Category: கடலுர்

திருப்பூர், கடலூர், மதுரையில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” பொதுக்கூட்டம்!

திருப்பூர், கடலூர், மதுரையில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” பொதுக்கூட்டம்!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” எனும் முழக்கத்தோடு 2024 பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 05.03.2024 அன்று குன்னத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு குன்னத்தூர் பகுதிப் பொறுப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார், குன்னத்தூர் சின்னச்சாமி, திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தமிழ்நாடு மாணவர் கழக மகிழவன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் முகில் ராசு, கழக சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி சிறப்புரையாற்றினார். 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார். இதில் மாநகர அமைப்பாளர் மாதவன், சரஸ்வதி மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!”...

கழகப் பொறுப்பாளர் விஜயகுமார் தந்தை முடிவெய்தினார்.

கழகப் பொறுப்பாளர் விஜயகுமார் தந்தை முடிவெய்தினார்.

கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமாரின் தந்தை இராம. கண்ணதாசன் (வயது 68) 09.12.2023 அதிகாலை 4 மணியளவில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். பேராசிரியர் சரஸ்வதி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன் மற்றும் கடலூர், சேலம், சென்னை மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்

சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்

கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் கடந்த 30.12.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு புவனகிரியில் தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் மாணிக்.முருகேசன் தலைமை தாங்கினார். பெரியார் பிஞ்சு திராவிட மகிழன், மற்றும் வெங்கடேசன் ஆகியோரின் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. அ.மதன்குமார் வரவேற்றார், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.ராமர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சதானந்தம், கழக கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் ந.கொளஞ்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி, தியாகி பாலா பேரவையின் பொதுச்செயலாளர் கார்ல் மார்க்ஸ், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்ட கழகச் செயலாளர் அ.சதிசு நன்றி கூறினார். சென்னை :  தந்தை பெரியாரின் 50வது நினைவுநாள் பொதுக்கூட்டம், 20.12.2023, புதன்கிழமை...

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில்  மக்கள்  பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் மக்கள் பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர்: ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் மங்கலம் நான்கு வழி சந்திப்பு, சுல்தான் பேட்டை, பெரியாண்டிபாளையம் பிரிவு, குமரன் கல்லூரி, ஊத்துக்குளி ஆர்.எஸ், கூழிபாளையம், மன்னரை, காங்கேயம் பேருந்து நிலையம், நத்தக்காடையூர், படியூர், பொங்கலூர், அருள்புரம், வீரபாண்டி பிரிவு, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 21,22 ஆகிய தேதிகளில் பல்லடம் பகுதிகளுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், வடுகபாளையம், கேத்தனூர், காமநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், காரணம்பேட்டை, அனுப்பட்டி, எம்.ஜி.ஆர் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 22 அன்று பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் 50வது தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அதனையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சுப்பிரமணியம், திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு ஒன்றிய தலைவர் முஜிபுர் ரகுமான், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர...

மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி

மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி

மாவட்டக் கழகக் கலந்துரை யாடல்கள்: கடலூர் :  27.12.2022 அன்று சிதம்பரம் ஏபிஎன் மஹாலில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பெரியார் பிஞ்சு சி.சந்தோஷ் பெரியார் பாடல் பாட நிகழ்ச்சி தொடங்கியது. மா.து.தலைவர் செ.பிரகாஷ், வரவேற்பு கூறினார். தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் இயக்கத்தின் தேவை மற்றும் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். அதன்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆ. சதிசு – மாவட்ட அமைப்பாளர்,  ர.சிவகுமார் – மாவட்ட செயலாளர்,  ப.அறிவழகன் – அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர், அ.மதன்குமார் – மாவட்டத் தலைவர் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பெரியார் பார்வை ஆசிரியர் கவி பங்கேற்று தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இக்கூட்டத்தில்,  கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இயக்கத்தின் நோக்கம் பற்றியும்...

10% இட ஒதுக்கீட்டைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்

10% இட ஒதுக்கீட்டைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், 15.10.2022, அன்று காலை 10 மணியளவில், கடலூர் மஞ்ச குப்பம்  தலைமை தபால் நிலையம் அருகில்,  “உச்சநீதிமன்றத்தின் மற்றொரு அயோத்தி தீர்ப்பு” என்ற தலைப்பில்  உயர்சாதி பிரிவினருக்கு வழங்கிய 10% இடஒதுக்கீட்டை கண்டித்தும்,  ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனாதனத்தின் குரலாக உச்சநீதிமன்ற தீர்ப்பு, பொருளாதர அளவுகோல் இடஒதுக்கீட்டுக்கு பொருந்தாது, 10% இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டு முறையையே சீர்குலைக்கும், சமூகநீதியை சீர்குலைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகிய முழக்கங்களை முன்னிறுத்தி கண்டன முழக்கமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்  தொடக்க நிகழ்வாக விடுதலைக் குரல் கலைக்குழுவினர் கொள்கை பிரச்சார பாடல்களை பாடினர். ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர், ர.சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர், அ.மதன்குமார் வரவேற்று நிகழ்வை ஒருங்கிணைத்தார். ஆ.சதிசு – மாவட்ட அமைப்பாளர், சிவா – இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், பிரேம் – தமிழ்நாடு மாணவர்க் கழக மாவட்ட அமைப்பாளர்,...

