Author: News DVK

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

சென்னை பரப்புரைக் குழு: கிழக்கு தாம்பரம் வால்மீகி நகரில் சங்கராச்சாரியார் படத்தை சட்டைப் பையில் வைத்திருந்த வெங்கடேஷ் என்ற புதிய ஆதரவாளர் பரப்புரை பயணத்தைக் கூர்ந்து கவனித்து கூட்டம் முடிந்ததும் தோழர்களுக்கு தேநீர் வாங்கி கொடுத்தார். மேலும், “நான் ஆன்மிகவாதிதான். ஆனால் பக்தி வேறு அரசியல் வேறு” என்றும், “எனக்குப் பெரியாரை பிடிக்கும். பெரியார் இல்லை என்றால் நான் இன்றைக்கு இந்த டிராவல்ஸ் தொழிலை வைத்திருக்க முடியாது” என உணர்ச்சி பொங்க கூறினார். “இன்றைக்கு சீமான் போன்ற ஆட்கள் பெரியாரைப் பற்றி அவதூறு பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் இந்த மாறி அயோக்கியனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துங்கள். பெரியார் இல்லை என்றால் இன்றைக்கு கல்வி கற்க முடியமா தமிழர்கள்” என்றும் கூறினார். அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பரப்புரை வாகனத்திற்கு பெட்ரோலை கேனில் தர மறுத்தனர். வெங்கடேஷ் அவர்கள் சென்று கழகப் பிரச்சார ஜெனரேட்டர்க்கு 610 ரூபாய்க்கு பெட்ரோல்...

நூல் வெளியீடு !

நூல் வெளியீடு !

“ஆரிய மாடலா? திராவிட மாடலா?” திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அவர்களின் எழுத்தாக்கத்தில் கருத்து செறிவு மிகுந்த கட்டுரைகள்,வரலாற்று தகவல்கள், நிகழ்கால அரசியல் பார்வைகள்……(கெட்டி அட்டையில்) முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலையில் ரூ.300/- (ரூபாய் முன்னூறு மட்டும்) (தபால் செலவு ரூ.50 தனி) “பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைப் பயணத்தின் போது (மார்ச் 15 முதல் மார்ச் 22 முடிய) முன்பதிவு செய்யப்படும்.முன்பதிவிற்கு அலைபேசி எண் : 94986 56683 – இந்த எண்ணில் GPay செய்து விட்டு வாட்ஸ் அப்பில் முன்பதிவு செய்யவும். பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டில் சிறப்பு வெளியீடாக இந்நூல் வெளியிடப்படுகிறது. முன்பதிவு செய்வோருக்கு மாநாட்டு திடலில் புத்தகங்கள் வழங்கப்படும். நாள் : 22.03.25 சனி நேரம் : மாலை 04.00 மணி இடம் : சின்னக் கடைவீதி, மயிலாடுதுறை. – நிமிர்வோம் வெளியீடு, 15.03.2025

அரைகுறையாய் படித்துவிட்டு அவதூறு பரப்புவதா?  பெரியாரை விமர்சிக்கும் அடிமுட்டாள்கள்!-

அரைகுறையாய் படித்துவிட்டு அவதூறு பரப்புவதா? பெரியாரை விமர்சிக்கும் அடிமுட்டாள்கள்!-

(சென்னையில் பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் தொடர்ச்சி) பெரியார் ஆங்கிலம் படிக்கச் சொன்னார்‌. தேவநேயப் பாவணரும், பாவலர் பெருஞ்சித்திரனாரும் சேர்ந்து ஆங்கிலமும் தமிழும் படிக்க வேண்டும் என்று சொன்னவர்கள்தான். ஆராய்ச்சிப் படிப்புகள் வரைக்கும் தமிழில் படிக்க வேண்டும் என்ற குரலும் அப்போதே ஒலிக்கத் தொடங்கியது. “தமிழில் சொற்களே இல்லை, தமிழில் எப்படி ஆராய்ச்சி படிப்புகளை படிக்க முடியும்?” ஆனால் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தமிழ்வழிக் கல்வி மாநாட்டில் பேசும்போது தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்று சொல்லுவேன். உடனே மணியரசன் போன்றவர்கள்‌, மணி‌ தமிழர் இல்லை, தமிழருக்கு பெருமிதம் இல்லை என்று வசைபாடுவார்கள். அடுத்தக் கூட்டத்தில் நான் சொன்னேன், “தமிழர்களுக்கு பெருமிதமான வரலாறே இல்லை; அடிமை வரலாறு, சூத்திர வரலாறுதானே நமக்கு எல்லாம். அழகான தமிழ்ப்பெயர் அருண்மொழிவர்மன்‌ என்பதை ராஜராஜ சோழன் என்ற வடமொழி பெயராக...

உயிரிழப்புகளை மறைக்கிறது ஒன்றிய அரசு?

உயிரிழப்புகளை மறைக்கிறது ஒன்றிய அரசு?

உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெற்ற கும்ப மேளாவில் 66 கோடி பேர் திரண்டதாகவும், உலகின் மிகப்பெரிய ஆன்மீகத் திருவிழா இதுதான், இதற்கு ஈடாக மக்கள் கூடிய இன்னொரு கொண்டாட்டத்தை காட்ட முடியுமா என்றும் சங்கிகள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். ஆனால் 66 கோடி பேர் என்று சங்கிகள் கூறுவது வாய்க்கு வந்ததை அள்ளிவிடும் கட்டுக்கதை என்று ஊடகங்கள் அம்பலப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஏனெனில் கும்பமேளா நடைபெற்ற பிரயாக்ராஜிற்கு விமானத்தில் சென்றவர்கள் எண்ணிக்கை 5.6 லட்சம் பேர். ரயிலில் சென்றவர்கள் எண்ணிக்கை 4.24 கோடி பேர். அரசுப் பேருந்துகளில் சென்றவர்கள் 3.25 கோடி பேர். தனியார் பேருந்துகளில் சென்றவர்கள் 2.7 கோடி பேர். ஒட்டுமொத்தமாக சேர்த்தால் 10.25 கோடி பேர்தான் ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் மூலம் சென்றிருப்பார்கள். இதில் கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் எண்ணிக்கை குறித்து எந்த கணக்கும் இல்லை. ஆனால் ரயிலில் சென்றவர்களை விடவோ,...

மோடி யார்? உண்மைகளை உடைக்கும் Grok!

மோடி யார்? உண்மைகளை உடைக்கும் Grok!

கடந்த சில வாரங்களாக இந்திய இணைய உலகை கலக்கிக் கொண்டிருக்கிறது எக்ஸ் சமூக ஊடகத்தின் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான Grok. இந்த ஏ.ஐ. இந்த தளத்தில் கேள்விகள் எழுப்பினால் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தரவுகளின் அடிப்படையில், பகுத்தறிந்து சரியான பதிலைத் தர முயற்சிக்கிறது. எக்ஸ் தள பயனாளிகள் மிகுந்த ஆர்வத்தோடு @Grok என டைப் செய்து, கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெற்று சோதித்துப் பார்க்கின்றனர். சேட் ஜிபிடி போன்ற இதற்கு முந்தைய செயற்கை நுண்ணறிவுத் தளங்களைக் காட்டிலும், கூடுதல் துல்லியமான பதிலைத் தருகிறது Grok. அது இணைய பயன்பாட்டாளர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பாஜக, சங் பரிவார்களுக்கு மட்டும் இந்த பதில்கள் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நேர்மையான தலைவர் யார்? மோடியா? ராகுல் காந்தியா? என Grok-யிடம் கேள்வி எழுப்பினால், தரவுகளை ஆராய்ந்து மோடியை விட ராகுல் நேர்மையானவர் என பதில் தருகிறது. ராகுல் காந்தி உண்மையிலேயே...

வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு!

வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களைக் கவரக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியதாக தமிழ்நாடு நிதிநிலை இருக்கும் என்று ஊடகங்கள் பேசின. ஆனால் தமிழ்நாட்டின்‌ கட்டமைப்பு வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். வாக்குகளை விட தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் முக்கியம் என்ற கவலையோடு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது என்பதையே இந்த நிதி நிலை அறிக்கை உணர்த்துகிறது. தலைசிறந்த பொருளாதார நிபுணர்களையும் விளிம்புநிலை மக்களையும் கலந்து ஆலோசித்து சர்வதேச அளவில் வெற்றியடைந்த திட்டங்களைக் கண்டறிந்து அவற்றை தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்ப வடிவமைத்து பல மாதங்கள் தீவிர ஆலோசனைக்கு பிறகு இந்த பட்ஜெட் உருவாக்கபட்டு இருக்கிறது என்று தமிழ்நாடு முதல்வர் விளக்கம் தந்துள்ளார். நிதி நிலை அறிக்கையில் கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் பெரியார் கவலையோடு கவனிப்பார். திராவிட இயக்கத்தின் அந்த கொள்கையின் பார்வையில் நின்று கல்விக்கு மட்டும் ரூ.55,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்‌...

மயிலாடுதுறையில் திரள்வோம்!

மயிலாடுதுறையில் திரள்வோம்!

தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பார்ப்பனிய மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் இருந்து பெரியாரைக் அகற்றினால் தான் காலூன்ற முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதற்காக சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் பெரியாரை எதிர்த்துப் பேசுகிறார், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பெரியார் மீது அவதூறுகளை பேசுகிறார்,‌ தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சங்கிகள் ஒவ்வொரு நாளும் அவதூறுகளை வீசுகின்றனர். இதற்காக நாம் தமிழர் கட்சியின் சீமான் சங்கிகளின் கைப்பாவையாக களம் இறக்கப்பட்டுள்ளார். பெரியார் எதிர்நீச்சலில் வளர்ந்த தலைவர்; இந்த எதிர்ப்புகள் பெரியார் கருத்துக்களை மேலும் வலிமைப்படுத்தவே செய்யும் அதற்கான களங்களை பெரியாரியத் தொண்டர்களாகிய நாம் உருவாக்க வேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை முன்னெடுக்கவே இந்த பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி உள்ளோம். இதன் நிறைவு மாநாடு மயிலாடுதுறையில் மார்ச் 22 -ல் நிகழ இருக்கிறது. எதிரிகளைச் சந்திக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்த மாநாட்டில் நாம் முடிவெடுப்போம். பெரியாரியலுக்கு எதிராக எழுந்துள்ள சவால்களை சந்திக்க...

“பரபரப்பான விற்பனையில்!” கழக நூல்கள் தொகுப்பு!

“பரபரப்பான விற்பனையில்!” கழக நூல்கள் தொகுப்பு!

அதிரடி சலுகை விலையில்! 14 புத்தகங்கள் – ரூ.565/ அதிரடி விலை குறைப்பு – ரூ.500/ மட்டும் (தபால் செலவு உட்பட)புத்தகங்களின் பட்டியல் : 1. “அம்பேத்கர் நம் தலைவர்” – கொளத்தூர் மணி. 2. “இது தமிழ்நாடு சனாதனத்திற்கு எதிரான யுத்தம் இங்கு மட்டும் தான்” – உதயநிதி ஸ்டாலின். 3. “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் நூல் அறிமுகம்” – விடுதலை இராசேந்திரன். 4. “இறுதி மூச்சு அடங்கும் வரை யாருக்காக உழைத்தார் பெரியார்?” – திவிக வெளியீடு. 5. “ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்” – கொளத்தூர் மணி. 6. “எங்களை தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்” – ஆ ராசா. 7. “எல்லைப் போராட்டத்தில் பெரியாரும், ம.பொ.சியும் “ – பெரியார். 8. “தமிழர் உரிமைக்கு எதிரி யார்?” – பெரியார் மய்யம் . 9. “திராவிட பெரியார் யாருக்கு எதிரி” –...

பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…

பரப்புரைப் பயணங்கள் தொடங்கின- பெரியாரின் பெரும் தொண்டுகள் மக்களிடையே விளக்கம்! இளைஞர்கள் பெண்கள் பேராதரவு…

பெரியார் ஏன் எதிரிகளைப் பதறவைக்கிறார்? பரப்புரைப் பயணம் கடந்த 15-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது 16-ஆம் தேதி ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடங்கியது. கழக செயல் வீரர்கள் தனி வாகனங்களில் பயணத்தில் பங்கேற்கிறார்கள். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கழக செயல் வீரர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த பரப்புரையில் இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். கழக நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பெரியாரின் எதிர்நீச்சல் அவர் உருவாக்கிய சமூக மாற்றங்களைக் கழகப் பேச்சாளர்கள் மக்களிடம் எடுத்துக் கூறுகிறார்கள். கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. பயணங்களின் செய்தித் தொகுப்பு சென்னை: “பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” எனும் தலைப்பில் சென்னை அணி செல்லும் பரப்புரைப் பயணத்தின் தொடக்க விழா,இராயப்பேட்டையில் 15.03.2025 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் சிறப்புரையாற்றி பரப்புரைப் பயணத்தை துவக்கி வைத்தார். திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.என்.துரை, 119-வது...

ஈரோடு வடக்கில் கலந்துரையாடல் கூட்டம்!

ஈரோடு வடக்கில் கலந்துரையாடல் கூட்டம்!

மாவட்ட தலைமை அலுவலகத்தில் 2.3.2025 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர். நிவாஸ் தலைமை வகிக்க மாநில வெளியிட்டுச் செயலாளர் தோழர். இராம. இளங்கோவன் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் 1: கடந்த 22 2.2025 கோபி ஒன்றிய கழகத்தின் சார்பாக நடைபெற்ற ‘பெரியார் எனும் பெரும் நெருப்பு’ கருத்தரங்கு வரவு செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டு தோழர்கள் வசம் கணக்கு ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வை சிறப்பாக நடத்திய தோழர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. தீர்மானம் 2: வருகின்ற 16 /3/2025 அன்று தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பரப்புரைப பயணம் தொடங்க இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக ஈரோட்டில் தொடங்க இருக்கும் பரப்புரைப் பயணத்தில் மாவட்டக் கழகத்தின் சார்பாக கலந்து கொள்வது எனவும், பயணக் குழுவோடு ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தோழர்கள் இணைந்து பயணிப்பது எனவும்...

டார்வினி – குமரேசன் இணையேற்பு விழா

டார்வினி – குமரேசன் இணையேற்பு விழா

09.03.25 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் விராலிமலை திருமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இணையர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அனிவித்து தாங்களும் மலர் மாலையை மாற்றிக் கொண்டனர். பால்.பிராபகரன் (பரப்புரை செயலாளர்) மற்றும் துரைசாமி (மாநில பொருளாளர்) அவர்களும் சேர்ந்து கழகக் கொடியினை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர் சிற்பி பிராஜன் அவர்கள் மந்திரமா?தந்திரமா? நிகழ்வு நடைபெற்றது. புதியவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.ம கே பி எம் ஐயப்பன் திமுக மத்திய ஒன்றிய செயலாளர், இளங்குமரன் மேற்கு ஒன்றிய செயலாளர் திமுக, மெடிக்கல் குமார் திமுக மாவட்ட பிரதிநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். திராவிட முன்னேற்றக் கழக தென்னலூர் பழனியப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார். பால் பிரபாகரன் பரப்புரை செயலாளர் திவிக, வீ.சிவகாமி தமிழ்நாடு அறிவியல் மன்றம்...

மகளிர் தினம் – கழகப் பெண்கள் துண்டறிக்கை பிரச்சாரம்!

மகளிர் தினம் – கழகப் பெண்கள் துண்டறிக்கை பிரச்சாரம்!

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிர் தின வாழ்த்துகள் கூறி 2000 துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. 08.03.25 அன்று மேட்டூர் அரசு கலைக் கல்லூரி முன்பு கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் சுதா, மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், தேன்மொழி, முத்துராஜ், இராமச்சந்திரன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் ஆகியோரும், வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகர், இந்திராணி, நந்தினி ஆகியோர்களும், கொளத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரசுவதி, தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், அழகேஸ்வரி, கோமதி ஆகியோர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள், இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். 08.03.25 அன்று தொடர்ந்து சேலம் மாநகர் செளடேஸ்வரி மகளிர் கல்லூரி முன்பு சேலம்...

