Category: திவிக

“ஏன் வேண்டும் பெரியார்” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

“ஏன் வேண்டும் பெரியார்” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

புதுக்கோட்டை: “ஏன் வேண்டும் பெரியார்” என்ற தலைப்பில் புதுக்கோட்டையில் 23.2.25 அன்று காலை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்அதர்மம்யூடுப் சேனல் மனோஜ் விடுதலை புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் செயல் இந்திய அரசின் செயல் இதற்கு காரணமான பார்ப்பனிய அதிகாரிகளின் சூழ்ச்சி ஆகியவற்றையும். சீமான் உளவுத்துறையின் கையால் என்பதையும் படம்பிடித்து காட்டினார். ரூட்ஸ் தமிழ் யூடுப் சேனல் கரிகாலன் அவர்கள் போலி தமிழ் தேசியவாதிகளின் அவதூறுகளுக்கு தக்க பதிலடி கொடுத்து பேசினார். இறுதியில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கல்வி வளர்ச்சியில் நூறாண்டுகளுக்குள் ஏற்பட்ட மாற்றமே பெரியார் படிக்க வைத்ததற்கு சாட்சி, யார் தமிழர்கள் என்ற பாவாணரின் கருத்தையும், சாதிதேசியமாக இயங்கும் போலி தமிழ் தேசியவாதிகளையும் அம்பலப்படுத்தும் விதமாகவும், இந்தி திணிப்பை 1930 களின் இறுதியில் எதிர்த்து முதல் இப்போது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து எதிர்ப்பது இன்னும் பலமாக இருக்கிறது என பலற்றை ஆழமாக பேசினார். மேலும் கருத்தரங்கத்தில்...

“பெரியார் எனும் பெருநெருப்பு” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

“பெரியார் எனும் பெருநெருப்பு” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

கோபி: ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கடந்த 22.02.2025 சனிக்கிழமை மாலை கோபியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான் தியாகசீலர் சி.எஸ்.எஸ் அரங்கத்தில் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்க நிகழ்விற்கு மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் அவர்கள் தலைமையேற்றார். ரூட்ஸ் தமிழ் கரிகாலன், பேரலை இந்திரகுமார் தேரடி, பேரலை மில்டன், அதர்மம் மனோஜ், யூ2 புரூட்டஸ் மைனர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியில் மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றிட அரங்கம் நிறைந்த கோபி பெருமக்களால் கருத்தரங்கம் நிறைவு பெற்றது. நிகழ்வில் கழகத்தோழர்கள், பொதுமக்கள், மாற்று அரசியல் கட்சியினர், இயக்கத்தோழர்கள் என பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 06032025இதழ்

இளமதி ஜேசன்‌ ஜாதி மத மறுப்பு மணவிழா

இளமதி ஜேசன்‌ ஜாதி மத மறுப்பு மணவிழா

கழக ஆதரவாளர் எம்.ஜி இளங்கோவன் – மாலதி ஆகியோரின்‌ மகள் இ.மா.இளமதி பி பி.ஜேசன் ஆகியோர் ஜாதி மத மறுப்பு மணவிழா 8.02.2025 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை ஈஞ்சம்பாக்கம் அக்கரையில் உள்ள ஜெனராஜன் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மணவிழாவை நடத்தி வைத்தார். கீழ்கண்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது. இன்று முதல் நாங்கள் வாழ்க்கை துணைவர்களாக குடும்ப வாழ்வில் நுழைகிறோம்.சம உரிமையும் தோழமையும் அன்பும் கொண்டதே குடும்பம் என்றக் கொள்கை வழியில் பயணிக்க உறுதி ஏற்கிறோம். வாழ்வில் சந்திக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சமமாக பகிர்ந்து கொண்டு இணையர்களாவும், தோழர்களாகவும் அறிவியல் நெறியில் சமூக அக்கறையோடு வாழ்ந்து காட்டுவோம் என்று உறுதி ஏற்கிறோம். என்று உறுதி ஏற்றனர். மண விழா மகிழ்வாக இணையர்கள் கழக வளர்ச்சிக்கு ரூ.5000 நன்கொடை வழங்கினர் பெரியார் முழக்கம் 06032025இதழ்

நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்

நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்

ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் தோழர்கள் நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி முன்னிலையில், தலைமைக் குழு உறுப்பினர் ஈசுவரன் தலைமையில் நடைபெற்றது. காவலாண்டியூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழி எடுக்கப்பட்டு எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் மாலை அணிவித்து மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்நிகழ்வில் சேலம் மாவட்டக் கழக ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், வழக்கறிஞர் சரவணன் பரத், காவை.தங்கராசு, மாரி, மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் மேட்டூர் நாகராஜ்,ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.திருமண நிகழ்வின் மகிழ்வாக இணையர்கள் புரட்சிப் பெரியார் முழுக்கத்திற்கு ரூபாய் ₹1000/- வளர்ச்சி நிதியை கழகத் தலைவரிடம் வழங்கினர்.

கடலூரில் கழக ஆர்ப்பாட்டம்!

கடலூரில் கழக ஆர்ப்பாட்டம்!

19-02 -2024 அன்று மாலை 4 மணியளவில் சிதம்பரத்தில் யுஜிசி திருத்த வரைவு அறிக்கையை கண்டித்து கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக அமைப்பாளர் அ.மதன்குமார் தலைமையேற்றார். இந்தஆர்ப்பாட்டத்திற்கு ந.கொளஞ்சி, முத்துகிருஷ்ணன், கிருஷ்ணகுமார், தாமரை, விக்னேஷ், தகவி, பார்த்திபன், ராகுல், ரூபன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செ.பிரகாஷ் வரவேற்று தொடக்கயுரையாற்றினார், இதனையடுத்து கவி, வீரகுமார்,சாகுல் ஹமீது மனித நேய மக்கள் கட்சி, கணபதி ஏகாதிபத்தி எதிர்ப்பு இயக்கம், பாலராஜ் புரட்சிகர மாணவர் இயக்கம் மற்றும் இளைஞர் முன்னணி, இசாக் அலி மே17 இயக்கம், ரமேஷ்மித்ரன் தபெதிக, வழக்கறிஞர் செந்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், தயாநிதி மக்கள் தமிழகம் கட்சி, குறிஞ்சிவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இளையரசன் விழுப்புரம் மாவட்டத் தலைவர் திவிக, ப.அறிவழகன் மாவட்ட அமைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் மன்றம், மகேஷ் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திவிக, அய்யனார் தலைமைச் செயற்குழு...

