Category: அரியலூர்

அரியலூரில் கழகம் நடத்திய ஒரு நாள் பயிற்சி வகுப்பு

அரியலூரில் கழகம் நடத்திய ஒரு நாள் பயிற்சி வகுப்பு

20.02.21 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் இணைந்து நடத்திய ஒருநாள் பயிலரங்கம், ஆண்டிமடத்தில் பெரியார் – அண்ணா அரங்கில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட அமைப்பாளர் அ. மதன்குமார், கடவுள் மறுப்பு கூறி நிகழ்வை தொடங்கி வைத்தார். முதல் நிகழ்வாக தலைமைக் குழு உறுப்பினர் மயிலாடு துறை ந. இளையராஜா, ‘பயிலரங்கத்தின் நோக்கம் மற்றும் நடப்பு அரசியல்’ குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ‘திராவிட இயக்க வரலாறு’ குறித்து தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் உரையாற்றினார். மதிய உணவுக்குப் பிறகு 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன், அறிவியல் பூர்வமாக கடவுள் மறுப்பு நிகழ்ச்சிகளை கலை வடிவில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், ‘அமைப்பாவோம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘பெரியாரிய பார்வையில் அம்பேத்கர்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். பயிலரங்கத்தில்...

கவரபாளையத்தில் ஜாதி மறுப்பு இணையர்கள் அறிமுக விழா

கவரபாளையத்தில் ஜாதி மறுப்பு இணையர்கள் அறிமுக விழா

ஆண்டி மடம் கழகத் தோழர் இராவணகோபால் தாயார் சரோஜா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் 22.6.2019 அன்று கவரப்பாளையம் வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நினைவு நாளில் ஜாதி – தாலி எதிர்ப்புடன் ஏற்கெனவே மறுமணவிழா நடத்திக்  கொண்ட இரா. இராவணகோபால்-நா. கோமதி மற்றும் இராவண கோபாலின் அண்ணன் மகள் ப. ஓவியா- இரா. விஜயகுமார் இணையர்களின் மணவிழா அறிமுக நிகழ்வும் நடந்தது. மறுமணத்தை முன் மொழிந்து ஏற்பாடு செய்த கோமதியின் மகன் மாணவர் கழகத் தோழர் பிரபாகரன் (படத்தில் கோமதியின் அருகில் நிற்பவர்) ஆவார். தி.க. மண்டல செயலாளர் தி. காமராஜ் தலைமையில் நடந்த நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக நாத்திகனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் நிகழ்ச்சி நடந்தது. செ.பூ. அறிவழகன் (தி.மு.க.), க.நா. ஆராவமுதன் (தி.மு.க.) முன்னிலை வகித்தனர். பத்மநாபன், வழக்குரைஞர் துரை. அருண்,...

கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

08.01.2019 திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வசந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது.  நிகழ்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார்.  முதல் நிகழ்ச்சியாக கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி கழகக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகப் பெரியார் சிந்தனைப் பலகை தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. கடவுள் மறுப்பை மதன்குமார் கூறினார். அறிவழகன் வரவேற்புரையாற்றினார். துவக்க உரையாக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமிதிராவிடர் விடுதலை கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெரியாரியல் குறித்தும் பேசினார். தமிழ்நாடு மாணவர் கழக மாநிலச் செயலாளர் பாரி சிவக்குமார், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம், அய்யனார், பழனிவேல் (ஆசிரியர்), முத்துகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர் கோபால் இராவணன், நட பாபு அம்பேத்கர், கண்மணி, நட பாரதிதாசன் ஆகியோர் பேசினர். கடலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது. அடுத்த கட்ட...