Category: திவிக

வள்ளலார் வைதீக எதிர்ப்பு கருத்தரங்கம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

வள்ளலார் வைதீக எதிர்ப்பு கருத்தரங்கம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

  சமகால அரசியல் சூழல் குறித்த விவாதம் பெரியார் முழக்கம் சந்தா 1000 இலக்காக வைத்து சேர்ப்பது சென்னை மாவட்ட கழகத்தின் எதிர்கால திட்டங்கள், ஆகியவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வட சென்னை, திருவல்லிக் கேணி, மயிலை, அடையாறு, திருவான்மியூர், நங்கநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், சூலை, ராமாபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். முன்னதாக, கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்,  “தமிழ்நாட்டில் பார்ப்பனிய மதவாதம் காலூன்று வதற்கு எப்படி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றன என்பதை விளக்கினார். கட்சிகளை உடைத்தல்; ஊடகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்; தமிழ்நாட்டில் இரண்டா வது இடத்தில் பா.ஜ.க. இருப்பது போன்ற பிம்பங்களைக் கட்ட மைத்தல்; இந்த செயல் திட்டங் களுக்காகப் பணத்தை பெருமளவு செலவு செய்தல் போன்ற விரிவான  தகவல்களைப் பகிர்ந்து கொண் டார். உண்மைக்கு மாறான பா.ஜ.க.வின் பரப்புரைகளை நாம் எப்படி சந்திக்க வேண்டும் என்பது பற்றியும்...

நங்கவள்ளிப் பகுதியிலில் கழகத்தில் இணைந்த 30 தோழர்களுக்கு பயிற்சி வகுப்பு

நங்கவள்ளிப் பகுதியிலில் கழகத்தில் இணைந்த 30 தோழர்களுக்கு பயிற்சி வகுப்பு

நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 07.10.2022 வெள்ளி அன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நங்கவள்ளி சமுதாயக் கூடத்தில் புதிய தோழர்களுக்கான ‘பெரியாரியல் ஓர் அறிமுகம்’ எனும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இவ்வகுப்பிற்கு நகரச் செய லாளர்  பிரபாகரன் அனைவரை யும் வரவேற்று புதிய தோழர் களின் அறிமுகத்தோடு துவக்கி வைத்தார். காலை முதல் அமர்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தமிழகம் பெரியாருக்கு முன் பின்’ எனும் தலைப்பிலும், மதியம் இரண்டாம் அமர்வில் கழக பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன்  ‘திராவிடர் விடுதலைக் கழகத் தின் செயல்பாடுகள்’ குறித்தும், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ‘கழகத்தின் களப் பணிகள்’ குறித்தும் உரையாற்றினர். காலையிலும் மதிய உணவு இடை வேளைக்குப் பின்பும் வகுப்புகள் துவங்குவதற்கு முன் கழக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு, மேட்டூர் நகர கழக பொருளாளர் முத்துக்குமார்,...

திருச்செங்கோட்டில் பெரியார் பிறந்த நாள் விழா

திருச்செங்கோட்டில் பெரியார் பிறந்த நாள் விழா

பெரியார் பிறந்தநாளை ஒட்டி, 17.09.2022 அன்று காலை 9 மணியளவில், திருச்செங்கோடு புதிய  பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பெரியார் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர். பின்னர்  10 மணியளவில், திருச்செங் கோடு நகர செயலாளர் பூபதி தலைமையில், அண்ணாசிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பில்  வைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு, திராவிட முன்னேற்ற கழகம், ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை இயக்கங்கள் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர்  சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. திமுக சார்பில் திருச்செங்கோடு நகர் மன்றத் தலைவர் நளினி, துணைத் தலைவர் கார்த்தி, ஒன்றிய கவுன்சிலர் திருநங்கை ரியா, ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் செல்வ வில்லாளன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார் முழக்கம் 06102022 இதழ்    

குமரேசன்-பனிமலர் வாழ்க்கைத் துணை ஏற்பு

குமரேசன்-பனிமலர் வாழ்க்கைத் துணை ஏற்பு

சங்கராபுரம் , கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தன் – விஜியா இணையரின் மகன் குமரேசனுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி – வாசுகி இணையரின் மகள் பனிமலர் என்பவருக்கும் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் கடுவனூர் பெரியார் திடலில், கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்டத் தலைவர் க.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு   குமார் – அம்சவள்ளி வரவேற்புரை கூறினர். சடங்கு, சம்பிரதாயங்கள், பார்ப்பன அர்ச்சகரைத் தவிர்த்த இந்த வாழ்க்கை இணை ஏற்பிற்கு உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். புதுவை ‘விடுதலைக் குரல்’ குழுவின் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இணையர் ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கினர். நிறைவாக மணமக்கள் நன்றி கூறினர். பெரியார்...

மனுசாஸ்திரத்தைத் தடை செய்: சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

மனுசாஸ்திரத்தைத் தடை செய்: சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் பிறந்தநாளை ஒட்டி செப்டம்பர் 17 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் மற்றும் புத்தூரில் உள்ள பெரியாரின் சிலைக்கு மா.குமார் மற்றும் தே.ச.அன்புரவி ஆகியோரின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அன்று மாலை 4 மணியளவில் ரிஷிவந்தியம் ஒன்றியம் வானாபுரம் – பகண்டை கூட்டுச் சாலையில் கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் மு.நாகராஜ் தலைமையில் ‘சனாதனத்தை வேரறுப்போம்’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்ட செயலாளர் க. இராமர், மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஊட்டத்திற்கு ரிஷிவந்திய ஒன்றிய அமைப்பாளர் இரா.கார்மேகம், ஒன்றிய தலைவர் மா. குமார், சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் தே.க. அன்புரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ.முருகன் நன்றி கூறினார். கூட்டத்தில், இரா.வீரமணி, இரா. ஜீவா, மு.ச.பா, கௌதம், ச.சுபாஷ், கு. பாபா, நீதிபதி உள்ளிட்ட தோழர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம்...

அரசு அலுவலகங்களில் மத வழிபாடு நடத்துவது அரசாணைக்கு எதிரானது

அரசு அலுவலகங்களில் மத வழிபாடு நடத்துவது அரசாணைக்கு எதிரானது

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த வழிபாடுகளை, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகளை கொண்டாடக் கூடாது என தலைமைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள்  ஆணைகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளனர். ஆனால் அந்த ஆணைகளை அவமதிக்கும் வகையில் மத வழிபாடுகளை  அரசு அலுவலகங்களில் தொடர்ந்து நடத்துகிறார்கள். எனவே தமிழ்நாடு அரசின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கும், சமூக அமைதிக்கும் எதிரான ஆயுத பூஜை வழிபாடுகள் அரசு அலுவலகங்களில் நடந்திடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 23.9.2022 அன்று காலை 11 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் ஆணையர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட தோழர்கள்: பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருஷ்ணன், மாதவன், இயல் , சிவராசு, ஸ்டாலின் ராஜா , சதீஷ் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 06102022 இதழ்      

பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்

பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்

  பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று கொடி ஏற்றம்; தெருமுனைப் பரப்புரை; பொதுக் கூட்டங்களை கழகம் நடத்தியது. தூத்துக்குடியில் பால் பிரபாகரன் உரை : ஆரிய விசம் முறிக்கும் அருமருந்து தந்தை  பெரியாரின் 144வது பிறந்த நாளில் சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்பீர் என்று தி.வி.க பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அறைகூவல் விடுத்தார். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் 17.09.2022 தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனாதன எதிர்ப்பு விளக்கப் பொதுக் கூட்டமாக தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு தருவைகுளம் முதன்மை சாலையில் நடைபெற்றது. நிகழ்விற்கு தி.வி.க.மாவட்ட துணைத் தலைவர் ச.கா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வே.பால்ராசு, ச.ரவிசங்கர், ம.அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சா.த.பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவர் தனது உரையில் “தந்தை பெரியாரின் உழைப்பால் சமத்துவ சமூக மாற்றம் ஏற்பட்டு...

