Category: ஈரோடு தெற்கு

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

சேலம் : மேட்டூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” பொதுக்கூட்டம் 06.04.2024 அன்று மேட்டூர் சின்ன பார்க் திடலில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் தலைமை தாங்கினார், கீ.கோ.தேன்மொழி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பாடகர் கோவன் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் செல்வேந்திரனின் இயக்கத்தில் “கலகக்காரன்” நையாண்டி தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ம.க.இ.க பாடகர் கோவன் ஆகியோர் மோடி ஆட்சி தொடரலாமா? என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேட்டூர் நகர தி.வி.க.செயலாளர் சு.குமரப்பா நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத்...

ஈரோடு இரத்தினசாமியின் தாயார் காலமானார்!

ஈரோடு இரத்தினசாமியின் தாயார் காலமானார்!

ஈரோடு : கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமியின் தாயார் மருதாம்பாள் (வயது 90) 08.04.2024 அன்று வயது மூப்பின் காரணமாக முடிவெய்தினார். ஈரோடு முத்தூர் கார்வழி ரைஸ்மில் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் 09.04.2024 அன்று அம்மையாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

ஈரோடு, ஆத்தூரில் தேர்தல் பரப்புரை

ஈரோடு, ஆத்தூரில் தேர்தல் பரப்புரை

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைக்கல் மேடு, மணிக்கூண்டு, உடையம்பட்டி, நரசிங்கபுரம், முல்லைவாடி, ராஜேந்திரா பேக்கரி உள்ளிட்ட ஆறு இடங்களில் பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கி மார்ச் 15 வரை நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பெரியார் விழுதுகள் ரிஷிவிந்தன் – அரவிந்தன் ஆகியோரின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் மகேந்திரன் – கணபதி குழுவின் அரசியல் நையாண்டி நடைபெற்றது. செல்வராஜ், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஈரோடு : ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திராவிடர் விடுதலைக் கழகமும் சமூகநீதி கூட்டமைப்பும்...

கோவை, சேலம், சென்னை வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

கோவை, சேலம், சென்னை வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

ஈரோடு : இந்தியா கூட்டணியின் ஈரோடு நாடாளு மன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கே.இ.பிரகாஷ் 22.03.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கோவை : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை 26.03.2024 அன்று கோவை மாநகர மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன், மாநகரத் தலைவர் நிர்மல் குமார், மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், பொங்கலூர் கார்த்தி, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். சேலம் : சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை 27.03.2024 அன்று சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும்...

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற கழகத் தலைமைக் குழுவில், “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” என்ற முழக்கத்தோடு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கழகத்தின் பரப்புரைக் கூட்டங்கள் பொதுமக்களின் வரவேற்போடு எழுச்சியோடு தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை: சென்னை மாவட்டத்தின் முதல் பரப்புரைக் கூட்டம் 10.02.2024 அன்று வேளச்சேரி காந்தி சாலையில் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் எட்வின் பிரபாகரன் தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். பாடகர் கோவன் பங்கேற்ற ம.க.இ.க கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கழகத் தோழர் பேரன்பு ராப் பாடல்கள் பாடினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் இரா.உமா, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ஆகியோர் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் பேராபத்துக்களை மக்களிடம் விளக்கிப் பேசினர். திராவிட முன்னேற்றக்...

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில்  மக்கள்  பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் மக்கள் பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர்: ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் மங்கலம் நான்கு வழி சந்திப்பு, சுல்தான் பேட்டை, பெரியாண்டிபாளையம் பிரிவு, குமரன் கல்லூரி, ஊத்துக்குளி ஆர்.எஸ், கூழிபாளையம், மன்னரை, காங்கேயம் பேருந்து நிலையம், நத்தக்காடையூர், படியூர், பொங்கலூர், அருள்புரம், வீரபாண்டி பிரிவு, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 21,22 ஆகிய தேதிகளில் பல்லடம் பகுதிகளுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், வடுகபாளையம், கேத்தனூர், காமநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், காரணம்பேட்டை, அனுப்பட்டி, எம்.ஜி.ஆர் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 22 அன்று பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் 50வது தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அதனையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சுப்பிரமணியம், திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு ஒன்றிய தலைவர் முஜிபுர் ரகுமான், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர...

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டங்கள் சென்னை மாவட்டக் கழகம் சார்பாக இரண்டாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது பின்வருமாறு :- ஜுலை 15-ஆம் தேதியன்று ராயப்பேட்டை இலாயிட்ஸ் காலனி மற்றும் வி.எம்.தெருவிலும், ஜுலை 17-ஆம் தேதியன்று இராயபேட்டை பகுதிகளில் உள்ள கொலைகாரப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பெருமாள் கோயில் வீதியிலும், ஜுலை 18-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் NKT பள்ளி அருகில் மற்றும் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் சாலையிலும், ஜுலை 19-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் இஸ்ஸபா தெரு மற்றும் ஷேக் தாவூத் தெருவிலும் ஜூலை 20-ஆம் தேதியன்று மீசார்பேட்டை மார்கெட் மற்றும் ஜாம் பஜார் சிட்டிபாபு சாலையிலும், ஜுலை 21-ஆம் தேதியன்று திருவல்லிக்கேணி மாணிக்கவாசகம் தெரு மற்றும் தேவராஜ் தெருவிலும் ஜுலை 22-ஆம் தேதியன்று ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி அருகில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள மக்கிஸ் கார்டனிலும் நடைபெற்றது. நாத்திகன் – உமாபதி குழுவின் அரசியல்...

தீண்டாமைப் பட்டியல் : ஈரோடு தெற்கு மாவட்டம் களமிறங்குகிறது

தீண்டாமைப் பட்டியல் : ஈரோடு தெற்கு மாவட்டம் களமிறங்குகிறது

ஈரோடு தெற்கு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் மே 26, மாலை 6 மணியளவில் மாவட்டச் செயலாளர் எழிலன் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏப்ரல் 29.30 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு மிக எழுச்சியோடு நடைபெற உழைத்திட்ட அனைத்து தோழர்களுக்கும் கூட்டம் பாராட்டுதலையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. மே 21-இல் சேலத்தில் கூடிய தலைமை செயலவை கூட்டத்தில் தலைமை அறிவித்த வைக்கம் போராட்டம் இன்னும் முடியவில்லை  . இன்றும் தொடரும் தீண்டாமையை கணக்கெடுக்கும் பணியை இரண்டு குழுவாக பிரிந்து ஜூன் 04,05 ஆகிய தேதிகளில் கிராமப்புரங்களில் நிலவும் தீண்டாமையை கணக்கெடுத்து தலைமைக்கு தெரிவிப்பது. “எது திராவிடம்? எது சனாதனம்?” என்ற தலைப்பில் ஈரோடு புறநகர் பகுதிகளில் 25 கூட்டங்களும், மாநகரப் பகுதிகளில் 25 கூட்டம் என 50 கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தெருமுனைக் கூட்டங்களின் நிறைவுக் கூட்டம் ஈரோடு...

ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் மாநாட்டு நிதி!

ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் மாநாட்டு நிதி!

