Author: Manoj DVK

பெரியார் பல்கலை. பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம்

பெரியார் பல்கலை. பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம்

நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலை.யில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்புப் பதிவாளராக பணியாற்றி வருபவர் தங்கவேல் (60) பல்கலை நிதியை களவாடியது உள்பட அவர் மீதான 8 குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்யும்படி உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்தி, பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பரிந்துரை செய்தது. உயர்கல்வித்துறை பரிந்துரையை எதிர்த்து தங்கவேல் தொடர்ந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ,”உயர்கல்வித்துறை பரிந்துரை மீது பெரியார் பல்கலை. எடுத்த நடவடிக்கை என்ன?. உயர்கல்வித்துறை பரிந்துரை செய்தும் பல்கலை. பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? உயர்கல்வி செயலாளரின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் ஜெகநாதன் அரசிடம் விளக்கம் கேட்டது...

வேலையில்லா கொடுமை; உயிரை இழக்கவும் துணியும் இந்தியர்கள்!

வேலையில்லா கொடுமை; உயிரை இழக்கவும் துணியும் இந்தியர்கள்!

உத்தரப் பிரதேச இளைஞர்களை சில விதிகளைத் தளர்த்தி இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்பியிருப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. பாலஸ்தீன படைகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நடக்கும் சூழலில் இது தேவைதானா என அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. இப்போது, நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கடந்த ஓராண்டில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இருதரப்பிலும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடரும் வேளையில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாட்டவரையும் தங்கள் நாட்டு ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய படையில் சேர அந்நாட்டு இளைஞர்கள் தயக்கம் காட்டுவதாக கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாகவே இதுபோல வெளிநாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து தங்கள் நாட்டு ராணுவத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. விடுமுறை இல்லை,...

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

சென்னை : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரைக் கூட்டங்கள் வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, சைதாப்பேட்டை கங்கையம்மன் கோயில் தெரு, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல், மங்களாபுரம், ஓட்டேரி அஞ்சு லைட், ஜாயின்ட் அலுவலகம், அயன்புரம் உள்ளிட்ட இடங்களில் பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 24 வரை நடைபெற்றது. உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி மற்றும் ஈரோடு பேரன்புவின் ராப் இசை பாடல்களுடன் ஒவ்வொரு கூட்டமும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அருண் கோமதி, பெரியார் நம்பி, மக்கள் அதிகாரம் காமராஜ், துணைவேந்தன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மேற்கண்ட கூட்டங்களை வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, ஏசு குமார், ராஜன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். திண்டுக்கல் : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!...

பாஜக செய்த ஆட்சி கலைப்புகள்

பாஜக செய்த ஆட்சி கலைப்புகள்

சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ளாத பாஜக, தேர்தல் அதிகாரியாக பாஜகவைச் சேர்ந்தவரை நியமித்து தேர்தலை நடத்த வைத்தது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், பாஜக தோல்வி தேர்தலுக்கு முன்பே உறுதியானது. ஆனாலும், தேர்தல் அதிகாரி பாஜகவின் கவுன்சிலர் என்பதால் 8 வாக்குகள் செல்லாது என்று அறிவித்து பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தார். கண்காணிப்பு கேமிராவில் தேர்தல் அதிகாரி அனில் மாஷி  வாக்குச்சீட்டுக்களை திருத்துவது அப்பட்டமாக பதிவானது. உச்சநீதிமன்றம் இதைக் கடுமையாக கண்டித்ததுடன், அரிதினும் அரிதான வழக்குகளில் பயன்படுத்தக்கூடிய விதி 142-யைப் பயன்படுத்தி ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது. சண்டிகர் மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றம் வழங்கிய நீதியை 2016 ஆம் ஆண்டிலிருந்து பல மாநிலங்களில் பாஜக செய்த ஆட்சி கவிழ்ப்புகளுக்கும் வழங்கியிருந்தால், பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். தற்போது 12 மாநிலங்களில் நேரடியாகவும், 5 மாநிலங்களில் கூட்டணியுடனும் பாஜக...

சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்து காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை : நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ‘சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்’ என்ற தலைப்பில் சேலம் மேட்டூரில் உள்ள தானாபதியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தத் திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டிருந்தது. இந்தக் கூட்டத்தை நடத்த சேலம் ஜலகண்டபுரம் காவல்நிலையத்தில் அனுமதி கேட்டுக் கடந்த பிப்.10ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கைச் சுட்டிக்காட்டியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறியும் கூட்டம் நடத்த அனுமதி மறுத்து சேலம் ஜலகண்டபுரம் காவல்துறை அந்த மனுவை நிராகரித்தது. இதை எதிர்த்தும், சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த...

வினா விடை

வினா விடை

கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தலைமை அலுவலகத்தில் காத்திருந்த எடப்பாடி பழனிசாமி; யாரும் வராததால் அதிருப்தி – செய்தி கவலை வேண்டாம்… தங்கமணி, வேலுமணியை ஆளுக்கொரு கட்சி தொடங்கவைத்து பேச்சுவார்த்தைக்கு வரச் சொல்லிவிடலாம்.   தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வே இல்லை   – அண்ணாமலை 39 எம்.பி.க்களை அனுப்பப் போகிற கட்சிக்குத்தானே வேலை? பாஜகவுக்கு என்ன வேலை?   ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டுப்போட மக்கள் முடிவு – நரேந்திர மோடி ஆமாம்… துவாரகா எக்ஸ்பிரஸ், ஆயுஷ்மான் பாரத், டோல்கேட் ஊழல் செய்த கட்சிக்கு முடிவு கட்டப் போகிறார்கள்.   பொதுமக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றிவிட்டது      – அமித் ஷா கருப்புப் பணத்தை மீட்டு 15 லட்சம் ரூபாய் இன்னும் வரவு வைக்கவில்லையே! மதுரை எய்ம்ஸ் செங்கல்லோடு நிற்கிறதே?   இந்தியாவை யாராவது அச்சுறுத்த நினைத்தால் சரியான பதிலடி கொடுப்போம் – ராஜ்நாத் சிங்...

சென்னையில் ஆணவப் படுகொலை!

சென்னையில் ஆணவப் படுகொலை!

சென்னை : வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணையில் பிரவீன் என்கிற ஆசிக் என்ற இளைஞர் 24.02.2024 அன்று ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சென்னை மாவட்டக் கழகத்தின் அறிவுறுத்தலின் படி மடிப்பாக்கம் பகுதிச் செயலாளர் ம. கி. எட்வின் பிரபாகரன், அட்டி அருண் ஆகியோர் பிரவீனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதில் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், மக்கள் குடியரசு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜான் மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர் பின்னர் வழக்கறிஞர் ரமேஷ் பெரியார், அருள் ஜெகன், ஏதுசாமி, மோகன் உள்ளிட்ட தோழர்களை சந்தித்து ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். சென்னை போன்ற மாநகரங்களிலேயே ஆணவப் படுகொலை செய்யும் அளவுக்கு ஜாதியவாதிகளுக்கு துணிச்சல் அதிகரித்திருப்பது கவலைக்குரிய ஒன்று. ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ்நாடு அரசு இதுகுறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது....

