Category: பெரியார் முழக்கம் 2017

மதுரையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் மணவிழாவோடு நடந்தது

மதுரையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் மணவிழாவோடு நடந்தது

23-12-2017  வெள்ளிக் கிழமை, மாலை 6-00 மணியளவில், மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசுப்பு அரங்கத்தில், மதுரை மாவட்ட நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக நீட் எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் அரங்கமாய் நடைபெற்றக் கல்வியாளர் அரங்கத்திற்கு நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின், ஒருங்கிணைப்பாளர் ரபீக் ராஜா (இளந்தமிழகம்) தலைமை வகித்தார். குடியாத்தம் அரசுக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வரும், கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமாகிய முனைவர் ப.சிவக்குமார், மதுரைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு – புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளருமாகிய முனைவர் முரளி, கல்வியாளர் பர்வதவர்த்தினி ஆகியோர் உரையாற்றினர். அடுத்து நடைபெற்ற அரசியல் அரங்கிற்கு, தமிழ்ப்புலிகள் கட்சியின் முகிலரசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம். செரீப், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த....

“அதோ! மனித இனத்தின் தூதன் போகின்றான்!”

“அதோ! மனித இனத்தின் தூதன் போகின்றான்!”

பெரியார் இறுதி ஊர்வலம் நடந்த  டிசம்.25, 1973 நாளில் ‘மக்கள் குரல்’ நாளேட்டில் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோலை எழுதிய உணர்ச்சிகர கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். ஆர். சமுதாயத்தைச் சீர்திருத்த வந்த சரித்திர நாயகர்கள் பலரை வரலாறு சந்தித்திருக்கிறது. சமுதா யத்தில் மறுமலர்ச்சி காண போதி மரத்திலிருந்து புறப்பட்ட புத்தன் வெற்றி பெறவில்லை. அவனது சமுதாய மறுமலர்ச்சி சமயத்தின் ஒரு கிளையானது. தென்னகத்தே ஒரு இராமலிங்கன் தோன்றினான். முடை நாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கங்களைச் சுட்டெரிக்கப் புறப்பட்டான். கடைசியில், “கடை விரித்தேன்; கொள்வாரில்லை” என்று கடையை மூடி நடையைக் கட்டினான். அவனது இயக்கமும் சமயத்தின் ஒரு வடிகாலானது. ஆனால் இந்த நூற்றாண்டில் ஈரோட்டிலிருந்து ஒரு வெண்தாடி வேந்தன் ஊன்றிய தடியோடு ஊர் முழுக்கச் சுற்றுலாக் கிளம்பினான். அவன் தனது சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்திற்கு சமுதாயத்தை, கடவுளை, சாஸ்திரத்தை அடித்தளமாகக் கொள்ளவில்லை. அத்தனைத் தீமைகளுக்கும் அவைகளே ஊற்றுக்கண் என்பதை உணர்ந்தான்! எனவே சாதியைச்...

கழகம் எடுத்த பெரியார் நினைவு நாள்

பேராவூரணி : பேராவூரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திரு வேங்கடம் தலைமையில் ஒன்றியப் பொறுப்பாளர் சீனி. கண்ணன், தமிழக மக்கள் புரட்சிக் கழக பரப்புரைச்  செயலாளர் ஆறு நீலகண்டன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மெய்ச்சுடர் நா.வெங் கடேசன், த.ம.பு.க. இரா மதியழகன், ஆயில் மதியழகன், தி.வி.க நகர அமைப்பாளர் தா. கலைச்செல்வன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க  தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். காதல் திருமணம் செய்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். குமரி : பெரியாரின் 44ஆவது, நினைவு நாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம். சார்பாக 24-12-2017 ஞாயிறு காலை 9.00மணிக்கு தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.  நீதிஅரசர் (பெ.தொ.க தலைவர்)  தலைமை...

வேலூரில் பெரியார் நினைவு நாள்: மக்கள் மன்றம் எழுச்சியுடன் நடத்தியது

வேலூரில் பெரியார் நினைவு நாள்: மக்கள் மன்றம் எழுச்சியுடன் நடத்தியது

காஞ்சி மக்கள் மன்றம் பெரியார் நினைவு நாளை டிசம்பர் 24 அன்று வேலூரில் எழுச்சியுடன் நடத்தியது. பெரியார் பூங்கா அருகில் மாலை 5 மணியளவில் மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்வுகள் தொடங்கின. மக்கள் மன்ற தோழர்கள் கோபி வரவேற்புரையாற்ற சதீஷ் தலைமை தாங்கினார். நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார். விடுதலை சிறுத்தைகள் மாநில அமைப்புச் செயலாளர் நீலசந்திரகுமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர், எஸ்.டி.பி.அய். மாநில பொறுப்பாளர் ஜி.எஸ். இக்பால், கண் மருத்துவர் தி.ச. முகமது சயி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் சுதாகர், ஆவணப்பட இயக்குனர் பாலா, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் சிவா, மக்கள் மன்றம் தோழர்கள் அபிநயா, திலகவதி ஆகியோர் கலை நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே...

கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்

கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்

கீழ்வெண்மணி படுகொலையில் வரலாற்றில் மறைக்கப்படும் பகுதியை சுட்டிக்காட்டுகிறார் பசு. கவுதமன். ‘தடம்’ இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் முழுமையான வடிவம். 25.12.1968, மனிதகுல வரலாற்றில் மறக்கமுடியாத கருப்பு தினம்.  44 மனித உயிர்கள், மனிதர்கள் என்று சொல்லப்பட்டவர்களாலேயே கொளுத்தப்பட்ட கொடும் கோரநாள். ஆயிற்று அய்ம்பது ஆண்டுகள் ! இந்த அய்ம்பது ஆண்டுகளிலும் எப்போதும் , எல்லோராலும் சொல்லப்பட்டது, “அரைப்படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக…  ”  இது கூலி உயர்வு மட்டுமேயான பிரச்சனையா? அல்லது அந்த மிகப்பெரிய அவலச் சம்பவத்தை – துயர விளைவை அப்படித்தான் குறுக்கி, சுருக்கிவிட முடியுமா? 62களின் இறுதிகளிலிருந்து நாகை தாலுக்காவில் வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டச் சூழலில், ஆய்மழை தங்கவேலு , சிக்கல் பக்கிரிசாமி, இருஞ்சூர் சின்னப்பிள்ளை, கேக்கரை ராமச்சந்திரன் ஆகியோர்களின் உயிர்பலி என்ற தொடர்ச்சியின் உச்சகட்ட வெளிப்பாடுதான் வெண்மணியின் 44 மனித உயிர்களை பலிகொண்ட தீயின் கங்குகள்.! “ மோதலுக்குக் காரணம் நெல் உற்பத்தியாளர் சங்கத்திற்கும், இடது கம்யூனிஸ்ட்...

பெண்ணுரிமை; ஜாதி ஒழிப்பு; இந்துத்துவா எதிர்ப்பு; மாநில உரிமைகளுக்காக… 2017இல் கழகத்தின் செயல்பாடுகள்

பெண்ணுரிமை; ஜாதி ஒழிப்பு; இந்துத்துவா எதிர்ப்பு; மாநில உரிமைகளுக்காக… 2017இல் கழகத்தின் செயல்பாடுகள்

2017ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் முக்கிய களப்பணிகள் பற்றிய ஒரு தொகுப்பு: ஜனவரி – தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திரு நாள் விழாக்கள், கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை, மயிலாப்பூர், கொளத்தூர், நங்க வள்ளி, கொளப் பலூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கழகத் தோழர்கள் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளுடன் மக்கள் விழாவாக நடத்தினர். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகாம்பூர் கிராமத்தில் நந்தினி என்ற தலித் மாணவி, இந்து முன்னணி கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நந்தினிக்கு நீதிகேட்டு கழக சார்பில் குடியாத்தம், திருச்செங்கோடு, அரியலூர், மதுரை, ஆத்தூர், நங்கவள்ளி, திருப்பூர், மேட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பிப்ரவரி: காதலர் நாளை பிப். 12ஆம் தேதி ஒரு நாள் விழாவாக மேட்டூரில் கலை நிகழ்வுகளுடன் கழகத் தோழர்கள் நடத்தினர். ஜாதிவெறிக்கு கணவரை பலி கொடுத்து ஜாதி ஒழிப்புக் களத்தில் நிற்கும்...

