் ஜாதிவெறி தலைதூக்கலாமா? சமத்துவ சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்க ஜாதி ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது கழகம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மாநிலம் தழுவிய அளவிலான இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழகத்தின் சார்பில், சுவர் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோழர்கள் ஆத்தூர் மகேந்திரன், சென்னிமலை செல்வராசு ஆகியோர் சுவர் விளம்பரங்கள் தீட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு என பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராவதற்கான திட்டமிடல் பணிகளில் கழகத் தோழர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள், தனியார் வாகனங்களில் தோழர்களை திரட்டி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். ஏற்பாடுகள் ஒருபக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்க இந்த ஆர்ப்பாட்டம் ஏன் என்ற விவாதமும் எழத் தொடங்கியிருக்கிறது. ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது. இனி இந்த ஆர்ப்பாட்டம் தேவைதானா என்ற உரையாடலும் ஒருபக்கம் நடந்து...

சந்தா சேகரிப்பீர்!

சந்தா சேகரிப்பீர்!

2026-ஆம் ஆண்டுக்கான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழ் சந்தா சேகரிப்புப் பணிகளை கழகத் தோழர்கள் விரைவாக தொடங்கி, டிசம்பர் மாத இறுதிக்குள் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆண்டு சந்தா ரூ.300 அய்ந்தாண்டு சந்தா ரூ.1,500 – விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். பெரியாரிய, திராவிட இயக்க, சமகால அரசியல் கருத்துகளைத் தாங்கி வரும் வார இதழை வாங்கிப் படியுங்கள்.. பரப்புங்கள்…

மனோஜ்குமார் – அஞ்சலி இணையேற்பு விழா!

மனோஜ்குமார் – அஞ்சலி இணையேற்பு விழா!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தந்தை பெரியார் பிரியாணி கடை உரிமையாளர் கழகத் தோழர். கி.சுப்பிரமணியன்- சாவித்திரி ஆகியோரின் மகன் மனோஜ்குமார் அவர்களுக்கும், திருச்சி மாவட்டம், மணப்பாறை பண்ணாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த வை.சுப்பிரமணி – பார்வதி ஆகியோரின் மகள் அஞ்சலி அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 16.11.2025- அன்று, ஞாயிற்றுக்கிழமை 11 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் சீதா திருமண மண்டபம் முதன்மை அரங்கத்தில் நடைபெற்றது. தி.மு.க. நெசவாளர் அணி மாநிலச் செயலாளர் சிந்து இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் க.நாத்திக ஜோதி வரவேற்புரையாற்றினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையுரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, கழகப் பொருளாளர். துரைசாமி, தலைமைக் கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வக்குமார், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், திராவிடர் விடுதலைக் கட்சி தலைவர் அன்பு மகேசு, அதிமுக...

சேலம் கிழக்கு, வடக்கு மாவட்டக் கழக கலந்துரையாடல்!

சேலம் கிழக்கு, வடக்கு மாவட்டக் கழக கலந்துரையாடல்!

சேலம் கிழக்கு: இளம்பிள்ளையில் சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் கடையில் 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு: மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் 08.11.2025 சனி மாலை 6.00 மணியளவில் மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: தீர்மானம் – 1: சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 2026ஆம் ஆண்டிற்கான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு 500 சந்தாக்களை வருகிற டிசம்பர் 24 அன்று மாவட்ட கழகத்திடம் ஒப்படைப்பதென தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் – 2: நவம்பர் 26 சட்ட எரிப்பு நாளை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 10 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் – 3: டிசம்பர் 24 கோவையில் நடக்கும் தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக பெருவாரியாக தோழர்கள் கலந்து கொள்வதென...

“ஜாதி நமக்கு அவமானம்” ஈரோடு, கோவையில் தீவிர பரப்புரை!

“ஜாதி நமக்கு அவமானம்” ஈரோடு, கோவையில் தீவிர பரப்புரை!

ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 09.11.2025 ஞாயிறு மாலை பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் ‘ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமையேற்க, பரப்புரைச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகிக்க செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, விசிகவின் ஆற்றல், தலைமைக் கழகப் பேச்சாளர் .கா.சு வேலுச்சாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மமகவின் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது ஆகியோர் கருத்துரையாற்றினர். இராம. இளங்கோவன் கழக வெளியீட்டுச் செயலாளர், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி நிறைவுரையாற்றினார். பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பெரியார் குறித்த பாடலை பாட பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்கள்...

ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 09.11.2025 ஞாயிறு மாலை பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் ‘ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமையேற்க, பரப்புரைச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகிக்க செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, விசிகவின் ஆற்றல், தலைமைக் கழகப் பேச்சாளர் .கா.சு வேலுச்சாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மமகவின் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது ஆகியோர் கருத்துரையாற்றினர். இராம. இளங்கோவன் கழக வெளியீட்டுச் செயலாளர், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி நிறைவுரையாற்றினார். பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பெரியார் குறித்த பாடலை பாட பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்கள்...

கழகப் பொதுச்செயலாளருக்கு ஆஸி.யில் பாராட்டு விழா

கழகப் பொதுச்செயலாளருக்கு ஆஸி.யில் பாராட்டு விழா

ஆஸ்திரேலியா தமிழ் கலை மற்றும் கலாச்சார இயக்கம் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் போராசியர் சரசுவதி ஆகியோர்க்கு பாராட்டு விழா 14.11.2025 அன்று வடக்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மாகாணத்தில் நடைபெற்றது. லாரன்ஸ் அண்ணாதுரை வரவேற்புரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் போராசியர் சரசுவதி ஆகியோரின் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. விடுதலை இராசேந்திரன் பேசுகையில் ஜாதி, மதம் அரசியல் அமைப்புகளில் சிக்காமல் ஒற்றுமை உணர்வுடன் தமிழர்கள் செயல்பட வேண்டும் என்று உரையாற்றினார். தோழர்களின் ஆஸ்திரேலிய வருகையை கொண்டாடும் விதமாக இந்த பாராட்டு விழா அமைந்தது. ஆஸ்திரேலிய வாழ் தமிழ் குடும்பங்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரவு உணவு வழங்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்பரிப்புடனும் இந்த விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் இதழ் 20112025

தொழிலாளர் கொள்கையில் மூக்கை நுழைக்கும் மனுஸ்மிருதி!

தொழிலாளர் கொள்கையில் மூக்கை நுழைக்கும் மனுஸ்மிருதி!

தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு வரைவுக் கொள்கைகள், “ஷ்ரம் ஷக்தி நிதி 2025” எனும் பெயரில் மோடி அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இக்கொள்கைகளின் அதிர்ச்சியூட்டும் அம்சம் என்னவெனில், உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தவும், சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சட்டக் கோட்பாடுகளாக நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்பட்ட மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் போன்ற பழமையான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டே ஒன்றிய அரசின் இக்கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன எனப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதுதான். ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள வரைவுக் கொள்கை கூறுவதாவது: “பழமை ஆவணங்களான மனுஸ்மிருதி, யக்ஞ வல்கியஸ்மிருதி, நாரதஸ்மிருதி, சுக்ரநீதி, அர்த்தசாஸ்திரம் ஆகியவை அரச நீதி குறித்து வலுவாகக் கூறியுள்ளன. நீதி, நியாயமான ஊதியம், சுரண்டலிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை உத்தரவாதப்படுத்துவதில் ஆள்வோரின் கடமை என்ன என்பது கூறப்பட்டுள்ளது. நவீன தொழிலாளர் சட்டங்கள் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உழைப்பை நிர்வ கிக்கும் இத்தகைய கோட்பாடுகள் இந்திய நாகரிக உருவாக்கத்தில் வலுவான அடிப்படை அம்சங்களாக உள்ளன.” இந்தியாவின் பாரம்பரியப் புரிதல் என்னவெனில், உழைப்பு என்பது...