தலையங்கம் – முன்னேறுகிறது இந்தியா; சறுக்குகிறது பாஜக

தலையங்கம் – முன்னேறுகிறது இந்தியா; சறுக்குகிறது பாஜக

தேர்தல் காலங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையங்கள், நீதிமன்றங்கள் என பாஜகவின் கட்டுப்பாட்டில் பல துறைகள் இருப்பதைப் போல ஊடகத் துறையும் ஒன்றாக கலந்துவிட்டன. கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துருவாக்கத்தை கட்டமைப்பதையே பல ஊடகங்கள் செய்கின்றன. 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வேலையின்மை, விலைவாசி உயர்வு பிரச்னைகள் மக்களை வாட்டி வதைக்கிறது. விளைபொருட்களுக்கு உரிய விலை கேட்டு டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் மீது மும்முனைகளில் இருந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாரதிய ஜனதா அரசு. காவல்துறை லத்திகளால் கடும் காயங்களை சந்தித்திருக்கிறார்கள் விவசாயிகள். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, காற்றின் வழியாகவும் நிலைகுலையச் செய்திருக்கிறார்கள். டிரோன்களை பறக்கவிட்டு, அதில் இருந்து ரப்பர் குண்டு மழை பொழிந்து விவசாயிகளின் உடல்களை குத்திக் கிழித்திருக்கிறார்கள். இதுவரை 3 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். உற்பத்தித் துறை, ஏற்றுமதித் துறை, சேவைத்துறை என...

ஊழல் கறையைப் போக்கும் அதிநவீன வாஷிங்மெசின் பாஜக

ஊழல் கறையைப் போக்கும் அதிநவீன வாஷிங்மெசின் பாஜக

எதிர்க்கட்சியில் இருக்கும்போது பாஜகவால் தீவிரமான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், அமலாக்கத்துறை- வருமான வரித்துறை போன்ற ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளால் சோதனைகளுக்கும், விசாரிப்புகளுக்கு உள்ளானவர்கள் பாஜகவில் இணைந்துவிட்டாலோ அல்லது பாஜக ஆதரவாளர்கள் ஆகிவிட்டாலோ அவர்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுக்களும் ஒரு நொடியில் பறந்துவிடும், பிறவிப் புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். அப்படி பாஜகவின் வாஷிங் மெஷினில் சிக்கி தூய்மையானவர்களின் பட்டியல். பாவனா கவாலி : சிவசேனாவை சேர்ந்த இவர், பொது அறக்கட்டளைக்கு சொந்தமான 7 கோடி ரூபாய் பணத்தை முறைகேடு செய்ததாக 2020ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கினார். இந்த வழக்கில் சில மாதங்கள் கழித்து இவருக்கு நெருக்கமான சயீத் கான் என்பவர் கைது செய்யப்பட்டார். 2021, 2022-இல் பாவனாவை விசாரிக்க அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. குற்றப்பத்திரிகையில் இவருடைய பெயரும் இருந்தது. ஆனால் 2022 ஜூலையில் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தார் பாவனா. மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைமைக் கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார்....

தமிழ்நாட்டை முந்துகிறதா உத்தரப் பிரதேசம்? சங்கிகளின் பொய்யுரைகளை அம்பலப்படுத்துவோம்

தமிழ்நாட்டை முந்துகிறதா உத்தரப் பிரதேசம்? சங்கிகளின் பொய்யுரைகளை அம்பலப்படுத்துவோம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை பின்னுக்குத்தள்ளி உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டதாக, பாஜகவினர் சமூக ஊடகங்களில் பொய்ச்செய்தி ஒன்றை பரப்பினர். இதுபோன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுதான் “குஜராத் மாடல்” என்ற போலி பிம்பத்தை உருவாக்கினார்கள். அந்த பிம்பம் இப்போது சுக்குநூறாக உடைந்துவிட்டதால் “உ.பி. மாடல்” என்ற ஒன்றுக்கும் உதவாத மாடலை போலிச் செய்திகளால் கட்டமைக்க பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். உண்மையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ன? உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி என்பதற்கான சிறு ஒப்பீட்டை இங்கு காணலாம். 2024-25 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் மதிப்பீட்டின்படி, ஒன்றிய நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கப் போகிற தொகை 49,754.95 கோடி ரூபாய். ஆனால் உத்தரப் பிரதேசத்துக்கு கிடைக்கப் போகிற தொகையோ 2,18,816.84 கோடி ரூபாய். ஒன்றியத்துக்கு வரியாகச் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது தமிழ்நாடு. ஆனால் உத்தரப் பிரதேசமோ 2.73 ரூபாயாக...

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் 11.02.2024 அன்று நெய்காரபட்டி, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம் புதூர், பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், வயலூர், மிடாப்பாடி, குமாரபாளையம், குருவன்வலசு, தாழையூத்து, சின்னக்கலையம்புத்தூர், மானூர், நரிக்கல்பட்டி, மேல்கரைப்பட்டி, கீரனூர், தொப்பம்பட்டி, வாகரை, புளியம்பட்டி, அமரபூண்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, மாட்டுப்பாதை, கணக்கன்பட்டி, பொருளூர், கள்ளிமந்தயம், கொ.கீரனூர், I.வாடிப்பட்டி, சக்கம்பட்டி, சிந்தலப்பட்டி, அம்பிளிக்கை, இடையகோட்டை, மார்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, வெரியப்பூர், கேதையறும்பு, லெக்கயன்கோட்டை, அத்திக்கோம்பை, தும்பிச்சம்பட்டி, ஒட்டன்சத்திரம் இரயில் நிலையம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், மூலச்சத்திரம், ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆத்தூர், சித்தயன்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் பத்து நாட்களாக தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. புளியம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தை கவனித்த பெரியார் தொண்டர் ஒருவர் மாலை ஒன்றை வாங்கி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....

வந்திடுச்சு; ராமராஜ்ஜியம் வந்துடுச்சு – கோடங்குடி மாரிமுத்து

வந்திடுச்சு; ராமராஜ்ஜியம் வந்துடுச்சு – கோடங்குடி மாரிமுத்து

”பங்கஜம் இனி நம்மளவா ஆட்சி தான்டீ. ராமன் கோயில் திறந்த அந்த நிமிஷத்திலேயே ராமராஜ்ஜியம் வந்திருச்சு. அமித்ஷா இதை அறிவிச்சுட்டாரு, இனி ஆயிரம் ஆண்டு ராமராஜ்ஜியம் தான் என்று அவரே கூறிட்டாரு. பாஜக தேசியக் குழு தீர்மானமே போட்டுடுச்சுடீ. போய் பால் பாயாசம் கொண்டு வா” இப்படி ஆனந்தக் கூத்தாடி இருக்கும் ஒரு கூட்டம். அவர்களுக்கு பல பெயர்கள் உண்டு. சமூக ஆர்வலர்கள், வலதுசாரி, அரசியல் ஆய்வாளர், பாஜக, இந்து முண்ணனி என்று பல பல முகமூடிகளில் வருவார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள். எதிர்த்து பேசுபவர்களின் நெத்தியடி கேள்விகளால் திக்குமுக்காடினாலும் கூச்சல் போட்டு மடைமாற்றம் செய்துவிடுவார்கள்.இவர்களெல்லாம் யார்? ஒற்றை இந்தியாவைப் போல ஒற்றை வரியில் சொல்லப்போனால் சங்கிகள் பாமர வாக்காளர்களுக்கு தலை சுற்றுகிறது. அவர்களுக்கு பல சந்தேகங்கள் வந்துவிட்டன. சங்கிகள் என்ன கூறுகிறார்கள், பாமர மக்கள் என்ன நினைக்கிறார்கள். இருவரும் நேருக்கு நேராக சந்தித்தால்… ஒரு உரையாடல் பாமர வாக்காளன் :...

