களப்பணியில் கழகத் தோழர்கள்
18.03.25: புலியூர், தரங்கம்பட்டியில் “பெரியார் இன்னும் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. பரப்புரையின் போது கரூர் மாவட்ட எல்லையில் நொய்யல் பகுதியில் கரூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் குடியரசு கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், பரப்புரைப் பயணத் தோழர்களுக்கு குடிநீர், பிஸ்கட் வழங்கி வழியனுப்பி வைத்தனர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி மற்றும் பயணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். 19.03.25: மணப்பாறை காமராஜர் சிலை, இலுப்பூர், அன்னவாசல் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றன. 20.03.25: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் 4-ரோடு, ஆலங்குடி, விராலிமலை, வடகாடு, கைகாட்டி பகுதிகளில் மக்கள் பேராதரவோடு பரப்புரைக் கூட்டங்கள் சிறப்புடன் நடைபெற்றன. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சொர்ண குமார், விசிக வழக்கறிஞர் அம்பேத்கர் வளவன், சிபிஜ முருகன் கலந்து கொண்டு உரையாற்றினர்....