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி (சுயமாக சிந்தித்து) ஒரு போதும் இருக்கக் கூடாது.” (மனு சாஸ்திரம் அத்தியாயம் 5, சுலோகம் 148.) கணவன் துராசாரமுள்ளவனாக “(ஒழுக்கக்கேடுகள் உள்ளவனாக) இருந்தாலும் அன்னிய ஸ்திரீலோலனாக (வேறு பெண்களோடு உறவு வைத்துக் கொள்ள துடிப்பவன்) இருந்தாலும், பதிவிரதைகளான பெண் என்பவள், அந்தக் கணவனை தெய்வத்தைப்போல் வணங்க வேண்டும்.” (மனு சாஸ்திரம், அத்.5, சுலோகம் 154) பெண்கள் துரோகிகள் ; பெண்களைக் கொல்லுவது பாவமில்லை. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.   (அத்தியாயம் 9 ; ஸ்லோகம் 17) பெண்களையும், பிராமணர் அல்லாதவரையும் கொல்லுவது பாவமில்லை. (அத்தியாயம் 11; ஸ்லோகம் 65) சூத்திரர்கள் அனைவரும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள். சூத்திரர் என்போர் ஏழு...

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக் கூட்டம்

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக் கூட்டம்

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் மூட நம்பிக்கை நாள் ஒழிப்புப் பொதுக் கூட்டம் செப்டம்பர் 24, அன்று மாலை 7 மணியளவில் மேடவாக்கம் அரசுப் பள்ளிப் பேருந்து நிறுத்தம் அருகே நடந்தது. பொது மக்கள் பெரும் கூட்டமாகக் கூடும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு கருத்துகளைக் கேட்க ஏராளமான பொது மக்களும் கொள்கை ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். நிலவழகன் தலைமையில் (மக்கள் தமிழகம்) நடந்த கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வன்னியரசு (வி.சி.க.), வந்தியத்தேவன் (ம.தி.மு.க.), பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொழிலன் மற்றும் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் உரையாற்றினர். கூட்ட நிகழ்வுகளை வழக்கறிஞர் பாவேந்தன் (தமிழக மக்கள் முன்னணி) ஒருங்கிணைத்தார். பெரியார் முழக்கம் 29092022 இதழ்    

கொட்டும் மழையில் பெண்கள் ஆர்ப்பாட்டம் “இந்து”ப் பெண்களை இழிவுபடுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய்

கொட்டும் மழையில் பெண்கள் ஆர்ப்பாட்டம் “இந்து”ப் பெண்களை இழிவுபடுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய்

ஆர்ப்பாட்டத்தில்….. ஆ. ராசாவுக்கு பெண்கள் துணை நிற்போம்! குற்றம் என்ன? குற்றம் என்ன? ஆ. ராசா செய்த குற்றம் என்ன? ஆதரிப்போம்; ஆதரிப்போம்; ஆ. ராசாவின் கருத்துகளை ஆதரிப்போம்! துணை நிற்போம்; துணை நிற்போம்; ஆ. ராசாவுக்கு துணை நிற்போம்! – என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. “இந்து”ப் பெண்களை இழிவுபடுத்தும் மனு சாஸ்திரத்தை தடை செய் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார் இறுதி உரை நிகழ்த்திய தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை முன்பு 26.09.2022 அன்று மாலை 3.30 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வழி நடத்தினர். பேராசிரியர் சரசுவதி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ‘உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டு விட்டு சாகப் போகிறேனே’ என்று பெரியார் தனது இறுதி உரையில் சமூகக் கவலையோடு பேசிய இடத்தில் ‘சூத்திரர்களாக்கும்’ மனு தர்ம...

ட 170 கி.மீ மேல் பயணம்   ட 45 க்கு மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா  ட பெண் தோழர்கள் திரளாக பங்கேற்பு  மேட்டூர் பகுதியைக் குலுக்கிய வாகனப் பேரணி

ட 170 கி.மீ மேல் பயணம் ட 45 க்கு மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா ட பெண் தோழர்கள் திரளாக பங்கேற்பு மேட்டூர் பகுதியைக் குலுக்கிய வாகனப் பேரணி

தந்தை பெரியார்  144ஆவது பிறந்த நாள் விழா சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 17.09.2022 சனி காலை 10.00 மணிக்கு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜ் தலைமையில் தொடங்கியது. மேட்டூர் அருகே உள்ள கோனூர் சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு பெண் தோழர்கள் மாலை அணிவிக்க கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேன்மொழி உறுதிமொழி கூற அனைத்து தோழர்களும்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாலை அணிவிப்பு நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழக நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் அர்த்தனாரீஸ்வன் (எ) சின்னு, பி.என்.பட்டி பேரூராட்சி முன்னாள் சேர்மேன் பொன்னுசாமி மற்றும் தி.மு.க.வைச் சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். மாலை அணிவிக்கும் நிகழ்வில் சுசீந்திரன் – கிளாரா மேரியின் பெண் குழந்தைக்கு ஆதினி என்ற பெயர் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பேரணி மல்லிகுந்தம் பகுதிக்கு புறப்பட்டது.  மல்லிகுந்தம் பகுதியில்...

பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்துத்துவா போக்கு: கொளத்தூர் மணி கண்டனம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை:

பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்துத்துவா போக்கு: கொளத்தூர் மணி கண்டனம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை:

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொடர் இந்துத்துவப் போக்கினை இன்னொரு நிகழ்வு வழியாகவும் வெளிக்காட்டி இருப்பதை சுட்டிக்காட்டுவதும், அதற்கான எதிர்வினைகளைப் பற்றி சிந்திக்கக் கோருவதும் தான் இந்த அறிக்கையின் நோக்கமாகும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக 14.9.2022 அன்று ‘பெரியாரை வாசிப்போம்’ என்ற நிகழ்வு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். அந்த அறிக்கையில் அன்று அனைவரும் வாசிக்க வேண்டிய செய்திகளையும் கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கை தொடங்குகிற போது திருமூலரின் ஒரு பாடலோடு தொடங்குகிறது. அந்தப் பாடலில் உள்ள பொருளைச் சொல்லி இருந்தாலும் பெரியாரின் தத்துவ பார்வையும், அறிவுக்கான தேடலும், சமூக விடுதலைக்கான அணுகுமுறையும் போர்க்குணம் மிக்க அறிவுத் தேடல் ஆகும் – என்ற செய்திகளுடன் முடிகிறது  முதல் பத்தி. ஏதேனும் ஒரு மேற்கோள் காட்டியாக வேண்டும் என்று விரும்பி...