வினா விடை

வினா விடை

பழனி கோயில் கொடி மரத்தின் அருகே இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தீர்ப்பு பழனி கோயிலில் கொடிமரமே கிடையாது என்கிறார் ஆன்மீகப் பேச்சாளர் சுகி.சிவம். பாஜக கொடிமரம் ஒன்றை நட்டு, அறிவிப்பு பலகையை தொங்கவிடலாமா? இஸ்லாமிய நாடான அபுதாபியில் அரசர் ஆதரவோடு இந்து கோயிலை திறந்து அங்கே நாட்டின் பெருமையை பேசினார் மோடி – செய்தி அங்கே கோயில் கட்டுவார்கள், இங்கே மசூதி இடிப்பார்கள் உலகிலேயே ‘விதவைகள்’ அதிகம் வாழும் நாடு இந்தியா – உலக பொருளாதார மன்றம் ஆளுநரே! உங்கள் சனாதனப் பெருமையில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆண் சிங்கத்துக்கு அக்பர் பெயர்; பெண் சிங்கத்துக்கு சீதை பெயரா? ‘இந்து’க்களை புண்படுத்துகிறார்கள் – விஷ்வ இந்து பரிசத் வழக்கு ‘சிங்கங்களுக்கு’ ஜாதி, மதம் கிடையாது. “அசிங்கங்கள்” தான் இதற்கு நீதிமன்றம் ஓடும் பெரியார் முழக்கம் 22022024

மிருகத்துக்கும் மதச்சாயம்

மிருகத்துக்கும் மதச்சாயம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிசத் அமைப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறது. அம்மாநிலத்தில் சிலிகுரி என்ற பகுதியில் பெங்கால் சவேரி என்ற உயிரியல் பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்றும், பெண் சிங்கத்துக்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிங்கங்களும் திரிபுராவில் இருந்து வந்தவை. இதற்கு திரிபுராவிலேயே பெயர் சூட்டப்பட்டுவிட்டது. ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்ற இஸ்லாமியப் பெயரையும், பெண் சிங்கத்துக்கு சீதா என்ற ராமாயண பாத்திரப் பெயரையும் சூட்டியிருப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருக்கிறது. எனவே பெண் சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்பதுதான் விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் கருத்து. அக்பர் ராமாயணத்துக்கு எதிரானவரா? இந்துமதத்துக்கு எதிரானவரா? என்பதையும் வரலாற்றுரீதியாக நாம் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. ராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் இருந்து பாரசீக மொழிக்கு மொழிப்பெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட மன்னர் தான் அக்பர். ...

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா

மதுரை : காதலர் தினத்தையொட்டி மதுரை மாவட்டக் கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் வாசுகி வரவேற்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.பா.மணி அமுதன் தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன், அதிமமுக பொதுச் செயலாளர் பசும்பொன்.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், தமிழ்ப்புலிகள் கட்சி தென்மண்டல பொறுப்பாளர் கனகராஜ் ஆகியோர் உரையாற்றினார்.. முன்னதாக ஜாதி மறுப்பு இணையர்களுக்கு தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் இன்குலாப் ஆகியோர் நினைவுப் பரிசினை வழங்கினர். தொடர்ந்து ஜாதி மறுப்பு இணையேற்பு நடத்தி சட்ட போராட்டம் நடத்தும் தோழர்களான கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரனுக்கு ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் நினைவுப் பரிசு வழங்கினார். தமிழ்நாடு ஜாதி மறுப்பு இணையர் நலச் சங்க செயலாளர் ரமேசு...

தலையங்கம் – பிரதமர் ராஜினாமா செய்வாரா?

தலையங்கம் – பிரதமர் ராஜினாமா செய்வாரா?

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக ‘தேர்தல் பத்திரங்கள்’ என்ற நடைமுறையை 2018-ஆம் ஆண்டில் கொண்டு வந்தது ஒன்றிய பாஜக அரசு. உரிய விவாதம் கூட இல்லாமல் நிதி மசோதாவாக இந்த சட்டம் இயற்றப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் கார்பரேட் நிறுவனங்கள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இந்த நன்கொடையை வழங்கலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்படும் பத்திரங்களை பெற்று, அரசியல் கட்சிகளிடம் கொடுத்துவிட்டால், அந்த கட்சிகள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் செலுத்தி பணமாக பெற்றுக்கொள்ளும். இதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை, பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை என்றும் சட்டத்தில் ஏற்படுத்தினார்கள். இச்சட்டம் இயற்றப்பட்டபோது பெருநிறுவனங்கள் தங்களுடைய மூன்று ஆண்டு லாபத்தின் சராசரியில் 7.5% விழுக்காட்டுக்கும் மேல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியாது என்ற வரம்பும் நீக்கப்பட்டது. அதாவது, நிறுவனங்களை மிரட்டிப் பணம் பறிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் சட்டத்தின் வாயிலாகவே ஏற்படுத்தி வைத்தது...

‘திராவிட மாடல் ஆட்சி’யின் ஈராண்டு சாதனைகள் – பட்டியலிட்ட முதலமைச்சர்

‘திராவிட மாடல் ஆட்சி’யின் ஈராண்டு சாதனைகள் – பட்டியலிட்ட முதலமைச்சர்

சட்டப்பேரவையில் பிப்ரவரி 15-ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அவற்றால் ஏற்பட்ட பலன்கள் குறித்து முதலமைச்சர் ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகளைக் காணலாம். இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம்! இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது; ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது! இந்திய அளவில் பணவீக்கமானது 6.65 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்து உள்ளது! ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம்! கல்வியில்...

200 நிறுவனங்களில் ஓ.பி.சி. எஸ்.சி-க்கு சொந்தமாக ஒன்றுகூட இல்லை : ராகுல் காந்தி

200 நிறுவனங்களில் ஓ.பி.சி. எஸ்.சி-க்கு சொந்தமாக ஒன்றுகூட இல்லை : ராகுல் காந்தி

‘நாட்டின் மக்கள்தொகையில் 73 விழுக்காடு பேர் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தாலும், முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட அவர்களுக்கு சொந்தமானதாக இல்லை’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிப்ரவரி 18ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எக்ஸ்ரே. அதுதான் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும். சாதிவாரி கணக்கெடுப்பு இளைஞர்களின் ஆயுதம். அதன்மூலம் தான் உங்கள் மக்கள்தொகை என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். நாட்டின் செல்வத்தில் உங்கள் பங்கு என்ன என்பதை அறிய முடியும். தற்போது நாட்டில் ஓ.பி.சி. வகுப்பினர் 50 விழுக்காடு, தாழ்த்தப்பட்டவர்கள் 15 விழுக்காடு, பழங்குடியினர் 8 விழுக்காடு உள்ளனர். இவர்களின் மொத்த மக்கள் தொகை 73 விழுக்காடு. ஆனால் நாட்டில் உள்ள முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட ஓ.பி.சி. அல்லது தாழ்த்தப்பட்ட...

திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள்

திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள்

திருச்சி : திருச்சி மாவட்டக் கழக சார்பில் வைக்கம் நூற்றாண்டு மற்றும் எது திராவிடம்? எது சனாதனம்? என்ற தலைப்பில்  3.2.2024 அன்று திருவெறும்பூர் பேருந்து நிலையம், காட்டூர் கைலாஷ் நகர், காட்டூர் கடைவீதி உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தை குணராஜ் தொடங்கி வைத்தார். டார்வின் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தாமோதரன், மந்திரமில்லை! தந்திரமே!  பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா கருத்துரையாற்றினார். நிறைவாக குமரேசன் நன்றி கூறினார். நிகழ்வில் மணிகண்டன், சர்மிளா, ஜெய சீனிவாசன், அசோக், ஆறுமுகம், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 15.02.2024

சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 525 சந்தாக்களை ஒப்படைப்பு

சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 525 சந்தாக்களை ஒப்படைப்பு

சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  10.02.2024 அன்று சேலம் கருப்பூர் சக்தி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு பெரியார் முழக்க சந்தா தொகை ஒப்படைப்பு மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையாக  “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் ;சமூக ஒற்றுமையைக் காப்போம்” என்ற தலைப்பில் தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 11.02.2024 ஞாயிறு அன்று நங்கவள்ளியில் பொதுக் கூட்டத்துடன் பரப்புரையை தொடங்கி, சேலம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு பெரியார் முழக்க சந்தா முதல் தவணையாக சேலம் மாவட்டத்தின் சார்பாக (கிழக்கு – மேற்கு) 525 சந்தாவிற்கு தொகையினை கழகத் தலைவரின் முன்னிலையில் தோழர்கள் ஒப்படைத்தனர். வருகின்ற 18.2. 2024 ஞாயிற்றுகிழமை எஞ்சிய பெரியார் முழக்க சந்தாக்களையும் மாவட்ட தலைமையிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டத்திற்கான...

இன அழிப்புக்கு துணைபோகும் அதானி?

இன அழிப்புக்கு துணைபோகும் அதானி?

காஸா நகரில் பாலஸ்தீனிய மக்களையும், படைகளையும் குறிவைத்து இஸ்ரேலிய படைகள் கடந்த 4 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை வைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 28,000 பேர் உயிரிழந்தனர். அதில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இனப்படுகொலைக்கு ஒப்பான இக்கொடூரச் செயலுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வழக்கை எதிர்கொள்ளும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இந்த ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை அதானி குழுமம் தற்போது தயாரித்து அனுப்பியிருக்கிறது என்ற தகவல்  வெளியாகியிருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட டிரோன்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு உபகரணங்கள் சார்ந்த பிரபல ஊடகமான ஷெப்பர்டு மீடியா கூறியுள்ளது. இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2018ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் 15 மில்லியன் டாலர் முதலீட்டில் அதானி குழுமம் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு ஆலையை நிறுவியது. அந்த ஆலையில் இருந்துதான் இந்த டிரோன்கள் தயாரித்து அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதானி குழுமத்திற்கு எதிராக...

பாஜகவின் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கிறார் ஆளுநர்!

பாஜகவின் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கிறார் ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் ஒரு நாடகத்தை சட்டப்பேரவையில் அரங்கேற்றி இருக்கிறார். அரசு எழுதிக்கொடுத்த உரையை படிக்காமல் தனது உரையை இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே முடித்துக் கொண்டார். அவர் எதையுமே முழுமையாக படிப்பதில்லை. அது திராவிடம் என்றாலும் சரி, வள்ளுவர் என்றாலும் சரி, சனாதனம் என்றாலும் சரி எதையும் அவர் முழுமையாக படிக்காமல் தனக்கு தெரிந்ததையெல்லாம் பேச வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒருவர். அதேபோல அரசே எழுதிக்கொடுத்து சட்டப்படி படிக்க வேண்டிய ஆளுநர் அதில் எனக்கு முரண்பாடு இருக்கிறது என்று கூறி தானே ஒரு உரையை எழுதிப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார் போல. அப்படியானால் தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சராகி, அவர் அமைக்கிற அமைச்சரவையில் ஒரு உரையை தயாரித்த பின்னர் அவர் விரும்புகிற உரையை படிக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, அமைச்சரவையின் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஒரு ஆளுநர் தமிழ்நாடு அரசின் உரையில் தனக்கு...

வினா விடை

வினா விடை

நாங்கள் ஆட்சியில் இருந்த போது கவர்னருடன் எந்த பிரச்சனையும் இல்லை – எடப்பாடி பாஜக ஆட்சிகளுக்கு எல்லாம் அவர்கள் பிரச்சினை கொடுப்பதில்லை. ஆளுநர் உரையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன் தேசியகீதம் பாட வேண்டும் என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. இது ஆளுநருக்கும், திமுக ஆட்சிக்கும் உள்ள பிரச்சினை                                                                  – எடப்பாடி சத்தியமாக எனக்கு தெரியாது; நான் நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த போது ஆளுநர் உரையாற்றும் போது சட்டசபையிலேயே தூங்கிவிடுவேன். திருவேற்காடு கருமாரியம்மன் தாலியை திருடிய அர்ச்சகர்கள் கைது – செய்தி ஆகம விதிப்படி நியமனம்; கிரிமினல் சட்டப்படி கைது! காங்கிரஸ் ஆட்சி தயாரித்த உரையை முழுமையாகப் படித்தார் கருநாடக கவர்னர் கெலாட் – செய்தி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுக்கள் விழ வேண்டும் என்ற கவலை அந்த கவர்னருக்கு! பெரியார் முழக்கம் 15.02.2024

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

(08.02.2024  இதழில்   வெளியான உரையின் தொடர்ச்சி) 1892-இல் ஆங்கிலக் கல்வி வந்தபோது சென்னை மாகாணத்தில் சர்வீஸ் கமிசன் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த 1892-க்கும் 1904-க்கும் இடையில் அய்.சி.எஸ். அதிகாரிகளாக 16 இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் 15 பேர் பிராமணர்கள். அந்த காலகட்டத்தில் ஆளுநர் நிர்வாக கவுன்சிலில் 3 இந்தியர்கள், அதில் இருவர் பிராமணர்கள். 1900-ஆம் ஆண்டு ஐந்து பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். அதில் நால்வர் பிராமணர்கள். 1907-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்களாக 12 நியமிக்கப்பட்டனர். அதில் 11 பேர் பிராமணர்கள். அவர்கள் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கக்கூடாது என்று கூறி அதை எடுத்துவிட்டனர். அதற்குப் பின்னர் ஆட்சியமைத்த பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி காலத்தில்தான் தமிழ் மீண்டும் கொண்டுவரப்பட்டது. திராவிடம் என்ற சொல் 7ஆம் நூற்றாண்டில் குமரில பட்டர் எழுதிய தாந்திர வார்த்திகா என்பதில் ஆந்திரா திராவிட பாஷை என்று வருகிறது. இந்த மண்ணில்...