முதல் தவணையாக கழகத் தலைவரிடம் வழங்கினார்கள் ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக வருகின்ற  ஏப்ரல் 29, 30 சேலத்தில் நடைபெறும் இது தமிழ்நாடு! இளைய தலைமுறை யின் எச்சரிக்கை மாநாட்டிற்காக கழகத் தோழர்கள் ஈரோடு வடக்கு மாவட்டத் திற்கு உட்பட்ட கோபி, கொளப்பலூர், காசிபாளையம், அளுக்குளி, அந்தியூர், குருவரெட்டியூர், பவானி ஆகிய பகுதிகளில் கழக ஆதராவாளர்களிடம் துண்டறிக்கை அளித்தல் மற்றும் நன்கொடை திரட்டும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டனர்.  மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் மாவட்ட தலைவர் நாத்திகசோதி, மாவட்ட செயலாளர் எலத்தூர் செல்வக்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இரமேசு, அழகிரி, கிருஷ்ணமூர்த்தி, இராவணன், அருளானந்தம், வேணுகோபால், வீரகார்த்திக், சுந்தரம், வினோத், வேலுச்சாமி, கருப்பணன், சுப்பிரமணியம், ரகுநாதன், மூர்த்தி, நிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடை திரட்டும் பணியில் இணைந்து செயல்பட்டனர். அவ்வாறு நன்கொடையாக பெறப்பட்ட மாநாட்டு நிதியை முதல் தவணையாக ரூ. 1,00,000 (ஒரு லட்சம்...

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

ஏப். 29, 30 தேதிகளில் கழக மாநாட்டுப் பணிகளில் கழகச் செயல் வீரர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளனர். கோவை : கோவை மாவட்டக் கழகத்தினர் ஏப்ரல் 8-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வ.உ.சி மைதானத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டலக்குழுத் தலைவர் கதிர்வேல், மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் நா.மாலதி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.ஆ.ரவி, வடவள்ளி சண்முகசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்கள். கலந்து கொண்டோர்: தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருட்டிணன், வெங்கட், மாதவன் சங்கர், துளசி, நிலா. ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது. பொள்ளாச்சி : கழக மாநாட்டு விளக்க தெருமுனைக்...

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய “பெண்கள் சந்திப்பு” நிகழ்வு 5.2.2023 ஞாயிறு அன்று ஈரோடு பிரியாணிபாளையம் உணவக அரங்கில் நடைபெற்றது. ஈரோடு மணிமேகலை நிகழ்விற்கு தலைமையேற்று சுவையான கவிதை நடையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திருப்பூர் கார்த்திகா வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்கவுரையாற்றினார். பெரியார் தனது இயக்கத்தில் பெண்களுக்கு அளித்த முக்கியத்துவம் பற்றியும் பெரியார் நடத்திய மாநாடுகளில் தொடக்க உரையாகவோ கொடியேற்றி தொடங்கி வைப்பவராகவோ கட்டாயம் ஒரு பெண் தோழர் இருக்கும் படி பார்த்துக் கொண்டார் என்பதையும் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் இயக்கங்கள் தங்களது பணியை சிறப்பாக செய்ய முடியும் என்பதை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து ‘அம்பேத்கரும் பெரியாரும்’ என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, ‘மூடநம்பிக்கைகளை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, ‘பெண் கல்வியும் தமிழ்நாடும்’ என்ற தலைப்பில் கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர்...

மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள் எழுச்சி நடை சேலம் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள், கழக ஏட்டுக்கு  ரூ. 2,48,500 சந்தாத் தொகை

மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள் எழுச்சி நடை சேலம் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள், கழக ஏட்டுக்கு  ரூ. 2,48,500 சந்தாத் தொகை

சேலம் : சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.01.2023 வியாழன் காலை 10.00 மணியளவில் கொளத்தூர் எஸ்.எஸ். மஹாலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.  கலந்துரையாடல் கூட்டம் கடவுள் மறுப்பு – ஆத்மா மறுப்புடன் தொடங்கியது. கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில் சேலம் மேற்கு மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டிற்கான ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தா இதுவரை 475 ஆண்டு சந்தாக்களும், 84 ஐந்தாண்டு சந்தாக்களும் பெறப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள சந்தாக்களை விரைவில் முடித்து கொடுக்க வேண்டுமாய் தோழர்களிடம் கேட்டுக் கொண்டார். (கிழக்கு மாவட்ட சந்தாக்களையும் சேர்த்து ரூ.2,48,500/- வழங்கப்பட்டது) தொடர்ந்து பேசிய கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், “தமிழ்நாடு அரசு நமது இயக்க செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறதென்றும், தோழர்கள் அனைவரும் நமது இயக்க ஏடான (புரட்சிப் பெரியார் முழக்க’த்தை முழுமையாகப் படிக்க...

ஈரோடு மாநகராட்சியில் யாக சாலைக் கூடமா? அகற்றக் கோரி கழகம் ஆர்ப்பாட்டம்: கைது

ஈரோடு மாநகராட்சியில் யாக சாலைக் கூடமா? அகற்றக் கோரி கழகம் ஆர்ப்பாட்டம்: கைது

ஈரோட்டில் சட்டவிரோத வழிபாட்டுக் கூடத்தை (யாகசாலை) அகற்றும் போராட்டம் ஈரோடு மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  01.12.22 வியாழன் காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான அரசு வளாகத்தினுள் சட்ட விரோதமாகவும், இந்திய அரசியல் சட்ட சாசனம் கூறும் மதசார்பற்றத் தன்மைக்கு எதிராகவும், தமிழ்நாட்டு அரசின் ஆணைகளை நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுக் கூடத்தை (யாகசாலை) பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைத்து அங்கு மத விழா நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த சட்ட விரோத யாகசாலையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.  மனு அளித்த பின்பும் அந்த துறை சார்ந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத...

திமிர் பேச்சு கண்ணனை கைது செய்: கழகம் ஆர்ப்பாட்டம்

திமிர் பேச்சு கண்ணனை கைது செய்: கழகம் ஆர்ப்பாட்டம்

திருவரங்கத்தில் உள்ள பெரியாரின் சிலையை அகற்ற வேண்டும் என பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை கைது செய்யக் கோரி 10.08.2022  அன்று காலை 10.30 மணி அளவில் ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புகள் பங்குபெற்றன. கண்டன உரையாற்றியவர்கள்: 1. நாத்திகஜோதி –  ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர். 2. சித்திக்  – த.மு.மு.க; 3. சிந்தனைச் செல்வன் – தமிழ்ப் புலிகள் கட்சி; வீரகோவிந்தன் – ஆதித் தமிழர் பேரவை; 5. சலீம் – மனிதநேய மக்கள் கட்சி; வேங்கை பொன்னுசாமி – தமிழ்ப் புலிகள் கட்சி; 7. நிலவன் – நீரோடை; கண.குறிஞ்சி – ஞருஊடு; 9. திருப்பூர் துரைசாமி – பொருளாளர் தி.வி.க.; இராம.இளங்கோவன் – வெளியீட்டுச்...

மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்

மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்

ஈரோடு வெள்ளோட்டில் மகிழ் உணவகத்தை 17.07.2022 ஞாயிறு அன்று  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  திறந்து வைத்தார். பெயர்ப் பலகையை திமுக வின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்  வி.சி. சந்திரகுமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக மாநகர பகுதி செயலாளர் அக்னி சந்திரன், கொங்கு இளைஞர் பேரவை லிங்கேஸ்வரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 21072022 இதழ்

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

ஈரோடு மண்டல மாநாடு – பள்ளிப்பாளை யத்தில் எழுச்சியுடன் நடந்தது. நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை விளக்கி 33 தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து மண்டல மாநாடு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக 8 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக 25 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், நாமக்கல் மாவட்டம் சார்பாக 10 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும் நடைபெற்று முடிந்திருந்தன. தெருமுனைக் கூட்டங்களில், மாவட்ட இயக்க முன்னோடிகளும் ,திரளான தோழர்களும், தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில் மண்டல மாநாடு : ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாடு 09.05.22 திங்கள் மாலை 5 மணிக்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு திடலில் தொடங்கியது. மாநாட்டையொட்டி பள்ளிபாளையம் நகர் முழுவதும் சுவரொட்டிகளும்...

திருப்பூர்-ஈரோடு மாவட்டங்களில் திராவிட மாடல் விளக்கம்

திருப்பூர்-ஈரோடு மாவட்டங்களில் திராவிட மாடல் விளக்கம்

திருப்பூரில் தெருமுனை கூட்டங்கள் :  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு திருப்பூரில் தெருமுனைக் கூட்டங்கள் 01.05.22 அன்று காலை 11 மணியளவில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலை அருகிலிருந்து துவங்கியது. நிகழ்வு பெரியார் பிஞ்சு யாழினி மற்றும் து.சோ.பிரபாகர் ஆகியோரின் பகுத்தறிவு பாடல்களுடன் துவங்கியது. மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு தெருமுனை கூட்டத்தில் துவக்க நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மதிப்பிற்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், தெருமுனைக் கூட்டங்களை துவக்கி வைத்து தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி குறித்தும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சி குறித்தும் சிறப்பானதொரு கருத்துரையை வழங்கினார். கழகப் பொருளாளர் துரைசாமி, தெருமுனை கூட்டங்களின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர்...

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை இயக்கங்கள் தொடங்கி எழுச்சி நடைபோட்டு வருகின்றது. சென்னை : முதல் நாள் தெருமுனைக் கூட்டம் : மாநில உரிமையைப் பறிக்கும், கல்வி உரிமையைத் தடுக்கும், மதவெறியைத் திணிக்கும் பாஜகவை எதிர்த்து, தமிழ்நாடு அரசின் ‘திராவிட மாடல்’-அய் ஆதரித்து, நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” மண்டல மாநாட்டை விளக்கி, தெருமுனைப் பிரச்சாரம், சென்னை இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில், (19.04.2022 மாலை 5:30 மணிக்கு மீர்சாகிப் பேட்டை மார்கெட் பகுதியில் 119ஆவது வட்ட கவுன்சிலர் திமுக கமலா செழியன் தொடங்கி வைத்தார். அடுத்ததாக அய்ஸ்ஹவூஸ்ஷேக் தாவூத் தெரு, இறுதியாக அய்ஸ்ஹவூஸ்கிருஷ்ணாம்பேட்டை பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி, பிரகாசு, ஜெய பிரகாசு, தேன்மொழி ஆகியோர் மக்களிடம்  ‘திராவிட மாடல்’-அய் ஏன் ஆதரிக்க வேண்டும்...

செயலவைக்கு உதவியோருக்கு நன்றி!

செயலவைக்கு உதவியோருக்கு நன்றி!

தலைமைக்குழு செயலவை நிகழ்ச்சிகளை அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி முன்னின்று ஒருங்கிணைத்தார். அவருடன் ஈரோடு மாவட்டத் தோழர்கள் இணைந்து பணியாற்றினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ரூ.10,000; ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி ரூ.5,000,  ஈரோடு சீனிவாசன் ரூ.5000, பொறியாளர் அன்பு செல்வன் ரூ.10,000 ஆகியோர் நன்கொடை வழங்கினர். பிரியாணிபாளையம் ஓட்டல் உரிமையாளரும் கரூர் மாவட்ட கழக முன்னாள் மாவட்ட தலைவருமான பாபு, தலைமைக் குழுவுக்கு இடம் வழங்கி மிகக் குறைந்த விலைச் சலுகையில் இரு நாளும் பிரியாணி உணவு வாங்கினார். சென்னிமலை கழகத் தோழர் ஜோதி ரவி 15 கிலோ இறைச்சியையும், ‘அன்பு மிக்சர்’ உரிமையாளர் அனைவருக்கும் சிற்றுண்டிகளையும் தின்பண்டங் களையும் வழங்கினார். கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் செயலவைக் கூட்டம் இலவசமாக நடத்திக் கொள்ள அனுமதி வழங்கினர்.  அனைவருக்கும் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி நன்றி தெரிவித்துக் கொள்கிறார். பெரியார் முழக்கம் 07042022 இதழ்

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாதன் 95ஆவது அகவை நாள் விழா

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாதன் 95ஆவது அகவை நாள் விழா

திவிக ஈரோடு தெற்கு மாவட்ட ஆலோசகரும், பெரியாரின் பெருந் தொண்டரும், பெரியார் விருதாளருமான இனியன் பத்மநாதன் 95 ஆவது அகவை நாள் விழா, திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக 06.03.2022 ஞாயிறன்று மகிழ்வும், நெகிழ்வும் சூழ கொண்டாடப்பட்டது. விழாவின் வரவேற்புரை யை மாவட்ட அமைப்பாளர் பெ.கிருஷ்ணமூர்த்தி வழங்க கழகத்தின் மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் இதுபோன்ற நிகழ்வின் அவசியத்தையும், மூத்த கழகச் செயல்பாட்டாளர்களை அடையாளங்கண்டு அவர்களை போற்ற வேண்டியது பற்றியும் உரையின் வழியே பகிர்ந்து கொண்டார்கள். மாவட்டச் செயலாளர் யாழ் எழிலன், ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நாத்திகஜோதி, வேணுகோபால், வேல்முருகன், ராசிபுரம் பிடல் சேகுவேரா, சுமதி, விருதுநகர் செந்தில், கடலூர் போதி சத்வா, திருப்பூர் தனபால், திமுக தொழிற் சங்கத்தைச் சார்ந்த இராவணன் உள்ளிட்ட பிற மாவட்டக் கழகத் தோழர்களும் வருகை தந்து இனியன்...

