எச். ராஜா கிராமத்துக்குள் நுழைய விடாமல் துரத்தப்பட்டார்

கடலூர் மாவட்டம் அரியநாச்சி எனும் கிராமத்தில் கோயிலை புதுப்பிப்பது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு பிரிவினருக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் செயலாளர்களில் ஒருவரான பார்ப்பனர் எச். ராஜா ஒரு பிரிவினருக்கு ஆதரவாக அக்கிராமத்துக்குள் நுழைய முயன்றார். அப்போது அரியநாச்சி கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எச். ராஜாவை கிராமத்துக்குள்ளேயே நுழைய விடாது கருப்புக் கொடி காட்டி தடுத்தனர். ஆன்மீகத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தும் எச். ராஜா ஒழிக என்று முழக்கமிட்டனர். கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. வேறு வழியின்றி எச். ராஜா அவமானப்பட்டு திரும்பிப் போனார். தி.மு.க., அ.தி.மு.க.வினர் இணைந்து கண்டன சுவரொட்டிகளை ராஜாவுக்கு எதிராக ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் 0509209 இதழ்

You may also like...