மக்கள் மன்றத் தோழர்கள் கைது! கழகம் கடும் கண்டனம்

மக்கள் மன்றத் தோழர்கள் கைது! கழகம் கடும் கண்டனம்

காஞ்சி தொடர்வண்டி நிலையத்தில் அம்பேத்கர் படத்தை குப்பையில் வீசிவிட்டு சங்கராச்சாரி படத்தை வரைந்ததைத் தட்டிக் கேட்டு களமிறங்கிய காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் கைதுசெய்யப்பட்டதோடு அவர்கள் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது. இது குறித்து காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் தஞ்சைத் தமிழன் விடுத்துள்ள அறிக்கை: 21 டிசம்பர் 2017 அன்று காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தின் வாயிலில் மாட்டப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை குப்பையில் போட்டுவிட்டு அந்த இடத்தில் இந்துமதக் குறியீடுகளும், அதை ஒட்டிய சுவர்களில் சங்கராச்சாரிகளின் படங்களும் வரையப்பட்டிருந்தன. அவ்விடத்தில் தலைவர் அம்பேத்கரின் படத்தை  மீண்டும்  நிறுவிய குற்றத்திற்காக டிச.27 அன்று மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் மகேஷ் மற்றும் பொறுப்பாளர்கள் ஜெசி, தஞ்சை தமிழன், பாலு ஆகியோர் பிணையில் வர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைய மேலாளர் சீனிவாசலு அவர்கள்...

பெண்களே களப்பணியாற்றிய மாநாடு

ஈரோடு பெண்கள் சுய மரி யாதை மாநாட் டின் தனிச் சிறப்பு, மாநாட்டுப் பணி களை முழுமை யாக பெண்களே மேற் கொண்டது தான். பல்வேறு ஊர்களுக்குச் சென்று கழகத் தோழர்களை சந்தித்து, மாநாட்டுக்கு  அழைப்பு விடுத்தது; நன்கொடை திரட்டியது; விளம்பரப்பணி என அனைத்து பணிகளையும் பெண்களே முன்னின்று நடத்தியது இம்மாநாட் டின் தனிச் சிறப்பாகும். மாநாட்டில் உரையாற்றிய பலரும் இதை சுட்டிக் காட்டிப் பாராட்டினர். மாநாட்டுப் பணிக்காக உழைத்த தோழர்கள்: மணிமேகலை (ரங்கம்பாளையம்), முத்துலட்சுமி (திருப்பூர்), சுமதி (இராசிபுரம்), சபீனா (பள்ளிப் பாளையம்), மீனாட்சி (பள்ளிப்பாளையம்), கவிப்பிரியா (சென்னிமலை), ஜோதி மணி (சென்னி மலை), சங்கீதா (சென்னை), ராஜி (சென்னை), தேன்மொழி (திருப்பூர்), சரசுவதி (திருப்பூர்), மணிமொழி (கோபி), இனியா (மேட்டூர்), இரண்யா (சென்னை). பெரியார் முழக்கம் 21122017 இதழ்

குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டும்

ஈரோடு பெண்கள் சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்று முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி பேசுகையில் குறிப்பிட்டதாவது: “பெரியார் பிறந்த மண்ணில் பெண்கள் சுயமரியாதை மாநாடு வெற்றியுடன் நடந்து கொண்டிருக் கிறது. நாங்கள் நிகழ்த்துகிற உரைகளை விட இந்த மாநாட்டின் வெற்றிக்கு காஞ்சி மக்கள் மன்றம் நிகழ்த்திய கலைநிகழ்ச்சிகள் தான் முக்கிய பங்காற்றியிருக்கிறது என்று கூறுவேன். அவ்வளவு சிறப்பாக கருத்துகளை இசையாக – கலை நிகழ்வுகளாக வழங்கினர். அவர்களைப் பாராட்ட கடமைப்பட் டிருக்கிறேன். பெண்கள் மாநாடுகளை தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வருவது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தந்தை பெரியாரின் சிந்தனைகள் இன்று உலக நாடுகளால் கவனிக்கப் பட்டு வருகிறது. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு மாநிலங்களுக்கு போகும்போது சமூகநீதி என்றால் என்னவென்றே அம்மக்களுக்குத் தெரியவில்லை என்பதை உணர்ந்தேன். தமிழ்நாட்டில் பெரியார் ஆற்றிய தொண்டு, சமூக நீதி பற்றி நான் பங்கேற்கும் நிகழ்ச்சி களில் எல்லாம் தொடர்ந்து பேசுவேன். ஆண், பெண் சமத்துவத்தை...

தீர்ப்புக்குப் பிறகு கவுசல்யா பேட்டி “வழக்கை நடத்த வேண்டாம் என்று அழுத்தம் தந்தார்கள்”

உடுமலை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது. மூவர் விடுதலை; ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை தனி நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ‘சங்கரின் மரணத்துக்கு நீதி கிடைத்திருக்கிறது’ என்று கவுசல்யா தீர்ப்பை வரவேற்றிருக்கிறார். தீர்ப்புக்குப் பிறகு ‘இந்து’ ஆங்கில நாளேடு கவுசல்யா வின் பேட்டியை  (டிச.18) வெளியிட்டிருக்கிறது. பேட்டி விவரம்: கேள்வி : சமூகத்தில் ஜாதியின் செல்வாக்கு மறைந்து வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில வன்முறை சம்பவங்களை பெரிதுபடுத்துவது தேவை யில்லாதது என்ற கருத்துப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? கவுசல்யா: அது உண்மையல்ல. ஜாதியப் பாகுபாடுகளை நிலைநிறுத்தத் துடிப்பவர்கள் தான் இத்தகைய கருத்துகளைக் கூறி வருகிறார்கள். சில நேரங்களில் ஜாதிய பாகுபாடுகள் கொலை செய்யும் அளவுக்கு அவர்களைத் தூண்டி விடுகிறது. ஜாதியப் பாகுபாடு சமூகத்தில் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. கேள்வி : ஜாதி வெறிக்குக் கணவரைப் பலி கொடுத்...

மாநிலங்களின் மருத்துவத் துறையிலும் டில்லியின் அதிகாரப் பறிப்பு  சமூக நீதிக்கான மருத்துவர் சங்கத் தலைவர் இரவீந்திர நாத் அறிக்கை

மாநிலங்களின் மருத்துவத் துறையிலும் டில்லியின் அதிகாரப் பறிப்பு சமூக நீதிக்கான மருத்துவர் சங்கத் தலைவர் இரவீந்திர நாத் அறிக்கை

2012இல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு வைத்து 11,000 செவிலியர்களைத் தமிழக அரசின் சுகாதாரத் துறை நியமனம் செய்தது. அவர்களுக்கு மாதம் ரூ.7,700 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. கடும் பணிச்சுமை, குறைந்த சம்பளம், வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்று அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் செவிலியர்கள். பணி நியமனத்தின்போதே அவர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் மூலம் இவர்கள் நியமிக்கப்படு கிறார்கள் என்று அதற்குக் காரணமும் சொன்னது. இது ஒரு மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்குப் பணி நியமனம், ஊதியம் வழங்கல் போன்ற விஷயங்களில் ஏன் மத்திய அரசு நேரடியாகத் தலையிடுகிறது? இது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலல்லவா? இந்த உரிமை பறிப்புக்கு ஏன் மாநில அரசு உடன்பட்டது என்று புரியவில்லை. பணியாளர் நியமனத்தில் மாநில உரிமை பறிக்கப்படுவது என்பது கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது. மாநிலங்களின்...

அரசு தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்!

தமிழ்நாட்டின் அரசுப் பணிகளுக்கு பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. திருச்சி : திருச்சி மாவட்ட கழகச் சார்பாக 14.12.2017 வியாழன் காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தைக் கண்டித்து, அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை வகித்தார். பல் மருத்துவர் எஸ்.எஸ். முத்து, திருவரங்க நகரச் செயலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்துரை வழங்கியோர்: செந்தில் (இளந்தமிழகம்), வின்செட் (மாநகரத் தலைவர், த.பெ.தி.க.), பாலாஜி (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்), வழக்குரைஞர் தமிழழகன் (ஆசிரியர், ‘தமிழ்க்காவிரி’), அன்பழகன் (பெரியார் பாசறை), பஷீர் அகமது (மக்கள் உரிமை மீட்பு இயக்கம்), வழக்குரைஞர் பொற்கொடி ஆகியோர்.  டார்வின்தாசன் (கழக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரையாற்றினார்.  தோழர்கள் குணா, முருகானந்தம், மு.மனோகரன், டி.வி.மெக்கானிக் மணி, அவரது துணைவியார்,...