ஆளுநரின் ‘மனசாட்சி’ உரை இப்படி…

ஆளுநரின் ‘மனசாட்சி’ உரை இப்படி…

ஆளுநர் உரை : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களே, உறுப்பினர்களே, அவைத் தலைவரே உங்கள் அனைவருக்கும் குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநரின் நமஷ்காரம். ஜெய் சிரி ராம் என்று நான் இப்போது கூறுவேன். அதை நீங்கள் திருப்பி முழங்க வேண்டும் (அவையில் நான்கு பேர் மட்டுமே திருப்பி முழங்குகிறார்கள்) சரி அனைவரும் இதை முழங்காவிட்டாலும், நான் அனைவரும் முழங்கியதாக பேரவைக் குறிப்பில் பதிவு செய்ய உத்தரவிடுகிறேன். தமிழ்நாட்டில் இப்போது மாநில உரிமை என்ற கூச்சல் காதை துளைக்கிறது. இப்போதைய தேவை மாநில உரிமை அல்ல, ஆளுநர்களின் உரிமை. அதுவும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களுக்கான உரிமை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் சனாதன தர்மம். இந்த சனாதன தர்மம் இல்லாவிட்டால் ஜனநாயகமே இல்லை என்று நமது முன்னோர்களும், ரிஷிகளும், தேவர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அடித்து கூறிவிட்டார்கள். சூத்திரர்கள், பஞ்சமர்கள் அன்னிய மதத்தினர் ஓட்டு போட்டதாலேயே மக்கள் பிரதிநிதியாகிவிட...

தலையங்கம் – சோதனைக்கூட எலிகளா மக்கள்?

தலையங்கம் – சோதனைக்கூட எலிகளா மக்கள்?

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிவிட்டோம், காஷ்மீருக்கான சிறப்பு உரிமையை பறித்து விட்டோம் என்ற மிதப்போடு பொது சிவில் சட்டத்தை திணிக்க துணிந்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதற்கு முன்னோட்டமாகத்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மதத்தினருக்கும் திருமணம், விவகாரத்து சார்ந்த நடைமுறைகளில் இனி ஒரே சட்டம்தான் இருக்கப் போகிறது. அந்தந்த மத வழக்கப்படி திருமணம் செய்யலாம், ஆனால் யார் யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்பதற்கு பொது சிவில் சட்டம் பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதற்கும், விவாகரத்து செய்வதற்கும்கூட பொது சிவில் சட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இசுலாமியர்களின் திருமண விவகாரங்களில் மூக்கை நுழைப்பதாக நினைத்து பாஜக அரசு உருவாக்கிய இந்த சட்டத்தால் இந்துக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி கிளம்பியிருக்கிறது. யார் யாரை திருமணம் செய்ய வேண்டுமென்று பாஜக அரசு முடிவு செய்யக்கூடாது, இந்த சட்டத்தின் கூறுகள் பெரும்பாலும்...

கருத்துரிமைக்கு எதிரான சுற்றறிக்கை – கழகத் தலைவர் கண்டனம்

கருத்துரிமைக்கு எதிரான சுற்றறிக்கை – கழகத் தலைவர் கண்டனம்

கருத்துரிமை – பேச்சுரிமைக்கு எதிரான சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என்று கழகம் வலியுறுத்தல்! இதுகுறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:- பெரியார் பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை கடந்த 5.2.2024 ஆம் நாளன்று அனைத்து பணியாளர்களுக்கும் விடுத்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் நடத்தை விதிகளின் 14 (1) (2) என்ற விதிகளைக் காட்டி, இதுவரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் முன்னனுமதி பெற்றோ, பெறாமலோ நூல்கள் வெளியிட்டிருந்தால் அச்சிட்ட நூல்களின் எண்ணிக்கை, தலைப்பு, பதிப்பாளர் முகவரி, பெற்ற பணப் பலன்கள் என்றெல்லாம் பல விவரங்களை அந்த சுற்றறிக்கை கோருகிறது. ஆனால் பல்கலைக்கழகப் பதிவாளர் சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கும் விதிகள் தொலைக்காட்சி வானொலி விவாதங்களில் பங்கேற்பது குறித்தும்,  செய்தி ஏடுகளுக்கு, வார ஏடுகள் போன்ற பருவ வெளியீடுகளுக்கு எழுதுவது குறித்தும் உள்ள விதிகளைத்தான் அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அந்த விதிகளின்படி கூட இலக்கியம், கலை, அறிவியல்,...

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற கழகத் தலைமைக் குழுவில், “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” என்ற முழக்கத்தோடு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கழகத்தின் பரப்புரைக் கூட்டங்கள் பொதுமக்களின் வரவேற்போடு எழுச்சியோடு தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை: சென்னை மாவட்டத்தின் முதல் பரப்புரைக் கூட்டம் 10.02.2024 அன்று வேளச்சேரி காந்தி சாலையில் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் எட்வின் பிரபாகரன் தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். பாடகர் கோவன் பங்கேற்ற ம.க.இ.க கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கழகத் தோழர் பேரன்பு ராப் பாடல்கள் பாடினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் இரா.உமா, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ஆகியோர் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் பேராபத்துக்களை மக்களிடம் விளக்கிப் பேசினர். திராவிட முன்னேற்றக்...

கொளத்தூரில் “எது திராவிடம்? எது சனாதனம்?” பொதுக்கூட்டம்

கொளத்தூரில் “எது திராவிடம்? எது சனாதனம்?” பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாள் பொதுக்கூட்டம் கொளத்தூர் நகர கழக சார்பில் 23.12.2023 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள கழக செயல்வீரர் இளஞ்செழியன் நினைவரங்கில் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியோடு பொதுக்கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமை தாங்க, கொளத்தூர் நகர தலைவர் சி. ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் ம. மிதுன் சக்கரவர்த்தி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு கிழக்கு மாவட்டத் தலைவர் க. சக்திவேல், நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, மேட்டூர் நகரச் செயலாளர் சு குமாரப்பா, தி.மு.க. கொளத்தூர் நகரச் செயலாளர் பெ. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், கழக தலைமைக்குழு...

பேராவூரணியில் பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம் ; பெரியார் முழக்கத்திற்கு ரூ.15,000 நன்கொடை

பேராவூரணியில் பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம் ; பெரியார் முழக்கத்திற்கு ரூ.15,000 நன்கொடை

தஞ்சாவூர் : பேராவூரணி சேதுபாவாசத்திரம் கழக சார்பில் தந்தை பெரியார் 50வது நினைவு நாள் – புரட்சியாளர் அம்பேத்கர் 67வது நினைவு நாள் – வைக்கம் போராட்ட நூற்றாண்டு எது திராவிடம்? எது சனாதனம்?  கருத்தரங்கம்  பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் தலைமை வகிக்க,  பேராவூரணி ஒன்றிய செயலாளர் உதயகுமார் வரவேற்புரையாற்றினார். பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் பகுத்தறிவு பாடல்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது.   தமிழக மக்கள் புரட்சிக் கழக ஆறு நீலகண்டன், காங்கிரஸ் சேக் இப்ராம்சா,  சிபிஐ பன்னீர்செல்வம், மதிமுக பாலசுப்பிரமணியன், விசிக ஆத்ம ஆனந்தகுமார், அறநெறி மக்கள் கட்சி ஆயர் த.ஜேம்ஸ் மற்றும் பேராசிரியர் சண்முகப்பிரியா, கழக நகரச் செயலாளர் தா. கலைச்செல்வன், கழக மாவட்டச் செயலாளர் பாரி, தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் ஆகியோர் கருத்துரையாற்றினர். தொடர்ந்து “பெரியாரும் திருக்குறளும்” என்ற தலைப்பில் தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் சின்னப்பத்தமிழரும், “எது...