அறிவியலை பாடமாக அல்ல வாழ்வியலாக ஏற்க வேண்டும்! ‘நாத்திகம்’ நூலை வெளியிட்டு மருத்துவர் எழிலன் பேச்சு

அறிவியலை பாடமாக அல்ல வாழ்வியலாக ஏற்க வேண்டும்! ‘நாத்திகம்’ நூலை வெளியிட்டு மருத்துவர் எழிலன் பேச்சு

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கொளத்தூரில் கழகப் பெண்களே தலைமையேற்று நடத்திய நாத்திகர் விழாவை ஒட்டி கடந்த 5 மாதங்களுக்கு, மேல் புரட்சிப் பெரியார் முழக்கத்தில் எழுதிய ‘கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை’ தொடர் கட்டுரைகள் கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் முயற்சியில், ‘நாத்திகம் – சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்’ நூலாக தொகுக்கப்பட்டு, 12.11.2025 அன்று சென்னை முற்போக்கு புத்தகக் காட்சியில், கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் அரங்கு எண் 22-இல் வெளியிடப்பட்டது. ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் நூலை வெளியிட, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வாலாசா வல்லவன் பெற்றுக்கொண்டார். நூலை வெளியிட்டுப் பேசிய எழிலன் நாகநாதன், “திமுக இளைஞர் அணி சார்பாக அறிவுத் திருவிழா சிறப்புற நடைபெற்று வருகிறது. கருத்தரங்கம், கண்காட்சி என பல்வேறு முற்போக்கு கருத்தியல் கொண்ட தோழர்கள் தங்களின் படைப்புகளை வைத்துள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் எழுதியுள்ள ‘நாத்திகம்...

கொள்கைக்காக உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள்-  அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு

கொள்கைக்காக உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள்- அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 8,9 ஆகிய தேதிகளில் திமுக இளைஞர் அணி நடத்திய இருவண்ணக் கொடிக்கு வயது 75 நிகழ்ச்சியில் ‘கருஞ்சட்டை கழகமும் கருப்பு சிவப்புக் கழகமும்’ என தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி. இந்திய விடுதலையைப் பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இரண்டு விதமான கருத்து வேறுபாடு இருந்தது. தலைவர் பெரியார் துக்கநாள் என்றார். பொதுச்செயலாளர் அண்ணா மகிழ்ச்சியான நாள் என்றார். இரண்டு எதிரிகளில் ஒருவன் போய்விட்டான், மகிழ்ச்சி என்றார் அண்ணா. வெள்ளைக்காரனை விட இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பவன் மோசமானவன் என்பது பெரியாரின் நிலை. அப்படித்தான் இருந்தது நிலைமை. ஆகஸ்ட் 15 விடுதலை என்றார்கள், பார்ப்பனர்களுக்கு விடுதலையாக இருந்தது. அப்படித்தான் தூத்துக்குடி மாநாட்டில் ஒரு தீர்மானத்தை பெரியார் 1948-இல் இயற்றினார். மற்ற மாகாணங்களில் என்னமோ செய்துவிட்டுப்போ. “ சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் இந்திய யூனியன் அரசாங்கம் சென்னை மாகாண ஜாதிவாரி பிரதிநிதித்துவ முறை சட்டத்தை தபால், தந்தி, ரயில்வே,...

ஜீவா இந்தியை எதிர்த்தாரா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (4)- கொளத்தூர் மணி

ஜீவா இந்தியை எதிர்த்தாரா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (4)- கொளத்தூர் மணி