பறி போகும் தமிழர் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களிடையே துண்டறிக்கை; மண்டல மாநாடுகள்;  டிசம்பர் 29இல் சேலத்தில் தலைமை செயற்குழுக் கூட்டம்  ஈரோட்டில் கூடிய தலைமைக் குழு முடிவுகள்

பறி போகும் தமிழர் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களிடையே துண்டறிக்கை; மண்டல மாநாடுகள்; டிசம்பர் 29இல் சேலத்தில் தலைமை செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் கூடிய தலைமைக் குழு முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு கூட்டம் டிசம்.16, 2017 காலை 11 மணியளவில் ஈரோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. கழகப் பொறுப்பாளர்கள் கடந்த அக்டோபரில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக கழக செயல்பாடுகள் குறித்து கழகப் பொறுப்பாளர்கள் தலைமைக் குழுவில் கருத்துகளை முன் வைத்தனர். செயல்பாடுகள் இல்லாத கழக அமைப்புகள் – செயல்படக் கூடிய கழக அமைப்புகள் – அமைப்புகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கழக செயல்பாடுகளை மேலும் தீவிரமாக்குவது குறித்தும் விவாதிக்கப் பட்டது. கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தலைமைக்குழு விவாதித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடுவண் ஆட்சி தலையீட்டால், தமிழக இளைஞர்களை கடுமையாகப் பாதிக்கும் வேலை வாய்ப்புகள், தமிழக தேர்வாணையத்தின் அறிவிப்புகள், நீட் திணிப்பால் உருவாகியுள்ள நெருக்கடிகள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்களாக பிற மாநிலத்தவர்களை தேர்வு...

கழகம் துணை நிற்கும்

ஈரோடு மாநாட்டு மேடையில் மற்றொரு நிகழ்வும் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து  கொண்ட ரவிக்குமார்-ஜோதி இணையரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத் திருந்தனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணின் பெற்றோர்களான பாலசுப்பிரமணியன்-மீனாட்சி, திருமணத்தை அங்கீகரித்து இருவரையும் குடும்பத்தில் இணைத்துக் கொண்டனர். இதனால் பெண்ணின் பெற்றோரை அவரது ஜாதியினர் (பிற்படுத்தப்பட்ட ஜாதி) சமூகத்திலிருந்து விலக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் ஜாதி விலக்குக் குள்ளான பெற் றோர்களையும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணை யர்களையும் மேடையில் ஏற்றி “இங்கே திரண் டிருக்கும் கழகக் குடும்பங்கள் இவர்களுக்கு என்றும் துணை நிற்கும்” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.  வேறு மிரட்டல்கள் வந்தாலும் அதை கழகம் எதிர்கொள்ளும் என்றும் அறிவித்தார். பலத்த கரவொலி எழுப்பி கூட்டத்தினர் ஆதரவை வெளிப்படுத்தினர். பெரியார் முழக்கம் 21122017 இதழ்

மாநாட்டு மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

வழமையாக கழக நிகழ்வுகளில் நடக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் ஈரோடு பெண்கள் சுயமரியாதை மாநாட்டு மேடையிலும் நடந்தது. திருமணத்தை உறுதிமொழி கூறி நடத்தி வைத்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘இந்தத் திருமணம் ஜாதி ஆணவம் பேசும் ஜாதியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டவருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் நடக்கும் திருமணம்” என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் திண்ணப்பட்டி கிராமம் தங்கவேலு-வெண்ணிலா இணை யரின்மகன் பிரபாகரன்,  ஓமலூர் வட்டம் பண்ணப்பட்டி கிராமம் குணசேரகன், இலட்சுமி இணையரின் மகள் நந்தினி ஆகியோர் மாலை மாற்றி இருவரும் இணைந்து வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்றனர். பெரியார் முழக்கம் 21122017 இதழ்

ஈரோடு மாநாடு பெண்களுக்கு அழைப்பு சுயமரியாதைக்குப் போராடுங்கள்!

‘பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன் வரவேண்டும்’ என்று ஈரோடடில் நடந்த சுய மரியாதை மாநாடு பெண்களுக்கு அறைகூவலை விடுத்தது. அரங்குகளில் மண்டபங்களில் மட்டுமே ஒலித்து வந்த பெண்ணுரிமைக் கருத்துகளை திறந்தவெளி மாநாடாக நடத்தி வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். சென்னையில் ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு விடுத்தது பெண்கள் மாநாடு. ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத் துள்ளது. ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெண்கள் சுயமரியாதை மாநாடு டிசம்பர் 16 மாலை, வீரப்பன் சத்திரம் சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. கோவை, சேலம், மேட்டூர், திருப்பூர், ஈரோடு, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள், தோழியர்கள் மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் பறையிசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின.  தொடர்ந்து பெண்ணுரிமை, ஜாதி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு கருத்துகளைக் கொண்டு பாடல்களையும், இசை நாடகங்களையும் நிகழ்த்தினர். கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தன. பெரியார் படத்துடன்...

கழகம் எடுத்த அம்பேத்கர் நினைவு நாள்

திருப்பூரில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் திருப்பூரில் அம்பேத்கர் நினைவு நாளான 06.12.2017 அன்று காலை 11 மணியளவில் அம்பேத்கர் சிலைக்கு  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொருளாளர் துரைசாமி, அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, தனபால், அகிலன், மாதவன் பரிமளராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். பேராவூரணியில் பேராவூரணியில் தமிழக மக்கள்  புரட்சிக் கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து  நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநில கொள்கைபரப்புச் செயலாளர் ஆறு.  நீலகண்டன் தலைமையில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை  செய்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சித.திருவேங்கடம், தா.கலைச்செல்வன்,  சுப.செயச்சந்திரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தோழர்கள் ஏனாதி சம்பத், ஆயில்  மதியழகன், இரா மதியழகன், ரெட்டவயல் மாரிமுத்து, கிறித்தவ நல்லெண்ண இயக்க  பொறுப்பாளர் ஆயர் த.ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்...

டிசம்பர் 6 : கண்டன ஆர்ப்பாட்டத்தில்  கழகத் தலைவர் பொதுச் செயலாளர் பங்கேற்பு

டிசம்பர் 6 : கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் பொதுச் செயலாளர் பங்கேற்பு

டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு நாளை இஸ்லாமிய அமைப்புகள் கருப்பு நாளாக  கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுதும் நடத்தின. திருப்பூரில் எஸ்.டி.பி.அய். நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், வேலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் பங்கேற்றுப் பேசினார்கள். பெரியார் முழக்கம் 14122017 இதழ்

2018 – கழக நாள்காட்டி தயார்!

2018ஆம் ஆண்டுக் கான கழக நாள்காட்டி தயாராகி வருகின்றன. அழகிய வடிவமைப்பு; சமூகப் போராளிகளின் படங்களோடு… நாள்காட்டி ஒன்றின் விலை : ரூ.70 தோழர்கள் முன்பணம் செலுத்தி நாள்காட்டியைப் பெற்றுக் கொள்ளலாம். ஈரோடு கழக மாநாட்டில் கிடைக்கும். – தபசி குமரன், தலைமைக் கழகச் செயலாளர் பெரியார் முழக்கம் 14122017 இதழ்

‘உரிமை மீட்பு கூட்டியக்கம்’ நடத்திய ‘மனித உரிமை நாளில்’ விடுதலை இராசேந்திரன் பேச்சு ‘சித்திரவதைகளைத்’ தடை செய்ய மறுக்கும் இந்திய அரசு

டிசம்பர் 10, அய்.நா. மனித உரிமை நாளையொட்டி சென்னை மற்றும் காஞ்சி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழக முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட 40 அமைப்புகளைக் கொண்ட உரிமை மீட்பு கூட்டியக்கம் சென்னை மயிலாப்பூர், மாங்கொல்லையில் உரிமை மீட்பு பொதுக் கூட்டம் ஒன்றை சிறப்பாக நடத்தியது. மாற்றுக் கலை ஊடகம், காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகளோடு நடந்த இந்த நிகழ்வுக்கு சென்னை தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த எஸ்.நடராசன் தலைமை தாங்கினார். பி.யு.சி.எல். அமைப்பைச் சார்ந்த டி.எஸ்.எஸ்.மணி, பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்முயற்சி எடுத்து ஒருங்கிணைத்தார். வெள்ளையன் (வணிகர் சங்கப் பேரவை), ஹாஜா கனி (த.முமு.க) அமீர் (திரைப்பட இயக்குநர்), ஓவியா (புதிய குரல்), வழக்கறிஞர் அருள்மொழி (திராவிடர் கழகம்), எஸ்.எம்.பாக்கர் (இந்திய தவ்ஹீத்), பேராசிரியர் சரசுவதி (பி.யு.சி.எல்.), வினோத் (ஆதித் தமிழர் விடுலை இயக்கம்), கிரேஸ் பானு (திருநங்கை அமைப்பு) உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். கழக சார்பில் பொதுச் செயலாளர்...

