கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி புரிய விரும்புவோர் கவனத்திற்க்கு !

கடலூர் ஒட்டிய கிராமப்புறங்களுக்கு இப்போது வரை நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. அக்கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளது. அளிக்கப்படும் நிவாரண பொருட்களும் பல்வேறு காரணங்களால் அங்கு சென்று சேர்வதில்லை.கடலூரிலேயே பொருட்களை கொடுத்து செல்வது,உள்கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை,மேலும் பொருட்களை கொண்டு செல்லும் வழியில் சிலரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் ஆகிவற்றால் மக்களுக்கு பொருட்கள் சரியாக கொண்டு சென்று வழங்கப்படாததல் இன்னும் அம்மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர்.

திராவிடர் விடுதலைக் கழக தோழர்களும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.பொருட்களை சேகரித்து வைக்க இப்போது வடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர்,மூத்த பெரியார் தொண்டர் தோழர் கலிய மூர்த்தி அவர்களின் வடலூர்,ராதா திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கழக தோழர்களால் கிராம பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

எனவே வெள்ள நிவாரண பொருட்களை வழங்க விரும்புவோர் ”வடலூர் ராதா திருமண மண்டபத்தில்” வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.கழக தோழர்கள் அந்த திருமண மண்டபத்தில் பொருட்களை பாதுகாத்து கிராம மக்களுக்கு வழங்கும் பணியை மேற்கொள்வார்கள்.

தொடர்புக்கு :
தோழர் பாரதிதாசன் –
கடலூர் மாவட்ட செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம் – 9843225805,

தோழர் பாரி.சிவக்குமார்,
மாநில அமைப்பாளர், தமிழ்நாடு மாணவர் கழகம் – 9688310621

நேற்று பெங்களூரிலிருந்து கழக தோழர்கள் சித்தார்த்தன்,பழனி ஆகியோர் வெள்ள நிவாரண பொருட்களை கடலூர் மக்களுக்கு வழங்க அளித்திருக்கிறார்கள்.

(படங்கள் : நான்காவது நாளாக நேற்று 08.12.2015 அன்று கடலூர் கிராம பகுதிகளுக்கு கழக தோழர்கள் நிவாரணப்பொருட்கள் வழங்கிய போது)

You may also like...