கடலூர், கரூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள்

கடலூர், கரூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள்

6.11.2022 அன்று காலை 11 மணிக்கு புவனகிரி நகரத்தை அடுத்த கீரபாளயத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ் வரவேற்பு கூறினார். மாவட்டச் செயலாளர் சிவக்குமார், அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் அ.மதன்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கடந்த 15.10.2022 அன்று புவனகிரி நகரத்தில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 144வது  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1)           15.10.2022 அன்று சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு நடைபெற்ற  நடைபெற்ற தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா பொதுகூட்டத்திற்கு பெரும் உழைப்பை செலுத்திய, நிதி அளித்து பங்களிப்பை செலுத்திய அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படு கிறது. 2)...

‘சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்’ புவனகிரியில் பொதுக்கூட்டம்

‘சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்’ புவனகிரியில் பொதுக்கூட்டம்

சனாதனத்தை வேரறுக்க உறுதியேற் போம், என்ற முழக்கத் தோடு பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம், புவனகிரி யில் 15.10.2022 அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடை பெற்றது. பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக ‘விடுதலைக் குரல்’ கலைக் குழுவின் பகுத்தறிவு, சாதியொழிப்பு பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் செ.பிரகாஷ்  வரவேற்பு கூறினார். அ. சதிசு இந்நிகழ்விற்கு தலைமையேற்றார். மாவட்ட தலைவர் அ.மதன்குமார், மாவட்ட செயலாளர் சிவகுமார், அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் அறிவழகன், மங்களூர் ஒன்றிய செயலாளர் ந.கொளஞ்சி, த.முத்துகிருஷ்ணன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து சதானந்தம் (மு.ஒ.செயலாளர், சி.பி.எம்.), கணபதி (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), தயாநிதி (மா.தலைவர், மக்கள் தமிழகம்), ஆசிரியர் பழனிவேல், காரல் மார்க்ஸ் (பாலா பேரவை), ஆகிய தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர். தொடர்ந்து சிறப்புரையாற்ற வருகை தந்த சௌந்திரபாண்டியன் (காங்கிரஸ்), திருமார்பன் (மாநில அமைப்புச் செயலாளர்,...

கழகத்தில் புதிய தோழர்கள் இணைந்தனர்

கழகத்தில் புதிய தோழர்கள் இணைந்தனர்

27-08-2022, சனிக்கிழமை அன்று சிதம்பரம் ஹக்ஷசூ மஹாலில் புதிய தோழர்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தில்  இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட தலைவர் அ.மதன்குமார் வரவேற்பு கூறினார். கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் ந. அய்யனார் புதிய தோழர்களை வரவேற்று உரையாற்றினார், அதன்பின் புவனகிரி சதிஷ்குமார் -புவனகிரி, ரஞ்சித்குமார் -அம்பிகாபுரம், வெங்கடேஷ் – கந்தமங்கலம், அன்பரசன் – கோவிலாம்பூண்டி, பிரேம் – பூதவராயன் பேட்டை, சிவா – பூதவராயன் பேட்டை, ஆகாஷ் – கோழிப்பள்ளம், ஆகாஷ் – கருவேப்பிலங்குறிச்சி, இன்பராஜ் – பூதவராயன் பேட்டை, விக்கி – பூதவராயன்பேட்டை, நன்பரசன் – பூதவராயன் பேட்டை, ராஜேஷ் – கணகரப்பட்டு. உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் கழகத் தலைவரின் தலைமையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி  புதிய தோழர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் அறிவழகன், கழகத்தின் கடலூர்...

பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

மயிலாடுதுறை கடலூர் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்கள் இணைந்து மே 4ஆம் தேதி மயிலாடுதுறையில் மாநாட்டினை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநாட்டின் நோக்கத்தினை வலியுறுத்தி 16 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. 10000 வண்ண துண்டறிக்கைகள் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்புரை செய்யப் பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் சுவர் விளம்பரமும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 500 சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மாலை 5 மணி அளவில் பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வு தொடங்கியது. மாநாட்டிற்கு  மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை ஏற்றார். வரவேற்புரை கடலூர் மாவட்ட தலைவர் மதன்குமார் வழங்க, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற மாநாட்டின் கோரிக்கையை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலு. குணவேந்தன், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் சுப்பு மகேஷ் பேசினார்கள். மந்திரம் இல்லை தந்திரமே என்ற...

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

கழகத் தோழர்களை பொறுப்பாளர்கள் சந்தித்து நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்வுகள் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளன. கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்தவும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்க்கவும் தோழர்கள் முனைப்புடன் செயல்பட முன் வந்துள்ளனர். முதல்கட்டப் பயணத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் பங்கேற்றனர். விரைவில் இரண்டாம் கட்டப் பயணம் தொடங்கவிருக்கிறது. பயணம் குறித்து விழுப்புரம் அய்யனார் தொகுத்து அனுப்பியுள்ள செய்தி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இணைய வழியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இயக்கப் பணிகள் சுணக்கம் ஆகிவிட்டன. இதனைப் போக்கும் வகையில் கழகப் பணிகளை தீவிரப்படுத்தும் கழக ஏடான, புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் ஏட்டிற்கு சந்தா சேர்த்திடவும், முதல் கட்டமாக 18.11. 2021 முதல் 20.11.2021 வரை...

