கழகத் தலைவருக்கு கடவுச்சீட்டு புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளைக் காரணம்காட்டி கடவுச்சீட்டு கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி,சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்னுடைய கடவுச்சீட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலாவதியாகி விட்டதால், அதை புதுப்பிக்க வேண்டும். ஆனால், என் விண்ணப்பத்தை பரிசீலித்த மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, என் மீது தடா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறி நிராகரித்துவிட்டார்” என முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. கொளத்தூர் மணி தரப்பில் வழக்குரைஞர் வி.இளங்கோவன் ஆஜராகி, ‘‘குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாலேயே கடவுச்சீட்டை புதுப்பிக்காமல் இருப்பது தவறு என்று உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும், ஏற்கெனவே பல வழக்குகளில் தீர்ப்புகளைப் பிறப்பித்துள்ளன’’ என்று வாதிட்டார். ஒன்றிய அரசுத் தரப்பில், மனுதாரர்...