பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா எனும் சிவக்குமார் – ஜெயந்தி (கழகத் தோழர் முழக்கம் உமாபதியின் சகோதரி) ஜாதி மறுப்பு மணவிழா ஜனவரி 27ஆம் தேதி பெண்ணாடம் வள்ளலார் மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்தது. இயக்குனர் கவுதமன் வாழ்த்துரை வழங்கினார்.  கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் உமாபதி, இளையராஜா, சூலூர் பன்னீர் செல்வம் மற்றும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர்.

சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனிப் பேருந்தில் மணவிழாவுக்கு வந்திருந்தனர். மணமக்கள் வரவேற்பு சென்னை இராஜா அண்ணாமலைபுரம் சமூக நலக் கூடத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிறப்புடன் நிகழ்ந்தது. கழகத் தோழர்கள் உறவினர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சி நிதிக்கு மணமக்கள் சார்பில் ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 07022019 இதழ்

You may also like...