அரியலூரில் கழகம் நடத்திய ஒரு நாள் பயிற்சி வகுப்பு

அரியலூரில் கழகம் நடத்திய ஒரு நாள் பயிற்சி வகுப்பு

20.02.21 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் இணைந்து நடத்திய ஒருநாள் பயிலரங்கம், ஆண்டிமடத்தில் பெரியார் – அண்ணா அரங்கில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட அமைப்பாளர் அ. மதன்குமார், கடவுள் மறுப்பு கூறி நிகழ்வை தொடங்கி வைத்தார். முதல் நிகழ்வாக தலைமைக் குழு உறுப்பினர் மயிலாடு துறை ந. இளையராஜா, ‘பயிலரங்கத்தின் நோக்கம் மற்றும் நடப்பு அரசியல்’ குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ‘திராவிட இயக்க வரலாறு’ குறித்து தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் உரையாற்றினார். மதிய உணவுக்குப் பிறகு 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன், அறிவியல் பூர்வமாக கடவுள் மறுப்பு நிகழ்ச்சிகளை கலை வடிவில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், ‘அமைப்பாவோம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘பெரியாரிய பார்வையில் அம்பேத்கர்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். பயிலரங்கத்தில்...

தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு காவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா?

தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு காவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா?

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 காவலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில் அவர்கள் கருப்புச் சட்டை அணிந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடலுர் மாவட்டம் கடலூர் போக்குவரத்து முதல்நிலைக் காவலர் எஸ்.ரஞ்சித், கடலூர் புதுநகர் காவல் நிலையக் காவலர் டி.ரங்கராஜன் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையக் காவலர் ஜி.அசோக் ஆகியோர் கருப்புச் சட்டை அணிந்து அண்மையில் கடலூரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் நண்பர்கள் குழுவில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 காவலர்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்து கடந்த 6-ம் தேதி உத்தரவு பிறப்பித் துள்ளார். இதுகுறித்து சக காவலர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் பரிமாறப்படுவதோடு விவாதங் களும் நடைபெற்று வருகின்றன. 3 பேரையும் பணியிட மாற்றம்...

எச். ராஜா கிராமத்துக்குள் நுழைய விடாமல் துரத்தப்பட்டார்

எச். ராஜா கிராமத்துக்குள் நுழைய விடாமல் துரத்தப்பட்டார்

கடலூர் மாவட்டம் அரியநாச்சி எனும் கிராமத்தில் கோயிலை புதுப்பிப்பது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு பிரிவினருக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் செயலாளர்களில் ஒருவரான பார்ப்பனர் எச். ராஜா ஒரு பிரிவினருக்கு ஆதரவாக அக்கிராமத்துக்குள் நுழைய முயன்றார். அப்போது அரியநாச்சி கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எச். ராஜாவை கிராமத்துக்குள்ளேயே நுழைய விடாது கருப்புக் கொடி காட்டி தடுத்தனர். ஆன்மீகத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தும் எச். ராஜா ஒழிக என்று முழக்கமிட்டனர். கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. வேறு வழியின்றி எச். ராஜா அவமானப்பட்டு திரும்பிப் போனார். தி.மு.க., அ.தி.மு.க.வினர் இணைந்து கண்டன சுவரொட்டிகளை ராஜாவுக்கு எதிராக ஒட்டியது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 0509209 இதழ்

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

‘தமிழ்நாட்டை வஞ்சிக்காதே; சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரில் குலக் கல்வியைத் திணிக்காதே; தமிழ்நாட்டை வடநாடாக்காதே!’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 6 முனை பரப்புரைப் பயணங்கள் தொடங்கின. சென்னையிலிருந்து சென்னை பரப்புரைக் குழு ஆகஸ்டு 25 காலை 10 மணிக்கு இராயப்பேட்டை பெரியார் சிலையிலிருந்து பயணத்தைத் தொடங்கியது. மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர்விடுதலை இராசேந்திரன் பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். சென்னை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ரூதர் கார்த்திக் பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றினர். தொடர்ந்து பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரத்தில் பரப்புரை நடந்தது. மக்கள் திரளாகக் கூடி நின்று கருத்துகளைக் கேட்டனர். துண்டறிக்கைகளை விருப்பத் துடன்...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

கட்டமைப்பு நிதி : கடலூர் மாவட்டம் தீவிரம்

கட்டமைப்பு நிதி : கடலூர் மாவட்டம் தீவிரம்

06.04.2019 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி  அறிவழகன்  வீட்டில் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கழகத்தின் கட்டமைப்பு நிதியாய் ரூபாய் 20000 மே மாதம் 10-ந் தேதிக்குள் கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது வருகின்ற 17ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தலைமைக் கழகத்தின் முடிவான திமுக கூட்டணியை ஆதரிப்பது என்பதை ஆதரித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் சிதம்பரம் கடலூர் திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது மே மாதம் கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்டத் தலைவர் இளையரசன் மற்றும் விழுப்புரம் மாவட்டம் பெரியார் சாக்ரடீஸ் ஆகியோர் கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தனர். நட பாரதிதாசன் (மாவட்டத் தலைவர்) நன்றி கூறினார். பெரியார் முழக்கம்...

