திருச்செங்கோடு தோழர்கள் விடுதலை
எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு வழக்கில் இருந்து கழகத் தோழர்கள் விடுதலை : பெரியார் சிலையை உடைப்பேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாஜக எச்.ராஜாவைக் கண்டித்து 2018 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில் திருச்செங்கோடு பெரியார் சிலை அருகில் எச்.ராஜா உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அதிமுக காவல்துறை, போராடிய கழகத் தோழர்கள் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி திறம்பட வாதாடி வழக்கை ரத்து செய்தார். வழக்கில் விடுதலை பெற்றவர்கள் : மு.சாமிநாதன், வைரவேல், தண்டபாணி, சதீசுகுமார், பூபதி, மணி, பிரகாஷ், சுப்பு என்கிற ராஜசேகர், கோபி, தியாகு, மனோஜ், கவுதம். பெரியார் முழக்கம் 01062025இதழ்