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக்கூட்டம்

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக்கூட்டம்

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக் கூட்டம் 22.02.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகரத் தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநகர அமைப்பாளர் கிருட்டிணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன், ச.மாதவன், லோகநாயகி, தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நவீன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள். சு.செ.சம்பத் (மதிமுக), இராமதாஸ் (விசிக), சாந்தகுமார் (தோழர் அறக்கட்டளை), இராவணன் (ஆதித்தமிழர் பேரவை), சித்ரா (மாமன்ற உறுப்பினர்), ஈஸ்வரன் (திமுக) உள்ளிட்ட தோழமை இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கழகத் தோழர்கள் ஸ்டாலின் ராஜா, அன்னூர் விஷ்ணு ஆகியோர் கழக வெளியீடுகளை வழங்கி சிறப்பித்தனர். கூட்டத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். பெரியார் முழக்கம் 27022025 இதழ்

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

சென்னை: மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 18-02-23 கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழக சேத்துப்பட்டு அமைப்பாளர் இராசேந்திரன் அவர்கள் கடவுள், மறுப்பு, ஆத்மா, கொள்கையை கூறினார். மாவட்டச் செயலாளர் உமாபதி தொடக்க உரையாக சென்னை மாவட்ட கழகம் கடந்த ஆண்டு செய்த சாதனைகளையும், தற்போதைய அரசியல் சூழல்களையும் விளக்கினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன்‌ சென்னையில் கடந்த ஆண்டு நடந்த “எது திராவிடம்,எது சனாதனம்” தலைப்பில் 200 கூட்டங்களைச் சிறப்பாக செய்ததற்கு உழைத்த அனைத்து தோழர்களையும்‌ பாராட்டி வருகிற பரப்புரைப் பயணத்தின் தேவைகள் குறித்துப் பேசினார். கழகத் தலைமை குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் உரைக்குப் பிறகு கழக மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் புதிய தோழர்களை இன்னும் அமைப்பாகக் கட்டமைக்க ஆலோசனைகள் வழங்கினார். தாம்பரம் பகுதி அமைப்பாளர் அருண் கோமதி நவீன காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த வேண்டியத் தேவை...

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

சேலம்: கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்! 16.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் ஏற்காடு ஷோபா ஹோட்டலில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தீர்மானங்கள்: 1). ஒவ்வொரு பகுதிகளிலும் துண்டறிக்கை வாயிலாகவும், வீதி நாடகங்கள் வாயிலாகவும் தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவது எனவும், 2).தோழர்களின் சந்திப்பை விரிவு படுத்தும் வகையிலும், தொடர்புகளை விரிவு படுத்தும் வகையிலும் வருகின்ற ஜூன் மாத இறுதி வாரத்தில் ஏற்காட்டில் குடும்ப விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 3). சேலம் மாவட்டக் கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்களுக்காக மாவட்ட நிதியை உருவாக்குது எனவும், அந்த நிதியை துண்டறிக்கைகள், கூட்டங்களுக்கு பயன்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கலந்து கொண்டோர்: சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் (கி) மாவட்ட அமைப்பாளர்கள் ஏற்காடு பெருமாள், முத்துமாணிக்கம், சேலம்...

தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்ந்தவர் பெரியார்! -கொளத்தூர் மணி

தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்ந்தவர் பெரியார்! -கொளத்தூர் மணி

(பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட 28-வது சந்திப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை) எப்போதுமே அரசியலிலோ அல்லது மற்றவற்றிலோ படிப்படியாக முன்னேறி செல்வதுதான் அனைவருக்கும் வழக்கம். ஆனால் மணியரசன் அவர்கள் ஒரு பொதுவுடைமைவாதியாக இருந்து, தமிழ் தேசியம் பேசி, இப்போது ஜாதியவாதிகள் பக்கம் வந்து நின்று கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நாட்களில் முழுமையாக வெளிப்பட்டு விடுவார். 1956 நவம்பரில் மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது, யாரெல்லாம் தமிழ்நாட்டில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று முதலில் ஒரு வரையறை வைத்திருந்தார். எந்த அறிவியல் அடிப்படையில் இந்த வரையறையை வைத்தார் என்பது தெரியாது. சீமானுக்கு ஆசானாக சேர்ந்து விட வேண்டும் என்ற‌ ஆசையாக கூட இருக்கலாம். அண்ணா நினைவுநாளையொட்டி இந்த நிமிர்வோம் வாசகர் வட்டம் நடைபெறுகிறது. 1934-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற...

கும்ப மேளாவில் கொடிகட்டப் பறந்த    திருட்டுத்தொழில்!

கும்ப மேளாவில் கொடிகட்டப் பறந்த திருட்டுத்தொழில்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ஆம் தேதிமுதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை கும்ப மேளா நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழா என பாஜக மார்தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் உலகில் எங்குமே நடக்காத பேரவலங்கள் அங்கே நடந்தன. கோடிக்கணக்கான பேர் கூடியதாக செய்திகள் வந்தன. ஆனால் சில லட்சம் பேரை கையாளும் திறன் கூட உத்தரப் பிரதேச பாஜக அரசுக்கு இல்லை. போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லை, ரயில்கள் இல்லை, போக்குவரத்து வசதியே இல்லை. ரயில்களில் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக்கொண்டே உள்ளே ஏறிய காணொளிகளைஇப் பார்த்தோம். ஜனவரி மாதம் இறுதியில் கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்தோர் பற்றிய தெளிவான விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. இவற்றுக்கெல்லாம் மேலாக, “கங்கை நதியின் தரம் குளிப்பதற்கான முதன்மை நீரின் தரத்துடன் ஒத்துப்போகவில்லை. கங்கை நீர் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைத்து இடங்களிலும், மல பாக்டீரியாக்கள் எனப்படும் ஃபெக்கல் கோலிஃபார்ம் அதிகரித்துள்ளது. தற்போது மகா...

புரட்சிப் பெரியார் முழக்கம்

புரட்சிப் பெரியார் முழக்கம்

ஆண்டு சந்தா : ரூ.300/- ஐந்தாண்டு சந்தா : ரூ.1500/- தொடர்புக்கு : 15. தோழமை, வெங்கடேஸ்வரா நகர், பெருங்குடி, சென்னை – 600096. பேச : 63697 76351, முழக்கம் தொடர்பான சந்தேகங்களுக்கு மேற்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் : newsdvk@gmail.com. பெரியார் முழக்கம் 20022025 இதழ்

காரைக்குடியில் கருத்தரங்கம்

காரைக்குடியில் கருத்தரங்கம்

இந்தி இந்துத்துவம் இந்தியா பற்றிய பெரியாரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் 8.2.25 அன்று கருத்தரங்கம் காரைக்குடியில் நடைபெற்றது. இதில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இந்துத்துவம் இந்தி இந்தியா பற்றிய பெரியாரின் சிந்தனைகளையும் நாம் இதில் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதனையும் விரிவாக பேசினார். கருத்தரங்கத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், பேராசிரியர் சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் கருத்துரையாற்றினர். நிகழ்வு ஏற்பாட்டை மார்க்சு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு செய்தது. தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாவட்ட பொறுப்பாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார் திராவிடர் விடுதலை கழகத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பெரியார் முத்து தலைமையில் வைத்தார், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாவெல் மற்றும் திவிக இளங்கோவன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்கள். இந்நிகழ்வில் திவிக மாவட்ட தலைவர் முத்துக்குமார், ரமேஷ், இளங்கோ, திருநாவுக்கரசு, அன்புக்கரசு, தவச்செல்வன் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்த பேராசிரியர் கோச்சடை,...