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா எனும் சிவக்குமார் – ஜெயந்தி (கழகத் தோழர் முழக்கம் உமாபதியின் சகோதரி) ஜாதி மறுப்பு மணவிழா ஜனவரி 27ஆம் தேதி பெண்ணாடம் வள்ளலார் மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்தது. இயக்குனர் கவுதமன் வாழ்த்துரை வழங்கினார்.  கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் உமாபதி, இளையராஜா, சூலூர் பன்னீர் செல்வம் மற்றும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனிப் பேருந்தில் மணவிழாவுக்கு வந்திருந்தனர். மணமக்கள் வரவேற்பு சென்னை இராஜா அண்ணாமலைபுரம் சமூக நலக் கூடத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிறப்புடன் நிகழ்ந்தது. கழகத் தோழர்கள் உறவினர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சி நிதிக்கு மணமக்கள்...

கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

08.01.2019 திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வசந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது.  நிகழ்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார்.  முதல் நிகழ்ச்சியாக கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி கழகக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகப் பெரியார் சிந்தனைப் பலகை தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. கடவுள் மறுப்பை மதன்குமார் கூறினார். அறிவழகன் வரவேற்புரையாற்றினார். துவக்க உரையாக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமிதிராவிடர் விடுதலை கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெரியாரியல் குறித்தும் பேசினார். தமிழ்நாடு மாணவர் கழக மாநிலச் செயலாளர் பாரி சிவக்குமார், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம், அய்யனார், பழனிவேல் (ஆசிரியர்), முத்துகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர் கோபால் இராவணன், நட பாபு அம்பேத்கர், கண்மணி, நட பாரதிதாசன் ஆகியோர் பேசினர். கடலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது. அடுத்த கட்ட...

கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி 08012019

கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி 08012019

08.01.2019 *திராவிடர் விடுதலைக் கழகம்* சார்பாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வசந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது நிகழ்வுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி  தலைமை ஏற்றார் முதல் நிகழ்ச்சியாக கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி அவர்களால் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டது!!! அதனைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழக பெரியார் சிந்தனை பலகை தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது கடவுள் மறுப்பு தோழர் மதன்குமார் கூற, தோழர் அறிவழகன் வரவேற்புரையாற்றினார்!!! துவக்க உரையாக தோழர் ஈரோடு இரத்தினசாமி திராவிடர் விடுதலை கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெரியாரியல் குறித்தும் பேசினார்!!! தமிழ்நாடு மாணவர் கழக மாநில செயலாளர் தோழர் பாரி சிவக்குமார் கருத்துரையாற்றினார்!!! அதனை தொடர்ந்து கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உரையாற்றினார்!!! பின் தோழர் சூலூர் பன்னீர்செல்வம், தோழர் அய்யனார், தோழர் பழனிவேல் ஆசிரியர், தோழர் முத்துகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் கோபால் ராவணன், தோழர் நட பாபு அம்பேத்கர், தோழர்...

அண்ணா பெரியார் அரங்கம் மற்றும் சிலை திறப்பு விழா ! ஆண்டிமடம் 16092018

அண்ணா பெரியார் அரங்கம் மற்றும் சிலை திறப்பு விழா ! ஆண்டிமடம் 16092018

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் – கவரப்பாளையம் பெரியார் அண்ணா வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா பெரியார் அரங்கம் மற்றும் சிலை திறப்பு விழா ! நாள் : 16-09-2018 மாலை 2 .00 மணி #சிலை_திறப்பு_நிகழ்ச்சி -1 தந்தை பெரியார். – தோழர் கொளத்தூர் மணி பேரறிஞர் அண்ணா – பேரா.மணியன் மக்கள்திலகம் MGR – எஸ் ஆர் இராதா நாள் : 17-09-2018 காலை 9 .00 மணி #சிலை_திறப்பு_நிகழ்ச்சி -2 வான் புகழ் வள்ளுவர். – தோழர்.Dr.தொல்.திருமாவளவன் பெருந்தலைவர் காமராசர். – தோழர்.டி.கே அரங்கராசன் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் – புதுக்கோட்டை பாவாணன் பிரபாகரன் காவியம் நூல் வெளியிடுபவர் தோழர் .கோவை.கு .இராமகிருட்டினன்

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள். சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது...

நிலம் பாழ், நீர் மறுப்பு ,நீட் திணிப்பு விளக்கப் பொதுக்கூட்டம் – கருவேப்பிலங்குறிச்சி  28052018

நிலம் பாழ், நீர் மறுப்பு ,நீட் திணிப்பு விளக்கப் பொதுக்கூட்டம் – கருவேப்பிலங்குறிச்சி 28052018

நிலம்,நீர் ,நீட் மறுப்பு விளக்கப் பொதுக்கூட்டம் – கடலூர் – 28.05.2018. கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நிலம்,நீர் ,நீட் மறுப்பு விளக்கப் பொதுக்கூட்டம் 28.05.2018 அன்று கறிவேப்பிலங்குறிச்சியில் நடைபெற்றது .கழக மாவட்டச்செயலாளர் தோழர் நட.பாரதி தாசன் முன்னிலை வகித்தார். மாலை 6.00 மணிக்கு பெரம்பலூர் துரை தாமோதரன் அவர்கள் மந்திரமல்ல! தந்திரமே!! என்ற அறிவியல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட தலைவர் தோழர் இளையரசன் நிகழ்ச்சியை நெறிப்படுத்த தோழர் முத்துக்கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து ஆசிரியர் அறிவழகன் தலைமை உரை ஆற்றினார். பின்பு தோழமை அமைப்புகளை சார்ந்த தோழர்கள் புதுச்சேரி பெ.சி.இ.தலைவர் தீனா,விழுப்புரம் மாவட்ட திவிக வெற்றிவேல்,பெரியார் சாக்ரடீஸ்,வி.சி.க திருமாறன்,த.வா.க சின்னத்துரை, பாலகுருசாமி, மற்றும் திருச்சி பெரியார் சரவணன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அரியலூர் மாவட்டத் தோழர்கள் ராவண...

கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! 15042018

கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! 15042018

கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! 15.04.2018 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகில் பேரளையூர் கிராமத்தில் ஆசிரியர் அறிவழகன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. நேமம்,வண்ணான்குடிகாடு,கருவேப்பிலங்குறிச்சி,பேரளைர், ஆகிய கிராமங்களை சேர்ந்த 20 புதிய தோழர்கள் அமைப்பில் இணைந்தனர். மாவட்ட, ஒன்றிய,கிளைகழக,மாணவர் கழக பொறுப்புக்கள் புதியதாக நியமிப்பது பற்றியும்,கழகத் தலைவர் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவது பற்றியும்,புரட்சி பெரியார் முழக்கம்,மற்றும் நிமிர்வோம் சந்தா சேர்ப்பது பற்றியும் , விவாதிக்கப்பட்டது. இக் கலந்துரையாடல் கூட்டத்தில் கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் நட.பாரதிதாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் அய்யனார்,விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் பூ.ஆ.இளையரசன், சிதம்பரம் நகர செயலாளர்,தோழர் மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அமைப்பை பற்றியும்,பெரியார் அம்பேத்கர் குறித்து கருத்துக்களையும் முன் வைத்தனர். தோழர் முத்து நன்றியுரை கூறிய பின் கூட்டம் நிறைவுற்றது.

கடலூரில் கழகக் கலந்துரையாடல்

கடலூரில் கழகக் கலந்துரையாடல்

15.04.2018 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக  கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகில் பேரளையூர் கிராமத்தில் ஆசிரியர் அறிவழகனின் மிகச் சிறப்பான ஒருங்கிணைப்பில் கடலூர் மாவட்ட செயலாளர் நட.பாரதிதாசன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர்  பூ.ஆ.இளையராசன் சிதம்பரம் நகர செயலாளர், மதன்குமார்  ஆகியோர் கலந்து கொண்டு அமைப்பு குறித்தும், பெரியார் அம்பேத்கர் குறித்தும் சிறப்பான கருத்துக்களை முன் வைத்தனர். நேமம், வண்ணான்குடிகாடு, கருவேப்பிலங்குறிச்சி, பேரளையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 20 புதிய தோழர்கள் அமைப்பில் இணைந்தனர். மாவட்ட, ஒன்றிய கிளைக் கழக, மாணவர் கழகப் பொறுப்புகள் நியமனம் பற்றியும், கழகத் தலைவரை அழைத்து பொதுக் கூட்டம் நடத்துவது பற்றியும், புரட்சிப் பெரியார் முழக்கம் மற்றும் நிமிர்வோம் சந்தா சேர்ப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.  முத்து நன்றியுரை கூறிய பின் கூட்டம் முடிவு பெற்றது. பெரியார் முழக்கம் 19042018 இதழ்

நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம்

நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம்

தமிழர்  வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பாக   10.4.2018  அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத  மத்திய அரசைக் கண்டித்து  நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மே-17 இயக்கம், காஞ்சி மக்கள் மன்றம், மக்கள் அதிகாரம், த.மு.மு.க, தமிழ்தேசியப் பேரியக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, விவசாய சங்கங்கள் உள்ளிட்ட  கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பாக 50ஆயிரத்திற்கும் மேலான வர்கள் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பாக புதுச் சேரியில் இருந்து லோகு. அய்யப்பன் தலைமையில் 100-க்கும் மேலான தோழர்களும், பெரியார் சிந்தனை மய்யம் சார்பில் தீனாவும் தோழர்களும் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தோழர்கள் ந.வெற்றிவேல், க.இராமர், க.மதியழகன் உட்பட 30-க்கும் மேலான தோழர்களும் ஆத்தூரி லிருந்து  மகேந்திரன், இராமு  உட்பட பல்வேறு பகுதிகளில்  இருந்தும் 300-க்கும்...

என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி

என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி

அண்ணன் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் தமிழக வாழ்வுரிமை  கூட்டமைப்பின் சார்பாக எண்ணற்ற பல அமைப்பு சார்ந்த தலைவர்களும், தமிழர் நலம் சார்ந்த பல தலைவர்களும் சிறப்பு மிக்க பல ஆளுமைகளும், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி மிகச்சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில் கடலூர் மாவட்டம் நட.பாரதிதாசன் தலைமையிலும் விழுப்புரம் மாவட்டம் தோழர் ராமர் தலைமையிலும் நாகப்பட்டினம் மாவட்டம் தோழர் விஜி மற்றும்  தோழர் மகேஷ் இவர்கள் தலைமையிலும், மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா அவர்களும் புதுச்சேரி மாநிலம் தோழர் லோகு அய்யப்பன் அவர்கள் தலைமையிலும், புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் தோழர் தீனா மற்றும் தோழர் பரத் அவர்கள் தலைமையிலும், அரியலூர் மாவட்ட செயலாளர் தோழர் கோபால் இராமகிருட்டினன் அவர்களும் தோழர் அறிவழகன் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சில தோழர்களும் மற்றும் சில பொது நல தோழர்களுடன் நெய்வேலி முற்றுகையில் பெருந்திரளாக தலைவர் தலைமையில் திவிக சார்பாக கலந்து கொண்டனர் புகைப்படங்களுக்கு

