அச்சுத்துறையில் அதிர்வலைகளை உருவாக்கிய “சீர்”
ஈரோட்டில் செப்-7-ல் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு சீர் வாசகர் வட்டம் விருது வழங்கும் விழாவில் பேரா. வீ.அரசு உரையிலிருந்து… யாருக்கு பரிசு கொடுக்க வேண்டுமோ அந்த சரியான நபருக்கு பரிசு கொடுப்பதுதான் இந்த சீர் வாசகர் வட்டத்தின் நோக்கமாக அவர்கள் வரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தான் தமிழறிஞர் பொதியவெற்பனுக்கும் அதைப்போல நம் தோழர் கொளத்தூர் மணிக்கும் அவர்கள் பரிசளித்திருக்கிறார்கள். இந்த சீர்வாசகர் வட்டத்தை பற்றி ஒரு குறுகிய காணொளியும் ஒளிபரப்பட்டது. கவிஞர் தம்பி அவர்கள் பேசுகிற பொழுது சில தகவல்களையும் சொன்னார். சில முக்கியமான தகவல்களை அவர் பகிர்ந்து கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று எனக்கு ஒரு சங்கடம் இருந்தது. அவர் சொன்னார், நீங்கள் அதை சொல்லிவிடுங்கள் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். இந்த சீர்வாசகர் வட்டம் என்கிற அமைப்பு தனக்கான அறவியலை உறுதிப்படுத்திக் கொண்டு செயல்படும் ஒரு இளைஞர் பாசறை. பெருமைப்படக்கூடிய பல்வேறு பணிகளை அவர்கள் செய்துள்ளார்கள். “பெண் ஏன்...