முதலில் இந்தி வரும்!     பிறகு சமஸ்கிருதம் வரும்!

முதலில் இந்தி வரும்! பிறகு சமஸ்கிருதம் வரும்!

உத்தரப் பிரதேசத்தில் இந்திக்கு அடுத்து உருது பேசும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் பாடத்திட்டங்கள், அரசுத்துறைகளில் இருந்து உருது வார்த்தைகளை தேடித்தேடி நீக்குகிறது அம்மாநில பாஜக அரசு. இதே தூய்மைவாதத்தை போஜ்புரியில் எதிர்பார்த்தால் அது தேசத்துரோகம் ஆகிவிடும்! பள்ளிகளில் உருதுவில் இறை வணக்கம் செய்ய அனுமதி மறுக்கிறார்கள். உருது ஆசிரியர்கள் பணி நியமனங்களை அலசி ஆராய்ந்து,அவர்களின் கோப்புகளில் எங்கேனும் சிறு பிழை இருக்காதா என தேடித்தேடி பணி நீக்கம் செய்கின்றனர். குஜராத்தில் அம்மாநில மொழியான குஜராத்திக்கே பரிதாப இடம்தான் மிஞ்சியிருக்கிறது. அதனால்தான் 2023-24 நிதியாண்டில் 1-8ஆம் வகுப்பு வரை குஜராத்தியை கட்டாயமாக்கும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது. மூன்றாவது மொழியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மற்ற மொழிகளை கற்பிக்கலாம் என பெயரளவில் சொல்லியிருக்கிறார்களே தவிர, ஒரு மாநிலத்தில் கூட விருப்பப்பாடமாக தென்மாநில மொழியை மாணவர்கள் தேர்ந்தெடுத்ததாகவோ அல்லது ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவோ தகவல் இல்லை. ஏன், பல வட இந்திய...

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய அரசு தமிழ்நாட்டின்‌ பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்து தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் டெல்லியில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்‌ நடந்து முடிந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்‌ தமிழ்நாடடின்‌ முக்கிய நகரங்களில் பிப்.13 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பல்கலைக் கழக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த புதிய விதிகளில் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின்‌ நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆபத்து அடங்கியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி துண்டறிக்கை அச்சிடப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டன. கழகம்‌ ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு… சேலம்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் யூஜிசி விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 13.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்...

பெரியாரை இழிவுப்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவோம்! அப்புறப்படுத்தவோம்!

பெரியாரை இழிவுப்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவோம்! அப்புறப்படுத்தவோம்!

அனைத்து சனநாயக இயக்கங்கள் சார்பாக பொதுக்கூட்டம் சென்னை மாவட்டம் திருவொற்றியூரில் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், புதுச்சேரி மாநில தலைவர் லோகு அய்யப்பன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, இளைஞரணி மாவட்டச் செயலாளர் ப.அருண், மாவட்ட கழக தோழர்கள் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துகொண்டனர். கூட்டமைப்பு சார்ந்த பொழிலன், போரசிரியர் செயராமன், வாலாசா வல்லவன், மனிதி செல்வி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 13022025 இதழ்

தினேசு-சூர்யா இணையரின் ஜாதி மறுப்புத் திருமண விழா

தினேசு-சூர்யா இணையரின் ஜாதி மறுப்புத் திருமண விழா

திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழரும், ஊடகவியலாளருமான தினேசு – சூர்யா இணையர்களின் சுயமரியாதைத் திருமணம் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 02.02.2025 அன்று சென்னையில் ராமாபுரம்‌ பகுதியில் உள்ள பாம்ஷோர் உணவகத்தில் நடைபெற்றது. எவ்வித சடங்கு சம்பிரதாயம் இன்றி எளிமையாக, இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். காசு நாகராசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சன் நியூஸ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் மு.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊடகவியலாளர் கீதா தொகுத்து வழங்கினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண் உட்பட கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர்.சன்நியூஸ் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன் பேசுகையில்,தோழர் தினேஷ் அடக்கமான சிந்தனை,படைப்பூக்கமும் நிறைந்தவர் என்று பாராட்டினார். திராவிடர்...

பேரறிஞர் அண்ணா நினைவுநாள்; கழகம் சார்பில் மரியாதை!

பேரறிஞர் அண்ணா நினைவுநாள்; கழகம் சார்பில் மரியாதை!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை இராயப்பேட்டை பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், ஓ.சுந்தரம் (திமுக), கழக இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு மற்றும் பகுதி கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். கோவை: பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆவது நினைவு நாளில் கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காந்திபுரம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு, மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. பெரியார் முழக்கம் 13022025 இதழ்

நிமிர்வோம் வாசகர் வட்ட   26-வது சந்திப்பு!

நிமிர்வோம் வாசகர் வட்ட 26-வது சந்திப்பு!

பேரறிஞர் அண்ணா 56-ஆவது நினைவுநாளை முன்னிட்டு 26-ஆவது சிறப்பு நிமிர்வோம் வாசகர் வட்டம் 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிமிர்வோம் வாசகர் வட்டப் பொறுப்பாளர் தோழர் பிரகாசு தொகுத்து வழங்க ,கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் .மேலும் ஊடகவியலாளர் கரிகாலன், “பார்ப்பனக் கைக்கூலிகள் சீமான், மணியரசன்” என்ற தலைப்பில் உரையாற்றினார் . ஊடகவியலாளர் மில்டன், “பெரியார் அண்ணாவின் தமிழ்த் தொண்டு” என்ற தலைப்பில் அண்ணா செய்த சாதனைகளையும் நிகழ்கால அரசியல் குறித்தும் சிறப்புரையாற்றினார்.கழக தோழர்கள் உட்பட நூற்றுக்கும்‌ மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்னூர் விஷ்ணு நன்றி கூறினார்‌. கழக ஏட்டின்‌ வளர்ச்சிக்கு சென்னை அடையாறு பகுதி இரா.வெங்கடேசன் ரூபாய் 7000 -கழக பொதுச் செயலாளரிடம் நிகழ்ச்சியில் வழங்கினார். தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் பேரன்பு 25-முழக்க சந்தாவுக்கான ரூபாய் 7500 தொகையைத் தலைவர் அவர்களிடம் வழங்கினார். நிகழ்வில் பிரவீன்,சுபாஷ்...