எழுச்சியுடன் நடந்த சனாதன எதிர்ப்புக் கூட்டம்

எழுச்சியுடன் நடந்த சனாதன எதிர்ப்புக் கூட்டம்

“சனாதனத்தை வேரறுப்போம்” பொதுக் கூட்டம், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலை பி.எம்.தர்கா அருகில், 17.09.2022 அன்று  மாலை 6 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பெரியார் படிப்பகத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடை வரை பறை இசை முழங்க ஊர்வலமாக தோழர்கள் சென்றனர். தொடர்ந்து, அண்மையில் மறைந்த திமுக பகுதி முன்னாள் அவைத் தலைவர், பகுத்தறிவாளர் க.வே செழியனின் படம் பொதுக் கூட்ட மேடையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறக்கப்பட்டது. பின், முடிவெய்திய லெனின் சுப்பையா அவர்களின் வழித் தோன்றல்களான புதுவை ‘விடுதலைக் குரல்’ இசைக் குழுவின் கருத்தாழமிக்க சாதி இந்துத்துவ எதிர்ப்பு இசை  நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த லெனின் சுப்பையா இணையர் நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு ஆடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. 24 அர்ச்சகர்களும் பணி ஏற்று...

ஓராண்டு பணி முடித்த அர்ச்சகர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழாவில் பாராட்டு

ஓராண்டு பணி முடித்த அர்ச்சகர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழாவில் பாராட்டு

பயிற்சிக் காலத்தில் பயிற்சி அளிக்க வந்த ஆசிரியரை பார்ப்பனர்கள் தாக்கினர். பணி நியமனமாகி ஓராண்டுக்குப் பிறகும் பல கோயில்களில் பூஜை செய்ய பார்ப்பனர்கள் அனுமதிப்பது இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைக்கப்பட்ட வயது வரம்பை 45ஆக உயர்த்தி ஆணையிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆகமக் கோயில் ஒன்றில் 2000 ஆண்டு வரலாற்றில் பார்பபனரல்லாத அர்ச்சகர் ஒருவர் முதன்முதலாகக் கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றியுள்ளார். அர்ச்சகர் பயிற்சியின் போதும் பணி நியமனத்துக்குப் பிறகும் பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் அவமதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவதை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன் விவரித்தபோது கூட்டத்தினர் உணர்வு மயமாயினர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பார்ப்பனரல்லாத அனைத்து ‘இந்து’ அர்ச்சகர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று வா. ரங்கநாதன் நிகழ்த்திய உரை. பார்ப்பன அர்ச்சகர்கள், பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியைச்...

திராவிட மாடல் பயிற்சி பாசறையில் கொளத்தூர் மணி தொடர் உரை

திராவிட மாடல் பயிற்சி பாசறையில் கொளத்தூர் மணி தொடர் உரை

திமுக இளைஞர் அணி சார்பில் “திராவிட மாடல் பயிற்சிப்பாசறை” தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பாசறையில் திராவிட இயக்க வரலாறு , மாநில சுயாட்சி ஆகிய இரண்டு தலைப்புகளில் திராவிட இயக்கத் தலைவர்கள், ஆய்வாளர்கள் உரையாற்றி வருகின்றனர். இதில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிட இயக்க வரலாறு, தலைப்பில் 12.08.2022 அன்று கோவையில் சூலூர், கிணத்துக் கடவு, 17.08.2022 அன்று திண்டிவனத்திலும், 03.09.2022 அன்று திருச்சி துறையூர், மணச்ச நல்லூரிலும் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.   பெரியார் முழக்கம் 08092022 இதழ்

சென்னையில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்: “சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்”

சென்னையில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்: “சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்”

“சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம், 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்ஸ் சாலை, பி.எம்.தர்கா அருகில் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு, இரண்யா தலைமை வகிக்கிறார். கிருத்திகா வரவேற்று பேச வுள்ளார். தோழர்கள் தேன்மொழி, இரம்யா, யாழினி முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத்தின்பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி ஆகியோர் உரையாற்றவுள்ளனர். புதுவை விடுதலை கலைக் குழுவினரின் எழுச்சி இசையோடு நிகழ்வு கள் நடக்கும். இறுதியாக இசை இனியாள் நன்றி கூறுவார்.   பெரியார் முழக்கம் 08092022 இதழ்

பெரியார் பிறந்த நாள் கூட்டம் : சென்னை கழகத்தின் பணி

பெரியார் பிறந்த நாள் கூட்டம் : சென்னை கழகத்தின் பணி

“சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக் கூட்டம், 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்ஸ் சாலை, பி.எம்.தர்கா அருகில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, ஆதம் மார்கெட், அய்ஸ் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வீதி வீதியாக கடை வசூல் சென்னை கழகத் தோழர் களால் தூண்டறிக்கை கொடுக்கப்பட்டு கடை வசூல் செய்யப்பட்டு வருகிறது. வணிகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். மேலும், கூட்டத்திற்கு திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை சுற்றிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுவரெழுத்து எழுதப்பட் டுள்ளது.  தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் சுவரெழுத்துப் பணிகளை மேற்கொண்டார். பெரியார் முழக்கம் 08092022 இதழ்

பெரியார் பிறந்த நாள்: திருப்பூர் தயாராகிறது

பெரியார் பிறந்த நாள்: திருப்பூர் தயாராகிறது

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருப்பூர் மாநகரில் பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்   30.08.2022 செவ்வாய் மாலை மாஸ்கோ நகரில் உள்ள மாதவன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக நிர்வாகிகள் மாதவன், முத்து,  அய்யப்பன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வரும் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று கழகத்தின் சார்பில் அய்யா சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கு தோழர்கள் திரளாக கலந்து கொள்வது எனவும் செப்டம்பர் 18 ஞாயிற்றுகிழமை அன்று கீழ்கண்ட இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 1) ராயபுரம், 2) மாஸ்கோ நகர், 3) ரங்கநாதபுரம், 4) பெரியார் காலனி, 5) அம்மாபாளையம், 6) ஆத்துப்பாளையம், 7)அனுப்பர்பாளையம், 8) சந்தைப்பேட்டை, 9) குளத்துப்பாளையம், 10) வீரபாண்டி பிரிவு.   பெரியார் முழக்கம்...