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

பாஜகவின் மோசடிகளை தோலுரிக்க பெரியார் தேவைப்படுகிறார் –  ஆளூர் ஷா நவாஸ்

பாஜகவின் மோசடிகளை தோலுரிக்க பெரியார் தேவைப்படுகிறார் – ஆளூர் ஷா நவாஸ்

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு வட சென்னை மாவட்டக் கழகம் சார்பில் 20.12.2023 புதன்கிழமை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உரை பின்வருமாறு :- நினைவுநாள் என்பது வருடத்தில் ஒருநாள், ஆனால் நினைவுநாளில் மட்டும் நினைவுகூறப்பட வேண்டிய தலைவரல்ல பெரியார். எந்நாளும் நமக்கு அவருடைய நினைவுநாள்தான். பெரியாரை நீக்கிவிட்டு அல்லது பெரியாரை மறந்துவிட்டு அல்லது பெரியாரை நினைக்காமல் இருந்துவிட்டு நம்மால் இந்த சமூகத்தில் நடமாடவே முடியாது. அந்தளவுக்கு இங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு மகத்தான தலைவர் பெரியார். அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள், அவதூறுகள், போலியான சித்தரிப்புகள் என இவற்றின் ஊடாக நாளுக்கு நாள் பெரியார் அதிகம் வாசிக்கப்படுகிறார். நினைவுகூறப்படுகிறார், இந்த தலைமுறையின் மத்தியில் அவர் உயர்ந்து கொண்டே செல்கிறார். அப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தி கொண்ட ஒரு தலைவர் பெரியார். காந்தியை எதிர்த்தார்,...

வினா விடை

வினா விடை

தமிழ்நாட்டில் சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் பெய்த மழையை தேசியப் பேரிடர் என்று அறிவிக்க முடியாது – நிர்மலா சீதாராமன் பதில் : ஆமாம், பா.ஜ.க இருக்கும்போது வேறு எதையும் தேசியப் பேரிடர் என்று சொல்வது சரியாக இருக்காது தான். வட இந்தியாவில் தமிழைப் பரப்ப நாம் இந்தி கற்க வேண்டும் – தமிழிசை பதில் : இந்தி கற்றுக்கொண்ட பிறகு தமிழ் இங்கு எப்படி இருக்கும்? தலை வலிக்கு மருந்து கேட்டால், நன்றாக இருக்கும் காலுக்கு மருந்து கொடுக்கலாமா மருத்துவரே! பிரிட்டிஷ் கால சட்டங்கள் இல்லாத புதிய இந்தியாவை படைத்துவிட்டோம் – அமித் ஷா பதில் : ஆளுநர் பதவி என்ன ராம ராஜ்ஜியத்தில் உருவாக்கப்பட்டதா? அதையும் அழித்து இன்னொரு புதிய இந்தியா பிறந்தால் என்ன கெட்டுவிடும்? ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்லவில்லை. ஆனால் அப்படி கணக்கெப்பு நடத்துவதால் சமூக பதற்றம் ஏற்படாதவாறு, ஒற்றுமையை உறுதிசெய்ய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ்....

சந்தாக்களை விரைந்து அனுப்புங்கள்!

சந்தாக்களை விரைந்து அனுப்புங்கள்!

2024 ஜனவரி 15 முதல் அடுத்த ஆண்டுக்கான “பெரியார் முழக்கம்” சந்தா புதுப்பிக்கப்பட உள்ளதால், கழகத் தோழர்கள் மாவட்ட வாரியாக புதிய சந்தாக்களை விரைவாக 8973341377 என்ற எண்ணிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். விடுதலை இராசேந்திரன், ஆசிரியர் புரட்சிப் பெரியார் முழக்கம் பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

நாட்காட்டி தயார்!

நாட்காட்டி தயார்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் 2024 ஆண்டிற்கான நாட்காட்டி தயார்! விலை : ரூ.70 (ரூபாய் எழுபது மட்டும்) + அஞ்சல் செலவு தனி குறைந்த எண்ணிக்கையிலேயே நாட்காட்டி அச்சிடப்படுவதால் தேவைப்படும் தோழர்கள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முன்பதிவிற்கு, தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், 9941759641 பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

கழகத் தலைவரிடம் வாழ்த்து

கழகத் தலைவரிடம் வாழ்த்து

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் தோழர் லாவண்யா 21.12.2023 வியாழனன்று கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதன் மகிழ்வாக கழக ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.2000/- வழங்கினார். பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

தலையங்கம் – பெரியாரின் சுற்றுப்பயணம் முடியவில்லை!

தலையங்கம் – பெரியாரின் சுற்றுப்பயணம் முடியவில்லை!

1973-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் தந்தை பெரியாரின் உயிர் பிரிந்தபோது “பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக்கொண்டார்” என இரங்கற்பா எழுதினார் கலைஞர். பெரியாரின் உடல் மட்டும்தான் அப்போது இயக்கத்தை நிறுத்திக்கொண்டதே தவிர, அவரது சிந்தனைகளும் தத்துவங்களும் இன்னமும் சூறாவளி போலச் சுற்றிக்கொண்டே இருக்கிறது. போர்க்களத்தில் எதிரியிடம் இருந்து தற்காத்துக்கொள்ள கேடயமும், எதிரியைத் திருப்பித் தாக்குவதற்கு வாளும் வைத்திருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு களம் எதுவானாலும் கேடயமும் பெரியார்தான், வாளும் பெரியார்தான். பெரியாரை முன்னிறுத்தித்தான் தமிழ்நாட்டின் போராட்டக் களங்கள் வடிவமைக்கப்படுகின்றன. பெரியாரைத் துணைகொண்டுதான் தமிழ்நாட்டின் உரிமைக் குரல்கள் எழுப்பப்படுகின்றன. நூறாண்டுகளுக்கு முன் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்கும் போது இங்கு படித்தவர்கள் நூற்றுக்கு 10 பேர் கூட இல்லை. ஆனால் இன்றைக்கு படிக்கச் செல்லாதவர்கள் நூற்றுக்குப் பத்து பேர் கூட இல்லை என்ற தலைகீழ் மாற்றத்தை கண்டிருக்கிறோம். கல்வியில், ஆராய்ச்சியில், கட்டமைப்பு வளர்ச்சியில், பொருளாதார தன்னிறைவில் என ஒவ்வொரு...

பெரியார் தமிழுக்கு எதிரியா?

பெரியார் தமிழுக்கு எதிரியா?