கழகம் எடுத்த  தமிழர் திருநாள் எழுச்சி

கழகம் எடுத்த தமிழர் திருநாள் எழுச்சி

கடலூர் : கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக 2018ஆம் ஆண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு  மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் ஓட்டப் பந்தயம், கோ-கோ போன்ற எண்ணற்ற போட்டிகள், காவல் துறையின் எதிர்ப்பை மீறி, ஒலிபெருக்கி அனுமதி மறுத்த போதும் அதை பொருட்படுத்தாது நடத்தியே தீருவோம் என்று நமது தோழர்களும், கிராம பொதுமக்களும், தீர்மானம் போட்டு சிறப்பாக நடத்தி முடித்தனர். 16.01.2018 அன்று இரவு பரிசளிப்பு விழா நடைபெற்று விழா இனிதே முடிவுற்றது. விழாவை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்திய திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நட. பாரதிதாசன் (மாவட்டச் செயலாளர்), நட. பாபு அம்பேத்கர், பாலமுருகன் சிலம்பரசன், மற்றும் தமிழ்நாடு  மாணவர் கழகத் தோழர்கள் பாலாஜி, தினேஷ், மோகன், மணிகண்டன் ஆகியோர் முன்னின்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். பேராவூரணி :  போராட்டப் பண்பே தமிழர்களின்...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 17092017 கடலூர்

இந்த சமுக விடுதலைக்கான ஒரே போராளி எங்கள் அய்யா பெரியார் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா அய்யா பெரியார் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா கடலூர் மாவட்டம், திராவிடர் விடுதலை கழகம் சார்பாக, மாவட்ட செயலாளர்  தோழர் நட.பாரதிதாசன் தலைமையில், தோழர் நட. பாபு அம்பேத்கார் முன்னிலையிலும், தமிழ்நாடு மாணவர் கழகம் மாவட்ட செயலாளர் தோழர் சே.சுரேந்தர் மாவட்ட அமைப்பாளர் தோழர் பாலமுருகன், மற்றும் சிலம்பு, தினேஷ், மணிகண்டன், ஆகியோருடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், போனா, மற்றும் எழுதுபொருட்கள், மற்றும் இனிப்பு கொடுத்து, கழக கொடியேற்றத்துடன் முடிவுற்றது.!!!!! நட.பாரதி தாசன் கடலூர் மாவட்ட செயலாளர்!

சென்னை பரப்புரைக் குழுவின் பயண எழுச்சி

சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்ற  சமூக நீதி – சமத்துவப் பரப்புரைப் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு. 7.8.2017 அன்று காலை 10 மணியளவில் தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. இதில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் (காஞ்சிபுரம்) அக்பர் அலி தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு வரவேற்பு அளித்து ஜாகீர் உசேன் உரை நிகழ்த்தினார். பின் இரா. உமாபதி, விரட்டுக் கலைக் குழு ஆனந்த், விழுப்புரம் அய்யனார் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனர். ம.தி.மு.க.வை சார்ந்த தாம்பரம் மணி வண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.2000 நன்கொடை அளித்தார். பிறகு 12 மணியளவில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் பரப்புரை  நடைபெற்றது. பொத்தேரியில் தெள்ளமிழ்து, தினேஷ் ஆகியோர் தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளித்தும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்தனர். கூடுவாஞ்சேரி ராஜேஷ் ரூ.500 நன்கொடை அளித்தார். மாலை 4 மணியளவில் சிங்கபெருமாள் கோயில்...

விருத்தாசலம் ஒன்றியத்தில்  20 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விருத்தாசலம் ஒன்றியத்தில் 20 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விருத்தாசலம் ஒன்றியம் கருவேப்பிலங்குறிச்சி அருகில் உள்ள பேரளியூர் கிராமத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் மிக சிறப்புடன் நடைபெற்றது. காலை 11.00 மணிக்கு துவங்கிய கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட தலைவர் நட. பாரதிதாசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் அறிவழகன் மற்றும் கோபால் இராமகிருட்டிணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முருகன்குடி ஆசிரியர் பழனிவேல் சிறப்புரை ஆற்றினார். இருபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கழகத்தில் புதிதாக இணைந்தனர். தோழர்கள் அறிமுகத்துக்குப் பின் ஆசிரியர் பழனிவேல் பெரியார் அம்பேத்கர் கொள்கைகளைப்பற்றியும் திராவிட இயக்கங்களின் போராட்டங்களைப்பற்றியும் இரண்டு மணி நேரம் சிறப்பாக உரையாற்றினார். முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . 1. ஆசிரியர் அறிவழகன் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுவது; பயிற்சி முகாம் நடத்திய பின் தலைமையின் பொறுப்பாளர்கள் அறிவிக்கப் படுவார்கள்;  2. விரைவில் பயிற்சி முகாம், அதைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது 3. கிராமப்புறங்களில் சாதி ஒழிப்பு மற்றும் பிரச்சார கூட்டங்கள்...

