தமிழ்தேசிய முப்பாட்டன் பெருமையும் சிங்கள இனவெறியும் ஒன்றுதான்!-விடுதலை இராசேந்திரன்
கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . கடந்த வார தொடர்ச்சி… நெறியாளர்: ஈழத்தில் பிரபாகரன் நடத்திய விடுதலைப் போராட்டத்துக்கும் இங்கே தமிழ்தேசிய போரட்டத்துக்கும் வேறுபாடு இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? பொதுச்செயலாளர்: அடிப்படையில் ஒரு தேசத்தின் விடுதலை என்பது மக்களின் சமத்துவத்தையும், உரிமையும் அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக மக்களிடையே பிளவுகளையும், பாகுபாடுகளையும் அடையாளப்படுத்தும் கொள்கைகளைக் கொண்ட தேசியம் என்பது விடுதலைக்கு நேர் முறணானது. பிரபாகரன் போராடிய ஈழ விடுதலை என்பது ஐக்கிய நாட்டு சபை அங்கீகரித்த தேசிய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி நடத்திய போராட்டமாகும். இந்தியாவை இந்து நாடாக மாற்றி அமைப்பதற்கு இப்போது இங்கே முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கினறன.இந்தியா என்ற சொல்லுக்கு முசுலிம்களும், கிருத்தவர்களும் உள்ளடக்கிய நாடு என்று பொருள்படுகிறது, எனவே இந்தியா என்ற...