‘உண்ணாவிரதத்தை’ எதிர்த்து ‘உண்ணும் விருந்து’ பா.ஜ.க. உண்ணாவிரத மிரட்டலுக்கு ஈரோடு (கிழக்கு) மாவட்டக் கழகம் பதிலடி

‘உண்ணாவிரதத்தை’ எதிர்த்து ‘உண்ணும் விருந்து’ பா.ஜ.க. உண்ணாவிரத மிரட்டலுக்கு ஈரோடு (கிழக்கு) மாவட்டக் கழகம் பதிலடி

வாரணாசியில் காசி விசுவநாதன் கோயில் வாசலில் பங்கேற்றுப் பேசிய மோடியின் பேச்சை ஈரோடு கொடுமுடி கோவிலுக்குள் திரையிட்டுக் காட்ட வற்புறுத்திய பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத பிரிவுகளின் கோரிக்கைக்கு இடம் கொடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்ச்சியாக பணி செய்ய விடாமல் பா.ஜ.க.வினர் தடுத்து வந்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேசுவரர் கோயிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதாக செயல் அலுவலர் உள்பட சிலர் மீது பாஜகவினர் புகார் அளித்தனர். இந்நிலையில் செயல்அலுவலர் ரமேஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாஜகவைச் சேர்ந்த சரஸ்வதி உள்பட சிலர் மீது புகார் தெரிவித்து கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதற்கு எதிர்வினையாக பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், ஆகம விதிகளுக்கு எதிராகச் செயல்பட்ட செயல்அலுவலர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் 26 ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் எனவும், அதற்குபிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில தலைவர்...

ஈரோடு கொடுமுடி கோவில் பகுதியில் கழக நடவடிக்கை

ஈரோடு கொடுமுடி கோவில் பகுதியில் கழக நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் ஊழியர்கள் மீதும், அலுவலகர்களின் மீதும் தொடர்ச்சியாகப் போலியான புகார்களைத் தந்தும்.. பொய்யான குற்றாச்சாட்டுகளை அவர்கள்மேல் சுமத்தியும்.. ஓர் இழிவான அரசியலைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது பாஜக /இந்து மக்கள் கட்சி /இந்து முன்னனி மற்றும் அதன் துணை அமைப்புகள். இவர்களின் இந்த இழிவான அரசியலின் தொடர் நிகழ்வாக, நாளை கொடுமுடி மகுடேஷ்வரர் கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து உண்ணா விரதம் இருக்கப் போவதாக பாஜக கூடாரம் அறிவித்திருக்கிறது. போலியான குற்றச்சாட்டுகளின் மூலம் கோவில் பணியாளர்களுக்கும், அறநிலையத்துறைக்கும், அப்பகுதியில் வசிக்கிற மக்களுக்கும், வழிபாட்டுக்கு வந்து செல்கிறப் பயணிகளுக்கும் அநாவசியமான தொந்தரவுகளையும், இன்னல்களையும் ஏற்படுத்தும் முகமாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாஜக கூடாரச் சங்கிகள் அறிவித்திருக்கின்றனர். இவர்களின் இந்த தொடர்ச்சியானப் பொய் பிரச்சாரங்களை முறியடிப்பதும், கோவில் பணியாளர்களும் அப்பகுதியைச் சார்ந்த மக்களும் ஓர் சுமூகமானச் சூழலுக்குள் வாழ்வதை தொடரச் செய்வதும் பெரியார் தொண்டர்களின் கடமையாகும். எனவே, பாஜக கூடாரத்தின்...

புத்தெழுச்சித் தந்த ஈரோடு தெற்கு மாவட்டத் தோழர்கள் சந்திப்பு

புத்தெழுச்சித் தந்த ஈரோடு தெற்கு மாவட்டத் தோழர்கள் சந்திப்பு

12.12.2021 ஞாயிறு அன்று காலை 11.00 மணியளவில் ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுடனான தலைமைக் கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் சித்தோடு பகுதியில் உள்ள மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் எழிலன் சுந்தரம் தலைமை வகித்தார். ஆசிரியர் ப.சிவக்குமார் கடவுள் மறுப்பு கூற நிகழ்வு தொடங்கியது. நிகழ்வின் தொடக்க வுரையாக கழக அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அனைத்து தோழர்களும் தங்கள் கருந்துகளை தெரிவித்தனர். ‘புரட்சி பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு, கழக செயல்பாட்டினை வீரியப்படுத்துவது, புதிய தோழர்களை / இளைஞர்களை உருவாக்கி, பெரியாரியல் சித்தாந்தத்தைப் பயிற்றுவித்து களத்தில் செயல்பட வைப்பது போன்றவைக் குறித்து கருந்து தெரிவித்து விவாதித்தனர். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி கிராமபிரச்சாரம் கொண்டு செல்வது குறித்தும் சிக்கல்கள் வராமல் பிரச்சாரம் செய்திட ஆலோசனை வழங்கினார். நிறைவாக கழக...

ஈரோடு சித்தோட்டில் கழகம் எடுத்த ஜாதி மறுப்பு இணையர் சந்திப்பு; கருத்தரங்கு

ஈரோடு சித்தோட்டில் கழகம் எடுத்த ஜாதி மறுப்பு இணையர் சந்திப்பு; கருத்தரங்கு

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக நவம்பர் 26 அன்று சட்ட எரிப்புப் போராட்டம் -ஜாதி ஒழிப்பு ஈகியர் கருத்தரங்கு, ஜாதி மறுப்பு இணையர்கள் சந்திப்பு மற்றும் மாவட்ட கழக அலுவலகம் திறப்பு ஆகிய மூன்று நிகழ்வுகள் சித்தோட்டில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வுக்கு கழகத்தின்  அமைப்புச் செயலாளர்  ப. இரத்தினசாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பெ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரைக்குப்பின் மாநில பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் உரையைத் தொடர்ந்து,  மூத்த வழக்கறிஞர் ப பா. மோகன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), திராவிடர் விடுதலைக் கழகத்துக்கான மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்து, அறிவியல், பொதுவுடைமைச் சித்தாந்தம், பெரியாரியம் ஆகியவனப் பற்றிய செய்திகளை முன் வைத்து உரையாற்றினார். இறுதியாக கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, வரலாற்றுச் செய்திகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் யாழ். எழிலன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல், திருப்பூர்,...

ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கழகத்தினர் நடத்திய ‘இல்ல சந்திப்பு’

ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கழகத்தினர் நடத்திய ‘இல்ல சந்திப்பு’

திவிக ஈரோடு தெற்கு மாவட்டத் தோழர்களின் இல்ல சந்திப்பு 26.09.2021 காலை 9:30 மணிக்கு ஆரம்பமானது. முதல் சந்திப்பு  ஆசிரியர் சிவக்குமார்  இல்லத்தில் தொடங்கியது. காலை உணவு அருந்தியபடியே தோழர்கள் உரையாடினர். பிறகு சி.எம். நகர் பிரபு இல்லம், சித்தோடு கமலக்கண்ணன் இல்லம், முன்னாள் மாவட்டச் செய லாளர் கு. சண்முகப்பிரியன் இல்லத்தில் தோழரின் உடல் நலம் குறித்த விசாரிப்பும் , உரையாடலுமாக சந்திப்பு நிகழ்ந்தது. பிறகு பெருமாள் மலை ராசண்ணன் இல்லத்திலும், கொங்கம்பாளையம் அருள் இல்லத்திலும், நசியனூர் குமார் இல்லத்திலும் சந்தித்து உரையாடினர். தொடர்ந்து செம்மாம்பாளையம்  கணேஷ் இல்லத்திலும், ரங்கம்பாளையம் கிருஷ்ணன்-மணிமேகலை இல்லத்திலும், அதே பகுதியில் வசிக்கும் விஜயரத்தினம்  கடையில் தோழர்களின் முதல் கட்ட சந்திப்பும், உரையாடலும் இனிதே நிறைவு பெற்றது. ஒவ்வொரு தோழர்களின் இல்லத்திலும் இனிப்புகளும், பலகாரமும், பழங்கள், பழச்சாறு, தேநீரென தோழமையும் அன்புமான உபசரிப்பிலும் கழகத்தின் அடுத்த கட்ட பணிகளுக்கான திட்டமிடலும் என பயனுள்ள சந்திப்பாகவும், கழகப்...