தேர்வாணையத்தை எதிர்த்து கழக ஆர்ப்பாட்டங்கள்

தமிழ் தெரியாதவர்களும் பிற மாநிலத்தவரும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் வேலை வாய்ப்புத் தேர்வுக்கு மனு செய்யலாம் என்ற தமிழ்நாடு தேர்வாணைய அறிவிப்பைத் திரும்பப் பெறக் கோரி கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம்  சார்பாக மாவட்டத்  தலைவர் வழக்கறிஞர் வே.சதா தலைமையில்  05.12.207 அன்று மாலை  4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை வடநாட்டாருக்குத் தாரை வார்க்கும் அரசுத் தேர்வாணையத்தையும் தமிழக அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தமிழ்மதி, மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், மாவட்டப் பொருளாளர் மஞ்சுகுமார்,  பெரியார் தொழிலாளர் கழகத் தலைவர்  நீதியரசர், செயலாளர் ஜான்மதி, சூசையப்பா, ஸ்டெல்லா, ராஜேந்திரன்,  அருந்ததியர் காலனி ஆறுமுகம் , குமரேசன் (ஆதித் தமிழர் கட்சி) , சிவராஜ பூபதி (மக்கள் அதிகாரம்), வழக்கறிஞர்கள் மைக்கிள் ஜெரால்டு, சுதர்மன், சமூக ஆர்வலர்  போஸ்,  புத்தோமணி, மணிகண்டன், விஷ்ணு,...

“தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா?”

“தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா?”

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள  புதிய நீதிபதிகள் பட்டியலில் கேரளாவைச் சார்ந்த டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் சுப்ரமணிய பிரசாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஒருபோதும்  பணியாற்றியவர் அல்லர். எங்கோ டெல்லியில் வழக்கறிஞராக உள்ள ஒருவரை தமிழ் நாட்டிற்கும் , சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் சம்பந்தமில்லாத ஒருவரை நியமிப்பது சரியா? சமூக நீதிக்கு முன்னோடியாக உள்ள தமிழ் நாட்டில் இன்றும் கூட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்படாமல்  வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சமூகப் பிரிவினர்களான பிரன்மலைக் கள்ளர்கள், வண்ணார், அருந்ததியர், ஆசாரி, கோனார், முத்தரையர், நாவிதர், போயர், மற்றும் ஏராளமான சமூக பிரிவினரும் மற்றும் பெயரளவில் ஒருவர் மட்டுமே இருக்கும் மீனவர்,  வன்னியர் போன்ற சமூகப் பிரிவுகளில் ஏராளமான திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் எங்கோ டெல்லியில் இருக்கும் அதிலும் கேரளாவைச் சார்ந்த ஒருவருக்கு...

தலையங்கம் 24 ஆண்டுகளுக்குப் பிறகும்…

தலையங்கம் 24 ஆண்டுகளுக்குப் பிறகும்…

மண்டல் பரிந்துரை செயல்பாட்டுக்கு வந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகும், 27 சதவீத இடஒதுக்கீட்டில் மத்திய அரசுப் பணிகளில் பாதியளவைக்கூட எட்டிப் பிடிக்க முடியாத நிலையில் தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் நிலை உள்ளது. சமூக நீதி செயல்பாட்டாளர் முனைவர் ஈ. முரளிதரன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ள தகவல்களை இதே இதழில் வெளியிட்டிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியானாலும், பா.ஜ.க ஆட்சியானாலும் சமூக நீதிக்கான கதவுகள் அடைக்கப்பட்டே இருக்கின்றன. முடிவெடுக்கும் அதிகார மய்யத்தில் கோலோச்சும் பார்ப்பன அதிகார வர்க்கம் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினரோடு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்து வருகிறது. இதைத் தட்டிக் கேட்கும் துணிவு கொண்ட ஆட்சியாளர்களோ, சக்தி வாய்ந்த சமூக நீதித் தலைவர்களோ இல்லை என்பதுதான் அவலம். இருக்கும் நிலையைப் பார்த்தால் இந்த நூற்றாண்டில்கூட 27 சதவீத இடஒதுக்கீட்டில் முழுமையாகப் பிற்படுத்தப்பட்டோர் அமரப்போவது கனவாகத்தான் இருக்கும். இந்துத்துவா சக்திகள் பெரும்பான்மைவாதம் பேசுகிறார்கள். இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில்...

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு பாதியளவுகூட நிரப்பப்படவில்லை நடுவண்அரசுகளின் துரோகம்

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு பாதியளவுகூட நிரப்பப்படவில்லை நடுவண்அரசுகளின் துரோகம்

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்தார், சமூக நீதிக் காவலரான பிரதமர் வி.பி.சிங். 24 ஆண்டுகள் கழிந்த பிறகும் 27 சதவீதத்தில் இன்னும் பாதியளவுகூட பிற்படுத்தப்பட்டோருக்குப் பணிகள் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்துள்ளன. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 1993 செப்டம்பர் 8ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இப்போது என்ன நிலை? மத்திய அரசின் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜனவரி 1, 2017 வரை இதுதான் நிலை. 24 மத்திய அமைச்சகங்களில் குரூப் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் 17 சதவீதம் பேரும் ‘பி’ பிரிவில் 14 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ‘சி’ பிரிவு ஊழியர்களில் 11 சதவீதம் பேரும், ‘டி’ பிரிவில் 10 சதவீதம் பேரும்...

கழகத் தோழர் ப.சுகுமார் நினைவுக் கல்வெட்டு திறப்பு

கழகத் தோழர் ப.சுகுமார் நினைவுக் கல்வெட்டு திறப்பு

முடிவெய்திய மேட்டூர் கழகத் தோழர் ப. சுகுமார் நினைவு கல்வெட்டு படத் திறப்பு நிகழ்வு, நவம்பர் 27 பகல் 11 மணியளவில் மேட் டூர் என்.எஸ்.கே. நகரில் நடந்தது. கல்வெட்டினை கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் படத்தை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் திறந்து வைத்தனர். அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, பொருளாளர் துரைசாமி, ஆசிரியர் சிவகாமி, மேட்டூர் முத்துக் குமார், மேட்டூர் சக்தி, கோவிந்தராஜ், ஸ்டாலின் (அ.இ.அ.தி.மு.க.), சோம சுநதரம் (தி.க.), மேட்டூர் இராமச் சந்திரன் உள்ளிட்ட தோழர்கள் இரங்கல் உரையாற்றினர். கோயில் பூசாரியாக இருந்து கழக நூல்களைப் படித்து தோழர்களிடம் விவாதித்து, தன்னை உறுதியான பெரியாரியல்வாதியாக மாற்றிக் கொண்ட சுகுமார்,  கடந்த சில வருடங் களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கழக நிகழ்வுகளில் தவறாது பங்கேற்று வந்தார். தனது இறுதி நிகழ்வுகள் கழகச் சீருடையான நீல ஜீன்ஸ், கருப்பு சட்டை அணிந்து மூடநம்பிக்கை யின்றி, கழகத் தோழர்களால் நடத்தப்பட...