திருப்பரங்குன்றம்! சங்கிகளின்‌ புரட்டு  மதக்கலவரத்தை உருவாக்க சதி

திருப்பரங்குன்றம்! சங்கிகளின்‌ புரட்டு மதக்கலவரத்தை உருவாக்க சதி

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்‌ என்ற‌ முழக்கத்தோடு சங் பரிவாரங்கள்‌ சதித்திட்டம் தீட்டி வருகின்றன. மதவெறி அமைப்புகளை தமிழ்நாட்டு ‌மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்‌ என்று திமுக,காங்கிரஸ்,மதிமுக,இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளன. மதுரை மாவட்ட காவல்துறையும் நீதித்துறையும் சங்கிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலை முழுவதும்‌ முருகனுக்கே சொந்தம் என்று சங்கிகள் கூறுவது வரலாற்று புரட்டு. உண்மையில் நடப்பது என்ன? மதுரையில் திருப்பரங்குன்றம் போல எண்ணற்ற பெருங்குன்றுகள் உள்ளன. இந்தக் குன்றுகள்அனைத்தும் நாட்டார்வழிபாடு, சமண, புத்த சமயங்கள், வைணவ, சைவமதங்கள், இசுலாமிய, கிறித்தவ சமயங்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் எந்தவித இடர்களும் சிக்கல்களும் இன்றி மக்களால் அமைதியான முறையில் வழிபட்டு வரப்படுகின்றன. இவ்வாறு தான் இசுலாமிய இறை மார்க்கத் தூதர்களின் வழிபாட்டு இடங்களில் ஒன்றான அவுலியா சிக்கந்தர்பாதூஷா அடக்கம் செய்யப்பட்ட தர்கா வழிபாட்டு இடம் திருப்பரங்குன்றம் மலை மீது இருநூறு ஆண்டுகளுக்கு...

“தமிழீழமும் – திராவிடர் இயக்கமும்!” கருத்தரங்கம்; கழகத் தலைவர் சிறப்புரை

“தமிழீழமும் – திராவிடர் இயக்கமும்!” கருத்தரங்கம்; கழகத் தலைவர் சிறப்புரை

கோவை மாநகரக் கழக சார்பில் 30.01.25 அன்று “தமிழீழமும் திராவிடர் இயக்கமும்“ சிறப்புக் கருத்தரங்கம் கோவை சிவானந்தா காலனியில் கழகத் தோழர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. மாநகரச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். தோழர்கள் லோகநாயகி, சதீஸ், ஜெகதீஸ், நவீன் முன்னிலை வகித்தனர். இதில் கழகத் தலைவர் கொளத்தூர்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் மலரவன் ஆகியோர் சிறப்பரையாற்றினர். கருத்தரங்கில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர்மணி, தமிழ் ஈழத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இன்ன பிற அமைப்புகளுக்கும் திராவிடர் இயக்கங்களும் அதன் தலைவர்கள் – தோழர்கள் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் – தொண்டர்கள் செய்த தன்னலமற்ற உதவிகளையும், பணிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் மற்றும் ஏனைய பொறுப்பாளர்கள், தளபதிகளின் ஆரிய மனுவாத எதிர்ப்பையும், புலிகளின் பகுத்தறிவு சார்ந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார். மேலும் இதில் விசிக மாநகர மாவட்டச் செயலாளர் கோவை குமணன், தி.மு.க....

பொதுவுடைமை இயக்கத்திற்கு உதவிய பெரியார் இயக்கம்

பொதுவுடைமை இயக்கத்திற்கு உதவிய பெரியார் இயக்கம்

அடக்குமுறையின் இருண்ட நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒளியேற்றியப் பெருமை திராவிடர் கழகத்தையேச் சாரும். பெரியாரின் ‘விடுதலை’ இதழ் மட்டுமே துணிச்சலுடன் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. 1950 பிப்ரவரி 11-இல் சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து ‘விடுதலை’ தீவிரத் தலையங்கம் எழுதியது. “பலிப்பட்ட 22 வீரர்களின் பெயர்கள் கூட வெளியிடப்படவில்லை. மரக்கட்டைகளாகவா கருதுகிறீர்கள்? அவர்களுக்கும் குடும்பம், உறவுகள் உண்டு. விசாரணைக் குழுவில் கம்யூனிஸ்ட் பிரதிநிதி அல்லது தொழிற்சங்கத் தலைவர் சக்கரைச் செட்டியாராவது இருக்க வேண்டும்” என்று துணிச்சலாக எழுதியது. பெரியார் கண்டனக் கூட்டங்கள் நடத்த அறைகூவல் விடுத்தார். 1951-இல் கட்சித் தடை நீக்கப்பட்டபோது, தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. தலைமறைவில் இருந்த பி.ராமமூர்த்தி பெரியார், குத்தூசி குருசாமியுடன் இரகசியமாக சந்தித்துப் பேசினார். நடிகவேள் எம்.ஆர்.ராதா தமிழ்நாடு முழுவதும் “ரத்தக்கண்ணீர்”, “முருகன்”, “பேப்பர் நியூஸ்” நாடகங்கள் நடத்தி நிதி திரட்டினார். பரமக்குடி, திருப்பூர், பொள்ளாச்சி, மதுரை, சென்னை என...

பெரியார் முழக்க சந்தா; சென்னை மாவட்டம் ரூ.30,000-/யை வழங்கியது

பெரியார் முழக்க சந்தா; சென்னை மாவட்டம் ரூ.30,000-/யை வழங்கியது

சென்னை மாவட்டக் கழக சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான புரட்சிப் பெரியார் முழக்க சந்தா தொகையாக ரூ.30,000/- 12.01.2025 அன்று திருவல்லிக்கேணியில் நடந்த பொங்கல் விழாவில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் 30012025 இதழ்

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளரும், புரட்சிப் பெரியார் முழக்கம் இதழின் ஆசிரியருமான விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ‘பெரியார் விருது’ வழங்கி பெருமை சேர்த்தது. இதற்காக பொதுச்செயலாளரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் அசோசியேசன் சங்க கட்டடத்தில் 26.01.2025 அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாணவர் நகலக உரிமையாளர் செளரிராஜன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வாலாசா வல்லவன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மருத்துவர் அமலோற்பவநாதன், வீ.அரசு, பேராசிரியர் கல்யாணி, தடா ஓ.சுந்தரம், பத்திரிகையாளர்கள் சிகாமணி, வீரபாண்டியன், சுகுணா திவாகர், வழக்கறிஞர் அஜிதா, மனநல மருத்துவர் சிவபாலன், மருத்துவர் தாயப்பன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் பொதுச்செயலாளர் உடனான தங்களது அனுபவங்கள், பொதுச்செயலாளரின் அர்ப்பணிப்புமிக்க இயக்க – எழுத்துப் பணிகளை பாராட்டிப் பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டனர்....