தமிழ்நாட்டு தாளவாடியில் கன்னடர் வெறியாட்டத்தைக் கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டு தாளவாடியில் கன்னடர் வெறியாட்டத்தைக் கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவன் நடத்தும் கன்னட சலுவாலியா அமைப்பைச் சேர்ந்த வர்கள் தமிழ்நாட்டிற் குள் நுழைந்து தாளவாடி கன்னடர்களுக்கே சொந்தம் என்று முழக்க மிட்டுக் கொண்டே, ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கடந்த 10.01.2021 அன்று தமிழில் எழுதப்பட்ட தமிழக அரசின் நெடுஞ்சாலை தகவல் பெயர்ப் பலகைகளை அடித்து உடைத்தெறிந்து தமிழ் எழுத்துக்களைக் காலில் போட்டு மிதித்து வெறியாட்டம் நடத்தியுள்ளனர். இது தமிழ்நாட்டு அரசு சொத்துக்களைச் சேதப்படுத்தியதும், தமிழர் கன்னடரிடையே வன்முறை மோதலைத் தூண்டி சமூக அமைதியை சீர்குலைக்கும் வெறிச் செயல் ஆகும். அத்தோடு நின்றுவிடாமல் மீண்டும் இரண்டாவது  முறையாக தாளவாடி அருகே பைனாபுரம் எனும் இடத்தில் வாட்டாள் நாகராஜ் கும்பல் நுழைந்து  தமிழக அரசின் அறிவிப்புப் பலகைகளை அடித்து நொறுக்கி வெறியாட்டம் போட்டுள்ளது. தாளவாடி கன்னடர்க்கே சொந்தம் என்று அங்கும் கூச்சலிட்டுள்ளது. ஏற்கனவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டபோது இன்றைய கர்நாடக முதல்வரும் அன்றைய...

ஒருபோதும் பின் வாங்கக் கூடாது – தொல்.திருமாவளவன்

ஒருபோதும் பின் வாங்கக் கூடாது – தொல்.திருமாவளவன் மனுசாஸ்திர எரிப்பு மாநாட்டில் 2013 உரை 1920 களில் தந்தை பெரியார் அவர்களும் எம்.சி. இராஜா போன்றவர்களும், சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த தோழர் கண்ணப்பர் போன்றவர்களும், மனுதர்ம சாஸ்திரத்தை வேண்டிய தேவையை அன்றைக்கு எந்த அடிப்படையில் சொன்னார்களோ, அந்த அடிப்படை இன்னும் அப்படியே இருக்கிற காரணத்தால் மீண்டும் மனுதர்மத்தை எரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. மனுதர்மத்தை எரிப்பதனால் ஜாதி ஒழிந்துவிடுமா? அப்படி எரிப்பதனால் ஒழிந்து விடாது. இங்கே நிலவுகிற இந்த ஜாதிய கட்டமைப்புக்கு ஜாதிய வன்கொடுமைகளுக்கு, எது அடிப்படை என்பதை அடுத்தடுத்த புதிய தலைமுறைகளுக்கு அடையாளம் காட்டுகிற ஒரு போராட்டமாக இந்த போராட்டம் அமையும். மனுதர்மம் என்பது அன்றைய அரசியல் அமைப்பு சட்டம். இந்த நாட்டை மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் அன்றைக்கு அரசர்களுக்குத் தேவையாக இருந்த சட்ட விதிகளாகத் தான் மனுதர்மம் விளங்கியிருக்கிறது. இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியாவை ஆண்டு...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

23.02.2020 அன்று மாலை 4 மணிக்கு சூஞசு சூசுஊ ஊஹஹ குடியுரிமைச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி ஈரோட்டில் செல்ல பாட்ஷா வீதியில் (ஈரோடு தினசரி மார்கெட் பின்புறம்) இஸ்லாமிய பெண்கள் பெரும் திரளாக நடத்தும் உரிமை மீட்பு தொடர் முழக்க 3ஆம் நாள் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் கூறினார். தனது உரையில் இது அனைத்து மக்களுக்குமான பாதிப்பு என்று உணராமல் பல்வேறு மக்கள் இன்னும் அமைதி காப்பதாகவும் தோழர்கள், குறிப்பாக பெண்கள் முன்னெடுத்து போராடுவது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியது என்றும் தன் நீண்ட உரையில் குறிப்பிட்டார். திராவிட முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்த சட்டங்களுக்கு எதிராக எப்போதும் போல் திமுக அரணாக நின்று காக்கும் என்று தன் உரையில் குறிப்பிட்டார். 500 பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த சட்டங்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி...

உலகத் தாய்மொழி நாள் – ஈரோடு பொதுக்கூட்டம்

உலகத் தாய்மொழி நாள் – ஈரோடு பொதுக்கூட்டம்

21.02.2020 அன்று உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு, வடக்கு மற்றும் நாமக்கல் மாவட்ட கழகங்கள் ஒருங்கிணைப் பில் 23.02.2020 அன்று  ஈரோடு திருநகர் காலனி பகுதியில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது, நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் சித்திக், தமுமுக மாவட்டத் தலைவர் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ச்சி யாக இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்  முத்து பாண்டி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சிற்றுரை ஆற்றினர். அடுத்ததாக ‘நாடு எங்கே போய்க் கொண்டுள்ளது‘ என்ற தலைப்பில் புதுகை பூபாளம் குழுவினர் பல்வேறு பகுத்தறிவு கருத்துக்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களையும் காண்பவர் கேட்பவர் மகிழ்ந்து பின் சிந்திக்கும் வண்ணம் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக பாடல், இசையோடு கலை நிகழ்ச்சி நடத்தினர். மக்கள் அனை வரும் ஆரவாரமிட்டு, கைத்தட்டி உற் சாகப்படுத்தி மகிழ்ந்து செவிமடுத்தனர் கழகத் தலைவர்...

எதிர்த்த ஊர் மக்களே மேளதாளத்துடன் வரவேற்பு

எதிர்த்த ஊர் மக்களே மேளதாளத்துடன் வரவேற்பு

தலித் மக்கள் உரிமைக்காக வாதாடி வென்ற வழக்கறிஞர்  ப.பா. மோகனுக்கு பாராட்டு ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள  வடுகபாளையத்தில் கடந்த ஆறு ஆண்டு களுக்கு முன்பு, ஊர்ப் பொதுமக்கள் சுடுகாடு கேட்டு போராடி, இறந்த உள்ளூர்க்காரரின் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியல் செய்த காரணத்தால், 43 பேர் கைது செய்யப்பட்டு சிறைப் படுத்தப்பட்டனர். இதில் திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, விடுதலை வேங்கைகள், தற்சார்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் களப்பணி ஆற்றி, மூத்த வழக்கறிஞர்  ப.பா. மோகன் மூலமாக, கடந்த 6 ஆண்டு களாக பெருந்துறை நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட் டிருந்த 43 பேரும் கடந்த 27.12.2019 அன்று பெருந் துறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், எவ்வித கட்டணமும் வாங்காமல் வாதாடி விடுதலை பெற்றுத்தந்த மூத்த வழக்கறிஞர்  ப.பா மோகன் மற்றும் இந்தப்...