உண்மைக்குப் புறம்பாக விமர்சிக்கும் கயவர் கூட்டம்! பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி- -கொளத்தூர் மணி

உண்மைக்குப் புறம்பாக விமர்சிக்கும் கயவர் கூட்டம்! பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி- -கொளத்தூர் மணி

சென்னையில் நிமிர்வோம் வாசகர் வட்ட கூட்டத்தில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி… அண்ணா ஏராளமான நாடகங்களை எழுதியுள்ளார். முதலில் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், இந்து ராஜ்ஜியம் என்றால் எப்படி இருக்கும்? அரசனாக இருந்தாலும் என்பதுதான் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம். சந்திர மோகன் என்பவர் பார்ப்பனர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் சிவாஜியிடம். ஆனாலும் சிவாஜி அவமானப்படுத்தப்படுவார், என்பதை எல்லாம் எழுதி அது எப்படி இந்த இந்து மத சாஸ்திரங்கள் என்ற பெயரால் அரசனைக் கூட கைப்பாவையாக வைத்திருந்தனர் பார்ப்பனர்கள் என்று சொல்வது தான் அந்த நாடகம். அம்பேத்கர் பாகிஸ்தான் பிரிவினை என்ற நூலில் எழுதியுள்ளார். “எப்படியாவது எந்த வழியிலாவது இந்து இராஜ்ஜியம் அமைந்து விடுமேயானால், அதை விட இந்த நாட்டுக்கு பெரும் கேடு எதுவும் இருக்க முடியாது”. இந்து இராஜ்ஜியம் என்றால் என்ன அது அமைந்தால் என்ன நிலை என்பதை அழகாக எடுத்துச் சொன்ன நாடகம்தான் ‘சிவாஜி கண்ட...

அறிவிப்பு-வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்

அறிவிப்பு-வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்

பெரியார் முழக்க வாசகர்கள் 2024 சந்தாதாரர்களுக்கு வருகிற மார்ச் -31,2025 வரை இதழ்கள் அனுப்பப்படும். 2025 ஆண்டுக்கான சந்தாவை மார்ச் இறுதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். (குறிப்பு : கடந்த ஆண்டு சந்தாதாரர்களுக்கு பத்திரிக்கை சரிவர கிடைக்கவில்லை என்ற புகார்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கின்றன. அதை இந்த ஆண்டு முழுமையாக சரி செய்துவிட்டோம். இனி இதழ் வாசகர்களுக்கு சரிவர கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.) மேலும் புகார்களுக்கு +91 63697 76351 தொடர்பு கொள்ளவும். பெரியார் முழக்கம் 13032025இதழ்

ஜாதியைத் தூக்கிட்டு வராதீங்க!

ஜாதியைத் தூக்கிட்டு வராதீங்க!

அமெரிக்காவில் வாழும் குஜராத்தைச் சேர்ந்த டயலன் பட்டேல் என்பவர், “டல்லாஸில் எனது சாதிக்கான (லியுவா படிதார் சமாஜ் சாதி) வாலிபால் போட்டி நடைபெறுகிறது. அமெரிக்காவில் 40,000 பேர் எங்கள் சாதியினர். அதில் 8,000 பேர் இங்கு உள்ளனர். குஜராத்தின் ஒரு சில பகுதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறோம். நாங்கள் கிராமப்புற அமெரிக்காவில் மோட்டல் அல்லது பெட்ரோல் பம்ப் வைத்து உள்ளோம்” என்று ஜாதிப் பெருமையுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த பதிவுக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஜாதிப் பெருமை பேசிய இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்து அமெரிக்கா அரசியல்வாதிகள் போஸ்ட் செய்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டன் கில் செய்துள்ள பதிவில், “அமெரிக்கா என்பது தகுதி வாய்ந்தவர்களுக்கான நாடு. இதற்கு காரணம் நம்மிடம் சாதி அமைப்பு இல்லை. இந்தியா போன்ற வெளிநாட்டில் உள்ள வர்க்க வேறுபாட்டை, ஜாதி வேறுபாட்டை இங்கே...

கழக ஏட்டுக்கு ரூ.15,000 சந்தா!

கழக ஏட்டுக்கு ரூ.15,000 சந்தா!

தமிழ்நாடு அரசால் தந்தை பெரியார் விருது பெற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர், புரட்சி பெரியார் முழக்கத்தின் ஆசிரியர் விடுதலை ராசேந்திரன் அவர்களுக்கு, நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் சாமிநாதன் சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது புரட்சிப் பெரியார் முழக்க சந்தா தொகையாக 15,000 ரூபாயும், கழக வளர்ச்சி நிதியாக 1000 ரூபாயும் வழங்கினார். சந்திப்பின்போது தோழர் சந்திரா, தோழர் பிரகாசு ஆகியோர் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் 13032025இதழ்

பார்ப்பனர்கள் கூட்டத்தில் நீதிபதிக்கு என்ன வேலை?

பார்ப்பனர்கள் கூட்டத்தில் நீதிபதிக்கு என்ன வேலை?

கேரளாவில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் பங்கேற்றதைப்போல, பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டிலும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் என்ற பார்ப்பனர் பங்கேற்றுப் பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடித்துப் பேசி இருக்கிறார். ‘பிராமண மகா சபையின் பொன் விழா’ இரண்டு நாட்கள் நடைபெற்றது. அம்மாநாட்டில் பேசிய அவர், “பிராமணர்கள் என்ற வார்த்தையை ஒரு ஜாதியாக பார்ப்பதைவிட, வர்ணாசிரம தர்மத்துடன் பார்க்க வேண்டும். வேதங்களை தொகுத்த வேதவியாசர், மீனவப் பெண்ணின் மகன்; ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இவர்களை கீழானவர்களாக பிராமணர்கள் பார்த்தது இல்லை. ஹிந்து கடவுளான ராமரின் கருத்துக்கள், நம் அரசமைப்பிலும் இடம் பெற்றுள்ளன.’’ என்று பேசியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நீதிபதி சிறீசானந்தா, “மக்கள் கல்வி, உணவுக்காக போராடும்போது, இதுபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகள் தேவையா என்று விமர்சிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளே சமூகத்தினர்...

பார்ப்பனர்கள் கூட்டத்தில் நீதிபதிக்கு என்ன வேலை?

பார்ப்பனர்கள் கூட்டத்தில் நீதிபதிக்கு என்ன வேலை?

கேரளாவில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் பங்கேற்றதைப்போல, பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டிலும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் என்ற பார்ப்பனர் பங்கேற்றுப் பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடித்துப் பேசி இருக்கிறார். ‘பிராமண மகா சபையின் பொன் விழா’ இரண்டு நாட்கள் நடைபெற்றது. அம்மாநாட்டில் பேசிய அவர், “பிராமணர்கள் என்ற வார்த்தையை ஒரு ஜாதியாக பார்ப்பதைவிட, வர்ணாசிரம தர்மத்துடன் பார்க்க வேண்டும். வேதங்களை தொகுத்த வேதவியாசர், மீனவப் பெண்ணின் மகன்; ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இவர்களை கீழானவர்களாக பிராமணர்கள் பார்த்தது இல்லை. ஹிந்து கடவுளான ராமரின் கருத்துக்கள், நம் அரசமைப்பிலும் இடம் பெற்றுள்ளன.’’ என்று பேசியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நீதிபதி சிறீசானந்தா, “மக்கள் கல்வி, உணவுக்காக போராடும்போது, இதுபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகள் தேவையா என்று விமர்சிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளே சமூகத்தினர்...

“ஜாதிக்கு ஒரு கோயில் தேவையா?”

“ஜாதிக்கு ஒரு கோயில் தேவையா?”