நீடாமங்கலம் சாதியக் கொடுமை-நூல் ஆய்வரங்கம்

பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை ந.பசுபதியின் 12-ஆம் ஆண்டு நினைவு நாளில் ‘ரிவோல்ட்’ நடத்தும் ‘நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்’நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில்  25.11.2017 மாலை 5 மணிக்கு தொடங்கியது பெரியாரிய எழுத்தாளர் பசு கவுதமன் தலைமையேற்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிவகுரு வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் சண்முகசுந்தரம் ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாலர் சாமுவேல்ராஜ், தபெதிக பிரச்சாரச் செயலர் சீனி விடுதலை அரசு, மதிமுக வெளியீட்டுச் செயலர் வந்தியதேவன் ஆய்வுரை நிகழ்த்தினர் வரலாற்று ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ இரா வேங்கடாசலபதி இந்நூல் வெளிவர நூலாசிரியர் எவ்வாறெல்லாம் உழைத்தார் என்றும் தான் எப்படியெல்லாம் அவரை வழிகாட்டி விரைவில் நூல் வெளிவர நெருக்குதல் அளித்தேன் என்பதை சுவைபட எடுத்துரைத்தார் நூலாசிரியர் ஆ திருநீலகண்டன் தன்னுரையில் கழகத் தோழர்கள் மற்றும் பெரியாரிய பற்றாளர்கள் இந்நூல் வெளிவர எவ்வோறெல்லாம் உடனுதவினார்கள் என்றும், தான் எவ்வாறெல்லாம் நூல் வெளிவர களவுழைப்பை...

நமது அடுத்த ஒன்று கூடல் ஈரோட்டில்! டிசம்பர் 16, ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு.

நமது அடுத்த ஒன்று கூடல் ஈரோட்டில்! டிசம்பர் 16, ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு.

சென்னையில் ஜாதி ஒழிப்புக்காக பெண்கள் அறைகூவல் விடுத்த அந்த எழுச்சி நிகழ்வுகள், தோழர்களின் உள்ளங்களில் இப்போதும் பசுமையாய் பதிந்து நிற்கிறது. அடுத்து, ஈரோட்டில் கூடுகிறோம்! மதவெறி சக்திகள், ஜாதி வெறி சக்திகள், பெண்களின் சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் சவால் விடும் ஒடுக்கு முறைகள், மதம் கட்டமைத்த கற்பிதங்கள் – – இவை அனைத்துக்கும் எதிராக விழிப்புணர்வு களம் நோக்கி பெண்களை அணி திரட்டும் மாநாடு இது. மாநாட்டுப் பணிகளில் நிதி வசூலில் பெண் தோழர்கள் முழு வீச்சில் களமிறங்கி செயல்படுகின்றனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடக்க விழாவை எழுச்சியுடன் நடத்திய அதே ஈரோட்டில்… மீண்டும் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் உணர்வாளர்களும் ஒன்று கூட இருக்கிறார்கள். கொள்கை உறவுகளின் ஒன்று கூடுதலிலும் சந்திப்பிலும் நமக்கு நாமே நம் உணர்வுகளை கூர் தீட்டிக் கொள்கிறோம். மத விழாக்களும் மூடநம்பிக்கை சடங்குகளையும் முற்றாகப் புறந்தள்ளி, புதிய சமூகத்துக்கான பாதை அமைக்க களத்தில் நிற்கும் பெரியாரியலாளர்களுக்கு இந்த மாநாடுகளும்...

பள்ளிகொண்டா   கிருஷ்ணசாமி இல்லத்தில்  கழகத் தலைவர்

பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி இல்லத்தில் கழகத் தலைவர்

9-11-2017 அன்று காலை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வேலூர் மாவட்ட கழகச் செயலர் குடியாத்தம் சிவா, கழகத் தோழர்களுடன், வீரியமிக்க தலித் விடுதலைப் போராளியாய் விளங்கியவரும் , மக்களால் தளபதி என அன்போடு அழைக்கப் பட்டவருமான பள்ளிகொண்டா  கிருஷ்ணசாமி இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அடுத்து அவரால் நிறுவப் பட்டதும், அவர் நடத்திய 150 இரவுப் பாடசாலைகளில் ஒன்றானதும், தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசுத் தேர்வாணையத் தேர்வு களுக்கான இலவச பயிற்சிப் பள்ளியாய் அவரது பெயரன் மகேஷ்  தொடர்ந்து இயங்கிவரும்  பவுத்த ஆராய்ச்சி மையத்துக்கும் சென்று பார்த்ததோடு, சமூக அக்கறையோடு இயங்கிவரும் பாங்கினை வியந்து பாராட்டி னார். பெரியார் முழக்கம் 07122017 இதழ்

ஆர்.எஸ்.எஸ்.சின் ஆபத்தான  திட்டம்

ஆர்.எஸ்.எஸ்.சின் ஆபத்தான திட்டம்

2000 இஸ்லாமிய பெண்களை ‘இந்து’க்களுக்கு திருமணம் செய்யும் இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ். முன்னணி அமைப்புகளில் ஒன்றான ‘இந்து ஜக்ரான் மஞ்ச்’ என்ற அமைப்பு அறிவித்துள்ளது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் இந்த செய்தி வெளி வந்துள்ளது. திருமணத்துக்கான செலவு, அவர்களின் எதிர்கால வாழ்வுக்கான பாதுகாப்பு அனைத்தும் வழங்கப்படும் என்றும், இந்து வைதிக சடங்கு களுடன் இத்திருமணங்கள் நடக்கும் என்றும் அந்த அறிவிப்பு கூறுகிறது. திருமணம் செய்து கொள்ளும் இஸ்லாமியப் பெண்கள் இந்துவாக மாற வேண்டிய அவசியமில்லை என்றும் அந்த அறிவிப்பு கூறுகிறது. (இந்துவாக மாறினால் எந்த ஜாதியில் வைப்பார்கள்?) உ.பி. ‘இந்து ஜக்ரான் மஞ்ச்’ அமைப்பின் தலைவர் அஜூசவுகான் என்பவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தோடு, இஸ்லாமிய ஆண்கள், இந்து பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கான பதிலடி என்றும் கூறியுள்ளார். இஸ்லாமியர் மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்து வதும் இந்த இயக்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறியிருக்கிறார். “ஒரு முஸ்லிம் பெண், ஒரு முஸ்லிமை...

சுற்றுச் சூழல் போராளிக்கு 10 ஆண்டு சிறையாம் : மனித உரிமை ஆணையம் கண்டனம்

சுற்றுச் சூழல் போராளிக்கு 10 ஆண்டு சிறையாம் : மனித உரிமை ஆணையம் கண்டனம்

வியட்நாமைச் சேர்ந்த 22 வயது நிகுயென் வான் ஹோவா, பத்திரிகையாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு ஃபார்மோசா நிறுவனத்தின் கழிவுகள் கடற்கரையில் கலக்கப்பட்டதை ஆதாரத்துடன் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். தொடர்ச்சியாக ஒளிப்படங்கள், வீடியோக்கள் என்று ஆதாரங்களையும் வெளியிட்டு வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட வான் ஹோவாவுக்குத் தற்போது 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தைவானைச் சேர்ந்த ஃபார்மோசா பிளாஸ்டிக் தொழிற்சாலை ஹா டின் நகரில் செயல்பட்டு வருகிறது. ஆலையில் இருந்து வெளியேறும் சயனைட் உட்பட நச்சு ரசாயனக் கழிவுகளை, சாதாரண கழிவு வெளியேற்றும் குழாய் வழியாக கடற்கரையில் வெளியேற்றி வந்தனர். கடற்கரையில் 120 மைல் தூரத்துக்கு இந்தக் கழிவுகள் பரவிவிட்டன. 115 டன் மீன்கள் இறந்து மிதந்துள்ளன. இதனால் மீன்பிடித் தொழிலும் நலிவடைந்து விட்டது. சுற்றுலாத்துறையும் வீழ்ச்சியடைந்துவிட்டது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நிலமும் நீர் ஆதாரங்களும் மாசு அடைந்திருக்கின்றன. இதைத் தட்டிக் கேட்ட வான்...

மூடநம்பிக்கைகளை பரப்பும் தொலைக்காட்சி தொடர்களுக்கு தடை வருமா?