பொங்கல் விழா கடலூர் மாவட்டம் கம்மாபுரம் 16012017

கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு 16.01.2017 அன்று பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள், மாணவர்கள், அனைவர்களையும், ஊக்குவிக்கும் பொருட்டு ஓட்டப்பந்தயம், நீளம்தாண்டுதல், கோலப்போட்டி, திருக்குறள் ஒப்பிவித்தல், ஓவியப்போட்டி, கபாடி போட்டி, மித வேக சைக்கிள் போட்டி உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இரவு 9.00 மணியளவில் கடலூர் மாவட்ட செயலாளர் நட.பாரதிதாசன் அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்தார் விழா நடைபெற்று இனிதே நடந்து முடிந்தது. ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து திராவிடர் விடுதலை கழக தோழர்களுக்கும் நன்றி

அரசு மருத்துவமனையில் சட்ட விரோதமாக கோயில் கட்டுவதை தடுக்க மனு கம்மாபுரம் 09012017

அரசு மருத்துவமனையில் சட்ட விரோதமாக கோயில் கட்டுவதை தடுக்க மனு கம்மாபுரம் 09012017

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் கிராமத்தில் அரசு மருத்துவனை வளாகத்தில், இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சட்ட விரோதமாக, அனைத்து மதத்தினரும் வந்து, போகும், இடத்தில் ஒரு மத வழிப்பாட்டு தலமான விநாயகர் கோயில் கட்டுவது அரசாணைக்கு எதிரானதும், மதசார்பற்ற நாடு இந்தியா என்பதும் கேள்விகுறியாகும் செயலாகும், இதை எதிர்த்து கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தோழர் பாரதிதாசன் தலைமையில் தோழர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார்கள்  

விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 21122015 மாலை பேருந்து நிலையத்தில் பூங்கா என்ற பெயரில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்க முற்ப்படும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மேலும் சாலை சீரமைப்பு கழிப்பறை வசதி சுகாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாக்ஸ்சிட் கட்சி ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ‎திராவிடர்‬ விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் கலந்துகொண்டு திவிக சார்பில் தோழர்கள் பாலமுருகன் மாவட்ட அமைப்பாளர், சிலம்பரசன் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழக பாரி சிவக்குமார் மற்றம் மாவட்ட செயலாளர் பாலாஜி,அமைப்பாளர் தினேஷ், தர்மா, பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி புரிய விரும்புவோர் கவனத்திற்க்கு ! கடலூர் ஒட்டிய கிராமப்புறங்களுக்கு இப்போது வரை நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. அக்கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளது. அளிக்கப்படும் நிவாரண பொருட்களும் பல்வேறு காரணங்களால் அங்கு சென்று சேர்வதில்லை.கடலூரிலேயே பொருட்களை கொடுத்து செல்வது,உள்கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை,மேலும் பொருட்களை கொண்டு செல்லும் வழியில் சிலரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் ஆகிவற்றால் மக்களுக்கு பொருட்கள் சரியாக கொண்டு சென்று வழங்கப்படாததல் இன்னும் அம்மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். திராவிடர் விடுதலைக் கழக தோழர்களும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.பொருட்களை சேகரித்து வைக்க இப்போது வடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர்,மூத்த பெரியார் தொண்டர் தோழர் கலிய மூர்த்தி அவர்களின் வடலூர்,ராதா திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்கள்...

கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி

கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி ! சேலம் மாவட்டம் கொளத்தூர் பொது மக்களிடம் திரட்டப்பட்ட வெள்ள நிவாரண உணவு பொருட்கள் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் லோகு. அய்யப்பன் உதவியோடு கடலூர் ஆண்டித்தோப்பு, வழிசோதனை பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அன்பழகன், ராமச்சந்திரன், தயலப்பன், சரவணன், கீர்த்தியரசு, எல்.ஐ.சி.வேலு, விஜயபூபதி, பால்.பாலு ஆகிய தோழர்கள் முன்னின்று செயல்பட்டனர்.

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி 5 ம் நாள் (09.12.2015) நேற்று கழகத் தோழர்களோடு இணைந்து தமிழ்நாடு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் அவர்கள் வெள்ள மீட்புப் பணியாற்றினார்.

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி 5 ம் நாள் (09.12.2015)

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி 5 ம் நாள் (09.12.2015) நேற்று கழகத் தோழர்களோடு இணைந்து தமிழ்நாடு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் அவர்கள் வெள்ள மீட்புப் பணியாற்றினார்.

நான்காவது நாளாக 08122015 அன்று கடலூரில் நிவாரண உதவி

நான்காவது நாளாக 08122015 அன்று கடலூரில் நிவாரண உதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி புரிய விரும்புவோர் கவனத்திற்க்கு ! கடலூர் ஒட்டிய கிராமப்புறங்களுக்கு இப்போது வரை நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. அக்கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளது. அளிக்கப்படும் நிவாரண பொருட்களும் பல்வேறு காரணங்களால் அங்கு சென்று சேர்வதில்லை.கடலூரிலேயே பொருட்களை கொடுத்து செல்வது,உள்கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை,மேலும் பொருட்களை கொண்டு செல்லும் வழியில் சிலரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் ஆகிவற்றால் மக்களுக்கு பொருட்கள் சரியாக கொண்டு சென்று வழங்கப்படாததல் இன்னும் அம்மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். திராவிடர் விடுதலைக் கழக தோழர்களும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.பொருட்களை சேகரித்து வைக்க இப்போது வடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர்,மூத்த பெரியார் தொண்டர் தோழர் கலிய மூர்த்தி அவர்களின் வடலூர்,ராதா திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்கள்...