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக சத்தியமங்கலம் நகர அமைப்பாளர் மூர்த்தி – பூங்கொடி இல்லத் திறப்பு விழா  கெம்பநாயக்கன்பாளையம் சத்தியில், 03.11.2019 அன்று காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். நிகழ்வில் ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் 3.11.2019 அன்று சத்தி கெம்பநாயக்கம் பாளையம் திரு. கிட்டுசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்  இரத்தினசாமி தலைமை யேற்று நோக்கவுரை ஆற்றினார். கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கமும், கிராமங்கள் தோறும் பரப்புரைப் பயணமும், மருத்துவ முகாம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் உள்ளிட்டவைகளை நடத்த ஆலோசனை வழங்கினார். கழக மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மண்டலம் உள்ளடக்கிய ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை புறநகர், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர்...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

சித்தோடு கழகம் எடுத்த காமராஜர் பிறந்தநாள் விழா

சித்தோடு கழகம் எடுத்த காமராஜர் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கல்வி வள்ளல் காமராஜரின் 117ஆவது பிறந்தநாள் விழா கூட்டம் சித்தோடு நீலிக்கரட்டில் 17.07.2019 மாலை 6:30 மணியளவில் மாவட்டச் செயலாளர் எழிலன் தலைமையிலும் புரட்சிகர இளைஞர் முன்னணி ரங்கசாமி முன்னிலையிலும் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தைப் பற்றி விளக்கி உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து சௌந்தர் உரையாற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி, காமராஜரின் கல்வி சாதனைகள் குறித்தும், பெரியாரும் காமராஜரும் இத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றியும் சிறப்புரையாற்றி னார். இறுதியாக அப்பகுதியைச் சார்ந்த வேல்மாறன் நன்றியுரை வழங்கினார். வந்திருந்த கழகத் தோழர்களுக்கு வேல்மாறன் மாட்டிறைச்சி உணவு வழங்கினார். பெரியார் முழக்கம் 25072019 இதழ்

நியூ செஞ்சுரி 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழா ஈரோடு 07082019

நியூ செஞ்சுரி 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழா ஈரோடு 07082019

ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழா கழகத் தலைவர் புத்தக வெளியிட்டு பாராட்டுரை நாள் 07.08.2019 நேரம் காலை 11.30 மணி இடம் விபிவி மகால், ஈரோடு  

ஈரோடு மரவபாளையத்தில் கழகப் பயிற்சி வகுப்பு

ஈரோடு மரவபாளையத்தில் கழகப் பயிற்சி வகுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக , மரவபாளையம் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் 10.03.2019 ஞாயிறு அன்று சமூகநீதிப் போரில் பெரியாரும் அம்பேத்கரும் என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காலை 11 மணிக்கு வகுப்பு துவங்கியது  தோழர்களின் அறிமுகத்தை தொடர்ந்து , முதல் அமர்வாக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் “சமூகநீதிப் போரில் பெரியார்” என்னும் தலைப்பில் நெடிய வரலாற்று தரவுகளுடன் வகுப்பெடுத்தார். மதியம் 3 மணிக்கு வளைதளப் பொறுப்பாளர் விஜய் கழகத்தின் வளைதளப் பக்கங்களைப் பற்றியும் twitter பற்றியும் வகுப்பெடுத்தார். அதைத் தொடர்ந்து , இரண்டாம் அமர்வாக கழகத் தலைவர் கொளத்தூர்மணி “சமூகநீதிப் போரில் அம்பேத்கர்” என்ற தலைப்பில் மாலை 7 மணிவரை வகுப்பெடுத்தார். இறுதியாக கழகத்தின் பெயர்ப் பலகையை கழகத் தலைவர் திறந்து வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் 40 தோழர்கள் பங்கு பெற்றனர்.  மாநகரத் தலைவர் ப.குமார் , சிவானந்தம் இருவரும் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்...

சமூகநீதிப் போரில் பெரியார் அம்பேத்கர் பயிலரங்கம் மரவபாளையம் ஈரோடு 10032019

சமூகநீதிப் போரில் பெரியார் அம்பேத்கர் பயிலரங்கம் மரவபாளையம் ஈரோடு 10032019

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக , மரவபாளையம் CSI தொடக்கப் பள்ளியில் 10.03.2019 ஞாயிறு அன்று சமூகநீதிப் போரில் பெரியாரும் அம்பேத்கரும் என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காலை 11 மணிக்கு வகுப்பு துவங்கியது  தோழர்களின் அறிமுகத்தை தொடர்ந்து , முதல் அமர்வாக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சமூகநீதிப் போரில் பெரியார் என்னும் தலைப்பில் நெடிய வரலாற்று தரவுகளுடன் வகுப்பெடுத்தார். மதியம் 3 மணிக்கு வளைதளப் பொறுப்பாளர் தோழர் விஜய் கழகத்தின் வளைதளப் பக்கங்களை பற்றியும் Twitter பற்றியும் வகுப்பெடுத்தார். அதைத் தொடர்ந்து , இரண்டாம் அமர்வாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி சமூகநீதிப் போரில் அம்பேத்கர் என்ற தலைப்பில் மாலை 7 மணிவரை வகுப்பெடுத்தார். இறுதியாக கழகத்தின் பெயர்ப் பலகையை கழகத்தலைவர் திறந்துவைத்தார். இப்பயிற்சி வகுப்பில் 40 தோழர்கள் பங்குபெற்றனர்.  மாநகரத் தலைவர் ப.குமார் , சிவானந்தம் இருவரும் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை...

ஈரோடு சித்தோட்டில் தடையைத் தகர்த்து கழகம் நடத்திய மகளிர் நாள் கூட்டம்

ஈரோடு சித்தோட்டில் தடையைத் தகர்த்து கழகம் நடத்திய மகளிர் நாள் கூட்டம்

திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக 08.03.2019 வெள்ளியன்று, சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடக்கவிருப்பதாக இருந்த  உலக மகளிர் தின விழா நிகழ்விற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மறுப்பதற்கு அவர்கள் தரப்பு சொல்லியக் காரணங்கள் தர்க்கமற்றவை. உள்நோக்கம் கொண்டவை. இனியும் அவர்களிடம் சுமூகப் போக்குடன் பயணிப்பதென்பது சுயமரியாதையை அடகு வைப்பதற்குச் சமமென உணர்ந்து, தோழர்கள் களமிறங்கினர். மாநிலப் பொறுப்பாளர்களான ப. இரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னிர்செல்வம், மடத்துக்குளம் மோகன் ஆகியோரும் மாவட்டப் பொறுப்பாளர்களான எழிலன், வேணுகோபால், சண்முகப்பிரியன், கிருஷ்ணமூர்த்தி, மரவபாளையம் குமார் ஆகியோரும் மணிமேகலை, ராசிபுரம் சுமதி, ஜோதி, மலர், கவிப்பிரியா, சித்ரா, மகேஷ்வரி, கமலா, சத்யராஜ், சௌந்தர், இந்தியப்பிரியன், ரமேஷ், ரவி, செந்தில் எனப் பெருந்திரளோடு சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கூடினார்கள். அதன்பின் அங்கே வந்த காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டக் கூட்டத்தை எதற்காக நடத்துகிறீர்கள்? சட்டத்தை மீறுகிற செயல் என மிரட்டுகிறத் தொனியில் கூற தோழர்...

பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து ஈரோடு மாவட்டக் கழகம் தீவிரப் பிரச்சாரம்

பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து ஈரோடு மாவட்டக் கழகம் தீவிரப் பிரச்சாரம்

சமூகநீதிக்கும் , ஒடுக்கப்பட்டோருக்கும் எதிராக கூட்டாட்சி நடத்திவரும் பாசிச பாஜகவின் கொடூரத் திட்டங்களை மக்களிடையே எடுத்துரைக்கும் விதமாக திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பவானி சாலையிலுள்ள மாயவரம் பகுதியில் 24.2.2019 ஞாயிறு மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. சி.எம்.  நகர் பிரபு தலைமையேற்க, சீ.ரா .சௌந்தர், பி. கிருஷ்ணமூர்த்தி உரைக்குப் பிறகு வீரா கார்த்தி சிறப்புரையாற்றினார். கு. சண்முகப்பிரியன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு இடம் தெரிவு செய்தும், மின்சாரம் வழங்கியும்,  நிகழ்ச்சி முடிந்தபின் தோழர்களுக்கு தேநீர் வழங்கியும் பெரிதும் தோழமை பாராட்டி நின்றார் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இராமகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும். நிகழ்வில் கலந்து கொண்டத் தோழர்கள் : ஜெய பாண்டி, விஜயகுமார், பிடல் சேகுவேரா, சத்யராஜ், குமார், கமலக்கண்ணன், கிருஷ்ணன், பிரபு, விஜயரத்தினம், எழிலன். கூட்டத்தின் முடிவில் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மத்திய பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோதப் போக்கை மக்களிடையே கொண்டு செல்லும் விதத்தில் தொடர்...

உலக மகளிர் நாள் விழா ! சித்தோடு, ஈரோடு 08032019

உலக மகளிர் நாள் விழா ! சித்தோடு, ஈரோடு 08032019

இன்று (மார்ச். 8 ) மாலை ஈரோட்டில் உலக மகளிர் நாள் விழா ! ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், நாள் : 08.03.2019,வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : பெரியார் நினைவு சமத்துவபுரம்,சித்தோடு, ஈரோடு தோழர் ‘மடத்துக்குளம் மோகன்’ அவர்களின் “அறிவியல் விளக்க நிகழ்ச்சி” நடைபெறும்.

ஈரோடு தெற்கு மாவட்டத்தின் தெருமுனைக்கூட்டம் 24022019

ஈரோடு தெற்கு மாவட்டத்தின் தெருமுனைக்கூட்டம் 24022019

தெருமுனைக்கூட்டம். —————————————- சமூகநீதிக்கும் , ஒடுக்கப்பட்டோருக்கும் எதிராக காட்டாட்சி நடத்திவரும் பாசிச பாஜகவின் கொடூரத் திட்டங்களை..மக்களிடையே எடுத்துரைக்கும் வகையாக திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பவானி சாலையிலுள்ள..மாயவரம் பகுதியில் 24 / 2 /19 ஞாயிறு மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. CM நகர் பிரபு தலைமையேற்க..சீ.ரா .சௌந்தர் , P.கிருஷ்ணமூர்த்தி உரைக்குப் பிறகு தோழர் .வீரா கார்த்தி யின் சிறப்புரையாற்றினார். கு. சண்முகப்பிரியன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு இடம் தெரிவு செய்தும் ,மின்சாரம் வழங்கியும்,  நிகழ்ச்சி முடிந்தபின் தோழர்களுக்கு தேநீர் வழங்கியும் பெரிதும் தோழமை பாராட்டி நின்றார் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தத் தோழர் .ராமகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும். நிகழ்வில் கலந்து கொண்டத் தோழர்கள் : ஜெயபாண்டி விஜயகுமார் பிடல்சேகுவேரா சத்யராஜ் குமார் கமலக்கண்ணன் கிருஷ்ணன் பிரபு விஜயரத்தினம் எழிலன்… கூட்டத்தின் முடிவில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது…. மத்திய பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோதப் போக்கை மக்களிடையே கொண்டுசெல்லும்...

‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சமூகநீதியை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க அரசின் உயர்சாதிக்கான 10ரூ இட ஒதுக்கீட்டைக் கண்டித்து 11.1.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழக மாநகர மாவட்டத் தலைவர் நேருதாசு தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் வெண்மணி (திராவிடர் தமிழர் கட்சி), மலரவன் (புரட்சிகர இளைஞர் முன்னணி) வழக்கறிஞர் சேகர் பி.யு.சி.எல்., இராமசந்திரன் (திவிக), இளவேனில் (தமிழ் புலிகள்), சண்முக சுந்தரம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), எம்.எஸ். வேல்முருகன் (சி.பி.அய். எம்.எல்.), வழக்கறிஞர் சக்திவேல் (சி.பி.அய்.), சபரி தமிழ்நாடு மாணவர் கழகம், ரமேஷ் முற்போக்கு வழக்கறிஞர் சங்கம், இனியவன் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம், தண்டபாணி சமூக நீதி கட்சி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்திற்கு திவிக தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், பாலமுருகன் (பி.யு.சி.எல்.), சிங்கை பிரபாகரன்...

ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக கலந்தாய்வுக் கூட்டம் 30.12.18 மாலை 4 மணிக்கு,  சென்னிமலை செல்வராசு இல்லத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் மடத்துக் குளம் மோகன்,  சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டக் கழகம் சார்பில் ஒன்றிய கிளைக் கழகக் பொறுப்பாளர்கள் நியமனத்தில் மாற்றம் செய்யப்பட்டது. எதிர்வரும் பொங்கல் விழாவை தெற்கு மாவட்டம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. கலந்தாய்வில் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 10012019 இதழ்

சமூக நீதிக்கு எதிரான10% இடஒதுக்கீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு 12012019

சமூக நீதிக்கு எதிரான10% இடஒதுக்கீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு 12012019

சமூக நீதிக்கு எதிரான 10% பொருளாதார ரீதியான இட ஒதுக்கிட்டைக் கண்டித்தும்பாசிச பாஜக அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகமும் தமிழ்நாடு மாணவர் கழகம் தெற்கு மாவட்டம் சார்பாக 12.01.2019. பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் மாலை 4.30க்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் மாநில அமைப்பாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார்.. முன்னிலை: அ.கிருஷ்ணமூர்த்தி திவிக மாவட்ட அமைப்பாளர் இதை சீ.ரா.சௌந்தர் தமிழ்நாடு மாணவர் கழகம் மாவட்ட அமைப்பாளர் அவர்கள் ஒருங்கிணைத்தார்.. வெங்கட் அவர்களின் முழுக்கத்துடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியாது.. தொடக்க உரை: ப.இரத்தினசாமி திவிக ஆர்ப்பாட்ட விளக்க உரை: சீ.ரா.சௌந்தர் (தமாக) இடஒதுக்கிடு விளக்க பாடல் :ச.இந்தியப்பிரியன்..(தமாக) இதில் தோழமை அமைப்புகளின் தோழர்களின் கண்டன உரைகள்: கணகுறிஞ்சி, தலைவர்.மக்கள் சிவில் உரிமைக் கழகம்.. இரா.தமிழ்இன்பன், நிறுவனர். விடுதலை வேங்கைகள் கட்சி.. ரவி , புரட்சிகர இளைஞர் முண்ணனி.. ஆறுமுகம், தலைவர்ஜனநாயக மக்கள் கழகம். மற்றும் இந்த நிகழ்வில் பங்குபெற்ற திவிக...