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரை-கடுவனூர் நாகராஜ் – சுலோச்சனா இல்லத் திறப்பு விழா

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரை-கடுவனூர் நாகராஜ் – சுலோச்சனா இல்லத் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி: கடுவனூர் கழகத் தோழர் மு.நாகராஜ் – நா.சுலோச்சனா ஆகியோரின் புதிய இல்லத் திறப்பு விழா 09.01.2025 அன்று கடுவனூர் கிராமத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதிய இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் செல்வி பகுத்தறிவுப் பாடலை பாடினார் கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முருகன், ராமச்சந்திரன், ஆசைத்தம்பி ரிஷிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர் கார்மேகம், ஒன்றியத் தலைவர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் மதியழகன், மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், விழுப்புரம் மாவட்டத் தலைவர் இளையரசன், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர்,  மக்கள் அதிகாரம் ராமலிங்கம், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் நிறைவாக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கதிரவன் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூமாலை, த.பெ.தி.க....

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.01.2025 அன்று மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத், மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், மாவட்ட அமைப்பாளர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுதா மற்றும் பொறுப்பாளர்களும், தோழர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். 2025ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் இயக்க வளர்ச்சி குறித்தும் தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். புரட்சிப் பெரியார் முழக்க சந்தா தொகையை வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தலைமைக்கு ஒப்படைப்பது குறித்தும், சேலம் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நங்கவள்ளி கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளராக இராஜேந்திரன்,...

சென்னை – திருப்பூரில் பொங்கல் விழா

சென்னை – திருப்பூரில் பொங்கல் விழா

சென்னை : திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 25ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 12.01.2025 அன்று இராயப்பேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். கோபிநாத் வரவேற்புரை நிகழ்த்தினார். இராஜேசு – தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, கழகத் தலைமை நிலையச் தபசி குமரன், தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், வட்டச் செயலாளர் க.வே.மோகன், வி.சி.க. எஸ்.எஸ்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து அதிர்வு கலைக்குழுவின் தமிழர் மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், பகுதி மாணவிகளின் மாறுவேடப் போட்டி, பட்டுக்கோட்டை அபிராமியின் கிராமியப் பாடல்கள் மற்றும் பூவையார், கானா பிரபா, மெர்லின் ஆகியோரின் கானா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 2024ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார்...

பெருந்திரளாகப் பங்கேற்ற கழகம்

பெருந்திரளாகப் பங்கேற்ற கழகம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அருண், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவிபாரதி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் பெரியார் சாக்ரடீஸ், கடலூர் சிவா, பெங்களூரு சித்தார்த்தன், திண்டுக்கல் மாக்சிம் கார்கி உட்பட சென்னை, திருச்சி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். நீலாங்கரை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி சீமான் வீடு அருகில் உள்ள ரிலையன்ஸ் மார்க்கெட்...

வீட்டுக்குள் பதுங்கிய சீமான்!

வீட்டுக்குள் பதுங்கிய சீமான்!

ஆர்ப்பாட்டம் நடைபெறும் வரை காவல்துறை பாதுகாப்போடு சீமான் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து முடித்தவுடன், வெளியே வந்து ஊடகங்களுக்கு வீராவேசமாக பேட்டி அளித்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் வீட்டை நெருங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். “காவல்துறை பாதுகாப்பு எனக்கு வேண்டாம், ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதியுங்கள்” என முன்பே சொல்ல சீமானுக்கு தைரியம் இல்லாமல் போனது ஏன் என அந்த பேட்டியைப் பார்த்து பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர். மீண்டும் மீண்டும் பெரியார் குறித்து சீமான் வைக்கும் விமர்சனங்களால் பெரியாரின் புகழ் மென்மேலும் பரவிக் கொண்டிருக்கிறது. எதிரிகள்தான் தனக்கு விளம்பரமே என வாழ்ந்த காலத்திலேயே கூறியவர் பெரியார். இப்போது மறைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் அந்த கூற்று நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது. சீமானின் விமர்சனங்களால் பெரியார் தமிழ் குறித்தும், பெண்கள் குறித்தும் உண்மையில் என்ன கூறினார் என்று தேடித்தேடி இளைஞர்கள் படிக்கிற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் இதுவரை சென்று சேராத தரப்பினரிடமும் பெரியாரின்...

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார். பெரியார் குறித்து அவர் வைக்கும் விமர்சனங்களுக்கு ஆதாரம் கேட்டால், அவரின் சங்கி நண்பர்களான அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும், தமிழிசை செளந்தரராஜனும், துக்ளக் குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களும் ஆதாரத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை சீமானும் ஆதாரத்தைத் தரவில்லை, அவருடைய சங்கி நண்பர்களும் ஆதாரத்தைத் தரவில்லை. சீமானின் இத்தகைய அவதூறுப் பேச்சு பெரியாரிய உணர்வாளர்கள் மத்தியிலும், பொதுமக்களிடத்திலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அவதூறுப் பேச்சுக்களை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று பல்வேறு தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சீமானோ மீண்டும் மீண்டும் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனால் சனவரி 22-ஆம் தேதி பனையூரில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடப்போவதாக ‘பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ அறிவித்திருந்தது. சீமானின் அருவருப்புப் பேச்சுகளால் ஆத்திரமடைந்த பெரியாரியத் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைநகர்...

கோவையில் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்!

கோவையில் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்!

கோவை மாநகர மாவட்டக் கழக சார்பில் புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம் 24.12.2024 அன்று சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகில் கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக நிகர் கலைக்குழுவின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் “தற்கால அரசியலும் அம்பேத்கரும்” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், “ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் “ என்ற தலைப்பில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனும், “மார்க்சிய பார்வையில் பெரியாரும் – அம்பேத்கரும்” என்ற தலைப்பில் சிபிஐ (மாலெ) ரெட் ஸ்டார் மத்தியக்குழு உறுப்பினர்  மு. இனியவனும்  சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்ப்புலிகள் கட்சி பொதுச்செயலாளர் இளவேனில், தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, கோவை மாநகரத் தலைவர் நிர்மல்...

ஜாதி அமைப்பு முறையைத் தகர்க்காமல் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடாது!

ஜாதி அமைப்பு முறையைத் தகர்க்காமல் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடாது!