மூடநம்பிக்கைகளை பரப்பும் தொலைக்காட்சி தொடர்களுக்கு தடை வருமா?

கர்நாடகாவில் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து, அதில் வரும் கதாபாத்திரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா டவுனைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சைத்ரா, மகள் பிரார்த்தனா (7). பிரார்த்தனா 2-ம் வகுப்பு படித்து வந்தாள். வீட்டில் டிவி.யில் ஒரு குறிப்பிட்ட கன்னட சீரியலை பார்ப்பது வழக்கம். இந்த  தொடரில் நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்தன. அதைப் பார்த்த பிரார்த்தனா, கடந்த 11-ம் தேதி, தானும் கையில் ஒரு பேப்பரை எடுத்து தீ வைத்துக்கொண்டு நடனமாடினாள். அப்போது பிரார்த்தனாவின் ஆடையில் தீப்பற்றிக் கொண்டது. வலி தாங்க முடியாமல் அலறினாள். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். உடனடியாக தாவணகெரே அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு...

கருத்தரங்கம் – நாடகம் – கவியரங்குடன் நடந்த கவிஞர் இன்குலாப் நினைவேந்தல்

கருத்தரங்கம் – நாடகம் – கவியரங்குடன் நடந்த கவிஞர் இன்குலாப் நினைவேந்தல்

இன்குலாப் முதலாம் ஆண்டு நினைவு நாளை இன்குலாப் அறக்கட்டளை சார்பில் இன்குலாப் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்களை ஆய்வு செய்து பரப்பும் நாளாக சென்னையில் சிறப்புடன் நடத்தியது. சங்க இலக்கியங்களை கட்டுடைத்து அதில் அடங்கியுள்ள பெண் விடுதலைக் கருத்துகளை நாடகங்களாக கவிஞர் இன்குலாப் எழுதினார். அதில் ஒன்று அவ்வை நாடகம். சங்க இலக்கியங் களில் அவ்வை என்ற பெயரில் பல பெண் புலவர்கள் இருந்தாலும், வயது முதிர்ந்த தோற்றத்தில் அவ்வையார் என்ற ஒருவரை மட்டுமே முன் நிறுத்தியது இலக்கிய உலகம். ஆணாதிக்கத்தை நியாயப் படுத்தும் அந்த அவ்வையாரின் குரலை ஏனைய அவ்வைகளின் கருத்தாக திணிக்கப்பட்டது. அதியமானுடன் நட்பும் தோழமையும் கொண்டிருந்த அவ்வை ஒரு சுதந்திரப் பெண் என்பதை முன் வைத்து கவிஞர் இன்குலாப் தீட்டியது அவ்வை நாடகம். 2006ஆம் ஆண்டில் மரப்பாச்சி குழுவினர் அ.மங்கை நெறியாள்கையில் அரங்கேறியது அவ்வை. மீண்டும் இன்குலாப் நினைவாக  கடந்த டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் ‘ஸ்பேசஸ்’ அரங்கில்...

மதவெறிக்குப் பலியான ஜோயல் பிரகாஷ் மரணத்துக்கு நீதி கேட்டு வேலூரில் ஆர்ப்பாட்டம்

கடந்த அக்டோபரில் இந்து மதவெறி போராசிரியரின் ஜாதி, மத வெறுப்பு துன்புறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்ட சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் பிரகாஷ்  மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு 21.11.2017 காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஜோயல் பிரகாஷ் தாய் மற்றும் தந்தை தன் மகனின் மரணத்திற்கு நீதிக் கேட்டு கண்ணீர் மல்க செய்தியாளர் சந்திப்பில் பேசினார்கள். பிரகாஷ் தற்கொலைக்குக் காரணமான கவின் கலைக் கல்லூரி துறைத் தலைவர் இரவிக்குமார் மீது கொலை முயற்சி வழக்கு தொடர வேண்டும் என்றும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வி.சி.க. தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன், இயக்குநர் ரஞ்சித், நடிகர் சத்தியராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் வலியுறுத்தினர். நிகழ்வில் ஜோயல் பிரகாஷ் பெற்றோர் தங்கள் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு பேசியது பார்வையாளர்...

“மதம் சாராதவனாய் வாழ விரும்பினேன்!  மதம் சாராதவனாய் மடியவும் விரும்புகிறேன்!”

“மதம் சாராதவனாய் வாழ விரும்பினேன்! மதம் சாராதவனாய் மடியவும் விரும்புகிறேன்!”

மக்கள் கவிஞர் இன்குலாப் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முடிவெய்தினார். 2009ஆம் ஆண்டிலேயே தனது மரணம் குறித்து அவர் கைப்பட எழுதிய கடிதம் இது. என் தன் நினைவோடு எழுதும் கடிதம் எப்பொழுதும் இறப்பு நேரலாம் என்ற சூழலில் என் இறுதி விருப்பங்களைப் பதிவு செய்கிறேன். என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, தோழமைக்குரிய நண்பர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் இது. என்னை முழுமையாக என் மக்களுக்கு உரித்தாக்க விரும்பினேன். ஆனால் நேர்ந்த வாழ்க்கை அதற்கான முழு வாய்ப்பையும் தரவில்லை. இறப்பு என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத கூறு. இறப்புக்குப் பிறகு மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்ந்த மட்டும் சமயச் சார்பற்றவனாகவே வாழ்ந்தேன். அதனால் எல்லார்க்குமானவனாக என்னை உணர முடிந்தது. உடலால் வாழ்ந்த இவ் வாழ்க்கை இறப்போடு முடி கிறது. மக்களுக்கு முழுமையாக உரித் தாக்கும் வண்ணமே என் சிந்தனை யும் செயலும் அமைய வேண்டு மென விரும்பிய போதிலும்,...

தமிழக தேர்வாணைய அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தமிழ்நாட்டில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலை தரவேண்டும்; தமிழ் படித்தவர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை தரவேண்டும்; தேர்வாணைய அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. தமிழக அரசு தேர்வாணையத்தை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் 02.12.2017 மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. தமிழக அரசு கடந்த ஆண்டு 2016 நவம்பர் மாதம் அறிவித்த தேர்வாணைய அறிக்கையை திரும்ப பெறக் கோரி கண்டன முழக்கமிட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் கொளத்தூர் மணி, இளந்தமிழகம் செந்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் கரு.அண்ணாமலை, மே 17 இயக்கம் பிரவீன்குமார், மனிதி இயக்கத்தை சார்ந்த செல்வி, எஸ்.டி.பி.அய். தெஹலான் (பாகவி, அம்பேத்கர் மனித நீதி இயக்கம்), பாண்டியராஜன், தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட தோழர்கள் தமிழக அரசு தமிழக இளைஞர்களின் வேலை...

சட்ட எரிப்பு நாளில் பெயர் சூட்டல்

தோழர் லோகு – மீனா இணையர், பெண் குழந்தைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘கனல்விழி’ என்று பெயர் சூட்டினார். கூட்டத்தில் கழகத்துக்கு நன்கொடையாக ரூ.1000/- தோழர்கள் கழகத் தலைவரிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 30112017 இதழ்

“நிமிர்வோம்” வாசிப்பு வட்டம்

“நிமிர்வோம்” வாசிப்பு வட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டத்தின் சார்பாக கழக மாத இதழான “நிமிர்வோம்” வாசிப்பு வட்டம் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  தலைமையில் 19.11.2017 மாலை 6 மணிக்கு கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். வாசிப்பு வட்டத்தில் ‘நிமிர்வோம்’ ஜனவரி இதழ் குறித்து தோழர்கள் கார்த்திக் இராசேந்திரன், மதன்குமார், ராஜு, பிரகாஷ் குமார்ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். கட்டுரை மீது விவாதங்களையும் முன் வைத்துப் பேசினர். கவிஞர் இராமசாமி மற்றும் ‘நிமிர்வோம்’ நிர்வாக பொறுப்பாளர் இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்) இதழின் வளர்ச்சிக்கு கருத்துகளை கூறினர். இறுதியாக, திருவல்லிக்கேணி பகுதி தலைவர் இலட்சுமணன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 30112017 இதழ்

