தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்!
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் மற்றும் இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு தருவைகுளம் மெயின் ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக பொருளாளர் கே.சந்திர சேகர் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக அமைப்பாளர் பால். அறிவழகன், ஆழ்வை ஒன்றிய தி.வி.க. செயலாளர் இரா.உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ச.ரவி சங்கர் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் இன ஒதுக்கல் பேசும் சங்கராச் சாரி மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்வில் திராவிடர் தமிழர் கட்சியின் மாநில நிதிச் செயலாளர் சு.க. சங்கர், மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கா.மை....