ஜீவா இந்தியை ஆதரித்தார் என்று குறிப்பிட்டதற்கு பல பேர் கொதித்தெழுந்து ஆதாரத்தைக் கேட்கத் தொடங்கினார்கள். அது குறித்தும் சில செய்திகளைப் பார்ப்போம். பெரியார் காங்கிரசில் இயங்கியபோது 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியார் பெரியாரின் இல்லத்துக்கு வந்து தங்கி இருந்திருக்கிறார். அப்போது அன்னியத் துணிகள் பகிஷ்கரிப்பு என்ற பெயரால் வெளிநாட்டுத் துணிகள் எரிக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்ததாக 1922-ஆம் ஆண்டில் ஈரோடு பெரியார் இல்லத்திற்கு மோதிலால் நேருவும், டாக்டர் அன்சாரியும் வந்ததன் நினைவாக ஈரோடு வெங்கட்ட நாயக்கர் சத்திரத்தில், ஒரு இந்தி மொழி கற்பிக்கும் பள்ளியை, ஒரு பாதி காங்கிரஸ் செலவிலும், மறுபாதி தமது செலவிலும் நடக்கும் வகையில் தொடங்கியுள்ளார். ஆனால் அதே ஆண்டு இறுதியில் திருப்பூரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் “இந்தியைப் பரப்புவது என்று கூறிக்கொண்டு இந்தியில் உள்ள துளசிதாஸ் இராமாயணத்தை பரப்புவதைக் கண்டித்தும், வருணத்தையும் தீண்டாமையும் காப்பாற்றும் இராமாயணத்தையும் மனுசாஸ்திரத்தையும் எரிக்க வேண்டும்” என்றும் பேசியுள்ளார்....

கழகத் தோழர் தனபால் தந்தை மறைவு!

கழகத் தோழர் தனபால் தந்தை மறைவு!

திருப்பூர் மாநகர கழகத் தலைவர் தனபால் அவர்களின் தந்தையாரும், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா அவர்களின் மாமனாருமான அய்யா ஏ.எஸ்.வீரபாகு (எ) மோதிரக்காரர் 24.10.2025 அன்று இரவு உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது சொந்த ஊரான மணப்பாறை வட்டம், கீழையூர் கிராமம் அனந்தானூர் பகுதியில், 25-10-2025 மாலை 3 மணி அளவில் இறுதி நிகழ்வுகள் இரங்கல் கூட்டத்துடன் நடைபெற்றது. தனபால் கடும் முயற்சியால் சாஸ்திர சடங்கு சம்பிரதாயங்களை புறக்கணித்து தன்னுடைய அப்பாவின் இறுதி நிகழ்வை நடத்தினார். இரங்கல் கூட்டத்தில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் திருப்பூர் மகிழவன் உள்ளிட்ட தோழர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினர்.. திருப்பூர் தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மாநகர அமைப்பாளர் முத்து, வடக்கு ஒன்றிய அமைப்பாளர்...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

மதுரை கழகத் தோழர் திலீபன் – சுமித்ரா மகள் ‘இயலினி’ பெயர் சூட்டு விழாவில், ரூ.5000-ஐ பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக கழகத் தலைவரிடம் அளித்தனர். கழகத் தோழர்கள் ஏ. இளங்கோவன் – ஆறு. விஜயா – காரைக்குடி மகள் இ.வி.இளந்தமிழ் ஒன்பதாவது வயது பிறந்தநாளை (04-11-2025) முன்னிட்டு ரூ.2000 பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக அளித்துள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் இதழ் 13112025

ஸ்ரீகாந்தராஜ் – இளந்தென்றல் இணையேற்பு விழா!

ஸ்ரீகாந்தராஜ் – இளந்தென்றல் இணையேற்பு விழா!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த மனோகரன்- ராதை ஆகியோரின் மகன் ஸ்ரீகாந்த்ராஜ் அவர்களுக்கும், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி- கோதை ஆகியோரின் மகள் இளந்தென்றல் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 31.10.2025 வெள்ளிக்கிழமை அரியானூர் ஸ்ரீ ஆதித்யா மகாலில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மகுடஞ்சாவடி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் க.அன்பழகன் வரவேற்புரையாற்றினார். தி.க.துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஸ்ரீகாந்தராஜ்- இளந்தென்றல் ஆகியோருக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரையாற்றினார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், திமுகவை சேர்ந்த கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் திமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் எஸ். ஆர்.சிவலிங்கம், திக (பெரியார் அறக்கட்டளைத் தலைவர்) பொத்தனூர் க.சண்முகம், கழகத் தோழர்கள், திக தோழர்கள், திமுகவினர் மற்றும் பலர்...

தோழர் க.கிருஷ்ணமூர்த்தி மறைவு!

