கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

08.01.2019 திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வசந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது.  நிகழ்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார்.  முதல் நிகழ்ச்சியாக கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி கழகக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகப் பெரியார் சிந்தனைப் பலகை தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. கடவுள் மறுப்பை மதன்குமார் கூறினார். அறிவழகன் வரவேற்புரையாற்றினார். துவக்க உரையாக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமிதிராவிடர் விடுதலை கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெரியாரியல் குறித்தும் பேசினார்.

தமிழ்நாடு மாணவர் கழக மாநிலச் செயலாளர் பாரி சிவக்குமார், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம், அய்யனார், பழனிவேல் (ஆசிரியர்), முத்துகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர் கோபால் இராவணன், நட பாபு அம்பேத்கர், கண்மணி, நட பாரதிதாசன் ஆகியோர் பேசினர். கடலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது. அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் பேசப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். புதிய பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிவித்தார்.

கடலூர் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள்: மாவட்டத் தலைவர் நட பாரதிதாசன், மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் மதன்குமார், அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் அறிவழகன், மாவட்ட துணைத் தலைவர் சூரியா, மாவட்ட துணைச் செயலாளர் நட பாபு அம்பேத்கர், விருத்தாசலம் நகர அமைப்பாளர் சதீஷ்குமார், விருத்தாசலம் ஒன்றிய அமைப்பாளர் ஆகாஷ், கம்மாபுரம் ஒன்றிய அமைப்பாளர் சிலம்பரசன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்டச் செயலாளர் பாலாஜி.

பெரியார் முழக்கம் 17012019 இதழ்

You may also like...