கடலூர் கிராம பகுதிகளுக்கு பொருள் உதவி செய்ய விரும்பும் தோழர்களுக்கு !

வரலாறு காணாத மழை காரணமாக சென்னையைப்போலவே கடலூரும் மிகுந்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இங்குள்ள உழைக்கும் சாதாரண கிராம பகுதி மக்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.இந்த கிராமப்புற மக்களுக்கு நிவாரண பொருட்கள் சரிவர கிடைக்காத நிலை உள்ளது. கடலூர் ஒட்டிய உள் கிராமங்களில் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தங்கள் பணிகளை மிகுந்த சிரமங்களுக்கு இடையே செய்துவருகிறார்கள். தோழர்களின் இப்பணிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் உதவிகள் கிடைத்து வருகின்றன. மேலும் இந்த கடலூர் கிராம பகுதிகளுக்கு பணி யாற்றும் கழக தோழர்களுக்கு பொருட்களாக உதவி செய்ய விரும்புபவர்கள், கீழ் காணும் பாதை வழியாக பொருட்களை கொண்டு சென்று கொடுக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.கடலூர் பகுதிகளுக்கு நிவாரன பொருட்களை கொண்டு செல்வோர் கடலூரிலேயே நின்றுவிடுவதால் உள்கிராமங்களுக்கு பொருட்கள் சேருவதில் மிகவும் தாமதமும்,சரிவர கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே கடலூர் உள் கிராமப்பகுதிகளில் பணி செய்யும் கழக தோழர்களுக்கு நிவாரண பொருட்களை...

கடலூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள மீட்புப்பணி !

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் பகுதி கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் கோவையிலிருந்து கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டு கழக தோழர்கள் அதனை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சாதாராண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வழங்கினார்கள். கடலூர் கிராம பகுதிகளில் தொடர்ந்து கழக தோழர்கள் வெள்ள மீட்புபணியில் ஈடுபட்டுள்ளார்கள். கட்லூர் கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களுக்கு உதவி செய்தவர்கள், ஜி.ஆர்.டி..கல்லூரி – 15,000 மதிப்புள்ள பொருட்கள். கழக ஆதரவாளர் தோழர் முத்துரத்தினம் மற்றும் போர்டு நிறுவன ஊழியர்கள் – 10,000 மதிப்புள்ள பொருட்கள். கழகதோழர்கள் – 15,000 இணைந்த கரங்கள் அறக்கட்டலை கோவை,வடவெள்ளி மருதமலை சுப்ரமணிய சாமி திருக்கோயில் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு – 50,000 மதிப்புள்ள பொருட்கள். பொருட்கள் விவரம் : பேஸ்ட் 100, பிஸ்கட் 8 பெட்டி, நாப்கின் 2 பாக்ஸ், பால்பவுடர் 1 பாக்ஸ், அரிசி 150 கிலோ, பெட்சீட் 100,...

வெள்ள மீட்பு பணியில் திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னையில் பெய்துள்ள வரலாறு காணாத பெருமழையின் காரணாமாக அனைத்து தரப்பு மக்களும் தாங்கொணா துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற வெள்ள மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.இந்த மக்கள் பணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சாதாரண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பணிகளை செய்து வரும் கழக தோழர்கள் உணவு தயாரித்து வழங்குதல்,உடைகளை விநியோகித்தல், படகு மூலம் வீடுகளில் சிக்கிகொண்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கழகத்தின் இப்பணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிதியாகவும், உடைகள்,உணவு பொருட்களாகவும் தோழர்கள் பலர் வழங்கிவருகிறார்கள். நிதியாக, கடலூர் பகுதிக்காக கத்தார் நாட்டைச் சேர்ந்த தோழர் காதர் மீரான் அவர்கள் வழியாக ரூ 1,10,000 (ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார்கள். அத்தொகை கடலூர் ஆலப்பாக்கம் பகுதிக்காக செலவிடப்படுகிறது. சென்னை பகுதிக்காக குவைத்தில் உள்ள கழக...

0

கழகச் செயல்வீரர்கள் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகச் செயல்வீரர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் குறித்த செய்தி. சேலம் : தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அலங்கரித்துக் கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார்...

விருத்தாசலத்தில் கழகப் பொதுக் கூட்டம் 0

விருத்தாசலத்தில் கழகப் பொதுக் கூட்டம்

15.03.2015 அன்று மாலை 3 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொடி யேற்றுவிழா நடை பெற்றது. கழக கொடியை கழக தலைவர் கொளத்தூர் மணி ஏற்றிவைத்தார். இந் நிகழ்ச்சியில் கழக தலைமைக்குழு உறுப் பினர்கள் பால் பிரபாகரன், ஈரோடு ரத்தினசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி. சிவக்குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கழக சார்பில் “தமிழ் இன உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” மாலை 6 மணிக்கு, விருத்தாசலம், வானொலித் திடலில் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாலை 5 மணியளவில் துரை. தாமோதரன் “’மந்திரமா, தந்திரமா?” நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் ஆகிய அமைப்புகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. பெரியார் முழக்கம் 02042015 இதழ்

0

கடலூர் மாவட்டக் கலந்துரையாடல்

13-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு, கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், கம்மாபுரம், திருச்சிக்காரர் மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப்  பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னினையிலும் நடைபெற்றது.