தற்போது இந்தியாவில் நிலவுகிற பாசிச காவி கார்ப்ரேட் இந்துத்துவ அரசியல் சூழலில் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த அரசியல் மாநாட்டிற்கு (24.12.2024) நான் சார்ந்திருக்கும் சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார் சார்பாக புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிய பார்வையில் பெரியார், அம்பேத்கார் என்கிற தலைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரை மார்க்சிய பார்வையில் அணுகுவது என்னளவில் சற்று கடினமான பணி என்பதால் தோழர்களின் ஒப்புதலோடு அதனை சற்று மாற்றத்திற்கு உட்படுத்தி “கம்யூனிஸ்ட் பார்வையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்” என்கிற தலைப்பினில் எனது உரையை முன்வைக்கிறேன். ஏனென்றால், மார்க்சியம் என்பது சமூக அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டு அடிப்படையிலான தத்துவம். பொதுவாக கோட்பாட்டளவில் ஓர் மார்க்சிஸ்ட்டாக வாழ்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் கம்யூனிஸ்ட் என்பது மார்க்சிய அடிப்படையிலான கட்சி, கொள்கை அரசியல் முன்னெடுப்பு சார்ந்தது என்பதனால்...

முதலமைச்சரின் தகுதியுரை

முதலமைச்சரின் தகுதியுரை

தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாள ருமான திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள், 1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் தொடர்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தி பெரியாரின் கொள்கைகளைப் பேசவும் எழுதவும் தொடங்கியவர். தந்தை பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியவர். பெரியாரின் இயக்க ஏடுகளில் 25 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றியதோடு பெரியார் பேசிய கூட்டங்களில் அவரது உரையைக் குறிப்பெடுத்து பதிவு செய்தவர். இவர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தந்தை பெரியாரின் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமைத் தளங்களில் கடந்த 58 வருடங்களாகத் தொண்டாற்றி வருகிறார். பெரியார் கண்ட கனவான ஜாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகவும் மக்களை அணிதிரட்டிப் போராடி வருபவர். மக்களை விழிப்படையச் செய்யும் வகையில்...

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

பெரியார் பேசுபொருளாக மாறியிருக்கிற காலச்சூழலில் திராவிட மாடல் அரசு எனக்கு பெரியார் விருது வழங்கி கவுரவித்திருப்பதை ஒரு மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன். பெரியார் கருத்துக்கள் நாட்டிற்கு மிக மிகத் தேவையான கருத்துக்களாக இருக்கிறது என்பதைச் சமகால சமூக – அரசியல் சூழல்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பெரியாரியலை மேலும் வலுவாகக் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளாக உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பெரியாரியத்தின் எதிரிகளே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் காலத்தில் இருந்து அவருடைய கொள்கைகள் வேகமாகப் பரவியது அவருடைய எதிரிகளால் தான் என்று பெரியாரே திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். எனவே இந்த ஒரு சூழ்நிலையில் பெரியார் விருதை வழங்கி கவுரவித்திருப்பது, பெரியாரியத் தொண்டை மேலும் உற்சாகமாகச் செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிற விருதாகவே நாங்கள் கருதுகிறோம். அதற்காக முதலமைச்சருக்கு எங்களுடைய நன்றி. பெரியாரியலுக்கு எதிராக பரப்பப்படும் தவறான திசைதிருப்பும் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உந்துசக்தியும் அதிகரித்திருக்கிறது. பெரியாரியலை இன்னும் வேகமாக முன்னெடுக்க...

இராயப்பேட்டையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு

இராயப்பேட்டையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சனவரி 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகப் பொதுச்செயலாளருக்கு பெரியார் விருதுடன், ரூ.5 இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கிக் கவுரவித்தார். ஏற்கெனவே கழகப் பணிகள் மற்றும் பொதுச்செயலாளரின் அரை நூற்றாண்டுக்கும் மேலான எழுத்துப் பணிகளுக்கான அங்கீகாரமாக, 2022-ஆம் ஆண்டில் கழகப் பொதுச்செயலாளரின் நூல்களை நாட்டுடைமையாக்கிப் பெருமை செய்தது திராவிட மாடல் அரசு. தற்போது பெரியார் குறித்த விவாதங்களும், உரையாடல்களும் தீவிரமாக நடந்துவரும் இந்த காலகட்டத்தில் பொதுச்செயலாளருக்கு பெரியார் விருது அளித்திருப்பது கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராயப்பேட்டையில் உற்சாக வரவேற்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் சரஸ்வதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி...

விடுதலை இராசேந்திரனுக்கு ஆடை போர்த்தி பாராட்டு!

விடுதலை இராசேந்திரனுக்கு ஆடை போர்த்தி பாராட்டு!

தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனை மேடைக்கு அழைத்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

பேராவூரணியில் பெரியாரியல் பயிலரங்கம்

பேராவூரணியில் பெரியாரியல் பயிலரங்கம்

பேராவூரணி: பெரியாரின் 51ஆவது நினைவுநாளை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் மாணவர்களுக்கான பெரியாரியல் பயிலரங்கம் 25.12.2024 அன்று செங்கை க.கதிர்வேல் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக தோழர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் பெரியார் அறிமுகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் “திராவிட இயக்க வரலாறு” குறித்தும் “பெரியார் கொள்கையின் இன்றைய தேவை” குறித்தும் உரையாற்றினார். மதிய உணவிற்கு பிறகு இட ஒதுக்கீடு வரலாறு குறித்து உரையாற்றினார். நிறைவாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09012025 இதழ்

முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.

முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.

பெரியாரின் பெரும் தொண்டரும், தமிழ்நாடு அரசின் ‘நல்லாசிரியர்’ விருது பெற்றவரும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததற்காக, தனது மகள், மகனுடனும், கழகத் தலைவர், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் ஆகியோருடன் தடா வழக்கில் சிறை சென்றவருமான முடி கொண்டான் சா.சாரங்கபாணி, தனது 93ஆவது வயதில் 03.01.2025 அன்று தனது இல்லத்தில் முடிவெய்தினார். அவருக்கு நமது புகழ் வணக்கங்கள். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

தமிழ்நாடு மாணவர் கழக மாணவர்கள் சாதனை

தமிழ்நாடு மாணவர் கழக மாணவர்கள் சாதனை

நாசா, ஐஏஎஸ்சி, எஸ்ஐஏயூ இணைந்து நடத்திய பிஎஸ்1 மற்றும் பிஎஸ்2 தொலைநோக்கிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் விண்கற்களை கண்டுபிடிக்கும் போட்டியில் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் துறையிலிருந்து சந்தியா, ஷியாம், பிரபாகர், அகிலேஷ்வரன், பிஎஸ்சி வேதியியல் துறையிலிருந்து கோபாலன் ஆகிய தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களும் இவர்களுடைய ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு.கலைச்செல்வன் அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் கூடுதல் சிறப்பாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் “3 புதிய” விண்கற்களை கண்டுபிடித்துள்ளதால் அந்த விண்கற்களுக்கு பெயர் சூட்டும் அரிய வாய்ப்பை நமது தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களுக்கு நாசா வழங்கியுள்ளது. 3 விண்கற்களில் ஒன்றுக்கு “பெரியாரியல்” சார்ந்தப் பெயரை நாசாவிடம் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் பரிந்துரைக்க உள்ளனர். இதற்கு நாசா ஒப்புதல் தரும்பட்சத்தில் வானியல் சார்ந்த ஆராய்ச்சியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் பெயர் இடம்பெறும் என்றும் தமிழ்நாடு...

