தமிழிலிருந்து பிறந்ததே திராவிட மொழிகள்! – பெரியார்
ழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று கூறியதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். பெரியார் கருத்து இதுவாகவே இருந்து இருக்கிறது. அவரது எழுத்தில் இருந்து சிலபகுதிகள்; மொழிவாரி மாகாணம் பிரிக்கப் படப்போகிறது. மொழி வாரி வித்துவான்கள் நியமிக்கப்பட்டு மொழி வாரி இலக்கணங்களும் செய்யப்பட்டு திராவிட மொழியைப் பாழாக்கத் திட்டம் தீட்டியாகி விட்டதே!…. பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நாலு அக்கா தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. இத்திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள்தான். அது தமிழ்தான். அந்த ஒன்றைத்தான் நாம் நாலு பேரிட்டு அழைக்கிறோம். நாலு இடத்தில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய நாலிடத்திலும் பேசப்படுவது தமிழ் ஒன்றுதான். நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. ஒன்றுதான் நாலாக நமது அறியாமையால் கருதப்பட்டு...