ஆகமக் கோயில்களை பார்ப்பனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதை எதிர்த்து, பெரியார் இயக்கம் குரல் கொடுத்து வருகிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 100-வது நாளில் செயல்படுத்தினார். ஆனாலும் 24 பார்ப்பனரல்லாத அர்ச்சகர்க்கு மேல் நியமனம் செய்ய முடியாமல், நீதிமன்றங்களில் பார்ப்பனர்கள் தடை வாங்கிவிட்டார்கள். தடையை நீக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அறநிலையத்துறை இந்த பிரச்சினையில் ஆர்வம் காட்டாமல் செயல்படுகிறது. பெரியார் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை அகற்றும் இந்த சமூக மாற்றக் கொள்கையில் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கதக்கவையாகவே இருக்கின்றன. இந்த நிலையில் பல கிராம கோயில்கள் ஜாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கியுள்ள தீர்ப்பைப் பாராட்டி வரவேற்க வேண்டும். “கோயில்களை நிர்வகிக்கும் உரிமையை ஒரு குறிப்பிட்ட ஜாதிகள் கோர முடியாது‌. கோயில்களை ஜாதி அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது ஜாதியை நிலை...

உதயநிதி மீது வழக்குத் தொடர தடை!

உதயநிதி மீது வழக்குத் தொடர தடை!

உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்புப் பேச்சுக்கு எதிராக மேலும் வழக்குகள் போடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், “ ‘சனாதன தர்மத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அவதாரம் எடுத்து வருவேன்’ என்று கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் அப்படியெல்லாம் அவதாரம் எடுத்து கிருஷ்ணன் வர மாட்டார், நாம்தான் வழக்கு தொடர வேண்டும் என்று பகவான் கிருஷ்ணனை அவமதித்து சனாதனவாதிகள் நீதிமன்றத்தை அணுகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் இதுவும்கூட கடவுளை அவமதிப்பதுதான். இதற்காகவே சனாதனவாதிகள் மீது வழக்குத் தொடரலாம். இந்துத்துவ அரசியல் மதத்தையும் கடவுளையும் புறந்தள்ளிவிட்டு கூட்டணி அரசியலாக உருவெடுத்து நிற்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். பெரியார் முழக்கம் 13032025இதழ்

பெரியார் பல்கலை.யில் விக்சிட் பாரத்-2047 கருத்தரங்கு-திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் பல்கலை.யில் விக்சிட் பாரத்-2047 கருத்தரங்கு-திராவிடர் விடுதலைக் கழகம்

இதுதொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி 06.03.2025 அன்று விடுத்துள்ள அறிக்கை: “மும்மொழிக் கொள்கை, பாராளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு போன்ற பிரச்சனைகளை ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிலையில் ஒன்றிய அரசின் திட்டமான ‘விக்சிட் பாரத் வளரும் இந்தியா 2047’ தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வரும் மார்ச் 10 மற்றும் 11-ஆம் தேதி கருத்தரங்கு ஏற்பாடு செய்ததை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பதிவாளர் தேர்வு, அலுவலர் பதவி உயர்வு, புதிய பணி நியமனம், விதிகளுக்கு புறம்பாக நூலகர், உடற்கல்வி இயக்குநர் நியமனம் போன்ற பிரச்சனைகளிலிருந்து, ஒன்றிய அரசு தன்னை காப்பாற்றுவதற்காக இந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர் வரும் மே 19 உடன் பணியிலிருந்து விடுபட உள்ளார். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே இந்த கருத்தரங்கை நடத்த முடிவு செய்துள்ளார். ஆர்எஸ்எஸின் கூடாரமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மாறுவதை தமிழ்நாடு...

சடலங்களைை இடுகாடு வளைை சுமந்து செசல்கிறாார்கள்  “மரபுகளைைத் தகர்க்கும் திவிக பெெண்கள்‌

சடலங்களைை இடுகாடு வளைை சுமந்து செசல்கிறாார்கள் “மரபுகளைைத் தகர்க்கும் திவிக பெெண்கள்‌

தமிழ்நாட்டில் பெரியாரியப் பெண்கள் பண்பாட்டு புரட்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இந்து ஆங்கில நாளேடு இதை சுட்டிக்காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் இறந்தவர்களின் சடலங்களை திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த பெண்கள் இடுகாடு வரை சுமந்து சென்று எந்த வித சடங்கு சம்பிரதாயம் இன்றி உடலை அடக்கம் செய்து வருகிறார்கள். பெண்கள் சுடுகாட்டுக்கு போவதே சமூகம் தடைச் செய்து உள்ளது. தடையை தகர்த்து சேலம் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக 100-க்கு மேற்பட்ட சடலங்களை பெண்களே சுமந்து சென்று இறுதி நிகழ்வுகளை செய்துள்ளனர் என்று இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளிட்டுள்ளது. (மார்ச் 10, 2025). பெரும்பாலான மதங்கள் பெண்களை சுடுகாடு செல்வதற்கு அனுமதிப்பதில்லை. தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மரணத்தில் கூட இடுகாடு செல்ல முடியாது. ஆனால் சேலம் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெண்கள் சடலங்களை சுடுகாடு சுமந்து சென்று மத மரபுகளை உடைத்து இருக்கிறார்கள். இந்த...

கோவையில் அமிஷாவுக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் !

கோவையில் அமிஷாவுக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் !

இந்தித் திணிப்பு – புதியக் கல்விக் கொள்கைத் திணிப்பு – வெள்ள நிவாரண நிதி மறுப்பு என தொடர்ந்து தமிழ்நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டிக்கும் விதமாக 26.02.2025 கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகைதந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் 26.02.2025 மாலை 5 மணியளவில் ஹோப் காலேஜ் சிக்னல் அருகில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன், அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, சிபிஐ (மா.லெ) ரெட் ஸ்டார் மத்தியக்குழு உறுப்பினர் இனியவன், தமிழ்ப் புலிகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் இராமச்சந்திரன் கண்டன உரையாற்றினர். திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப் புலிகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மா.லெ) ரெட் ஸ்டார் அமைப்புகளைச் சேர்ந்த 135 பேர் கலந்து கொண்டனர். 109 பேர் கைதாகினர்....

லெனின் சுப்பையா படத்திறப்பு நூல் அறிமுக விழா

லெனின் சுப்பையா படத்திறப்பு நூல் அறிமுக விழா

பார்ப்பனக் கும்பலை தன் பாடல்களால் தோலுரித்த, விடுதலைக்குரல் இசைப்போர் நிறுவனத்தலைவர் புரட்சிப் பாடகர் லெனின் சுப்பையா படத்திறப்பு மற்றும் நூல் அறிமுக விழா புதுச்சேரி தீனா தோழர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. பொழிலன், ஏ கே ராஜன், காசு நாகராசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அவருடன் பயணித்த பல தோழர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மணிமேகலை, நாத்திகன், தேன்மொழ் பெரியார் பிஞ்சு திராவிட மகிழ்நன் ஆகியோர் சுப்பையாவின் பாடல்களைப் பாடி அவரின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். உமாபதி சென்னை மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகமும் லெனின் சுப்பையாவும் இணைந்த பயணித்த நிகழ்வுகளையும், “மோடி என்பது எல்லாம் வெறும் முகமூடி” பாடலை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டத்தில் பாடிய களஅனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். காசு நாகராசன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்புச் செயலாளர் விடுதலைப்போர் புத்தகம் வெளியிட்டார். கலந்துக்கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

திராவிடம் பெரியார் யாருக்கு எதிரி ? தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்

திராவிடம் பெரியார் யாருக்கு எதிரி ? தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட திவிக சார்பில் திராவிடம் – பெரியார் யாருக்கு எதிரி? என்ற தலைப்பில் தூத்துக்குடி தாளமுத்து நகர் முதன்மை சாலையில் 22.02.2025 அன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திறகு தூத்துக்குடி மாவட்ட தி.வி.க. பொருளாளர் கே.சந்திரசேகர் தலைமை வகித்தார் மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன் ஆழ்வை ஒன்றிய செயலாளர் இரா. உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், தமிழர் உரிமைக்காக பாடுபட்ட தலைவர் பெரியாரையும் அவதூறு பேசி வருகிறார்கள். பெரியார் மீது குறை சொல்ல முடியாத தற்குறி அரசியல்வாதிகள் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களை பாதிக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கை 2020 பற்றி மக்கள் சிந்திக்காமல் இருக்க பெரியார் மீது அவதூறு பரப்புகிறார்கள். பெரியார் மீதான விமர்சனத்திற்கு பதிலளித்தும் உரையாற்றினார். நிகழ்வில் திராவிட தமிழர் கட்சி சு.க.சங்கர், கிருத்துவ...