விடுதலை இராசேந்திரனுக்கு அரசின் ‘தந்தை பெரியார்’ விருது!

விடுதலை இராசேந்திரனுக்கு அரசின் ‘தந்தை பெரியார்’ விருது!

தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் விருது – படிக்கராமு பேரறிஞர் அண்ணா விருது – எல்.கணேசன் பாவேந்தர் பாரதிதாசன் விருது – பொ.செல்வராஜ் பாரதியார் விருது – கவிஞர் கபிலன் திரு.வி.க. விருது – டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திரநாத் அண்ணல் அம்பேத்கர் விருது – துரை.ரவிக்குமார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – பொதியவெற்பன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது – முத்து வாவாசி பொதுச்செயலாளருக்கு விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சீமான் முகத்திரை கிழிந்தது

சீமான் முகத்திரை கிழிந்தது

தந்தை பெரியாரை அவமதிக்கும் சீமானைக் கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை 5.1.2025 அன்று மாலை சென்னையில் சைதைத் தேரடி தெருவில் பொதுக்கூட்டம் நடத்தியது. அனைத்துப் பெரியார் இயக்கத் தோழர்களும் பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வந்திருந்தனர். ஏராளமான இளைஞர்கள் பெரியார் படம் போட்ட டீ சட்டையுடன் உணர்வுபூர்வமாக பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவரின் உரையும் அழுத்தமானதாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. சீமான் என்ற ஏமாற்றுப் பேர்வழி நாக்கில் நரம்பின்றி சாக்கடை மொழியில் பெரியாரைப் பேசுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்று எச்சரிப்பதாக இருந்தது இக்கூட்டம். கூட்டம் கருங்கடலில் மூழ்கி இருந்த நிலையில் ‘சீமான் ரசிகர்கள்’ கூட்டத்துக்கு ஆள் வரவில்லை என்று பொய்யாக வெளியிட்ட ‘ட்வீட்’டுகளை மக்கள் மத்தியில் படித்துக்காட்டிய போது கூட்டத்தினர் கைத்தட்டி எள்ளி நகையாடினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உள்ளிட்ட கழகத் தோழர்களும், திராவிடர்...

“பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?”

“பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?”

As “மாநாட்டுத் தீர்மானங்கள் !” திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?” “வாருங்கள் வரலாறு பேசுவோம்!!” பரப்புரை பயணத்தின் நிறைவு மாநாடு மயிலாடுதுறை – 22.03.2025 . மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தீர்மானம் எண் 1 : “தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும்.அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று பெரியார் பணி...

அடைமழையாகப் பரப்புரைக் கூட்டங்கள் 2024 – கழகத்தின் களப்பணிகள்

அடைமழையாகப் பரப்புரைக் கூட்டங்கள் 2024 – கழகத்தின் களப்பணிகள்

ஜனவரி: சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வட சென்னை, திருப்பூரில் கழக சார்பில் பொங்கல் விழாக்கள் நடந்தன. திருவல்லிக்கேணி விழாவில் சென்னை மேயர் பிரியா சிறப்பு விருந்தினர். திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையர் குடும்ப விழாவை இந்திய அரசியலும் பார்ப்பனியமும் என்ற கருத்தரங்கமாக நடத்தினர். சிறப்புரை : கொளத்தூர் மணி. பிப்ரவரி: ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கழகம் தொடர் கூட்டங்களை நடத்தியது. சென்னை, சேலம், திண்டுக்கல், திருச்சி மற்றும் ஈரோடு தெற்கு பகுதிகளில் கூட்டங்கள் நடந்தன. பிப்ரவரி 03: மதுரை மாவட்டக் கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்குப் பாராட்டு விழா. பிப்ரவரி 15: திண்டுக்கல், திருப்பூர், சென்னை மாவட்டங்களில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” “சமூக ஒற்றுமையைக் காப்போம்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. மேட்டூரில் பரப்புரைக் கூட்டத்துக்கு ஜலகண்டபுரம் காவல்துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று கூட்டங்கள் நடந்தன....

சீமானுக்கு ஒரு திறந்த மடல் – கலாநிதி சேரமான்

சீமானுக்கு ஒரு திறந்த மடல் – கலாநிதி சேரமான்

சீமானுக்கு ஒரு திறந்த மடல் – கலாநிதி சேரமான் முப்பாட்டன் முருகனின் வழித்தோன்றலே. ஜேக்கப்பின் பேரனே. செபஸ்தியன் ஈன்றெடுத்த சைமனே. சட்டமன்றத் தேர்தலில் களமாடி வென்று, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக மும்முடி சூடுவதற்கான ஆயத்தங்களில் மும்முரமாக நீங்கள் ஈடுபட்டிருக்கும் சூழலில் உங்களுக்கு மடல்  எழுதி சிரமம் கொடுக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தோம். தொப்பை வண்டியோடும், வேட்டைக்குப் பயன்படுத்தும் கட்டுத் துப்பாக்கிகளுடனும் காவலுக்கு நிற்கும் தமிழக காவல்துறையினரை ஆட்சிக்கு வந்ததும் மீன்பிடிப்படகுகளில் அனுப்பி  சிங்களப் படைகள் மீது போர் தொடுத்துக் கச்சதீவை மீட்க வேண்டும்! சிங்களக் கடற்படையால் நடுக்கடலில் தாக்கப்படும் தமிழக மீனவர்களைக் காப்பதற்கு உங்கள் கொப்பாட்டனார் இராசராச சோழன் வழியில் கப்பற் படை அமைக்க வேண்டும்! காவிரி ஆற்று நீரைத் தடுக்கும் கர்நாடகாவுக்குள் உங்கள் ஓட்டனார் இராசேந்திர சோழன் வழியில் பாய்மரக் கப்பல்கள் சகிதம் நுழைந்து ரெட்டிமார்மீது போர் தொடுத்து காவிரி ஆற்று  நீரை தமிழகத்திற்குள் பாய்ச்ச வேண்டும்! கண்ணகியை நிந்தித்த...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தீர்மானம் 1 பெரியார் அடையாளப்படுத்திய ஆரிய திராவிட போராட்டம் இப்போது மனு நீதி எதிர் சமூக நீதி, ஹிந்து இராஷ்ட்ரம் எதிர் அரசியல் சட்டம் என்று வடிவெடுத்து இருக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சி பெரும்பான்மை அற்ற நிலையிலும் பார்ப்பனிய மனுவாத சீரழிவுக் கொள்கையை நோக்கி நாட்டை இழுத்து செல்கிறது. இதற்கு எதிரான தத்துவார்த்த போராட்டம் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது, திராவிட மாடல் ஆட்சி தான் இதைத் தடுத்து நிறுத்தும் வலிமைபெற்ற அரணாக நிற்கிறது. அதை சீர்குலைக்க எந்தவித முறைகேடுகளையும் பயன்படுத்தி அகற்றுவதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. திராவிட மாடல் ஆட்சியின் இருத்தல் என்பது பார்ப்பனிய ஹிந்து இராஷ்டர முறியடிப்புக்கான தேவையாகவும் அவசியமானதாகவும் வரலாறு கோரி நிற்கிறது. இந்த அடிப்படை கருத்தை கவனத்தில் கொண்டு அரசுக்கு வலிமை சேர்க்க வேண்டிய அவசியத்தை இந்த செயலவை வலியுறுத்துகிறது. இந்த...