மேட்டூர் கழக முயற்சி வெற்றி: திடீர் விநாயகர் சிலை அகற்றப்பட்டது

மேட்டூர் கழக முயற்சி வெற்றி: திடீர் விநாயகர் சிலை அகற்றப்பட்டது

இந்து முன்னணியினரால் மேட்டூர் பேருந்து நிலையத்திற்கு எதிராக நீதிமன்றம், அரசு உத்தரவுகளை மீறி திடீரென வைக்கப்பட்ட வினாயகர் சிலை மேட்டூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முயற்சியால் அகற்றப்பட்டது 29.08.2022 காலை 11.00 மணியளவில் இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளர் பழனிசாமி மற்றும் மேட்டூர் நகர இந்து முன்னணித் தலைவர் தமிழ்ச் செல்வன் சேர்ந்து மேட்டூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் முறையாக அனுமதி எதுவும் பெறாமல் திடீரென ஒரு வினாயகர் சிலையை வைத்தனர். நீதிமன்ற உத்தரவுகள்,அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியும், சுற்றுச் சூழல், நீர்நிலைகளை மாசுபடுத்தும் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் இரசாயன கலவையால் செய்யப்பட்ட அந்த சிலை போக்குவரத்திற்கு இடையூறாகவும் வைக்கப்பட் டிருந்தது. தகவல் அறிந்து மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின், மேட்டூர் காவல் ஆய்வாளருக்கு தொலைபேசியில் இச்செய்திகளை கூறி இதனால்  சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்....

கோபியில் 144 இடங்களில் கிராமப்புறப் பிரச்சாரம்

கோபியில் 144 இடங்களில் கிராமப்புறப் பிரச்சாரம்

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் 4.09.2022  ஞாயிறு காலை 10 மணியளவில் கோபியில் நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. அலிங்கியம் பகுதி செந்தில்குமார் தலைமை ஏற்க மாவட்ட செயலாளர்  வேணுகோபால், கழகத்தின் வெளீயீட்டு செயலாளர் இராம இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் நிகழ்வுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப் பட்டது. செப்.17 தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவினை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய பகுதிகளில் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. பெரியரின் 144 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட கழகத்தின் சார்பில் சனாதனத்தை வேரறுப்போம் என்ற தலைப்பில் 144 இடங்களில் கிராமப்புறப் பிரச்சாரப் பயணம் நடத்துவது எனவும், அதன் இறுதியில் நிறைவுவிழா பொதுகூட்டம் சத்தி அல்லது நம்பியூரில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின்  ஒன்றிய,நகர ,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 08092022 இதழ்

“முழக்கம்” கட்டுரைகள் குறித்து  கலந்துரையாடல்

“முழக்கம்” கட்டுரைகள் குறித்து கலந்துரையாடல்

நிகழும் அரசியல் சூழல் குறித்த விவாதமும், முழக்கத்தில் வந்த கட்டுரைகளும் மற்றும் தற்போது சமூகத்தில் எழும் விவாதமாக இலவசம் தவறா? மற்றும் இவையெல்லாம் இலவசமா? என்றும் விவாதிக்கப்பட்டது. சென்னை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களின் பங்கெடுப் பில் நிகழ்வு ஒருக்கிணைக்கப்பட்டு நடத்தப் பட்டது. (இந்திய ஒன்றிய பொருளாதாரம் குறித்தும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் இலவச என்று சொல்லக்கூடிய விலையில்லா பொருட்கள் மற்றும் மாநிலங்களைப் பற்றி வந்த தோழர்களின் பார்வையும் சமூக மாற்றத்தையும் கலந்தாலோசிக்கப்பட்டது.) பெரியார் முழக்கம் 01092022 இதழ்

கழகத்தில் புதிய தோழர்கள் இணைந்தனர்

கழகத்தில் புதிய தோழர்கள் இணைந்தனர்

27-08-2022, சனிக்கிழமை அன்று சிதம்பரம் ஹக்ஷசூ மஹாலில் புதிய தோழர்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தில்  இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட தலைவர் அ.மதன்குமார் வரவேற்பு கூறினார். கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் ந. அய்யனார் புதிய தோழர்களை வரவேற்று உரையாற்றினார், அதன்பின் புவனகிரி சதிஷ்குமார் -புவனகிரி, ரஞ்சித்குமார் -அம்பிகாபுரம், வெங்கடேஷ் – கந்தமங்கலம், அன்பரசன் – கோவிலாம்பூண்டி, பிரேம் – பூதவராயன் பேட்டை, சிவா – பூதவராயன் பேட்டை, ஆகாஷ் – கோழிப்பள்ளம், ஆகாஷ் – கருவேப்பிலங்குறிச்சி, இன்பராஜ் – பூதவராயன் பேட்டை, விக்கி – பூதவராயன்பேட்டை, நன்பரசன் – பூதவராயன் பேட்டை, ராஜேஷ் – கணகரப்பட்டு. உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் கழகத் தலைவரின் தலைமையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி  புதிய தோழர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் அறிவழகன், கழகத்தின் கடலூர்...

விநாயகன் அரசியல் ஊர்வலத்தில் விதிமீறல்களைக் கண்காணிக்கக் கோரிக்கை

விநாயகன் அரசியல் ஊர்வலத்தில் விதிமீறல்களைக் கண்காணிக்கக் கோரிக்கை

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடைபெறும் ஊர்வலங்கள், சிலை கரைப்பு நிகழ்ச்சிகளில் அரசு ஆணை, நீதிமன்ற உத்தரவுகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை சரியாக கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 24.08.22 புதன்கிழமை மாலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில்ராசு,கழக நிர்வாகிகள் தனபால், ராமசாமி மாணவர் கழகத்தின் மகிழவன், கழகத் தோழர்கள் அய்யப்பன் திலகவதி, மாரிமுத்து ஆகிய தோழர்கள் பங்கேற்றனர். ஈரோடு வடக்கு மாவட்டம்: திராவிடர் விடுதலைக் கழகம் ண ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக, பிள்ளையார் சிலையை வைப்பதற்கும், கரைப்பதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்,  தமிழ் நாட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், சிலை வைப்பவர்கள் அரசின் விதி முறைகளை கடைபிடிக்கிறார்களா என்றும்  விதி மீறல்கள் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை...

சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

கோவை மாநகர  திராவிடர் விடுதலைக் கழக  கலந்துரையாடல் கூட்டம் 27.8.2022 மாலை 4மணி முதல் 6.30 வரை  வழக்கறிஞர்  கார்கி  அலுவலகத்தில்  நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் செப் – 17 பெரியார் 144ஆவது பிறந்தநாளில் காலை 9 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு மாநகர தலைவர் நேருதாசு தலைமையில்  மாலை அணிவித்து   துண்டறிக்கை வழங்குவதெனவும் தொடர்ந்து சித்தாபுதூர், ரத்தினபுரி ஆறு முக்கு, பீளமேடு, காந்தி நகர், சவுரிபாளையம், உக்கடம், டுழு தோட்டம், பனைமரத்தூர், சூலூர், வடபுதூர், அன்னூர், மேட்டுப்பாளையம்  பகுதிகளில்  படத்திறப்பு விழா நடத்துவது. 2 .        செப் – 17 பெரியார் பிறந்தநாள் முடிந்த பிறகு கோவை மாவட்டத்திற்குட்பட்ட நகர கிராமப் பகுதிகளில்  தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது. பெரியார் பிறந்தநாள் விழா சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் சுவரொட்டிகள்  800 அச்சடித்து கோவை மாவட்டத்தில் ஒட்டுவது. சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் துண்டறிக்கை...

