மயிலாடுதுறை, கடலூரில் சங்கராச்சாரி கண்டித்து ஆர்ப்பாடங்கள்
மயிலாடுதுறை: திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 26.04.25 சனி மாலை கிட்டப்பா அங்காடி அருகில் “இன ஒதுக்கல்” பேசும் சங்கராச்சாரியை கண்டித்து மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரையாற்றியோர்: பேராசிரியர் ஜெயராமன் தமிழ்மண் தன்னுரிமை இயக்கம், ராஜசேகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சுப்பு.மகேஷ் தமிழர் உரிமை இயக்கம், இளையராஜா,திராவிடர் விடுதலைக் கழகம். நன்றியுரை: வீரமணி கடலூர்: 21.4.2025 மாலை 6 மணி அளவில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கடலூரில் மஞ்சகுப்பம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திவிக அருணாச்சலம் வழக்கறிஞர் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில தேர்தல் பணி குழு செயலாளர் வழக்கறிஞர், இள புகழேந்தி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கையின் நிறுவனத் தலைவர் தமங்கையர் செல்வன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் தி ச திருமார்பன்,...