1956ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ் ஆட்சிமொழி மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஒட்டி, 28-ஆம் தேதி விடுதலையில் வெளியான தலையங்கம்… “சட்டம் மட்டும் போதாது” இனித் தமிழ்தான் ஆட்சி மொழியாயிருக்கும் என்று திரு. காமராசர் ஆட்சியின் முயற்சியினால் தமிழ்நாடு சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. சட்டசபை உறுப்பினர்களையும் மந்திரி சபையையும் பாராட்டுகிறோம். இச் சட்டத்தை இக்கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமென்று பிடிவாதமிருந்த முதலமைச்சர் திரு.காமராசர் அவர்களையும் பாராட்டுகிறோம். ஆனால் இச்சட்டத்தை நிறைவேற்றினால் மட்டும் போதாது. இதை உடனடியாக நடைமுறையில் கொண்டுவர வேண்டும். நிர்வாகத்துக்குரிய எல்லா இங்கிலீஷ் சொற்களுக்கும் நேரான தமிழ்ச்சொற்கள் கிடைக்கும்வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. தெரியாத சொற்களை இங்கிலீஷிலேயே கலந்து எழுதலாம். இடைக்காலத்தில், ஒருசில மாதங்கள் வரையில், “மணிப்பிரவாள” நடையில் எழுதுவதனால் ஒன்றும் தவறில்லை. மனிதனின் கருத்தைத் தெரிவிப்பதற்குத்தானே மொழி? காஃபி, ஃபவுண்டன் பேனா, சைக்கிள், பேனா, டெலிபோன், காலெண்டர், மோட்டார் கார், ஃபோட்டோ, தர்மாஸ் ஃபிளாஸ்க் போன்ற பல சொற்களை...

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பெரியாரின் 50-வது நினைவு நாள் பொதுக்கூட்டம், 24.12.2023 அன்று மாலை 6.00 மணிக்கு குருவரெட்டியூர் பெரியார் திடல், தோழர் பிரகலாதன் நினைவரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகசோதி கூட்டத்திற்கு தலைமை வகிக்க, வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். மறைந்த தோழர் பிரகலாதன் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். நிகழ்வின் தொடக்கத்தில் கோபி யாழ் திலீபன், அறிவுக்கனல் ஆகியோர் பாடல்கள் பாடினர். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமிக்கு அடுத்ததாகப் பேசிய, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், திராவிடம் – சனாதனம் குறித்து உரையாற்றினார். அப்போது, தோழர்கள் கழக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்ட இராம. இளங்கோவன், அதற்கு முன்னுதாரணமாக கழக நூல் வெளியீட்டு திட்டங்களுக்காக தனது தனிப்பட்ட நிதியாக ரூ. 3,00,000. (மூன்று இலட்சம் ) வழங்குவதாக அறிவித்து, தலைவர் கொளத்தூர்...

இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. கொளத்தூர் : கொளத்தூர் ஒன்றியக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் 11-12-2023 அன்று மாலை 5மணிக்கு 9வது தெருமுனைக் கூட்டம் கோவிந்தப்பாடியிலும், 10வது தெருமுனைக் கூட்டம் கத்திரிப்பட்டி மலையாள தெருவிலும் நடைபெற்றது. டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார், மாணவர் அணி துணை அமைப்பாளர் சதாசிவம், முன்னாள் தலைவர் முனுசாமி, கிளைச் செயலாளர் கணேசன், செட்டிப்பட்டி கிளைச் செயலாளர் பழனிச்சாமி, குள்ளவீரன்பட்டி ஈஸ்வரன், கண்ணன் நெசவாளர் அணி, சுப்பிரமணி, தேவராஜ், பரத், இளங்கோ, கார்த்தி, குமார், கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் நகரத் தலைவர் இராமமூர்த்தி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் கண்ணகி,...

பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

ஈரோடு வடக்கு : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்ட நிறைவுப் பொதுக்கூட்டம் 24.12.2023, ஞாயிறு மாலை 6 மணியளவில் குருவரெட்டியூர் பிரகலாதன் நினைவரங்கத்தில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். சேலம் : சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 119 தெருமுனைக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்தி முடித்துள்ளது. 120வது கூட்டம் பொதுக்கூட்டமாக 23.12.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்வில் டி.கே.ஆர் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும். தஞ்சாவூர் : பேராவூரணி கழகம் சார்பில் பெரியார் 50வது நினைவு நாள் – வைக்கம் நூற்றாண்டு – அம்பேத்கரின் 67வது நினைவுநாள் – எது திராவிடம்? எது சனாதனம்? கொள்கை...

ட்ரெண்டிங்கில் பெரியார்

ட்ரெண்டிங்கில் பெரியார்

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்றி உருவம் போல பெரியாரை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரப்பப்பட்டது. அந்த படத்தைப் பார்த்தால் பெரியாரியவாதிகளின் மனம் புண்படும், அதில் ஆனந்தமடையலாம் என்று கருதி எவரோ பரப்பியிருக்கிறார். ஆனால் நடந்ததோ வேறு. “இந்த படம் அழகாக இருக்கிறது, படத்தை வரைந்தவருக்கு பாராட்டுக்கள், பெரியார் இருந்திருந்தால் அவரும் நிச்சயம் பாராட்டியிருப்பார். ஆடு, மாடு, கோழி, சிங்கம், புலி போன்ற மற்ற விலங்குகளைப் போல பன்றியும் ஒரு விலங்கு. அந்த விலங்கைப் போல பெரியாரை சித்தரித்தால் அதில் என்ன அவமானம் இருக்கிறது? அப்படியானால் விஷ்ணுவின் வராக அவதாரமும் இழிவானது தானா?” என பெரியாரியவாதிகள் எழுப்பிய கேள்விகள் சமூக வலைத்தளங்களை 2 நாட்கள் ஆக்கிரமித்துவிட்டன. வாய்ப்பை ஏற்படுத்தியாவது பெரியாரை அவ்வப்போது டிரெண்டிங்கில் வைத்துவிடுகிறார்கள் கொள்கை எதிரிகள். “எனக்கு விளம்பரமே எனது எதிரிகள்தான்” என பெரியார் சொன்னது அவர் மறைந்து அரைநூற்றாண்டுகள் ஆகியும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது....

பகுத்தறிவை போதித்த கலைஞரின் கலைப் படைப்புகள்

பகுத்தறிவை போதித்த கலைஞரின் கலைப் படைப்புகள்

(கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  நீர்வளத்துறை வெளியிட்டுள்ள மலரில் “பகுத்தறிவு சீர்த்திருத்தச் செம்மல்” என்ற தலைப்பில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை) கடந்த இதழின் தொடர்ச்சி… மக்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கிற மூட நம்பிக்கைகள், புராணங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கிற ஆபாசங்களை எழுதியெல்லாம் ஆதாரப்பூர்வமாக விளக்கி, ‘சோ’ அதற்கு மறுப்பே எழுத இயலாத அளவுக்கு பகுத்தறிவுச் சுடராக மிளிர்ந்தவர் கலைஞர். இந்தியாவில் வேறெந்த தலைவர்களுக்கும் தோன்றாத, சமத்துவபுரம் என்ற மாபெரும் திட்டம் கலைஞரின் எண்ணத்தில் உதித்து செயல்வடிவம் பெற்றதுதான் அவரது பகுத்தறிவின் ஆற்றலுக்கான உச்சபட்ச சான்று. ஊர், சேரி, அக்ரகாரம் என மூன்றாய் பிரிந்து கிடக்கும் சமூகக் கட்டமைப்பை தகர்த்து, சமன்படுத்தும் முன்முயற்சியை செய்ய வேண்டுமென்று தேர்தல் அரசியலில் எவருக்குமே தோன்றவில்லை, கலைஞருக்கு மட்டும்தான் தோன்றியது. அதற்கான முன்மாதிரியாக பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், உயர்ஜாதியினர் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக வாழும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை கட்டியெழுப்பினார். அதிலும் ஆழமாக...