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

சேலம்: சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.09.2024 அன்று சேலம் தாதகாப்பட்டியில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏற்காடு தேவபிரகாசு தலைமை தாங்கினார். அமைப்பாளர் வெற்றிமுருகன் முன்னிலை வகித்தார். இதில் வருகிற 16.10.2024 அன்று சேலம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநர் ரவியைக் கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், பெரியார் நினைவு நாளில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A (h) மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை விளக்கி மாணவர்களிடையே விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது எனவும், மாணவர் விடுதிகளில் சந்திப்பு – அறிவியல் கண்காட்சி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மாநகரத் தலைவர் பாலு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகரச் செயலாளர்...

குன்றக்குடி அடிகளார் மற்றும் சேரன் மாதேவி நூற்றாண்டு சிறப்பு வாசகர் வட்டம்

குன்றக்குடி அடிகளார் மற்றும் சேரன் மாதேவி நூற்றாண்டு சிறப்பு வாசகர் வட்டம்

“குன்றக்குடி அடிகளார்” மற்றும் “சேரன் மாதேவி” நூற்றாண்டு சிறப்பு நிமிர்வோம் வாசகர் வட்ட 24வது சந்திப்பு 29.09.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சந்திப்பிற்கு தௌபீக் தலைமை தாங்கினார். மயிலை அஸ்வின் வரவேற்புரையாற்றினார். பொன்மலர் முன்னிலை வகித்தார். முதல் நிகழ்வாகத் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் படத்தைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார். பின்னர் “வைதீக எதிர்ப்பு மரபில் பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும்!” என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனும், “பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சியில் சேரன்மாதேவி” என்ற தலைப்பில் கழக இளைஞரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளர் ஜெயப்பிரகாசும் சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக நிறை நன்றி கூறினார். வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாசு நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, ஆய்வாளர் பழ.அதியமான் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார்...

சரவணக்குமார் எழுதிய இரு நூல்கள் வெளியீடு! கழகப் பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

சரவணக்குமார் எழுதிய இரு நூல்கள் வெளியீடு! கழகப் பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

சென்னை: எழுத்தாளரும், கழகத் தோழருமான சரவணக்குமார் எழுதிய ‘ஊர் வாயி’, ‘இவர்களும் தெய்வமாக்கப்படலாம்’ என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா 06.10.2024 அன்று பெருங்குடியில் உள்ள கழகப் பொதுச் செயலாளரின் இல்லத்தில் நடைபெற்றது.. நூலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி பெற்றுக் கொண்டார். இதில் நூலாசிரியர் சரவணக்குமார், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், அருள் நாராயணா, கோபிநாத், அன்னூர் விஷ்ணு, அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 10.10.2024 இதழ்

திருப்பூரில் எழுச்சி; கழக சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றம்!

திருப்பூரில் எழுச்சி; கழக சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றம்!

திருப்பூர் : தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் 06.10.2024 அன்று காலை 11 மணி தொடங்கி இரவு 8 மணி வரை முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது. வீரபாண்டி பிரிவு, கொளத்துப்பாளையம், இராயபுரம், பெரியார் காலனி, 15-வேலம்பாளையம், அனுப்பர் பாளையம், அம்மாபாளையம், ஆத்துப்பாளையம், மாஸ்கோ நகர் உள்ளிட்ட இடங்களில் திருப்பூர் மாநகர அமைப்பாளர் சரஸ்வதி, தெற்கு பகுதி பொறுப்பாளர் இராமசாமி, மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர் கடத்தூர் அய்யப்பன், கார்த்தி, மோகன், மதன், சூர்யா, கார்த்திகா ஆகியோர் கழகக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தனர். இந்நிகழ்விற்குக் கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு முன்னிலை வகித்தார். இதில் கழக சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர் முத்து, மாநகரத் துணைத் தலைவர்...

தோழர் தேவ.சீனி சுந்தரம் மறைந்தார் உடல் கொடையாக வழங்கப்பட்டது

தோழர் தேவ.சீனி சுந்தரம் மறைந்தார் உடல் கொடையாக வழங்கப்பட்டது

மதுரை: பெரியார் திராவிடர் கழகத்தின் சிவகங்கை முன்னாள் மாவட்டத் தலைவரும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் காப்பாளருமான தளபதி அவர்களின் தந்தையுமான தேவ.சீனி.சுந்தரம் 21.09.2024 அன்று முடிவெய்தினார். 23.09.2024 அன்று நடைபெற்ற இறுதி நிகழ்வை பெண்களே முன்னின்று நடத்தினர்.சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அவரது “உடல் கொடை”யாக வழங்கப்பட்டது. முன்னதாக கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் த.தே.ம.மு. தலைவர் மீ.த.பாண்டியன், த.தே.பே, தி.க உள்ளிட்ட தோழமை அமைப்பினரும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்

மயிலாப்பூரில் சிந்தனைப் பலகை திறப்பு!

மயிலாப்பூரில் சிந்தனைப் பலகை திறப்பு!

தந்தை பெரியார் 146வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் பெரியார் சிந்தனைப் பலகையை ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி திறந்து வைத்தார். பகுதித் தமிழ் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வை மயிலைப் பகுதித் தோழர்களான மாணிக்கம், அருண், அஸ்வின், கார்த்திக் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்