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

இராசிபுரத்தில் : தந்தைபெரியாரின் 45 வது நினைவேந்தல் நிகழ்வு இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  இராசிபுரம் ஜபாரதிதாசன் சாலையில் உள்ள தி.வி.கழக அலுவலகம்முன் நடைபெற்றது. பகுத்தறிவு பகலவனுக்கு முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்திய நிகழ்வில்  ர. சுமதிமதிவதனி  (தி.வி.க.), திலகா (இராசிபுரம்) வரவேற்புரையாற்றினார். இரா. பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க) தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் : வி.பாலு  நுஒ. ஆஊ, தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர், தலைவர், இராசிபுரம் நகரவளர்ச்சி மன்றம். முன்னிலை: மணிமாறன் (நகர செயலாளர் சி.பி.ஐ.), ஜி.கே. வைகறை சேகர் (மாநில துணைச் செயலாளர் விவசாயஅணி, வி.சி.க.),  கண்ணன் (மாவட்டச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை), தட்சிணாமூர்த்தி (மாவட்டத் தலைவர், தமிழர் தேசிய முன்னணி), நாணற்காடன் (மாநிலதுணைசெயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்), சுமன் (மா.துணை செயலாளர், ஆதி தமிழர்பேரவை), அண்ணாதுரை (ஒ.செயலாளர், ஆதிதமிழர் பேரவை), பாலகிருட்டிணன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), கீதாலட்சுமி...

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு !

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு !

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு ! சொற்பொழிவு : ”புலவர் செந்தலை கெளதமன்” கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த,பெ,தி,க பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள். நாள் : 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.00 மணி. இடம் : கெளரி திருமண மண்டபம்,சென்டெக்ஸ் அருகில்,சென்னிமலை.

யாவையும் நிறுத்திக் கொள் காவியே!  – பெ. கிருஷ்ணமூர்த்தி

யாவையும் நிறுத்திக் கொள் காவியே! – பெ. கிருஷ்ணமூர்த்தி

வெறிமிகு வேகத்தில் பயணிக்காத வாகனங்கள். தனிமனிதத் துதியும், வெறுப்புமற்ற , சமூகநீதி வேண்டித் தாகமுடன் களம்காணும் வேட்கை பொதிந்தப் பயணம் ! மகிழுந்தும், பெருவாகனமும்… தும்பை வெள்ளையும்… பட்டை மோதிரமும்… அத்தர் நெடியும்… பட்டைச் சங்கிலி சகிதம் மதுக்கடையை மொய்க்காதக் கூட்டம்.! நோட்டுகளை எண்ணுகிறதும், எண்ணுகிற நோட்டுக்காய் எச்சில் விழுங்கிக் கையேந்தாதக் கரங்கள்.! மனமெல்லாம் தாடிக்கிழவனை நிரப்பி… பசியென்னும் உணர்வையே பறையிசையில் நிறைத்து… நரம்பு நாணை சுயமரியாதைப் பாட்டால் மீட்டும் கூட்டம்! எம் கரமேந்தும் கருங்கொடி … சூரியனையும் மிஞ்சும் சுடரொளி! எங்கள் கருந்தேகத்தைக் கிழித்திட்டால் சிவப்பு நட்சத்திரமாய் மினுங்கும் புது ஒளி! வரலாறைச் சுமந்த மூளை. அடக்குமுறை எதிர்க்கும் தேகம். சமூகநீதிக்காய் நடந்து… நடந்து உரமேறியக் கால்கள். தீமைக்கெதிரான சொற்கள். தீர்வு கிட்டும்வரை துஞ்சாதக் கண்கள். இவையே எங்கள் அடையாளம். போதையின் ஆக்கத்தால் ஆட்டமோ.. மாநாடுத் திடலில் குழாய் விளக்குடைக்கும் நாட்டமோயின்றி… அரைக்கல் அளவே இடமாயினும்… நெஞ்சுநிமிர்த்தி அமர்ந்து… பகலவனின்...

பெருமாள் மலையில் சட்ட எரிப்பு போராளிகள் வீரவணக்க பொதுக் கூட்டம்

பெருமாள் மலையில் சட்ட எரிப்பு போராளிகள் வீரவணக்க பொதுக் கூட்டம்

பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டு ..பெரியாரியல் தொண்டர்களால் நடந்தேறிய சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்ற, சிறையிலும்.. சிறைவாசத்திற்குப் பின்னும் ஜாதியொழிப்பு கொள்கைக்காக உயிர்கொடை தந்தப் பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டை வீரர்களுக்கு வீரவணக்கம் செய்யும் விதமாக தி.வி.க. ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பொதுக் கூட்டம் பெருமாள்மலையில் 26.11.2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறையின் அனுமதி மறுப்பால் உள்ளரங்குக் கூட்டமாக மாற்றப்பட்டடது. நிகழ்ச்சிக்கு பெருமாள் மலை இராசண்ணன் தலைமை வகிக்க மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி முன்னிலை வகித்தார். கலைமதி, இராசிபுரம் சுமதி, பெருமாள் மலை கழக ஆதரவாளர் பாரதிதாசன், புரட்சிகர இளைஞர் முன்னணி அற்புதராஜ் உரைக்குப் பின், பரப்புரைச் செயலாளர்  பால். பிரபாகரன். சட்ட எரிப்புப் போராட்டத்தின் வரலாற்றையும், அச் சமகாலத்தில் நிலவிய ஜாதீயக் கொடுமைகள் குறித்தும் தரவுகளோடு உரையாற்றினார். ஈரோடு மாவட்ட மாணவர்கள் கழகத்தின் சார்பாக  அரங்கம்பாளையம் பிரபு மற்றும் சௌந்தர் பரப்புரைச் செயலாள ருக்கு...

கழக ஏடுகளுக்கு சந்தா  சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகி வரும் கழகத் தோழர்கள் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்திலும் முனைப்போடு  செயல்பட்டு வருகிறார்கள். மாவட்டக் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். முதல் கட்டமாக பயணம் நவம்பர் 21ஆம் தேதி காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் காலை 11.30 மணியளவில் கழகத் தோழர் நிவாஸ் இல்லத்தில் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்டமான கோபியில் 7 ஒன்றியங்களில் கழக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் பரப்புரைக்காக வாங்கியுள்ள வாகனத்தைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக பரப்புரையை தொடர் நிகழ்வாக நடத்தி வருவது...