திருப்பூர், கடலூர், மதுரையில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” பொதுக்கூட்டம்!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” எனும் முழக்கத்தோடு 2024 பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 05.03.2024 அன்று குன்னத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு குன்னத்தூர் பகுதிப் பொறுப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார், குன்னத்தூர் சின்னச்சாமி, திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தமிழ்நாடு மாணவர் கழக மகிழவன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் முகில் ராசு, கழக சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி சிறப்புரையாற்றினார்.
15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார். இதில் மாநகர அமைப்பாளர் மாதவன், சரஸ்வதி மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 07.03.2024 அன்று மங்களூரில் நடைபெற்றது.
விடுதலைக் குரல் கலைக் குழுவின் இசை நிகழ்ச்சியுடன் பொதுக் கூட்டம் தொடங்கியது.
கூட்டத்திற்கு கடலூர் மாவட்டக் கழக அமைப்பாளர் க.நா. கொளஞ்சி கூட்டதிற்கு தலைமை தாங்கினார், மாவட்டத் தலைவர் மதன்குமார் முன்னிலை வகித்தார், மாவட்டத் துணைத் தலைவர் செ. பிரகாசு வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து தமுமுக மாவட்டச் செயலாளர் M. மதார்ஷா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந. அய்யனார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலமுருகன், மதிமுக (மே) ஒன்றியச் செயலாளர் PR. சம்பத்குமார், மற்றும் விசிக கிருஷ்ணமூர்த்தி, கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
கழக கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் மதியழகன், நாகராஜ், ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலாளர் கார்மேகம், விடுதலைக் களம் யூடியூப் சேனல் சத்தியராசு, மனிதநேய மக்கள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் காதர் ஷெரிப், திட்டக்குடி நகரத் தலைவர் ஜான் பாட்ஷா, நகரச் செயலாளர் ஹம்சா முகமது, நகரப் பொருளாளர் சுபேதார் பாஷா, அஜீஸ் மற்றும் மாலிக் பாஷா ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
அறிவியல் மன்ற அமைப்பாளர் ப. அறிவழகன் நன்றி கூற பொதுக்கூட்டம் நிறைவடைந்தது.
மதுரை : மதுரை மாவட்டக் கழக சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை தொடக்க பொதுக்கூட்டம் 09.03.2024 அன்று புதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டக் கழக காப்பாளர் தளபதி தலைமை தாங்கினார், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார்.

மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மா.பா.மணிஅமுதன், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் பெரியார் முத்து ஆகியோர் பொதுக்கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்கள்.
தொடர்ந்து மதுரை மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்குலாப், தமிழ்ப் புலிகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் முத்துக் குமார், தமிழக முன்னேற்றேக் கழகத் தலைவர் ம.து.ராஜ்குமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பேச்சாளர் உய். அப்பாஸ், மக்கள் சட்ட உரிமை இயக்க தலைவர் அண்ணாத்துரை, ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் சந்துரு உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
நிறைவாக மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி நன்றி கூறினார். இதில் வேங்கைமாறன், முருகேசன், வாசுகி, மருது பாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெரியார் முழக்கம் 15032024 இதழ்

You may also like...