தோழர் க.கிருஷ்ணமூர்த்தி மறைவு!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் ஓமலூர் க.சக்திவேல் அவர்களின் சகோதரர், முன்னாள் சேலம் மாவட்டத் தி.க தலைவர் தோழர் க.கிருட்டிணமூர்த்திஅவர்கள் 31.10.2025 அன்று இயற்கை எய்தினார். மறைந்த கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் தோழரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, இரங்கல் உரையாற்றினார். சேலம் மாவட்ட கழகத் தோழர்கள் பலரும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 13112025

கோவையில் தீண்டாமை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்! மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!

கோவையில் தீண்டாமை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்! மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!

திருப்பூர் வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் 03-11-2025 மாலை 5 மணி அளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : தீர்மானம் -1 டிசம்பர் 24 தலைவர் பெரியார் நினைவு நாளையொட்டி கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் மாபெரும் போராட்டத்தை நடத்துவது. அதற்கான சுவர் எழுத்து, சுவரொட்டி, சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதின் மூலமாக ஜாதியத் தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் நோக்கத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்வது அதன் வாயிலாக தோழர்கள் மற்றும் மக்களை அணி திரட்டுவது தீர்மானம்- 2 கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” ஆண்டு சந்தா மூன்று மாவட்டங்கள் இணைந்து மொத்தம் 500 சந்தாக்களை நவம்பர் 03 தேதி முதல் டிசம்பர்...

வாக்குத் திருட்டு அல்ல ஆட்சித் திருட்டு ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு அல்ல ஆட்சித் திருட்டு ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் என்பது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு அரசியலமைப்பு நிறுவனம். இந்நிறுவனம் பக்கசார்பின்றி பொதுவானதாக நடந்து கொள்வதற்காகவே அதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நீதித்துறை, புலனாய்வுத் துறை, தணிக்கைத் துறை என ஒவ்வொரு அரசியலமைப்பு நிறுவனங்களும் தவறாக கையாளப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு நிலவுகிறது. இதில் தேர்தல் ஆணையமும் விதிவிலக்கல்ல. தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க பாஜகாவின் ஏஜென்டாகவே மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக தாக்கி வருகிறார். பாஜகவை வெற்றி பெறச் செய்வதற்காக அக்கட்சியுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குத் திருட்டு நடத்தி வருவதாக குற்றம் சாட்டுகிறார். இதற்கெல்லாம் ஆதாரம் என்ன என தேர்தல் ஆணையம் கேட்டதற்கு, கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை ராகுல் காந்தி...

உருவக் கேலிக்கு உடனடி பதில் தந்த நடிகை!

உருவக் கேலிக்கு உடனடி பதில் தந்த நடிகை!

‘அதர்ஸ்’ திரைப்படம் குறித்து, நவம்பர் 6-ஆம் தேதி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அப்போது இயக்குநரிடம் யூடியூபர் ஒருவர் கதாநாயகியின் எடை எவ்வளவு என்று வக்கிர எண்ணத்தோடு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதற்கு முன்பும் இத்திரைப்படம் குறித்து, நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படத்தின் நாயகனிடமும் கதாநாயகியின் எடை எவ்வளவு என்ற அதே கேள்வியை எழுப்பியிருந்தார். மேலும் தன்னுடைய கேள்வியில் என்ன தவறு என்ற தொனியிலும் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டு இருந்தார். அந்த யூடியூபருக்கு பதிலளித்த கதாநாயகி கௌரி கிஷன், “இந்தக் கேள்விக்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? எனது கதாபாத்திரத்தைப் பற்றியோ, அதற்காக நான் என்ன செய்தேன் என்பதைப் பற்றியோ ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை. எனது எடை என்னவென்று தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இதே கேள்வியை ஒரு கதாநாயகனிடம் கேட்பீர்களா?” என்று காட்டமாக பதிலளித்துள்ளார். இந்தக் கேள்வி சாதாரணமாகக் கேட்கப்பட்டது என்ற தொனியில் மற்றொருவர் இதை நியாயப்படுத்த,...