விநாயகன் ஊர்வலம்: கோவை, சென்னை கழக சார்பில் காவல்துறையிடம் மனு

விநாயகன் ஊர்வலம்: கோவை, சென்னை கழக சார்பில் காவல்துறையிடம் மனு

கோவையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றக் கோரி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.08.22 திங்கள் காலை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் ஊர்வலங்கள் மற்றும் சிலை அமைப்பது ஆகியவை குறித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற கோரியும், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ், சுட்ட களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்ற அரசாணையை சரியாக பின்பற்ற கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலை வைக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கோஷங்கள் போடுவதை வீடியோ பதிவு செய்வோம் நீங்கள் யாரேனும் விதிமுறை மீறல் சிலையை பார்த்தால் ஆதாரம் அனுப்புங்கள் அதற்கும் நடவடிக்கை எடுப்போம்....

கழக சார்பில் காவல்துறையிடம் மனு: “கிடுகு” (சங்கிகளின் கூட்டம்) திரைப்படத்தை வெளியிட தடை போட வேண்டும்

கழக சார்பில் காவல்துறையிடம் மனு: “கிடுகு” (சங்கிகளின் கூட்டம்) திரைப்படத்தை வெளியிட தடை போட வேண்டும்

ஜாதி, மத மோதல்களை உருவாக்க முயற்சிக்கும் ‘கிடுகு’ திரைப்படத் தயாரிப்பாளர் ராமலட்சுமி, இயக்குனர் வீரமுருகன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 22.08.22 திங்கள் காலை சென்னை காவல் ஆணையர்  அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. கிடுகு (சங்கிகளின்கூட்டம்) எனும் பெயரில் ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. ராமலட்சுமி என்பவர் தயாரிப்பில் வீரமுருகன் என்பவர் இயக்கத்தில்  இத்திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் சில காட்சிகளில் தமிழ்நாட்டு அரசின் திராவிட மாடல் குறித்து பொய்யான தகவல்களைக் கூறி அவதூறு பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை உயர்த்திக் காட்டும்படியான காட்சிகளும் குறிப்பிட்ட மதங்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும், ‘ராமசாமி நாயக்கருக்கு’ எதுக்கு சிலை என்று வன்முறையை தூண்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று ஒருவர் ஆவேசமாகப் பேசி, தமிழ் மண்ணை காவி...

திமிர் பேச்சு கண்ணனை கைது செய்: கழகம் ஆர்ப்பாட்டம்

திமிர் பேச்சு கண்ணனை கைது செய்: கழகம் ஆர்ப்பாட்டம்

திருவரங்கத்தில் உள்ள பெரியாரின் சிலையை அகற்ற வேண்டும் என பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை கைது செய்யக் கோரி 10.08.2022  அன்று காலை 10.30 மணி அளவில் ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புகள் பங்குபெற்றன. கண்டன உரையாற்றியவர்கள்: 1. நாத்திகஜோதி –  ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர். 2. சித்திக்  – த.மு.மு.க; 3. சிந்தனைச் செல்வன் – தமிழ்ப் புலிகள் கட்சி; வீரகோவிந்தன் – ஆதித் தமிழர் பேரவை; 5. சலீம் – மனிதநேய மக்கள் கட்சி; வேங்கை பொன்னுசாமி – தமிழ்ப் புலிகள் கட்சி; 7. நிலவன் – நீரோடை; கண.குறிஞ்சி – ஞருஊடு; 9. திருப்பூர் துரைசாமி – பொருளாளர் தி.வி.க.; இராம.இளங்கோவன் – வெளியீட்டுச்...

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

சேலம் மேற்கு மாவட்ட திவிகவின் சார்பில் கழகத்தின் 11ம் ஆண்டு துவக்க நாளில் தெருமுனைக் கூட்டங்கள் 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பறை முழக்கம்,மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் கொள்கைப் பாடல்களுடன் துவங்கியது. முதலாவதாக வழக்கறிஞர் கண்ணகி “பெரியாரின் தேவை, பெண்ணுரிமை” ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். அடுத்து கழகத்தின் பரப்புரைச் செய லாளர் பால்.பிரபாகரன்,  “திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதைகளையும், தமிழக உரிமை களுக்காக கழகம் செய்த போராட்டங்கள், பரப்புரைகள் மற்றும் ஒன்றிய பிஜேபி அரசினால் நாம் எவ்வாரெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம்” என்பதை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் திரளான பொதுமக்கள் உரையை கேட்டனர். பொது மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கத்தின் கடந்த 10 ஆண்டு கால பரப்புரை, போராட்டங்கள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை விளக்கி துண்டறிக்கை வழங்கப்பட்டது. நிறைவாக கொளத்தூர் நகர செயலாளர்  அறிவுச்செல்வன் நன்றியுரை கூற தெருமுனைக் கூட்டம் 11...

இரசாயன வினாயகன் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க அமைச்சரிடம் மயிலாடுதுறை கழகம் மனு

இரசாயன வினாயகன் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க அமைச்சரிடம் மயிலாடுதுறை கழகம் மனு

மயிலாடுதுறையில், தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதி மன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகள் பிளாஸ்ட ஆப் பாரீஸ் என்ற வேதிப் பொருளால் செய்யப்பட்டு வர்ணம் பூசி  விநாயகர் சதுர்த்திக்காக தயாராகி வருகின்றன. நீர் நிலைகளை மாசுபடுத்தும் இந்தச்  செயலை தடுத்து நிறுத்த கோரி 05.09.2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்  மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அப்பொழுது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன்  உடனிருந்தார். இந்நிகழ்வில் திவிக மாவட்ட தலைவர் மகாலிங்கம், செயலாளர் மகேஷ், அமைப்பாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயராகவன், நகர தலைவர் நாஞ்சில் சங்கர், செயலாளர் நடராஜன், தோழர்கள் தில்லைநாதன், கார்த்திக், ராகவன், வழக்குரைஞர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப் பாளர், இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது....

மேட்டூர் பெண்கள் சந்திப்பில் கொளத்தூர் மணி உரை பெரியார் காலம் போராட்டக் காலம்; தற்போது அறுவடைக் காலம்

மேட்டூர் பெண்கள் சந்திப்பில் கொளத்தூர் மணி உரை பெரியார் காலம் போராட்டக் காலம்; தற்போது அறுவடைக் காலம்

பெண்கள் சந்திப்பு நிகழ்வு 07.08.2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் யாழினியின் கடவுள் – ஆத்மா மறுப்பு மற்றும் பாடலுடன் தொடங்கியது. கீதா வரவேற்புரை நிகழ்த்த சுதா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.முதலில் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தோழர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு கோவை அமிலா சுந்தர் “அன்னை மணியம்மையார்” பற்றியும், திருப்பூர் சங்கீதா “பெரியாரின் பெண்ணியம்” பற்றியும் உரை நிகழ்த்தினர். மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு 2.30 மணிக்கு இரண்டாம் அமர்வு தொடங்கியது. நிகழ்வில் முத்துக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் பெண்ணுரிமை மற்றும் ஜாதி ஒழிப்பு பாடல்களை பாடினர். அதனைத் தொடர்ந்து ஆனந்தி “பெண் ஏன் அடிமையானாள்” எனும் தலைப்பிலும்,  மனோரஞ்சனி “பெண்களும் மூட நம்பிக்கைகளும்” எனும் தலைப் பிலும்,  வசந்தி “மூவலூர் இராமாமிர்தம்” அம்மையாரைப் பற்றியும், வழக்கறிஞர் கண்ணகி “பெண்ணுரிமைச் சட்டங்கள்” பற்றியும் சிறப்பாக உரை நிகழ்த்தினர். பிற்பகல்...

மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல்:  கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல்: கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலத்தில் மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல் வைத்த சேலம் மாவட்ட வருவாய்த் துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து 05.08.2022 வெள்ளி காலை 10 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விசிகவின் மாநகர மாவட்டப் பொருளாளர் காஜா மொய்தீன் தலைமை தாங்கினார். இந்து முன்னணியின் கைப்பாவையாக மாறிப்போன சேலம் வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றின் அராஜகப் போக்கை கண்டித்து ஆர்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து முற்போக்கு இயக்கங்களின் பொறுப்பாளர்கள் தங்களது கண்டன உரைகளை பதிவு செய்தனர். விசிக மண்டல அமைப்புச் செயலாளர் நாவரசன் – ஊஞஐ (ஆ) மாவட்டச் செயலாளர் சண்முகராஜா – தமுமுக பொறுப்புக்குழுத் தலைவர் முகமது ரபீக் – ஞகுட மாவட்டத் தலைவர் பைரோஸ்கான் – ளுனுஞஐ பொதுச் செயலாளர் ஷெரிப் பாஷா –...

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ‘தொடர் அரசியல்’ பயிலரங்கில் கழகத் தலைவர் உரையாற்றினார்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ‘தொடர் அரசியல்’ பயிலரங்கில் கழகத் தலைவர் உரையாற்றினார்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை – காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்கள்  இணைந்து நடத்தும், தொடர் அரசியல் பயிலரங்கம், அம்பத்தூர் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியில் 31.07.2022 அன்று  காலை 10:30 மணியளவில் தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘இந்துத்துவ அரசியலை’ப் பற்றி வகுப்பு எடுத்தார். இறுதியாக தோழர்கள் ஆர்வமுடன் கேள்விகளைக் கேட்டு தெளிவு பெற்றனர். பெரியார் முழக்கம் 04082022 இதழ்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்ட திவிக சார்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி கோவையில் முன்னெடுக்கும் நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் இணையம் வழியில் (உடிகேநசநnஉந உயடட அநநவiபே) 29.07.2022 வெள்ளி இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் மாவட்ட, நகரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் : 1)         கழகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவை விளக்கும் வடிவமைப்பை உருவாக்கி ஒரு வாரம் முன்பே முகநூல், இன்ஸ்டாகிராம்,டுவிட்டர் பக்கங்களில் பகிர்வது, பரப்புவது. 2)         12.08.2022 வியாழன் அன்று காலை 8.00 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து கழக உறுதிமொழி எடுப்பது. 3)         தொடர்ந்து சவுரிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சிவராஜ் தலைமையில் கழகக் கொடியேற்றி கழக உறுதிமொழி எடுப்பது.   பெரியார் முழக்கம் 04082022 இதழ்

கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.07.2022 வியாழக்கிழமை சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி பகுதியில் உள்ள வனவாசியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. முதல் நிகழ்வாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி  வனவாசியில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பொதுக் கூட்ட ஆரம்பமாக மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினர் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு பாடல்களைப் பாடினர். அதனைத் தொடர்ந்து காவை இளவரசன் ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்வை மக்கள் மத்தியில் மிக எளிமையாக செய்து காட்டினார்.அது கூடியிருந்த மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து வனவாசி பகுதி நகர செயலாளர் பழ. உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமை உரை நிகழ்த்தினார். திவிக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்டத் தலைவர் சூரியகுமார், ஒன்றிய அமைப்பாளர் கிருஷ்ணன், நகர அமைப்பாளர் ராஜேந்திரன், நகர பொருளாளர் கதிர்வேல், பன்னீர்செல்வம் ஆகியோர்...

பெரியார் பல்கலை முறைகேடுகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் பல்கலை முறைகேடுகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

20.07.2022 புதன் காலை 11.00 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து கண்டன கோரிக்கை ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், திராவிட பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் முல்லை வேந்தன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக கொளத்தூர் மணி கண்டன உரையில், பெரியார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையின் வினாத்தாளில் ஜாதி குறித்து கேட்கப்பட்டமையைக் குறித்தும், மாநில அரசின் அறிவுரைகளை மதிக்காமல் புதிய கல்வி கொள்கையை நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்படுத்தி வரும் துனணவேந்தரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் உரை நிகழ்த்தினார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொது மக்களுக்கு துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏற்காடு, சேலம், கோவை, திருப்பூர், இளம் பிள்ளை, நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் சுள,...

மூன்று நாள்கள் திருச்சியில் விவாதங்களுடன் நடந்தன களப்பணியாளர்களுக்கு கழகம் பயிற்சி வகுப்புகள்

மூன்று நாள்கள் திருச்சியில் விவாதங்களுடன் நடந்தன களப்பணியாளர்களுக்கு கழகம் பயிற்சி வகுப்புகள்

திராவிடர் விடுதலைக் கழகத் தின் களப் பணியாளர்கள் 47 பேருக்கு பயிற்சி முகாம், திருச்சி டான்பாஸ்கோ மீடியா அரங்கில் ஜூலை 23, 24, 25 தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு தலைப்பு களில் வகுப்புகள் நடத்தப்பட்ட தோடு விவாதங்களுடன் நடந்தன. முதல் நாள்: கொள்கை முன்னெ டுப்பில் பெரியாரின் அணுகு முறைகள் – விடுதலை இராசேந்திரன், பெண் ணியம்/டுழுஞகூணு – ஆசிரியர் சிவகாமி, தமிழ் வளர்ச்சியில் பெரியாரின் தொண்டு – பால் பிரபாகரன், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் / போதாமைகள்/ஆணவக் கொலைகள் – திண்டிவனம் இரா.முருகப்பன். இரண்டாம் நாள் : பெரியாரும் அயோத்திதாசரும் / அம்பேத்கர்/ எம்.சி. இராஜா / இரட்டைமலை சீனிவாசன் /சகஜானந்தா ஆகியோரும் – கொளத்தூர் மணி, மக்கள் உளவிய லும் கொள்கை பரப்புரைகளும் – மருத்துவர் சிவபாலன், இந்திய ஒன்றியமும் தமிழர் தன்னாட்சியும் – ஆ.வந்தியத்தேவன் (மதிமுக), ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டுப் புரட்டுகள் – விடுதலை இராசேந்திரன். மூன்றாம் நாள்...

மதுரையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி

மதுரையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி

தமிழ் நாடு அரசின் உயர்கல்வித் துறையை புறக்கணித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு  விழாவில் பங்கேற்க வந்த ஆர்.என். ரவியைக் கண்டித்து மதுரையில் மாவட்ட கழக ஒருங் கிணைப்பில் அனைத்து ஜனநாயக இயக்கங்களின் சார்பில், 13.7.2022 அன்று காலை 11 மணியளவில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலார் மா.பா. மணி அமுதன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ., சி.பி.எம்., அதிமமுக, தபெதிக, தமுமுக, தமிழ் புலிகள், ஆதித்தமிழர் பேரவை,  ஆதித்தமிழர் கட்சி,  புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட இயக்கங்களின் மாநில,  மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழர்களையும் காவல் துறை கைது செய்து மாலையில் விடுவித்தது. பெரியார் முழக்கம் 21072022 இதழ்

பாஜக நிர்வாகிகள் மீது கழகம் புகார் மனு

பாஜக நிர்வாகிகள் மீது கழகம் புகார் மனு

திருப்பூரில் 15.07.22 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முறையான அனுமதி ஏதும் இல்லாமல் செல்ஃபி வித் அண்ணாமலை என்று விளம்பரம் செய்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் விடுத்தும், கல்லூரி மாணவிகள், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளின் மீது தக்க பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளும்படி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 16.07 22 திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு தலைமை யில் திருப்பூர் மாநகரச் செயலாளர்  மாதவன், 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து, தோழர்கள் திலகவதி, பிரசாந்த் ஆகியோர் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 21072022 இதழ்

மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்

மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்

ஈரோடு வெள்ளோட்டில் மகிழ் உணவகத்தை 17.07.2022 ஞாயிறு அன்று  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  திறந்து வைத்தார். பெயர்ப் பலகையை திமுக வின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்  வி.சி. சந்திரகுமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக மாநகர பகுதி செயலாளர் அக்னி சந்திரன், கொங்கு இளைஞர் பேரவை லிங்கேஸ்வரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 21072022 இதழ்

மேட்டூர் – கோவையில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூர் – கோவையில் கழகம் எடுத்த காமராசர் பிறந்த நாள் விழா

மேட்டூர் : மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 15.07.2022 மாலை 5.00 மணி அளவில் கல்வி வள்ளல் காமராசர் 120ஆவது பிறந்தநாள் விழா  நகரத் தலைவர் செ.மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் உள்ள காமராசர் உருவச்சிலைக்கு தோழர்கள் அனிதா, கீதா, அறிவுமதி ஆகியோர் மாலை அணிவித்தனர். நகர செயலாளர் குமரப்பா முழக்கங்கள் எழுப்பினார். மேட்டூர் 16ஆவது வார்டு மஜீத் தெரு பகுதியில் காமராசர் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் மாலை 6.00 மணிக்கு தொடங்கியது. முதல் நிகழ்வாக பறைமுழக்கம், பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு தோழர்களால் நடத்தப்பட்டது.  தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.  நங்கவள்ளி அன்பு, தலைமை செயற்குழு உறுப்பினர் அ. சக்திவேல் ஆகியோர் உரையாற்றினர். நங்கவள்ளி, மேட்டூர் சுளு, கொளத்தூர் ஆகிய பகுதியிலிருந்து பொறுப்பாளர் களும், தோழர்களும் கலந்து...

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூர் கழகம் பதிலடி மலிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர்!

திருப்பூரில் பா.ஜ.க.வினர் அரசு கல்லூரிகளின்  பெயர்களை முறைகேடாக பயன்படுத்தி துண்டறிக்கைகளை அச்சிட்டு “செல்பி வித் அண்ணாமலை” என்று விளம்பரப்படுத்தி கல்லூரி களுக்குள் அத்து மீறி நுழைய திட்டமிட்டு இருந்தார்கள். அண்ணாமலையைக் கூட்டி வந்து சாலைகளில் கூட்டமாக கூட காவல்துறையிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், அனுமதியும் பெறாமலும் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வினர் பேசினால் பரப்புரையில் ஈடுபட்டால் என்ன பேசுவார்கள் என்பதை பொதுமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய்வது போன்ற  பொது அமைதியை குலைக்கும் வகையில் தான் இவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இச்செய்தி பரவிய உடன் திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, திருப்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு கழகத்தின் கடும் கண்டனத்தை பதிவு...

களப்பணியாளர் பயிற்சி; இடம் மாற்றப்பட்டுள்ளது

களப்பணியாளர் பயிற்சி; இடம் மாற்றப்பட்டுள்ளது

திருச்சியில் வருகிற ஜூலை 22,23,24,25 ஆகிய தேதிகளில் முதல் நாளில் இணையதள பயிற்சி வகுப்பும், மற்ற மூன்று நாள் களப்பணியாளர்கள் பயிற்சி வகுப்பும் நடைபெறவுள்ளது. கடந்த வாரம் அறிவித்த இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. திருச்சி காருண்யா நகர் “டான் பாஸ்கோ மீடியா” என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. தலைமைக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட தோழர்கள் மட்டுமே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வார்கள். குறிப்பு : பேருந்து எண் 13, 45, 125 ஆகிய நகரப் பேருந்துகளில் (திருச்சி மத்திய பேருந்து நிலையம் – விராலிமலை செல்லும் பேருந்துகள்) 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, செல்லும் திசையின் வலதுபுறம் சுமார் 200,300 மீட்டரில் ‘டான் போஸ்கோ’ நிறுவனம் உள்ளது. பெரியார் முழக்கம் 14072022 இதழ்

திருச்சியில் ஒரு நாள் இணையதள பயிலரங்கம்!

திருச்சியில் ஒரு நாள் இணையதள பயிலரங்கம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத் தோழர்களுக்கான ஒருநாள் இணையதள பயிலரங்கம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்  முன்னிலையிலும் நடைபெறுகிறது. நாள் : 22.07.2022 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 9:30 முதல் மாலை வரை இடம் : கூஆளுளுளு நிறுவன பயிற்சி அரங்கம், திருச்சி. சமூக வலைத்தளங்களில் இயங்கும் மற்றும் இயங்க ஆர்வம் உள்ள திராவிடர் விடுதலை கழகத் தோழர்களுக்கு மட்டுமான ஒருநாள் பயிலரங்கம். இணையதளம், சமூக வலைத்தளங்கள் குறித்த அறிமுகம், அவை இயங்கும் விதங்கள், எளிமையாக பயன்படுத்துவதற்கான வழிகள், தொழில் நுட்பம் சார்ந்த விளக்கங்கள் ஆகியவை குறித்து கழகத்தின் இணையதள செயல் பாட்டாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்கள். நுழைவுக் கட்டணம் ரூபாய் 100/- (நூறு ரூபாய் மட்டும்) முன் பதிவிற்கு : பரிமளராசன் – 7871962024 சமூக ஊடக பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம். விஜயகுமார் இணையதள பொறுப்பாளர்,...

களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம்: முக்கிய அறிவிப்பு

திராவிடர் விடுதலைக் கழகக் களப்பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் ஜூலை 23, 24, 25 தேதிகளில் திருச்சி ‘டி.எம்.எஸ்.எஸ்.’ பயிற்சி மய்யத்தில் (தொடர் வண்டி நிலையம் அருகில்) நடைபெறுகிறது. சமூக நீதி – மதவாதம் – பெண்ணுரிமை – மாநில சுயாட்சி, சமூகம், உளவியல் எனும் பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளிக்கப் படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். பயிற்சியாளர்கள் ஜூலை 22 இரவே மய்யத்திற்கு வந்து சேர வேண்டும். – கொளத்தூர் மணி (தலைவர்) விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 07072022 இதழ்

திருப்பூர் பெரியார் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு மண விழா

திருப்பூர் பெரியார் படிப்பகத்தில் ஜாதி மறுப்பு மண விழா

கிறிஸ்டினா – மகாதேவன் சாதி மறுப்பு  இணையேற்பு நிகழ்வு, திருப்பூர் அம்மாபாளையம்  தந்தை பெரியார் படிப்பகத்தில்  28.06.2022 அன்று  மாலை 6.00 அளவில் நடைபெற்றது . திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு தலைமை வகித்தார். திருப்பூர் மாநகரத் தலைவர் தனபால்  வரவேற்பு கூறினார். மாநகர அமைப்பாளர் முத்து,வேலம்பாளையம் பகுதி பொறுப்பாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் மன்றம் தலைவர் சிவகாமி, ஆதித் தமிழர் பேரவை வழக்கறிஞர் அணி  கனகசபை,  தமிழ்நாடு மாணவர் கழகம் திருப்பூர் மகிழவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க,  யாழினி தமிழ்நாடு மாணவர் கழகம், மாதவன் நகர செயலாளர் திவிக, திலகவதி அம்மாபாளையம், மணிகண்டன், ஸ்ரீஜா, சண்முகம், சூப்பர் ஸ்டார் மக்கள் முன்னேற்ற கழகம் திருப்பூர் ஆகியோர் உட்பட தோழர்கள் மற்றும் மணமகன் உறவினர்கள் வாழ்த்தினார்கள். இணையர், கிறிஸ்டினா – சகாதேவன் நன்றி கூறினர். இறுதியாக இணையர், கழக வளர்ச்சி நிதியாக ரூபாய் இரண்டாயிரம் மாவட்டத்...

நன்கொடை

நன்கொடை

மேட்டூர் புதுச்சாம் பள்ளி கழகத் தோழர் செந்தில் குமார், கழகத் தலைவரை சந்தித்து கழக வளர்ச்சி நிதிக்காக ரூ.2500/- வழங்கினார். பெரியார் முழக்கம் 23062022 இதழ்

திருப்பூரில் ‘பிரியாணிபாளையம்’ உணவகம் திறப்பு

திருப்பூரில் ‘பிரியாணிபாளையம்’ உணவகம் திறப்பு

திருப்பூரில் பிரியாணிபாளையம் ரெஸ்ட்டாரெண்ட் அண்ட் கேட்டரிங் திறப்பு விழா பல்லடம் ரோடு, ஹோட்டல் டி.ஆர்.ஜி. பில்டிங்கில் 17.06.2022 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உணவகத்தை திறந்து வைத்தார். உணவகத்தின் முதல் விற்பனையைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி துவங்கி வைத்தார். முதல் விற்பனையை திருப்பூர் மாநகர மேயர் தினேஷ் குமார் பெற்றுக் கொண்டார். அடுத்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கிட்ஸ் கிளப்குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் சேர்மன் மோகன் கார்த்திக், கழகப் பொருளாளர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, திருப்பூர் மாவட்ட திவிக தலைவர் முகில் ராசு, கூநுமுஞஹ தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் செயலவை உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்....

கொளத்தூர் மணி 75ஆவது பிறந்த நாள் குடும்ப விழாவாக நடந்தது

கொளத்தூர் மணி 75ஆவது பிறந்த நாள் குடும்ப விழாவாக நடந்தது

கிராமப் பிரச்சாரங்கள், கழகத்  தோழர் சந்திப்புக் கூட்டங்களை அதிகரிக்க கழகத் தலைவர் வேண்டுகோள் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் குடும்ப விருந்து நிகழ்ச்சி மேட்டூர் தூய மரியன்னை சமுதாயக் கூடத்தில்  கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக நகர, கிளைக் கழக, ஒன்றியப் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களும், தோழர்களும் கழகத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும், இயக்க வளர்ச்சி குறித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். கலந்துரையாடல் கூட்ட இடைவேளையில் கழகத் தலைவருக்கு 75ஆவது பிறந்த நாள் விழா கேக் வெட்டப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்பு தலைவருக்கு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ரூ.75,000/- வழங்கப்பட்டது. பிறகு குடும்ப விருந்து நிகழ்வு மதியம் 2.00 மணிக்கு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட...

இயக்க வளர்ச்சி – தீவிர கொள்கைப் பரப்பலுக்கான திட்டங்களை விவாதித்தது, கழகத் தலைமைக் குழு

இயக்க வளர்ச்சி – தீவிர கொள்கைப் பரப்பலுக்கான திட்டங்களை விவாதித்தது, கழகத் தலைமைக் குழு

17.6.2022 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி இல்ல வளாகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11.30 மணியளவில்  தொடங்கியது. 17 உறுப்பினர் களில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் உட்பட 14 பேர் பங்கேற்றனர். இயக்க செயல்பாடுகள், ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் நடந்த வீதிக் கூட்டங்கள், மண்டல மாநாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் பலரும் கருத்துகளைத்  தெரிவித்தனர். மாலை 7 மணி வரை கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. கழகத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 12ஆம் தேதி ஆண்டுதோறும் பரப்புரைப் பயண நிறைவு மாநாடாக இதுவரை நடத்தப் பட்டது. கொரானா காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக பயணங்கள் நடத்த முடியவில்லை. 2022, ஆகஸ்டு 12 – கழகம் தொடங்கி 10ஆம் ஆண்டு நிறைவு பெறுவதால், 10 ஆண்டு நிறைவு விழாவோடு...

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீடு

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீடு

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீட்டு நிகழ்வு, 11.06.2022 மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராயர் அரங்கத்தில் நடை பெற்றது. பீமா கோரே கான் அரசியல் சிறைப்பட்டோர் விடுதலைக் குழு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் து. ராசா நிகழ்வில் பங்கேற்று நூலை வெளியிட்டுப் பேசினார். தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு குடியரசு கட்சித் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன், வன்னி அரசு (வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர்) மற்றும் தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர்கள் கருணானந்தம், அ. மார்க்ஸ், சிவக்குமார், நெல்லை முபாராக் (எஸ்.டி.பி.அய்), நாகூர் மீரான் (பி.எஃப்.அய்.), வழக்கறிஞர் ப.பா. மோகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றுப் பேசினர். முன்னதாக விரட்டுக் கலையைச் சார்ந்த...