“ஏன் வேண்டும் பெரியார்” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

“ஏன் வேண்டும் பெரியார்” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

புதுக்கோட்டை: “ஏன் வேண்டும் பெரியார்” என்ற தலைப்பில் புதுக்கோட்டையில் 23.2.25 அன்று காலை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்அதர்மம்யூடுப் சேனல் மனோஜ் விடுதலை புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் செயல் இந்திய அரசின் செயல் இதற்கு காரணமான பார்ப்பனிய அதிகாரிகளின் சூழ்ச்சி ஆகியவற்றையும். சீமான் உளவுத்துறையின் கையால் என்பதையும் படம்பிடித்து காட்டினார். ரூட்ஸ் தமிழ் யூடுப் சேனல் கரிகாலன் அவர்கள் போலி தமிழ் தேசியவாதிகளின் அவதூறுகளுக்கு தக்க பதிலடி கொடுத்து பேசினார். இறுதியில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கல்வி வளர்ச்சியில் நூறாண்டுகளுக்குள் ஏற்பட்ட மாற்றமே பெரியார் படிக்க வைத்ததற்கு சாட்சி, யார் தமிழர்கள் என்ற பாவாணரின் கருத்தையும், சாதிதேசியமாக இயங்கும் போலி தமிழ் தேசியவாதிகளையும் அம்பலப்படுத்தும் விதமாகவும், இந்தி திணிப்பை 1930 களின் இறுதியில் எதிர்த்து முதல் இப்போது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து எதிர்ப்பது இன்னும் பலமாக இருக்கிறது என பலற்றை ஆழமாக பேசினார். மேலும் கருத்தரங்கத்தில்...

“பெரியார் எனும் பெருநெருப்பு” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

“பெரியார் எனும் பெருநெருப்பு” எழுச்சிமிகு கருத்தரங்கங்கள்

கோபி: ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கடந்த 22.02.2025 சனிக்கிழமை மாலை கோபியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான் தியாகசீலர் சி.எஸ்.எஸ் அரங்கத்தில் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்க நிகழ்விற்கு மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் அவர்கள் தலைமையேற்றார். ரூட்ஸ் தமிழ் கரிகாலன், பேரலை இந்திரகுமார் தேரடி, பேரலை மில்டன், அதர்மம் மனோஜ், யூ2 புரூட்டஸ் மைனர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியில் மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றிட அரங்கம் நிறைந்த கோபி பெருமக்களால் கருத்தரங்கம் நிறைவு பெற்றது. நிகழ்வில் கழகத்தோழர்கள், பொதுமக்கள், மாற்று அரசியல் கட்சியினர், இயக்கத்தோழர்கள் என பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 06032025இதழ்

தமிழை அறிவியல் பார்வையில் அணுகினார் பெரியார்!

தமிழை அறிவியல் பார்வையில் அணுகினார் பெரியார்!

(பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட 28-வது சந்திப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை) பெரியார் தமிழ்மீது ஆர்வம் இல்லாதவராக இருந்தால் திருக்குறள் மீது அக்கறை இல்லாதவராக இருந்தால் ஒரு மாநாடு நடத்தி தீர்மானம் போடுவரா, அந்த தீர்மானத்தைத் ஓட்டி தொண்டர்கள் உரை எழுதுவார்களா… பெரியாரின் தமிழறிவு இப்படிப் பல செய்திகள் சொல்லிக்கொண்டே போகலாம். பெரியார், திராவிடர் இயக்க தொண்டர்கள் தமிழுக்கு செய்த நன்மைகள் ஏராளம். இன்னொரு செய்தி சொற்களைத் தமிழ்ப்படுத்துவதற்கு அரசே ஒரு குழு அமைக்கிறது. கலைச்சொற்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற‌ ஒரு முயற்சி நடந்தது. “ஹைட்ரஜன்” என்பதை “ஆப்ஜனகம்” என்று தமிழில் மொழிபெயர்க்கிறார்கள். Disinfectant என்பதற்கு பூதி நாசினி என்று போடுகிறார்கள். இதற்கு பதிலடியாக பெரியார் பேசுகிறார் நான் தமிழ்ச்சங்கம் மொழிப்பெயர்ப்பை படித்திருக்கிறேன் ‘ஹைட்ரஜன்’ என்பதற்கு ‘நீரகம்’ என்றும் ஹைட்ரோலிசிஸ் என்பதற்கு...

இளமதி ஜேசன்‌ ஜாதி மத மறுப்பு மணவிழா

இளமதி ஜேசன்‌ ஜாதி மத மறுப்பு மணவிழா

கழக ஆதரவாளர் எம்.ஜி இளங்கோவன் – மாலதி ஆகியோரின்‌ மகள் இ.மா.இளமதி பி பி.ஜேசன் ஆகியோர் ஜாதி மத மறுப்பு மணவிழா 8.02.2025 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை ஈஞ்சம்பாக்கம் அக்கரையில் உள்ள ஜெனராஜன் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மணவிழாவை நடத்தி வைத்தார். கீழ்கண்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது. இன்று முதல் நாங்கள் வாழ்க்கை துணைவர்களாக குடும்ப வாழ்வில் நுழைகிறோம்.சம உரிமையும் தோழமையும் அன்பும் கொண்டதே குடும்பம் என்றக் கொள்கை வழியில் பயணிக்க உறுதி ஏற்கிறோம். வாழ்வில் சந்திக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சமமாக பகிர்ந்து கொண்டு இணையர்களாவும், தோழர்களாகவும் அறிவியல் நெறியில் சமூக அக்கறையோடு வாழ்ந்து காட்டுவோம் என்று உறுதி ஏற்கிறோம். என்று உறுதி ஏற்றனர். மண விழா மகிழ்வாக இணையர்கள் கழக வளர்ச்சிக்கு ரூ.5000 நன்கொடை வழங்கினர் பெரியார் முழக்கம் 06032025இதழ்

இந்தியாவின் சிறந்த மாடல் திராவிட மாடல்

இந்தியாவின் சிறந்த மாடல் திராவிட மாடல்

கல்வியாக இருக்கட்டும் தனிநபர் வருமானமாக இருக்கட்டும் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கட்டும் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கையாக இருக்கட்டும் எந்த ஒரு அளவுகோலிலும் தெற்கிற்கும் வடக்கிற்கும் பாரதூர வேறுபாடு இருக்கிறது. கல்வியின் மூலம் சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் சிறப்பான மாணவர்களை தமிழ்நாடு உருவாக்கி இருக்கிறது‌ இந்தியாவுக்கு என்று ஒரு மாடல் இருக்க முடியும் என்றால் அது தமிழ்நாடு மாடலாக மட்டுமே இருக்க முடியும். -தி வயர் இணையதள நேர்காணலில் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியல் சமூகவியல் பற்றி வகுப்பெடுக்கும் பேராசிரியர் கிறிஸ்டோப் ஜெபர்லோ கருத்து.

தமிழ்நாடு அரசுக்குத் துணைநிற்போம்!

தமிழ்நாடு அரசுக்குத் துணைநிற்போம்!

2026-ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. வழக்கம்போல தமிழ்நாடுதான் இதன் ஆபத்துகளையும் முதலில் உணர்ந்து அதுகுறித்த ஓர் எச்சரிக்கையை எழுப்பியிருக்கிறது. குறிப்பாகத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்னிந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஏற்படப்போகும் இழப்புகள் என்ன என்பதை சுட்டிக்காட்டி, மிகுந்த விழிப்புணர்வோடு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டியது தமிழ்நாடு அரசு. ஆனால் தொகுதி மறுவரையறை தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லையே! திமுக அரசு வேண்டுமென்றே அரசியல் நோக்கங்களுக்கு இவ்விவகாரத்தை கையிலெடுத்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறையும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு பிறகு, அதற்கேற்பத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும். இதற்காக 1952-ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறை சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்ட ஆணையங்கள் 1971 வரை 3 முறை மக்களவைத் தொகுதிகளை சீரமைத்துள்ளன. தற்போதிருக்கும் 543 மக்களவைத் தொகுதிகள் என்பது அப்போது இறுதி செய்யப்பட்டதுதான். ஆனால் அதன்பிறகு நெருக்கடி நிலை காலத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திவிட்டு,...