டிசம்பர் 16இல் ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு

இடம் :                 வீரப்பன் சத்திரம், ஈரோடு மாலை 5 மணி வரவேற்புரை               :                 கவிப்பிரியா தலைமை       :                 மணிமேகலை முன்னிலை                   :                 சங்கீதா, முத்துலட்சுமி உரை : சுப்புலட்சுமி ஜெகதீசன் (முன்னாள் மத்திய இணை அமைச்சர்-தி.மு.க.) பால பாரதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஓவியா (பெண்ணிய செயல்பாட்டாளர்) திவ்ய பாரதி (ஆவணப்பட இயக்குனர்) ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) நிறைவுரை : கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் நன்றியுரை : சுமதி காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள், பறையிசையோடு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், ஈரோடு மாவட்டம் (தெற்கு) தோழர்களே! மாநாட்டுக்கு திரண்டு வாரீர்!   பெரியார் முழக்கம் 30112017 இதழ்

விடுதலைப் புலிகளின் முதல் இராணுவப் பயிற்சி முகாம் நடந்த பகுதியில் ‘மாவீரர் நினைவகம்’ அமைகிறது

புலியூரில் உணர்ச்சிப் பெருக்குடன் ‘மாவீரர் நாள்’ சேலம் மாவட்டம், கொளத்தூர் ‘தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு’ சார்பில் நவம்பர் 27ஆம் தேதி, மாவீரர் நாள் புலியூர் பிரிவில் உணர்ச்சியுடன் நடந்தது. கொளத்தூர் – புலியூர் பிரிவுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. இந்தப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் இராணுவப் பயிற்சி முகாம் 1983 முதல் 1986ஆம் ஆண்டு வரை நடந்தது. விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், வழிகாட்டுதலில் நடந்த இந்த முகாமில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்கள் பயிற்சி பெற்றனர். மேதகு பிரபாகரன் பலமுறை முகாமுக்கு வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அப்போது திராவிடர் கழகத்தில் செயல்பட்டு வந்தார். அவருக்கு உரிமையான தோட்டத்தில்தான் மூன்று ஆண்டுகள் பயிற்சிகள் நடந்தன. பெரியார்  இயக்கத் தோழர்களின் முழு ஒத்துழைப் போடு இந்த முகாம் நடந்தது. உள்ளூர் பகுதி வாழ் மக்களின்...

குடிசைப் பகுதி மக்களின் கட்டாய வெளியேற்றத்தைக் கண்டித்து முதல்வர் வீடு முற்றுகை: தோழர்கள் கைது

குடிசைப் பகுதி மக்களின் கட்டாய வெளியேற்றத்தைக் கண்டித்து முதல்வர் வீடு முற்றுகை: தோழர்கள் கைது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதிகளில் அமைந்துள்ள திடீர் நகர், மக்கீஸ் தோட்டம் பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழக அரசை கண்டித்து….. 25.11.2017 அன்று காலை 11 மணிக்கு பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த பொறுப்பாளர்கள், தென் சென்னை மாவட்டச் செய லாளர் இரா. உமாபதி, வடசென்னை மாவட்ட செயலாளர் செந்தில் (எப்.டி.எல்.), தலைவர் ஏசுகுமார், மயிலை தோழர்கள் மாரி, சுகுமார், இராவணன், சிவா, குமரேசன், ஜா. உமாபதி, மாணிக்கம், யுவராஜ், இலட்சுமணன், தேன்ராஜ் உள்ளிட்ட கழகத்தினர், தமிழ்நாடு இளைஞர்கள் இயக்கம் ராஜா, அம்பேத்கர் மக்கள் படை மதிபறையனார், இளந்தமிழகம் செந்தில், பச்சைத் தமிழகம்  மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்த தோழர்கள் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பினர். தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட...

டிசம்பர் 1, தமிழ்நாடு தேர்வாணையத்தைக் கண்டித்து மாவட்டத் தலைநகர்களில் கழகம் ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 1, தமிழ்நாடு தேர்வாணையத்தைக் கண்டித்து மாவட்டத் தலைநகர்களில் கழகம் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசே! அரசுப் பணியாளர் தேர்வாணை யமே! தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை வட நாட்டாருக்கு வாரி வழங்காதே! தமிழ்நாட்டில் 85 இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு களுக்காக காத்திருக்கும் போது தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம், 9351 மாநில அரசுப் பணிகளுக்கு – தமிழ்மொழி தெரியாவிட்டாலும் பரவாயில்லை, மனுப் போடலாம் என இந்தியா முழுமையிலிருந்தும் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. நேபாளம், பூட்டான் போன்ற அன்னிய நாட்டினரும் மனுப் போடலாம் என்றும், பணி நியமனம் பெற்று இரண்டு ஆண்டுகளில் தமிழைக் கற்றுக் கொண்டால் போதும் எனவும் கூறுகிறது அந்த அறிவிப்பு. தமிழ்மொழி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்த நிபந்தனையை இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?.  திறந்த போட்டிக்கு மட்டும்தான் இந்த அறிவிப்பு என்று தேர்வாணையம் கூறும் சமாதானத்தை எப்படி ஏற்க முடியும்?   திறந்த போட்டியிலும் தமிழ் நாட்டைச் சார்ந்த முன்னேறிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை...

ஜோயல் பிரகாஷ் மரணத்துக்கு நீதி  கேட்டு விழுப்புரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜோயல் பிரகாஷ் மரணத்துக்கு நீதி கேட்டு விழுப்புரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜோயல் பிரகாஷ் மரணத்திற்கு நீதி  கேட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 25.11.17 காலை 11 மணியளவில் வளவனூரில்  நடைபெற்றது. தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார்,  விழுப்புரம் மேற்கு மாவட்டத் தலைவர் மதியழகன்,  கடலூர் மாவட்ட செயலாளர் பாரதிதாசன்,  பெரியார் சாக்ரட்டீஸ், அமைப்பாளர் சாமிதுரை, இரவி கார்த்திகேயன், கோகுல்காந்திநாத், ஜெயக்குமார் பெரியார் தி.வி.க, பெரியார் சிந்தனையாளர் இயக்கம்  தீனா, பரத்  மற்றும் தோழர்கள்,  தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி கொள்கை பரப்பு செயலாளர் விஜி மற்றும் விழுப்புரம் அஜி மற்றும் கலைகல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர் லூசியா,  மருத்துவர் தீரன் வினோத், வனத்தாம் பாளையம் பெரியார் ஜெயரட்சகன் சிறீதர்,  பாபு,  லாஸ் பேட்டை மாணிக்கம்,  திருமுருகன், திருவண்டார் கோயில் விஜயன்,  கிருஷ்ணராஜ்,  மற்றும் மேற்கு மாவட்டதி.வி.க தோழர்கள் மற்றும் விழுப்புரம் புதுச்சேரி பகுதி தோழர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30112017...

விழுப்புரத்தில் ஜாதி ஒழிப்புப்  போராளிகளுக்கு வீர வணக்க நாள்

விழுப்புரத்தில் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க நாள்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் தலைமையில் ஜாதி ஒழிப்பிற்காக சட்ட எரிப்பு போரட்டத்தில் உயிர்நீத்த, சிறைசென்ற போராளிகள் 60 ஆம் ஆண்டு நினைவும் தமிழீழத் தலைவன் பிரபாகரன் 63 ஆவது பிறந்தநாள் நிகழ்வும் 26.11.17 காலை 10 மணியளவில்  வனத்தாம்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ஜெயரட்சகன், மாவட்ட செயலாளர் இராவண இராமன், மாவட்ட அமைப்பாளர் சிறீதர் நிவேதிதா, பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் தீனா,  பெலிக்ஸ், கிளை பொறுப்பாளர்கள் பாபு,  தமிழ், சிறீநாத், விசிக பொறுப்பாளர் தெய்வ நாயகம் மற்றும் அப்பகுதித் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30112017 இதழ்

மதுக்கூர் மைதீன் நினைவேந்தல்

மதுக்கூர் மைதீன் நினைவேந்தல்

10-11-2017 அன்று மாலை 6-00 மணியளவில், உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம், உயர்நீதி மன்றத்தில் தமிழ் – போராட்டக் குழு ஆகியவற்றின் சார்பாக, மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள இராமசுப்பு அரங்கத்தில், இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் தலைவர் மதுக்கூர் மைதீன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, உயர்நீதி மன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மீ.தா.பாண்டியனின் தலைமை யில் நடைபெற்றது. மதுக்கூர் மைதீன் படத்தை உயர்நீதி மன்றத்தில் தமிழ் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் கு.ஞா.பகத்சிங் திறந்து வைத்தார். இளந்தமிழகம் இயக்கத்தின் ரபீக் ராஜா, இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் துணைத் தலைவர் நத்தம் சேக் பரீத், மருது மக்கள் இயக்கத்தின் முத்துபாண்டி, தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் இமயம் சரவணன், வழக்குரைஞர் எழிலரசு உள்ளிட்ட பலரும் நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக உரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வளர்ந்துவரும் கூலிப்படை கலாச்சாரம், செய்தியை சேகரிக்காமல் காவல்துறையின் கருத்தையே...