கழக ஏட்டுக்கு அன்பு தனசேகர் நன்கொடை

கழக ஏட்டுக்கு அன்பு தனசேகர் நன்கொடை

கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகரின் தந்தை தே. குப்புசாமி அவர்களின் 90வது பிறந்தநாள் விழா மற்றும் சந்திரா – குப்புசாமி ஆகியோரின் 60வது மணிவிழா, 17.12.2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை புனித தோமையர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் நல்வாழ்வு  மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். தொடர்ந்து அன்பு தனசேகர் “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 – யை கழகத் தலைவரிடம் வழங்கினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசு, குகன், சேத்துபட்டு இராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

கழக நாட்காட்டி தயார்!

கழக நாட்காட்டி தயார்!

2024ம் ஆண்டுக்கான திராவிடர் விடுதலைக் கழக நாள்காட்டி தயாராக உள்ளது. தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் உழைத்த வெளிநாட்டு அறிஞர்களின் வண்ணப் புகைப்படங்கள் அடங்கிய நாள்காட்டி. தொடர்புக்கு : தபசி குமரன் – 99417 59641 தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

குஜராத் மாடலின் அவலத்தை பாரீர்!

குஜராத் மாடலின் அவலத்தை பாரீர்!

குஜராத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41,632 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திமுக எம்.பி.கள் தனுஷ் எம்.குமார், ஜி.செல்வம் ஆகியோர் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4.25 லட்சம் பேர், கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குஜராத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 41,632 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் 9,606 குழந்தைகளும், 2021-22 நிதியாண்டில் 13,048 குழந்தைகளும், 2022-23 நிதியாண்டில் 18,978 குழந்தைகள் என ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு குஜராத்தில் இரட்டிப்பாகி வருகிறது. குஜராத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 லட்சம் குழந்தைகள் பிறப்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி அதில் 30,000 குழந்தைகள் இறக்கும் அவலம் தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளது. குஜராத்தில்...

தலையங்கம் : தலைதூக்கும் சர்வாதிகாரத்தை ஒட்ட நறுக்குவோம்

தலையங்கம் : தலைதூக்கும் சர்வாதிகாரத்தை ஒட்ட நறுக்குவோம்

தலையங்கம் : தலைதூக்கும் சர்வாதி என்.டி.டி.வி நிறுவனத்தை ஏற்கெனவே முழுமையாக கையகப்படுத்திவிட்ட அதானி குழுமம், இப்போது ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்தின் பங்குகளை 50 விழுக்காடு வாங்கிவிட்டது. ஊடகத் துறையில் அதானி குழுமம் தனது ஆக்டோபஸ் கரங்களை பரப்பிக்கொண்டே இருப்பதன் பின்னணி குறித்த சந்தேகங்கள் வலுத்துக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் ஒன்றிய அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டாலே, கடும் நெருக்கடிகளை ஊடக நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. குஜராத் கலவரம் தொடர்பாக முக்கிய ஆவணப் படம் ஒன்றை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிபிசி நிறுவனம் வெளியிட்டது. அதற்காக, பிப்ரவரி மாதத்தில் வருமான வரித்துறை சோதனையை எதிர்கொண்டது பிபிசி நிறுவனம். அதேபோல “நியூஸ் கிளிக்” ஊடகம் சீனாவில் இருந்து நிதி பெற்றதாகக் கூறி, அதன் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. “நியூஸ் கிளிக்” நிறுவனரான பிரபீர் புர்காயஸ்தா இன்னமும் சிறையில் இருக்கிறார். ஒன்றிய அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால் இதுதான் நிலைமை என்று பகிரங்கமாக மிரட்டுவதாகவே இச்சம்பவங்கள் இருந்தன....

ஜாதி பேதமும் வர்க்க பேதமும் வேறு வேறல்ல! – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

ஜாதி பேதமும் வர்க்க பேதமும் வேறு வேறல்ல! – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

டிசம்பர் 16-ஆம் தேதி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடந்த அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கத்தின் 5-வது அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு கழகத் தலைவர் ஆற்றிய உரை. பொதுவுடமை இயக்கங்கள் ஜாதியின்பால் தன் கருத்தைத் திருப்புமா என்ற எண்ணம் பல வேளைகளில் இருந்திருக்கிறது. அதுகுறித்த விவாதங்களும் கூட இருந்திருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்கூட எம்.சி.பி.அய் கட்சியினர் (யுனைடெட்) என்னிடம் வந்து பெரியார் நினைவுநாளை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் “மார்க்சியத்தின் மீதான எங்கள் விமர்சனங்கள்” என்ற தலைப்பில் நீங்கள் உரையாற்ற வேண்டும் என்று கேட்டனர். மார்க்சியர்கள் எப்போதுமே உலக நடப்புகளை துல்லியமாகக் கணித்து அதற்கேற்ப தங்கள் வரையறைகளை, செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ளும் பண்பு கொண்டவர்கள். ஜாதிய சிக்கல்களை கையிலெடுக்கிற மார்க்சிய இயக்கங்கள் அண்மைக்காலங்களில் பல இயக்கங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்குமுன்புவரை ஏன் இவ்வளவு காலம் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு வலுவான இயக்கத்தை முன்னெடுக்கவில்லை என்ற ஏக்கம்...

மதுரையில் சட்ட எரிப்பு நாள் – கழகத் தலைவர் பங்கேற்பு

மதுரையில் சட்ட எரிப்பு நாள் – கழகத் தலைவர் பங்கேற்பு

1957ல் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகள் எரித்து சிறை சென்ற – உயிர்நீத்த பெரியார் தொண்டர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைவுகூறும் சிறப்புக் கருத்தரங்கம் 10.12.2023 ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு மதுரை மணியம்மை பள்ளியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்டக் கழக காப்பாளர் தளபதி தலைமை தாங்கினார், வாசுகி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார்.புரட்சிக் கவிஞர் பேரவை நாகபாலன், புரட்சிக் கவிஞர் மன்றம் பொறுப்பாளரும், மணியம்மை பள்ளி தாளாளருமான வரதராசன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவு எரிப்பு போராட்டத்திற்கான காரணங்களையும், பெரியார் தொண்டர்களின் வீரஞ் செறிந்த போராட்ட வரலாற்றையும் நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார். முன்னதாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு” நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் திருவெறும்பூர் அரசெழிலன்...

உயர்நீதிமன்றங்களில் (2018 முதல் 2023 டிசம்பர் 02 வரை) 650 நீதிபதிகள் நியமனம்

உயர்நீதிமன்றங்களில் (2018 முதல் 2023 டிசம்பர் 02 வரை) 650 நீதிபதிகள் நியமனம்

உயர் ஜாதியினர் 75.69% (492 பேர்) ஓபிசி பிரிவினர் 11.7% (76 பேர்) எஸ்.சி பிரிவினர் 3.54% (23 பேர்) எஸ்.டி பிரிவினர் 1.54% (10 பேர்) சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் – 5.54% (36 பேர்) எந்த பிரிவிலும் வராத நீதிபதிகள் எண்ணிக்கை – 13 (பேர்) உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் – 14.1% (111 பேர்) உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் – 8.82% (03 பேர்) அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றங்கள் பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம் – 12 பேர் சென்னை உயர்நீதிமன்றம் – 12 பேர் மும்பை உயர்நீதிமன்றம் – 11 பேர் Source : RS/MINISTRY OF LAW (TILL DEC 2023) பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்