பெரியாரை சீண்டும்‌ ஆளுநருக்குப் பதிலடி  ஆரியர்-திராவிடர் கற்பனையா?

பெரியாரை சீண்டும்‌ ஆளுநருக்குப் பதிலடி ஆரியர்-திராவிடர் கற்பனையா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பிராமண சங்கத்தின் தலைவராக இப்போது “அவதாரம்” எடுத்து நேரடியாகப் பெரியாரைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார். ஆரியரைப் பற்றி தவறான கருத்தை பெரியார் பரப்பினாராம் ஆரியர்-திராவிடர் வெவ்வேறு இனம் என்றும் ஆரியர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தனர் என்றும் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட சித்தாந்தம் பேசுவோர் கற்பனைக் கதையை உருவாக்கிப் பரப்புகிறார். ஆரியர் வந்தேறிகள் என்று ஈ.வெ ராமசாமி கருத்துத் திணிப்பு செய்தார் என்றும் வாய்க் கொழுப்புடன் பேசி உள்ளார். இந்த உளறல்களை கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய் விட்டது. பிகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஆளுநரே உமக்கு வரலாறு ஏதாவது தெரியுமா? 1. பார்ப்பனர்களே தங்களை ஆரியர்கள் என்று பெருமையுடன் அறிவித்துக் கொண்ட கதை தெரியுமா? அவர்கள் ஆரிய சமாஜம் என்ற‌ அமைப்பை உருவாக்கிக் கொண்டார்களே அது உமக்குத் தெரியுமா? அதன் நிறுவனர் தயானந்த சரசுவதி ஆரியர்களாகிய வேதமும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்று...

நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்

நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம்

ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் தோழர்கள் நரேன் (எ) நரேந்திரன்- சங்கீதா இணையரின் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி முன்னிலையில், தலைமைக் குழு உறுப்பினர் ஈசுவரன் தலைமையில் நடைபெற்றது. காவலாண்டியூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழி எடுக்கப்பட்டு எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் மாலை அணிவித்து மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்நிகழ்வில் சேலம் மாவட்டக் கழக ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், வழக்கறிஞர் சரவணன் பரத், காவை.தங்கராசு, மாரி, மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் மேட்டூர் நாகராஜ்,ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.திருமண நிகழ்வின் மகிழ்வாக இணையர்கள் புரட்சிப் பெரியார் முழுக்கத்திற்கு ரூபாய் ₹1000/- வளர்ச்சி நிதியை கழகத் தலைவரிடம் வழங்கினர்.

கடலூரில் கழக ஆர்ப்பாட்டம்!

கடலூரில் கழக ஆர்ப்பாட்டம்!

19-02 -2024 அன்று மாலை 4 மணியளவில் சிதம்பரத்தில் யுஜிசி திருத்த வரைவு அறிக்கையை கண்டித்து கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக அமைப்பாளர் அ.மதன்குமார் தலைமையேற்றார். இந்தஆர்ப்பாட்டத்திற்கு ந.கொளஞ்சி, முத்துகிருஷ்ணன், கிருஷ்ணகுமார், தாமரை, விக்னேஷ், தகவி, பார்த்திபன், ராகுல், ரூபன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செ.பிரகாஷ் வரவேற்று தொடக்கயுரையாற்றினார், இதனையடுத்து கவி, வீரகுமார்,சாகுல் ஹமீது மனித நேய மக்கள் கட்சி, கணபதி ஏகாதிபத்தி எதிர்ப்பு இயக்கம், பாலராஜ் புரட்சிகர மாணவர் இயக்கம் மற்றும் இளைஞர் முன்னணி, இசாக் அலி மே17 இயக்கம், ரமேஷ்மித்ரன் தபெதிக, வழக்கறிஞர் செந்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், தயாநிதி மக்கள் தமிழகம் கட்சி, குறிஞ்சிவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இளையரசன் விழுப்புரம் மாவட்டத் தலைவர் திவிக, ப.அறிவழகன் மாவட்ட அமைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் மன்றம், மகேஷ் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திவிக, அய்யனார் தலைமைச் செயற்குழு...

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக்கூட்டம்

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக்கூட்டம்

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் தெருமுனைக் கூட்டம் 22.02.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகரத் தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநகர அமைப்பாளர் கிருட்டிணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன், ச.மாதவன், லோகநாயகி, தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நவீன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள். சு.செ.சம்பத் (மதிமுக), இராமதாஸ் (விசிக), சாந்தகுமார் (தோழர் அறக்கட்டளை), இராவணன் (ஆதித்தமிழர் பேரவை), சித்ரா (மாமன்ற உறுப்பினர்), ஈஸ்வரன் (திமுக) உள்ளிட்ட தோழமை இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கழகத் தோழர்கள் ஸ்டாலின் ராஜா, அன்னூர் விஷ்ணு ஆகியோர் கழக வெளியீடுகளை வழங்கி சிறப்பித்தனர். கூட்டத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். பெரியார் முழக்கம் 27022025 இதழ்

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

சென்னை: மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 18-02-23 கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழக சேத்துப்பட்டு அமைப்பாளர் இராசேந்திரன் அவர்கள் கடவுள், மறுப்பு, ஆத்மா, கொள்கையை கூறினார். மாவட்டச் செயலாளர் உமாபதி தொடக்க உரையாக சென்னை மாவட்ட கழகம் கடந்த ஆண்டு செய்த சாதனைகளையும், தற்போதைய அரசியல் சூழல்களையும் விளக்கினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன்‌ சென்னையில் கடந்த ஆண்டு நடந்த “எது திராவிடம்,எது சனாதனம்” தலைப்பில் 200 கூட்டங்களைச் சிறப்பாக செய்ததற்கு உழைத்த அனைத்து தோழர்களையும்‌ பாராட்டி வருகிற பரப்புரைப் பயணத்தின் தேவைகள் குறித்துப் பேசினார். கழகத் தலைமை குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் உரைக்குப் பிறகு கழக மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் புதிய தோழர்களை இன்னும் அமைப்பாகக் கட்டமைக்க ஆலோசனைகள் வழங்கினார். தாம்பரம் பகுதி அமைப்பாளர் அருண் கோமதி நவீன காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த வேண்டியத் தேவை...

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

பரப்புரைக்கு தயாராகும் கழகம்!

சேலம்: கிழக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்! 16.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் ஏற்காடு ஷோபா ஹோட்டலில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தீர்மானங்கள்: 1). ஒவ்வொரு பகுதிகளிலும் துண்டறிக்கை வாயிலாகவும், வீதி நாடகங்கள் வாயிலாகவும் தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவது எனவும், 2).தோழர்களின் சந்திப்பை விரிவு படுத்தும் வகையிலும், தொடர்புகளை விரிவு படுத்தும் வகையிலும் வருகின்ற ஜூன் மாத இறுதி வாரத்தில் ஏற்காட்டில் குடும்ப விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 3). சேலம் மாவட்டக் கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்களுக்காக மாவட்ட நிதியை உருவாக்குது எனவும், அந்த நிதியை துண்டறிக்கைகள், கூட்டங்களுக்கு பயன்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கலந்து கொண்டோர்: சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் (கி) மாவட்ட அமைப்பாளர்கள் ஏற்காடு பெருமாள், முத்துமாணிக்கம், சேலம்...

தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்ந்தவர் பெரியார்! -கொளத்தூர் மணி

தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்ந்தவர் பெரியார்! -கொளத்தூர் மணி

(பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட 28-வது சந்திப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை) எப்போதுமே அரசியலிலோ அல்லது மற்றவற்றிலோ படிப்படியாக முன்னேறி செல்வதுதான் அனைவருக்கும் வழக்கம். ஆனால் மணியரசன் அவர்கள் ஒரு பொதுவுடைமைவாதியாக இருந்து, தமிழ் தேசியம் பேசி, இப்போது ஜாதியவாதிகள் பக்கம் வந்து நின்று கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நாட்களில் முழுமையாக வெளிப்பட்டு விடுவார். 1956 நவம்பரில் மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது, யாரெல்லாம் தமிழ்நாட்டில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று முதலில் ஒரு வரையறை வைத்திருந்தார். எந்த அறிவியல் அடிப்படையில் இந்த வரையறையை வைத்தார் என்பது தெரியாது. சீமானுக்கு ஆசானாக சேர்ந்து விட வேண்டும் என்ற‌ ஆசையாக கூட இருக்கலாம். அண்ணா நினைவுநாளையொட்டி இந்த நிமிர்வோம் வாசகர் வட்டம் நடைபெறுகிறது. 1934-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற...

கும்ப மேளாவில் கொடிகட்டப் பறந்த    திருட்டுத்தொழில்!

கும்ப மேளாவில் கொடிகட்டப் பறந்த திருட்டுத்தொழில்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ஆம் தேதிமுதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை கும்ப மேளா நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழா என பாஜக மார்தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் உலகில் எங்குமே நடக்காத பேரவலங்கள் அங்கே நடந்தன. கோடிக்கணக்கான பேர் கூடியதாக செய்திகள் வந்தன. ஆனால் சில லட்சம் பேரை கையாளும் திறன் கூட உத்தரப் பிரதேச பாஜக அரசுக்கு இல்லை. போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லை, ரயில்கள் இல்லை, போக்குவரத்து வசதியே இல்லை. ரயில்களில் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக்கொண்டே உள்ளே ஏறிய காணொளிகளைஇப் பார்த்தோம். ஜனவரி மாதம் இறுதியில் கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்தோர் பற்றிய தெளிவான விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. இவற்றுக்கெல்லாம் மேலாக, “கங்கை நதியின் தரம் குளிப்பதற்கான முதன்மை நீரின் தரத்துடன் ஒத்துப்போகவில்லை. கங்கை நீர் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைத்து இடங்களிலும், மல பாக்டீரியாக்கள் எனப்படும் ஃபெக்கல் கோலிஃபார்ம் அதிகரித்துள்ளது. தற்போது மகா...

மொழிப்போருக்கு தமிழ்நாடு தயார்!-

மொழிப்போருக்கு தமிழ்நாடு தயார்!-

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் புதிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த நிதியை விடுவிப்போம் என்று அடாவடியாக பேசியிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளபோது, ஒன்றிய அரசு தன்னிச்சையாக ஒன்றை உருவாக்கி, அதனை ஏற்றுக்கொண்டால்தான், மற்ற திட்டங்களுக்கு நிதி கொடுப்போம் என்று பேசுவதென்பது அரசியலமைப்புக்கு விரோதமானது. தமிழ்நாட்டின் கொள்கையே இருமொழிதான் என்பதை இன்றைய திமுக அரசு மட்டுமல்ல, பாஜகவின் அடிமை அரசாக இதற்கு முன்பிருந்த அதிமுகவே தெளிவுபடுத்தியிருக்கிறது. உள்ளூர் தொடர்புக்குத் தாய்மொழி, உலகத் தொடர்புக்கு ஆங்கிலம், இதைத்தவிர இன்னொரு மொழி எந்த வகையிலும் தமிழ்நாட்டுக்கு தேவைப்படவில்லை. அப்படியே பணி நிமித்தமாக எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவைப்பட்டால் அது தனிநபரின் விருப்பத்துக்கு உட்பட்டது, தேவைக்குட்பட்டது. யாரும் கற்றுக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தப்போவதில்லை. ஆனால்...

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக தமிழர் நலனுக்காக அரை நூற்றாண்டுக்கு மேலாக ஓயாது உழைத்தவர் பெரியார். ஜாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத, பாலினப் பாகுபாடு இல்லாத ஒரு சமத்துவ சமூகம் மலர வேண்டும் என்று தன் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பாடுபட்டவர் பெரியார். மக்கள் ஆதரிப்பதைப் பேசி, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக மக்கள் பின்பற்றிய மூடத்தனங்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர் பெரியார். தன் மீது கல், முட்டை, செருப்பு போன்றவை வீசப்பட்டபோது கூட ஓடி ஒளிந்து கொள்ளாமல், தனக்கு சரியெனப்பட்டதை வெளிப்படையாகப் பேசியவர் பெரியார். குடலிறக்க வலியோடும், மூத்திரச் சட்டியோடும் வாழ்நாளின் கடைசிவரை தமிழ் மக்களின் தன்மானத்திற்காகப் பேசியவர் பெரியார். கல்வி எட்டாக்கனியாக இருந்த தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி ஒரு நூற்றாண்டில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு உருவாகக் காரணம் பெரியார். எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதைச் சிந்தனையைத் தமிழர்களுக்குக் கடத்தியவர் தந்தை பெரியார். ஆனால் இன்றைக்குப் பெரியாரைக்...

தமிழ்தேசிய முப்பாட்டன் பெருமையும்  சிங்கள இனவெறியும் ஒன்றுதான்!-விடுதலை இராசேந்திரன்

தமிழ்தேசிய முப்பாட்டன் பெருமையும் சிங்கள இனவெறியும் ஒன்றுதான்!-விடுதலை இராசேந்திரன்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . கடந்த வார தொடர்ச்சி… நெறியாளர்: ஈழத்தில் பிரபாகரன் நடத்திய விடுதலைப் போராட்டத்துக்கும் இங்கே தமிழ்தேசிய போரட்டத்துக்கும்‌ வேறுபாடு இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? பொதுச்செயலாளர்: அடிப்படையில் ஒரு தேசத்தின் விடுதலை என்பது மக்களின் சமத்துவத்தையும், உரிமையும் அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக மக்களிடையே பிளவுகளையும், பாகுபாடுகளையும் அடையாளப்படுத்தும் கொள்கைகளைக் கொண்ட தேசியம் என்பது விடுதலைக்கு நேர் முறணானது. பிரபாகரன் போராடிய ஈழ விடுதலை என்பது ஐக்கிய‌ நாட்டு சபை அங்கீகரித்த தேசிய‌ சுய‌நிர்ணய உரிமையை வலியுறுத்தி நடத்திய போராட்டமாகும்‌. இந்தியாவை இந்து நாடாக மாற்றி அமைப்பதற்கு இப்போது இங்கே முயற்சிகள் நடைபெற்றுக்‌ கொண்டு இருக்கினறன.இந்தியா என்ற‌ சொல்லுக்கு முசுலிம்களும், கிருத்தவர்களும் உள்ளடக்கிய‌ நாடு என்று பொருள்படுகிறது, எனவே இந்தியா என்ற...

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?-வாங்க வரலாறு பேசுவோம்

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?-வாங்க வரலாறு பேசுவோம்

வாங்க வரலாறு பேசுவோம்…பரப்புரைப் பயணம் இப்போதைய பேசுபொருளாய் எதிர்மறையாய் உருவாக்கப்பட்டிருக்கிற அரசியல் சூழலை, நேர்மறையாய் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டின் நான்கு முனைகளில் இருந்து பரப்புரை பயணம் நடத்துகிறது. நிறைவாக மயிலாடுதுறையில் மாநாடு நடைபெறவுள்ளது. ஏனென்றால், பெரியார் மறைந்து அரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டோம். இப்போதும் தமிழ்நாட்டின் விவாதப் பொருள் பெரியாரை சுற்றியே இருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லா போராட்டக் களங்களிலும் பெரியார் இடம்பெறுகிறார், அவரது கருத்துக்கள் பேசப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் இந்தித் திணிப்புக்கு எதிராக அரண்போல நிற்கிறார் பெரியார். மதவாத சக்திகள் தமிழ்நாட்டை வன்முறைக்காடாக்க முயற்சிக்கும் களங்களில் சமத்துவ நெருப்பாக அவர்களின் எண்ணத்தை சுட்டுப் பொசுக்குகிறார் பெரியார். பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களைக் கல்வியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று துடிக்கும் வருணாசிரமாவதிகளுக்கு தமிழ்நாட்டில் மரண அடி கொடுத்து எதிர்த்து நிற்கிறது பெரியார் விதைத்துவிட்டுச் சென்ற கல்வி குறித்தான விழிப்புணர்வு சிந்தனைகள். பெரியாரை எப்படி எதிர்கொள்வது என்றே...