குடியாத்தத்தில் அம்பேத்கர்-பெரியார்  கருத்தரங்கம்

குடியாத்தத்தில் அம்பேத்கர்-பெரியார் கருத்தரங்கம்

12-11-2017 ஞாயிறு அன்று மாலை 6.00 மணி யளவில், குடியாத்தம் அம்பேத்கர் மண்டபத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அம்பேத்கர்-பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஆசிரியர் அருணிடம் பயிற்சி பெற்ற மாணவர்களின் பறை முழக்கம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பெரியாரிய விழுது யாழினி உள்ளிட்ட பலரும், வேலூர் கற்பி பாசறை பாலா, வழக்குரைஞர் அருண், பரப்புரை செயலர் பால் பிரபாகரன் ஆகியோரும் உரையாற்றினர். கழகத் தோழர்களின் “இப்பெல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க” என்ற வீதிநாடகம் நிகழ்த்தப்பட்டது. இந்து மதவெறி துறைத் தலைவரின் ஜாதியப் பாகுபாட்டு வன்முறை காரணமாக, தன் வாழ்வை முடித்துக் கொண்ட, வேலூரைச் சேர்ந்த சென்னை, கவின்கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் (எ) பிரகாசின் படத்தை, பள்ளிகொண்டா தளபதி கிருஷ்ணசாமியுடன் பணியாற்றிய பெரியவர் மோகன்  திறந்துவைத்தார். “பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பணிகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேராசிரியர் டி.எம்.புரட்சிமணி, பெரியார்...

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்!

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்!

டிசம்பர் 1ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் தோழர்கள் மக்களிடம் விளக்கிப் பேசுவதற்கான சில குறிப்புகள். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 85 இலட்சத்துக்கும் அதிகம். ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் குறைந்த ஊதியத்தில் பணி நிரந்தரமின்றி எந்த நேரத்திலும் வேலை இழக்கும் ஆபத்துகளை தலை மேல் சுமந்து நிற்கும் இளைஞர்கள் பல இலட்சம். வளர்ச்சி நோக்கிய திட்டங்கள், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும் தொழில் திட்டங்கள் குறித்து தமிழக ஆட்சி யாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. தமிழ்நாட்டில் நடக்கும் ‘கொத்தடிமை ஆட்சியை’, மத்திய பா.ஜ.க. ஆட்சி மிரட்டி, தமிழகத்தில் தேர்தலை சந்திக்காமலேயே பினாமி ஆட்சியை நடத்தி வருகிறது. மத்திய அரசில் பிரதமர் அலுவலகத்திலிருந்தும் ஏனைய துறைகளிலிருந்தும் பா.ஜ.க.வின் நம்பிக்கைப் பெற்ற உயர் அதிகாரிகள் தமிழகத்தின் மிக முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அண்மையில் மத்திய அரசின் ‘ஆயுஷ்’ அமைச்சக அதிகாரியாக பணியாற்றிய ஓடெம்டே என்பவர், தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு,...

பெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார் சூலூர் கூட்டத்தில் உடுமலை கவுசல்யா பேச்சு

எனக்கு உரிமை படைத்த மேடையில் நிற்கும் உணர்வு எனக்கு இங்கே அதிகமாகக் கிடைக்கிறது. இந்த மேடை என்று சொல்வது திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. சாதி ஒழிப்புக்காக தூய உள்ளத்தோடு உழைக்கிறவர் களான அதுவும் கருஞ்சட்டைகளோடு நிற்கையில் கர்ப்பப்பைக்குள் நிற்பதாகவே உணர முடிகிறது. ஆம் இது எனக்கான இடம், நீங்கள் என் சொந்தங்கள் என்ற உணர்வு இயல்பாகவே வந்து விடுகிறது. சாதியைப் பாதுகாக்கும் ஐந்து சட்ட விதிகளை பெரியார் கொளுத்திய நாள் இன்று! அதன் வரலாறு , அடக்குமுறை, வீரச்சாவுகள் குறித்தெல்லாம் எனக்குப் பின்னால் தோழர்  கொளத்தூர் மணி அவர்கள் பேச இருக்கிறார். நான் புதிதாகக் கற்கத்  தொடங்கியுள்ள மாணவிதான். நானும் கற்கத்தான் இங்கே வந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த சில செய்திகளை கீற்று போன்ற இணையத்தில் படித்து கிடைத்த புரிதல்களை மட்டும் இங்கே முன் வைக்க விரும்புகிறேன். பெரியார் ஆணைக்கிணங்க சட்டத்தைக் கொளுத்திய 16 வயதே  நிரம்பிய சிறுவன்...

நவம்பர் 26இல் ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரித்து சிறையேகிய போராளிகள் நினைவு நாள் சூலூரில் சூளுரைத்தது கழகம்

1957 நவம்பர் 26இல் தமிழ்நாடு முழுதும் அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்து 6மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறையேகிய பெரியார் இயக்கத்தின் போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து சூலூரில் கழகம் பொதுக் கூட்டம் நடத்தியது. போராட்ட வரலாறுகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி விரிவாக விளக்கினார். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தொடர கழகம் சூளுரைத்தது. கோவை மாவட்டம் சூலூரில் 26.11.2017 அன்று ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்த ஜாதி ஒழிப்பு வீரர்கள் நினைவைப் போற்றும் வகையில் மாலை 6.00 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகப் பொதுக்கூட்டம் தொடங்கியது. சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில், சட்ட எரிப்பு போராளி ஆனைமலை ஏ.கே. ஆறுமுகம் முன்னிலையில் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மேட்டூர் டிகேஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் பகுத்தறிவு பறையிசையைத்  தொடர்ந்து, சட்ட எரிப்பு நாள் வீரர்களை நினைவு கூர்ந்து திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில் ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி,...

நன்கொடை

நன்கொடை

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, ‘நிமிர்வோம்’ இதழுக்கு ரூ.2000மும், ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு ரூ.1000மும் நன்கொடை வழங்கினர். பெண்ணாகரம் பரமசிவம் ரூ.500/- ‘நிமிர்வோம்’ இதழுக்கு வழங்கினார். பாரூக் வழக்கு நிதி : சேலம் கிழக்கு மாவட்டத்தில் நடந்த தோழர்கள் சந்திப்பின் போது ஏற்காடு  பெருமாள் பிரபாகரன்,  பாரூக் குடும்ப நிதியாக 10,000/-வழங்கினார்கள். (நன்றியுடன் பெற்றுக் கொண் டோம்-ஆர்) பெரியார் முழக்கம் 23112017 இதழ்

கோகுல்-பிரேமா இணையேற்பு விழா

கோகுல்-பிரேமா இணையேற்பு விழா

12-11-2017 அன்று காலை 11-00 மணிக்கு, சேலம், சிவதாபுரம் மாணிக்கம் திருமண மண்டபத்தில், தோழர் கோகுலக் கண்ணனுக்கும், கழகப் பொறுப்பாளர் ஏற்காடு பெருமாளின் அக்கா மகள் பிரேமாவுக்கும், ஜாதி, தாலி, சடங்கு மறுப்பு இணையேற்பு விழாவை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வீரபாண்டி ஆ. இராசா தலைமையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கில் கழகத் தோழர்கள் அரங்கு நிரம்பி வழியும் வண்ணம் திரளாகத் திரண் டிருந்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இளம்பிள்ளை கழகத் தோழர்கள் மணவிழாப் பரிசாக ஒரு மோட்டார்  சைக்கிளை வழங்கினர். கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு மணமகன் கோகுலக்கண்ணன் ரூ.10,000/- நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 23112017 இதழ்