புரட்சிப் பெரியார் முழக்கம்

புரட்சிப் பெரியார் முழக்கம்

ஆண்டு சந்தா : ரூ.300/- ஐந்தாண்டு சந்தா : ரூ.1500/- தொடர்புக்கு : 15. தோழமை, வெங்கடேஸ்வரா நகர், பெருங்குடி, சென்னை – 600096. பேச : 63697 76351, முழக்கம் தொடர்பான சந்தேகங்களுக்கு மேற்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் : newsdvk@gmail.com. பெரியார் முழக்கம் 20022025 இதழ்

காரைக்குடியில் கருத்தரங்கம்

காரைக்குடியில் கருத்தரங்கம்

இந்தி இந்துத்துவம் இந்தியா பற்றிய பெரியாரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் 8.2.25 அன்று கருத்தரங்கம் காரைக்குடியில் நடைபெற்றது. இதில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இந்துத்துவம் இந்தி இந்தியா பற்றிய பெரியாரின் சிந்தனைகளையும் நாம் இதில் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதனையும் விரிவாக பேசினார். கருத்தரங்கத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், பேராசிரியர் சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் கருத்துரையாற்றினர். நிகழ்வு ஏற்பாட்டை மார்க்சு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு செய்தது. தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாவட்ட பொறுப்பாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார் திராவிடர் விடுதலை கழகத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பெரியார் முத்து தலைமையில் வைத்தார், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாவெல் மற்றும் திவிக இளங்கோவன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்கள். இந்நிகழ்வில் திவிக மாவட்ட தலைவர் முத்துக்குமார், ரமேஷ், இளங்கோ, திருநாவுக்கரசு, அன்புக்கரசு, தவச்செல்வன் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்த பேராசிரியர் கோச்சடை,...

முதலில் இந்தி வரும்!     பிறகு சமஸ்கிருதம் வரும்!

முதலில் இந்தி வரும்! பிறகு சமஸ்கிருதம் வரும்!

உத்தரப் பிரதேசத்தில் இந்திக்கு அடுத்து உருது பேசும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் பாடத்திட்டங்கள், அரசுத்துறைகளில் இருந்து உருது வார்த்தைகளை தேடித்தேடி நீக்குகிறது அம்மாநில பாஜக அரசு. இதே தூய்மைவாதத்தை போஜ்புரியில் எதிர்பார்த்தால் அது தேசத்துரோகம் ஆகிவிடும்! பள்ளிகளில் உருதுவில் இறை வணக்கம் செய்ய அனுமதி மறுக்கிறார்கள். உருது ஆசிரியர்கள் பணி நியமனங்களை அலசி ஆராய்ந்து,அவர்களின் கோப்புகளில் எங்கேனும் சிறு பிழை இருக்காதா என தேடித்தேடி பணி நீக்கம் செய்கின்றனர். குஜராத்தில் அம்மாநில மொழியான குஜராத்திக்கே பரிதாப இடம்தான் மிஞ்சியிருக்கிறது. அதனால்தான் 2023-24 நிதியாண்டில் 1-8ஆம் வகுப்பு வரை குஜராத்தியை கட்டாயமாக்கும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது. மூன்றாவது மொழியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மற்ற மொழிகளை கற்பிக்கலாம் என பெயரளவில் சொல்லியிருக்கிறார்களே தவிர, ஒரு மாநிலத்தில் கூட விருப்பப்பாடமாக தென்மாநில மொழியை மாணவர்கள் தேர்ந்தெடுத்ததாகவோ அல்லது ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவோ தகவல் இல்லை. ஏன், பல வட இந்திய...

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?

வாங்க வரலாறு பேசுவோம் பரப்புரை பயணம்.. இப்போதைய பேசுபொருளாய் எதிர்மறையாய் உருவாக்கப்பட்டிருக்கிற அரசியல் சூழலை ,நேர்மறையாய் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு உருவானது இந்த பரப்புரைப் பயணம். திராவிடர் விடுதலைக் கழகத்தால் தமிழ்நாட்டின் ஐந்து முனைகளில் இருந்து 16-3- 2025 அன்று புறப்பட உள்ள இந்த பரப்புரை பயணம் 22-3-2025 அன்று மயிலாடுதுறையில் சங்கமித்து நிறைவு விழாவாக நிறைவடைய உள்ளது. பயணத்தில் பறை இசை, கொள்கைப் பாடல்கள், கலைநிகழ்ச்சிகள், விளக்க உரைகள் இடம்பெறும்.பயண வழித்தடத்தில் துண்டறிக்கை வழங்கல் இயக்க நூல்கள் விற்பனையும் உண்டு. பயண வழித்தடத்தில் உள்ள கழக அமைப்புகள் பரப்புரை இடம், உணவு, தங்கும் இடம் போன்றவற்றை ஏற்பாடு செய்தும் ஒவ்வொரு நாள் முடிவிலும் பொதுக் கூட்டங்கள் நடத்தியும். பயணம் சிறக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். விரிவான தகவல்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். பெரியார் முழக்கம் 20022025 இதழ்

நீதிமன்றத்தின் ஜாதி எதிர்ப்பு குரல்.

நீதிமன்றத்தின் ஜாதி எதிர்ப்பு குரல்.

ஜாதி சமூகத்தை பிளவுப்படுத்துகிறது! வளர்ச்சியை தடுக்கிறது. “ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே அரசியல் சட்டத்தை வடிவமைத்த தலைவர்களின் கனவு. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜாதி என்ற தேவை இல்லாத சுமையை சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கி வைக்கவில்லை.” -இந்த வரலாற்று தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி வழங்கி உள்ளார். தீர்ப்பின் ஒவ்வொரு வரியும் “கல்வெட்டுப்” பதிவுகளாகும்.பொள்ளாச்சி வட்டம் ஆவல்பட்டிக் கிராமத்தில் உள்ள இரண்டு பெருமாள் கோவில்களில் அறங்காவலர்களாக ஒரு குறிப்பிட்ட ஜாதியின் உட்ஜாதிப் பிரிவினரையே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை தீர்ப்பாகவே பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோயில்கள் குறிப்பிட்ட ஜாதிகளின் கட்டுப்பாட்டில் தான்‌ இயங்க வேண்டும் என்றும் அப்போதுதான் அவை காப்பாற்றப்படும் என்றும் பேசி இருக்கிறார். சமூக ஊடகங்களில் அவர் பேச்சு வலம் வருகிறது. பாஜக...

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய அரசு தமிழ்நாட்டின்‌ பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்து தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் டெல்லியில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்‌ நடந்து முடிந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்‌ தமிழ்நாடடின்‌ முக்கிய நகரங்களில் பிப்.13 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பல்கலைக் கழக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த புதிய விதிகளில் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின்‌ நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆபத்து அடங்கியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி துண்டறிக்கை அச்சிடப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டன. கழகம்‌ ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு… சேலம்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் யூஜிசி விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 13.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்...

பெரியாரை இழிவுப்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவோம்! அப்புறப்படுத்தவோம்!

பெரியாரை இழிவுப்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவோம்! அப்புறப்படுத்தவோம்!

அனைத்து சனநாயக இயக்கங்கள் சார்பாக பொதுக்கூட்டம் சென்னை மாவட்டம் திருவொற்றியூரில் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், புதுச்சேரி மாநில தலைவர் லோகு அய்யப்பன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, இளைஞரணி மாவட்டச் செயலாளர் ப.அருண், மாவட்ட கழக தோழர்கள் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துகொண்டனர். கூட்டமைப்பு சார்ந்த பொழிலன், போரசிரியர் செயராமன், வாலாசா வல்லவன், மனிதி செல்வி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 13022025 இதழ்